Advertisement

”நா இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன், நேத்து ஃபீஸ் கட்டமுடியலைன்னு டென்சனா இருந்தேன், இன்னிக்கு அந்த பிரச்சனை சரியாயிடுச்சு, யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஃபிஸ் கட்டியிருக்கார். கடவுளே அவர் நல்லாயிருக்கணும், நான் படிச்சு முடிச்சு சம்பாதிச்சு அந்த பணத்தை கண்டிப்பா திருப்பிக் குடுத்திடுவேன் அப்ப தான் என்னை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு அவர் உதவி பண்ண முடியும்.

அதன்பின் இருந்த எழுத்துக்கள் முன் அளவுக்கு நிதானமாய் எழுதப்பட்டதாய் தெரியவில்லை. மேலே இருந்தது போலில்லாமல் தெளிவில்லாமல் இருந்தது. அந்த பக்கங்கள் ஆங்காங்கே இரத்தக்கறைகளும் இருந்தது.

உதவின்னு ஒண்ணு வராமயே இருந்திருக்கலாம், இப்படியெல்லா நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அந்த பணமே வேணாம்னு சொல்லியிருப்பேன், யாரோ பணம் கொடுத்தாங்கன்னு சொன்னாங்களே அவங்களுக்கு நன்றி சொல்லலாம்னு நான் நெனச்சிருந்தப்போ, அந்த வார்டன் என்ன நினைச்சு அங்க கூட்டீட்டு போனுச்சுன்னு எனக்கு தெரியாது. ஆனா உள்ளா வரவே இல்லை.

நீ உள்ள போ நான் இதோ வரேன்னு சொல்லீட்டு போனவங்க, திரும்ப வரவே இல்லை. உள்ள போனதும், அய்யா வருவாங்க, அந்த ரூம்ல வெயிட் பண்ணுமான்னு ஒரு பெரியவர் சொன்னாரு, நானும் அவர் சொன்ன ரூம்ல போய் வெயிட் பண்ணேன். அடுத்து ஒரு அஞ்சு நிமிஷம் ஆயிருக்கும், நடுத்தரவயசுள்ள ஒருத்தர் வந்தாரு, அவரோர வெள்ளை சட்டை கழுத்துல இருந்த செயினு, ரெண்டு கையிலயும் இருந்த மோதிரமெல்லாம் பாக்கவும் , நமக்கு ஹெல்ப் பண்ணவரு அவராத்தான் இருக்கும்னு, பாத்ததும் டக்குன்னு எழுந்து நின்னுட்டேன்.

“நீ தா ஸ்வாதியாமா…”

“ஆமாங்க, நீங்க தானே ஃபீஸ் கட்ட எனக்கு உதவி செஞ்சது, ரொம்ப நன்றிங்க, நீங்க செஞ்ச உதவிய நான் மறக்கவே மாட்டேன்,நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு, ஃபர்ஸ்ட் உங்க பணத்தை திருப்பி குடுத்திடுவேன்ங்க…”

“உங்கிட்ட யார் பணம் கேட்டது…?”

“யாரும் கேக்கலைங்க, ஆனாலும் நான் கொடுக்கணும்ல, அப்ப தானே நீங்க என்னை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ண முடியும்…”

“நீ கொடுத்தாலும் கொடுக்கலைன்னாலும் நான் இந்த மாதிரி உதவி செஞ்சிகிட்டேதான் இருப்பேன்….” என்றவன், வெளியே திரும்பி, “டேய் யார்றா அங்க…” என்றதும், “அய்யா…” என்றபடி இருவர் ஓடி வந்தனர்.

“பாப்பாக்கு குடிக்க எதாச்சும் கொண்டு வந்து குடுத்தீங்களா, இல்லையாடா…?” என்று கேட்கவும், அவர்களுக்கு ஸ்வாதி முந்திக் கொண்டு,

“இல்லங்க எனக்கு எதுவும் வேணாம், நான் கிளம்புறேன், உங்கள பாத்து நன்றி சொல்லணும்னு நெனச்சேன், சொல்லீட்டேன், கிளம்புறேங்க…” என்று அவள் வெளியேறப் பார்க்க,

அந்த அறையின் வாயிலை அடைத்தபடி நின்றிருந்தனர் அந்த இருவரும்.

வேந்தனைப் பார்க்க, அவனோ “பாப்பாவ அனுப்புங்க போகட்டும்…”என்க

அவர்களில் ஒருவனோ, “பாப்பா ஒண்ணும் குடிக்காம போனா, அது போனதுக்கு அப்புறம் நீங்க எங்களத் தான் திட்டுவீங்க…” என்று அப்பாவியாய் கூற,

வேந்தனும், “ஆமாம்மா, நீ எதாச்சும் குடிச்சிட்டுத் தான் போகணும்…” என்றிட, அவளும் வேறு வழியில்லாமல்,

“கொஞ்சம் தண்ணி கொடுக்க சொல்லுங்க…” என்றாள் ஸ்வாதி.

”அதா பாப்பா சொல்லுதுல்ல, எடுத்துட்டு வாடா…” என்றபடி அந்த அறையிலிருந்த மெத்தையில் வாகாக படுத்துக் கொண்டு இவளை கவனித்துக் கொண்டிருந்தான் வேந்தன்.

அடுத்த சில நிமிடங்களில் கையில் ட்ரேயுடன் வந்தவனின் முழியும் நடையும் நேராகவே இல்லை.

பெரிய கண்ணாடி டம்ளர்களில் பழுப்பு நிற திரவத்தில் ஐஸ் கட்டிகள் மிதக்க கொண்டு வந்து அங்கிருந்த டீபாயில் வைத்தவன், அதிலிருந்த ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு ஸ்வாதியை நோக்கி வந்தான்.

அவள் அதை கையில் வாங்குவதற்குள்ளாகவே அவன் கால் இடறி அனைத்தையும் அவள் மீதே கொட்டினான். ஐஸ்கட்டிகள் முகத்தில் அடித்து அந்த திரவம் கண்ணில் தெளித்ததில் அதிர்ந்து பின் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயலுகையில், அதை துடைக்கிறேன் பேர்வழி என்று அந்த நிலை தடுமாறியவன் அவளின் மீது கைவைத்து தடவ, கண்ணைத் திறக்கமுடியாமல் கசக்கிக் கொண்டிருந்தவள், கைப்பட்ட இடமும் பட்ட விதமும் உணர்ந்து துள்ளி நகர்ந்து அங்கிருந்த எதிலோமோதி கீழே விழுந்துவிட்டாள்.

அத்தணையும் சாவுகாசமாக ரசித்து பார்த்தபடி படுத்திருந்த  வேந்தன், “டேய் பாத்து பாத்து டா, பாப்பாவ பொறுமையா தூக்குங்க டா…” என்றான்.

ஸ்வாதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளால் எழுந்து நிற்கவே முடியவில்லை, எழ எழ வழுக்கி விழுந்து கொண்டே இருந்தாள்.

கண்ணை வேறு திறக்க முடியவில்லை. யாரோ கையைப் பிடித்து தூக்கிவிடவும் எழுந்து நிலையாக நின்றாள். எழுந்து நின்ர பின்னும் அந்த பிடி விடவில்லை. இப்போது இருகைகளையும் இருவர் பிடித்திருந்தனர். உதறி வில முடியாமல் திணறினாள்.

”கையை விடுங்க, கையை விடுங்க…” என்ரு அவள் கத்த துவங்கையில், யாரோ ஈரத்துணியால் அவள் முகத்தைதுடைத்துவிட கண்களின் எரிச்சல் குறைந்தது.மெல்ல திறந்து பார்க்கவும் எதிரில், பல்லெல்லாம் பழுப்பு நிரத்தில் வைத்துக் கொண்டு ஒருவன் ’ஈ’ என்று இளித்தபடி, சற்றுமுன் கொண்டு வரப்பட்ட அந்த பழுப்பு நிற திரவத்தை அவள் முன் நீட்டிக் கொண்டிருந்தான்.

அவள் பெற்றுக் கொண்டதும் சுற்றி இருந்த அனைவரும் விலகி நின்று கொண்டனர். “குடி குடி பாப்பா, நீ குடிக்கமா போமுடியாது, நம்ம பசங்க விடமாட்டானுங்க, பாசக்கார பயலுக…”

ஏனோ மூளையில் “இங்கிருந்து கிளம்பிவிடு…” என்று அலாரம் அடித்தபடி இருந்தது. ஆனால் அதைக் குடிக்காமல் போகமுடியாது என்பதை அவளும் புரிந்து கொண்டாள். ’இந்த வார்டன் எங்க தான் போனாங்களோ நம்மள இப்படி மாட்டிவிட்டுட்டு…’ என்று மனதுக்குள் திட்டியபடி, டம்ளரை வாயருகே எடுத்துச் செல்ல அதிலிருந்து வந்த நெடி அது சாதாரண குளிர்திரவம் இல்லை என்று சொல்லாமல் சொல்லியது.

வேறுவழயில்லை என்று அதை மூக்கைபிடித்துக் கொண்டு, ஒரே மிடறில் விழுங்கி நிமிர, அங்கிருந்தவர்கள், “ஹோ….” என்ற சப்தத்துடன் கைகளைத் தட்ட, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“யம்மா பாப்பா, பாக்க பச்சைபுள்ளையாட்டம் இருக்க, ஒஸ்தி சரக்கை, ஒரே கல்புல அடிச்சிட்ட, எங்க அண்ணணே கொஞ்சகொஞ்சமா தா அடிப்பாரு, எம்மாம்பெரிய பாட்டில் பார்ட்டி, அவரையே மிஞ்சிட்டியேம்மா…. இன்னிலயிருந்து நீ தா மா எங்க தலைவி…” என்றிட

அவளின் மனமெல்லாம் ” ஒஸ்தி சரக்கிலேயே” நின்று விட, மனதின் அலாரன் சைரனாய் மாறி அலர, நொடி கூட தாமதிக்கூடாது இங்கிருந்து கிளம்பிட வேண்டும் என்று எண்ண தான் முடிந்ததே தவிர அவள் கால்கள் ஒத்துழைக்கவில்லை.

தட்டுதடுமாறி ஓடியவளை ஒரே மூச்சில் இருவர் தூக்கி வந்து தரையில் போட்டனர்.

“அய்யோ அம்மா…”என்று அலறிய படி கீழே கிடந்தவளை காலால் ஒரு உதைவிட்டபடி வந்து நின்றான். “என்னடி சுலுவா பணத்தை மட்டும் வாங்கிட்டு போயிடுவ, நீ சம்பாதிச்சு எப்ப குடுப்பன்னு நான் பாத்துட்டே இருக்கணுமா… படிச்சுமுடிக்குறதுக்குள்ள எவனயாவது இழுத்துட்டு ஓடி போய் புள்ளைய பெத்துக்குறவ, எனக்கு சம்பாதிச்சு குடுப்பாளாம் கேட்டீங்களா டா…”

முரட்டுத்தனமான அவனின் உதை அவளின் அடிவயிற்றை பதம் பார்க்க வலியில் துடித்துக் கொண்டிருந்த ஸ்வாதிக்கு தன்னை இவனிடமிருந்து யாராவது காப்பாற்றிவிடமாட்டார்களா என்று இருந்திருந்தது.

அதெல்லாம் சிலபல நிமிடங்களில் மாறிப்போனது, அந்தரத்தில் மிதப்பது போல் உடலென்ற ஒன்று இல்லாதது போல் விசித்திரமான உணர்வு தோன்றியது.

கண்கள் தானாய் மூடிக் கொண்டது. யாரோ ஒருவன் அவளின் உடைகளை கழற்றமுயன்று முடியாமல், கிழத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த போதையில் கத்தமாட்டாள் தான் என்றாலும், நாளை இவள் எதுவும் பேசிவிடக்கூடாது என்பதற்காகவே, கூரிய கத்தியால் அவள் நாவை வெட்டிவீசினான் மற்றொருவன்.

உண்மையில் அதுவரை மயக்கத்தில் இருந்தவள், வலியில் அலறிய அந்த ஓலத்தை கேட்க சகியாமல் மீண்டும் அவள் வயிற்றில் உதைத்தான் வேந்தன். நரகம் இப்படித்தான் இருக்குமென உயிருடன் இருக்கையிலேயே உணர வைத்த அரக்கன்கள் எத்தணை பேரென்று அவளுக்கு தெரியாது. ஆனால் அந்த நாள் முழுவதும் அத்தணை பேரும் அவளை கொடூரமாக சித்ரவதை செய்து நாசமாக்கினார்கள்.

அவள் பெண்மையை சூறையாடினார்கள். மனிதவடிவில் உலாவும் இந்த மிருகங்களை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் இங்கு வந்துவிட்டோமே என்று நிதானமாய் வருந்தக்கூடியதல்ல அவள் அனுபவித்த கொடூரம்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத ரணம். எத்துணை ஜென்மமெடுத்தாலும் மறக்கமுடியாத வலி. அத்துணை கொடுமையிலும் அவளை ஏன் அந்த கடவுள் உயிருடன் வைத்தான் என்று ஆத்திரம் வந்தது ஸ்வாதிக்கு.

இதற்கு மேலும் எதற்கு உயிருடன் வைத்திருக்கிறாய் என்று வாய்விட்டு திட்டவும் நாவில்லை. அழவும் கண்ணீரில்லை, தானாய் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள எழகூட தெம்பில்லை ஸ்வாதிக்கு.

பிணம் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பது போல் கிடந்தாள். போதையில் அவளை நாசமாக்கிய நரமிருகங்கள் ஆங்காங்கே உருண்டு கொண்டிருந்தன.

வேந்தன் இன்னும் தெளிவாய் தான் இருந்தான். அவன் எப்போதும் தன்னிலை மறக்கும் அளவுக்கு போதையேற்றிக் கொள்ள மாட்டான். வேட்டையாடி குதறப்பட்ட உடலில் தனக்கு ஏதாவது இருக்குமா என்று சுற்றி வரும் நரியும் கழுகும் போல இன்னும் நமக்கு எதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று நாக்கை தொங்கபோட்டபடி காத்திருந்த இரு நரிகளை அழைத்தான் வேந்தன்.

“டேய் இதை கொண்டு போய் அந்த ஹாஸ்டல்ல போட்டுட்டு வந்திருங்க, இதை அந்த வார்டனுக்கு கொடுத்துடுங்க, என்று நாலைந்து கட்டு பணத்தை தூக்கி எறிந்தான்.

“அய்யா…” என்று அங்கிருந்த இருவரும் தலையை சொறிய, “சரி சரி சீக்கிரம் முடிச்சிட்டு கொண்டு போய் அங்க போட்டுட்டு வந்துருங்கடா, செத்துகித்து தொலஞ்சிருக்க போறா…”

”அதெல்லா பாத்துகிறங்கய்யா…” என்ற இருவரும் வேந்தன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தபின்னே உள்ளே சென்றவர்கள் அடுத்த ஒருமணி நேரம் கழித்தே வெளியே வந்தனர்.

அன்றிரவு அனைவரும் உறங்கிய பின்னே அவளைக் கொண்டு வந்து வார்டனிடத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவளின் நிலைகண்டு அவள் இறந்துவிட்டாள் என்றெண்ணி என்ன செய்வது எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வார்டனுக்கு, அவளின் மெல்லிய முனகல் சத்தம் கேட்டதும், “ஹ்ம்ம் வேலை மிச்சம்…” என்றானது.

வார்டனின் தோஸ்தான ஒரு ஆயம்மாவைக் கூப்பிட்டு, அவளைச் சுற்றியிருந்த பெட்கவரை அகற்றிவிட்டு, அங்கிருந்த நைட்டி ஒன்றை அணிவைத்து, பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து புகட்டச்செய்தவள், எப்போதும் போல இருந்து கொண்டாள்.

அடுத்த நாள் அனைவரும் கல்லூரிக்குச் செல்லும் வரைகூட ஸ்வாதிக்கு மயக்கம் தெளியவில்லை. மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு சென்று விட்டதை உறுதி செய்தபின்னே, ஸ்வாதியை ஆயம்மாவின் துணையோடு வானதியின் அறையில் விட்டவள், அவளின் பொருட்கள் அனைத்தையும் அந்த அறையிலேயே வைக்கச் செய்தாள்.

வானதி அன்று வீட்டிற்கு செல்வதால் வேறு யாரும் அந்த அறைக்கு செல்ல வேண்இய அவசியம் இருக்காது. இந்த ஸ்டடி ஹாலிடேஸ் முடிவதற்குள் அவள் தேறிவிட்டால், அதன்பின் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் இருந்த வார்டனுக்கு ஸ்வாதி மேல் துளி கூட இரக்கமோ, தன் மீது சிறிதளவு குற்றவுணர்ச்சியோ கூட இல்லை.

ஆனால் அந்த வார்டனின் எண்ணத்தை சரியாக இப்போது தான் புரிந்துகொண்ட ஸ்வாதிக்கு அவளை சும்மா விடும் எண்ணமில்லை.

நாலாவது மாடியில் இருந்த வானதியின் அறையில் அவளின்னும் உறங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் அவளில்லை என்ற எண்ணத்தில் அங்குவிடப்பட்ட ஸ்வாதிக்கு அது தெரிந்திருந்தது.

கண்விழித்த அவளுக்கு உடல் ரணமாய் இருக்க, துடிக்கும் கன்றுக்குட்டியை கொல்ல ஏன் யாரோ முன்வர வேண்டும், கன்றுக்குட்டியே தற்கொலை செய்து கொள்ளலாமே என்று தோன்றியது அவளுக்கு.

அதற்கு முன் தன் டைரியை எடுத்தவள் தனக்கு நடந்த அனைத்தையும் எழுதி முடித்து கடைசியாக

“கன்றுக்குட்டி செத்துவிட்டது. அதன் வலிகள் என்றும் சாகாது….”

என்ற வரியோடு முடித்திருந்தாள்.

இறுகிய முகத்தோடு டைரியை மூடியவன், அடுத்த சில நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை. அவனுள் புதைந்துவிடும்  நோக்கோடு அவனுடன் சேர்ந்தமர்ந்திருந்தவளுக்கு டைரியை மூடிவிட்டு அமைதியாக இருக்கும் அவனின் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

அவன் முகமே பார்த்திருந்தவள் சட்டென அவன் ஓங்கி கட்டில் காலின் முகப்பில் குத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை. அதிலிருந்த மரவேலைப்பாடுகள் கையை பதம்பார்க்க இரத்தம் சொட்டியது.

“ராஜாவும் அவன் ப்ரண்ட்ஸும் செஞ்சதே சரின்னு தோணுது எனக்கு… இவனுக்கெல்லாம் அதான் சரி, அதே கம்மி, எனக்கு மட்டும் இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, அதைவிட கொடூரமா அவனையும் அவன் ஆளுங்களையும் கொன்னிருப்பேன்…” என்று கண்கள் சிவக்க அவன் பேசியதைக் கேட்டு வானதி இன்னும் பயந்து போனாள்.

ஏற்கனவே பயந்து நடுங்கி அவனுள் புதைந்து கொண்டிருந்தவள் அவனின் அதீத செய்கையால் மூர்சையானாள்.

அவள் சரிந்து கீழே விழுவதை கண்டவன் தன் உணர்விலிருந்து மீண்டு அவளை தூக்கி தண்ணீர் புகட்டி தட்டி எழுப்பினான். அவளின் நடுக்கம் உணர்ந்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவனின் அணைப்பில் பாதுகாப்பை உணர்ந்தாள் வானதி.

அவள் நடுக்கத்தை உணர்ந்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், வேந்தனின் முடிவை எண்ணி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். இதுவரை எத்தணையோ வழக்குகளைப் பார்த்திருக்கிறான் தான். ஆனால் ஒருமுறை கூட இப்படி ஒரு வாக்குமூலத்தை வாக்குமூலமில்லை உயிர்குடிக்கும் வார்த்தைகளை அவன் படித்ததில்லை.

இத்தணையும் படித்துவிட்டு தன் போன்ற சகபெண்ணிற்கும் நடந்ததை கேள்விப்பட்டுவிட்டு யாரோ ஒருவர் உறங்குவதே கடினமென்றால் அவளுடன் படித்த வானதிக்கு அது எப்படி இருக்கும் என்று ஸ்ரீராமால் உணரமுடிந்தது. தன் ஸ்பரிசம் தீண்டியதும் அவளுள் ஏற்பட்ட பதட்டத்திற்கான காரணத்தையும் புரிந்து கொண்டவன், இனி அவளை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வதென உறுதி கொண்டான் அவளறியாமலே.

அவளின் சீரான சுவாசங்களுக்குப் பின்னே அவளை மெத்தையில் படுக்கவைத்து விட்டு விலகியவன், தன் அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தவன் அது நள்ளிரவு பன்னிரண்டைக் காட்ட, இப்போது ராஜாவிற்கு அழைப்பது சரியாக இருக்காது, அதுவும் அவன் வாழ்வை துவங்கியிருக்கும் முதல் இரவன்று வேண்டாமென விட்டுவிட்டான்.

அங்கு ராஜா ஒருவழியாய் வெற்றிக்கனியை எட்டிப்பறித்திருந்தான், அறைக்குள் நுழைந்திருந்தான். எங்கு அதுவே எட்டாக்கனியாகிடுமோ என்ற அவனின் பயம் அவனுக்குத் தானே தெரியும்.

மலர்விழியும் பூபதியும் கூட அவரவரிடத்தில் சென்று உறங்கியிருந்தனர். தாங்கள் இன்னும் விழித்திருத்தல் சரியில்லை என தெளிந்தவர்கள், ராஜா அங்கு கதவு தட்டும் ஓசை கேட்டதுமே, கண்களால் விடை பெற்று அவரவர் இருப்பிடம் சென்று உறங்கியிருந்தனர்.

யாரும் தன்னை கவனிக்காதது சற்று நிம்மதிதான் என்றாலும் ஐந்து நிமிடமே ஆனாலும் அவள் கதவைத் திறக்காதது அவனை பதட்டமாக்கியது.

பொறுமை என்பது பெயருக்கு கூட இல்லாமல் மனம் ஏடாகூடமாய் ஏதேதோ எண்ணியது. அதற்குள் கடிவாளமாய் அவள் கதவைத் திறந்திருந்தாள்.

”ஹப்பாடி…” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டவன், அப்படியே நின்றிருக்க, அவன் சட்டை காலரைப் பிடித்து உள்ளே இழுத்தவள், வெளியில் யாரேனும் பார்க்கிறார்களா என எட்டிப்பார்த்துவிட்டு, யாருமில்லை என கதவை அடைத்தாள்.

அடைத்த கதவின் மீதே சாய்ந்து ஒய்யாரமாய் நின்றவளைப் பார்த்ததும், இதுவரை இருந்த பதட்டமெல்லாம் எங்கோ ஓடி மறைந்தது அவனுக்கு.

“ஏண்டி மனுசன ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு கூட காக்க வைப்பியா…”

“என்ன இப்ப பெருசா காத்திருந்துடீங்க, ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு இத்தணை ஆர்பாட்டமா…”

“அஞ்சு நிமிஷமா…. ஏன் சொல்லமாட்ட… என்னோட இந்த அஞ்சு நிமிஷக் காத்திருப்பு மட்டுமில்ல டி, என்னிக்கு உன்ன பாத்தேனோ அன்னையிலிருந்து கணக்கு பண்ணிப் பாரு, இந்த அஞ்சு நிமிஷம் எவ்ளோ பெருசுன்னு உனக்குத் தெரியும்…”

“அப்ப நான் காத்திருந்ததெல்லாம் ஒண்ணுமே இல்லையா…”

“நீ காத்திருந்தியா சொல்லவே இல்ல…”

”ஏன் இத்தணை வருசமா காத்திருக்காம வேற யாரையாச்சுமா கல்யாணம் செஞ்சிகிட்டு போயிட்டேன்…”

“ஆஹா… போயிருக்க வேண்டியது தானே யார் வேணாம்னாங்க…”

“ஓஹோ போயிருந்தா சந்தோஷமா உங்களுக்கு…”

”சந்தோஷம் ரொம்ப சந்தோஷமா இருப்பேன், எங்க அதுக்கு வழியில்லாமத் தான் கல்யாணத்தை செஞ்சிட்டேனே…”

“அவ்ளோ கஷ்டமா இப்ப அப்படியெல்லா கஷ்டப்பட்டுகிட்டு என்கூட ஒண்ணும் வாழவேணாம், போங்க நான் போறேன்….” என்று கதவைத் திறக்கப்போனவளை அலேக்காக தூக்கி கட்டிலில் போட்டிருந்தான் மைத்ரேய ராஜா.

“நானும் எவ்ளோ நேரம் தான் சண்டை போடுற மாதிரியே நடிக்கிறது… என் ப்யூட்டி எனக்காக வெயிட் பண்ணீட்டு இருக்கும் போது, லேட்டா வந்தது என் தப்பு தாண்டி என் செல்லமே…”

“அடப்பாவி ஃப்ராடு, இந்த சண்டை உண்மை இல்லயா அப்ப…”

“அப்ப, இப்ப, எப்பயுமே உன் மேல கோவமும் வராது நமக்குள்ள சண்டையும் வராது…”

“ஹான்…சண்டை வராதா… அப்ப போர் அடிக்குமே…” என்கையில் அவள் மீதே அமர்ந்திருந்தான் ராஜா.

”போர் அடிக்காம இருக்குறதுக்குத் தான் இப்படி ரொமான்ஸ் பண்ணுறது என்று அவளின் மேனி மீது அவன் படர, அவனின் ஸ்பரிசம் மெல்ல தீண்டினாலே அந்த பரவசத்தை, அவளின் நிலையில்லா சுவாசத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது.

ஆனால் சட்டென்று அவன் முழுமையாய் ஆட்கொண்டதில் திணறிப்போயிருந்தாள். ”ஹே ஆ ஆ அம்மா…” என்றெல்லாம் அவள் கத்த சட்டென நிமிர்ந்தவன்,

“என்னடி அத்தையெல்லாம் இங்க கூப்பிடுற, உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லயா…” என்று அவன் கேட்க, அவன் தலைமுடியை கொத்தாகப் பிடித்தவள்,

“என்ன நானும் பாத்துட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா வாய் நீளுது, அதை என்ன பண்றேன்னு பாரு…” என்று இழுத்து அவன் மீசை உரச உதடுகளைக் கடித்திருந்தாள்.

அவனின் தீண்டலுக்கு வழிமொழியாய் மொழியில்லா வழியாய் அவள் இதழ்களில் பதிலுரைக்க, உற்சாகப் பேறூற்றாய் பெருக்கெடுத்தவன் அவளின் மீது பெரும் பிரவாகமெடுத்த நதியாய் பாய அவளோ நாணம் நளினம் நகையாய் பூட்டி ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தை அணைத்துக் கொள்ளும் சாகரமாய் இருகைநீட்டி வரவேற்க, அழகிய சங்கமத்தின் அதிர்வுகள் இருவரிலும் உணரத்துவங்கின.

நிலைமொழியென ஈற்றென அவளிருக்க, வருமொழி முதலென  அவன் கூட புணர்ச்சிவிதிகள் தமிழிலென பாந்தமாய் பொருந்திப்போனது அவர்களுக்குள்.

உள்ளக்கிடக்கைகள் உணர்வுகளின் கைப்பிடியில் இருக்க, உணர்வுகளின் பெரும்வேட்கையாய் காதல் பிறப்பெடுக்க, தளிரென மங்கையவள் செவிமடல் செங்காந்தளென செம்மைபூசியது.

சிறுகுறும்பும், பெரும் காதலுமாய் அவன் விழிகள் அவளைத் தேட, அனைத்தையும் தன்னுள் அடக்கிடும் அண்டப் பேரண்ட பொழுதுகளின் சிறுபிம்பமாய் அவள் கிடக்க, அந்தக் கூடல் அழகிய தேடல் அளவிலா அன்பின் மடலாகி இருவரையும் கூட்டியிருந்தது.

அந்திமபொழுதுகளின் நீளமது குறைந்து, ஆதவன் வந்தது துரிதமென புலர்ந்த பொழுதில் உடலெங்கே, உடையெங்கே என விழிகள் தேடித்தொலையாதபடி இருவரின் சகலமும் உறங்கிய நிமிடங்களில் ஒரு போர்வைக்குள் என்றானது.

தேடலின் விடையும் தேடிய பொருளும் சங்கமித்ததில் ஜென்ம ஜென்மமாய் கொண்டிருந்த காதல் தாகம் இருவரிலும் தணிந்து துவங்கியிருந்தது புதியதாய்.

தூக்கம் சுகமாயிருக்கையில் எழுப்புவதே விடியலின் பண்பு, அதை தவறாமல் செய்திருந்தார் மகாலட்சுமி. அவருக்கு ஐந்து மணிக்கே விழிப்பு வந்திருந்தது. எழுந்து தன் வழக்கமான வேலைகளை திருமண வீடென்பதால் இன்னும் சிரத்தையோடு செய்து கொண்டிருந்தார்.

ஆறுமணிக்கு எழுப்பினால் போதுமென எண்ணியவர் அதன் படியே மருமகளின் பேரைச் சொல்லி கதவைத் தட்ட, விழிப்பு பெற்று அவள் வந்து கதவைத் திறப்பதற்குள் ஆன நேரத்தைக் கொண்டு ஆயிரம் கணக்குகளை போட்டிருந்தார் மனதுக்குள்.

மைவிழி வந்து கதவைத் திறக்கவும், ”குளிச்சிட்டு அவனையும் எழுப்பி குளிக்க சொல்லீட்டு வந்து விளக்கேத்தி சாமி கும்பிடுமா…” என்றுவிட்டு அவர் வெட்கப்பட்டுச் செல்ல, விசித்திரமாய் பார்த்தவள்.

’ஒருவேளை கவுண்டமணி படத்துல வர ஆப்பிரிக்கன் கல்சர் மாதிரி இவங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட்டா இருக்குமோ..! இப்படி வெட்கப்பட்டுகிட்டு போறாங்க, மாமாவ வேற காணோம்..’ என்று எண்ணிஅய்படி குளித்துமுடித்து அவனையும் எழுப்பி குளிக்கச்சொல்லிவிட்டு தன் மாமியார் சொன்னபடி விளக்கேற்றி இறைவனை வழிபடச் சென்றாள்.

அங்கே மலர்களால் சாமிபடங்களை அலங்கரித்து விளக்கு ஏற்றும் வேலையை மட்டும் அக்காளுக்கு வைத்திருந்தாள் மலர்விழி. அவளை ஆச்சர்யமாய் பார்த்த மைவிழி, “என்ன மலர் அதுக்குள்ள எழுந்திட்டியா…”

“உனக்கு முன்னாடி எழுந்து குளிச்சு சாமி கும்பிடவே வந்துட்டேனே அப்பவே தெரியலையா, நான் எழுந்திட்டேனா இல்லையான்னு…”

“ம்ம்ம்….” என்று முறைத்தவள், விளக்கையேற்றி மனதார இறைவனுக்கு நன்றி கூறினாள். அதே நேரம் ராஜாவை யாரோ வெளியிலிருந்து கூப்பிடும் சப்தம் கேட்டது.

அதே நேரம் சரியாக ராஜாவே வெளியில் வர, புன்னகை முகமாக ஸ்ரீராம், வானதி, சேதுபதி, பூபதி அனைவரும் நின்றிருந்தனர்.

“ஹே… வாங்க வாங்க என்னடா காலையிலயே சர்ப்ரைஸ் பண்றீங்க…”

“நீங்க புருஷன் பொண்டாட்டி செய்றதை விடவா நாங்க செஞ்சிட்டோம்…”என்றான் ஸ்ரீராம் விஷமமாக,

சட்டென மைவிழிக்கு அவள் வேந்தனைப் பற்றி சேகரித்து மினிஸ்டரிம் கொடுத்தது அதன் பின் அவரே அவனுக்கான தண்டனை கொடுத்தது என தன் முயற்சியால் செய்ததெல்லாம் நினைவு வர, ஸ்ரீராமிற்கோ திட்டமிட்டு வேந்தனை கடத்தி அடித்துப் போட்டது கண்முன் வந்து போனது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, இருவருக்கும் தங்கள் செய்தது தெரிந்துவிட்டதோ என்று ஒரு நொடி அச்சம் வந்து போனது கண்ணில்.

அதை சரியாக கவனித்த ஸ்ரீராம், மைவிழி எதையும் செய்திருப்பாள் என்று யோசிக்கக்கூட இல்லை. அவளும் வானதியிடத்தில் கூட இதையெல்லாம் தெரிவிக்காததால் அவளின் ரகசியங்களி அனைத்து அவளுக்குள்ளேயே இருந்தது. இனியும் அப்படியே இருக்கட்டும் என்று எண்ணியவள் தன் முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டாள்.

ராஜா, பூபதி, சேதுபதி மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, மீண்டும் ஸ்ரீராமே பேசினான். “நீங்க மூணு பேரும் செம காம்போல (combo)… பெஸ்ட் பிரண்ட்ஸ்னு சொல்ல வந்தேன்….”

ஸ்ரீராமை வானதியின் கணவனாக மட்டுமே கருத்தில் வைத்து திருமணத்தில் முதன் முதலாய் பார்த்த பூபதிக்கும் சேதுபதிக்கும் எதுவும் புரியவில்லை. எதையோ மனதில் வைத்து பேசுகிறான் என்பது மட்டும் புரிந்தது.

வானதிக்கு ஒன்றும் விளங்கவில்லை, நேற்று டைரியை படித்ததிலும் அவனின் நடவடிக்கைகள் அவளுக்கு விசித்திரமாக இருந்தது. அவளின் மீதான அதீத அக்கறையும், அன்பும் அவளைத் திணறடித்தது என்றால்,

காலை எழுந்ததும் “கிளம்பு வானதி உன் ப்ரண்ட்ஸ் மனசார வாழ்த்த முடியலை, அவங்க வீட்டில எதோ டென்சன் போலன்னு நாமளும் சரியா பேசாம கூட ஃபங்ஷன் மட்டும் அட்டண்ட் செஞ்சிட்டு வந்துட்டோம், வா போய் பேசி சந்தோஷத்தை பகிர்ந்திட்டு வரலாம்….” என்று அவன் அழைத்தது அதிலும் அதிசயம்.

புரியாத பார்வையோட அவனோடு வந்தவளுக்கு இங்கு அவனின் பேச்சுகளும் வித்தியாசமாய் இருக்க, ஆயாசமாய் வந்தது. சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள் என்னவோ பேசுங்கள் என.

ஒவ்வொருவருக்குள்ளும் மற்றவர் அறியாத செய்திகளும் ரகசியங்களும் நிறையவே இருந்தது.

”நீ யார்னு எனக்கு தெரியும், நா யார்னு உனக்கு தெரியும், நம்ம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்…” கவுண்டமணியின் குரலில் வசனம் ஒலிக்க, யாரென்று அனைவரும் திரும்பிப் பார்க்க,

நந்தகோபாலன் அவர் மொபைலில் வாட்சப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த பெரியவங்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்ததும் போதும் அவங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியலை என்பது போல் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்ள,

வாசலில் என்ன பேச்சு சத்தம் என்று சமையலறையில் இருந்து வந்து மகாலட்சுமி பார்க்க, “அட டாக்டர் தம்பி, வாங்க வாங்க நேத்து உங்களை சரியாக கவனிக்க முடியல, வாங்கப்பா எல்லாரும் உள்ள வாங்கப்பா…” என்று ஸ்ரீராமை பார்த்து அழைத்தாலும் அனைவரையும் அழைத்துச்சென்று உபசரித்தார்.

கிளம்புகையில், ”மைவிழிச்செல்வி மைத்ரேயராஜா ரெண்டு பேரும் உங்க இல்லறத்தை இனிதா ஆரம்பிச்சு நீண்ட நெடுங்காலம் மகிழ்ச்சியோடயும், அன்போடயும், புரிதலோடயும் வாழ எங்களோட வாழ்த்துகளும் இந்த அன்புப் பரிசும்…” என்று தூய தமிழில் வாழ்த்திய ஸ்ரீராம் அவர்கள் கையில் தேனிலவிற்கான டிக்கெட்டுகளை கொடுக்க, இன்முகத்தோடு வாங்கிக் கொண்டனர் ராஜாவும் மைவிழியும்.

“என்ன ப்ரோ தமிழ்பற்றா, தூயதமிழ்ல வாழ்த்து சொல்றீங்க…” என்று பூபதி கேட்டுவிட, அவனுக்கு பதில் சொல்ல ராஜாவின் நாவுகள் துடித்தாலும் அவனுக்கு சேதுபதி பதிலை துவக்கியிருந்தான்.

“ஏண்டா வேற எந்த மொழியிலாவது சொந்த தாய்மொழியில பேசுறது கூச்சப்படுறவங்களைப் பார்த்திருக்கியா, நம்ம தமிழர்களுக்கு மட்டும் தான் அந்த தயக்கமும் கூச்சமும் ஏன் இங்கிலிஸ்ல பேசுனாதான் நாகரீகம்னு நெனக்கிற மனப்பான்மையும் இருக்கு, சாரி, தேங்க்ஸ்ல ஆரம்பிச்சு, ஹாப்பி பர்த்டே, ஹாப்பி ஆனிவர்சரின்னு, எல்லாத்தை வேற மொழியில டக்கு டக்குன்னு சொல்ற நம்ம, தமிழ்ல சொன்னா நம்மள சீப்பா நெனச்சிருவாங்களோன்னு நெனக்கிறோம், ஆனா அந்த எண்ணமெல்லா மாறிடுச்சு, தாய்மொழியில வாழ்த்த என்னங்க தயக்கம்னு, தூயதமிழ்ல மனசார வாழ்த்துறதும், அவங்க கொழந்தைகளுக்கு தூய தமிழ்ல பேர் வைக்கிறதும் தான் இப்ப ட்ரெண்டே… சோ நாமளும் அப்படியே வாழ்த்துவோம்…” என்று சேதுபதி முடிக்க, பூபதி மூச்சுவாங்கிக் கொண்டிருந்தான்.

”ஆனா எந்த ட்ரெண்டு வந்தாலும் இப்படி நீளமா பேசுற ட்ரெண்டு மட்டும் தமிழர்கள் கிட்ட மாறவே மாட்டேங்குதே…” என்று வாங்கிய மூச்சின் நடுவே கேட்க,

“அது தான் டா எங்க கலாச்சாரம் பண்பாடு, அப்படித்தாண்டா விளக்கமா பதில் சொல்லுவோம், நீயும் அதையே ஃபாலோ பண்ணுடா…” என்று வீராவேசமாக பேசிய சேதுபதிக்கு அங்கிருந்த அனைவரும் “ஹோ…” என்று கூச்சலிட்டு கைதட்ட

சட்டென ஸ்ரீராம் “உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குதுங்க…” என்று சேதுபதிக்கு கைகொடுக்க, மீண்டும் ஆரவாரம்.

அவர்களோடே நாமும் திருமதி திருநிறைசெல்வன் தம்பதியை வாழ்த்தி விடைபெறுவோம்…!

சுபம்.

 

 

 

 

 

 

 

Advertisement