திகம்பரனின் திகம்பரி அவள் 9

இங்கு ஈஷ்வர் நிறைந்த மனதுடன் போன் வைத்து தூங்க சென்றிட, அங்கு பல்லவியோ கண்ணீர் வடிய நின்றிருந்தாள்

எப்படி இது நடந்தது..? ஏன் பல்லவி..?” தனக்குள்ளே கேள்வி கேட்டபடி மொபைலை நெஞ்சோடு பிடித்து நின்றாள்

காதல் சொன்னவனுக்கு மனம் நிறைந்துவிடகேட்டவளுக்கோ மனம் கனத்து போனது.

“யூ ஆர் மை கேர்ள்.. நீ எனக்கானவ..”   ஈஷ்வரின் குரல் காதில் கேட்டு  கொண்டே  இருக்க, பல்லவியின் கண்ணீர் கன்னங்களை நனைத்தது

இதற்கு போய் யாராவது அழுவாங்களா..?” அவளின் மனமே அவளை கேள்வி கேட்டது

அவன் சொன்னது  காதோடு நின்றிருந்தால்  இந்த அழுகைக்கு காரணமே இல்லையே..? அது இதயத்தில் அல்லவா இறங்கி கலந்துவிட்டது

காதல் சொல்லலைன்னு சொல்லி காதலை சொல்லிட்டு போயிட்டாரே.. காதலை சொல்றதை விட இது என்ன குறைஞ்சு போச்சு..?” கண்ணீர் துடைத்து பாட்டிக்கு பக்கத்தில் வந்து படுத்தாள்.  

“இந்த இரவும் தூங்க முடியாது..”  மறுபக்கம் முகம் வைத்து திரும்பி படுத்தாள். ட்ரெஸிங் டேபிள் கண்ணாடியில் அவள் முகம் தெரிய, அதையே பார்த்தாள்

இந்த முகம் கியூட்டா இருக்குன்னு சொல்லி தானே பார்க்க ஆரம்பிச்சார்.. ஒருவேளை நான் அப்படி அவர் கண்ணுக்கு தெரியாம போயிருந்தா..? அவர்  சொன்னாரே காலேஜ்ல ஒரு பொண்ணு அவரை பார்க்குதுன்னு.. ஹீனா.. அந்த பொண்ணு அவருக்கு அழகா தெரிஞ்சிருக்கும் இல்லை. இந்நேரம் ரெண்டு பேரும் லவ் பண்ணவே ஆரம்பிச்சிருப்பாங்க இல்லை..”  இரவின் தனிமை அவளை என்னனென்னமோ நினைக்க வைத்தது

எல்லாம் தேவையில்லாதது தான். ஆனால் குழம்பி தவிக்கும் மனதுக்கு எல்லாம் முக்கியமானதாகவே தெரிந்தது.

நேரம் இரவு மூன்று என்று ஹால் கடிகாரம் பெல் அடித்தது. பல்லவியின் கண்கள் சிவந்து போயிருக்க, தூங்க வெகுவாக முயன்று கொண்டிருந்தாள். “ம்ஹூம்.. முடியவில்லை..”   எழுந்து நடக்கலாம் என்றால் பாட்டி பயம். பார்த்துவிட்டால் அவர் கணீர் தொண்டையில் பெரிதாக அதட்டுவார். திரும்பி படுத்தாள். மறுபடியும் மறுபக்கம் திரும்பி படுத்தாள்

ஏன் இப்படி பண்றீங்க என்னை..? உங்களை யார் என்னை பார்க்க சொன்னது..?” ஈஷ்வரிடம் மனதுக்குள் சண்டையிட்டு கொண்டாள்

காதல்..”  இந்த ஒரு வார்த்தை பெற்றவர்களுக்கு செய்யும் துரோகமாகவே சொல்லி வளர்க்கப்படும் சாதாரண வீட்டு பெண் பல்லவி. அவள் காலேஜ் சேரும் போது வீட்டில் பலரும் பலவழியில் அட்வைஸ் செய்தனர்

காலேஜ் போனோமா படிச்சோமான்னு இருக்கணும், வீட்டு பொண்ணுங்க தான் அந்த வீட்டுக்கு கௌரவம், அதை காப்பாத்துறது உன் கையில தான் இருக்கு..”  கோமதி சொன்ன வார்த்தைகள் இவை

நீ படிச்சு அப்படி வரணும், இப்படி வரணும்ன்னு எல்லாம் அப்பா உன்னை சொல்ல மாட்டேன், உனக்கு எப்படி படிக்க முடியுதோ படி, உனக்கு என்ன செய்யணுமோ நான்  செய்றேன், நல்லா படி, சந்தோஷமா இரு, ஆனா எங்கேயும் என்னை தலை குனிய மட்டும் வச்சுடாத..” மூர்த்தி சொன்ன வார்த்தைகள் இவை

பல்லவி.. நீ தினமும் நியூஸ் பார்க்குற, வெளியே போற வர, உனக்கு தெரியாதது இல்லை நம்ம நாட்டுல பொண்ணுங்களுக்கு என்ன நடக்குதுன்னு, பார்த்து இருந்துக்கோ, உன்னை நம்பித்தான் அம்மா இருக்கேன்..”  இது ரத்னா சொன்ன வார்த்தைகள்

இது எல்லாம் கூட  பல்லவிக்கு பழகி போன ஒன்று தான். ஆனால்  பரணி சொன்னது  தான் அவளை உள்ளுக்குள் குத்த வைத்தது

இங்க பாரு பாப்பா.. உனக்கு தெரியும் இல்லை மாதா.. பிதா.. அப்பறம் தான் குரு, தெய்வம்.. அப்படிபட்ட அப்பா, அம்மாக்கு நம்மால உண்மையா இருக்க முடியலைன்னா, நாம என்ன சாதிச்சு, என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம்..?”

உனக்கு மட்டும் இதை சொல்றேன் நினைக்காதடா, எனக்கும் நான் இதை தான் சொல்லிக்கிறேன்..”   அவளின் தலை தடவி சொல்லி செல்ல, அன்று இரவு முழுதும் பல்லவி தூங்கவே இல்லை. இன்று போல முழித்து தனக்குள்ளே மறுகி தவித்தாள்.

“ஏன் இப்படி..? உங்களை யார் என்கிட்ட இப்படி எல்லாம் பேச சொன்னாங்க..” ஈஷ்வரிடம் கேட்டாள்.

“அவர் பேசினா நீ ஏன் இப்படி தவிக்கிற..? தூக்கி போட்டு தூங்க வேண்டியது தானே..?” அவளின் மனசாட்சி கேள்வி கேட்க

முடியலையே..? நான் என்ன வேணும்ன்னா அவரை நினைக்கிறேன்.. கொஞ்ச நேரம் தனியா.. அமைதியா இருந்தா கூட சட்டுன்னு அவர் ஞாபகம் தானே வருது..?” தன்னை தானே நிந்தித்து கொண்டாள்.

“ம்ப்ச்..   பல்லவி.. ஸ்டாப் திங்கிங்.. அவரை  பத்தியே நினைச்சிட்டு இருக்காத.. உனக்கு ஜஸ்ட் அவர் உன்னை பார்க்கிறது பிடிக்குது, அவ்வளவு தான்.. இது இந்த  வயசுல வர ஈர்ப்பு தான்.. நோ.. ஈர்ப்பு  கூட கிடையாது.. ஏதோ ஒரு பீல்.. இதை நீயே ரொம்ப யோசிச்சு உன்னை குழப்பிக்காத.. விடு.. தூங்கு..” எப்போதும் போல இப்போதும் தன்னை அமைதிப்படுத்த முயன்றாள்

ஆனாலும் இப்போதும் தோற்று தான் போனாள்.   திரும்ப அழுகை வரும் போல இருந்தது. கண் மூடி படுத்தாள்

சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே..!!!

நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே..!!!

அவளின் மனமே பாட, படக்கென்று கண் விழித்தாள்எப்போது.. எந்த நொடி அவளுக்கு ஈஷ்வர் மேல் சலனம் வந்தது என்று  கூட அவளுக்கு தெரியவில்லை

அவன் சொன்னது போல அவளுக்கும் அவன் ஸ்கூல் விட்டு சென்ற போது அவன் மேல் எந்த ஸ்பெஷல் உணர்வும் இல்லை. இன்னும் சொல்ல போனால், அவன் ஸ்கூல் விட்டு சென்ற போது அவள் நினைத்தது இது தான்.. “இனி என்னை யாரோடவும் சேர்த்து வச்சு ஓட்ட மாட்டாங்க..” என்று

ஆனால் சில நாட்கள் சென்று அவளுக்கு அவளை யாரோ பார்ப்பது போல ஒரு உணர்வு. பெண்ணிற்கான உள்ளுணர்வு அவளுக்கு சரியாக வேலை செய்தது தான்

ஆனால் அவளுக்கு புதிரான விஷயம் அது ஈஷ்வர் தான் என்று அவள் மனம் அடித்து சொன்னது தான். “யார் வேணா பார்க்கலாம் அது ஏன் உனக்கு ஈஷ்வர் தோணுது..?”   தன்னை தானே கேள்வி கேட்டு கொண்டவள் கண்கள் என்னமோ அவன் எங்கேயாவது தென்படுகிறானா என்று தேடி கொண்டிருந்தது

முதல் சில முறை அவனை பார்க்க முடியாமல் போனவள், அண்ணனுடன் பைக்கில் வரும் போது பக்க கண்ணாடி வழியே அவனை பார்த்துவிட்டாள். ஹெல்மெட் போட்டிருந்தாலும் அந்த கண்கள்.. “அது நிச்சயம் ஈஷ்வர் தான்.. எனக்கு தெரியாதா  அவரை..?” அவளின் இதயம் சொன்ன நொடி அவளே அதிர்ந்து போனாள்

அதற்கு பிறகு அவன் ஒவ்வொரு முறையும் அவளை பார்க்க வரும் போதும் அவனை முழுதும் உணர்ந்தாள் பெண். அவள் உணர்ந்ததை வெளிக்காட்டி கொள்ளவில்லை.  

வருவார்.. கண்டிப்பாக என்னிடம் பேச வருவார்..”  அவளின் உள்ளுணர்வு மிகச்சரியாக அவனை கணித்து சொல்ல, அதே போல வந்தான் எக்ஸாம் முடித்த மறுநாள். மாலில் வைத்து அவளிம் பேசவும் செய்தான்

பல்லவி அதை எதிர்பார்த்திருந்ததாலே  அவனிடம் மறுக்கவும் செய்தாள். இல்லை என்றால் எடுத்தவுடன் எப்படி மறுக்க முடியும்..? அதிர்ச்சி இல்லை ஆகியிருக்க வேண்டும்

அவளோ தவித்தாலும், மறுப்பை தானே தெரிவித்தாள். இதை ஈஷ்வர் யோசித்திருந்தாலே அவள் மனம் புரிந்திருக்கும். ஆனால் காதல் எனும் மாயவலை எதை தான் யோசிக்க விடும்..? 

அடுத்த பெல் மணி நான்கு என்றது. “பல்லவி.. போதும்.. இது காதல் இல்லை.. தயவு செஞ்சு தூங்கு.. இப்படியே யோசிச்சிட்டு இருந்தா பைத்தியம் பிடிச்சிடும்..”  மிகவும் முயன்று தூங்கி போனவள் மனக்கண்ணில் கண்டது என்னமோ ஈஷ்வர் முகம் தான்

சில மணி நேர தூக்கம் மறுநாள் கண் எரிச்சலை, தலை வலியை கொடுத்தது தான் மிச்சம்

“பல்லவி.. பொழுது விடிஞ்சிருச்சு பாரு, எழுந்திரு.”  கோமதி எப்போதும் போல பேத்தியை ஐந்தரை மணிக்கு எழுப்பிவிட, பல்லவியால் கண்ணை கூட திறக்க முடியவில்லை. 

“இன்னும் கொஞ்ச நேரம் பாட்டி..”  திரும்பி படுக்க, 

“பல்லவி.. என்ன பழக்கம் இது.. சூரியன் வரதுக்கு முன்னாடி பொட்டை புள்ளை எழுந்திரிச்சிருக்கணும், இல்லை அந்த வீடு விளங்கின மாதிரி தான், பெட்டை விட்டு எழு முதல்ல..”  அவளின் பெட் ஷீட்டை உருவி கத்த, அவளுக்கு காலையிலே கடுப்பாகி போனது. 

கோவத்தில் ஏதும் பேசிவிட்டால் விடவே மாட்டார், அவரின் பெரிய தொண்டையில் கத்தி கொண்டே இருப்பார்.. பாட்டியை தெரிந்தவள் என்பதால் நேரே அம்மாவிடம் சென்றவள், 

“ம்மா.. கொஞ்ச நேரம் தூங்குறேன், பாட்டி, அப்பா கேட்டா ரூம்ல படிச்சிட்டு இருக்கேன் சொல்லிடு.. ப்ளீஸ்..”  கெஞ்சி, தூங்க சென்றாள். மூர்த்தி வரும் போது பல்லவி எங்க கேட்டு கொண்டே வர, ரத்னா மகள் சொன்னதை சொல்லி சமாளித்தவர், அவருக்கும், மாமியாருக்கும் காபி கலந்து கொடுத்தார். 

காலேஜ் பஸ் வருவதற்கு அரை மணி நேரம் இருக்கும் போது ரத்னா சென்று மகளை எழுப்பிவிட, அவசர அவசரமாக குளித்து கிளம்பி கீழே வந்தாள். “இன்னிக்கும் உன்னால தலை வலி..”  மனதுக்குள் ஈஷ்வரை திட்டி கொண்டே கிட்சன் சென்றவள், 

“ம்மா.. ப்ளீஸ்ம்மா ஒரு காபி மட்டும் கொடு..” என்றாள். 

“காபியா..? டிபன் சாப்பிடு பல்லவி, காலேஜ்க்கு நேரம் ஆச்சு, பஸ் வந்துடும்..”  இட்லி வைத்து கொடுக்க, சரியாக வந்தார் கோமதி. 

“இதென்ன அவளுக்கு நீ இட்லி போட்டு கொடுத்திட்டு இருக்க..? விட்டா ஊட்டிவிடுவ போல.. பல்லவி நீயே எடுத்து சாப்பிடு போ..”  என்று பேத்தியை விரட்ட, பல்லவிக்கு அந்த இட்லி இறங்கவே இல்லை. 

அதிக தலைவலி. சாப்பிட முடியவில்லை. “என்ன ஆச்சு பல்லவி..? ஏன் அப்படியே வச்சிட்டிருக்க..?” ரத்னா மகளுக்கு  லன்ச் எடுத்து வந்தவர் கவனித்து கேட்டார். 

“இல்லைம்மா.. தலை வலியில பசிக்கல..” என,  

“என்ன இப்போ எல்லாம் உனக்கு அடிக்கடி தலைவலி வருது.. பாரு கண் எல்லாம் சிவந்து இருக்கு..” ரத்னா  மகளை பார்த்து கவலைபட

க்கும்.. அவ இன்னும் சின்ன குழந்தை பாரு.. எப்போ பார்த்தாலும் அந்த மொபைலே பார்த்துட்டே இருந்தா அப்படி தான் தலைவலி வலிக்கும்.. நீ அவளை விட்டு எனக்கு ஒரு காபி எடுத்துட்டு வா..” கோமதி கட்டளையிட்டு செல்ல, ஆபிஸ் கிளம்பி வந்த பரணி கேட்டு

என்ன திரும்பவும் தலைவலியா..? நீ பேசாம இன்னிக்கு காலேஜ் லீவ் போடு பல்லவி, நாம ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாம்..” என்றான்

அதெல்லாம் வேண்டாம்ண்ணா.. சரியா தூக்கம் இல்லை..  அதான்.. வேற ஒன்னும் இல்லை..” முகம் சாதாரணமாக வைத்து சமாளித்தாள் தங்கை.  

ஏன் சரியா தூங்கலை..? பாட்டி ஏதும் நைட் தூங்க விடாம பேசிட்டே இருந்தாங்களா..?”

இல்லை.. இல்லைண்ணா.. நேத்து ஷாப்பிங் போய்ட்டு வந்து தூங்கிட்டேன், அதான் நைட் தூங்க முடியல..”