Advertisement

ஜீவ தீபங்கள் -25

அத்தியாயம் -25

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்த பிரியாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தான் பாலன். அவளை எழுப்பவோ  அவள் எழும் முன் கடை செல்லவோ மனம் வரவில்லை.

 புரண்டு படுத்தவள் மெதுவாக கண் திறந்து கணவனை பார்த்து விட்டு “குட் மார்னிங் ப்பா” என சொல்லி அவனை ஒன்றிக் கொண்டு படுத்தாள்.

“பயப்படுத்துற. எவ்ளோ நேரம் தூங்குவ?” என அவன் கேட்டதற்கு விழிகள் திறந்து முறைத்தவள் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

“பிரியா என்ன செய்யுது?”

“டயர்ட், தூங்கிட்டே இருக்கணும் போல இருக்கு”

“சரி, நான் மதியம் வர்றேன். நீ ஏதாவது சாப்பிட்டு தூங்கு” என்றவன் எழப் போக பதறிப் போய் அவன் கை பிடித்தவள் தன்னை நோக்கி இழுக்க அவள் கையை விலக்கி விட்டவன் என்னவென கேட்டான்.

“என்ன அவசரம்? இருங்க”

“இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தேன். நிறைய வேலை இருக்கு”

“நான் தூங்குறப்போ கூட இருக்கிறதா பெருசு? இப்போ இருங்க” என அவள் சொல்ல மீண்டும் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

“நைட் நடந்தது எல்லாம் நிஜம்தானே? என்னோட கனவு இல்லையே?” என சந்தேகம் கேட்டாள்.

“கனவுதானோ என்னமோ? என்ன நடந்துச்சு உன் கனவுல?” சிரிக்காமல் கேட்டான் பாலன்.

அசராமல் சொல்ல ஆரம்பித்தாள் பிரியா. ‘எவ்வளவு தூரம் போறேன்னு பார்க்கிறேன்’ என நினைத்தவனாக அவன் கேட்டுக் கொண்டிருக்க இரவே வெட்கத்தை எல்லாம் துறந்து விட்டிருந்தவள் பேச்சில் வரம்பு மீறினாள்.

அவள் வாயை கை கொண்டு மூடிய பாலன், “ம்ம்…  போதும். சொல்லு இது நல்ல கனவா கெட்ட கனவா?” எனக் கேட்டான்.

“என்ன மீன் பண்றீங்க? ஓ எனக்கு பிடிச்சுதான்னு கேட்குறீங்களா? டைரக்ட்டா கேட்க வேண்டியதுதானே?” என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நாட் பேட்” என்றாள்.

திகைத்த பாலன் சிரிக்க ஆரம்பிக்க அவன் மடியில் தலை வைத்துக்கொண்டவள், “ஃபீலிங் குட். உங்களுக்கு?” என்றாள்.

அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “ம்ம்… டைம் ஆகிடுச்சு பாரு. நான் கிளம்பணும். மதியம் வந்தா ஒரு மணி நேரம் வீட்ல இருப்பேன், இப்போ என்னை விடு” என்றான்.

“அட!” சலித்தவள் ஐந்து விரல்களை காட்டி, “ஃபைவ் ஹ்ம்ம்… இல்லயில்ல” என்றவள் பின் இரண்டு விரல்களை மடக்கிக் கொண்டே, “த்ரீ மினிட்ஸ் இருங்க. எனக்கொன்னும் டைட் ஹக்லாம் வேணாம்” என சொல்லி அவன் மடியிலிருந்து தலையை எடுத்துக் கொண்டவள் அவனையும் தன் பக்கத்தில் படுக்க வைத்து விட்டாள்.

பாலன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவன் கழுத்தில் முகம் புதைத்திருந்தவள், “இன்னும் டைட்டா” என்றாள்.

“நீ என்னை போக விட மாட்டேன்னு நினைக்கிறேன், பசிக்கலையா உனக்கு?”

“ம்ம்…” என்றவள் அவன் காது மடல் கடிக்க, “நான் குளிச்சிட்டேன் பிரியா, எச்சில் பண்ணாத என்னை” என்றான்.

வேண்டுமென்றே அவன் கன்னம் கடித்தாள்.

“பண்டி! நேத்து நாலு தடவ குளிச்சியே இப்போ ஒரு தடவ…” என்றவனை அடுத்து பேச விடவில்லை பிரியா.

திடீரென விலகியவள், “அச்சச்சோ ஐஞ்சு நிமிஷம் மேலயே ஆகிடுச்சு, கிளம்புங்க கிளம்புங்க…” என சொல்லி எழுந்து குளியலறை ஓடி சென்று விட்டாள்.

“அறுந்த வாலு!” செல்லமாக திட்டியவன் கண்கள் மூடி தன்னை இயல்புக்கு கொண்டு வந்த பின் எழுந்தான்.

அவள் திரும்பி வரும் போது அவன் அறையில் இல்லை. இருப்பான் என நினைத்திருந்தவள் ஏமாற்றத்தோடு பெருமூச்சு விட கதவு திறந்து கொண்டு வந்தவன் கையில் சாப்பாடு தட்டு இருந்தது.

“பார்டா ஒரு நாள் நைட் எக்ஸ்பீரியன்ஸ்ல குஷி ஆகி பெட்ரூமை சாப்பாட்டு கடையா மாத்திட்டார் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்!”  தட்டை வாங்கிக் கொண்டே கிண்டலாக சொன்னாள்.

ஜக்கிலிருந்து கிளாஸ் ஒன்றில் தண்ணீர் பிடித்து வைத்தவன், “இன்னிக்கு ஒரு நாள் மட்டும்” என்றான்.

இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டு அவள் சாப்பிட ஆரம்பிக்க அவன் கசங்கிப் போயிருந்த தனது சட்டையை களைந்தான்.

“ம்ம்… வேற நினைப்பு வேணாம். நான் சென்னைல இருக்கிறப்போ எப்படி தவிக்க விட்டீங்க? இப்போ பழி வாங்க போறேன் உங்களை. நான் சாப்பிட்டு தூங்க போறேன்” என்றாள்.

 சிரிப்போடு வேறு சட்டை அணிந்து கொண்டவன், “ரெஸ்ட் எடு” என்றான்.

“ஐயைய அப்போ நான் நினைச்சது இல்லையா? என்னங்க… நான் ஓகேதான், எனக்கு ஓகேதான்” வெட்க சிரிப்போடு சிணுங்கலாக சொன்னாள்.

அவளருகில் வந்து நின்றவன், “நான் எதுவும் பேசாமலே என்னை விட்டு இருக்க முடியாம தவிச்சு போன. இதுல நல்லா சிரிச்சு பேசி இருந்திருந்தேனா உன்னால அங்க தாக்கு பிடிச்சிருக்க முடியாது. ஆசை வைக்கிறது விட அதை வெளிக்காட்டாம உள்ள ஒளிச்சு வைக்கிறது எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா?” எனக் கேட்டு அவள் தலையில் கை வைத்து ஆட்டி விட்டான்.

“டூ மினிட்ஸ், இப்போ சாப்பிட்ருவேன்… ஷர்ட் கசங்கும்னு பயமிருந்தா ரிமூவ் பண்ணிடுங்க” என்றாள்.

“இது உடம்பா இல்ல வேற எதுவுமா? அடிச்சு போட்டாப்ல அப்படி தூங்கிட்டு பேச்சை பாரு. உனக்கு ஓவர் லவ்னா விடாம பெட்லேயே இருக்கணுமா?”

பிரியா முகத்தை சுருக்க, “உனக்கு ரெஸ்ட் வேணும் பிரியா” கண்டிப்போடு சொல்லி, “யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க, நான் சொல்லிட்டேன், தூங்கு” என்றான்.

அவள் முகத்தை திருப்பிக் கொள்ள குனிந்து அவள் காதில் “உர்ருன்னு இருக்க இந்த மூஞ்சிய பார்த்திட்டு போகத்தான் காலைல ரெண்டு மணி நேரம் உன் பக்கத்திலேயே உட்கார்ந்து தவம் கிடந்தேனா?” எனக் கேட்டான்.

ஒரு விரல் காட்டி “ஒன் செக்” என்றவள் நிதானமாக தண்ணீர் பருகி விட்டு இடக் கை கொண்டு அவன் முகத்தை திருப்பி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “போயிட்டு வாங்க” என சிரித்த முகமாக சொன்னாள்.

அவள் கன்னத்தை தன் கன்னம் கொண்டு உரசி, “வர்றேன்” என்றவனின் கேசத்தை களைத்து விட்டவள், “மனசு மாறுறதுக்குள்ள கிளம்புங்க” என்றாள்.

அதற்கு மேல் அவளை பார்த்திருந்தால் அவளை விட்டு நகர முடியாமல் போய் விடும் என்ற பயம் கொண்டவன் அவளை திரும்பிப் பாராமல் வெளியேறி விட்டான்.

உத்ரா எந்த கடையில் இருந்தாலும் மதிய உணவுக்கு மாமனார்தான் வந்து அழைத்து செல்வார். இன்று ஆதவன் வந்திருந்தான்.

“மாமாக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள் உத்ரா.

“அவர் நல்லாத்தான் இருக்கார். சீக்கிரம் வேலை முடிஞ்சுது, அப்பாக்கு கால் பண்ணி சொல்லிட்டு நானே வந்திட்டேன்” என்றான் ஆதவன்.

“எனக்கு சொல்லலை”

“எல்லாத்திலேயும் குறை கண்டு பிடிச்சா நான் என்ன செய்ய? உனக்கு சர்ப்ரைஸா இருக்கும் நினைச்சேன்” பாவமாக சொன்னான்.

அவள் உடனே எல்லாம் உருகிப் போய் விடவில்லை. “சர்ப்ரைஸ் ஆகிட்டேன்” நக்கல் செய்கிறாளா சாதாரணமாக சொல்கிறாளா என கண்டுபிடிக்க முடியாத படி சொன்னாள்.

பேசிக் கொண்டே காருக்கருகில் இருவரும் வர கார் சாவியை அவளிடம் தந்து அவளையே ஓட்ட சொன்னான்.

அவள் மறுக்க, “நீ கரெக்ட்டா ஓட்டுறியான்னு எனக்கு தெரியனும், அப்போதான் உனக்கு வாங்கி கொடுப்பேன்” என்றாள்.

“என்ன டெஸ்ட்டா?”

“என்ன தப்பு? இருக்கிறது ஒரு பொண்டாட்டி. உனக்கு ஏதாவது ஆனா பொண்டாட்டிக்கு என்ன செய்வேன்?” என அவன் கேட்க, “அதெல்லாம் கவலை படாதீங்க. அப்பாடா போய் தொலைஞ்சிட்டான்னு அடுத்த மாசமே வேற பொண்ணு பார்த்து கட்டி வைப்பாங்க உங்கம்மா” என்றாள்.

“எனக்கு வேற எவளும் வேணாம்.  என் பொண்டாட்டித்தான் வேணும்”

“எதுக்கு… இல்ல எதுக்குங்குறேன்…” கையை ஆட்டி ஆட்டி உத்ரா கோவமாக பேச, அவள் கையை பிடித்தவன், “எல்லாத்துக்கும்” என உள்ளார்ந்த குரலில் சொன்னான்.

உள்ளம் இளகிப் போக காண்பித்துக் கொள்ளாதவள் காரை எடுத்தாள். அவள் கார் ஓட்டுவதை கவனமாக பார்த்தவனுக்கு திருப்தியாக இருந்தது. வீடு வந்ததும் அறைக்கு சென்றனர்.

சில கார் மாடல்கள் பெயர்கள் சொல்லி, “என்ன வேணும், இல்ல வேற வேணும்னாலும் சொல்லு, நாளைக்கே புக் பண்ணிடலாம்” என்றான்.

அவள் இயல்பாக, “அண்ணாகிட்ட கேட்டு சொல்றேன்” என்றாள்.

மென்மையாக இருந்தவன் முகம் கடினமடைய, “அவர் சொன்னதாலதான் உங்களை கட்டியிருக்கேன். பெரிய பெரிய விஷயமெல்லாம் அண்ணனை கேட்காம செஞ்சது இல்ல” என்றாள்.

“வேற என்னெல்லாம் கேட்ப அவர்கிட்ட?” எழுந்த கோவத்தில் வார்த்தைகள் விடக்கூடாது என வாழ்க்கையில் முதல் முறையாக சற்றே நிதானித்தவன் கைகளை இறுக்கி வேறு பக்கம் பார்த்தான்.

“முக்கியமான எல்லாமே” என்றாள்.

சட்டென அவளை பிடித்து தன்னிடம் இழுத்தவன் அவள் முகத்தை பற்றி இதழ்களில் முத்தமிட்டான். திகைத்தாலும் விலக முனையாமல் அவனுடன் ஒன்றி நின்றாள் உத்ரா. அற்புதமான அனுபவத்திற்கு பின் முகத்தை பிரித்தவன், “கோவத்தை கண்ட்ரோல் பண்ணதான் கிஸ் பண்ணினேன். மேக்னட் மாதிரி இழுக்குது என்னை” என்றவன் மீண்டும் முத்தமிட்டான்.

இந்த முறை உத்ராவாகவே விலகியவள், “போதும்” என்றாள்.

“உத்ரா…” ஆசையாக அழைத்தவன் அவளை அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பில் இருந்தவாறே, “நம்ம புரிஞ்சுக்கலாம் ஃபர்ஸ்ட். எல்லாத்திலேயும் அவசரமா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“மேரேஜ் முடிஞ்சு நாலு மாசம் முடிஞ்சு போச்சுடி” கிறங்கிய குரலில் சொன்னான் ஆதவன்.

Advertisement