“மறக்க அவங்க என்ன காதலா செஞ்சிட்டு இருக்கா?” அவன் தலையில் குட்டினான் கிஷோர்.
“புகழ் இருந்தா அழகாக நிதுவை சமாதானப்படுத்தி விடுவான். உனக்கு சமாதானப்படுத்த கூட தெரியலை” ஒருவன் சாதாரணமாக பேச, கொதித்தெழுந்தான் ரிஷி.
“அதென்னடா புகழ்? யாருடா அவன்? அவன் அது செய்வான் இது செய்வான்? எல்லாரும் பெருசா பேசுறீங்க? அவள காப்பாத்த அவனை யாரு உயிரை விட சொன்னது? அவளை பார்த்துக் கொள்பவனாக இருந்தால் அவனும் பத்திரமாக இருந்திருக்கணும். ஆனால் அவன் விட்டு போனவன் தான!” சீற்றமுடன் பேசிக் கொண்டே புகழை பற்றி கூறியவனை அடித்தான் ரிஷி.
அனைவரும் ரிஷியை தடுத்து இழுத்து நிறுத்தனர்.
“மாமா என்ன பேசுறீங்கன்னு பார்த்து பேசுங்க” ஜோ சினமுடன் கத்தினான்.
“அவனை பற்றி பேசவும் உனக்கும் கோபம் வருதோ?”
“ஆமா வரும். ஏன்னா இப்பொழுதும் எனக்கு அவன் தான் முக்கியம்” ஜோ சத்தமிட்டான்.
ஓ! என்ற ரிஷி கோபமாக நகர, கிஷோர் அவன் முன் வந்து..ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ..ன்னு கூப்பிட தெரியுது. உன்னோட பொண்டாட்டின்னு உரிமையா பேச தெரியுது. அவளுக்கு என்ன பிடிக்கும்ன்னு உனக்கு தெரியுமா? கத்தினான்.
“ஸ்ரீக்கு என்னை பிடிக்கும்” பழைய திமிறில் ரிஷி பேச,
உன்னை பிடிக்கும். அவளுக்கு என்ன பிடிக்கும்? நீ உன்னோட அகங்காரத்தை பிடிச்சிட்டு இருக்க ரிஷி.
“அவளுக்கு என்ன கலர் பிடிக்கும்? என்ன ஆடை பிடிக்கும்? உணவு, சொந்தங்களில் யாரை பிடிக்கும்? எந்த இடம் பிடிக்கும்?” சொல்லு சீறினான் கிஷோர்.
பதிலளிக்க முடியாமல் நின்றான் ரிஷி.
முதல்ல அவளுக்கு என்ன பிடிக்கும் தெரிஞ்சுக்கோ. அப்புறம் கோபப்படலாம். இது எல்லாமே புகழுக்கு தெரியும்.
இதுமட்டுமல்ல..அவளுக்கு எப்படி பேசினால் பிடிக்கும்? அவள், கோபம், பாசம், காதல், ஆர்வம், திறமை…இன்னும் பலபல புகழுக்கு மட்டும் தான் தெரியும். உனக்கு தெரியுமா? கேட்டான்.
ரிஷி கண்ணீருடன் கிஷோரையும் ஜோவையும் பார்த்தான்.
பெருமூச்சுடன் ஜோ ரிஷி அருகே வந்து, புகழ் சிறு வயதிலிருந்து எங்களுடன் வளர்ந்தவன். நாங்க ஒன்றாக எல்லா இடத்திற்கும் போவோம். படிப்போம். விளையாடுவோம். ஒன்றாக கூட உறங்கி இருக்கோம். வீயும் கூட தான். அதுக்காவெல்லாம் அவன் அதை பயன்படுத்தியதில்லை.
அவன் ஜென்டில் பர்சன். எங்களுக்கு எங்க எல்லார் குடும்பமும் ஒன்று தான். அவனுக்கு எப்படியோ நிது மீது காதல் வந்து விட்டது. நிதுவுக்கு அவன் மீது காதல் இல்லை. அளவு கடந்த அன்பு தான்…
“இதுக்கே கோபப்பட்டீங்கன்னா அவன் இப்பொழுது இருந்திருந்தால்” ஜோ ரிஷியை பார்த்தான்.
ரிஷி மனம் படபடவென அடித்தது. அவன் அடித்தவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அமர்ந்தான்.
“கிளம்புங்கடா. நாம அப்புறம் சந்திக்கலாம்” கிஷோர் அவன் நண்பர்களை அனுப்பி விட்டு ரிஷியிடம் வந்தான்.
“ரிஷி உங்களுக்கு இடையேயுள்ள பிரச்சனை முடியணும்ன்னா முதல்ல நிது பற்றிய அனைத்தையும் தெரிஞ்சுக்கோ. நான் வாரேன்” கிஷோர் ஜோவிடம் தலையசைத்து சென்றான்.
ரிஷி அருகே வந்த ஜோ, சண்டையில் களைந்த அவன் சட்டை, தலையை சரி செய்து விட்டான்.
மாமா அக்காவை புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம். அவ எப்போதும் கஷ்டத்தை வெளியே காட்ட மாட்டாள். பேசும் போது பார்த்து பேசுங்க. வாங்க உங்க வீட்டுக்கு கிளம்பலாம். அவனை அவன் வீட்டில் இறக்கி விட்டான்.
“உள்ள வா” அழைத்தான் ரிஷி.
இருக்கட்டும் மாமா.
“வா…” ரிஷி ஜோவை உள்ளே அழைத்து வந்தான்.
எல்லாரும் அவனை பார்த்து வாயிலை பார்த்தனர்.
“நிதி வரலையாப்பா?” சந்திரமுகன் வாட்டமுடன் கேட்டார்.
“புரிஞ்சிட்டு சீக்கிரம் வந்துருவா அங்கிள். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் ரிஷி மாமா மேல கோபப்படாதீங்க. முடிந்தவரை எல்லாரும் அவருக்கு உறுதுணையா இருங்க” ரிஷியை பார்த்து தலையசைத்து திரும்பினான்.
“பைக்ல்ல வந்தீங்களா?” நளினி கேட்டார்.
“ஆமா நீ எதுல்ல போவ ஜோ? ரிஷி கேட்க, “பேருந்து இருக்கு மாமா. நான் போயிடுவேன்” சந்திரமுகனையும் பாட்டியையும் பார்த்தான்.
“போயிட்டு வாங்க மாப்பிள்ள” சந்திரமுகன் கூற, தட்ட முடியாமல் நின்றான்.
தன்வி வேகமாக அறைக்கு ஓடிச் சென்று அவளது வண்டிச்சாவியை எடுத்து வந்து அவனுடன் நடந்தாள்.
இருவரும் வண்டியில் செல்ல, “நிறுத்து நான் இறங்கிக்கிறேன்”
“வீட்டுக்கு போயிடலாமே!” தனு கேட்க, “பரவாயில்லை. நான் பார்த்துப்பேன்” ஜோ இறங்கி விட்டான்.
“ஜோ” கண்கலங்க தன்வி அவன் கையை பிடிக்க, அவள் கையை எடுத்து விட்டு திரும்பி கூட பாராது நகர்ந்தான்.
“அண்ணா தான தவறு செய்தான்? அவனுடன் பேசுகிறான். நான் என்ன செய்தேன்?” வண்டியை ஓரம் நிறுத்தி அதில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.
தன்வியை தவிர்க்க அவளை பாராது சென்ற ஜோ ஓரிடத்தில் மறைந்து அவளை பார்த்தான்.
நாட்கள் கடந்தது.
குழந்தை நன்றாக இருக்கிறது இருமாதக் கருவா இருக்கு. கவனமா இருங்க என்று மருத்துவர் கூறியதால் ஜோவும் பனிமலரும் ஸ்ரீநிதியை எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டனர். பவிதா மட்டும் தினமும் ஸ்ரீநிதியிடம் சற்று நேரம் பேசி விட்டு செல்வாள்.
“ரிஷி பற்றி ஏதாவது சொல்வாளா?” ஸ்ரீநிதி உள்ளம் துடிக்க, பவிதாவோ ரிஷியை பற்றி ஏதும் கூறவில்லை. ரிஷி ஸ்ரீநிதிக்கு தெரியாமல் மருத்துவமனை செல்லும் போது மட்டும் அவனும் வருவான். மறைந்து கொள்வான். மருத்துவரும் ஜோவும் அவனுக்கு உதவினார்கள்.
இரவு ஸ்ரீநிதி அறைக்கதவு திறந்திருப்பதை பார்த்து லேசாக எட்டிப் பார்த்தான் ஜோ. அவள் வயிற்றை தொட்டு ரிஷியின் ஆடையை அணிந்து குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள். அதை பார்த்து மகிழ்வுடன் உறங்கினான் ஜோ.
மறுநாள் ஜோவும் பனிமலரும் கார்மென்ட்டில் முக்கிய ஆட்களுடன் மீட்டிங்கில் இருந்தனர். வியர்த்து விறுவிறுக்க ஓடி வந்த தன்வி பட்டென அவர்கள் கதவை திறந்தாள்.
ஜோ இருக்கும் நிம்மதியுடன் உள்ளே வந்தவள் அங்கிருந்த குணசேகரனை பார்த்து விட்டு ஜோவை பார்த்து வெளியே சென்றாள்.
“சாரி சார், அந்த மேம் நான் சொல்ல சொல்ல கேட்காமல் உள்ள வந்துட்டாங்க” என்ற பனிமலரின் உதவியாளர் பொண்ணு ஜோவை பார்த்து கூறினாள்.
ஜோ தன் அன்னையை பார்த்தான்.
“ஜோ நீ போ. நான் மீட்டிங் முடிந்து வாரேன்” பனிமலர் கூற, அவன் குணசேகரனை பார்த்துக் கொண்டே வெளியே வந்தான்.
“தனு எங்க?” ஜோ கண்கள் அலை பாய்ந்தது.
“சார் அவங்க போயிட்டாங்க. அவங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்” அழுதுகிட்டே வந்தாங்க.
“அழுதாளா? பிரச்சனையா?” ஜோ சிந்தனையுடன் வெளியே வந்தான்.
“டேய், இந்த பக்கம் போறாடா” ஒருவன் சத்தம் கொடுக்க, சில ரௌடிகள் தன்வியை விரட்டினார்கள். அரிவாளை ஒருவன் அவள் பக்கம் வீச, “தனு” சத்தமிட்டான் ஜோ.
அவள் நின்று ஜோவை பார்க்க, “தலையை குனி தனு” சத்தமிட்டான். அவன் சொல்லவும் அவள் செய்தாள். அரிவாள் கீழே விழுந்தது.
எல்லாரும் ஜோவை சுற்றி வளைத்தனர்.
தனு வேகமாக ஓடி வந்து அவன் கையை பிடித்து இழுத்து செல்ல, “யாரு இவனுக? உன்னை எதுக்கு விரட்டுறானுக?” கேட்டான்.
ராம் வந்தார்.
“அங்கிள்” தன்வி அவரிடம் ஒரு பென்டிரைவ்வை கொடுத்தாள்.
“ஜோ தனுவை பத்திரமா அவளோட பெரியப்பா ஆபிஸில் விட்ரு” அந்த பென்டிரைவ்வை உயர்த்தி காட்டி ஓடினார்.
அவர்கள் அவர் பக்கம் செல்ல, “என்ன நடக்குது? அவருக்கு ஏதாவது ஆனால். அவருக்கு பொண்ணு இருக்கா உனக்கு தெரியாதா?” ஜோ தனுவிடம் சீறினான்.
அவருக்கு ஏதும் ஆகாதுடா..
“என்ன பென்டிரைவ்?”
ஷாலினியை கற்பழித்து கொல்ல முயன்றவர்கள் பற்றிய முழுவிவரம். இது இல்லாமல் தான தப்பி ஓடுனானுக ஜெகதீஸூம் ஜானியும். இப்ப ஆதாரம் இருக்கு..
“எந்த மார்கெட்” சுற்றி பார்த்த தனு கண்ணில் ஸ்ரீநிதி பட்டாள்.
“ஏய், இப்ப தான் போறாங்க. அவங்க இப்படி தனியா சுத்தக் கூடாது. ஜெகதீஸ் கொலைவெறியில் இருக்கான். அண்ணீயோ அண்ணனோ அவன் கையில் சிக்கினால் சாவடிச்சிருவான். வா” ஜோவை இழுத்தாள்.
“அவனுக தான் இங்கு இல்லையே!”
வந்துட்டானுக. அதை விட யுகாவை கொன்னுட்டானுக என்றாள்.
வாட்? அதிர்ந்தான் ஜோ.
அவனுகளோட ப்ரெண்டு தான!
யுகா தான் இந்த பென்டிரைவ்வை ரெக்கவர் செய்தது. என்ன தான் அண்ணா தவறு செய்யவில்லை என்றாலும் சிலர் அண்ணாவை கஷ்டப்படுத்திட்டு தான் இருக்காங்க. அவனுக்காக உதவ யுகமித்ரன் சென்று வீடியோவை ரெக்கவர் செய்து விட்டான். அதான் அவனை கொன்னுட்டானுக.
ரக்சன் எங்க இருக்கான்னு தெரியாம அவனோட அம்மா பிக்ப்பாவிடம் கேட்ட பின் தான் இந்த விசயம் தெரிய வந்தது. ஆனால் பென்டிரைவ் பற்றி பிக்ப்பாவுக்கு தெரியாது. அண்ணா என்ன செஞ்சிட்டு இருக்கான்னு தெரியல.
“ஜோ அண்ணீக்கு ஏதும் ஆகிடாமல் வா” இருவரும் கடைக்குள் வந்தனர். ஸ்ரீநிதி பொருட்களை பார்த்துக் கொண்டிருக்க, இருவரும் தனித்தனியே அவளை தேடினார்கள்.
அவள் அருகே இருந்தும் பார்க்காமல் விட்டு விட்டான் ஜோ.
“வெளிய போயிட்டாங்க போலடா” தனு சொல்ல, “வா வெளிய போய் பார்க்கலாம்” இருவரும் வெளியே வந்தனர்.
அதே நேரம் உள்ளே ஸ்ரீநிதியை கத்தியால் குத்த ஜெகதீஸ் வரும் போது, அவன் கையை திருப்பி தூக்கி போட்டான் கோவிலில் ஸ்ரீநிதிக்கு உதவிய ஹூட்டி போட்டிருந்தவன்.
அவன் ஜெகதீஸூடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க, கிஷோரும் அவன் நண்பர்களும் வந்து, “இவனை நாங்க பார்த்துக்கிறோம். நீ நிதுவை சந்திரமுகன் சார் ஆபிஸூக்கு சீக்கிரம் அழைச்சிட்டு போ” கத்தினான் கிஷோர்.
ஹூட்டி போட்டிருந்தவன் இன்று முகமூடி அணிந்திருந்தான். அவன் ஸ்ரீநிதி கையை பிடித்து வெளியே இழுத்து ஓடினான்.
“என்னால முடியல…” அவள் சோர்ந்து அமர்ந்தாள்.
அவன் சிந்திக்காமல் அவளை தூக்கிக் கொண்டு ஓடினான். அவன் முகமூடியை அகற்றி அவன் யாரென்று பார்க்க முயன்றாள் ஸ்ரீநிதி. அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
ஸ்ரீநிதிக்கு சோர்வாக அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள். பழக்கப்பட்ட வாசனை போல உணர்ந்தாள்.
அவர்களின் பின் ஆட்கள் விரட்ட, அவன் ரிஷி தந்தையின் ஆபிஸில் அவளை விட்டு, காவல் காரரிடம் உள்ளே அழைத்து செல்ல சொல்லி கையசைத்தான். அவர் அவளை பத்திரமா உள்ளே அழைத்து செல்ல, முகமூடிக்காரனை இவர்கள் விரட்டினார்கள்.
“யாரு அவன் எனக்கு உதவியவன்?” என்று உள்ளே வந்தால் செக்யூரிட்டிஸூடன் குடும்பம் மொத்தமும் அங்கே தான் இருந்தனர்.
கேஸ் நடந்து கொண்டிருந்த நீதிமன்றத்தில் பென்டிரைவ் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி. இருபத்து நான்கு மணி நேரத்தில் ஜெகதீஸ் மற்றும் ஜானியை பிடித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைத்தனர்.
ஜோ அவனது வண்டியில் ஸ்ரீநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தான்.
நிது ஷாலு அவ ஊருக்கே போயிட்டா. உனக்கு தெரியுமா? ஜோ கேட்டான்.
ம்ம்! சொல்லீட்டு தான் போனா. என்னடா திடீர்ன்னு கேக்குற?
இல்ல, அவள் கழுத்தில் யார் தாலி கட்டினான்னு தெரிந்தும் அவளும், அண்ணனும் சொல்ல மாட்டேங்கிறாங்க. அவ வீட்டுக்கு போனால் தெரியுமோ? கேட்டான்.
அவன் யாராக இருந்தாலும் ஷாலு ஏமாறாமல் இருந்தால் போதும்.
உனக்கு டெலிவரி முடியட்டும். முதல்ல அவன் யாருன்னு கண்டுபிடிக்கணும்?
ம்ம்! பின்னே தலைகவசத்தை அணிந்து அவர்களை தொடர்ந்து வரும் ரிஷியை பார்த்தாள்.
“அய்யோ கண்டுபிடிச்சிட்டாளோ!” வண்டியை நிறுத்தி விட்டான் ரிஷி.
“சஞ்சு” ஸ்ரீநிதி சத்தமிட, சிக்னலில் காரருகே அழுக்கு ஆடையுடன் இருந்த பொண்ணு ஸ்ரீநிதியை பார்க்க, பசங்க இருவரும் அதிர்ந்து சஞ்சனாவை பார்த்தனர்.
ஸ்ரீநிதி வேகமாக ஓடினாள். சஞ்சனாவும் ஸ்ரீநிதியை பார்க்கவும் கையிலிருந்த புத்தகங்களை போட்டு விட்டு ஸ்ரீநிதியை நோக்கி ஓடி வந்தாள்.
“நிது” சஞ்சனா ஓடி வர, சிக்னல் பச்சை நிறத்தை காட்டவும் வாகனங்கள் செல்லத் தொடங்கியது.
“நோ சஞ்சு” ஸ்ரீநிதி அவள் வேகத்தை அதிகரித்து, நடுரோட்டில் சஞ்சனாவை கட்டியணைத்து அவளை தன்னுள் புதைத்துக் கொண்டாள்.
“அக்கா” ஜோ சத்தமிட்டான்.
பேருந்து ஒன்று திடீரென பிரேக்கை அழுத்தும் சத்தம் கேட்டு ஸ்ரீநிதி நிமிர்ந்து பார்த்தாள். பேருந்தின் முன் இரு கைகளையும் விரித்து அவர்களை மறித்து நின்று கொண்டிருந்தான் ரிசாத்பவன். சஞ்சனா அவனை பார்த்து விட்டு ஸ்ரீநிதியை கட்டிக் கொண்டாள்.
ரிஷி ஸ்ரீநிதியிடம் கையை நீட்டினான். அவள் சுற்றுப்புறம் உணர்ந்து அவனிடம் கையை கொடுத்தாள். “சஞ்சு” ஜோ அவர்களிடம் ஓடி வந்தான்.
“ஓரமா போய் பேசிக்கலாம்” மரநிழலில் ஒதுங்கினார்கள்.
“சஞ்சு” ஜோ அவளை தூக்க அவளை நெருங்கினான். அவள் மேலும் ஸ்ரீநிதியை அணைத்து “வராத வராத” சத்தமிட்டாள்.
“சஞ்சு..” கண்கலங்க ஜோ அழைக்க, “ஜோவை மறந்துட்டியா சஞ்சு?” ஸ்ரீநிதி கேட்க, பதில் கூறாமல் அவளை அணைத்து அழுதாள்.
“சஞ்சனா தம்பி எங்க?” ரிஷி கேட்க, அவனை பார்த்து சற்று முன் நடந்ததை சிந்தித்து, “நீ தம்பிய அவங்க கிட்ட இருந்து அழைச்சிட்டு வந்துரு. நிது நான் உன்னோட இருந்துக்கவா? எனக்கு படிக்க வேண்டாம். தம்பிக்கு வேண்டியதை மட்டும் எனக்கு வாங்கித் தர்றீயா?” கேட்டாள்.
“என்ன சொல்ற? உன்னோட சித்தப்பா, பாட்டி எங்க?” ஜோ கேட்டான்.
சஞ்சனா மீண்டும் ஸ்ரீநிதியை அணைத்து அழுதாள்.
“சஞ்சு தம்பி எங்க?” ஸ்ரீநிதி பதற, அவள் மேலும் அழுதாள்.
ரிஷி சஞ்சனாவை தூக்க, அன்று ஜோவை அடித்ததை போல ரிஷியை அடித்தாள்.
“சஞ்சு தம்பி எங்க?” ரிஷி அவள் கையை தடுத்து பிடிக்க,
“மாமா பாட்டி எங்கள திருச்சி கூட்டிட்டு போய் பணத்துக்கு வித்துட்டா. நான் தம்பியோட தப்பிச்சி இங்க வந்தேன். ஆனால் இங்க இங்க..” ஏங்கி ஏங்கி அழுதாள்.
“என்னாச்சுடி?” ஸ்ரீநிதி பதற, “அமைதியா இரு ஸ்ரீ” என்ற ரிஷி..சொல்லு சஞ்சு? கேட்டான்.
தம்பிய ஆசிரமத்துல்ல விட்டு நானும் அங்கே இருந்தேன். ஆனால் அவங்க என்னை சேர்த்துக்கணும்ன்னா பணம் வேணும்ன்னு சொல்லி வெளியே பத்திட்டாங்க. தம்பிய பார்க்க கூட விடலை.
எல்லாரிடமும் வேலை கேட்டேன். யாருமே உதவ முன் வரலை. ஒருவர் என்னை ஓரிடத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கே ஒரு கிழவன் இருந்தான். அவன் என்னை அங்க.இங்க..அங்க தொட்டான் என்று தொட்டு காட்டினாள் சஞ்சனா. ஜோ பல்லை கடித்து நின்றான்.
யாரும் என்னை தொட்டால் சத்தம் போட்டு அம்மா கத்த சொன்னாங்க. அம்மா சொன்னது போல நான் சத்தம் போட்டேன்.
அப்ப சூப்பர் மேன் மேலிருந்து குதித்து வந்தார். என்னை அந்த கிழவனிடமிருந்து அவனோட ஆளுங்களோட சண்டை போட்டு அழைத்து வந்து தம்பி இருக்கும் ஆசிரமத்தில் விட்டார். அவங்களிடம் பணம் கொடுத்துட்டு போனார்.
பணம் செலவழியவும் அவங்க என்னை துரத்தி விட்டுட்டாங்க. நான் என்ன செய்யணுன்னு தெரியாம இருந்தேன். ஒரு அண்ணா அவங்க கடையில் இருக்கும் புத்தகத்தை கொடுத்து விற்று தர சொன்னாங்க. மற்ற இடத்தில் விற்றால் வாங்க மாட்டேங்கிறான்னு தான் சிக்னல்ல வித்துட்டு இருக்கேன் என்றாள் சஞ்சனா..
ஜோ அதிர்ந்து, “சஞ்சு சூப்பர் மேன் எப்படி இருந்தான்?” .
ஸ்ரீநிதியை அணைத்து ஜோவை பார்த்து, “தெரியல…அவன் முகத்தை மறைத்திருந்தான். ஏன்னு கேட்ட போது..அவனுக்கு காயம் இருக்காம்” என்றாள்.
உடனே ஜோ, “சஞ்சு அவன் நம்ம புகழ் போல இருந்தானா?” கேட்க, ரிஷி அதிர்ந்து இருவரையும் பார்த்தான்.
“தெரியல” சஞ்சனா கூற, ஸ்ரீநிதிக்கு கண்ணீர் வந்து விட்டது.
“உனக்கு உதவியவங்க எங்க இருக்காங்க? அவரை பார்க்கலாமா?” ஜோ பேச்சை மாற்ற, ரிஷி தனியே சென்று அமர்ந்து கொண்டான்.
ஸ்ரீநிதி அவனை பார்க்க, “மாமா வரலையா?” சஞ்சனா கேட்டாள்.
ஏதும் சொல்லாமல் சஞ்சனா அருகே வந்தான் ரிஷி. பின் தான் ஜோ உணர்ந்து ரிஷியிடம் பேச வந்தான்.
“எதுவும் வேண்டாம்” வண்டியை கிளப்ப, சஞ்சனா ஜோ அருகே கூட செல்லவில்லை. அவனுக்கு கஷ்டமாகிப் போனது. உதவியவரை பார்த்து நன்றி கூறி விட்டு, சஞ்சனாவின் குட்டித்தம்பி நிரஞ்சனை பார்க்க சென்றனர்.
அங்கே போலீஸார் வந்து ஆசிரமத்தில் வேலை பார்ப்பவர்களை கைது செய்து ஓனரை வர வைத்து பேசிக் கொண்டிருந்தனர்.
“டாட், எனக்கு ஒரு உதவி வேண்டும் என்று அந்த கிழவன் யார்?” சஞ்சனா அடையாளம் சொன்னதை வைத்து தேடச் சொன்னான்.
“என்ன விசயம்? எதற்கு?” என்று ரிஷி கூறாத நிலையிலும் சந்திரமுகன் உதவவும் அவ்விடத்திற்கு போலீஸாருடன் சென்றனர்.
சந்திரமுகன் அவ்விடம் வந்து திகைத்து நின்று விட்டார்.