தாரகை 26

ரிஷி கதவை தாழிட்டான்.

எதுக்கு தாழிடுறீங்க?

“ஏற்கனவே ஒரு லாக்கை கண்டறிந்து சாவியை கஷ்டப்பட்டு எடுத்து தான் இதை கண்டறிந்தேன்” அந்த பெட்டியை அவள் கையில் கொடுத்தான்.

என்ன வச்சிருப்பான் அக்கா?

“தெரியலடா” ஸ்ரீநிதி கூற, விசிட்டிங் கார்ட்டை ஸ்ரீநிதியிடம் நீட்டினான் ரிஷி.

அவனை பார்த்துக் கொண்டே அதை பார்த்து அதிர்ந்தாள். இதிலுள்ள அலைபேசிக்கு கால் பண்ணேன். முதல்ல ரிங் போனது. மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் அணைத்து விட்டனர்.

ஸ்ரீநிதி தலையை பிடித்து, “கண்டுபிடிச்சிட்டானா? என்னிடம் சொல்லி இருக்காலாமே!”

என்ன கண்டுபிடிச்சிருக்கான்?

ஜோ போன வருடத் தொடக்கத்தில் பாரின்ல்ல இருந்து பிசினஸ் ஆட்கள் பேச நம்ம கல்லூரிக்கு வந்தாங்கள? அவர் தான் நிக்கோலஸ்..

அவர் என்ன சொன்னார்ன்னா..

பிசினஸ் சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் போட்டியாளர்களால் திருடப்படுகிறது இல்லை அவர்கள் அதை ஆட்களை வைத்து மாற்றி விடுகிறார்கள். இதனாலே பல திறமையான ஆட்களால் முன் வர முடியவில்லை. எதிர்கால சந்ததியினர் இந்த பிரச்சனையை தவிர்க்க ஏதாவது புது நடைமுறை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசினார்.

அன்றிரவு நாம ஏதாவது செய்யலாமா? உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுன்னு புகழ் கேட்டான்.

ஒரு பொருள் பத்திரமா இருக்கணும்ன்னா நம்ம உடலுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றேன்..

ஒரு மாதத்திலே அவன் அதற்கான தீர்வை கண்டறிந்து என்னிடம் மட்டும் சொன்னான்.

ரகசிய டிஜிட்டல் கைகடிகாரம்..

வாட்? ரிஷி கேட்க, யா..அதில் எல்லா விதமான கோப்புகளையும் பாதுகாப்புடன் வைக்கும் வசதியை பிரோகிராம் செய்து வைக்கலாம்ன்னு சொன்னான். ஆனால் அதை இம்பிளிமண்ட் செய்வான்னு எதிர்பார்க்கலை..

அப்ப ஜேடு? ரிஷி கேட்க, நிக்கோலஸ் பொண்ணு. கல்லூரி படித்துக் கொண்டிருந்தாள். அவ தான் பிரோகிராம் செய்து கொடுத்திருக்கணும்..

இதுல அந்த கைக்கடிகாரம் இருக்குன்னு சொல்றீயா?

“ஆமா, கண்டிப்பா கடிகாரம் தான். முடித்ததை கூட சொல்லவில்லை” வருத்தினாள் ஸ்ரீநிதி

சரி, அப்ப இதுக்கான சாவி? ஜோ கேட்டான்.

அவனிதில் எல்லாவற்றையும் பார்த்துட்டேன். எதிலும் இல்லை..

அவனிதில் இல்லை.

“ஜோ உன்னுடைய அலமாரி?” ஸ்ரீநிதி கேட்க, “என்னுடையதில் எப்படிக்கா?” ஜோ கேட்டான்.

ரிஷி அவனது அலமாரியை திறந்து, “அந்த லாக் இருக்கா?” பார்த்தான்.

ஸ்ரீ அந்த அலமாரி போல இதிலும் அந்த லாக் இருக்கு. இதுல சாவி இருக்குமோ?

பார்க்கலாம்.

“உன்னுடையதுக்கு சாவி எங்கடா?” ரிஷி கேட்க, “இந்த லாக்கை நான் பார்த்ததேயில்லை” ஜோ கூறினான்.

புகழ் அலமாரியின் லாக்கிற்கான சாவி எங்க? அதை வைத்து திறந்து பாருங்க..

திறந்தது. அதிலிருந்த சிறு பெட்டியில் சாவி இருந்தது. அதை எடுத்து தங்கநிற பெட்டியை திறந்தனர்.

சாதாரண டிஜிட்டல் வாட்ச் போல தான் இருந்தது.

“அவன் இன்னும் முடிக்கலையோ?” ரிஷி கேட்க, “இல்ல..கண்டிப்பா முடிச்சிருப்பான்” என்ற ஸ்ரீநிதி “எதையும் ப்ரெஷ் பண்ணாதீங்க. எப்படி இருந்ததோ அப்படியே உள்ள வையுங்க. இதுல சார்ஜ் போடுற வசதியும் இருக்க வாய்ப்பிருக்கு”.

இதை பற்றிய விவரம் கண்டிப்பாக அவன் வீட்டில் இருக்கும். இன்று இரவு அத்தை வீட்ல தான சாப்பிட போவோம். அப்ப பார்க்கலாம். அம்மாவிடம் கூட இதை பற்றி சொல்லாதீங்க ரிஷி ஜோவை பார்த்தாள் ஸ்ரீநிதி.

“நிக்கோலஸ், ஜேடை சந்திக்கணுமே!” ஜோ கேட்க, “அவங்க கால்லை எதுக்கு அணைத்து வைக்கணும்?” ரிஷி கேட்டான்.

ரிஷி நீங்க கால் பண்ணும் போது இந்தியா கால்ன்னு அவங்களுக்கு காட்டி இருக்கும். இந்த பிராஜெக்ட் எந்த அளவு நல்லதோ அதை விட கெட்டதும் கூட. யாரிடமும் காட்டிறக் கூடாதுன்னு மறைக்க கூட அணைத்து வைத்திருக்கலாம்.

ரிஷி, நீங்க மாமாக்களிடம் கூட சொல்லக் கூடாது. புரியுதா? ஸ்ரீநிதி கேட்டாள்.

“ஓ.கே” ரிஷி சொல்லி, “பாஸ்வேர்டை சொல்லுங்கடா” கேட்டான் ரிஷி. அவர்கள் கூற அதை போட்டான். உள்ளே போகவில்லை. அதிர்ந்து ரிஷி அவர்களை பார்த்தான்.

“அப்ப விவரம் இதுல தான் இருக்கோ ஜோ?” அதான் பாஸ்வேர்டை மாத்தி இருக்கானோ? கேட்டாள்.

“இப்ப என்ன பண்றது?” ஜோ கேட்க, நாங்க எதுக்கும் அவனறையில் பார்த்துட்டு வாரோம். பின் நாம என்ன செய்யலாம்ன்னு பார்க்கலாம். அதை உள்ள வையுங்க” என்று வைத்த பின் மூவரும் வெளியே வந்தனர்.

ரிஷி நாம வீட்டுக்கு சென்ற பின் உங்க வேலையை பார்த்துக்கோங்க என்றாள். அவன் தலையசைத்து ஜோவை பார்த்தான்.

புகழின் எண்ணத்துடன் அமர்ந்தான் ஜோ.

என்னடா இருந்தது? பவிதா கேட்க, அதான் தேவையில்லைன்னு சொல்லீட்டேல்ல. அப்புறம் எதுக்கு கேக்குற? திட்டினான்.

“போடா” எழுந்து ஸ்ரீநிதி அறைக்கு சென்றாள்.

மதியவேளை உணவுண்டு ஓய்வெடுக்க சென்றனர். ஜோ பனிமலர் அறையில் அவருடன் இருந்து கொண்டான்.

ரிஷி உறங்கிய பின் எழுந்து வெளியே சென்று நளினியை அழைத்தாள் ஸ்ரீநிதி.

வந்துடுறேன்…

“அத்த நேரா ஹோட்டல் வந்துடுங்க. நான் வந்துருவேன்” அலைபேசியை அணைத்து விட்டு “எவர் க்ரீன்” ஹோட்டலுக்குள் ஸ்ரீநிதி செல்ல, “நிது” கையை ஆட்டினார் நளினி.

“அத்த அவ இன்னும் வரலையா?” ஸ்ரீநிதி கேட்க, “வந்துட்டேன்” இழுவையுடன் அவர்கள் முன் வந்து நின்றாள் ஆருத்ரா.

வாங்க அறைக்கு போகலாம். மூவரும் சென்றனர்.

“உட்காரு” ஸ்ரீநிதி சொல்ல, “என்ன பேசணும்? பேசிட்டு கிளம்பு” என்றாள் திமிறாக ஆருத்ரா.

நளினி சினமுடன் அடிக்க கையை தூக்க முற்பட்டார். அவர் கையை அழுத்தி பிடித்து, ரிஷியை ஆருத்ரா மிரட்டியதை பற்றி கேட்டாள் ஸ்ரீநிதி.

ஆருத்ரா அமைதியாக நின்றாள்.

“உனக்கு பணம் வேணும்ன்னா நேரடியாகவே தாரேன். ஆனால் நீ அவரை தொந்தரவு செய்யாத. ரொம்ப குடிக்கிறார்” வருத்தமுடன் பேசினாள் ஸ்ரீநிதி.

அவளை ஒரு பார்வை பார்த்து, “எனக்கு பெருசா ரிஷி மேல விருப்பமெல்லாம் இல்லை. அவனை அடைந்தால் சொத்து கிடைக்கும்ன்னு தான் அவனுடன் நெருக்கமாக பழகினேன். உன்னோட காதல் எனக்கு வியப்பா தான் இருக்கு. உன் புத்திசாலித்தனம், திறமைக்கு அவன் வொர்த்தே இல்லை. போயும் போயும் அவனை காதலித்து திருமணம் செய்து அவன் பக்கம் நான் வரக் கூடாதுன்னு பணம் கொடுக்க வந்திருக்க?” ஏளனமாக ஸ்ரீநிதியை பார்த்தாள்.

வெறித்த ஸ்ரீநிதி அவளது கையை இழுத்து பின் திருக, கத்தினாள் ஆருத்ரா.

இங்க பாரு. நான் இப்ப வந்தது என் புருசனோட நல்லதுக்காகவும் உன் குழந்தைக்காகவும் தான். அவரை பற்றி பேச உனக்கென்ன அருகதை இருக்கு? அவர் இப்ப இல்லைன்னாலும் பெரிய சிங்கர் ஆவார்.

ஸ்ரீநிதி ஆருத்ரா கையை விட்டு, உன்னோட குழந்தைக்காகவும் உங்க பாதுகாப்புக்காகவும் பாரின்ல்ல ஏற்பாடு செய்றேன். இனி அவரிடம் பேசுவதை நிறுத்திடு. அவர் இனியாவது நிம்மதியாக அவருக்கு பிடித்ததை செய்யட்டும்.

“எனக்கு பாதுகாப்பா?” ஆருத்ரா சிரிக்க, ஆமா உனக்கு தான் இப்ப பாதுகாப்பு அவசியம். உன்னோட மாமனார் அவர் ஆளுங்ககிட்ட உன்னையும் உன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொல்ல சொல்லி ஆர்டர் போட்டிருக்கான். இப்ப கூட ஹோட்டலுக்கு வெளிய உன்னை கொல்ல ஆட்கள் இருக்காங்க. நீயும் உன் குழந்தையும் பாதுகாப்பா இருக்கணும்ன்னா வெளிய நீ செல்லவும் ஊதா நிற கார் வரும். அதில் ஏறி ஏர்ப்போர்ட் போயிரு. ஒரு கோடி இருக்கு. இது உனக்காகவும் குழந்தைக்காகவும் அவளிடம் கிரிடிட் கார்ட்டை நீட்டினார் நளினி.

அதை பறித்த ஸ்ரீநிதி, “அத்த என் புருசனுக்காக நான் என்னோட பணத்தை தாரேன்” என்றாள்.

“நீ பணம் வச்சிருக்கியா? பைத்தியக்கார ஹாஸ்பிட்டலில் இருந்து வந்தே கொஞ்ச நாள் தான் ஆகுது. அதுக்குள்ள எப்படி சம்பாதிச்ச?”

“நான் சம்பாதிக்கல. விற்றேன்” என்றாள் ஸ்ரீநிதி.

நிது விற்றாயா? எதை?

என்னோட பெயிண்ட்டிங்ஸ், நான் தைத்து டிசைன் செய்து வைத்திருந்த ஆடைகள், என்னுடைய சில பொருட்கள்…

அவளது ஹண்ட் பேக்கை திறந்து, “இதுல இரண்டு லட்சம் இருக்கு. வச்சுக்கோ. இது காலியானால் நாங்க பொறுப்பில்லை. வாழ்க்கை முழுவதும் உனக்காக யாரும் பணம் கொடுக்க மாட்டாங்க. உன்னோட திறமையை வைத்து பிழைச்சுக்கோ. உனக்கு வேலைக்கு போக உன் குழந்தை தடையாக இருக்கக் கூடாது என்று தான்..” பின்னே திரும்பி “அஞ்சனாம்மா” அழைத்தாள். இவங்க உன் வாழ்நாளில் எப்போதும் துணையா இருப்பாங்க..

ஆருத்ரா அவரை திகைத்து பார்த்தார்.

ஸ்ரீநிதி ஆருத்ரா கையை பிடித்துக் கொண்டு, “குழந்தையை உன்னை போல வளர்த்திடாத. யாருடனும் அவன் கை ஏந்தக் கூடாது. உன்னோட அம்மா குழந்தையை நல்லா பார்த்துப்பாங்க. குழந்தையுடனும் நேரம் செலவழி.

தவறான வேலை எதையும் செய்து உன் அம்மாவையும் உன் குழந்தையையும் கஷ்டப்படுத்திறாத. உன் அம்மா கோபத்தில் உங்களை விட்டு சென்றால் திரும்பி வர மாட்டாங்க. உனக்கான எதிர்காலம் இனி நல்லதாக இருக்கும்”.

“மாம்..” ஆருத்ரா தன் அம்மா அஞ்சனாவை அணைக்க, நான் குழந்தைக்காக தான் வந்தேன். என்ன இருந்தாலும் பெத்த வயிறாச்சே!

மாம்..டாட்..

“அவர் என்னை தலை முழுகிட்டார்” கண்ணீருடன் தன் மகளை பார்த்தார்.

மாம்..

உனக்காகவும் குழந்தைக்காகவும் அவரை விட்டு வந்துட்டேன். போகலாமா? இல்லை இங்கே யார் கையிலும் மாட்டி சாகணுமா? கேட்டார்.

“போகலாம் மாம்” ஸ்ரீநிதியை பார்த்து, “சாரிடி உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் நீ என்னையும் என் குழந்தையையும் காப்பாற்றி, யாருமில்லாமல் தவித்த எனக்கு என் அம்மாவை அழைச்சிட்டு வந்துட்ட” அழுது கொண்டே அணைத்தாள்.

“போதும். உன் நடிப்பை வேலையில் காட்டு” நளினி கூற,

“ஹாம்…உன்னால ஏன் சினிமாவில் நுழைய முடியாது?” ஸ்ரீநிதி கேட்க, “யா..ஐ கேன்” புன்னகையுடன், “நான் அடிக்கடி உன்னிடம் பேசுவேன் நிது” அவள் அம்மாவும் நளினி கூறிய காரில் ஏறினார்.

“சார் பத்திரமா ஏர்போட்ல்ல இறக்கி விட்ருங்க” நளினி கூற, ஓ.கே என்று போலீஸ் ஒருவர் காரை கிளப்ப, அக்காரின் பின் பைக்கில் அவரின் நண்பர்கள் ஆருத்ரா, அவள் அம்மாவின் பாதுகாப்பிற்காக சென்றனர்.

நிம்மதியுடன் ஸ்ரீநிதி பெருமூச்சு விட்டு நளினியை பார்க்க, நளினி அவளை அணைத்து, “உன்னோட மனசு யாருக்கும் வராதும்மா. ரிஷி உன்னை மனைவியாக அடைந்து கொண்டதற்கு பாக்கியம் செய்திருக்கணும்” என்றார்.

உறக்கம் கலைந்த ரிஷி படுக்கையை தடவினான். ஸ்ரீநிதி இல்லை எனவும் அவன் வீட்டில் இருப்பது போல எண்ணி கண்கள் மூடிய நிலையிலே கதவை திறந்து நேராக அடுக்கலை சென்று அவள் என்று நினைத்து பனிமலரை பின்னிருந்து அணைத்தான். அவர் கத்தி விட்டார்.

வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

இமையை பிரித்து, “ஆன்ட்டி” வேகமாக நகர்ந்தான் ரிஷி.

பனிமலர் அதிர்ந்து நின்றார்.

ஜோ ரிஷியை பார்த்து, “நிதுவுக்கும் அம்மாவுக்கும் வித்தியாசம் தெரியலையா மாமா?”

பவிதா குபீரென சிரித்தாள்.

எங்க அறையில இருக்கிற நினைவில் தான். “சாரி ஆன்ட்டி” ரிஷி ஜோவை பார்த்தான்.

“ஏன்டா? மானத்தை வாங்குற?” ஜெய் தலையில் அடித்தான்.

“ஸ்ரீ எங்க? அறையில இல்லை” ரிஷி ஜோவை பார்த்தான்.

“அவ ப்ரெண்ட பாக்க போறதா சொல்லீட்டு போனா?” பனிமலர் கூற, “எங்களுக்கு தெரியாத அவளோட ப்ரெண்டா?” பவிதா கேட்க, “ஆமா எங்களுக்கு தெரியாமல் என்ன ப்ரெண்டு?” ஜோவும் கேட்டான்.

“ஷாலினியை பார்க்க போயிருப்பாளோ?” பவிதா கேட்க, “இரு நான் கால் செய்து பார்க்கிறேன்” அவன் கூற, தனுவின் அழைப்பு ஜோவிற்கு வந்தது.

ஆருத்ராவுடன் நளினியும் ஸ்ரீநிதியும் அறைக்குள் செல்வதை பார்த்த சாதனா தன்வியிடம் கூற, அதை அவள் ஜோவிடம் கூறினாள். அவன் முகம் மாறியது.

“ப்ளீஸ்டா, அண்ணாவுக்கு ஏதும் தெரியாமல் வா. நாம பார்க்கலாம்” அழைத்தாள்.

“வாரேன்” பல்லை கடித்து வைத்த ஜோ, “அம்மா நான் வெளிய போயிட்டு வாறேன்” ரிஷியை பார்த்துக் கொண்டே சென்றான்.

“என்னாச்சுடா?” பவிதா ஜோ பின்னே செல்ல, அவன் விறுவிறுவென பைக்கை எடுத்து சென்று விட்டான்.

“நிதுவை பார்க்க தான் போறான்னு நினைக்கிறேன். அவன் பார்த்துப்பான். வாங்க நம்ம வேலையை பார்ப்போம்” பவிதா அறைக்கு சென்று மீண்டும் படுத்தாள். ஜெய்யும் அறைக்கு செல்ல பனிமலர் தன் வேலையை தொடர்ந்தார்

ரிஷி வெளியே வந்தான்.

சஞ்சனாவின் தாய் வெளியே ஓடி வந்து வாமிட் செய்தார். சஞ்சனா அவர் காலை கட்டிக் கொண்டு நின்றாள்.

ரிஷி இருவரையும் பார்த்து, “சஞ்சு என்ன செய்ற?” அவர்களிடம் வந்தான்.

அம்மாவுக்கு வாமிட் வந்தது? அதான் உதவ வந்தேன்.

“எது? இது உனக்கு உதவியா?”

“எம் பிள்ள என்னை பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறதே பெரிய விசயம்” வாயை கொப்பளித்து விட்டு திண்ணையில் அமர்ந்தார். சஞ்சனாவும் அவள் அம்மாவுடன் அமர்ந்தாள். ரிஷியும் அவர்களுடன் அமர்ந்தான்.

“உன்னை எங்க யாருக்குமே பிடிக்காது” சஞ்சனா அம்மா ரிஷியை பார்த்தார். அவன் முகம் வாடியது.

புகழை தவிர நிதுவுக்கு யாரும் பொருத்தமா இருக்க முடியாது. நிது காதலுக்காக உன்னை நாங்க எல்லாரும் ஏத்துக்கிட்டோம்..

“அப்படி நான் என்ன செய்தேன்?” ரிஷி கலக்கமுடன் கேட்டான்.

என்னவா? நல்லா குடிப்ப. உருப்புடாத நண்பர்களுடன் நேரத்தை வீணடிப்ப. இதுவரை ஏதாவது ஒன்று சரியா செஞ்சிருப்பாயா? உன்னோட குடும்பம் பெருமையா பேசும் படி ஏதாவது செய்திருக்கீயா?

பொண்ணுங்களுக்கு அவங்க காதலனையோ இல்லை கணவனையோ யாரும் அவமானப்படுத்தினால் ஏத்துக்க மாட்டாங்க. அது படி இனியாவது நடந்துக்கோ. அவளுக்கு தான் புகழோட காதல் புரியல. நீயாவது அவள் காதலை புரிஞ்சு நடந்துக்கோ.

ம்ம்! கண்டிப்பா ஸ்ரீ பெருமைப்படுமாறு இனி நடந்துப்பேன். அப்புறம்..புகழ் பற்றி இனி பேசாதீங்க.

“ஏன் பேசக் கூடாது?” சோர்வுடன் கேட்டுக் கொண்டே தூணை பிடித்தார்.

“அம்மா” சஞ்சனா அழைக்க, என்னாச்சு? ரிஷி சஞ்சனா அம்மா கையை பிடித்தான்.

“சஞ்சு, குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வா” ரிஷி கையை எடுத்து நன்றாக சாய்ந்து அமர்ந்தார்.

“என்ன செய்யுது? ஹாஸ்பிட்டல் போகலாமா?” கேட்டான் ரிஷி.

இது எல்லா கர்ப்பிணி பொண்ணுகளுக்கும் இருக்கிறது தான்.

“வேறென்ன செய்யும்?” ரிஷி கேட்க, ஒவ்வொரு மாதத்தை பற்றியும் கூறினார் சஞ்சனா அம்மா..

ரிஷியின் எண்ணம் ஸ்ரீநிதியிடம் பதிந்து, என்னோட ஸ்ரீக்கும் இப்படி தான் இருக்குமோ? சிந்தித்தான்.

“இதுவரை எதுவும் எங்களுக்குள் நடக்கலை. அவளுக்கு இதில் விருப்பமிருந்து நான் அவளை தடுத்து கஷ்டப்படுத்திட்டு இருக்கேனோ! இன்று கேட்டு விடணும்” மனதில் எண்ணி சஞ்சனா அம்மா கையை பிடித்து, “புகழை விட என்னோட ஸ்ரீயை நான் நல்லா பார்த்துப்பேன்” என்றான்.

அவர் புன்னகையுடன், “இனி நீங்க தான் அவளுக்கு எல்லாமே! பார்த்துக்கிட்டா சந்தோசம் தான்” தண்ணீரை அருந்தி அவர் வீட்டிற்குள் சென்றார்.

ஸ்ரீநிதியின் வீட்டிற்கு வெளியே அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தான் ரிஷி.

“மாப்பிள்ள உள்ள வாங்க. நிது வந்திருவா” பனிமலர் அழைத்தார்.

“அவ வரட்டும். வாரேன் ஆன்ட்டி” என்று வருகிறாளா? பார்த்துக் கொண்டிருந்தான். சஞ்சனா அம்மா அவனை எட்டிப் பார்த்து குறுஞ்சிரிப்புடன் உள்ளே சென்றார்.

சற்று நேரத்தில் ஜோ பைக்கில் அவனுடன் வந்தாள் ஸ்ரீநிதி. அவள் முன் சென்று கையை கட்டி நின்றான் ரிஷி. ஸ்ரீநிதி அவனை பார்த்துக் கொண்டே நகர்ந்து செல்ல, ஜோ அவனை முறைத்துக் கொண்டே சென்றான்.

“ஸ்ரீ எங்க போன?” உறங்கும் அவன் ஆரம்பிக்க, ஓடி வந்து அவன் வாயை மூடினாள் ஸ்ரீநிதி.

“இதை பேசுற இடமா இது?” முணுமுணுத்தாள்.

“நான் என்ன செஞ்சுட்டேன் தெரியுமா?” அவள் கையை எடுத்து விட்டு அவள் காதில் பனிமலரை மாற்றி கட்டிப் பிடித்ததை சொன்னான்.

திகைத்து அவனை பார்த்த ஸ்ரீநிதி வீட்டை பார்த்தாள். பவிதா அவளை எட்டி பார்க்க, “அம்மா என்ன சொன்னாங்க? அடிச்சிட்டாங்களா?” கேட்டாள்.

“இல்லை” தலையசைத்து, “ஆன்ட்டி பயந்துட்டாங்க” பாவமாக முகத்தை வைத்தான்.

ஸ்ரீநிதி சிரித்தாள்.

வாங்க. உள்ள போகலாம்.

“எங்க போன? நீ சொல்லாமல் நான் உள்ளே வர மாட்டேன்” பிடிவாதமாக நின்றான்.

“இப்ப நீ உள்ள வரலை. கோபத்துல்ல உன்னோட டிக்கெட்டை கிழிச்சி போட்ருவேன்” டிக்கெட்டை அவனிடம் காட்டினான் ஜோ.

“இது கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம். இவ்வளவு சாதாரணமா சொல்ற?” ஸ்ரீநிதி கையை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தான் ரிஷி.

மாலை தேனீரை பருகி விட்டு, இரு ஜோடிகளும் அழகி, தர்மேந்திரன் வீட்டிற்கு சென்றனர்.

அழகியும் தர்மேந்திரனும் புகழின் அறைக்குள் யாரையும் செல்லவே விட வில்லை.

இரவு உணவை முடித்து விட்டு பவிதாவும் ஜெய்யும் கிளம்ப, “அண்ணா நீ கிளம்பு. இன்று நாங்க இருந்துட்டு வாரோம்” என்றான் ரிஷி.

“நீயா? நீ இங்க தங்கப் போறீயா? உன்னோட வசதிக்கு எங்க அத்தை வீடு எப்படி பத்தும்?” பவிதா ஏளனமாக ரிஷியை பார்த்து கேட்டாள்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. ஸ்ரீ இருக்கால்ல. நானும் இருப்பேன்.

“அச்சோ! இங்க கொசுக்கடிக்கும். பூச்சி வரும். நைட் பைப்ல்ல தண்ணீ வராது” பவிதா அவனை வெறுபேற்ற, “சித்தி, சித்தப்பாவே அமைதியா இருக்காங்க. உனக்கென்னடி போடி” என்றான் சினமுடன்.

புடவையை வரிந்து கட்டிக் கொண்டு, “நான் உனக்கு அண்ணி. ஒழுங்கா மரியாதையா பவிதா அண்ணீ கூப்பிடணும் புரியுதா?”

அண்ணீயா? நீயா? அவளை ஆராய்வு பார்வையுடன், “உன்னையெல்லாம் அண்ணீன்னு கூப்பிட முடியாது போடி” என்றான்.

“கிரிஷ், இவன் என்னை அண்ணீன்னு கூப்பிட மாட்டேங்கிறான்” ஜெய்யை பார்த்து சிணுங்கினான்.

தலையில் வை வைத்த அவன், “கூப்பிட்டு தொலையேன்டா..”

“முடியாது. வா ஸ்ரீ நாம அறைக்கு போகலாம்” ரிஷி ஸ்ரீநிதி கையை பிடித்து நகர, அவனை மறித்து நின்றார் தர்மேந்திரன்.

உனக்கு தானப்பா எங்க புகழை பிடிக்கலை. இது அவனோட வீடாச்சே! உனக்கு எப்படி பிடிக்கும்? உன்னால இங்க இருக்க முடியாது. கிளம்புப்பா என்றார்.

“மாமா” ஸ்ரீநிதி அழைத்து அழகியை பார்க்க, அவர் புன்னகைத்தார்.

அப்படியெல்லாம் இல்லை. ஸ்ரீக்கு அவனை பிடிக்கும்ல்ல? எனக்கும் அவனை பிடிக்கும்?

எவனை? பவிதா கேட்க, “அண்ணா உன்னோட பொண்டாட்டி இதுக்கு மேல எங்கிட்ட பேசக் கூடாது. உனக்கு புரியுதா?”

அப்படியெல்லாம் நான் அவளை கட்டாயப்படுத்த மாட்டேன். பப்ளிம்மா நீ வர்றீயா? இல்லையா?

அழகியை அணைத்து முத்தமிட்டு, தர்மேந்திரனை அணைத்து, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கோங்க. மாமா உங்க தொந்தி இறங்கிடுச்சு.. கொஞ்சம் ஏத்துங்க. பியூட்டி வரவா? அழகி கன்னத்தை தட்டி விட்டு, “பை பை” என்று “நிது உன்னோட புருசனை பார்த்து சீக்கிரம் கூட்டிட்டு வா. இன்று போல இரண்டு நாள் இங்க உட்கார்ந்து சாப்பிட்டான்னா உனக்கே அடையாளம் தெரியாமல் போயிடும். அப்புறம் இந்த சிங்கரை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்”.

போடி மெண்டல்….ப்ளவர் வாஷில் இருந்த பூவை எடுத்து பவிதா மீது தூக்கி போட்டான். ஜெய் அவளை இழுத்து சென்று விட்டான்.

“இவன் சண்டை போடுவது போல இல்லையே!” மனம் வியர்த்தது ஸ்ரீநிதிக்கு. லேசான தலைசுற்றலும் வந்தது.

“பொண்ணா சித்தப்பா இவ? ரௌடி.. வாயாடி…” பவிதாவை ரிஷி திட்டிக் கொண்டிருக்க, மயங்கி சரிந்தாள் ஸ்ரீநிதி. மூவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.