தாரகை 25
வீட்டிற்கு வந்த ஜோடிகளை கவனித்துக் கொண்டிருந்தார் பனிமலர்.
வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தாள் சஞ்சனா.
“ஹே சஞ்சு” பவிதா அவளிடம் வந்தாள்.
“உன்னை பார்க்க நான் ஒண்ணும் வரலை. அத்தை..ஜோவும் அந்த லூசு பொண்ணும் டிவில்ல வர்றாங்க” அவளாகவே டிவியை போட்டாள்.
ரிஷி பவிதாவை பார்த்து, “தேவையா உனக்கு?” சிரித்தான்.
ஜோவும் லூசு பொண்ணுமா?
ஸ்ரீநிதி ரிமோர்ட்டை எடுத்தாள்.
“லூசுன்னு சொல்லாத. அவனுக்கு தெரிந்தால் கத்துவான்னு உனக்கு தெரியாதா?” சஞ்சனா கன்னத்தை பிடித்து இழுத்தார் பனிமலர்.
“நீ திட்ட மாட்டேல்ல மலர்?”
பவிதா சிரிப்புடன், “அதான் கிள்ளிட்டாங்களே!” வெக்களம் காட்டினாள்.
போடி..
டியா?
யாரு அந்த லூசு பொண்ணு?” ஸ்ரீநிதி கேட்க, பனிமலர் ஜெய், ரிஷியை பார்த்தார்.
“எங்கள எதுக்கு அத்தை பாக்குறீங்க?” ஜெய் கேட்டான்.
தன்வியை தான் லூசுன்னு சொல்றா.
“தனுவா?” ரிஷி சீரியசாக கேட்டு விட்டு, “சரியா சொன்ன” சிரித்தான்.
சஞ்சனா அவனருகே வந்து, அவள பார்த்தால் மட்டுமல்ல உன்னை பார்த்தாலும் லூசு மாதிரி தான் இருக்கு..
என்ன?
ஆமா, உன்னோட தங்கையை சொன்னா. கோபப்படணும். பல்லை காட்டுற..
நான் என்னோட தம்பிக்காக எல்லாருடனும் சண்டை போடப் போறேன்.
“ஏன் உன்னோட தம்பிக்கு சண்டை போடத் தெரியாதா?” ரிஷி கேட்டான்.
“ஐய்யோ நிது! நீ எப்படி தான் இவனை சமாளிக்கிறியோ? இது கூட தெரியல” தலையில் கை வைத்தான்.
எல்லாரும் புன்னகையுடன் சேனலை பார்த்து அதிர்ந்தனர்.
“முதல்லவே சொன்னேல்லடா. அவனுகளோட சேராதன்னு. உம் மேல பழிய போட்டு எவ்வளவு நேக்கா நகன்டுருக்கானுக பாரு” ஜெய் ரிஷியை திட்டிக் கொண்டிருந்தான்.
“வீ ஷாலினியா அந்த பொண்ணு?” ஸ்ரீநிதி அதிர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நிது” பவி பேசும் முன் அதில் ஒருவர் தாலி பற்றி கேட்டதை அதிர்ந்து, “என்னடி இந்த நிலையில் எவன்டா தாலி கட்டினான்?” பவிதா அதிர்ந்து கேட்டாள்.
ஜோ இவளுக்காக தான கேட்டான். ஐயர் சொன்னதை இவன் செய்திருப்பானோ? அதனால் தான் இந்த பொண்ணு விழித்திருக்குமோ? ஜெய் கேட்டான்.
பனிமலர் அதிர்ந்து, “ஆமா மாப்பிள்ள நம்ம அம்மன் ரொம்பவே சக்தி வாய்ந்தவங்க” அலைபேசியை எடுத்து ஐயருக்கு அழைத்து கேட்டார்.
பேசி அணைத்து விட்டு, இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டியவன் ஐயர் கூறும் போது கோவில்ல தான் இருந்திருக்கான்.
“இல்லையே! நம்மை தவிர அங்க யாரும் தெரியலே!” ரிஷி கூற, “அப்படி உறுதியாக சொல்ல முடியாது” ஜோ வந்தான். அவனுடன் தனுவும் வந்தாள்.
“ஆன்ட்டி எப்படி இதெல்லாம் நடக்கும்? வெட்ட வெளியில் விளக்கை அணையாமல் பார்த்து இங்கே வரும் வரை பார்த்திருக்கான்னா ஆச்சர்யமா இருக்கே!” தன்வி பனிமலரிடம் கேட்டாள்.
முடியாதது எதுவுமில்லைம்மா. நாம மனசுல தீவிரமா எதை நினைக்கிறோமோ அதான் நடக்கும். மனதளவில் வலிமையான ஒருவன் தான் அந்த பொண்ணு ஷாலினி கழுத்துல்ல தாலி கட்டி இருக்கான்.
யாருன்னே தெரியல ஆன்ட்டி. ஷாலுவும் அவ அண்ணனும் சொல்ல மாட்டேங்கிறாங்க. குடும்பத்தினருடன் திருமணம் நடக்கும் போது பார்த்துக்கோங்கன்னு சொல்றாங்க…
“சரி விடுங்க. பார்க்கலாம்” சஞ்சனாவை பார்த்த ஜோ, “இங்க என்ன பண்ற?” கேட்டான்.
“உன்னை டிவில்ல பார்க்க தான் வந்தேன்” சஞ்சனா தன்வியை முறைத்தாள்.
“தனு உனக்கு வேற புது பெயரெல்லாம் இருக்கு. என்னிடம் சொல்லவேயில்லை” பவிதா கேட்டான்.
“வேற பெயரா?” அவள் ரிஷியை பார்க்க, “உன்னால எனக்கும் அதே பேர் வந்துருச்சு” சொல்லி முறைத்தான் அவன்.
ஜோ புரியாமல் பவிதாவை பார்த்தான்.
“சஞ்சு தான் அருமையான அழகான பெயர் வச்சிருக்கா” பவிதா ரிஷியை பார்த்து சிரித்தாள். ஜோவிற்கு புரிந்து விட்டது.
“வா தனு. நாம கிளம்பலாம்” அவள் கையை பிடித்தான்.
ஜெய் இருவரையும் பார்த்து, “நீங்க என்ன ஜோடி போட்டு திரியுறீங்க?” கேட்டான்.
சஞ்சனா தனு கையை தட்டி விட்டு, “அவ போய்ப்பா ஜோ. வா நாம மூவி பார்க்கலாமா?” கேட்டாள்.
தன்வி ஜோவையும் சஞ்சனாவையும் முறைத்தாள்.
“தனு நானில்லை. இவ தான். நீயே பேசுக்கோ” சஞ்சனா கையை எடுத்து விட்டு, “மாமா சாப்பிட்டீங்களா?” இருவரையும் பார்த்தான்.
ம்ம்! ஜெய் கூற, ரிஷி தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீநிதி வருத்தமுடன் அமர்ந்திருந்தாள்.
“அக்கா” ஜோ அவளருகே வந்தான்.
“ஏன்டா ஷாலுன்னு சொல்லலை?” அழுது கொண்டே அவனை அடித்தாள்.
“நீ வா” ஜோ அவளை அவனறைக்கு அழைத்து சென்று சமாதானப்படுத்தினான். பின் தனுவை அவள் வீட்டில் விட்டு வந்தான்.
மதிய சமையல் வேலையை பனிமலரும் ஸ்ரீநிதியும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெய் ஆபிஸ் வேலையாக லேப்பில் பார்த்துக் கொண்டிருந்தான். பவிதா ஸ்ரீநிதி அறையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
ரிஷி அவனது காதில் ஹெட் போனை பாட்டிக் கொண்டு டீப்பாயின் மீது காலை நீட்டி அமர்ந்திருந்தான்.
“மாமா” ஜோ அழைக்க, ஜெய் நிமிர்ந்து அவனை பார்த்தான்.
“ரிஷி” சத்தமாக ஜோ அழைக்க, அப்பொழுது தான் முன் நிற்பவனை பார்த்தான் ரிசாத்பவன்.
சமையல் வேலை ஈடுபட்டிருந்தவர்கள் எட்டி பார்த்தனர்.
“மாமான்னு கூப்பிடு. பெயர் சொல்லி அழைக்காத ஜோ” சத்தமிட்டார் பனிமலர்.
அம்மா மாமான்னு கூப்பிட்டால் உன் மாப்பிள்ளைக்கு காது கேட்லை. நான் என்ன செய்றது?
என்ன மச்சான்? எழுந்து ரிஷி அவன் தோளில் கை போட்டான்.
ஜோ எதுவும் கூறாமல் டிக்கெட் ஒன்றை நீட்டினான்.
“என்னது?” ஜெய் கேட்க, “நம்ம சென்னைக்கு வேர்ல்டு பேமஸ் சிங்கர் அனைவரும் வரும் நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போகுது. அதுக்கான டிக்கெட்” ஜெய்யிடம் கூறி ரிஷியை பார்த்தான்.
“இந்த நிகழ்ச்சியில் உங்களை போல திறமையை மட்டும் கையில் வைத்திருப்பவர்கள் கலந்து கொள்ளப் போறாங்க. பத்து பேரை செலக்ட் பண்ணுவாங்க. விருப்பமிருந்தால் இதுல கலந்துக்கோங்க” ஸ்ரீநிதியை பார்த்தான்.
“தேங்க்ஸ் மச்சான்” ஜோ எதிர்பாராத நேரம் அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டான் ரிஷி.
எல்லாரும் அதிர்ந்து பார்க்க, ஸ்ரீநிதி அவனை முறைத்து பார்த்தான்.
“ஸ்ரீ என்னோட மச்சானுக்கு தான கிஸ் பண்ணேன்? அதுக்கு எதுக்கு இப்படி பாக்குறீங்க? நீ முறைக்கிற?” எல்லாரையும் பார்த்தான் ரிஷி.
ஜோ தன் அக்காவை பார்க்க, “இவர் இப்படி தான் ஈசிடா” அவள் உள்ளே சென்று விட்டாள்.
பனிமலர் தன் மகன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு உள்ளே வந்து சிரித்தார்.
“ஏன்டா?” ஜெய் கேட்க, “உனக்கு என்ன பொறாமையா இருக்கா? உனக்கும் கொடுக்கவா?” ரிஷி உதட்டை குவிக்க, ஜோ அடுக்கலைக்குள் ஓடி விட்டான்.
ஜெய் தன் தம்பியை முறைத்து அவன் வேலையை தொடர்ந்தான். தன் அண்ணனை பார்த்துக் கொண்டே அடுக்கலையை எட்டி பார்த்தான்.
ஜோ அவன் அம்மாவை முறைத்துக் கொண்டிருந்தான். அவர் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.
“மச்சான்” ரிஷி அழைக்க, ஸ்ரீநிதி ரிஷியை பார்த்து “உள்ள வாங்க” என்றாள்.
“நான் கிளம்புறேன்” ஜோ செல்ல, “மச்சான் உங்களிடம் பேச தான் வந்தேன்” ஜோ பின்னாலேயே சென்றான் ரிஷி.
ஜோ அவனறைக்கு செல்ல, ரிஷியும் அறைக்கு சென்றான்.
உட்காருங்க மாமா. என்ன பேசணும்?
இந்த டிக்கெட் எப்படி கிடச்சது?
உங்க ஃபேன் பாய் என்னிடம் கொடுத்தான்.
“என்னோட ஃபேன் பாய்யா? ஆமா காலேஜ்ல்ல நான் ரொம்ப ஃபேம்ல்ல” ஜோவை பார்த்து சிரித்தான்.
ஜோ அவனை முறைக்க,
சரி மச்சான். கோபப்படாதீங்க. என்னோட ப்ரெண்ட்ஸோ இல்ல குடும்பத்தினரோ எனக்காக இதெல்லாம் செய்ததில்லை. அதான் கொஞ்சமா ஹாப்பியாகிட்டேன். யாரு அவன்? கேட்டான்.
அது எதுக்கு உங்களுக்கு? உங்களுக்கு திறமை இருக்குன்னு புகழே சொல்லி இருக்கான். அதான் உதவினேன்.
“அது என்ன? எல்லாரும் புகழை பற்றியே புகழாரம் பாடுறீங்க?” உதட்டை சுளித்து கேட்டான் ரிஷி.
உன்னோட அக்கா அந்த பில்லோவ தொட கூட விட மாட்டேங்கிறா.. சண்டைக்கு வர்றா..
ஜோ சிரித்து, “பொறாமையா இருக்கா?” கேட்டான்.
அப்படி கூட வச்சுக்கோ. அவன் இருந்தால் அவனை ஃபீட் பண்ண என்ன செய்யணுமோ செய்வேன் என்றான் ரிஷி.
“அது உங்களால முடியாது மாமா. நிதுவை புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம். அது அவனால் மட்டும் தான் முடியும்” கண்கலங்கினான் ஜோ.
அப்படியெல்லாம் இல்லை. என்னால ஸ்ரீயை புரிஞ்சுக்க முடியும்.
முடியாது.
ஏன்டா மச்சான்?
ஏன்னா புகழ் நிதுவை அவ்வளவு காதலித்தான்..
ரிஷி சினமுடன் எழுந்தான்.
மாமா அவன் இருந்தால் தான நீங்க ட்ரை பண்ண முடியும்? அதான் அவன் இல்லையே! அதனால அமைதியா இருங்க.
என்னால ஸ்ரீயை பார்த்துக் கொள்ள முடியும்.
“முதல்ல சம்பாதித்தால் தான் அவளுக்கு வேண்டியதையாவது வாங்கித் தர முடியும். அப்புறம் பார்க்கலாம்” வெறுப்பேற்றினான் ஜோ.
என்னோட டாட் குடுத்த இந்த ஒரு வருட காலத்திற்குள் என்னை தெரியாத ஆளே இல்லைன்னு சொல்ற அளவிற்கு புகழை சம்பாதிக்கிறேன் பாரு சொடக்கிட்டான்.
“வாயால யாரு வேணும்ன்னாலும் வட சுடலாம் மாமா” வேண்டுமென்றே தூண்டி விட்டான் ஜோ.
நான் நினைச்சா எதிலிருந்தும் பின் வாங்க மாட்டேன். என்னோட டாடுக்கு பிடிக்காதுன்னு தான் இதுவரை என் கனவை கூட பெரியதாக எண்ணவில்லை. ஆனால் இப்ப சொல்றேன்.
“ஸ்ரீ சிங்கர் ரிஷியின் மனைவின்னு எல்லாரும் சொல்லும் அளவிற்கு உன் அக்காவிற்கும் என் குடும்பத்திற்கும் பெருமை தேடி தருவேன்” வீராப்பாக பேசினான்.
ஜோ அவனை பார்த்து நக்கலாக சிரித்தான்.
ஜோவை முறைத்து வெளியே வந்த ரிஷி நிற்காமல் வெளியே சென்றான்.
என்னாச்சு? ஸ்ரீநிதியும் அவள் அம்மாவும் அவன் பின்னே ஓடி வர, ஜெய்யும் ஜோவும் அவனை பார்க்க வந்தனர்.
“டேய், அவர்கிட்ட என்னடா சொன்ன?” ஸ்ரீநிதி சத்தம் போட்டாள்.
அவர்களை பார்த்து புன்னகைத்து “அக்கா உன் புருசன் பப்புக்கு போவாரு. அங்க போய் நல்லா குடிச்சிட்டு விழுந்து கிடப்பாரு. எதுக்கும் தயாரா இரு. எப்போதும் போல அவரை நீ தான பார்த்துக்கணும்” சத்தமாக கூறினான்.
பைக்கில் ஏறியவன் வேகமாக ஸ்ரீநிதியிடம் வந்து, “ஸ்ரீ காலையில நீ சொன்னேல்ல. நான் இனி குடிக்கவே மாட்டேன். உன் மேல பிராமிஸ்” சத்தியம் செய்து ஜோவை முறைத்தான் ரிஷி.
“இதே போல தான்க்கா. நம்ம கார்மென்ட்ல வேல பார்க்கும் சக்தி தன் பாட்டி மேல எக்ஸாம்ல்ல பாஸ் ஆகிடுவேன்னு சத்தியம் பண்ணிட்டு போனான். வந்து பார்த்தால் பாட்டி செத்து போச்சு” சொல்ல, “ஜோ” அவன் அம்மா சத்தமிட்டார்.
இவர்கள் சத்தத்தில் வெளியே வந்த பவிதா, ஜோவை அடிக்க கையை ஓங்க அதற்குள் ரிஷியின் கரங்கள் அவன் கன்னத்தில் பளீரென இடியாய் இறங்கியது. அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.
“ரிஷி” ஜெய் சத்தமிட, “நன் ஆஃப் யுவர் பிசினஸ்” அவனிடம் கத்தி விட்டு, “இதுக்கு மேல ஏதாவது ஸ்ரீயை வைத்து பேசின அடிக்க மாட்டேன். கொன்றுவேன்” விரலை நீட்டி எச்சரித்தான் ரிஷி.
பவிதாவும் ஸ்ரீநிதியும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
ஜோ மனதில் புன்னகைத்துக் கொண்டு, “என்னையவே அடிச்சிட்டேல்ல?” சீற்றமுடன் கேட்பது போல நடித்தான்.
“நீ என்ன பேசுன?” ரிஷி அவனை மறுகேள்வி கேட்க, “நான் கேட்டா பதில் சொல்லணும். இப்படி தான் அடிப்பீங்களா? நான் என்ன சின்னப்பையனா?”
தெரியுதுல்ல. சின்னப்பையன் இல்லைன்னு உனக்கே தெரியும். அவ உன்னோட அக்கா தான! பல்லை கடித்தான் ரிஷி.
பனிமலர் இருவரையும் பார்த்து, “மாப்பிள்ள வீட்டுக்குள்ள வாங்க” அழைத்தார்.
எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. போயிட்டு வாரேன் என்றான் ரிஷி.
“அதான! வெளிய போகாம இருக்க முடியாதுல்ல?” ஜோ மீண்டும் ரிஷியை வம்பிற்கு இழுத்தான்.
“ஜோ” பவிதா சத்தமிட்டாள்.
என்ன வீ? நீ அவனுக்கு சாதகமா பேசுறீயா?
இப்ப ரிஷியை நீ அவன் இவன்னு சொல்லாத. உனக்கு அவன் மாமா..
ஓ அப்படியா! நீ மட்டும் அவன்னு சொல்ற?
எனக்கு மாமான்னு வராது..
எனக்கும் வரலை.
ஸ்ரீநிதி ஜோவை பார்த்து விட்டு ரிஷி கையை பிடித்து, “உள்ள வாங்க” அழைத்தாள்.
நான் இப்ப வரலை. என்னோட வேலையை முடிச்சிட்டு வாரேன்.
“என்ன செய்யணும்?” ஸ்ரீநிதி கேட்டாள்.
“சொல்ல மாட்டேன். வாரேன்” அவள் கையை எடுத்து விட்டான்.
“பார்க்குற வேலையை இங்கேயே பார்க்கலாம். எங்ககிட்டயும் லேப் இருக்கு” ஜோ ரிஷியை நேர் நோக்கி கூறினான்.
இப்ப தான் ஏதோ சொன்ன?
ஆமா, சொன்னேன். வெட்டியா காதுல ஹெட் போனை மாட்டிட்டு இருக்கிறதால சொன்னேன்.
வெட்டியாவா? ரிஷி அவனருகே வந்தான்.
“சும்மா இருடா” ஸ்ரீநிதி தன் தம்பியை முறைத்தாள்.
அக்கா, இவர் அந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக தான் அவரை பற்றிய விவரத்தை பதியப் போறார். இங்கேயே பண்ணட்டும். அதான் புகழுடையது இருக்கே! என்றான் ஜோ.
எனக்கு அவனிதெல்லாம் தேவையில்லை. நான் என்னோடதை எடுத்துட்டு வாரேன்..
அக்கா, புகழை பார்த்து மாமாவுக்கு பொறாமையா இருக்காம்.
“டேய், நான் எதுக்கு போறேன்னு தெரிஞ்சே எதுக்குடா குடிக்க போறேன்னு சொன்ன?” ரிஷி ஜோவிடம் கேட்டான்.
“சும்மா கேட்டு பார்த்தேன். உங்க சத்தியத்தின் பின் நம்புகிறேன்” ஜோ கூற,
“ஆன்ட்டி தண்ணீர்” வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்தான் ரிஷி.
பனிமலர் ஜோவை முறைத்துக் கொண்டே, எடுத்து வந்து கொடுத்தார்.
ரிஷி குடித்து விட்டு, “எங்க லேப்?” கேட்டான்.
“அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே என்னறையில் தான் இருக்கும்” ரிஷியை ஜோ அழைத்து சென்றான்.
“அடப்பாவிகளா! பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திட்டு இருவரும் ஏதும் நடக்காதது போல போறீங்க?” பவிதா இருவர் பின்னும் சென்றாள்.
“எங்க வர்ற? நீ உள்ள வரக் கூடாது” அவளை ரிஷி வெளியே தள்ளி கதவை அடைத்தான்.
ஜோ புகழின் லேப்பை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு வெளியேறினான்.
பாஸ்வேர்டு சொல்லாமல் போறான்.
கதவை திறந்து, “நீங்க தான் கண்டுபிடிச்சி போடணும்” கதவை சாத்தி விட்டு சென்றான் ஜோ.
“ஸ்ரீ பர்த்டே டேட்டா இருக்குமோ? ஆமா நான் எதுக்கு இப்படி யோசிக்கிறேன்?”
“ஹி இஸ் நாட் மை ப்ரெண்டு. ஹிஸ் ஒன்லி ஒன் எனிமி” புகழ் இருக்கும் புகைப்படத்தை பார்த்து, இவனும் என்னை போல அழகா தான் இருக்கான். ஏன் ஸ்ரீ இவனை காதலிக்கவில்லை?
“வேண்டாம்..வேண்டாம்..ஸ்ரீ என்னை தான் காதலிக்கணும். நீ நல்லாவே இல்லை” புகழ் புகைப்படத்தை திட்டினான்.
“என்ன பாஸ்வேர்டுன்னே தெரியலையே!” தலையை பிடித்தான் ரிஷி. அவ்வறையை சுற்றி பார்த்தான்.
அலமாரியை திறந்தான்.
ஜோவின் அலமாரி என்று புரிந்து அவன் வைத்திருந்த பொருட்களை பார்த்தான். அதில் ஒரு வர்ணங்களால் தீட்டப்பட்ட கண்ணாடி கப் இருந்தது.
ஜோவின் பிறந்தநாளுக்காக தன்வி கொடுத்த பரிசு. நாம தனு கூட சென்று வாங்கியதா? இரு புருவத்தையும் உயர்த்தினான். பின் பக்கத்து அலமாரியை திறந்தான்.
புகழின் ஆடைகளும் சில பொருட்களும் இருந்தது. புகழின் ஆடையின் கீழே டைரி ஒன்று இருந்தது. அதை எடுத்து அமர்ந்தான். அதில் லவ் லெட்டர்ஸ் இருந்தது. பொண்ணுங்க புகழமுதனுக்காக கொடுத்த காதல் கடிதங்கள்.
“டேய், நீ என்னை விட பேமஸ் போல?” புகழின் புகைப்படத்தை பார்த்து விட்டு அவனுடைய டைரியை திருப்பினான்.
முழுவதும் ஸ்ரீ மட்டும் தான். அவளுக்கு பிடித்தது.. பிடிக்காதது..அனைத்தும் இருந்தது. பல பக்கங்களின் பின் பவிதா, ஜோ பற்றியும் எழுதி இருந்தான்.
படித்து ரிஷி டைரியை மூட, விசிட்டிங் கார்டு ஒன்று விழுந்தது.
பிரோகிராமர் நிக்கோலஸ் & ஜேடு என இருந்தது. அலைபேசி எண் இருக்க, அமெரிக்காவின் டெலி நம்பருடன் சேர்த்து விசிட்டிங் கார்டில் கொடுத்த நம்பரை அழுத்தினான்.
யாரும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான். அணைத்து வைக்கப் பட்டது.
யோசனையுடன் அதை மேசை மீது வைத்து அவனது டைரியை உள்ளே வைத்தான். மீண்டும் புகழின் அலமாரியை ஆராய்ந்தான்.
இதற்கடியில் என்று குனிந்து பார்க்க ஒரு லாக் இருந்தது. கீ எங்க இருக்கும்? சிந்தனையுடன் பார்த்தான். அவனது பொருட்களை கலைந்தான்.
சிறிய கண்ணாடி குவளையில் சிறு சாவி ஒன்று ரிஷி கண்ணில் தட்டியது. எடுத்து அதை திறந்தான். அதில் தங்க நிறத்தில் பெட்டி ஒன்று சற்று பெரியதாக இருந்தது. அதை வெளியே எடுத்தான்.
“என்ன இது? இதை திறக்கவும் சாவி வேணுமா?” சிந்தனையுடன் அதை வைத்து விட்டு வெளியே வந்தான்.
அண்ணா, ஜோ எங்க?
உள்ளிருந்து ஜோ, அவன் அம்மா, ஸ்ரீநிதி எட்டிப் பார்த்தனர்.
“வாவ்..செம்ம ஸ்மல்..நான் வெஜ்ஜா? என்ன சமையல்?” கேட்டுக் கொண்டே வந்தான்.
“வேலை முடிந்ததா மாப்பிள்ள?” புன்னகையுடன் பனிமலர் கேட்க, “எங்க அத்த? இந்த புகழ் என்ன பாஸ்வேர்டு வச்சிருக்கான்னே தெரியல. ஜோ உன்னிடம் ஏதாவது சாவி இருக்கா?” கேட்டான்.
என்னிடமா? இல்லையே! எதுக்கு கேக்குறீங்க?
“ஹம்..உங்க புகழ் எத்தனை சாவி தான் பயன்படுத்துவான்? தங்க நிற பெட்டிக்கான சாவி எங்க இருக்கு? ஸ்ரீ உனக்கு தெரியுமா?” கேட்டான்.
“அவனோட பொருளை நீங்க எதுக்கு எடுத்தீங்க?” ஸ்ரீநிதி சினமுடன் கேட்டாள்.
ஜோ தான் பாஸ்வேர்டை நானே கண்டுபிடிக்கணும்ன்னு சொன்னான். அதான் தேடினேன்.
ஹப்பா..அவனுக்கு எவ்வளவு லவ் லெட்டர்ஸ்? ஸ்ரீ நீயும் கொடுத்திருக்கியா? கேட்டான்.
“சேடிஸ்ட் ஒருத்தனால் தான் அதுக்கு வாய்ப்பில்லாமல் போச்சே” பவிதா ஸ்ரீயை முறைத்து கூறினாள்.
“ஹேய் நிறுத்துங்க. தங்க நிற பெட்டியா? எனக்கு எதுவும் தெரியாதே! நிது உன்னிடம் அந்த பெட்டி பற்றி சொல்லி இருக்கானா?” ஜோ கேட்டான்.
இல்லையேடா..
“எங்க இருந்து எடுத்தீங்க? இப்ப எங்க இருக்கு?” ஜோ கேட்க, ஏதோ என எண்ணி ஜெய் அவன் வேலையை தொடர்ந்தான்.
புதையல் எதுவும் கண்டுபிடிச்சிருக்கானோ?
“புதையல் வைக்க இந்த பெட்டி போதாது” ரிஷி அவளை முறைத்தான்.
“அப்ப எனக்கு தேவைப்படாது” தன் கணவன் அருகே சென்று அமர்ந்தாள் பவிதா.
“அம்மா நீங்க பார்த்துக்கோங்க. நான் என்னன்னு பார்த்துட்டு வாரேன்” ஸ்ரீநிதி கூற, “ஸ்ரீ உன்னிடமும் அவன் சொல்லலையா?” ரிஷி சிந்தனையுடன் கேட்டான்.
“இல்லை வாங்க. எங்க இருக்கு?” கேட்டு அவர்கள் அறைக்கு சென்றாள். ஜோவும் ரிஷியும் அவள் பின் சென்றனர்.