திகம்பரனின் திகம்பரி அவள் 15

இரவு போல தான் ஈஷ்வர் வீடு வந்தான். பல்லவி வீட்டில் இருந்து கிளம்பியவன், விஷ்ணுவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர நேரம் எடுக்க, நரசிம்மன் போன் கூட செய்யாமல் மகன் வரும் வரை காத்திருந்தார்

கங்கா கணவனின் முகத்தில் இருந்து ஏதோ சரியில்லை என்று புரிந்து உணவிற்கு கூட கூப்பிடவில்லை. மகாவிற்கும் தந்தையின் முகத்தில் இருந்த வித்தியாசம் பிடிபட, அரசியல் பிரச்சனை ஏதாவது இருக்கும் என்று நினைத்து அமைதியாக சாப்பிட்டு மேலேறிவிட்டாள்

ஈஷ்வர் வீட்டிற்குள் வரும் போது மிகவும் அமைதியாக இருந்தது. டிவி சத்தம் கூட இல்லை. நரசிம்மன் வீட்டில் இருந்தாலே நியூஸ் சேனல் ஓடி கொண்டே இருக்கும். இன்று அதுவும் இல்லை. என்னாச்சு..? யோசனையுடன் உள்ளே வந்தான்

வந்துட்டியா..? போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்..” கங்கா மகனை பார்த்து சொல்ல, அவனும் சரி என்றவன், நேரே தந்தையிடம் தான் சென்றான்

எல்லாம் ஓகே தானேப்பா..?” என்ற கேள்வியுடன் அவர் முன் நின்றான்

நீங்க அம்மா சொன்னதை செஞ்சுட்டு ஆபிஸ் ரூம் வாங்க..” சொன்னவர் எழுந்து ஆபிஸ் ரூம் செல்ல

ஏங்க இன்னும் நீங்க சாப்பிடலயே..” கங்கா குரல் கொடுத்தார்

எனக்கு வேண்டாம்..” சொல்லி கொண்டே ஆபிஸ் ரூம் சென்று கதவை மூடி கொண்டார்

ம்மா.. என்ன ஆச்சு..? எதாவது பிரச்சனையா..?” ஈஷ்வர் கங்காவிடம் கேட்டான்

எனக்கும் தெரியல ஈஷ்வர், ஆமா உன்னை எதுக்கு ஆபிஸ் ரூம் வர சொல்றார்..?” கங்கா கேட்கவும் தான், ஈஷ்வருக்கு அப்படி இருக்குமோ என்று சந்தேகம் வந்தது

ரூம் சென்று ரிப்ரெஷ் செய்து வந்தவன், கங்கா உணவு எடுத்து வைக்கவும், “அப்பாகிட்ட பேசிட்டு வந்துடுறேன் இருங்கம்மா..” என்று நரசிம்மனை பார்க்க  சென்றான்.

“உட்காருங்க..” என்றவர், அவன் அமரவும், “இன்னிக்கு எங்க போயிருந்தீங்க..?” எடுத்தவுடன் கேட்டார்

பல்லவி பேமிலி கூட கோவிலுக்கு..” ஈஷ்வர் சொல்லவும்

காலேஜ் போகாம இதென்னப்பா..? அதுவும் ஒரு ட்ரைவரா போயிருக்கீங்க..? முகம் சுளித்து அதிருப்தியுடன் கேட்டார்

ஈஷ்வர் முதல் கேள்விக்கு பதில் சொல்லமால், “ட்ரைவரா போனா என்னப்பா..? எந்த வேலையும் குறைவு இல்லைன்னு நீங்க தானே சொல்வீங்க..?” என்றான்

அது வாழ்க்கையில முன்னேறனும்ன்னா, நீங்க போனது வேற.. உங்களுக்கே அது தெரியும்..”

சரிதான்ப்பா.. ஆனா சும்மா அந்த வேலையை செய்யல, டிரைவ் பண்ணதுக்கு வருமானம் கிடைச்சது தானே..? இன்னும் சொல்ல போனா என் முதல் வருமானம் இது..”

இப்படி வேலை பார்த்து வருமானம் பார்க்கிற நிலையில  நீங்க இல்லை, உங்க வேலை இப்போ படிக்கிறது தான், ட்ரைவரா போகிறது இல்லை..” பேச்சில் கோவம் தெரிந்தது

ப்பா.. ஒரு நாள் தானே..?” ஈஷ்வர் சமாதானமாக சொல்ல

ஒரு நாள்ங்கிறது தான் கமா போட்டு போயிட்டே இருக்கும், அப்பறம் எப்படி படிக்கிறது..?”

“இதுல என்ன இருக்கு..? ஒருநாள் எனக்காக நான் எடுத்துக்கிட்டது அவ்வளவு பெரிய குத்தமா..? ஏன் அப்பா விடாம பேசுறார்.. இத்தனை நாள் நான் அவகிட்ட இருந்து தள்ளி தானே இருந்தேன்..” ஈஷ்வர் மனதில் ஓடினாலும்,

ப்பா.. நான் நோட்ஸ் வாங்கி படிச்சிடுவேன்.. இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை..” என்றான்.

வேறேது பெரிய விஷயம் அந்த பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பார்க்கிறதா..?” அவர் சட்டென பேசிவிட,

“இதென்ன..?” ஈஷ்வர் முகம் மாறியது. முதல் முறையாக அவரின் பேச்சு பிடிக்கவில்லை. இவர்க்கு பிடிக்காதது செஞ்சா இவ்வளவு பேசுவாரா..?” மகனாக அவரை எதிர்கொண்டான் அந்த நேரத்தில்

ஒரு நாள் லீவ் போட்டா என்னப்பா..? ஏன் இவ்வளவு ரியாக்ட் பண்றீங்க..?கேட்டுவிட்டான்.  

அப்படி போகணும்ன்னு என்ன இருக்கு..? படிப்பு விஷயத்துல எந்த சமாதானமும் இல்லை, இனி இப்படி பண்ணாதீங்க..” கொஞ்சம் கண்டிப்புடன் சொல்ல, ஈஷ்வருக்கு மனதில் ஒரு கோவம் முணுக்கென்று முளைத்தது

ப்பா.. நான் உங்ககிட்ட முதல்லே சொன்னது தான், படிச்சு நான் கண்டிப்பா ஒரு நல்ல நிலைக்கு வருவேன்.. அதுக்காக இப்படி கேள்வி கேட்கிறது..” நிறுத்த, நரசிம்மனுக்கு அவன் பேச்சு புரிந்தது

பல்லவி விஷயத்தில் கேள்வி கேட்க கூடாது என்கிறான் மகன். கட்டுப்படுத்தி வைத்த பொறுமை போகும் நிலை

அந்த பொண்ணு பின்னாடி புத்தி போனா படிப்புல எப்படி கவனம் இருக்கும்..? உங்களை நம்பின என் நம்பிக்கையை காப்பாத்துவீங்களான்னு இப்போ யோசனையா இருக்கு.. எல்லாம் அந்த பொண்ணால தான்..  முதல்லே இதை நான் என்னன்னு கவனிச்சிருக்கணும்..”  அவனுக்கு கேட்குமாறு முணுமுணுத்தார். முதன் முதலாக அவரின் வார்த்தையை மகன் ஏற்க மறுக்கிறான். அதன் ஏமாற்றமே இந்த பேச்சு. 

ஈஷ்வரின் கோவம் அவனின் முகத்திலே தெரிந்தது. “உங்க மகனையும், மருமகளையும் எப்படி கவனிப்பீங்க..? என்னை அடிச்சா..? இல்லை ஆள் வச்சு என் லவியை மிரட்டியா..? சொல்லுங்க..” கண்கள் சிவக்க கேட்டான்.  

எதற்கும் முதல் என்று ஒன்று உண்டல்லவா..? அது இங்கு அப்பா, மகனுக்கும் ஆரம்பித்தது. இருவரும் மற்றவரிடம் அதிருப்தி கொண்டனர்.

காதல் என்ற இடத்தில் நரசிம்மன் நின்றார்  என்றால், பல்லவி என்ற இடத்தில் ஈஷ்வர் நின்றான்

நரசிம்மனுக்கு  மகன் காதலால் தடம் மாறிடுவான் என்ற பயம் கோவத்தை கொடுத்தது. ஈஷ்வருக்கோ தந்தை என்னை நம்பவில்லையா என்ற ஏமாற்றம் கோவத்தை கொடுத்தது

அதிலும் பல்லவியை அந்த பெண் என்றதும், கவனிச்சிருப்பேன் என்றதும் சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதன் வெளிப்பாடே உங்க மருமகள் என்ற இடைச்சொருகல். என்னிக்கு இருந்தாலும் அவ தான் உங்க மருமக என்ற எச்சரிக்கையும் அதில் நிச்சயம் உண்டு

அதில்  அப்பாவாக நரசிம்மனுக்கு அடி தான். “என்னை விட அந்த பொண்ணு முக்கியமா போயிட்டாளா..? அவளுக்காக என்கிட்டேயே இப்படி பேசுவாரா..?” காதல் சகல அப்பாக்களை போல அவரையும் எண்ண வைத்தது

இவரும் மத்த எல்லா அப்பா மாதிரி தான், காதலுக்கு எதிரா..?” மகனாக அவர் மேல் கோவம் கொண்டான் ஈஷ்வர்

காதல் எனும் இடத்தில் பெற்றவர்கள், பிள்ளைகள் நிதானமாக இருக்க முடிவதில்லை போல. நரசிம்மன் மகனுக்காக முயன்றாலும் மகனின்  காதல் சேட்டை அவரையும் அவனிடம்  பேச வைத்துவிட்டது. நேருக்கு நேர் முகம் பார்த்த அப்பா, மகன் இருவருமே அவரவர் சரி என்ற நிலையில் நின்றனர்.

“இப்போ தான் செகண்ட் இயர் ஆரம்பிச்சிருக்கு, ஸ்டார்ட் பண்ணும் போதே இப்படி காலேஜ் கட்டடிக்கிறது தப்புன்னா உங்களுக்கு கோவம் வருது இல்லை..” நரசிம்மன் விடாமல் கேட்க, மகனுக்கோ  அவருக்கு பதில் சொல்லும் எண்ணமில்லை போல

“UPSC கோச்சிங் போக சொன்னாலும் பார்க்கிறேன்ப்பான்னு நாள் கடத்துறீங்க, காலேஜாவது நல்லா  படிங்கன்னா அதுக்கும் அப்பாகிட்ட சண்டை, அப்பறம் வேறெப்படி தான் படிச்சு நல்ல நிலைக்கு வரது, இதோ உங்களுக்கு பின்னாடி பொறந்த பொண்ணு மகா படிச்சு டாக்டராக போறா..? நீங்களும் ஒழுங்கா படிச்சு ஒரு நல்ல வேலைல உட்காருங்கன்னா கோவம், வீணா போனா கோவம், அதுவும் என்கிட்ட..” ஆதங்கத்துடன் சொல்ல, ஈஷ்வர் முகம் திருப்பி கொண்டான்

அதில்  மனம் கனத்து போனது அவருக்கு. அவரின் மிகப்பெரிய பலவீனமே ஈஷ்வர் தான். பிறந்ததில் இருந்தே அவன் என்றால் உயிர் அவருக்கு. வீட்டில் உள்ள மற்ற யாருக்கும் கூட இவ்வளவு பாசம் இல்லை, ஏன் கங்காவிற்கும் கூட. ஈஷ்வர் என்றாலே அவரின் மனம், முகம் இரண்டும் மலரும். இப்போது அதே மகனால் அவரின் மனம், முகம் இரண்டும் சுருங்கி வேதனை கொண்டது.

பொறுமையாக பேசி மகனுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற நரசிம்மனின் முயற்சி அவரின் பேச்சாலே தோல்வியில் முடிந்தது. மகனின் குணம் தெரிந்தும் இப்படி பேசியிருக்க கூடாது. இப்போது வருத்தம் தான். இனி என்ன செய்ய..?,  “போங்க..” என்றுவிட்டார்

ஈஷ்வரும்  எதுவும் பேசாமல் வெளியே வந்தவன், கங்கா சாப்பிட கூப்பிட கூப்பிட ரூமிற்கு வந்துவிட்டான்

நரசிம்மன் பேசிய விதம் பிடிக்கல, “என்கிட்டேயும் அரசியல்வாதியா பேசுறாரா..? அவரோட கனவுக்காக தான் என்மேல இவ்வளவு பாசமா..? ஒருவேளை நான் அதை செய்யலன்னா இப்படித்தான் என்கிட்ட நடந்துப்பாரா..?” அப்பா மேலிருந்த பிம்பம் கொஞ்சம் கீழிறங்க, அதுவும் அவனுக்கு தாங்க முடியவில்லை

தனியாக யோசிக்க யோசிக்க மனம் எங்கெங்கோ சென்றது. போன் எடுத்து பல்லவிக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. இவ வேற..? காதலியின் மேலும் எரிச்சல் கொண்டவன், எப்போதும் போல விஷ்ணுவிற்கு  போன் செய்தான்

அவன் எடுக்கவும், “என்னடா பண்ணிட்டு இருந்த இவ்வளவு நேரம்..?” என்று கத்த, அவனுக்கு புரிந்து போனது ஏதோ கடுப்பு என்று.

“சரி சொல்லு..” விஷ்ணு பொறுமையாக கேட்க

என்ன சொல்ல..? ஒன்னுமில்லை..: என்றான் சிடுசிடுப்பாக ஈஷ்வர்

“ஓகே.. சாப்பிட்டியா..?”

இல்லை, எனக்கு பிடிக்கல..”

ஏன்..? பசிக்குதுன்னு தானே வீட்டுக்கு போன..?”

அதான் தப்பு பண்ணிட்டேன், உன்னை கூட்டிட்டு போய்  வெளியே சாப்பிட்டு வந்திருக்கணும்..” ஈஷ்வர் எரிச்சலுடன் சொன்னான்