ஸ்ரீநிதி கம்பெனி வேலைகளை திறம்பட செயலாற்றி வந்தாள். சந்திரமுகனுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. கம்பெனியின் போர்டு மெம்பர்கள் ஸ்ரீநிதியை பாராட்டினார்கள். கம்பெனி ஆட்களிடமும் கோபப்படாமல் நன்றாக வேலையும் வாங்கி, அவர்களின் பிராஜெக்ட் உயர்நிலைக்கு சென்றது.
சந்திரமுகன் தன் மகன் ஜெய்யை விட ஸ்ரீநிதியை பற்றி அனைவரிடம் பெருமையாக பேசினார். ஜெய்க்கு ஸ்ரீநிதி மீது சினம் துளிர் விட்டது.
அன்று விடுமுறை நாள். எல்லாரும் வெளியே சென்றிருக்க, ஸ்ரீ சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள்.
ரிஷியுடன் உள்ளே வந்த தன்வி, “அண்ணா உனக்கு சத்தம் கேட்குதா?” கேட்டுக் கொண்டே சமையலறைப்பக்கம் வந்தனர்.
“தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்க்கிறேன் அன்பே!
சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினால்
உனக்கது புரிந்ததா அன்பே!
என் மனம் காதலின் வேறென ஆகுமோ
கைகளில் சேருமா அன்பே!”
பாடலை மனமுருகி ஸ்ரீநிதி பாடிக் கொண்டே பொரியலை கிளறிக் கொண்டிருந்தாள்.
“அட..அட..அண்ணீ..என்ன வாய்ஸ்?பேசாம.. அண்ணாவோட சேர்ந்து சிங்கராகிடுங்க” தன்வி கேலியுடன் ஸ்ரீநிதியை பின்னிருந்து அணைத்தாள்.
“உன்னோட அண்ணாவோட நானா? அவர் அளவுக்கு எனக்கு பாட வராதும்மா” தன்வி கையை எடுத்து விட்டாள்.
அதுவும் சரிதான். ஆனால் என் அண்ணனுக்கு மூளையேயில்லை. கொஞ்சமாவது கிச்சன் ரொமான்ஸ் பண்ணத் தோணுதா பாரு. என்னோட அண்ணீ தன் அண்ணாவை எண்ணி உருகி உருகி பாடல் பாடுறாங்க..
நீ வேற. தனியா இருக்குற மாதிரி இருந்தது. அதான் பாடல் பாடினேன்.
“அப்ப ஒன்றுமில்லையா?” தன்வி கேட்க, ஸ்ரீநிதி ஏதும் பேசவில்லை.
“என்ன சத்தமே இல்லை நிது. பேசு” அவளை நகர்த்தினாள்.
கண்ணீருடன் ஸ்ரீநிதி நிற்கவும், இதுவரை இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த ரிஷி..ஏதும் பிரச்சனையோ? எண்ணினான்.
என்னாச்சு அண்ணீ?
“எனக்கு அடிக்கடி புகழ் நினைவாவே இருக்கு. அவனை பார்க்கணும் போல இருக்கு” தன்வியை அணைத்து அழுதாள் ஸ்ரீநிதி. ரிஷி கைகள் இறுக சினமுடன் அறைக்கு சென்று விட்டான்.
அதான் அண்ணா இல்லையே! ஏத்துக்க பழகிக்கோங்க அண்ணீ..
இல்ல தனு, அவன் இருக்கான்னு தோணுது.
அண்ணீ, ரிஷி அண்ணாவுக்கு தெரிந்தால் கோபப்படுவான்.
“தனு எத்தனை வருட நட்பு தெரியுமா? அவன் இல்லாமல் ஒருநாள் கூட நான் எங்கும் சென்றதில்லை. எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?” அழுதாள்.
அண்ணீ, உங்ககிட்ட ஒரு விசயம். ரிஷி அண்ணாவும் என்று வெளியே எட்டிப் பார்த்தாள் தன்வி. யாருமில்லை எனவும் ரிஷி அண்ணாவை பவி அண்ணீ கூட அதிகமா பேச விடாதீங்க..
ஸ்ரீநிதி கண்கள் சுருக்கி தன்வியை பார்த்தாள்.
நான் உங்களிடம் சொல்லக் கூடாதுன்னு தான் இருந்தேன். சண்டை போடுறேன்னு பேர்ல அண்ணா மனசுல மறுபடியும் பவி அண்ணீ…என்று ஸ்ரீநிதியை கண்களை மட்டும் உயர்த்தி பார்த்து தன்வி பேச்சை தொடர்ந்தாள்.
பவி அண்ணீ வந்துறாம..
“ம்ம்! ஏற்கனவே எனக்கு தெரியும்” ஸ்ரீநிதி முகம் வாடியது.
உங்களுக்கு தெரியுமா? தெரிந்து எதுக்கு இருவரையும் பேச விடுறீங்க?
வீ ஜெய் மாமாவை தான் காதலிக்கிறாள். அதுக்காக உன் அண்ணனிடம் எதுக்கு வீயை காதலிக்கிறீங்கன்னு கேட்கவா முடியும்?
அண்ணீ, நீங்க அண்ணா மனைவி கேட்டால் என்ன?
“அவர் காதலை மறக்க சொல்லும் உரிமை எனக்கில்லை” ஸ்ரீநிதி கூற, தன்வி அவளை அதிர்ந்து பார்த்தாள்.
“அண்ணீ, வாங்க நான் கேட்கிறேன்” தன்வி கேட்க, வேண்டாம் தனு, காதலை எப்படி கட்டாயப்படுத்தி வர வைப்பது? அது காதலும் ஆகாது. அதனால இதை விட்ரு. நடப்பது நடக்கட்டும்..
அண்ணீ, உங்களுக்குள்ள ஏதும் நடக்கலையா?
அப்படியில்லை. நடந்தது தான்..
அண்ணீ, அண்ணா உங்களை காதலிப்பது போல் தான் தெரியுது.
விரக்தியுடன் தனுவை பார்த்து, “இந்த விசயம் நம்மை விட்டு வெளியே போகக் கூடாது. எல்லாரும் இப்ப வந்திருவாங்க. அறைக்கு போய் தயாராகி வா” அவளை அனுப்பினாள்.
தன்வி குழப்பத்துடன் சென்று அமர, “ஜோவுக்கு இந்த விசயம் தெரிந்தால் எங்க காதல் அவ்வளவு தான். ஒரேதா என்னை விட்டு போயிருவானே!”
காதலை சொல்லி சில நாட்கள் தான் ஆகுது. எங்கும் சென்றது கூட இல்லை அவள் எண்ணிக் கொண்டிருக்க, ஜோ தனுவை மாலை ஓரிடத்திற்கு வரச் சொல்லி அனுப்பி இருந்தான்.
“என்ன விசயம்?” தனு கேட்க, “டேட்டிங் போக வேண்டாமா?” கேட்டான்.
“போகலாம்” அலைபேசியை வைத்து விட்டாள்.
இப்பொழுதைக்கு இவனிடம் ஏதும் சொல்ல வேண்டாம். பிரச்சனை ஆவது போல இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி குளியலறைக்குள் சென்றாள்.
ரிஷி எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் தன் மனைவி ஸ்ரீநிதியை பார்த்தவுடன் அமைதியாகி விடுவான். அதனால் புகழ் பற்றிய எண்ணத்தை நகர்த்தி விட்டு எப்போதும் போல புன்னகையுடன் அவளிடம் பேசினான்.
மறுநாள் ஜோவும் ரிஷியும், ரிஷி பாடவிருக்கும் நிகழ்ச்சியை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தன்விடமிருந்து அழைப்பு வந்தது.
சொல்லு?
நிது அண்ணீயை யாரோ கொல்ல பார்த்துருக்காங்கடா. ஆட்டோவில் அண்ணி செல்லும் போது பின் தொடர்ந்து கொல்ல பார்த்திருக்காங்க.
நிஜமாக தான் சொல்றீயா? ஸ்ரீ விசயத்தில் விளையாடாத.
“இப்ப தான் வீட்டுக்கு பிக்ப்பா அழைச்சிட்டு வந்தார். வந்து தொலை” சினமுடன் ரிஷியை திட்டினாள் தனு.
“வீட்லயா? நான் தான் அவளை அழைக்க சொல்லி இருந்தேனே!”
“கால் பண்ணா எடுக்கணும். எவ்வளவு நேரம் காத்திருப்பாங்க. நல்ல வேளை அப்பா செக்ரட்டரி பார்த்து அப்பாவிடம் சொன்னதால் சரியா போச்சு. இல்லை என்ன ஆகி இருக்கும்? உனக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்லை. ஜெய் அண்ணா கூட அண்ணியை பார்க்க வந்துட்டான். பவி அண்ணியும் வந்துட்டு இருக்காங்க” சினமுடன் கூறினாள்.
“அவன் வந்தானா?” ரிஷி தாடையை தேய்த்தான். அவள் சினமுடன் அலைபேசியை வைத்தாள்.
“நிதுவுக்கு என்னாச்சு மாமா?” ஜோ கேட்க, ரிஷி விசயத்தை கூறவும் ஜோ தன் பைக்கை எடுத்தான். “இருடா நானும் வாரேன்” ரிஷியும் அவன் பைக்கை உதைத்து வீட்டிற்கு விரைந்தான்.
ஸ்ரீநிதியிடம் ரிஷியும் ஜோவும் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.
“எனக்கு எதுவும் தெரியாது. இதற்கு முன் அந்த ஆட்களை நான் பார்த்ததேயில்லை” சத்தமிட்டாள்.
“நிது” ஜோ சினமுடன் அழைக்க, “எல்லாரும் வந்ததிலிருந்து கேட்டுக்கிட்டே இருக்கீங்க? எனக்கு யாரையும் தெரியாது. நான் அறைக்கு சென்று ஓய்வெடுக்கிறேன். யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்” சொல்லி சென்று விட்டாள். பவிதாவும் அவள் பின்னே சென்றாள்.
நாம பார்த்துக்கலாம். இனி என்னோட மருமகள நானே அழைச்சிட்டு போறேன்.
டாட், ஸ்ரீக்கு கார் ஒத்துக்காது..
தெரியும்டா. நாங்க பைக்ல்ல போவோம்..
பைக்ல்ல ஸ்ரீ என்னோட வருவா..
“நீ பார்த்துக் கொண்டதெல்லாம் போதும். எங்கடா ஊர் சுத்திட்டு வர்ற?” ஜெய் கேட்க, தேவையில்லாம நீ தலையிடாத. நான் டாடிடம் தான் பேசிட்டு இருக்கேன்.
ஸ்ரீநிதிக்கோ அவளின் ரணமான நினைவான முதலிரவை எண்ணி அழுதாள். பின் அவனருகே வர, “வா தூங்கலாம்” அவளை இழுத்து அணைத்து படுத்துக் கொண்டான்.
நாட்கள் மாதங்களாகியது.
நம் ஜோடிகளுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகி இருந்தது.
அனைவரும் அவரவர் வேலையில் திறமையை காட்டினர்.
ஜோ கொடுத்த டிக்கெட்டை பயன்படுத்திய ரிஷி, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எட்டாவது இடத்திற்கு வந்தான். அதனால் இன்னும் பயிற்சியை மேற்க்கொண்டு நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவனுக்கான கனவை அடைய போராடிக் கொண்டிருந்தான்.
பவிதாவுடன் ராம் சேர்ந்து அமரேசன் தாத்தாவின் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்றொரு நாள் காலை தயாராகி சமையலறையில் மான்விழிக்கு உதவியவாறு ஸ்ரீநிதி உணவு மேசையில் காலை உணவை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
வீட்டிலிருந்த அனைவரும் அவரவர் வேலைக்கு செல்ல தயாராக வந்தனர். இவளும் தயாராகி தான் வந்திருந்தாள்.
எப்போதும் ரிஷி குளிக்க செல்லவும் மான்விழிக்கு உதவ வந்து விடுவாள் ஸ்ரீநிதி. அன்றும் அதே போல தான் செய்து கொண்டிருந்தாள்.
திடீரென தலைசுற்றல் அதிகமாக இருந்தது. எப்படியோ சமாளித்து அனைவருக்கும் அவளும் மான்விழியும் பரிமாறினர். ஸ்ரீநிதியும் உணவுண்ண அமர்ந்தாள்.
மான்விழி அவளுக்கு எடுத்து வைக்க, பூரியை குர்மாவில் நனைத்து வாயில் இட, உமட்டிக் கொண்டு வந்தது. வேகமாக எழுந்து வாஷ்பேசன் சென்றாள்.
“ஸ்ரீ” வேகமாக ரிஷியும் பவிதாவும் அவள் பின் சென்றனர். பெரியவர்கள் ஒருவர் முகத்தை பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.
வாமிட் முடித்து வாயை கொப்பளித்து ஸ்ரீ ரிஷியை பார்த்தான்.
“என்னாச்சுடி?” பவிதா ஸ்ரீநிதியை பார்த்தாள்.
அது..வந்து..ஸ்ரீநிதி பவிதாவை பார்த்தாள்.
“ஏய் ஸ்ரீ..” ஓடிச் சென்று பவிதா அவளை அணைக்க, அவள் மீது சாய்ந்தவாறு மயங்கினாள் ஸ்ரீநிதி.
“குழந்தை கண்டிப்பாக என்னுடையதில்லை” என்று ரிஷி கூறியது மட்டும் ஸ்ரீநிதி காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“என்னடா சொன்ன?” பவிதா அவனை அடிக்க வந்தாள். ஜெய் அவளை தடுத்தான்.
“ஜெய் இவன்…” பவிதா ஸ்ரீநிதியை பார்க்க, கண்ணீர் அழுகையாக தாங்க முடியாமல் அழுது கொண்டே ஸ்ரீநிதி அவ்விடம் விட்டு வேகமாக அறைக்கு ஓடினாள்.
“நிதிம்மா நில்லு..ஓடாத..” பாட்டி அவள் பின் செல்ல, சந்திரமுகன் தன் மகனை வெறித்தார்.
“டாட் நிஜமாகவே?” ரிஷி பேச, நளினி சினமுடன் அவன் கன்னத்தில் மாறி மாறி அடித்தார்.
“நள்ளூ” மான்விழி அவரை தடுக்க வர, “உனக்கு கூட நிது மேல நம்பிக்கை இல்லைல்ல? அவளுக்கு இவன் சரிப்பட்டு வர மாட்டான்னு தனு சொன்னா. யாரு கேட்டா?”
உனக்காக என்று இந்த வீட்டில் யாரும் சமையலுக்கோ மற்ற வேலைகளுக்கோ உதவ யாராவது வந்திருக்கோமா? நம்ம கம்பெனி பொறுப்பை ஏற்று அதை காரணம் காட்டி அவள் ஓய்வெடுத்திருக்கலாம். அது கூட இல்லாமல் உனக்காக தான விழி வந்தா? ஒரு நாள் ரிஷியோ, ஜோவோ, மாமாவோ இல்லாமல் தனியா எங்காவது போயிருப்பாளா? உனக்கு நிதுவை சந்தேகப்பட எப்படி மனசு வந்தது?” சினமுடன் நளினி மான்விழியிடம் பேசினார்.
பாட்டி ஸ்ரீநிதி கதவை தட்ட, அவள் அழுது கொண்டிருந்தாள்.
பவிதாவோ இவர்களை பார்த்து விட்டு வேகமாக அவளறைக்கு ஓடினாள். ஜெய்யும் அவள் பின் சென்றான்.
ரிஷிக்கு முதலிரவின் மறுநாள் பூக்கள் கசங்கி இருந்தது. அவள் ஆடையில் இருந்த இரத்தக்கறை, அவன் குடித்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது. அவன் முதலிரவில் விருப்பம் இருக்கான்னு கேட்ட போது அவள் முகத்தில் சுத்தமாக உணர்வேயில்லாததையும், அவள் குளியலறை சென்று நேரம் கழித்து வந்ததையும் சிந்தித்தான். இன்னும் பல பல எண்ணங்கள் அவனுள் வந்து சென்றது.
“அப்படியென்றால் நான் குடித்து விட்டு அவளிடம் தவறாக நடந்து கொண்டேனா?” ரிஷி தலையில் கை வைத்தான்.
“ஆமா, அது தான் உண்மை. அதை சொன்னால் உன் மீது நீயே கோபப்படுவியேன்னு தான் உன்னிடமிருந்து நிது மறைத்தாள். அதுமட்டுமல்ல நீ குடித்த காரணம் ஆருத்ரா தான? என அவனிடம் ரிஷிக்காக ஸ்ரீநிதி செய்தவற்றை நளினி கண்கலங்க கூறினார்.
தன்வி சினமுடன் ரிஷியிடம் வந்து, “நீ கேவலமா நடந்துட்டு தேவையில்லாமல் நிதுவை கேவலமா பேசிட்ட? ச்சீ..உன்னை என்னோட அண்ணன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு” திட்டி விட்டு சென்றாள்.
கண்ணீரை துடைத்த ரிஷி வேகமாக அவனறைக்கு சென்று, ஸ்ரீநிதியை கலங்கிய குரலுடன் அழைத்தான். பின் அவனது அறையின் வெளியே இருக்கும் நம்பர் லாக்கை போட்டு உள்ளே சென்றான்.
“போதும் பவி” சினமுடன் கத்தினாள் ஸ்ரீநிதி. அனைவரும் உள்ளே வந்தனர்.
பவிதா அதிர்ந்து ஸ்ரீநிதியை பார்க்க, சும்மா அவரை மட்டும் குறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க? என் மீதும் தவறு இருக்கு தான்..
எல்லாரும் வந்ததை பார்த்த ஸ்ரீநிது, “இவங்க எல்லார் மீதும் தவறு இருக்கு” சினமுடன் கூறினாள்.
மாமா, ஜெய் மாமாவிடம் பேசுவது போல இவரிடம் அமைதியா பேசி இருக்கீங்களா? இவர் மியூசிக் காலேஜ்ல்ல சேரணும்ன்னு எவ்வளவு தூரம் கேட்டார். செஞ்சீங்களா?
அத்த, நீங்க உங்க பையனை கொஞ்சலாம். தவறு செய்தால் அதட்டுவதில் தவறில்லை. திடீர்ன்னு அதட்டினால் அவர் எப்படி கேட்பார்?
நள்ளூ ஆன்ட்டி..உங்கள எதுவும் சொல்ல முடியல. ஆனால் நீங்க இவரை குறை சொல்லாமல் இருங்க போதும்.
தனு உன்னோட அண்ணா மேல முதல்ல நம்பிக்கை வை. பின் பேசு..
ஜெய் மாமா, உங்களுக்கு இவர் போட்டியா வந்திருவார்ன்னு இவர் வளரவும் பேச்சையே குறைச்சுட்டீங்க?
சொல்லுங்க? யார் மேல தப்பு? சினமுடன் கேட்டு தரையில் மடிந்து அமர்ந்தாள். வியர்த்து ஊற்றியது ஸ்ரீநிதிக்கு.
“நிது..நீ..இவன..” பவிதா இருவரையும் மாறி மாறி பார்க்க, பட்டாசாக பொரிந்து தள்ளிய வீட்டின் சின்னமருமகளை குடும்பமே அதிர்ந்து பார்த்தது.
எப்படி நிது? இப்ப கூட இவனுக்காக பேசுற? தன்வி ஸ்ரீநிதி கையை பிடித்து கேட்டாள்.
“நம்பிக்கை தனு” கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டாள்.
“என்ன நம்பிக்கை இவன் மீது?” பவிதா ரிஷியை முறைத்தவாறு கேட்டாள்.
உனக்கு நினைவிருக்கா வீ? நானும் புகழும் க்விஸ் போட்டியை முடித்து இந்தியா திரும்பிய பின் அவனுக்கு வைரஸ் காய்ச்சல் வந்து விட்டதுன்னு விடுப்பு எடுத்திருந்தான்ல்ல…
அன்று கிளாஸ் முடிந்து நான் தனியே வீட்டிற்கு வருவேன்னு நம்ம அம்மா நாய்க்குட்டி ஜான்னை எனக்கு துணைக்கு அனுப்பி வச்சிருந்தாங்க..
ஜான் என்னை சமாதனப்படுத்துகிறேன்னு விளையாட்டு காட்டிக் கொண்டே வந்தான். கார் ஒன்று ஏற்றி விட அவன்…தொண்டை அடைக்க கண்ணீருடன் பவிதாவை பார்த்தாள்.
ம்ம்..
அப்ப..ரிஷி தான் நம்ம ஜான்னையும் என்னையும் அழைச்சிட்டு போய் ஹாஸ்பிட்டலில் சேர்த்தார். ஏற்கனவே புகழ் உடல்நிலை சரியில்லைன்னு அழுததில் எனக்கு ஜான் அடிபடவும் மனம் தளர்ந்து அழுது விட்டேன்.
நம்பிக்கை தரும் வார்த்தை கூறி சிலமணிநேரம் என்னுடன் இருந்து விட்டு போனார். ஜான் உயிரோட இல்லை. ஆனால் இவர் கூறிய நம்பிக்கையான வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிந்தது. அவ்விடம் வந்தாலே இவர் இருப்பாரான்னு தேடுவேன்.
அவர் பள்ளியில் ஒரு முறை பார்த்தேன். அன்று அவரை மாமா அனைத்து பசங்க முன்னும் திட்டிக் கொண்டிருந்தார். அதனால் நன்றி கூட என்னால சொல்ல முடியல..
பின் இவரை நம்ம கல்லூரியில் பார்த்தேன். இவர் செயல்களை விட இவரின் வார்த்தைகள் என்னை மறக்க விட வில்லை. இவர் தவறான நண்பர்களுடன் பழகுவதை தடுக்க நானும் ஏதாவது செய்ய எண்ணினேன். அருகே செல்ல தைரியமில்லை. அதனால் விட்டு விட்டேன். பின் தான் தனுவை பார்த்தேன் என்று அவளை பார்த்து விட்டு, “யாரும் யாரையும் குற்றம் சாட்டாமல் இருங்க. நான் இப்பொழுது தனியே இருக்கணும்” சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.
“அம்மாடி” மான்விழி அழைக்க, வேண்டாம் அத்தை. நம்பிக்கை உடைந்த பின் ஒட்ட வைப்பது ஆகாத காரியம். விட்ருங்க..
“நிதி” சந்திரமுகன் அழைக்க, “மாமா ப்ளீஸ் நான் தனியே இருக்கணும். தற்கொலை ஏதும் செய்து கொள்ள மாட்டேன். எல்லாரும் போங்க” அழுது கொண்டே கத்தினாள். அமைதியாக அனைவரும் வெளியே வந்தனர்.
“ஸ்ரீ” ரிஷி அழைக்க, அவள் திரும்பவேயில்லை.
“ஸ்ரீ” மறுபடியும் அவன் அழைக்க, “என்னை தனியா விடுங்க” கத்தினாள்.
கண்கலங்க கதவை சாற்றி விட்டு அதனருகே அமர்ந்து கொண்டான் ரிஷி.
சிலமணிநேரம் அழுது விட்டு, தன் கம்பெனி சம்பந்தமான பொருட்களையும், புகழின் கைக்கடிகாரமடங்கிய பெட்டியையும் அதன் விவரத்தையும் எடுத்து அவளது பையில் அடுக்கினாள்.
அவளுக்கென சந்திரமுகன் வாங்கித் தந்த லேப்பை எடுத்து, ஏதோ டைப் செய்து பிரிண்ட் போட்டு எடுத்து கைகள் நடுங்க ரிஷியின் அலமாரியை திறந்து அந்த பைல்லை எடுத்தாள். அவன் வைக்கும் போது கவனித்ததால் எளிதாக எடுத்து விட்டாள். அவளிடம் இருக்கும் அவளது மயிலிறகை வருடினாள்.
ரிஷி- ஸ்ரீநிதியின் திருமண புகைப்படம் முன் வந்து நின்று, தன் வயிற்றில் கையை பதித்து “சாரிடா கண்ணா. நமக்கு அப்பா வேண்டாம். உன்னோட பாட்டி போல உன் அம்மா தவறான முடிவை எடுக்க மாட்டேன்” அழுது கொண்டே புகைப்படத்திலிருந்த ரிஷியின் முகத்தை வருடி,
“நான் போயிடுறேன். என்றாவது என்னை புரிஞ்சுப்பீங்கன்னு நினைச்சேன். ஆனால் அது நடக்காமலே போய் விட்டது. உங்க காதல் நிறைவேறாது என்றாலும் உங்கள் கனவை அடைந்து நல்ல வாழ்க்கையை தேடிக்கோங்க” கண்ணீரை அழுந்த துடைத்து வெளியே வந்தாள்.
கதவடைத்து வெளியே அமர்ந்திருந்த ரிஷி முன் கையை கட்டி அவனை உக்கிரமாக முறைத்து நின்றார் நளினி.
சித்தி..நான்..
“வேண்டாம்” சினமுடன் கையை உயர்த்தி ரிஷியை நெருங்கி, திருமணத்தின் மறுநாள் காலை நிதுவையும் உன்னையும் பார்க்கும் போது, “அவளிடத்தில் நான் இருப்பது போல தான் உணர்ந்தேன்”.
“சித்தி” அவன் அழைக்க, உனக்கு தெரியாமல் நீ அவளை கஷ்டப்படுத்தி இருக்க?
ஆனால் நான்.. “அவருக்கு என்னை பிடிக்கலைன்னு கஷ்டம் அனுபவித்தேன்” கண்ணீருடன் அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லி, “என்னை போல நிதுவை தனியே விட்றாத. அந்த வலியை விட அவளுக்கு நாவால் பெரிய வலியை கொடுத்துட்ட. அவள் உன் மீது வைத்திருந்த நம்பிக்கையை நீ அவள் மீது வைக்கவில்லை” சொல்லி விட்டு கண்ணீரை துடைத்து விறுவிறுவென அறைக்கு சென்று அடைத்து அவர் வாழ்க்கை பாழானதை எண்ணி அழுதார் நளினி.