தன் மனைவியை மடியில் போட்டு கண்ணீருடன் அவள் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான் ரிசாத்பவன்.
அழகி கண்ணை காட்ட, தர்மேந்திரன் கண்ணை மூடி திறந்து ஸ்ரீநிதி மீது தண்ணீரை தெளித்தார். அவள் விழித்து ரிஷி மடியில் இருப்பதை பார்த்து எழுந்து அமர்ந்தாள்.
உங்க பையன் அறையை திறங்க. இன்று மட்டும் நாங்க அங்க தங்கிக்கிறோம். நாளை காலை கூட கிளம்பிடுறோம் என்றான் ரிஷி.
எப்பொழுது வேண்டுமானாலும் நீங்க வரலாம் செல்லலாம். தங்கவும் செய்யலாம். கணக்கே கிடையாது. புகழுக்கு நிது எவ்வளவு முக்கியமோ அதே போல நீங்களும் முக்கியம் தான். அதை நீங்க உணரணும் என்று தான் பேசினேன் என்றார் தர்மேந்திரன்.
“அம்மூ என்னாச்சுடா?” அழகி கேட்க, அவள் மூன்று விரலை நீட்டினாள். ரிஷி புரியாமல் அவளை பார்த்தான்.
“என்னது ஸ்ரீ? பிராபிளம் எதுவும் இல்லையே!” ரிஷி பதட்டமுடன் கேட்டாள்.
“ஒன்றுமில்லைப்பா” கண்ணசைத்தார் அழகி.
தர்மேந்திரன் புரிந்து கொண்டு, “நீ போம்மா. மாப்பிள்ளகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அனுப்புறேன்” என்றார்.
ம்ம்! ஸ்ரீநிதி ரிஷியை பார்த்துக் கொண்டே செல்ல, ஸ்ரீநிதி கையை பிடித்து “உடம்புக்கு ஒன்றுமில்லையே!” கேட்டான்.
“ஊகூம்” தலையசைத்து ஸ்ரீநிதி சென்றாள்.
அழகி இரு. மாப்பிள்ள பார்த்துக்கட்டும். ஆடையை மட்டும் எடுத்து கொடுத்து விடு என்றார்.
சித்தப்பா, என்னாச்சு?
“மென்சஸ். அதான் வேற ஒன்றுமில்லை. தூங்கும் முன்னாடி ஹார்ட் வாட்டர் ஒத்தடம் மட்டும் கொடுங்க” சொல்ல, அழகி நிதுக்கு ஏதுவான ப்ராக் ஒன்றை கொடுத்தார்.
இதை ஸ்ரீ போடுவாளா?
“ம்ம்! போட்டால் அறையை விட்டு அதிகம் வெளியே வர மாட்டா” அழகி கூறி, “ஹார்ட் வாட்டர் மட்டும் தயார் செய்து உங்க அறையில் வச்சிடுறேன். அதுவரை கதவை திறந்து வச்சிருங்க” புகழின் அலமாரிக்கான சாவியை கொடுத்தார்.
“இது எதுக்கு?” ரிஷி கேட்க, “திறந்தால் தெரியப் போகுது” அவர் அடுக்கலைக்குள் சென்று விட்டார்.
மாப்பிள்ள, நான்கைந்து நாள் பிள்ளையை தொந்தரவு செய்யாமல் இருங்க.
என்ன?
“உறவு எதுவும் வேண்டாம்” தர்மேந்திரன் சொல்ல, ஏதோ சொல்ல வந்து வாயை மூடிக் கொண்டான் ரிஷி.
ஆடையுடன் அறைக்கு சென்று படுக்கையில் வைத்து விட்டு புகழின் அறையை பார்த்தான். பின் சாவியை எடுத்து புகழின் அலமாரியை திறந்தான். கீழடுக்கில் இருப்பவை எல்லாம் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களாக இருந்தது.
ஒரு கவர் மட்டும் வைக்குமாறு இருந்தது. அது லேசாக திறந்திருக்க அதனுள் கையை விட்டான். அதில் நாப்கின் இருந்தது.
“ஸ்ரீக்கு நாப்கின் இவன் அலமாரியில் இருக்கு” அதிர்ந்து அதனை கையில் வைத்து ரிஷி விழித்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீ கை தட்டினாள்.
“இவ என்ன பண்றா?” மேலும் விழித்தான்.
“அத்தை நாப்கின்” மீண்டும் தட்டினாள்.
“ஸ்ரீ என்னிடம் இருக்கு” தயங்கினான்.
குளியலறைக்கு மேலே தூக்கி போடுங்க.
தூக்கிப் போடவா?
“சீக்கிரம். என்னால முடியல. தலை சுற்றுவது போல இருக்கு” அவள் சொன்ன மறுநிமிடம் தூக்கி போட்டு, “ஸ்ரீ ஆடை?” ரிஷி கேட்டான்.
நீங்க வெளிய போங்க. நான் மாத்திக்கிறேன்.
சித்தி உன்னை தனியே விட்டு வெளிய வரக் கூடாதுன்னு சொன்னாங்க என்றான்.
“சரி வாரேன்” ஸ்ரீநிதி துவாலையை உடலில் சுற்றி வெளியே வந்தாள். ரிஷி அவளை பார்த்து கண்ணை மூடி, “சாரி” திரும்பிக் கொண்டான். அவள் ஆடையை எடுத்து மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.
“ஸ்ரீ” ரிஷி அழைக்க, “மாப்பிள்ள அம்மூ வரவும் அவளுக்கு இந்த துணியை வெந்நீரில் நனைத்து ஒத்தடம் கொடுங்கள். இதுல பழச்சாறு இருக்கு. இதை குடிக்க வைத்து படுக்க சொல்லுங்க” ரிஷியை பார்த்து புன்னகையுடன் வெளியேறினார்.
“இதெல்லாம் புகழ் என்னோட ஸ்ரீக்கு செய்தானா?” நின்று கொண்டிருந்தான்.
“ரிஷி” தடுமாற்றத்துடன் ஸ்ரீநிதி அழைக்க, பதறி அவளிடம் ஓடி தூக்கினான்.
“பெயின் அதிகமா இருக்கா ஸ்ரீ?”
கண்ணை மூடி அவள் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.
ஸ்ரீநிதியை படுக்க வைத்து வெந்நீர் அருகே சென்று தொட்டுப் பார்த்தான். ரிஷியின் விரல் சுட்டு விட, “ஷ்ஆ” சத்தமிட்டான்.
ஸ்ரீநிதி கண்ணை விழித்து அவனை பார்த்தாள்.
“எப்படி செய்வது?” அந்த துணியை வெந்நீரில் தவற விட்டு, அதை எடுக்க சென்றான்.
“ரிஷி..நோ..” சத்தமிட்டாள் ஸ்ரீநிதி.
“ஸ்ரீ, இதை எப்படி பண்ணனும்?” ரிஷி அவளிடம் கேட்க, கண்ணசைத்து அவனை அருகே அழைத்தாள்.
“ரொம்ப முடியலையா? ஹாஸ்பிட்டல் போகலாமா?” அவன் கேட்க, படுக்கையின் அருகே கையை வைத்து அவனை படுக்க சொன்னாள்.
ஸ்ரீ, சித்தி உனக்கு ஒத்தடம் கொடுக்க சொன்னாங்க.
“வேண்டாம்” தலையசைத்தாள்.
“உனக்கு வலிக்குதுல்ல? எப்படி செய்யணும்ன்னு சொல்லு?”
“வேண்டாம்” தலையசைத்து, பழச்சாற்றை காட்டினாள். அவன் எடுத்து கொடுக்கவும் அதை வாங்கி குடித்து விட்டு அவனுடன் படுத்து, அவன் கையை அவளது வயிற்றில் வைத்துக் கொண்டு கண்ணை மூடினாள்.
“ஸ்ரீ அது?” அவன் வெந்நீரை காட்டி கேட்டான்.
“இதுவே போதும்” அவனது கையை காட்டினாள்.
ரிஷி ஸ்ரீநிதியை தன் மார்ப்போடு இணைத்து படுத்துக் கொண்டான். அவளும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள். உறவு பற்றி எதுவும் இப்பொழுதைக்கு பேச வேண்டாம் என்று ஒத்தி வைத்தான்.
மறுநாள் ரிஷி வீட்டிற்கு சென்று தயாராகி பாட்டிகளின் வீட்டிற்கு வந்தனர். விருந்தை முடித்து இரு ஜோடிகளுக்கும் போட்டிகள் நடந்தது.
ஜெய்யும் ரிஷியும் போட்டியிட்டு மாறி மாறி வெற்றி பெற்றனர். கடைசி வின்னர் யாரு என கண்டறிய தாத்தா ஒரு ஐடியாவை கூறினார்.
“அதாகப்பட்டது..நம்ம வீட்டிலிருந்து மலைவீடு வரை தன் மனைவியை தூக்கிக் கொண்டு முதலில் செல்பவர்கள் வெற்றியடைந்தவர்கள்” தாத்தா கூற, “அச்சோ அங்க ஆறு இருக்கே! பசங்க அதை கடந்து சென்று பழக்கமில்லையே!” பாட்டி பதட்டமுடன் கூறினார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. நாங்க தயார்” இருவரும் பார்த்துக் கொண்டனர்.
போட்டி ஆரம்பமாக ஜெய்யும் ரிஷியும் ஆற்றில் இறங்கி நடக்க தொடங்கினார்கள். ஜெய் வழுக்கி பவிதாவை கீழே விட்டு அவனும் கீழே விழுந்தான். அவன் கால்கள் சேற்றில் மாட்டிக் கொண்டது..
பின் மீண்டும் போட்டியை துவக்கினார்கள். ஊர்மக்கள் இவர்களை பார்த்து பதறி நிம்மதியடைந்தனர்.
முதலில் வந்து சேர்ந்தது ஜெய்யும் பவிதாவும்.
ரிஷியையே பார்த்துக் கொண்டு வந்த ஸ்ரீநிதி, வெற்றியாளரென ஜெய்யை அறிவிக்கும் போது, ரிஷியை தூக்க சொல்லி கையை தூக்கினாள். அவன் எல்லாரையும் பார்த்துக் கொண்டே தூக்கினான்.
ரிஷியின் முகம் முழுவதும் முத்தமிட்டாள் ஸ்ரீநிதி.
நிது, இதெல்லாம் போங்கு.
“என்ன போங்கு? அவர் உதவியதால் கூட நாங்க பின் தங்கி இருக்கலாமே! நாங்க வெற்றியடையலை. நாங்க ஒத்துக்கிறோம்” ரிஷியை பார்க்க, அவன் உடல் சிலிர்ப்புடன் விறைத்து நின்றான்.
“மாப்பிள்ள, நம்ம நிது பாசத்துல்ல மிரண்டு போய் நிக்கிறாரு” பாட்டி அவர்கள் பின் சென்றார்.
முதலில் வீட்டை பார்த்து முகம் மாற இருந்த இரு மாப்பிள்ளைகளும் பெரியவர்களின் கவனிப்பும், விளையாட்டு, கேலிப் பேச்சாலும் அவர்களுடன் நன்றாக பழகினார்கள்.
ரிஷியின் மனம் துள்ளல் போட்டது. இத்தகு முத்தம் கிடைப்பது அரிதல்லவா? தன் பொண்டாட்டியே என்றாலும் பாசம், காதல், விட்டுக் கொடுக்காமை, நம்பிக்கை அனைத்தும் சேர்த்து கொடுத்த முத்தம். அவன் மனதில் அந்நினைவுகளை ஏற்றிக் கொண்டான்.
பவிதா புன்னகையுடன், வாங்க ஜெய். நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்.
கோவிலுக்கா? நாம் மட்டுமா? அவன் கேட்க, ம்ம்..அந்த மலைக்கோவில் கையை காட்டினாள்.
ரிஷி?
“அவங்களால வர முடியாது. அடுத்து வரும் போது அவங்க போய்ப்பாங்க. வாங்க நாம போகலாம். பாட்டி, தாத்தா நாங்க போயிட்டு வாரோம்” அவர்கள் சென்றனர்.
ஸ்ரீ..நீ..அவன் திக்கி பாதியிலே நிறுத்தினான்.
எனக்கு ஓய்வெடுக்கணும்..
“தாராளமா எடும்மா” பாட்டி வந்தார்.
“பாட்டி” அவள் எழ, ரிஷியும் எழுந்தான்.
“உங்களுக்கு வருத்தம் இல்லைல்லடா?” இருவரையும் பார்த்து கேட்டார்.
“அதான் பாட்டி..எனக்கு பெரிய பரிசே கிடைச்சிருச்சே! அப்புறம் எதுக்கு வருத்தம்?” ரிஷி கண்ணடித்து பாட்டியிடம் கேட்டான். ஸ்ரீநிதி அவனை இடித்தாள்.
பரிசில்லை பேரான்டி? இது உங்களோட நினைவுகள். சென்ற வாழ்க்கையின் நினைவுகளை மட்டும் தான் நாம பார்க்க முடியும். சென்ற நேரம் திரும்ப வராது. அதனால் ஆகும் காரியம் சீக்கிரம் நடக்கணும் பாட்டி கூற, ரிஷி புரியாமல் ஸ்ரீநிதியை பார்த்தான்.
பாட்டி வெளியே செல்ல, ரிஷி அவர் பின் சென்று கேட்டான்.
ஆகும் காரியம்?
உங்களது உறவின் அடுத்த நிலை. முதலிரவில் நடவாதது.
“பாட்டி” அவன் அதிர, “ஆமா எம் பேத்தியோட இந்த முத்தத்திலே இவ்வளவு மகிழ்ச்சி என் பேரனுக்கு. அதிலே தெரிந்து விட்டது. சீக்கிரம் நடக்கட்டும் பேரா” சிரிப்புடன் அவர் நகர்ந்தார்.
கடைசி பாட்டி உள்ளே வர, “அழகி சொன்ன வெந்நீர் ஒத்தடம் எப்படி கொடுப்பது?” கேட்டு ஸ்ரீநிதிக்கு எடுத்து சென்றான். அவள் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
வெந்நீரை அவனே தூக்கி வந்து, நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுத்து விட்டு பாட்டி கொடுத்த விளக்கெண்ணையை அவளது தொப்பிளில் ஊற்றினாள்.
அசதியில் ஒத்தடம் கொடுத்தது கூட ஸ்ரீநிதிக்கு தெரியவில்லை. ஆனால் விளக்கெண்ணையை ஊற்றவும் கண்ணை விழித்து ரிஷியை பார்த்து எழுந்தாள்.
ஸ்ரீ..எழாத..பாட்டி தான் இப்படி எண்ணெய் போட்டால் வயிறு வலிக்காதுன்னு சொன்னாங்க. அதான் நான் முழுவதும் போட்டு விட்டுடுறேன்.
“அச்சோ! வேண்டாம் வேண்டாம்” வெந்நீரை பார்த்து, “ரிஷி என்ன செய்றீங்க?” அவன் கையை இழுத்து பார்த்தாள். வெந்நீரில் சூடுபட்டு கையின் விரல்கள் சிவந்து இருந்தது.
“என்ன இது? கை இப்படி சிவந்து போயிருக்கு” பதறி கட்டிலில் இருந்து இறங்கினாள்.
“ஸ்ரீ போச்சு. எண்ணெயெல்லாம் சிந்திருச்சு” அவன் வருத்தப்பட, அவள் அதையெல்லாம் கேட்காமல் அவனை குளியலறைக்கு இழுத்து சென்று அவன் கையை இழுத்து தண்ணீரில் நனைத்து நனைத்து ஊதினாள்.
“ஸ்ரீ ஐ கான்ட்” என்றான் அவளை காதலுடன் பார்த்து.
வாட்?
“இந்த நேரத்தில் இப்படி செய்யலாமான்னு தெரியல. ஐ அம் சாரி” ஸ்ரீநிதியை இழுத்து முத்தமிட்டான். அவன் கையை கண்கலங்க அவள் பார்க்க, அவனுக்குள் துடிப்பு அதிகமானது.
“ஸ்ரீ நான் உன்னிடம்….” அவன் காதலை சொல்ல எண்ணிய போது பவிதாவின் குரல் ஒலிக்கவும் வேகமாக அவனை தள்ளி விட்டு வெளியே சென்று விட்டாள் ஸ்ரீநிதி. அவன் புரியாமல் இருந்தான்.
அடுத்த வாரம் ரிஷியின் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று வந்தனர்.
இரவு வீட்டில் அனைவரும் உணவை முடித்து சென்று விட்டனர்.
“அத்தை, நீங்க நிறைய வேலை பார்த்துட்டீங்க? நான் பார்த்துக்கிறேன்” பாத்திரங்களை எடுத்து போட்டு கழுவத் தொடங்கினாள் ஸ்ரீநிதி.
மான்விழியும் அலுப்பில் தன்னறைக்கு சென்று விட்டார்.
உணவை முடித்து வெளியே சென்ற குணசேகரன் தன் மகனை பார்க்க, பூபாலன் புன்னகையுடன் அவரை பார்த்து விட்டு தனியே இருக்கும் ஸ்ரீநிதியிடம் சென்றான்.
“ஹாய், நான் உதவவா?” அவள் பதிலை எதிர்பாராது டேப்பை திறந்தான். தண்ணீரை வேகப்படுத்தினான்.
“நானே பார்த்துப்பேன். நீங்க கிளம்புங்க” ஸ்ரீநிதி கூற, அவன் அதை கவனிக்காமல் அவள் பக்கம் தண்ணீர் படுமாறு பாத்திரத்தை கழுவத் தொடங்கினான்.
டேப்பின் மேலிருந்து கவரை அவன் எடுத்து விட, இருவர் ஆடையிலும் தண்ணீர் பாய்ந்து நனைத்தது.
“அச்சோ! நிது சாரி சாரி” அவன் அவளது இடையில் இருக்கும் மடிப்பை உதற, அவனை தள்ளி அவளும் நகர்ந்தாள்.
“சாரி..நான்..நானே பார்த்துக்கிறேன்” சொல்லிக் கொண்டே திரும்பி அவளது ஆடையை சரி செய்தாள். அவளது பின்னிடை அவன் கண்ணுக்கு விருந்தாக அவளை தொட பூபாலன் உள்ளம் துடித்தது.
அவன் ஸ்ரீநிதியின் பின்னிடையை தொட கையை அவளிடம் எடுத்து சென்றாள். அவன் வாயை நன்றாக அடைத்து அவனை வெளியே இழுத்து வந்தார் சந்திரமுகன்.
ஸ்ரீநிதியை தேடி வந்த ரிஷி அவன் தந்தை அவனது அண்ணன் பூபாலனை இழுத்து செல்வதை பார்த்து அவர்களை பின் தொடர்ந்தான்.
குணசேகரனிடம் வந்து பூபாலனை தள்ளிய சந்திரமுகன், “என் விழிக்காக தான் இவ்வளவு பொறுமையா இருக்கேன். உன்னோட பிள்ளை என்னோட மருமகள் பக்கம் வருவது இதுவே கடைசியாக இருக்கட்டும்” ஆண்சிங்கமாய் கர்ஜிக்க இருந்தவர் மனைவியின் எண்ணத்தில் அமைதியாக பேசினார்.
“மருமகள் பக்கமா? டாட் யாரை சொல்றார்?” சிந்தனையுடன் ரிஷி பின்னே பார்க்க, ஸ்ரீநிதி புடவையை உதறிக் கொண்டே வெளியே வந்தாள். அதிர்ந்து அவன் தன் தந்தையை பார்த்தான்.
“எனக்கு ஸ்ரீயை பிடிச்சிருக்கு? உங்க பையனுக்கு தான் அவளை பிடிக்கலைல்ல. எனக்கு கட்டி வச்சிருங்க” கேட்க, சீற்றமுடன் ஓடி வந்து அவனை அடித்தான் ரிசாத்பவன்.
“ரிஷி” குணசேகரன் சத்தமிட, அம்மாவோட மாமான்னு இத்தனை நாள் மரியாத கொடுத்துட்டு இருந்தோம். என்னோட அம்மாவுக்காக தான் பொறுமையா இருந்தேன். என்னோட ஸ்ரீ உனக்கு பொண்டாட்டியா வேணும்ன்னு கேக்குற? சீறினான் ரிஷி.
பூபாலன் பல்லை காட்ட,
“டேய் பொறுக்கி பயலுகளா? இனி எங்க வீட்டுக்கு வராதீங்க? டாட்..இந்தாளு நம்ம நள்ளு சித்தியை பார்க்கும் பார்வையே சரியில்லை” சீறினான்.
“அட பாருடா, அவ தான் உன்னை திட்டிக்கிட்டே இருப்பால்ல? அவ மேல அக்கறை இருப்பது போல நடிக்காத!” குணசேகரன் கூற, அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ஸ்ரீநிதி.
“ஸ்ரீ” ரிஷி அழைக்க, “பேசும் போது பார்த்து பேச மாட்டீங்க. எவன் எங்களை எப்படி பார்க்கிறான்னு தெரியாமல் இல்லை. முதல் முறையே இவனுகள அனுப்பி இருந்தால் இப்படி பேச்சு வாங்கி இருக்க தேவையில்லை” ரிஷியிடம் கத்தி விட்டு,
பூபாலனையும் அவன் தந்தையும் பார்த்து, “போங்கடா. இதுக்கு மேல இந்த வீட்டுக்குள்ள நீங்க வரவே கூடாது” சத்தமிட்டாள்.
பாட்டி வெளியே வர, மான்விழி அனைத்தையும் பார்த்து அழுது கொண்டிருந்தார்.
“விழி என்ன சத்தம்? எதுக்குடி அழுற?” பதறினார்.
“என்ன ஸ்ரீ? இவ்வளவு கோபம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது” பூபாலன் அவள் கையை பற்ற, அவனை தள்ளி விட்டு, “ஸ்ரீ மேல கையை வைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத” கத்தினான் ரிஷி.
“என்னடா பண்ணுவ?” அவன் திமிறாக கேட்க, ரிஷி அவனை அடிக்க, பூபாலன் ரிஷியை அடிக்க கைகலப்பானது.
“டேய் நிறுத்துங்கடா” மான்விழி சீற்றமுடன் கத்தி தன் மகன் ரிஷியிடம், “நிதியை அழைச்சிட்டு உள்ள போ” என்றார்.
“மாம்? நாங்க போன பின் இவனை தூக்கி வச்சி கொஞ்சவா? இவன் வீட்டுக்கு வந்தால் நாங்க இனி வீட்ல இருக்க மாட்டோம்” சினத்தில் கத்தினான் ரிஷி.
“நீ வீட்டை விட்டு வெளிய போய் பிச்சையா எடுப்ப?” குணசேகரன் கேலியுடன் வாய் விட்டு சிரித்தார்.
“யார பார்த்து என்னடா சொன்ன?” பாட்டி ஆக்ரோசமாக அவர்களிடம் வந்தார்.
“பாட்டி ஒரு நிமிசம்”
“யாருடா பிச்சை எடுக்கப் போறது? பார்க்கலாமா? நீங்க தான் பிச்சை எடுப்பீங்க. நான் எடுக்க வைப்பேன்” ஸ்ரீநிதி தன் கணவன் கையை பிடித்து அவர்கள் முன் நிறுத்தி ரிஷியை பார்த்தாள்.
எனக்கு இப்ப எந்த வேலையும் இல்லை. இனி எனக்கான எல்லாம் வரும். அப்பொழுது நீங்க உங்க மூஞ்சிய எங்க வச்சுக்கிறீங்கன்னு பார்க்கிறேன். எதையும் சொல்லி செய்வதை விட நடந்த பின் உங்க முன்னாடி வாரேன். அப்பவும் நீங்க இப்படி இருந்தால் பார்க்கலாம்..என்றான்.
“நீ தான் வீட்டை விட்டு போறேன்னு சொன்னேல்ல? போ” பூபாலன் ஸ்ரீநிதியை பார்த்துக் கொண்டே பேச, “அவங்க எதுக்கு போகணும்? நீ போடா. உங்களை நம்பியதுக்கு என்னை நானே அடிச்சுக்கணும்” அழுதார் மான்விழி.
“சித்தி..” பூபாலன் அழைக்க,
“ஆமாடா வெளிய போ. உனக்கு அம்மா போல இருந்து பார்த்துக்கிட்டதுக்கு நல்லா பேசுறடா. ச்சீ..உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு” அழுது கொண்டே உள்ளே ஓடினார் மான்விழி. ஸ்ரீநிதியும் பாட்டியும் அவர் பின் சென்றனர்.
“சித்தி, நான்…” அவர் பின் பூபாலன் செல்ல எண்ண, அவன் மார்பில் கை வைத்து “வெளிய போடா” ரிஷி அவன் சட்டையை பிடித்து வெளியே தள்ளினான்.
“ரிஷி, தப்பு பண்ணீட்டடா? உன்னை சும்மா விட மாட்டேன் பாரு. உன்னோட கனவை அழித்து ஸ்ரீயோட நான் சேருகிறேன். அதை உன் கண்ணால் பார்ப்ப” சினமுடன் பூபாலன் தன் தந்தையுடன் வெளியேறினான்.
இரு நாட்கள் வீடே அமைதியாக இருந்தது.
அந்த கைக்கடிகாரம் பற்றிய விவரம் கிடைத்தும் சரியான பாஸ்வேர்டு இவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த டிஜிட்டல் கைக்கடிகாரம், அதன் விவரம் அனைத்தும் ஸ்ரீயின் அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது.
மறுநாள் காலை ரிஷி முன்னே கீழே வந்து விட்டான்.
“நிதியை எங்கடா?” மான்விழி கேட்க, “மேடம் ஆபிஸ் செல்ல தயாராகிட்டு இருக்காங்க” அவன் சொல்ல, பவிதாவும் ஜெய்யும் கை கோர்த்து வந்தனர்.
மாடர்ன் ஆடையில் எப்போதும் போல வந்தாள். சிறு வித்தியாசம். கழுத்தில் மாங்கல்யமும் நெற்றியில் திலகமும் மட்டும் இருந்தது.
“என்னடி ஆடை இது?” நளினி பவிதாவை திட்டி விட்டு, “ரிஷி உன்னோட பொண்டாட்டியும் இப்படி தான் வருவாளா?” கேட்டார்.
காஃபியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு எல்லாரையும் போல தன்வியும் காத்திருந்தாள்.
சிவப்பு நிற பிளைன் புடவையை விரித்து உடலை மறைத்து, தலையை விரித்து கிரிப் அடக்கிக் கொண்டு இடது கையில் கைக்கடிகாரத்துடன் கையில் சில பைல்களுடன் கீழே இறங்கி வந்தாள் ஸ்ரீநிதி. எல்லாரும் அவள் அழகில் மயங்கி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“வாவ்!” கையிலிருந்த கண்ணாடி கோப்பையை கீழே விட்டாள் தன்வி.
“தனு” வேகவேகமாக இறங்கி அவளிடம் வந்து, “பார்த்து பிடிக்க மாட்டாயா? நகரு” ஸ்ரீநிதி அவளை நகர்த்த, அவள் கையை பிடித்த தன்வி, “வாவ் நிது ரொம்ப அழகா இருக்க” பச்சென ஸ்ரீநிதி கன்னத்தில் முத்தமிட்டாள்.
வெட்கமுடன் அவள் எல்லாரையும் பார்க்க, பவிதா தன் கணவனை முறைத்து இடித்தாள்.
“பாருடி. இவள பார்த்து கத்துக்கோ” நளினி கூற,
“அத்த, எனக்கு இதான் கம்பர்ட்டா இருக்கும். அதான் போட்டேன். வீக்கு அவள் அணிந்திருக்கும் ஆடை தான் பிடிக்கும். நமக்கு பிடித்த ஆடை அணிந்தால் தான் நமக்கு நம் மேல அதிக நம்பிக்கை வரும்”
பவிதா புன்னகையுடன் ஸ்ரீநிதியை அணைத்து, “தேட் இஸ் மை லவ்லி நிது..”
“அடியேய், அதென்ன? எல்லாரையும் கட்டிப்பிடிக்கிற?” நளினி கேட்க, “தனுவும் இப்படி தான் கட்டிப்பிடிக்கிறா? யாரும் கேட்க மாட்டேங்கிறீங்க” தன்வியை கோர்த்து விட்டாள்.
“சரி சரி சாப்பிட வாங்க. பின் கிளம்பலாம்” சந்திரமுகன் கூற, “அவளை மட்டும் ஏதும் சொல்ல மாட்டாங்க” முணுமுணுத்தாள் பவிதா.