“ஸ்ரீ” ரிஷி அழைக்க, வேண்டாம் எதுவும் சொல்ல வேண்டாம்.
“தனுவை சொல்ல விடாமல் தடுத்த? அப்படின்னா நீயும் என்னை தப்பா தான நினைச்சிட்டு இருக்க?”
அவள் அமைதியாக இருந்தாள்.
என்னை நம்பு ஸ்ரீ. எனக்கு பவியை பிடித்தது உண்மை தான். அது வெறும் ஈர்ப்பு தான். எனக்கு..எனக்கு..எனக்கு……….சொல்ல முடியாமல் தடுமாறினான்.
ஸ்ரீநிதி முகம் முழுக்க சோர்வுடன் அவனை பார்க்க, “சரி நீ என்னை நம்பவேண்டாம். உனக்கு விவாகரத்தில் நான் சைன் செய்கிறேன். ஆனால் நாம ஆசைப்பட்டது போல என்னோட கனவு நிறைவேறட்டும். நான் சைன் செய்து கொடுத்திட்டு போயிடுறேன்” என்றான்.
ஸ்ரீநிதி அவனை ஆழ்ந்து பார்க்க, “ப்ளீஸ் கொஞ்ச நேரம் தனியா ஸ்ரீயோட நான் பேசணும்” அனைவரையும் பார்த்தான்.
ஜோ எல்லாரையும் வெளியேற்ற, வேண்டுமென்றே புகழ் சேரை இழுத்து போட்டு ரிஷி அருகே அமர்ந்து, கன்னத்தில் கை வைத்து படம் பார்ப்பது போல பார்த்தான்.
“மச்சான் வாடா” ஜோ புகழ் கையை இழுக்க, நோ…நான் வர மாட்டேன். இனி ஸ்ரீயை விட்டு பிரிய மாட்டேன்..
“இப்ப போகல. நீ என்னிடம் அடி வாங்கப் போறடா” ரிஷி சினமாக, “அடிப்பாயா? எனக்கு கை, கால் நல்லா இருக்கு. எனக்கும் அடிக்கத் தெரியும்” வீம்பாக பேசினான் புகழ்.
ஜோ தலையில் அடித்து வெளியே செல்ல, படுக்கையின் மறுபக்கம் சென்று ஸ்ரீநிதி அருகே நெருக்கமாக அமர்ந்து, “சாரி ஸ்ரீ” அவள் வயிற்றில் வைத்திருந்த கையை எடுத்து விட்டு ரிஷி அவன் கையை வைத்தான்.
சத்தியமா சொல்றேன் ஸ்ரீ. உன்னை போல நம் குழந்தைக்காக நானும் அழுதேன். அங்க ரிசல்ட்டை கூட பார்க்கலை. ஜோ விசயத்தை சொல்லவும் என்னால இருக்கவே முடியல. மறுநிமிசம் நிகழ்ச்சியிலிருந்து ஓடி வந்துட்டேன்.
“நாங்க சமைச்சு சாப்பிட்டு தான் வந்தோம் பாரு” புகழ் குறுக்கே பேசினான்.
“சும்மா இருடா” ரிஷி சத்தமிட, ஸ்ரீநிதி அழுது கொண்டே அவன் கையை எடுத்து விட்டு அவள் கை வைத்து அழுதாள்.
“ஸ்ரீ” ரிஷி அவளை அணைக்க முனைய, “ஏய்….விவாகரத்து பண்ண போறவங்க கட்டிப்பிடிக்கக் கூடாது. வா ஸ்ரீ” புகழ் அவளை அணைக்க வந்தான்.
“ஸ்ரீ பக்கத்துல இருக்க மட்டும் தான் உனக்கு அனுமதி. சும்மா அவள டச் பண்ண?” ரிஷி கேட்டுக் கொண்டிருக்க, “நீ தான் சைன் பண்ணித் தாரேன்னு சொல்லீட்டேல்ல? போயிட்டே இரு”
“புகழ்” கையை விரித்தாள் ஸ்ரீநிதி. ரிஷி நகர்ந்து நின்று ஸ்ரீநிதியை பார்த்தான். அவள் முறைத்து புகழை அணைத்துக் கொண்டாள்.
“போடா” புகழ் சத்தமிட, மனமுடைந்து வெளியே வந்தவன் அவ்விடம் விட்டு வெளியேறினான். தனிமை நோக்கி பயணித்து யாருமில்லா இடம் சென்று கத்தி அழுதான்.
தர்மேந்திரனும் ஜோவும் அவனை தூரமிருந்து பார்த்தனர்.
“இதுக்கு ஒழுங்கா காதலை சொல்ல வேண்டியது தான?” ஜோ கேட்க,
“எல்லாராலும் உடனே காதலை சொல்ல முடியாது ஜோ. சிலருக்கு காரணம் கூட இருக்கலாம்” தர்மேந்திரன் ரிஷியை பாவமாக பார்த்தார்.
“மாமா தனுவுக்கு நான் முறைப்பையன் தான?” ஜோ கேட்க, அவர் புன்னகைத்தார்.
“மாமா நளினி ஆன்ட்டி?” அவன் கேட்க, அவள் தான் அவள் வாழ்க்கையை தேர்வு செய்யணும்.
ஆன்ட்டி, தெளிவா தான் இருக்காங்க மாமா. நளினி ஆன்ட்டிக்கு மேக்ஸ் சாரை கல்யாணம் செய்து வச்சிடலாம். அவர் இங்கே தான் வொர்க் பண்ணிட்டு இருக்கார். இப்ப அவர் காலேஜ் பிரபசராம். தனு தான் சொன்னா..
நள்ளிக்கிட்ட கேட்கலாம். பேச வைத்திடலாம் என்றார் புன்னகையுடன்
தன்வி இருவர் அருகிலும் வந்தாள்.
நள்ளிக்கு ஆள் பார்த்துட்ட போல? சிரிப்புடன் அவளை பார்த்தார் தர்மேந்திரன்.
“எஸ் டாட். சீக்கிரம் மாம்முக்கு கல்யாணம் பண்ணனும்” கார் மீது ஏறி அமர்ந்து ரிஷியை பார்த்தாள்.
எதுக்கு அவனை இப்படி பாக்குறம்மா?
டாட், இவன் பிடிவாதக்காரன். ஆனால் பிக்ப்பாவிற்கு பிடிக்காததை செய்ய இவனால் முடியாது. இவன் இப்படி நிதுக்காக அழுவான்னு நான் எண்ணியதேயில்லை. நிது தான் வேற வழியில்லாமல் புகழ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு அப்பவே எண்ணினேன்..
இவன் சொல்வது உண்மையா? இவன் பவி அண்ணீயை காதலிக்க வில்லையா?
இப்படி தனியே யாரிடமும் சொல்ல முடியாமல் அழுறான்னா அவன் மனதில் ஏதோ இருக்கு. ஒரு வேலை ஸ்ரீயிடம் காதலை சொன்னால் ஸ்டேட்டஸ்…
“இல்லம்மா, அப்படி ஸ்டேட்டஸ் பார்த்தால் நம்ம பாட்டி வீட்டிலோ, எங்க வீட்டிலோ தங்கி இருக்க மாட்டான்” தர்மேந்திரன் கூற,
“மாமா அவரிடமே கேட்டுறலாமா?” ஜோ கேட்டான்.
“சொல்ல மாட்டான்” தனு கூறி, இவன் காதலை வெளி வர வைக்க புகழ் அண்ணாவால் தான் முடியும். ஆனால் டாட்..புகழண்ணா இருவரையும் சேர்த்து வைக்கிறேன்னு விவாகரத்தை பற்றியே பேசுறாங்க..
ம்ம்! இது இயற்கைம்மா. நாம் எப்போது ஒரு விசயத்தை பற்றி பேசிக் கொண்டே இருக்கோமோ அதற்கு எந்த அர்த்தமும் பலனும் இல்லாமல் போகும். அவங்க இருவரும் வாழ்க்கையில் விவாகரத்தை பற்றி பேசவே கூடாதுன்னு தான் அதிகமா பயன்படுத்துறான்..
“ஓ! அப்ப நாம காதலை வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொண்டே இருந்தால் காதல் இல்லாமல் போகுமா?” தன்வி கேட்க, ஜோ அதிர்ந்து அவளை பார்த்தான்.
கண்டிப்பாம்மா…ஐ லவ் யூ திரும்ப திரும்ப சொல்றதால நம்மை நேசிப்பவர்களுக்கு சந்தேகம் வரும். அதனால் அவர்களிடம் காதல் இல்லாமல் போயிரும்.
எந்த வார்த்தையாயினும் அதற்கான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். “ஐ லவ் யூ” பவர்புல் மேஜிக். அதை கையாளும் வழியும் உண்மையான காதலர்களுக்கு தான் தெரியும்.
காதல் சொல்லக் கூடாதும்மா. காட்ட வேண்டும். என்னிடம் ஒரு ரூபாய் மட்டுமே இருந்து அதில் ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்தாலும் என்னோட அழகி சந்தோசப்படுவா..
வருத்தமுடன் தன்வி தர்மேந்திரனை பார்த்தாள். இருவரும் விழித்தனர்.
நள்ளி தனிமையிலே வாழ்ந்து பழகியவம்மா. அதனால தான் அவ புருசன் இறந்த பின் குழந்தையும் இல்லைன்னா தவறான முடிவெடுத்திருவான்னு தான் நான் உன்னை அவளிடம் கொடுத்தேன். என்னோட பொண்ணை நல்லா வளர்த்திருக்காம்மா..
என்னோட முக்கியமான நிகழ்ச்சியில் வைத்தே ஸ்ரீயிடம் காதலை கூறிடணும் எண்ணினான்.
“போகலாமா?” கேட்டாள் தனு.
ம்ம்! எழுந்தான். அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
“அனைவரும் கிளம்புங்க. நான் ஸ்ரீயை பர்த்துக்கிறேன்” புகழ் கூற, “மாம் நானும் ஸ்ரீயோடு தான் இருப்பேன்” ரிஷி அங்கிருந்த சோபாவில் சாய்ந்து படுத்தே விட்டான்.
“நீங்க வீட்டுக்கு போங்கடா” பாட்டிகள் சத்தமிட, “முடியாது” இருவரும் ஒன்று போல சொல்லி திரும்பிக் கொண்டனர்.
ரிஷி மனதில் பயம் வந்து விட்டது. எனக்காக என்னை ஒரு முறை கூட கட்டிப்பிடித்ததில்லை. அவனை மட்டும் கட்டிப்பிடிக்கிறா? சினமுடன் திரும்பி படுத்து கண்ணை மூடினான்.
ஸ்ரீ குழந்தையை கொஞ்சி பேசியதை பார்த்திருந்த ரிஷிக்கு அது அவனை தூங்க விடாமல் செய்தது. திரும்பி திரும்பி படுத்துக் கொண்டே இருந்தான். ஸ்ரீநிதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீநிதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். மான்விழி அவளுக்கு ஆலம் கரைத்து வந்தார். ஸ்ரீ தோளில் கை போட்டு ரிஷி நிற்க, ஸ்ரீநிதி அவன் கையை தட்டி விட்டாள்.
மான்விழி வெளியே எட்டி பார்க்க, காரிலிருந்து புகழ் பொருட்களை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீநிதி அவர் பார்ப்பதை பார்த்து திரும்பி பார்த்த நேரம் மான்விழி இருவருக்கும் சேர்த்து ஆலம் கரைத்து தன் மகனுக்கும் மருமகள் முகத்தை அவர் பக்கம் திருப்பி பொட்டு வைத்தார். இருவருக்கும் இடையே ஓடி வந்த நின்ற புகழ்…எனக்கு? முகத்தை அவரிடம் காட்டினான்.
மான்விழி புன்னகையுடன் புகழுக்கும் வைக்க, ரிஷி அவனை தள்ளினான்.
“ஏன்டா புள்ளைய தள்ளி விடுற?” மான்விழி ரிஷியை செல்லமாக அடித்தார்.
ஸ்ரீநிதி- ரிஷி அறைக்கு புகழ் தான் அவளை அழைத்து சென்றான். ரிஷி அவர்களை பின் தொடர்ந்தான்.
உள்ளே செல்லவும் ஸ்ரீநிதியை படுக்கையில் அமர வைத்து அவளருகே சென்று படுத்து கால் மீது கால் போட்டு, “ஸ்ரீ நான் கொஞ்ச நேரம் உறங்கப் போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது”.
ரிஷி பல்லை கடித்துக் கொண்டு, அது எங்களது படுக்கை. கீழ இறங்குடா..
எனக்கு டயர்டா இருக்குடா. நான் தான ஸ்ரீயை பார்த்துக்கப் போறேன். உன்னோட விவாகரத்துக்கு பின் நாங்க தான் வர மாட்டோம்ல்ல. அதுவரை நானும் பயன்படுத்திக் கொள்கிறேன்.
ஸ்ரீநிதிக்கே புகழ் இப்படி விவாகரத்தை பற்றி அதிகமாக பேசிக் கொண்டே இருக்க மனதில் பயம் பிடிக்க தொடங்கியது. காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
“ஸ்ரீ படுக்கை ஏதோ வித்தியாசமா இருக்குல்ல? இல்ல இப்படி தான் இருக்குமா?” படுக்கையை ஆராய்ந்தவாறு புகழ் கேட்க, “ஆமா” எழ முயன்றாள்.
இருவருக்கும் இடையில் அமர்ந்த ரிஷி, “அதெல்லாம் ஒன்றுமில்லை. இருவரும் ஓய்வெடுங்க” நடுவில் படுத்துக் கொண்டான்.
“இல்லையே!” புகழ் ஸ்ரீ கையை பிடித்து எழ வைத்து நிறுத்தினான்.
ரிஷி மட்டும் படுக்கையில் இருக்க, மளமளவென விரிப்பை பிடித்து இழுத்தான் புகழ். ரிஷி படுக்கையிலிருந்து உருண்டு கீழே விழுந்தான்.
ஸ்ரீநிதி அதிர்ந்து படுக்கையை பார்த்தாள்.
“என்னடா இது? புடவை கடையவே படுக்கைக்கு கீழ ஒளிச்சி வச்சிருக்க?” புகழ் அறியாதது போல கேட்டான்.
படுக்கையில் இருக்கும் மெத்தையை தனியே எடுத்து விட்டு முழுவதும் ஸ்ரீநிதியின் புடவை எல்லாவற்றையும் அடுக்கி வைத்து அதன் மேல் இரு மூன்று விரிப்புகளை போர்த்தி வைத்திருந்தான் அவள் கணவன் ரிசாத்பவன்.
ஸ்ரீநிதி மெதுவாக நகர்ந்து அவளது அலமாரியை திறக்க, அதில் அவளது ஒரு ஆடை கூட இல்லை.
என்னோட மிடி, சுடி எங்க? கேட்டாள்.
புடவைகளை விலக்கி காட்டினான். அதன் கீழே மற்ற அவளது ஆடைகளும் முதலிரவன்று அவள் உடுத்திய ஆடையும் இருந்தது.
அதை மட்டும் தனியே எடுத்த ரிஷி, “இது மட்டும் உனக்கு வேண்டாமே!”
“அவ உன்னையே வேண்டாம்ன்னு விவாகரத்து பண்ணப் போறா. இது மட்டும் வேண்டாம்ன்னு சொல்ற?” அந்த புடவை பற்றி அறியாமல்..
“எல்லாத்தையும் மாதிரி இதையும் நான் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” ஸ்ரீநிதி அவன் கையிலிருந்து புடவையை வாங்கினாள். அதிலிருந்த இரத்தக்கறை இல்லை. அவனாகவே வாஷ் செய்து வைத்திருந்தான்.
ஸ்ரீநிதி அவனை பார்க்க, ரிஷி கண்கலங்க மண்டியிட்டு கை கூப்பினான்.
“நிஜமாகவே நடந்த எதுவும் எனக்கு தெரியாது. நான் கேட்ட போது நீ சொல்லி இருக்கலாம். எனக்கு தெரியாமல் இருக்கும் போது உன் வயிற்றில் குழந்தை. அதான் பேசிட்டேன். ஆனால் இப்ப நான்…” நிறுத்தி அழுதான்.
ஸ்ரீநிதிக்கும் குழந்தையை பற்றி அவன் பேசவும் அழுகை வந்து விட்டது.
“அழுறத நிறுத்துறீயா?” சீற்றமுடன் கத்தினான் புகழ். கீழிருந்த அனைவரும் அவர்கள் அறையை பார்த்தனர்.
ஸ்ரீ நீ ஓய்வெடு.
“நீ வெளிய போ. அழு என்னமும் செய்” புகழ் ரிஷியை தரதரவென இழுத்து சென்று வெளியே தள்ளினான்.
ஸ்ரீநிதி பதறி போனாள்.
புகழ் என்ன பண்ற? இது அவரோடா அறை..
அதுக்கு? நீ எதையும் நினைக்காமல் நம்ம வேலையை தொடங்கணும். உனக்கு இரு நாள் தான் தருவேன். அதுக்கு மேல அழுத உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உம் புருசன் தான் அடி வாங்குவான்.
புகழ்…
என்ன?
அவரை உள்ள அழைச்சிட்டு வா.
என்னால முடியாது.
“ச்சே” ஸ்ரீநிதி மெதுவாக நடந்து வெளியே வந்தாள். ரிஷி வெளியே இல்லை. ஸ்ரீநிதி மனம் முழுவதும் அவன் பக்கம் சென்றது. தவித்து அவனை தேடினாள்.
ஓரக்கண்ணால் புகழ் அவளை பார்த்து புன்னகைத்தான்.
பாட்டி அவளிடம் வந்தார்.
என்னாச்சும்மா?
“பாட்டி” ரிஷியை கேட்க எண்ணி, “ஒன்றுமில்லை” உள்ளே சென்று விட்டாள். பாட்டி வருத்தமுடன் கீழே வந்தார்.
புகழ் அமைதியாக சோபாவில் படுத்திருந்தான்.
புகழ், நான் குளிக்கணும்.
குளி..
நீ அவரை அழைச்சிட்டு வர்றதுக்குள்ள நான் குளிச்சிட்டு வந்துருவேன்.
அவனை நான் எதுக்கு கூப்பிட போகணும்? நான் வேணும்ன்னா வெளிய இருக்கேன்.
ஸ்ரீநிதிக்கு கண்கள் கலங்கியது.
ப்ளீஸ்டா..
“போறேன். உனக்காக மட்டும் தான்” ரிஷியை பார்க்க பைக்கை எடுத்தான். ஆனால் ரிஷி அவனாகவே வந்தான். கீழேயே அமர்ந்தான்.
ஸ்ரீநிதி வேகமாக எட்டி பார்த்தாள்.
ஜெய் அவளை பார்த்து நேராக வந்து, “சாரி நிது. ஒரு வேகத்துல்ல உன்னை கொல்ல..”
“பரவாயில்லை மாமா. நான் நல்லா தான் இருக்கேன்” சாதாரணமாக கூறினாள்.
எல்லாரும் இருவரையும் பார்க்க, ரிஷி எழுந்து படியேறி இருவர் முன்னும் வந்தான்.
உனக்கு என் மீது கோபம் வரலையா? நீங்க என்னோட தங்கச்சி கணவன். நான் ஏற்கனவே சொன்னது போல புகழ், ஜோ, வீ எனக்கு ஸ்பெசல். அவள பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க மேல கோபத்துல்ல இருந்தாலும் நினைக்காம இருக்க மாட்டா. கொஞ்ச நாள்ல்ல அவளே வந்துருவா. நீங்க கவலைப்படாதீங்க.
“இப்ப தான் எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு நிது” ஜெய் கலங்கினான்.
“நடிக்காதடா” ரிஷி சினமாக, பேண்டு பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு அறைக்கதவில் சாய்ந்திருந்த புகழ், “கேசுவல் ஆடையில் இருக்கீங்க? ஆபிஸ் போகல..” ஜெய்யிடம் கேட்டான்.
“பிடிக்கல” ஜெய் கூற, “ஆபிஸ் பிடிக்கலையா இல்லை நாங்க வந்தது பிடிக்கலையா?”
நிது இங்கேயே ரிஷியோட வாழ்ந்தால் எனக்கு சந்தோசம் தான். எனக்கு இப்ப புரிஞ்சிருச்சு. அவ ஆபிஸ் வொர்க்கை பார்க்கட்டும் என்றான் ஜெய்.
சிரித்த புகழ், இரண்டுமே நடக்காது. ரிஷி வேண்டாம்ன்னா ஆபிஸூம் வேண்டாம் தான்.
“வா ஸ்ரீ. இங்க என்ன வெட்டிப் பேச்சு?” ரிஷியை பார்த்து, “முதல்ல இந்த படுக்கையில் இருக்கும் புடவையை அலமாரியில் மாத்துற? எனக்கு டயர்டா இருக்கு. அப்படியே ஒரு டீ எடுத்துட்டு வா” ரிஷியிடம் ஆர்டர் போட்டு உள்ளே சென்றான்.
“இவனுக்கு நான் டீ எடுத்துட்டு போகணுமா?” சினமுடன் அவன் பின்னே சென்றான்.
பெருமூச்சுடன், “மாமா நீங்க வொர்க்கை பாருங்க. வீ உங்களை விட்டு இருக்க மாட்டா”.
“நீ ரிஷியை விட்டு இருந்திருவாயா நிது?” ஜெய் கேட்க, அமைதியானாள்.
“உனக்கே அவனை பற்றி தெரியும். அவனுக்கு எல்லாமே விளையாட்டு தான். பணத்திமிறில் வாழ்ந்த அவன் வாழ்க்கையில் நீ வந்த பின் தான் நிறைய மாற்றம் தெரிந்தது. அவனாக கஷ்டப்பட்டு முன்னேறி வந்துட்டான். ப்ளீஸ் நிது அவனை விட்டு நீ போனால் அவன் மொத்தமாக சரிந்து விடுவான்” சொல்லி அவன் செல்ல, தன்வி அவளை பார்த்து விட்டு அவளறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரு நாட்களின் பின் ரிஷி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். ஸ்ரீநிதியும் புகழும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.
எழுந்து அமர்ந்து இருவரையும் பார்த்து திடுக்கிட்டு படுக்கையிலிருந்து கீழே இறங்கினான். இருவரும் ஜோடியாக நின்றனர்.
புடவையில் ஸ்ரீநிதியும், அழகான வேஷ்டி சட்டையுடன் புகழும் இருந்தனர்.
“ஸ்ரீ” கண்கலங்க ரிஷி அவள் கையை பற்ற, அவன் கையை எடுத்து விட்டு, “சாரி, நமக்கு நேரமாகுது புகழ்” என்றாள்.
இருவரும் ஜோடியாக வருவதை பார்த்து சந்திரமுகன் மனம் வருந்தினாலும் அவருக்கு என்னமோ புகழால் ஸ்ரீநிதி புன்னகைப்பதை பார்க்கவும் ரிஷியை அவளுக்கு மணமுடித்து தவறு செய்து விட்டோமோ என எண்ணினார்.
அவர்கள் செல்லவும், “அவர் பாட்டியிடம் இப்படி பேசுவதை கேட்ட ரிஷி மனம் அடிபட்டது. ஆனாலும் கடைசி நொடி வரை நான் என்னோட ஸ்ரீக்காக காத்திருப்பேன். என் காதலை விரைவிலே கூறுவேன்” மனதை தேற்றிக் கொண்டான்.
ஸ்ரீநிதியும் புகழும் கிளம்பவும் ரிஷி அவனறையில் மீண்டும் படுத்து கண்களை மூடினான். இருவரும் திருமண கோலத்தில் நிற்பது போல தெரிய பட்டென எழுந்து அமர்ந்தான்.
கீழே வந்தான்.
யாருமேயில்லை.
“எல்லாரும் எங்க போனாங்க?” பாட்டி அறைக்கு சென்று பார்த்தான். அவரும் இல்லை. தனு, மான்விழி யாருமில்லை.
ஜெய்யை அழைத்து கேட்டான்.
“தெரியாதுடா. எனக்கு வேலை இருக்கு” அலைபேசியை வைத்து விட்டான்.
“அம்மா எதுக்கு ரிஷியை தவிர எல்லாரையும் புகழ் வர சொல்லி இருக்கான்?” ஜெய் கேட்டான்.
“நிது அண்ணீயை கல்யாணம் பண்ணிக்கப் போறானோ?” தன்வி கேட்க, “இருக்காதும்மா” சந்திரமுகன் உறுதியாக கூறினார்.
“இதோ கோவிலுக்கு வந்துட்டோம். என்னன்னு தெரிஞ்சுக்கலாம்” பாட்டி கூறினார். அனைவரும் கீழிறங்கி உள்ளே சென்றார்கள்.
கிஷோரும் தன் குடும்பத்துடன் வந்திருந்தான்.
ஜோவை பார்த்து தன்வி ஆர்வம் தாங்க முடியாது ஓடினாள். ஜோ தன்வியை பார்த்து புன்னகைக்க, ரிஷியை தவிர அனைவரும் வந்திருந்தனர். அமரேசன் தன் பேரனை பார்க்க புகழ் கண்ணை மூடி திறந்தான்.
ஐயர் எல்லாருக்கும் பிரசாதம் வழங்க, அங்கே தன் அண்ணனுடன் அழகான பச்சையும் ஆரஞ்சும் கலந்த பட்டுப்புடவையில் ஷாலினி வந்து நின்றாள்.
“ஏய்..ஷாலு..” தன்வி மகிழ்ச்சியுடன் அவளருகே செல்ல இடைமறித்து நின்றான் புகழமுதன்.
“அண்ணா ஷாலு உனக்கு தெரியும்ல்ல?” தன்வி கேட்க, ஷாலினியும் அவள் அண்ணனும் புன்னகைத்தனர்.
புகழமுதன் ஷாலினியிடம் கையை நீட்ட, அவள் புகழமுதன் கையை கோர்த்து அனைவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
“புகழ்” ஜோ அதிர, “ஆமாடா நம்ம புகழ் தான் ஷாலினியின் கணவன்” கிஷோர் சொல்ல, அனைவரும் திகைத்து பின் இன்பமுற்றனர்.
“சின்னதா கோவில்ல என்கேஜ் பண்ணிக்கலாம்ன்னு தான் வரச் சொன்னேன். ஓ.கேவா ஷாலூ?” புகழமுதன் ஷாலினியிடம் கேட்டுக் கொண்டே ஸ்ரீநிதியை பார்த்தான்.
அவளால் நம்பவே முடியவில்லை. ஆவென அவள் பார்க்க, பவிதாவோ “டேய்…நீ எங்க எல்லாரையும் ஏமாத்தி இருக்க?” சினமானாள்.
ஜெய்யோ அவளை ஏக்கமுடன் பார்த்தான்.
கிஷோரை புகழ் அழைக்க, அவன் சிறிய இரு நகைப்பெட்டியை கொடுத்தான். அதிலிருந்த கப்பில் மோதிரத்தை புகழும் ஷாலினியும் மாற்றிக் கொண்டனர்.
ஸ்ரீ இது டூப்லிக்கேட். இதை இரு நாட்கள் போட்டுக்கோ. எனக்கு ரிஷியை அழ வைப்பது ரொம்ப பிடிச்சிருக்கு. அவனை ஒரு வழி செய்யலாம் என்றான்.
வேண்டாம் புகழ்..
“அப்ப அவன் தவறை மன்னித்து ஏத்துக்கோ” புகழ் கூற, “முடியாது” என்றாள் ஸ்ரீநிதி.
ஷாலினியை ஸ்ரீநிதி பார்க்க, “நிது போட்டுக்கோ. ரிஷிக்கு உன் அருமை தெரியணும்”.
ம்ம்! ஸ்ரீநிதி அதை போட்டுக் கொண்டு தன் குடும்பத்தை பார்த்தாள்.
“விளையாட்டு விபரீதமாகாமல் இருந்தால் போதும்” பாட்டி கூற, “அதான் நான் இருக்கேன்ல்ல பாட்டி. எந்த பிரச்சனையும் வராது” புகழ் கூறினான்.
“எல்லார் முன்னும் கல்யாணம் எப்ப செய்றது?” தர்மேந்திரன் தன் மகனை பார்த்தார்.
“பண்ணிடலாம். முதல்ல நம்ம ஸ்ரீ ரிஷி பிரச்சனையில்லாமல் சேரட்டும். இன்னும் கொஞ்ச நாட்கள் தான். எனக்காக காத்திருப்பேல்ல ஷாலினி?” அவளை தன் பக்கம் இழுத்து அணைக்க,
நளினி அவளை தன் பக்கம் நிறுத்தி, “எல்லார் முன்னும் திருமணம் நடந்த பின் கட்டிப்பிடிச்சி முத்தம் கூட கொடுத்துக்கோ. அதுவரை எங்க மருமகளை நீ தொடவே கூடாது” என்றார்.
“ஆமா இது தான் சரி” பெரிய பாட்டி சொல்லி சிரிக்க, அனைவரும் புன்னகைத்தனர்.
“வாங்க ரிஷி வந்துறாம” மான்விழி சொல்ல, “விழி உம் மகன் கிட்ட சொல்லீட்டியா?” சந்திரமுகன் கேட்டார்.
“நான் ரொம்ப கஷ்டப்பட்டு இன்று ரிஷி பக்கமே போகலை” உதட்டை பிதுக்கினார் மான்விழி. அனைவரும் புன்னகைத்தனர்.
ஸ்ரீநிதி புகழ் கையை பிடித்து அழுத்த, அவன் அவளை பார்த்தான். ஷாலினிக்கு ஒரு மாதிரி ஆனது. அவள் அவனிடமிருந்து விலகி நின்றாள். நளினி இவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
“அடுத்தது யாருக்கு திருமணம்?” சின்ன தாத்தா கேட்க, எல்லாரும் ஜோவை பார்த்தனர்.
“நான் எம் பிள்ளையை இப்பவேயெல்லாம் யாருக்கும் கட்டித் தர மாட்டேன்ப்பா. வாடா கிளம்பலாம். இல்ல வெளிய மாலையை வாங்கி தாலி கட்ட வச்சிருவாங்க” பனிமலர் சொல்ல, அனைவரும் நகைத்தனர். ஷாலினி முகம் மட்டும் வாடி இருந்தது.
வீட்டிற்கு அனைவரும் வந்தனர். ரிஷி ஓடி வந்து அனைவரையும் பார்த்து கத்தினான்.
புகழ் வேண்டுமென்றே ஸ்ரீநிதியை பிடித்து இரு மோதிரத்தையும் அவன் பார்ப்பது போல நடந்து வந்தான். ஸ்ரீநிதிக்கு எண்ணம் முழுவதும் ரிஷியிடம் இருக்க, அவள் அம்மோதிரத்தை மறந்தே விட்டாள்.
ரிஷி இருவர் மோதிரத்தை பார்த்தும் அதிர, “ஹப்பா எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. இப்ப தான் நிம்மதியா இருக்கு” பாட்டி சொல்ல, டீப்பாய்யை எட்டி உதைத்தான் ரிஷி.
ஸ்ரீநிதி பயந்து அவனை பார்க்க, “ஏன்டா எதுக்கெடுத்தாலும் எல்லாத்தையும் உடைக்கிற? நல்ல விசயம் நடந்த வீட்டில் எந்த பொருளும் உடையக் கூடாதுடா”.