“சொல்லுங்க..”

“என்னடி பேசிட்டு இருக்கும் போதே கிளம்பிட்ட..?” இவன்  ஆரம்பித்தான். 

“ம்ப்ச்.. அதுக்கே இவ்வளவு நேரம் பேச்சு வாங்கிட்டு வந்தேன்..”

“உங்க பாட்டியா..? அவங்க அப்படி தானே, ப்ரீயா விடு..” என்றவன்,  “நாளைக்கு எந்த பேட்ச் கிளாஸ் வர..?  கேட்டான். அவன் எதற்கு கேட்கிறான் புரிந்தது. 

“நாளைக்கு நான் கிளாஸ் வரல..” என்றாள். 

“ஏன்..?”

“அம்மாவும் நானும் ஓம் சக்தி கோவிலுக்கு போறோம்..”

“ஓஹ்.. என்ன திடீர்ன்னு..”

“எல்லா வருஷமும் போவோம், இந்த வருஷம் அண்ணா மேரேஜ் ப்ரீபிரேஷன்ல லேட் ஆகிடுச்சு..”

“ம்ம்.. எப்படி போறீங்க..?” 

“ஆக்டிங் ட்ரைவர் வர சொல்லி நம்ம கார்லே போறோம்..” என, ஈஷ்வர் கண் சுருக்கி எதையோ யோசித்தவன், மேலும் கேட்டு தெரிந்து கொண்டான். 

“சரி நான் வைக்கிறேன்.. அம்மா வந்து பார்த்துட்டு போறாங்க..” வைத்துவிட, ஈஷ்வருக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது. பேசமுடியறதில்லை, பார்க்க முடியறதில்லை. என்ன லவ் பண்றோமோ நாங்க..? 

போன் எடுத்தவன் அடுத்த சில நிமிடங்கள் யாருக்கோ  பேசிவிட்டு மலர்ந்த முகத்துடன் படுத்தான்.  இரவு பனிரெண்டு மணிக்கு டான் என்று பல்லவிக்கு அழைத்துவிட்டான். அவள் இதை எதிர்பார்த்திருப்பாள் போல, சீக்கிரமே எடுத்துவிட்டாள். 

“ஹாப்பி ஹாப்பி பர்த் டே லவி.. அடுத்த வருஷம் மிஸர்ஸ் பல்லவி ஈஷ்வராக விஷ் பண்றேன்..” விளையாட்டாக வாழ்த்த, சிரித்தவள், 

“தேங்க யூ..” என்றாள் கிசுகிசுப்பாக.

“நீ இப்படி பேசும் போது கிளு கிளுப்பா இருக்கு..” குறும்பாக சீண்டியவன், “சொல்லு.. என் லவிக்கு என்ன கிப்ட் வேணும்..?” கேட்டான். 

அவள் யோசிக்கவே இல்லை.  “நான் உங்களுக்கு கொடுத்த கிப்டை யூஸ் பண்ணுங்க..” என்றாள். 

“இது தான் உனக்கு வேணுமா..?”

“ஆமா.. நான்அன்னிக்கு  அப்படி செஞ்சது தப்பு தான், சாரியும் கேட்டுட்டேன், இப்போவாவது அதை பிரிங்க, நான் ரொம்ப ஆசையா யோசிச்சு  வாங்கினேன்,  அண்ணா கூட பேக் பண்ணும் போது பார்த்துட்டு கேட்டான் தெரியுமா..? ப்ரண்டுது சொல்லிட்டேன்..” பல்லவி சொல்லி கொண்டிருக்க, அங்கு ஈஷ்வர் அவளின் கிப்ட்டை கையில் எடுத்து அமர்ந்தான்.

கிப்டை சுற்றியிருந்த கவர் சிவப்பு வண்ணத்தில் அங்கங்கு ஹார்ட் மின்னி கொண்டிருந்தது. புருவத்தை தூக்கியவன், நிதானமாக.. பொறுமையாக பிரித்தான். பாக்ஸ் இருக்க அதை எடுக்க, உள்ளே ஒரு குட்டி பாக்ஸ்..  ஷர்ட்.. இரண்டும் இருந்தது

அந்த குட்டி  பாக்ஸ் எடுத்து பிரிக்க, உள்ளே சிவன் உருவம் போல அவுட்லைன் உள்ள டாலர்ஈஷ்வர்.. சிவன்.. புரிந்தது. ஷர்ட் எடுத்து பார்த்தான். ஹால்ப்  ஹாண்ட் பிளாக்.. ஒயிட் மிக்ஸ்ட் செக்ட் ஷர்ட். பார்த்து கொண்டே அவளிடம் பேசி வைத்தவன், முதல் வேலையாக அந்த டாலரை அவனின் கழுத்து செயினில் கோர்த்தான்

மறுநாள் காலை பல்லவி குளித்து கீழே செல்ல, ரத்னா மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர், அவளுடன்  பூஜை செய்தார். மூர்த்தி, பரணிகோமதி எல்லாம் வாழ்த்து சொல்ல, நண்பர்கள் போன் செய்தனர். எல்லார் வாழ்த்தையும் பெற்று கொண்டவள், கோவில் கிளம்பும் முன் ஈஷ்வரிடம் பேச வேண்டும் என்று  நினைத்து கொண்டாள்.

ஈவினிங் நீங்க கோவிலுக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் கேக் கட் பண்ணலாம், அத்தை வீட்ல வரேன் சொல்லியிருக்காங்க..” பரணி சொல்ல, தலையாட்டி கொண்டவள் கேசரியை கிளறி கொண்டிருந்தாள்

ரத்னா கேப் வந்துடுச்சு, நான் கிளம்புறேன்..” மூர்த்தி குரல் கொடுக்க, அவருக்கு லன்ச் கொடுத்து வழியனுப்பி வைத்தவர்பரணி சாப்பிட வரவும் டிபன் வைத்தார்

ம்மா.. பத்து மணிக்கு ட்ரைவர் வந்துடுவார், நீங்க அதுக்குள்ள கிளம்பிடுங்க.. பல்லவி இது உனக்கு, பார்த்துக்கோ..” அவனுக்கு லன்ச்  கொடுத்த தங்கைக்கு பணம் கொடுத்தவன்  சொல்லி கொண்டு  கிளம்பிவிட்டான்

பல்லவி.. நீ போய் கிளம்பு, அம்மா அதுக்குள்ள பாட்டிக்கு எல்லாம் எடுத்து வச்சுடுறேன்..” ரத்னா சொல்ல, பல்லவி  ரூம் சென்றவள் ஈஷ்வருக்கு தான் அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. திரும்ப முயன்றவள், நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பி வரவும், ரத்னாவும்  தயாராக இருந்தார்

ட்ரைவர் ஏன் இன்னும் வரல, போன் போடு..” கோமதி சொல்லி கொண்டிருக்க, கேட்டை திறக்கும் சத்தம் கேட்டது

ட்ரைவர்  வந்துட்டார் போல.. பல்லவி நீ போய் கீ கொடு..” என, அவள் பாட்டியிடம் சொல்லி கொண்டு கீயுடன் வெளியே சென்றாள்

அத்தை.. நாங்க வரோம், பார்த்துக்கோங்க.. செண்பா நாங்க வர வரை அத்தை கூடவே இருக்கணும், லன்ச் நானே செஞ்சு வச்சுட்டேன்..”  வேலை பார்க்கும் பெண்ணிடம் சொல்லி கொண்டிருக்க, பல்லவி அங்கு வெளியே திரும்பி நின்ற மனிதனை சற்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்

ஈஷ்வர்..!!”  தலையில் கேப் போட்டு திரும்பி  நின்றிருந்தவன் போட்டிருந்த ஷர்ட்.. பார்த்ததும் சட்டென ஒரு மகிழ்ச்சி. என் கிப்ட் பிரிச்சிட்டாரா..? வேகமாக முன்னால் சென்று நின்றவள், “டாலர் போட்டிருக்கீங்களா..?” ஆர்வமாக கேட்டாள்.  

ஏய் என்னடி இது டக்குன்னு கண்டுபிடிச்சுட்ட..?” ஈஷ்வர் சிரிப்புடன்  சலித்து கொண்டே கேப்பை கழட்டினான்

ஏன் மறு வச்சு மாறுவேஷத்துல வந்தீங்களா கண்டுபிடிக்காம போக..? முதல்ல டாலர் காட்டுங்க..” அவனின் கழுத்தில் தேட

எந்த டாலர்..?” என்றான்

அப்போ போடலையா..?” முகம் சுணங்கியவள், “சரி ஷர்ட் போட்டிருக்கீங்களே அதுவே  போதும்..” என்றாள் மீண்டும் முகம் மலர்ந்து

பல்லவி கீ கொடுத்திட்டியா..?” ரத்னா வர

ஈஷ்வர் கேப்பை மாட்டி கொண்டவன், “கீ கொடு..” என்றான். அப்போது தான் அவளுக்கு அவன் வந்திருப்பது எதற்கு என்று புரிந்தது

அச்சோ.. நீங்க எதுக்கு ட்ரைவரா வந்தீங்க..?” அவனுக்கு கேட்கும் படி படபடத்தாள்

போலாமா தம்பி..?” ரத்னா அருகில் வந்துவிட

போலாம் மேம்.. நீங்க உட்காருங்க..” என்றவன்  பல்லவியை பார்த்து கண்ணடித்துவிட்டு டிரைவிங் சீட்டிற்கு சென்றான்

ஏறு பல்லவி..”  ரத்னா ஏறிக்கொண்டு மகளை கூப்பிட, ஈஷ்வரை பார்த்து கொண்டே காருக்குள்ளே வந்தாள். கார் வீட்டு கேட்டை தாண்ட, ஈஷ்வர் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து பல்லவியை பார்த்தான்

அவள் ஏன் இப்படி என்று அவனை பார்த்து கொண்டிருக்க, அவனோ திரும்ப அவளை பார்த்து கண்ணடித்தான். “ச்சு.. என்ன இது..?” பல்லவி கண்ணாலே கண்டித்தவள், முகம் திருப்பி கொண்டாள்

தம்பி.. டீ, காபி வேணும்ன்னா நிறுத்திக்கோங்க..” ரத்னா சொல்ல

கார் ஒட்டி கொண்டிருந்த ஈஷ்வர்சரி மேம்..” என்றவன், கண்ணாடி வழியே முகம் திருப்பி அமர்ந்திருந்த பல்லவியை பார்த்தான்

கார் ஹைவேஸில் வேகம் எடுத்தது. பல்லவிக்கு மனதே ஆறவில்லை. “எதுக்காக இப்படி வரணும்..? இதெல்லாம் இவருக்கு தேவையா..?” அளவில்லா வருத்தம் கொண்டாள்

மேம்.. இங்க காபிக்கு  நிறுத்திக்கிறேன்..” ஈஷ்வர் ஒரு ஹோட்டல் முன் நிறுத்தினான்

சரிப்பா..” என்ற ரத்னா கார் நிற்கவும் வாஷ் ரூம் எங்கு  என்று பார்த்தார். அது ஹோட்டலில் இருந்து சற்று தூரம் பின்புறம் இருந்தது

பல்லவி வரியா..?” என்றார்

இல்லைம்மா.. நீங்க போங்க..” என, அவர் செல்லவும் ஈஷ்வர் பின்புற கதவு திறந்து பல்லவி பக்கத்தில் அமர்ந்தான்.  

அச்சோ அம்மா வந்துடுவாங்க..”

வர நேரமாகும்.. பார்த்துதான் இங்க நிறுத்தினேன், நீ சொல்லு ஏன் இப்படி இருக்க..? நான் வந்தது உனக்கு பிடிக்கலையா..? சந்தோஷபடுவேன் நினைச்சேன்..”

இப்படி ட்ரைவரா வந்தா எப்படி சந்தோஷப்பட முடியும்..?”

ஏன் இதுல என்ன இருக்கு..? உன் பர்த் டேல உன்கூட இருக்கனும் ஆசைப்பட்டேன்.. எப்போவும் கொஞ்ச நேரம் மட்டும் தான் உன்கூட இருக்க முடியுது, அதான் இப்படி..”

ச்சு..”

லவி.. உன்னை சர்ப்ரைஸ் பண்ண நினைச்சேன்டி..”

நானும் இப்படி தான் உங்களை சர்ப்ரைஸ் பண்ண நினைச்சு ரிசார்ட் வந்தேன் அன்னிக்கு.. ஆனா..?”  இப்போது அதற்கு கண் கலங்கினாள்

எனக்கு அப்போ ஏதோ கோவம், விடுடி..”

தப்பு என்மேலயும் தான், உங்களை நேர்ல பார்த்து விஷ் பண்ணி,  கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டேன், ஆனா குடும்பத்தோட வரும் போது எப்படி முடியும்ன்னு யோசிக்கல, அதான் உங்களை நான் பார்க்க முன்னமே நீங்க என்னை பார்த்துட்டீங்க..”

எனக்கு அது.. என்னை விட சரண் ப்ரோமோஷனுக்கு நீ..” நிறுத்த, பல்லவிக்கு புரிந்தது

நான் உங்களுக்காக தான் வந்தேன்..”

சரி விடு.. இனி அதை பத்தி பேச வேண்டாம், நீ கேட்ட கிப்ட் பார்க்கிறியா..?” என்று ஷர்ட் மேல் பட்டனை கழட்ட, டாலர் பளிச்சென தெரிந்தது

பல்லவி கண்கள் மின்ன, அதை தொட கை சென்றவள், உணர்ந்து கையை இழுத்து கொண்டாள். “ஏன் தொட மாட்டிங்களா..?” அவனே அவள் கை பிடித்து டாலர் மேல் வைத்தான்

பல்லவி ஒற்றை விரலால் அதை வருட, ஈஷ்வர் அவளையே பார்த்திருந்தவன், “லவி..” என்று அவள் கன்னம்  பிடிக்க, கண் விரித்து பார்த்தாள்

அதே தான்..” என்று கண்ணடித்தவன், அவளின் இதழருகில் அவன் இதழ் கொண்டு செல்ல, இடையில் கை வைத்து தடுத்தாள்

லவி..” வெகு அருகில் இருந்த உதடுகளை பார்த்து கொண்டே மீண்டும் நெருங்க, பல்லவி கையால் உதடுகளை மறைத்து கொண்டாள்

ஸ்ஸ்.. ஏண்டி..?”

கோவிலுக்கு போகணும்..”

ஓஹ் காட்.. பர்ஸ்ட் டைம் கிஸ்  கொடுக்க வரேன்..”

ப்ளீஸ்.. நான் இதெல்லாம் பார்ப்பேன், பாட்டி கூட இருந்து இருந்து பழகிடுச்சு..”

அடியேய் அவங்க பாட்டி.. நீ என் பியூட்டிஇந்த வயசுல நீ  இப்படி இருந்தா நான் தான் சந்நியாசம் வாங்கிட்டு போகணும், முதல்ல நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை என் வேவ் லெந்துக்கு கொண்டு வந்துடனும், இல்லை கல்யாணத்துக்கு அப்பறம்  ரொம்ப கஷ்டம்..” ஈஷ்வர் சலித்து கொள்ள, ரத்னா தூரத்தில்  நடந்து வந்து கொண்டிருந்தார்

ஐயோ அம்மா வராங்க..” பல்லவி அந்த பக்கம் பார்த்து கொண்டே இருந்தவள் பதற

போறேன் இருடி..” என்றவன், அவர் திரும்பும் நேரம் டக்கென இறங்கி தூரம் சென்றான். அவர் காருக்கு வரவும், இவனும் வந்து கார் எடுத்தான். அதன் பிறகான நேரங்கள் இருவருக்குமாக  ஆகிப்போனது

கோவிலுக்கு போகும் போதும் சரி, தரிசனம் முடித்து திரும்பி வரும் போதும் சரி, ரத்னா பரணி திருமண விஷயமாக போன் பேசி கொண்டும், தூங்கி கொண்டும் வர, இருவரும் கண்ணாலே காதலித்து கொண்டிருந்தனர்.  

மாலை போல வீட்டிற்கு  திரும்பிவிட, மூவரும் இறங்கினர். “இந்தாங்க மேம் கீ..” ஈஷ்வர் பார்க் செய்து கார் கீ கொடுக்க, வாங்கி கொண்ட ரத்னா அவனுக்கு பணம் எடுத்து கொடுத்தார்

பார்த்திருந்த பல்லவிக்கு தான் எப்படியோ ஆனது. ஈஷ்வரோ மலர்ச்சியுடனே பணம் வாங்கி கொண்டவன், பல்லவியிடம் கண்ணாலே விடைபெற்று கிளம்பிவிட்டான்

அப்போதே இரவு எப்போது வரும் ஈஷ்வரிடம் பேச என்று பல்லவி ஏங்க ஆரம்பித்துவிட, அங்கு நரசிம்மனுக்கோ மகனின் செயல் காதை எட்டிவிட்டது

ட்ரைவராவா..? என் மகனா..?” அவரால் ஏற்று கொள்ள முடியாதது ஒரு புறம் என்றால் படிப்பை விட்டு இதென்ன திரும்ப ஆரம்பித்துவிட்டான் என்று மகன் மேல் கோவம் கொண்டார் தந்தை

என்ன இது என்று  அவனிடம் கோவமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய மனம் வரவில்லை. செய்யவும் முடியாது. அவன் குணம் அப்படி. 

“ம்ப்ச்.. என்ன காதலோ..?” பல்லவி மேல் இந்த முறை அதிருப்தி கொண்டார். 

“படிக்கிற பிள்ளைங்க இது கூட தெரிய வேண்டாமா..? நான் தான் படிங்கன்னு அவ்வளவு சொல்லிகிட்டே இருக்கேன் இல்லை, காலேஜ் போகாம இப்படி செஞ்சா என்ன அர்த்தம்..?”

“ஒரு நாள்ங்கிறது தானே தொடர ஆரம்பிச்சிடும், அப்பறம் படிப்புல எப்படி கவனம் போகும்..?”

“காதல் காதல்.. காதல் இல்லையே  சாதல் சாதல்ன்னு எத்தனையோ பசங்க மாதிரி இவரும் சுத்த வேண்டியது தான்.. நினைக்கவே முடியவில்லை..”

“இதை இப்படியே விட கூடாது, இன்னிக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்..”  மகனுக்கு முன் வீட்டில் இருந்தார் அமைச்சர்