தட்பவெட்பம் : அத்தியாயம் 16 & 17

585

அத்தியாயம் 16

 

நட்பாராய்தல்

 

குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

                    வீடில்லை நட்பாள் பவர்க்கு

 

விளக்கம் : நட்புச் செய்த பிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

 

தேஜூ அவளின் இறுதி ஆண்டின் இறுதி செமஸ்டரில் இருப்பதால் முழு நேரமும் அவளுக்குப் படிப்பிலே சென்றுவிடுகிறது. வகுப்பு அதைவிட்டால் ஹாஸ்டல் என்று இருந்து விட்டாள்.  அவளைச் சுற்றி இருந்த மூவரும் அவளை ஹொஸ்டலின் இருந்து ஒரு இரவு இவர்களுடன் தங்க முயன்று இருந்தனர். அதற்குரிய நாளும் கனியாக அவர்களின் கையில் வந்து அமர்ந்தது . 

 

“தேஜு நீ இந்த இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் ப்ரோக்ராம் போவது பற்றி உன்  வீட்டில் பேசி பார்த்தியா என்ன சொன்னார்கள் “

 

“அப்பா அம்மா ரெண்டு பேரும் கொஞ்சம் பயப்படுகிறார்கள் தான் நான் எப்படி யோ சொல்லி சமாளித்து விட்டேன். இப்போது ஒரு பிரச்சினையும் இல்ல “

 

“சூப்பர் , அப்போ எல்லா ஏற்படும் பண்ணிடலாம் “

 

“என்ன ஏற்பாடு “

 

“அதான் …..(தடு மாறி விட்டாள் )”

 

“என்ன சுனிதா “

 

“அது ஒன்றும் இல்லை நாம்  தங்குவதற்கு எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும் ” 

 

“ஏன் டி   காலேஜிக்கு நாம்  தான் அவளோ பணம் தருகிறோம் ஏன் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மாட்டார்களா என்ன “

 

“யாரு டி நீ ஒருத்தி , அவர்கள் நமக்கு பார்த்துக் கொடுக்கும்  ஹோட்டல் மற்றும் சாப்பாடு எல்லாம் சுத்த வேஸ்ட் , அது மட்டும் அல்லாது அவர்கள் அங்கேயும் வந்து  ரூல்ஸ் ரெகுலேஷன் சொல்லி உசுர் எடுப்பார்கள்,”

 

“இருக்கட்டும் டி அதுல என்ன தப்பு? இங்கு  என்னைப் போல ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்களுக்கு அவங்க பெற்றவர்கள்  இந்த விஷயத்துக்கு மட்டும் தான் ஓகே சொல்கிறார்கள் அதனால் எங்களுக்கும் சந்தோஷம் தான் “

 

” அப்போது உனக்கு எங்களோடு இருக்க விருப்பம் இல்லையா என்ன?”

“நான் அப்படி ஏதாச்சும் சொன்னேன் ?”

 

“அப்போது ஓகே சொல்லு “

 

“எதற்கு டி “

 

“நம்ப தனியா ரூம் எடுத்துத் தங்குவதற்கு  “

 

“ஏ சுனிதா நம்ப இரண்டு பெண்கள் என்றால்  ஓகே. கூட அவர்களும் தங்க வேண்டுமா இது கொஞ்சம் ஓவர் டி “

 

“ஹே அவர்கள் ரொம்ப டீசென்ட் ஃபெல்லோ “

 

” என்ன டீசென்ட் டாக இருந்தாலும் கண்டிப்பாக முடியாது, அதுவும் இல்லாம எனக்கு விகாஸ் முகத்தைப் பார்க்கவே பாவமா இருக்கு டி , எப்போது நான் அவனுக்கு அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தேனோ  அன்று முதல் அவன் முகம் பார்க்க கஷ்டமாக இருக்கிறது . அவன் ஒன்றும் இல்லை என்று கூறினாலும் எதோ தன்னை விட்டு ஒன்று போனது போல் அவன் முகம் வைத்துக் கொண்டு திரிகிறான். அவன் முன் வந்து பேசவே எனக்கு சங்கடமா இருக்கிறது . இதில் நாம் தனியாக ரூம் எடுத்து தங்கி இதெல்லாம் சரிப்பட்டு வராது “

 

“இதுதான் உன் முடிவா “

 

“ஆமாம் , சரி உங்கள் வீட்டில் நீ தனியாகத் தங்குவதை பற்றி சொல்லியாச்சா  என்ன சொன்னார்கள் “

 

“எங்கள் வீட்டில் நான் எதற்கு தனியா தங்குவதை எல்லாம் சொல்ல வேண்டும் ? நானும் மேஜர் டி இப்போது எனக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய முழு உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது”(பணம் படைத்தவள்  செழுமையான வழக்கை அவளை பேச வைக்கிறது )

 

(இவள்  ஒரு அர்த்தத்தில் சொல்ல இந்த மக்கு இவளின் பறந்து விரிந்த பார்வையை நினைத்து மிகவும் பெருமை கொண்டாள் )

 

பெண்கள் மேஜர் ஆனால் உலகம் அவர்கள் சொல்படி மட்டுமே கேட்டு கொண்டு சுற்றுமா என்ன ? இல்லை தங்கள் சொற்படிதான் நடக்க வேண்டும் என்று இவளால் இவள் நினைக்கும் ஒரு விதியை எழுதிவிட முடியுமா என்ன ?

 

பெண்களின் வாழ்க்கையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நம் முன்னோர்கள் விதித்து வைத்ததில் தவறொன்றும் இல்லை. அதில் , சில விஷயங்களில் நாம் மாற்றம் கொண்டு வந்தே தீரவேண்டும்.

 

அதற்காக ஒரு ஆணும் பெண்ணும் பழகும் விதத்தில் அவர்கள் கூறிய ஒழுங்கு முறைகள் தவறொன்றும் இல்லை. ஆனால், அதனைத் தவறாக நினைத்து 

 

இன்றைய சில பெண்கள் தொலைநோக்கு பார்வையில் நாங்கள் இருப்போம் அதனைத் தட்டி கேட்கும் உரிமை, தங்களைப் பெற்றவர்களுக்கும் இல்லை என்று கூறிக் கொண்டு இருப்பதுதான் தவறு. 

 

: ஒரு ஆணுடன் பெண் களங்கம் இல்லா நட்புறவோடு, தூய்மை கொண்ட காதலோடும் பேசுவதிலும் தவறு இல்லை பழகுவதிலும் தவறொன்றும் இல்லை 

 

எது தவறு

 

சலனம் கொண்ட மனதுடன் எல்லை மீறிய ஆசைக்கும், போதைக்கும் அடிமையாகிப் பழகுவதில் தான் தவறு  .

 

சிறு வயது முதல் இருந்த இளவேனில் காலம், வசந்தமாக இருந்தவளின் வாழ்க்கை. இனி இருந்து முதுவேனில் காலம் வரவிருப்பதை பாவம் அவளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. முதுவேனில் காலத்தில் தொடக்கத்திலிருந்து. மனிதர்களின் நிறம் அவர்களின் செயல்களும் வேறுபடும் வேலை. அவள் மனதில் அவளுடைய தோழி பிந்து இறந்ததிலிருந்து குழப்பங்களும் ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருப்பது போல் அவளுக்குத் அவ்வப்போது தோன்ற ஆரம்பித்துவிட்டது.  

 

(பங்குனி மாதத்து வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தாலும் அதனால் வெந்து சாவது மக்கள் அல்லவா. அவள் பழகும் சில மனிதர்களின் செயல்கள் அவளுக்கு அனல் காற்று வீசத் தொடங்கியது  )  

 

வினோத்தின் திருமணத்திற்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருந்த நிலையில். தேஜஸ்வினி பெங்களூருக்கு அவளின் கல்லூரியில் அழைத்து வந்திருந்த தொழில்துறை பயிற்சியிலிருந்தாள். அந்த சமயம் ஒரு நாள் அவர்களின் பயிற்சி  குறித்த நேரத்திற்கு முன் முடிந்ததால் அவளுடன் வந்திருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் பெங்களூரைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு இருந்தனர் . அவளும்  அவர்களுடன் சென்று இருந்தாள். 

 

“ஹே சுனிதா நாமும்  கிளாஸ் ஹவுஸ் பார்த்துவிட்டு. அப்படியே அவர்களுடன் பக்கத்தில் மால் இருக்கிறது அங்கு போவோம். “

 

“எனக்கும் ஓகே தான் “

 

ஒரே கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக எங்குச் சென்றாலும் ஒன்றாக சென்றார்கள் . ஹரிக்கும் விகேஷ்க்கும் அவர்கள் வந்திருக்கும் இடத்தின் ரம்மியம் துளியும் அவர்களின் மனதில் பதியவில்லை. அதில் நாட்டம் செலுத்தாது அங்கு வந்திருந்த இளம் பெண்கள் மேல் நாட்டம் சென்றது. 

 

அவர்கள் மால் வந்ததும் தனித் தனிக் குழுவாக ஆளுக்கு ஒரு திசையில் சென்றதில்  இவர்களும்  பிளேஸ்டேஷன் வந்த நேரம் போவது தெரியாது அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்தார்கள் .

 

தேஜு தற்செயலாக அவளின் கை கடிகாரத்தை பார்த்தால், அதில் மணி பத்து என்று காட்டியது அடித்துப் பிடித்து அவளுடன் வந்திருந்தவர்களை தேடிச் சென்றாள். அங்கு ஒருவரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு தன் தலையில் அடித்துக் கொண்டு தன்னையே  நிந்தித்துக் கொண்டிருந்தாள் .

 

“ச்ச…  இப்படி நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பேன், அம்மா சொல்வது சரி தான் அக்கம் பக்கம் கவனம் வைத்து இரு என்று சொல்வார்கள். இப்போது அது சரியாகத்தான் இருக்கிறது.  இந்த சுனிதா பொண்ணு எங்கே போச்சு. மணி பத்து  இன்னும் இங்க மக்கள் கூட்டம் இருக்கிறது. அதில் எப்படி நான் மற்றவர்களை தேடி அலைவது. ஐயோ ராமா பசி வேறு உயிரை எடுக்கிறது “

 

அவள் புலம்பிக்கொண்டே மற்றவர்களைத் தேட துவங்கினாள்.  

 

தொடரும் 

—————————————————————————————————————————-

 

அத்தியாயம் 17

 

 “ஹே தேஜு உன்ன எங்கெல்லாம் தேடுவது “

 

“கொன்னுடுவேன் , நீ எங்கடி போய் தொலைந்த, பிளேஸ்டேஷன் ல தான இருந்த “

 

“அதுவா எனக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டும் போல இருந்தது அதான் அங்க போய் விட்டேன் , சரி அதை விடு, வா நம்ப ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடலாம் ரொம்ப பசிக்குது டி “

 

“எதற்கு டி ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடவேண்டும் , இங்க food court  இருக்கிறது பார் அங்கு சாப்பிடலாம் வா “

 

“அங்கு நான் தேடினேன் , ஒன்றும் இல்லையாம் அடுப்பும் சட்டியும் தான் இருக்கிறது “

 

“என்னிடம் அவளோ காசு இல்ல டி , இப்போது  மணி பாத்தாச்சு ,ச்ச… எல்லாம் என் தப்பு தான் , ” 

 

“அதைப் பற்றி கவலைப் படாதே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ வா “

 

சுனிதா தன்னுடன் அவளை அழைத்துச் சென்றாள். அங்கே ஹரியும் விகாஸ் ம் இருந்தனர். நால்வருக்கும் உணவு மேஜையில் சேவை ஊழியர் அவர்களுக்கு உணவை வைத்து விட்டுச் சென்றார். 

 

அது ஒரு இத்தாலிய உணவகம் என்பதால் அவ்வகை உணவின் ருசியை அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள் . இடை இடையில் சுனிதா அவளுக்கு ஆரஞ்சு ஜூஸ் என்று சொல்லி ஏதோ ஒரு பானகத்தை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளும் அதன் வேறுபட்ட சுவையின் வித்தியாசத்தில் எந்த வகையான பானம் என்று கேட்டபோது இது இத்தாலியில் கொடுக்கப்படும் அசல் ஆரஞ்சு ஜூஸ் இப்படி தான் கசப்பாக இருக்கும் என்று ஏதேதோ சொல்லி அவனுக்கு கொடுத்தாள். 

 

அனைவரும் உணவை உண்டு முத்த பிறகு அவ்விடம் விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தனர் . பானத்தை அருந்தியவனுக்கு சற்று தலைவலி தலைசுற்றல் இருப்பதாகச் சொல்லி தள்ளாடியபடி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளைக் கைதாங்கலாக விகாஸ் அவளை தாங்கி பிடித்து நடக்க ஆரம்பித்தான் அவன் கை எல்லை மீற தொடங்கியது அதை எதுவும் உணரும் நிலையில் பாவம் பெண்ணவள் இல்லை .

 

இரவு மணி பன்னிரண்டு தொட்டு இருந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்த விகாஷ் அவளை அழைத்துக் கொண்டு அவர்கள்  தங்கி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். ஹரியும் சுனிதாவும் அவனை பின்தொடர்ந்தனர் . அவர்களுடன் வந்திருந்த மாணவர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்க பெற்றிருந்த அறையிலிருந்ததால். அவர்களின் செயல்கள் எதுவும் மற்றவர்களுக்கு தெரியாமல் போயிற்று.  

 

அவளை தன்னுடன் சேர்த்து இருக்கி அணைத்துக் கொண்டவனின் பார்வை அவள் அணிந்திருந்த ஆடையில் உலவ விட்டான் . அவள் அவனை அணைத்த வாக்கில் அவன் தோளில் சாய்ந்து எதோ உலகத்தில் தான் சகலவித சந்தோஷத்தை அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டு புன்னகையில் அவன் கழுத்தை அணைத்து வாக்கில் நின்றிருந்தாள்.  

 

அவளின் உடை சற்று விலகி பெண்மையின் பொக்கிஷங்களை இருக்கும் இடத்தை பிறை நிலவு போல்  காட்டியது . பார்வையை உலவ விட்டான். அவனின் கைகளும் அவளின் மேனியில் படரவிட்டிருந்தான். 

 

இவை அனைத்தையும் ஹரி தன்னுடன் வைத்திருந்த கேமரா வில் படம் எடுக்கத் தொடங்கினான்.

 

அவளையே பார்த்திருந்த விகாஷ் விகாரமாகச் சிரித்து அவளின் செவ்விதழ்களை தன் விரல்களால் வருடியபடி 

 

“இந்த வாய் தான என்ன வேண்டாம் வேண்டாம் சொல்லியது , இதே வாய் என்கிட்ட கெஞ்ச வைப்பேன் டி, டேய் ஹரி இவளை இப்படியே அனுபவிக்கக் கூடாது டா. சுனிதா நீ நான் சொல்வதுபோல் இவளிடம் நடந்துகொள். ” 

 

என்று ஆளுக்கு ஒரு ஆணையை விட்டுவிட்டு அவனும் ஹரியும் அவர்களின் அறைக்குச் சென்று விட்டனர் . 

 

சுனிதா தங்களின் அரை கதவை தாழிட்டாள். தன்னுடைய கைபேசியை எடுத்து விகாஸுக்கு வீடியோ அழைப்பு விடுத்தாள். தன் பேசியைப் படுக்கைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த மேசையின் மீது நிற்க வைத்தாள். தேஜு வின் அருகில் சென்று அவளை எழுப்பும் முயற்சியில் இருந்தாள். அரை மயக்கத்தில் இருந்த தேஜு உளற ஆரம்பித்தாள். 

 

அவளை ஏதேதோ சொல்லி ஒருவழியாக அவளைக் குளியல் அறைக்குள் தள்ளினாள். பின் தன் கைபேசியை எடுத்தவள் “டேய் இதெல்லாம் சரி வராது டா , இந்த வாய்ப்பு விட்டால் உங்களுக்கு வேறு எப்போது வரும் என்று தெரியாது, எதற்கு இப்படி ?”

 

“அவளின் மயக்கத்தில் எது செய்தாலும் அவளுக்குத் தெரியப் போவதில்லை டி, மயக்கத்தில் இருப்பவளை அனுபவித்தால் சுவாரசியம் இல்லை, தெளியவைத்து தான் அடைய வேண்டும் அதில்தான் ஒரு கிக், என்னை வேண்டாம் சொல்லிடா? நான் அவளை விட்டு விடுவேன் என்று நினைத்தாள் ? எப்படியும் அவளை அடைவேன். ஒரு முறை அல்ல பலமுறை அடைவதற்குக் காத்திருக்கிறேன். உனக்கு அது புரியாது விடு “

 

“சரி இப்போது நான் என்ன செய்யட்டும் அதைச் சொல் “

 

அவன் சொல்வதைக் கேட்டவள் தேஜு குளியல் அறையை விட்டு வெளியே வந்ததும் அவளை மேலும் கீழும் பார்த்தாள். தேஜு குளித்து முடித்து ஒரு பெரிய துவாலை கொண்டு தன்னைச் சுற்றி முறைத்துக் கொண்டிருந்தாள் தலை முடியை அள்ளி கொண்டை  போட்டிருந்தாள். அவளின் வெற்று தோள்பட்டை சந்தன நிறத்தில் ஜொலித்தது . தேஜு விற்கு இன்னும் மயக்கம் தெளிய வில்லை தள்ளாடிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ‘ தொப் ‘ என்று படுக்கையில் விழுந்தாள். அரை மயக்கத்தில் இருந்தவள் தனக்கு என்ன நடக்கிறது என்று உணரவில்லை. மது கொடுத்த மயக்கத்திலும் இரவின் தாயகத்திலும் அவன் தெரியாது உறங்கி போனாள்.  

 

சுனிதா அவளின் வீடியோ அழைப்பிலிருந்து விகாஷிற்கு தேஜி வின்  ஆடையை களைத்து அவளின் அங்கங்கள் படம் பிடித்துக் காட்டி கொண்டிருந்தாள். 

 

பெண்ணே பெண்ணிற்குக் களங்கம் உருவாக்க துணிந்து இருந்தாள் சுனிதா. 

 

கூடா நட்பு கேடு விளைவிக்கும் .

 

தொடரும்