தாரகை 31

ரிஷி குணசேகரனை பார்த்து, “சஞ்சு இவரா?” கேட்டான்.

ஆமா மாமா, “இவன் தான் என்னை இங்க…”அவள் சொல்லத் தொடங்க, ஜோ அவள் வாயை மூடினான்.

ஜோவை தள்ளி விட்டு பயந்து ஸ்ரீநிதியிடம் ஓட்டிக் கொண்டாள் சஞ்சனா.

“சஞ்சு நான் உன்னோட ஜோ தான? வர மாட்டாயா?” அழுது கொண்டே கேட்டான்.

சஞ்சனா ஸ்ரீநிதியை இறுக்க, மீண்டும் ஜோவின் மனம் காயப்பட்டு போனது.

சந்திரமுகன் அவன் தோளில் கை வைக்க, “அங்கிள்” அவரை கட்டிக் கொண்டான் ஜோ.

குணசேகரனை ஆட்கள் கைது செய்தனர்.

“நிதிம்மா பாப்பாவை உடனே ஹாஸ்பிட்டலில் சேர்த்து முழுப்பரிசோதனை நடத்தணும்” சந்திரமுகன் சொல்ல, “நோ சார்” அவள் பதறினாள்.

“நோ வா?” ரிஷி சினமுடன் கேட்டான்.

“ஆமா. இனி சஞ்சுவை நாங்க பார்த்துக்கிறோம்” என்றாள்.

அவள் மனம் பாதிக்கப்பட்டதால் தான் ஜோவை பார்த்து கூட பயப்படுறா. உனக்கு புரியலையா? ரிஷி ஏற்கனவே இருந்த கோபத்தையும் சேர்த்து காட்டினான்.

ரிஷி தந்தை அவன் கையை இறுக பற்றினார்.

எந்த விசயமும் வெளிய வராம நம்ம குடும்ப மருத்துவரிடம் காட்டலாம்மா..

ஸ்ரீநிதி ஜோவை பார்க்க, கண்ணீருடன் ஜோ சஞ்சனாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரிங்க சார்” சஞ்சனாவை தூக்க, அவள் ஸ்ரீநிதியை விட்டு இறங்கவேயில்லை. பரிசோதனை நடத்தும் போது மட்டுமே இருவரும் பிரிந்திருந்தனர்.

சந்திரன் சார், ஒன்றுமில்லை. அதனால பயப்படாம இருக்கலாம். பயத்துல்ல தான் ஆண்கள் பக்கம் வந்தாலே பயப்படுறா. நம்பிக்கை வந்தால் சரியாகிடும்.

“சஞ்சு உன்னோட பாட்டியை பார்க்க போகலாமா?” ஜோ கேட்க, மருத்துவர் அறையிலிருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி அவன் மீது எறிந்தாள் சஞ்சனா. நல்ல வேலை அதுவாகவே நகர்ந்து கீழே விழுந்தது.

பாட்டி தான உன்னை வித்தாங்க. அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்ல்ல? ஸ்ரீநிதி கேட்க, “நிது அம்மாவுக்கு அவங்க ஊசி போட்டு கொன்னாங்களாம் சொன்னாங்க” அழுதாள்.

எல்லாரும் அதிர்ந்தனர்.

“சார் போலீஸை அழைச்சி இதென்னன்னு பாருங்க” சந்திரமுகனிடம் கூறி விட்டு, ஸ்ரீநிதியை பார்த்து..

“ரிஷி பார்க்க தான் திமிறாக பேசுவது நடந்து கொள்வது. மற்றபடி அவனும் குழந்தை மாதிரி தான். உங்களோட நிலையும் புரியுது. உங்க பிள்ளைக்கும் அப்பா வேண்டும்” சொல்லி நகர்ந்தார்.

சஞ்சனாவின் பாட்டி, சித்தி, சித்தப்பாவை அவள் அம்மாவிற்கு ஹாஸ்பிட்டலில் இருதய வலி வரும் மருந்தை அவர்கள் செலுத்தி கொன்றதற்காக கைது செய்தனர். ஹாஸ்பிட்டல் கேமிரா வழி அதை பார்த்திருப்பார்கள்.

சஞ்சனாவை தன் வீட்டிற்கு அழைத்து வர, இதை டிவியில் ஒளிபரப்பு செய்யவும் அழகி அதை பார்த்து பனிமலரிடம் கேட்டார். இருவரும் ஜோவை அழைத்து பதறி சஞ்சனாவை தேடி வந்தனர். மறுபக்கம் தன்வியும் அவள் குடும்பமும் அதை பார்த்து வந்தனர்.

ஜோ அழுது இருப்பதை பார்த்து பாட்டி அவனருகே வந்து அமர்ந்தார்.

“அதான் பிள்ளைக்கு ஒன்றுமில்லைல்லய்யா?”

“பாட்டி சஞ்சு என்னை பார்த்து பயப்படுறா. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான். அவளை அறையில் உறங்க வைத்து ஸ்ரீநிதி அருகே இருந்தாள்.

“பிள்ள கண்டத்துல்ல இருந்து தப்பி வந்துருச்சுன்னு நினை. உன்னிடம் வராம யாரிடம் வம்பு செய்ய போவாள்?” முந்தானையால் அழகி கண்ணீரை துடைத்து அவனருகே அமர்ந்தார்.

“அத்த சஞ்சு எப்போதும் என்னை சுற்றி சுற்றி வருவா. அவ என்னை பார்த்து பயப்படுவதை ஏத்துக்க முடியல” அழகியை அணைத்து அழுதான்.

ரிஷி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, தன்வி அவனை பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

விழித்து எழுந்த சஞ்சனா எல்லாரையும் பார்த்து விட்டு படுக்கையிலிருந்து குதித்து வெளியே வந்தாள். ஜோ சோர்ந்து அழகி மடியில் படுத்திருக்க, சஞ்சனா அவர்கள் முன் வந்தாள்.

“ஜோ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீயா? “சஞ்சனா குரலில் எழுந்து அமர்ந்தான்.

“உன்ன தான்டா. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” கேட்டாள்.

ஜோ கண்ணை துடைத்து அவளை அணைத்துக் கொண்டான்.

என்னிடம் வர உனக்கு அவ்வளவு பயமா இருந்துச்சா? கேட்டான்.

ம்ம்!!

இனி பயப்படுவியா?

ஊஹூம்..

நீயும், உன்னோட தம்பியும் எங்க வீட்ல இருப்பீங்களா?

ம்ம்!!

உன்னை நானே படிக்க வைக்கிறேன்.

“சாரி ஜோ” கட்டிக் கொண்டு அழுதாள் சஞ்சனா. நிரஞ்சன் பனிமலர் கையில் இருந்தான்.

“வாங்க கிளம்பலாம்” அனைவரும் நகர, ரிஷி மட்டும் அமர்ந்திருந்தான்.

“ரிஷி வா” ஜெய் அழைக்க, “நீங்க போங்க. நான் வாரேன்” அமர்ந்தே இருந்தான்.

சஞ்சனாவை இறக்கி விட்டு, “நீ நிதுவோட இரு. நான் வாரேன்” ரிஷி அருகே வந்து அமர்ந்து, “சாரி மாமா” என்றான் ஜோ.

ரிஷி அமைதியாக அதே நேரம் சினமுடனும் இருந்தான்.

ஒரு முறை புகழ் அக்காவுக்காக மேலிருந்து குதிக்கிறேன்னு காலை உடச்சுக்கிட்டான். அதனால நாங்க அவனை சூப்பர் மேன்னு நினைப்பு என்று கேலி கிண்டல் செய்வோம். சஞ்சு சொன்னவுடன் புகழின் எண்ணத்தில் பேசிட்டேன்.

ம்ம்..அவ்வளவு தான?

இதுக்கு மேல என்ன? ஜோ கேட்க, “ஒன்றுமில்லை” எழுந்து வண்டியை விரட்டினான்.

ஸ்ரீநிதி, ஜோவுடன் அவர்கள் வீட்டின் ஒரு நபராகவே மாறி விட்டாள் சஞ்சனா.

ஸ்ரீநிதியும் பனிமலரும் மாறி மாறி நிரஞ்சனை பார்த்துக் கொண்டனர். அவர்கள் வேலைக்கு செல்லும் போது அழகியிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.

ரிஷி கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையால் பல படிகளை தாண்டி இருந்தான். அவதூறு பேச்சுக்கள், அவமானங்கள் எல்லாம் அவனுக்கு பழகிப் போன ஒன்றாகி விட்டது.

அவன் வளர்ச்சியின் நிலையாக அவனுக்கான போட்டியில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருந்தான். அவன் கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் ஸ்ரீநிதி இருந்தாள்.

இன்று அவளது மீட்டிங்கை விட்டு அவனுக்காக சிங்கப்பூர் செல்ல கிளம்பினாள். யாரிடமும் கூறாமல் செல்வதால் ஜோவிடம் பொய்யுரைத்து ஆட்டோவில் ஏறினாள்.

ஆட்டோக்காரன் ஆட்டோ நகரவேயில்லை.

அண்ணா, நேரமாகுது..

“வேற ஆட்டோ பிடிச்சி போய்க்கோமா?” அவர் கூற, “வீட்டில் தான் யாருமில்லையே!” காரை எடுத்தாள்.

செல்லும் போது அவளுக்கு அன்றைய விபத்து பற்றிய அனைத்தும் நினைவுக்கு வந்தது. தலைவலிக்க தலையை பிடித்து காரை பாலத்தில் நிறுத்தி விட்டாள்.

குடித்து விட்டு வந்த இளைஞர்கள் கூட்டம் அடங்கிய கார் ஒன்றில் ஆங்கில இசை ஒலித்தது. அக்கார் ஸ்ரீநிதியின் காரை நோக்கி வந்தது. அவள் அதை கண்டு உசாராகி காரை எடுத்து ஓரமாக நகர்த்திக் கொண்டிருந்தாள். அதற்குள் இரு காரும் மோத விபத்தாகி ஸ்ரீநிதி கார் பாலத்தின் கீழிருந்த தண்ணீரில் விழுந்தது.

தண்ணீரில் விழுந்த அவளுக்கு சில நினைவுகள்..

“புகழ் அது ஷாலு தான! அவளை எதுக்கு இந்த ஜானி தூக்கிட்டு வாரான்” ஸ்ரீநிதி கேட்க,

அதன் பின் தான் ஷாலினியை டிக்கியில் போடுவதும், ரிஷி, ரக்சித், யுகமித்ரனை போதையுடன் பின் சீட்டில் அவர்கள் இழுத்து வந்து அமர வைப்பதும், அதன் பின் புகழ் காரை செலுத்தி ஷாலினியை காப்பாற்ற செல்வதும், ஜெகதீஸ் காரை மலைப்பாதையில் செலுத்தும் போது தான் புகழை பார்த்து, அவர்கள் காரை இடித்து தள்ளி பள்ளத்தில் விழ வைத்திருப்பான். ஸ்ரீநிதியை காப்பாற்றி புகழ் பள்ளத்தில் விழுந்திருப்பான்.

இதை எண்ணியவாறு வயிற்றில் கை வைத்து மெதுமெதுவாக கண்ணை மூடினாள் ஸ்ரீநிதி.

சத்தம் கேட்டு வந்து பார்த்த ஆட்கள் தண்ணீரில் குதித்து ஸ்ரீநிதியை காப்பாற்ற, அந்த குடிகார பசங்களுக்கும் அடிபலமாக இருக்கும். அவர்களை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தனர்.

எல்லாருக்கும் தகவல் செல்ல, அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஜோ அனைவரிடமும், “மாமாவிடம் சொல்லாதீங்க. மாமா இதில் வெற்றியடைந்தால் தான் அவருக்கான கனவான சினிமா துறையில் பாட்டு பாடும் வாய்ப்பு கிடைக்கும். அவரோட கனவு தான் என் அக்காவின் கனவும். யாரும் ஏதும் சொல்ல வேண்டாம். அவர் முடித்தவுடன் நானே சொல்றேன்” அழுது கொண்டே கூறினான்.

ஆனால் தனு ஏற்கனவே கால் பண்ணி இருந்திருப்பாள். ரிஷி எடுத்திருக்க மாட்டான். இப்போது அதை எண்ணி அலைபேசியை அணைத்து வைத்தாள்.

தன் மனைவியின் நிலை தெரியாமல் சிங்கப்பூர் இறங்கி நேராக நிகழ்ச்சி நடக்கும் இடம் சென்று தயாராகத் தொடங்கினான். எப்போதும் போல அவன் கண்கள் அலைபாய்ந்தது தன் மனைவியை தேடி. அவள் அவனுக்காக வருவது தெரிந்தும் அவளை பாராதது போல காட்டிக் கொள்வான் ரிஷி.

அதே போல மேடையில் ஏறவும் அவன் கண்கள் அவனது ஸ்ரீயை தேடியது.

“அவள் வரவில்லை என்ற எண்ணம் சோர்வை தந்தாலும் அவள் எனக்காக தன் கனவை விட்டு எங்க கம்பெனியை பார்த்துக் கொண்டிருக்கிறாள்” என்ற எண்ணத்தில் தானாக அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. அவனுக்கான ரிசல்ட் சொல்லும் நேரம் தான் ஜோ அவனை அழைத்து விசயத்தை கூறினான்.

“முதலில் நம்பாத ரிஷி, குழந்தை கலைந்து விட்டது. இன்னும் ஸ்ரீநிதி விழிக்கவில்லை” ஜோ அழுது கொண்டே சொல்லவும் அலைபேசியை விட்டு அதே இடத்தில் கதறி அழுதான். எல்லாரும் அவனை பார்த்து பதறினார்கள்.

அவன் பொருட்களை கூட எடுக்காமல் நேராக ஏர்ப்போர்ட் சென்று விமானம் ஏறி விரைந்து வந்தான் ரிசாத்பவன்.

விசயம் காட்டுத்தீ போல எல்லா இடத்திலும் பரவியது.

கிஷோர் ஜோவை அழைத்து கேட்க, அவன் கூறவும் கிஷோர் வந்தான்.

சற்று நேரத்தில் ஹாஸ்பிட்டல் வந்தவனை பார்த்து, “டேய் மச்சான்” அதிர்ந்து ஜோ அழைக்க, “அண்ணா” தனு திகைத்து பார்த்தாள்.

“புகழ்” அழகி ஓடி வந்து தன் மகனை அணைத்து அழுதார். தர்மேந்திரனும் அவனிடம் வந்து அணைத்துக் கொண்டார்.

“புகழ் நீ உயிரோட தான் இருக்கீயா?” பவிதா அழுது கொண்டே அவனை அணைத்தாள். எல்லாரும் அதிர்ந்து பார்க்க, அமரேசன் அவனிடம் வந்து மண்டியிட்டு அவன் கையை பற்றினார்.

“என்னை மன்னிச்சிருய்யா. நீ சொன்னது போல நான் பிள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். பாரு எப்படி இருக்கான்னு?” ஸ்ரீநிதி இருக்கும் அறையை புகழிடம் காட்டி அழுதார். அழகியும் பனிமலரும் அவரை வெறித்து பார்த்தனர்.

“அண்ணா இன்னும் வரலையா?” புகழமுதன் ரிஷியை கேட்டான்.

“மாமா வந்துட்டு இருக்கார்ட்டா” ஜோ புகழை அணைத்து, “ஏன்டா நீ இல்லைன்னு நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்? அழுதோம். அப்பவே வந்திருக்காலாமேடா?”

“சில சூழ்நிலை தான்டா என்னை வர விடலை” என்று புகழ், ஸ்ரீநிதி இருக்கும் அறையை பார்த்து, “அத்தை டாக்டர் என்ன சொன்னாங்க?” பனிமலரிடம் கேட்டுக் கொண்டே ரிஷியின் குடும்பத்தினரை பார்த்தான்.

“கரு கலைஞ்சிருச்சாம். அவளுக்கும் தலையில் அடிபட்டிருக்கு. அதனால அவ விழித்தால் தான் தெரியும்ன்னு சொன்னாங்க” அழுதார் பனிமலர்.

பார்க்கலாமா?

ம்ம்!

“ஒரு நிமிசம்ப்பா” என்ற மான்விழி கையை இறுக பற்றி முறைத்தார் சந்திரமுகன்.

“சொல்லுங்க ஆன்ட்டி?” புகழ் சந்திரமுகனை பார்க்க, “ஒன்றுமில்லைப்பா. நீ பார்த்துட்டு வா. எங்க நிது நல்லா இருந்தாளே எங்களுக்கு போதும்” பாட்டி கண்ணீருடன் கூறினார்.

கதவிலிருந்து கையை எடுத்து பாட்டியிடம் வந்த புகழ், “கண்டிப்பா உங்க வீட்டு பொண்ணுக்கு ஏதும் ஆகாது. ஆனால் அவளுக்கு சரியாகும் வரை நான் பார்த்துக்கிறேன். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்”.

“என்னோட ஸ்ரீ வாழ்க்கையை சரி செய்யும் பொறுப்பு எனக்கும் இருக்கு. காதல்ன்னு அவ பின்னாடி நான் வர மாட்டேன். அதுக்கு காரணமும் இருக்கு. அவள் காதல் அவளுக்கு கிடைத்து விட்டது. உங்க ரிஷியையும் எங்க ஸ்ரீயையும் சேர்த்து வைப்பது என் கடமை. சரியாக செய்து விட்டு நான் அவளை விட்டு செல்கிறேன்.

இங்கிருக்கும் யாரும் ரிஷியிடமும் ஸ்ரீயிடமும் அவர்களை நான் சேர்த்து வைக்கும் முயற்சியை சொல்லக் கூடாது. வேடிக்கை மட்டும் பாருங்க” கண்ணீரை துடைத்து விட்டு நளினியை பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றான்.

நிரஞ்சன் அழ, அவனை மடியில் போட்டு அமர்ந்தார் கடைசி பாட்டி.

கிஷோர் பேச ஆரம்பித்தான்.

ஜோ, நம்ம நிது திருமணத்துக்கு சிவப்பு ரோஜா பூச்செண்டு வந்ததுல்ல அதை கொடுத்தது நானில்லை. புகழ் தான் அனுப்பி இருக்கான். கோவிலில் வைத்து பூபாலவை அடித்ததும் அவன் தான். ஜெகதீஸ் நிதுவை சூப்பர் மார்க்கெட்டில் கொல்ல வந்த போது காப்பாற்றி அவளை தூக்கி வந்து சந்திரமுகன் சார் ஆபிஸில் விட்டதும் அவன் தான்..

விபத்தில் அவன் பள்ளத்தில் விழுந்தது உண்மைதான். அவனை மலைச்சாதி மக்கள் காப்பாற்றி இருந்திருக்காங்க. எட்டு மாதத்தின் பின் தான் அவனுக்கு உடல்நிலை சரியாகி இருந்திருக்கு. அதற்கு பின் உங்களை பார்க்க வந்திருக்கான். எல்லாரையும் தூரத்தில் இருந்து பார்த்த அவன் ஸ்ரீநிதியை பார்க்கவில்லை. அவனுக்கு பயமாகி போனது.

ஆனால் அவளை மனநல காப்பத்தில் நினைவுகளை மறந்த நிலையில் பார்த்த அவனுக்கு மனம் கஷ்டமானது என்றால் இவன் விழுந்தது கூட தெரியாமல் அந்த நிலையிலும் ரிஷியின் பெயரையே உச்சரித்த ஸ்ரீநிதியை பார்க்க, அவன் காதல் மொத்தமாக சிதறிப் போனது.

அதனால் அவளை சரி செய்ய மட்டும் தான் எண்ணினான். அதன் பின் உங்களிடம் வர எண்ணினான் ஆன்ட்டி. ஆனால் அப்பொழுது ஸ்ரீக்கும் ரிஷிக்கும் மேரேஜ் என்றதும் விலகியே இருந்து கொண்டான். அவன் இவர்களின் திருமணத்திற்கு வந்திருக்கான். உங்களுக்கு தான் தெரியல..

அப்புறம் வர எண்ணிய போது அவனுக்கு ஏதோ பிரச்சனை வந்து விட்டது. அதன் பின் ஸ்ரீயை கொலை செய்ய முயன்றனர். அதனால் வரவில்லை. ஒவ்வொரு விசயமாக விலகிய அவனால் ஸ்ரீயை இந்த நிலையில் தனியே விடக் கூடாதுன்னு தான் வந்திருக்கான் என்று சொல்லி..

அப்புறம் அந்த ஜெகதீஸை கைது செய்ய உதவிய பென்டிரைவ் புகழ் தான் கொடுத்தது என்று கிஷோர் சந்திரமுகனை பார்த்தார்.

அதுமட்டுமல்ல சஞ்சனா பாப்பாவுக்கு உதவியது அவன் தான். அதன் பின் அவளை கவனிக்க அவனுக்கு நேரமில்லை. அதனால் அவன் பாப்பாவை பார்க்க வர முடியவில்லை. நியூஸ் பார்த்து தான் சஞ்சனா பாப்பாவுக்கு நடந்தது அவனுக்கு தெரிய வந்தது கிஷோர் கூறி முடிக்க, ரிஷி அவ்விடம் வந்தான்.

நேராக ஜோவிடம் வந்து, “ஸ்ரீ எங்க? பேபி?” அழுது கொண்டே கேட்டான்.

“மாமா” அவன் தயங்க, தனு அவன் கையை பிடித்து அறைக்கதவை திறந்து அவனை உள்ளே தள்ளி அவளும் சென்றாள். எல்லாரும் உள்ளே சென்றனர்.

ரிஷி அதிர்ந்து புகழமுதனை பார்த்தான்.

“ஜோ புகழ் தான?” ரிஷி கேட்க, புகழ் ரிஷியை பார்த்தான்.

ஸ்ரீநிதியின் இமைகள் அசைந்தது. புகழ் ரிஷியை பார்த்துக் கொண்டே ஸ்ரீநிதி கன்னத்தில் அவனது கைகளை அழுத்தமாக பதித்தான்.

அவள் விழித்து முதலில் வயிற்றை தான் பார்த்தாள். தலையில் பெரிய கட்டுடன் கிடந்தாள்.

பின் புகழை பார்த்து கண்ணை மூடி திறந்து, “புகழ் உனக்கு ஒன்றுமில்லையே! என்னோட பேபி..” அவள் வயிற்றை தொட்டாள். அவள் கையை எடுத்து விட்டு “பேபி இல்லை” கண்ணீருடன் இரு கைகளையும் விரித்தான்.

அழுகை மெதுமெதுவாக தொடங்கி பெரியதாக புகழை அணைத்து கதறி தீர்த்தாள். ரிஷியின் உடலும் உள்ளமும் நடுங்கியது. இதயம் பலமிழந்து போனது. நாற்காலியில் அப்படியே அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு அழுதான்.

அவன் குடும்பமும் ஜோவும் அவனருகே இருக்க, “குழந்தை போனது மட்டுமல்லாமல் தன்னவளும் தன்னை விட்டு சென்று விட்டாளோ?” என்ற பயம் வந்தது.

புகழை பார்க்கவும் தன் மனைவி தன்னிடம் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை சீட்டுக்கட்டு மாளிகை போட மளமளவென சரிந்தது. அதுவும் இருவரின் இந்த அன்னோன்யம் அவன் மனதை பிசைந்தது. போயிட்டா..என்று மனதில் எண்ணி கதறிக் கொண்டிருந்தான்.

ஜோ புகழை பார்க்க, புகழ் ரிஷியை பார்த்து விட்டு ஜோவிடம், “சொல்லாதே!” எச்சரிக்கையுடன் கண்ணை காட்டினான்.

பவிதா, அழகி, பனிமலர் அனைவரும் ஸ்ரீநிதி அருகே வர, புகழ் எழுந்து நகர்ந்து கொண்டான். ஸ்ரீநிதியின் அழுகையில் சந்திரமுகன் பதறி ஜோவை பார்த்தார்.

“ஸ்ரீ இன்றோடு அழுது முடிச்சிரு. நாளையிலிருந்து உன்னோட கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக் கூடாது” கம்பீரமாகவும் அழுத்தமாகவும் பேசினான் புகழமுதன்.

“என்னப்பா இப்படி சொல்ற?” சந்திரமுகன் சினமுடன் கேட்டார்.

“போன உறவை விட நம்முடன் இருப்பவர்களை பார்த்துக் கொள்வது உசிதம் தான அங்கிள்?” அலைபேசியையும் ஜோவையும் பார்த்தான்.

“ஜோ” சந்திரமுகன் அழைக்க, சாரி அங்கிள்..

“ஓ.கே. நல்லா அழும்மா” சந்திரமுகன் கோபமாக சென்று அமர்ந்தார். யாருக்கும் ஏதும் புரியவில்லை.

“உனக்கு என்னடா ஆச்சு? பிள்ளையை பறி கொடுத்துட்டு அழுதுட்டு இருக்கா? நீ வாட்டுக்கு ஏதேதோ பேசுற?” கேட்டார் பாட்டி.

“எனக்கு எம் மருமக முக்கியம்” என்றார் சந்திரமுகன்.

இல்ல அங்கிள், “உங்களுக்கு உங்க கம்பெனி தான் முக்கியம்” வேண்டுமென்றே கூறினான் புகழ்.

“புகழ் என்ன பேசுற?” தர்மேந்திரன் சத்தமிட்டார்.

ஸ்ரீநிதியும், ரிஷியும் அழுவதை விட்டு அவனை பார்த்தனர்.

“எனக்கு கம்பெனி முக்கியமில்லை. எனக்கு எம் மருமக தான் முக்கியம்” பல்லை கடித்தார் சந்திரமுகன்.

“அப்புறம் எதுக்கு அங்கிள்? அவள பத்தி உங்க டீலர்ஸ், ஷேர் ஹோல்டர்ஸ், வொர்க்கர்ஸ், காம்படீடர்ஸ்கிட்ட கூட பெருமையா பேசுனீங்க?”

“என்னப்பா பேசுற? மருமக நல்லா வேலை பார்க்குறான்னு எல்லாரிடமும் பெருமையா பேசி இருப்பார்” மான்விழி அவனை முறைத்து பேசினார்.

“அப்ப உங்க பிள்ள ஜெய்கிரிஷ்…” ஆக்ரோசமாக கேட்டான் புகழமுதன்.

“ஜெய்க்கு என்னடா?” பவிதா கேட்க, “இவர் நம்ம நிதுவை பற்றி பெருமை பேச, எல்லாரும் உம் புருசனை கம்பெனியில டவுனா பார்க்க பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதை அவரால தாங்கிக்க முடியல” புகழமுதன் மேலும் ஜெய்யை முறைத்தான்.

சந்திரமுகன் எழுந்து தன் மகனை பார்த்தார். பவிதா முன் மண்டியிட்ட ஜெய்,

“ஐ அம் சாரி பப்ளிம்மா. நான் வேணும்ன்னே பண்ணலை. எல்லாரும் பேசியதை என்னால தாங்கிக்க முடியல. அதனால தான்” கதறலுடன் ஜெய் பவிதாவை பார்த்தான்.

அதனால… அவள் குரல் ஓங்கியது.

அதனால உம் புருசன் ஜெய்கிரிஷ், நம்ம ஸ்ரீயை கொல்ல ஆளுங்கள அனுப்பி இருக்கான். ஒரு முறை அல்ல மூன்று முறை.

முதல் முறை ஆட்டோவில்..

அடுத்த முறை ரிஷி ஆபிஸில் அவளை விட்டு சென்ற பின், அப்பொழுது அங்கே வந்த துரியனால் ஸ்ரீ காப்பாற்றப்பட்டாள்.

மூன்றாம் முறை ரிஷிக்காக காத்திருக்கும் போது சென்ற பானிபூரியை வாங்க வெளியே வந்து விட்டாள். மறுநிமிடம் அட்டாக் நடந்தது. அங்கே நான் வந்தேன் சீற்றமுடன் கூறினான் புகழமுதன்.

பவிதா உக்கிரமாக தன் கணவனை பார்த்து அவன் சட்டையை பிடித்து எழுப்பினாள்.

“வீ” ஸ்ரீநிதி அழைத்தாள்.

“நிது நீ பேசாத” சத்தமிட்டான் ஜோ.

சந்திரமுகன் அவனருகே வந்து, “நீ என்னோட மகன். என்னை மாதிரி இருப்பன்னு நினைச்சது தப்பா போச்சு. ஏன்டா இப்படி பண்ண?” ஜெய்யை அடித்தார்.

பவிதா அவனை விட்டு நகர்ந்து நின்று கொண்டாள். அவன் தந்தை எல்லார் முன்னும் அடிப்பது கூட அவனுக்கு தெரியவில்லை. பவிதா நகர்ந்து செல்லவும் தான் ஜெய்க்கு மிகவும் வலித்தது.

“பப்ளிம்மா” அவன் கையை நீட்ட, அவள் கண்ணீருடன் அமைதியாக நின்றாள்.