Advertisement

அத்தியாயம் -30(3)

அவனை தள்ளி நிறுத்தியவள், “பொறுமையே கிடையாதா உங்களுக்கு? நாம புரிஞ்சுக்கலாம்…” என பேச மீண்டும் வந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“ஓகே ஓகே ஒண்ணும் செய்யல நான். அதுக்குன்னு ஒரேயடியா தள்ளி வைப்பியா? நாலு வருஷமா என்னை லவ் பண்ணி நான்தான் வேணும்னு கல்யாணம் பண்ணியிருக்காடி என் பொண்டாட்டி. எப்படியிருக்கு தெரியுமா எனக்கு?” அணைத்த படியே அவளை தூக்கிக் கொண்டான்.

“அதான் தெரியாம லவ் பண்ணிட்டேன்னு சொன்னேன்ல… இறக்கி விடுங்க… ப்ச் விடுங்க…”

“தெரிஞ்சு செஞ்சியோ தெரியாம செஞ்சியோ. ஏன் இவனை லவ் பண்ணினோம்னு இப்போ ரெக்ரெட் பண்றியோ… எதா இருந்தாலும் பரவாயில்ல, ஆனா உன் லவ் நான்தான்” ஒரேயடியாக ஹைபர் ஆகி விட்டான்.

“ஆமாம், ஆனா உங்க லவ் நான் இல்ல” வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்.

சற்றே நிதானத்தின் பக்கம் திரும்பியவன் அவளை படுக்கையில் விட்டு அமர்ந்து கொண்டான். அவள் சோகமாக பார்க்க, “சுதாவ அழைச்சிட்டு வந்து மேரேஜ் ஸ்டாப் பண்ண சொன்னப்போ உனக்கு எப்படி ஃபீல் ஆகியிருக்கும்னு இப்போ புரியுது” என்றவன் மன்னிப்பாக பார்த்தான்.

“அது மட்டுமா? மேரேஜ் அப்புறமும்…” கோவமாக எழுந்தமர்ந்தவளின் வாயை மூடியவன், “எக்ஸ் லவ்வர் கதை சொல்லி அழுதியே அன்னிக்கே புரிஞ்சிடுச்சு எனக்கு நான் என்ன தப்பு செய்றேன்னு. அதனாலதான் அவ நம்பர் பிளாக் பண்ணிட்டேன். வேற என்ன செய்யணும் நான்?” பாவமாக கேட்டான்.

அவன் கையை விலக்கி விட்டவள், “ஆனா அவளுக்காக கில்ட் இருக்குதானே உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“இல்லைனு சொல்ல மாட்டேன். அது வேற… என்னை நம்புடி உத்ரா, உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு. என் லவ் புரியலையா உனக்கு? என்ன சொல்லி செஞ்சு புரிய வைக்க நான்?” எனக் கேட்டவன், சில நொடிகளுக்கு பின் “என்னை புரியுதா உனக்கு?” என கண்களில் அத்தனை கனிவையும் ஏக்கத்தையும் நிறைத்து கேட்டான்.

உனது காதலை உணர்கிறேன் எனும் விதமாக மேலும் கீழும் தலையாட்டியவள், “ஹாப்பி பார்ட் என்னன்னா என் லவ்வர் நீங்கன்னு தெரியாமலேயே உங்களுக்கும் என்னை பிடிச்சதுதான்” சிலாகித்தாள்.

அவளை அருகில் பார்க்க பார்க்க ஆதவனின் கட்டுப்பாடெல்லாம் கரைய ஆரம்பிக்க புஷ் புஷ் என மூச்சு விட்டு கெஞ்சுதலாக அவளை பார்த்தான்.

“என்ன?” செல்லமாக முறைத்தாள்.

“ப்ளீஸ் உத்ரா ப்ளீஸ் டி…” கிசு கிசுப்பாக கெஞ்சினான்.

கண்களால் சம்மதம் வழங்கியவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அவளது கையை வருடிக் கொண்டே, “ஏன் உனக்கு ஆசையில்லையா?” எனக் கேட்டான்.

“ஷ் ஓகே சொன்னேன்தானே அப்புறம் என்ன?” அவர்கள் மட்டுமே இருந்தாலும் ரகசியமாக கேட்டாள்.

அவளை தன் பக்கமாக வேகமாக திருப்பியவன் அதை விட வேகமாக அவளுக்கு முத்தமிட்டான். அவனை விலக்கி விட்டவள், “பொறுமை” என கண்டிப்போடு சொன்னாள்.

“ம்ம்… கல்யாணம் ஆன அன்னிக்கு சொல்லியிருந்தா கேட்ருப்பேன். நீ பொறுத்துக்க” என்றவன் அடுத்து எதுவும் பேச அவளுக்கு அவகாசமே தரவில்லை.

காலையில் உறங்கிக் கொண்டிருந்த உத்ரா தன் கையில் வித்தியாசமான உணர்வை உணர்ந்து விழித்துப் பார்க்க அவள் விரல் நகங்களை வெட்டிக் கொண்டிருந்தான் ஆதவன்.

சட்டென கையை இழுத்துக் கொண்டவள், “ஒரு நாள் நைட்ல நகம் வெட்டி விடுற அளவுக்கு அக்கறை எல்லாம் என்னால தாங்க முடியலை. அதுவும் ஆசையா வளர்க்கிற நகத்தை…” சொல்லிக் கொண்டே இடக் கையின் வளர்ந்திருந்த நகங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

குளித்து ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து உடலை துண்டால் போர்த்தியிருந்த ஆதவன் அவளை முறைத்துக் கொண்டே துண்டை விலக்கி, “இங்க பாருடி” என்றான்.

உத்ரா அவனை பார்க்க அவனது வலப் பக்க தோளையும் முதுகையும் காட்டியவன், “மரியாதையா நகத்தை கட் பண்ணிடு. குளிக்கும் போது திகு திகுன்னு எரியுது” என்றான்.

அவள் வெட்கத்தோடு போர்வையால் முகம் மறைத்துக் கொள்ள இவன் சிறு சிரிப்போடு போர்வையை விலக்கி, “எப்படி எப்படி நாங்க பொறுமையா இருக்கணுமா? சின்ன கீறல் இருக்குமா உன் உடம்புல? நீ என்னடி பண்ணி வச்சிருக்க என்னைய?” ஆசையாக கிண்டல் செய்தான்.

அவள் அசட்டு சிரிப்போடு அவனை நோக்கி இடது கையை நீட்டினாள். விரிந்த சிரிப்போடு அவளது விரல் நகங்களையெல்லாம் வெட்டி சீர் செய்தவன் முகத்தை திருப்பி கழுத்து வளைவை அவளிடம் காட்டிவிட்டு புருவங்கள் உயர்த்தி ‘இது என்ன?’ என கண்களால் கேட்டான்.

அங்கிருந்த காயத்தை பார்த்தவள் ‘இது எப்படி ஆனது?’ என யோசனை செய்ய, “பல் டாக்டர் கழுத்துல பல் தடம். என்ன செய்யலாம்?” சிரிப்பை அடக்கிக் கொண்டு நக்கலாக கேட்டான்.

“ப்ச் போங்கத்தான்…” என்றவள் குப்புற படுத்துக் கொண்டாள்.

“போங்களா… வாங்கத்தான் வாங்க அத்தான் அப்படி சொல்லணும்…” என்றவன் அவள் பக்கத்தில் படுத்து அவளை தன்னை பார்க்க திருப்பி, “ஏன் டி அப்போவே சொல்லலை?” என நிஜமான ஆதங்கத்தோடு கேட்டான்.

“அதை விட மாட்டீங்களா நீங்க? வருண் புண்ணியத்துல நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுதானே… இல்லைனா…” என்றவளின் முகம் வாடிப் போனது.

“எதையாவது பேசாத. நாமதான் சேர்ந்திருப்போம். உன்னை தவிர யாரையும் இப்போ நினைச்சு பார்க்கவே முடியலை. என் சாரிய அக்செப்ட் பண்ணிக்க” என சொல்லி அவளை அணைத்துக் கொண்டான்.

வலிக்காமல் அவன் கழுத்தை கடித்து பின் விட்டவள், கழுத்து வளைவிலேயே அமிழ்ந்து விட்டாள். சில நொடிகளில் சூடான அவளது கண்ணீரை உணர்ந்தவனுக்கு இந்த அழுகை தனக்காக என்ற எண்ணமும் வர நெஞ்சம் நிறைந்து போனது.

அவளது முதுகில் படர்ந்திருந்த கூந்தலை ஒதுக்கி பின்னங்கழுத்தை ஆறுதலாக வருடி விட்டுக் கொண்டே, “நீ என்னை இவ்ளோ லவ் பண்ற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னு தெரியலை. ஆனா எனக்கே தெரியாம ஏதோ நல்லது பண்ணியிருக்கேன். இல்லைனா எம்மேலலாம் உனக்கு லவ் வருமா?” எனக் கேட்டான்.

முகத்தை விலக்கி அவனை பார்த்தவள், “ஆமாம் பிரியா கூட இதைத்தான் கேட்டா? உனக்கு நேரம் சரியில்லை இல்லைனா என் அண்ணனை போய் புடிச்சு போகுமான்னு” என கண்ணீர் மின்ன சிரித்துக்கொண்டே சொன்னாள்.

அவன் முறைக்க, “சும்மா சொன்னேன்… என் அண்ணனுக்கு கோவமும் அவசரமும்தான் மைனஸ். மத்த படி கொஞ்சமா நல்லவர்தான். அது செஞ்ச தப்பை மறந்திட்டு அதுக்கு வாழ்க்கை கொடுன்னுதான் கேட்டுகிட்டா” என்றாள்.

“அடிங்க… யாருக்கு யாருடி வாழ்க்கை கொடுக்கிறது? அப்படியா சொன்னா கழுதை? இருக்கு அவளுக்கு” ஆதவன் சீற உத்ரா திகைத்துப் போனாள்.

உடனே கண்கள் சிமிட்டி சிரித்தவன், “சொல்ல வேண்டியவன்கிட்ட சொல்லாம எல்லாருக்கும் சொல்லி வச்சிருக்க உன் லவ்வ. உன் ஃப்ரெண்ட்தானே அவ… என்கிட்ட பேச சொல்லுடி பிரியாவை” என்றான்.

“கொஞ்ச நாள் போனா அவளே பேசுவா, டைம் ஆகிடுச்சு” என்றவள் எழப் போக அவளை அவன் விட்டானிலலை.

மகனின் அறையை அடிக்கடி கவலையாக பார்த்துக் கொண்டிருந்தார் துர்கா. கவனித்த வள்ளி பாட்டி, “வாழ ஆரம்பிச்சிருக்கவங்ககிட்ட துஷ்டமா ஏதும் பேசி வச்சுடாத. உனக்கு புண்ணியமா போகட்டும்” என்றார்.

“எனக்கு மட்டும் ஆசை பாருங்க. சண்டையோ என்னவோன்னு கொஞ்சம் பயமா இருக்கு” என்றார் துர்கா.

அப்படியும் இருக்குமோ என பாட்டியும் யோசனையாகிப் போக கதவை திறந்து கொண்டு ஆதவனும் உத்ராவும் வந்தனர். உத்ரா இயல்பாக இருக்க ஆதவன்தான் அவர்களை பார்க்க முடியாமல் வெட்கத்தோடு சிரித்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

துர்கா மருமகளிடம் எதுவும் கேளாமல் உள்ளே செல்ல, “வீராப்பு புடிச்ச எம்பேரனையே வெக்க பட வச்சிட்டியே… அசகாயசூரிதான் நீ!” மோவாயில் கை வைத்து கூறினார் பாட்டி.

“அம்மாச்சி!” சின்ன குரலில் அதட்டியவள், கணவனை மனதிற்குள் வசை பாடிக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

மனைவி கடியும் முன் அவளை கட்டிக் கொண்டவன், “ஒரே வெக்க வெக்கமா வருது… என்னடி பண்ணி வச்சிருக்க என்னை?” என கேட்டு அவள் உச்சியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement