தாரகை 29

கதவை திறக்கவும், “எப்படியாவது என்னோட ஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” வேகமாக அறை முன் வந்தான் ரிஷி.

ஸ்ரீநிதி கையில் பையை பார்த்து, “ஸ்ரீ எங்க போற? “மனதில் உள்ள வேதனை, பதட்டம், வலியுடன் கேட்டான்.

அவனை நகர்த்தி அவன் பைல்லில் இருந்து விவாகரத்து பத்திரத்தை அவன் கையில் திணித்து, “உங்களுக்கு தேவையானதை கொடுத்துட்டேன். இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” கீழே வந்தாள்.

“நிதும்மா எங்க போற?” பாட்டி அவளிடம் வந்தார்.

“எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. அவர் என்னை தவறாக பேசியதுமில்லாமல் இது அவர் குழந்தை இல்லைன்னு சொல்லீட்டார். அதுவே சரியாக இருக்கட்டும்” கண்ணீரை துடைத்த ஸ்ரீநிதி,

“சார்” சந்திரமுகனிடம் வந்து, “நான் சொன்ன பேச்சு மாற மாட்டேன். ஒரு விசயத்தை மட்டும் மாத்தி இருக்கேன். அவரது மியூசிக் துறையில் அவர் வெற்றியடையும் வரை நான் உங்க கம்பெனி பொறுப்பை பார்த்துக்கிறேன்” அவர் கையில் ஒப்பந்தம் ஒன்றை திணித்தாள்.

ஜெய் சார், இது உங்களுக்கு…

“அவர் வெற்றியின் பின் நான் பார்த்துக் கொள்ளும் அனைத்து கம்பெனி பொறுப்புகளும் உங்க பெயருக்கு நேராக வந்து விடும் பிராபிட்டும் சேர்த்து…” அவனிடம் ஒப்பந்தத்தை கொடுத்து, தன் பையை கீழே வைத்து பவிதா கையை இழுத்து நேராக சமையலறை சென்று பொருட்களை காட்டினாள்.

“பெரிய மேம் சமையல் செய்யும் போது நீ ப்ரீயா இருந்தால் அவருக்கு இடையிடையே உதவு”.

அவளை பாட்டி அறைக்கு இழுத்து சென்று, “சரியாக இரவு ஒன்பது மணிக்கு பாட்டிக்கு இந்த மாத்திரைகளை சாப்பிட்ட பின் கொடுக்கணும்” ஒவ்வொன்றாக எடுத்து பவிதாவிடம் கொடுத்து விளக்கினாள்.

“ஸ்ரீ” பவிதா அவள் கையை இறுக பிடிக்க, அவள் கையை எடுத்து விட்டு நளினி அறை முன் வந்து கதவை தட்டினாள்.

நளினி கதவை திறக்கவும் “சாரி ஆன்ட்டி. நான் கிளம்புகிறேன்”

பத்திரமா போயிட்டு வாம்மா..

“வர மாட்டேன்” தலையசைத்தாள்.

கண்ணீருடன் நளினி அவளை பார்க்க, தனுவை அவர் முன் வந்து நிறுத்தி, “தனு உன்னோட அறை இனி இதுதான்” நளினி அறையை காட்டினாள். “அம்மாவை நல்லா பார்த்துக்கோ” அணைத்தாள்.

தன்வி அவளை நகர்த்தி, “சாரி நிது..எல்லாம் என்னால தான். ஜோவோட தனியா இருந்திருந்தால் நிம்மதியாகவாது இருந்திருப்ப? இப்படி உன் வாழ்க்கை பாழாக நானும் காரணமாகிட்டேன்” அழுதாள்.

இல்ல தனு, என் விருப்பப்படி தான திருமணம் நடந்தது. ஒன்றுமில்லை. நீ எப்ப எல்லாரிடமும் விசயத்தை சொல்லப் போற? தனு கன்னத்தை தட்டினாள்.

தன்வி ஸ்ரீநிதியை இமைக்காது பார்த்தாள்.

“இனி என்ன? ஜோ என்னை பார்க்க கூட வர மாட்டான்” மனம் சிதறியது. அவள் காட்டாமல் புன்னகைக்க முடியாமல் புன்னகைத்தாள்.

“சார்…” மீண்டும் சந்திரமுகனிடம் வந்து, “சும்மா அவரை திட்டிக்கிட்டே இருக்காதீங்க. அவருக்கு விருப்பமில்லாத திருமணம் தான? அவர் வெளிய வந்திருவார். அவர் கனவு யாராலும் பாழாகக் கூடாது” ஸ்ரீநிதி கூற, மான்விழி ஓடி வந்து ஸ்ரீநிதியை அணைத்து அழுதார்.

என்னை மன்னிச்சிருடா. என்னை போல ரிஷிக்கும் அவசர புத்தி. அதான் நாங்க புரியாம வார்த்தையை விட்டுட்டோம்.

“இருக்கட்டும் மேம்” ஸ்ரீநிதி ரிஷியை பார்க்க, கண்ணீருடன் அவள் அனைவரிடமும் பேசியதை பார்த்து அந்த விவாகரத்து பத்திரமுடன் வேகமாக அவளிடம் வந்தான்.

“நிதும்மா பாட்டியை விட்டு போகப் போறீயா?”

“அதான் உங்களுக்கு உங்க குடும்பம் இருக்காங்களே!”

வேகமாக வந்த ரிஷி பேச்சு தொண்டையில் சிக்க, பின்னிருந்து ஸ்ரீநிதியை அணைத்தான். சினமுடன் ஸ்ரீநிதி ரிஷியை தள்ளினாள்.

“ஸ்ரீ” அவன் கண்ணீருடன் அவளை நெருங்க, “பக்கத்தில வர வேண்டாம்” கத்தினாள்.

எனக்கு நடந்தது தெரியாது ஸ்ரீ. நீ சொல்லி இருக்கலாமே? எத்தனை முறை கேட்டேன்.

“என்ன சொல்லணும்? குடிபோதையில் நீ என்னுடன் படுத்தன்னா? ஒரு வேலை நான் சொன்ன பின் நீ என் மீது தவறான பழியை போட மாட்டன்னு என்ன நிச்சயம்?”

நான் செய்ய மாட்டேன் ஸ்ரீ.

“ரிஷி சார், நீங்க இதுக்கு முன் பொண்ணுங்களிடம் நல்லாவே பேசி இருக்கீங்க. உங்களோட தற்பெருமை இருக்கே! அதனால பொண்ணுங்க கஷ்டப்பட்டிருக்காங்க. உங்களுக்கு எப்படி அது தெரியும்? புரியும்? என்னை விட்ருங்க” அவள் நகர்ந்தாள்.

அவளை மீண்டும் பின்னிருந்து அணைத்து, “சாரி…போகாத ஸ்ரீ. நீயில்லாமல் என்னால இருக்க முடியாது. காலை வித்தியாசமாக உணர்ந்திருக்கேன். ஆனால் எனக்கு எதுவும் புரியலை” அவள் முன் வந்து விவாகரத்து பத்திரத்தை கிழித்து எறிந்து விட்டு, “போகாத ஸ்ரீ” ஸ்ரீநிதி காலில் விழுந்தான்.

“ரிஷி” அவள் சத்தமிட, “அடிச்சிட்டுரு…என்னை திட்டு. நான் தவறாக பேசியதற்காக தண்டனை எதுவானாலும் கொடு. நான் ஏத்துக்கிறேன். விட்டுப் போகாத ஸ்ரீ” அழுதான் ரிஷி.

“என்னை விடு” அவனை நகர்த்தினாள்.

உன்னோட வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது தான்னு நான் நம்புறேன். நானே எல்லாரிடமும் சொல்றேன்..

அவன் கன்னத்தில் பளாரென அறைந்து, “கொஞ்ச நேரம் முன்னாடி தான் உன்னுடையதில்லைன்னு சொன்ன? இப்ப உன்னுடையதுன்னு சொல்ற? என்னை பார்த்தால் உனக்கு அவ்வளவு கேவலமாக தான் தெரியுதா?” கத்தினாள்.

புன்னகையுடன் அங்கே வந்த ஜோ, சஞ்சனா கையிலிருந்த இனிப்பை கீழே விட்டனர்.

“இல்ல ஸ்ரீ. குடி போதையில் தெரியாமல நடந்துருச்சு . என்னை விட்டு போகாத ஸ்ரீ” அவளை இறுக அணைத்தான்.

“என்னை விடு. போகணும்” ஸ்ரீநிதி சொல்லிக் கொண்டே ஜோ, சஞ்சனாவை பார்த்து ரிஷியை தள்ளி விட்டு ஜோவிடம் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

ஜோ தன்வியை பார்க்க, அவள் உதட்டை கடித்து கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

ஜோ அலைபேசி ஒலிக்க, “ஜோ இந்த மாமாவை நான் என்ன செய்றேன் பாரு”  ரிஷியின் காலில் தன் கைகளால் குத்தினாள் சஞ்சனா.

அலைபேசியை பார்த்து, அதை எடுத்து அந்தப் பக்கம் பேசியவர் கேட்ட ஜோ தடுமாற்றத்தில் வியர்த்து ஒழுக நிற்க, அவனது அலைபேசி கீழே விழுந்து சில்லுசில்லாய் நொருங்கியது.

எல்லாரும் அவனை பார்க்க, அவன் அசையாது நின்றான். ஸ்ரீநிதி அவனை பார்த்து, “என்னாச்சுடா?” கேட்டான்.

நி..நி..து..அ..அ..அ..அக்கா..அ…க்கா..எச்சிலை விழுங்கி சஞ்சனாவை பார்த்தான். கண்ணீர் நிற்காமல் வந்தது ஜோவிற்கு.

“என்னடா சொல்லித் தொலை” பவிதா அவனை உலுக்க, “சஞ்சு அம்மா.. இறந்துட்டாங்களாம்” என்றான்.

எல்லாரும் சஞ்சனாவை பார்த்தனர்.

“ஜோ” அவள் அவனிடம் ஓடி வந்தாள்.

“தம்பி நல்லா இருக்கான். அம்மா நல்லா இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாங்க” அழுதாள்.

ஜோ அவளை துக்க, அவள் பயத்தில் அவனை அடித்தாள் அடித்தாள் அடித்துக் கொண்டே இருந்தாள். அவனும் வாங்கிக் கொண்டான். சோர்வுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“தம்பியா?” பவிதா கேட்க, ஆமா அக்காவுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கு. அதை சொல்ல தான் என்னோட வந்தா. ஆனால் இப்ப ஹார்ட் அட்டாக் வந்திருக்காம். இவளோட பாட்டி வந்திருக்காங்களாம்..

“வா போகலாம்” ஸ்ரீநிதி அவன் கையை பிடிக்க, ரிஷி ஸ்ரீநிதி கையை பிடித்தான்.

“ரிஷி” சந்திரமுகன் சத்தமிட, “டாட் ஸ்ரீ” கண்ணீருடன் அவளை பார்த்தான்.

“அவ போகட்டும்” அவர் கூற, ஜோ அதிர்ந்து அவரை பார்த்தான். அவர் கண்ணை மூடி திறந்தார்.

ஜோ உறுதியுடன் ஸ்ரீநிதி கையை பிடித்து சஞ்சனாவை தூக்கிக் கொண்டு சென்றான். தன்வி கண்ணீருடன் அழுது கொண்டே அவளறைக்கு ஓடினாள்.

“அத்த, மாமா நானும் போகணும்” என்றாள் பவிதா.

“நானும் வாரேன் பப்ளிம்மா” ஜெய் கூற, சந்திரமுகன் தன் மகன்கள் கையை பிடித்து, “போயிட்டு வாம்மா. பாட்டியோட போ. நாங்க எல்லாரும் பின் வாரோம்” என்று சொன்னார்.

தன் தந்தையின் கையை உதறிய ரிஷி அவனறைக்கு வேகவேகமாக ஓடினான்.

பாட்டி அவனை பார்த்துக் கொண்டே பவிதாவுடன் சென்றார்.

அறைக்கு வந்த ரிஷி எல்லா இடத்தையும் களைத்து எதையோ தேட, அவன் ஸ்ரீயின் ஆடைகளை பார்த்து மீண்டும் அதற்குள்ளும் தேடினான்.

எதையும் வேஸ்ட் செய்ய மாட்டேன்னு ஸ்ரீநிதி கூறியதை எண்ணி அவளது முதலிரவு புடவையை தேடினான். அதை கண்டும் பிடித்தான்.

“மாம்” வீடே அதிரும் வண்ணம் கத்தினான்.

எல்லாரும் வர, மான்விழியை மட்டும் உள்ளே இழுத்து, அவரிடம் புடவையை காட்டி, “மாம் இது ஸ்ரீயோட முதலிரவு புடவை”.

ஆமாடா, பாட்டி எடுத்தது..

“மாம்” தயக்கமுடன்.. இரத்தக்கறையை காட்டினான்.

“பாவி…ராஸ்கல் புள்ளைய எப்படி கஷ்டப்படுத்தி இருக்க?” மான்விழி அழுது கொண்டே அவனை அடித்தார்.

“மாம், இதுனால அவளுக்கு பிரச்சனை வருவா? என்னோட ஸ்ரீ நல்லா தான இருப்பா?”

தலையில் அடித்து தரையில் அமர்ந்து அழுத மான்விழி, “ஒரு பொண்ணு முதல் முறை தன் கற்பை இழக்கும் போது தனக்குரியவனுக்கு மனமுவந்து கொடுக்கணும்.

முந்தைய காலத்தில் இரத்தம் வருவதை வைத்து தான் பொண்ணு கன்னித் தன்மையுடன் இருந்திருக்கிறாள்ன்னு நிரூபிப்பாங்க. ஆனால் இங்க உன்னோட பொண்டாட்டி அதை நிரூபிக்க தான் இதை பாதுகாப்பாக துவைக்காமல் வச்சிருக்கா” அழுதார்.

“மாம் நான் இப்ப என்ன பண்றது? நான் மன்னிப்பு கேட்டால் ஸ்ரீ ரொம்ப கோபப்படுறா..”

“என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது?” நெஞ்சை பிடித்துக் கொண்டு, “இதை வெளியே சொல்ல முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா?” ஸ்ரீநிதிக்காக வருந்தினார் மான்விழி.

“விழி” சந்திரமுகன் சினமுடன் அழைத்தார்.

தன் மகனை முறைத்து விட்டு தன் கணவரிடம் சென்றார் மான்விழி.

“வா போகலாம்” அவர் மனைவி கையை பிடித்து, அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ரிஷியை முறைத்து சென்றார்.

ரிஷியும் சஞ்சனா வீட்டிற்கு வந்தான். அந்த குட்டிப்பொண்ணு சஞ்சனா வாய்க்கு வாய் “வாம்மா..வாம்மா..நீ இல்லாமல் எனக்கு யாரும்மா இருக்கா?” அம்மாவை அணைத்து கதறிக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீநிதி கையில் குழந்தையுடன் ஓரமாக அமர்ந்திருந்தாள். ரிஷியும் அவளருகே சென்று அமர்ந்தான். அவள் எந்த உணர்வும் இல்லாது குழந்தை, தாய் இருவரின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நளினி ரிஷியிடம் வந்து, “வெளிய வா ரிஷி. இங்க பிரச்சனை வேண்டாம்” என்று கூறி அவனை வெளியே அழைத்து சென்றார்.

சஞ்சனா பாட்டியோ வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம். கைக்குழந்தையை யாரு பார்த்துப்பா? ஆட்களிடம் கதையளக்க, ஜோ சினமுடன் பல்லை கடித்து அவரருகே செல்ல, ராம் அவன் முன் வந்து, “வேண்டாம்” அவன் கையை இழுத்து அவ்விடம் விட்டு நகர்த்தி அழைத்து வந்தார்.

நடப்பதை பார்த்த ரிஷியோ பவிதாவை அழைத்தான்.

என்ன?

அந்த பாட்டி யாரு?

அது அக்காவோட மாமியார்..

“சஞ்சனா இனி?” அவன் கேட்க, “ஏன் நீ கூட்டிட்டு போகப் போறீயா?” அவள் பட்டென கேட்க, “பவி” சத்தமிட்டார் அமரேசன்.

“தாத்தா, நீங்க எதுக்கு வந்தீங்க? சஞ்சுவிடம் தான் அதிகம் பேச மாட்டீங்கல்ல?” அவள் கேட்க, அவர் அமைதியாக இருந்தார்.

ரிஷி எழுந்து இறந்த சடலத்தின் முன் வந்து அமர்ந்தான்.

“ரிஷி” மான்விழி அழைக்க, “மாம் இவங்கள பார்த்துட்டு வாறேன். இவங்க எனக்கு தேவையான விசயங்களை சொன்னாங்க. அதுக்கு நன்றி சொல்லீட்டு வாரேன்” ஸ்ரீநிதியை பார்த்தான். அவளும் இவனை பார்த்தாள்.

அன்று சஞ்சனா அம்மா குழந்தை வயிற்றில் இருந்தால் செய்ய வேண்டியது, அறிகுறிகள் அனைத்தையும் கூறி இருப்பார். கண்ணீருடன் அவரை பார்த்து, “அக்கா” அழைத்தான்.

அழுது கொண்டிருந்த சஞ்சனா அவனை பார்த்தாள்.

“எனக்கு உன்னை மாதிரி ஒரு அக்கா இருந்திருந்தால் நான் தவறானவனாக யாருக்கும் தெரிந்திருக்க மாட்டேன். அன்று நான் உன்னை பார்த்த போது நீ இருந்த அதே நிலையில் தான் ஸ்ரீ இருக்கா. என்னால முடிந்தவரை அவளை நல்லா பார்த்துக்க முயற்சிப்பேன்..” சஞ்சனா அம்மாவின் சவப்பெட்டியில் கையை வைத்தான்.

ஸ்ரீநிதி அவனை சினமுடன் பார்த்தாள். ஆனால் ஏதும் பேசவில்லை. பனிமலர் அனைவரையும் கவனித்தாறே தவிர யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

“ரிஷி வா” ஜெய் அவனை வீட்டிற்கு அழைத்து சென்றான். காரியம் முடிந்து பாட்டியின் கையில் சஞ்சனாவும், குழந்தையும் ஒப்படைக்கப்பட்டது. விவரமாக முதலிலே ஸ்டே ஆர்டர் வாங்கிட்டாங்க சஞ்சனாவின் சித்தப்பா.

மனமில்லாமல் இருவரையும் பனிமலர் அவர்களுடன் அனுப்பி வைத்தார். ஜோவோ திண்ணையிலே அமர்ந்திருந்தான்.

தன்வி அவனருகே வந்து அவன் கையை பிடிக்க கையை உதறி, “என்னை பார்க்க வராத” வேகமாக அவன் வீட்டில் அவனறைக்குள் புகுந்து கொண்டான். தன்வி அவள் வீட்டிற்கு சென்றவும் அறைக்கு ஓடினாள். எல்லாரும் பார்த்தனர். யாரும் தடுக்கவில்லை.

பனிமலர் தன் மகளிடம், என்ன பிரச்சனை? ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. ஸ்ரீநிதியும் எதுவும் சொல்லவில்லை. இருவரும் அமைதியாக இருந்தனர்.

ஜோ ஸ்ரீநிதியை பார்த்து, “என்ன பண்ணப் போற?” கேட்டான்.

என்ன பண்ணனும்? எப்போதும் போல வொர்க்கிற்கு போகணும்.

அப்ப உன்னோட டிசைனிங் கோர்ஸ்..

பார்க்கலாம்..

அம்மா, நிதுவை ஆபிஸ்ல்ல விட்டு நாம தினமும் கார்மென்ட்ஸூக்கு போகலாம்.

“சரி” அமர்ந்து கொண்டார் பனிமலர்.

அன்றைய இரவு யாராலும் உறங்க முடியாத இரவாகிப் போனது.

ரிஷி அவனறையில் ஸ்ரீநிதி இல்லாமல் தவித்து படுக்கை அருகிலே அமர்ந்திருந்தான் அவள் நினைவுகளுடன்.

நளினியை கட்டிக் கொண்டு கண்ணீருடன் படுத்துக் கொண்டாள் தன்வி. ஜோவின் கோபம் புரிந்தாலும் அவனுடன் பேச எண்ணினார் நளினி.

“ஏங்க, நம்ம மருமக சொன்னது சரிதான். நம்ம ரிஷி இப்படி இருக்க காரணமே நாம தான!” மான்விழி கண்கலங்க கணவனை ஏறிட்டார்.

ம்ம்! என்றாரே தவிர அவர் ஏதும் பேசாமல் படுத்து விட்டார்.

ஸ்ரீநிதி அவளறைக்கு சென்று ரிஷியின் சட்டையை அணிந்து கொண்டு வயிற்றில் கை வைத்து குழந்தையிடம் பேசினாள். அவனருகே இல்லாமல் அவளும் உறங்கவில்லை. இந்த ஆறு மாதங்களும் ஒருவரை ஒருவர் அணைத்து உறங்கியதில் பழக்கம் விடாமல் அவனுக்காக ஸ்ரீநிதியின் உள்ளம் ஏங்கியது. அவன் பேசியதை வேண்டுமென்றே இழுத்து கொண்டு வந்து கண்ணை மூடி படுத்தாள். உடல் சோர்வில் உறங்கி விட்டாள்.

காலை எழுந்து வந்த ஸ்ரீநிதியை பார்த்து, “ஹாஸ்பிட்டல் போகணும். தயாராகு. நான் மாமாவையும் அழைக்கிறேன்” என்றான் ஜோ.

“மாமாவா? எந்த மாமா?” அவள் கேட்க, பனிமலர் அவளை முறைத்தார்.

“நிது, உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையில குழந்தை பாதிக்கப்படக் கூடாது” பனிமலர் சத்தமிட்டார்.

“அதுக்கு தான்ம்மா அவர் வேண்டாம்ன்னு வந்துட்டேன். என்னிடம் பேசியது போல அவன் தன் பிள்ளை இல்லைன்னு வாய் தவறி வந்து விட்டாலும் எம் பிள்ளை என்னாவான்? அவனிடம் நான் என்ன கூறுவது?” கண்ணீருடன் கேட்டாள்.

“இனி அவ்வாறு நடக்காது” ரிஷி உள்ளே வந்தான்.

அம்மா, இவரை போல சொல்லுங்க இல்லை நான் இங்கேயும் இருக்க மாட்டேன்.

ஜோ சினமுடன், “எதுக்கு வந்தீங்க? வெளிய போங்க”.

நான் எதுக்கு வெளிய போகணும். நான் போக மாட்டேன். ஸ்ரீ நீ என்னிடம் நடந்ததை கூறி இருக்கலாம். எனக்கு நடந்த எதுவும் தெரியாது. போதையில் தவறாக நடந்து கொண்டேன் தான். அதுக்காக…விட்டு வந்துட்ட?

“ரிஷி வெளிய போங்க” சீறினாள்.

ப்ளீஸ் ஸ்ரீ, புரிஞ்சுக்கோ..

என்ன புரிஞ்சுக்கணும்? எல்லார் முன்னாடியும் என்ன பேசுனீங்க? என் வயிற்றில் வளரும் குழந்தை உங்களுடையது இல்லை என்றால் நான்..அவள் பேசும் முன் அவள் வாயை அடைத்து..

புரியாமல் கோபத்தில் பேசிட்டேன் ஸ்ரீ. மன்னிக்க மாட்டாயா?

முடியாது. வெளிய போங்க..

“என்னாலும் முடியாது. நீ என்னுடன் வராமல் நானும் போக மாட்டேன்” ரிஷி வெளியே சென்று அவனது லக்கேஷை இழுத்து வந்து அவள் அறைக்கதவை திறந்து உள்ளே வைத்தான்.

பனிமலரும் ஜோவும் ரிஷியை திகைத்து பார்த்தாலும் நிதுவுக்காக நம்ம வீட்ல தங்கப் போறாரா? மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

ஸ்ரீநிதி உள்ளே சென்று அவன் லக்கேஜை இழுத்து வந்து வெளியே ஹாலில் போட்டாள்.

இங்க பாருங்க. நம்ம பிரச்சனை வெளிய தெரிந்தால் அதிக பாதிப்பு உங்களுக்கு தான். அதனால அமைதியா போயிடுங்க என்றாள்.

“முடியாது. ஜோ நான் உன்னறையில் தங்கிக் கொள்கிறேன்” அவனை பார்த்தான் ரிஷி.

“வேண்டாம் மாப்பிள்ள, நீங்க ஒரு நாள் தங்கினால் ஒன்றுமில்லை. தினமும் என்றால் பாக்குறவங்க உங்களை ஏதாவது சொல்லுவாங்க” பனிமலர் தடுத்தார்.

“ஆன்ட்டி, ஸ்ரீயை என்னோட வரச் சொல்லுங்க. நான் பேசியது நடந்து கொண்டது எல்லாமே தவறு தான். அதுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” மண்டியிட்டான்.

பனிமலர் ஸ்ரீநிதியை பார்க்க, அவள் முகத்தை திருப்பினாள்.

மாப்பிள்ள, நீங்க கிளம்புங்க. அவ வருவா. ஆனால் கொஞ்சம் பொறுமையா காத்திருங்க. நேரம் எடுக்கும்.

“என்னால முடியாது. அவள இப்பவே வர சொல்லுங்க” பிடிவாதமாக ரிஷி நிற்க சினமுடன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் ஸ்ரீநிதி.

ரிஷிக்கு முகத்தில் அடித்தாற் போல இருந்தது. உறைந்து அவளை பார்த்தான்.

ஜோ ஸ்ரீநிதி அறையை வெறித்தவாறு பார்த்து விட்டு, “அம்மா நீங்க இருங்க. நாங்க வெளிய போயிட்டு வாரோம். வந்த பின் அவளை மருத்துவமனையில் காட்டலாம்” ரிஷி கையை பிடித்து இழுத்து சென்று “பைக்கை எடுங்க மாமா” என்றான்.

ரிஷி கண்கலங்க ஜோவை பார்த்தான்.

“சின்னப்பையன் மாதிரி அழாதீங்க மாமா. எனக்கு எரிச்சலா இருக்கு. பேசுவதை பேசிட்டு இப்ப பச்சபுள்ள மாதிரி மூஞ்சிய வைச்சா எனக்கே கோபம் வருது. அவ கத்த தான செய்வா? கிளம்புங்க” சத்தமிட்டான். இருவரும் ஒரே பைக்கில் சென்றனர்.

“நிறுத்துங்க” பூங்கா ஒன்றில் நிறுத்தி “வாங்க..” ஊஞ்சலை காட்டி அமர சொன்னான் ஜோ.

இதிலா? முகம் சுளித்தான் ரிஷி.

முடியாதா? அப்ப கிளம்புங்க..

“இல்ல இல்ல…இங்கேயே உட்காருகிறேன்” ரிஷி அமர, அருகே இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான் ஜோ.

“ஏன் இப்படி எதையும் புரிஞ்சுக்க முடியாம இருக்கீங்க?” ஜோ கேட்டான்.

என்ன?

இல்ல, அக்காவிடம் குடித்து விட்டு தவறாக நடந்தது கூடவா மறுநாள் நினைவில் இல்லை..

ஆமா, எப்போதும் நினைவு வந்திருமே! எல்லாம் அந்த ஆருத்ராவால்..

தலையில் அடித்த ஜோ, “எப்போதும் அருந்தும் மதுபானமானாலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியலையா?”

பாவமாக முகத்தை வைத்தான் ரிஷி.

உன்னை பார்த்து நிது பேச பயந்தா பாரு. அவளை சொல்லணும்..

ஸ்ரீ என்னுடன் பேச பயந்தாளா?

ஆமா, திமிறா இருந்தால் பல்லை காட்டிக் கொண்டு காதலை சொல்ல முடியுமா?

அப்பாவியாக முகத்தை வைத்தான்.

ஹப்பா..இப்பவே கண்ண கட்டுதே!

மாமா, அவளுக்கு நேரம் கொடுங்க. அவ கர்ப்பமா இருக்கா. அவ முன்னாடி வந்து அவள டென்சன் பண்ணாம உங்களோட வேலையை பாருங்க..

டேய், அவ என்னோட பொண்டாட்டி..

துரைக்கு இப்ப தான் பொண்டாட்டின்னு தெரியுதோ? என்ற குரலில் விழுக்கென நிமிர்ந்தான் ரிஷி. அவனை கொலைகாண்டில் வெறித்துக் கொண்டிருந்தான் கிஷோர்.