“நல்ல வேளை ரொம்ப அதிகமா டிரக்ஸ் கலக்கவில்லை” ஸ்ரீநிதி கூற, நளினி அவளை சந்தேகமுடன் பார்த்தார். அவளின் அசையவற்ற அந்த நிலை நினைவுக்கு வந்து அவர் மனதை உலுக்கியது.
மாமா, அவளுக்கு தேவை பணமும் பாதுகாப்பும். அதை கொடுத்து அவளை ரிஷியிடமிருந்து தள்ளி வைக்கலாம்.
“பணமா? அதெல்லாம் கொடுத்து பழகக் கூடாது” நளினி கூறினார்.
அத்தை, குழந்தைக்கும் அவளுக்கும் தான் பணம். பின் பாதுகாப்பிற்கு யாருக்கும் தெரியாமல் எனக்கு தெரிந்த கரடுமுரடான ஒரு ஆன்ட்டி இருக்காங்க. அவங்களை அவளுக்கு பாதுகாப்பாக அனுப்புவோம். அப்புறம் பாருங்க. ஆருத்ரா மொத்தமா மாறிடுவா. இவரு பக்கமே வர மாட்டா..
அவ வர மாட்டாளா? நளினி அவரை முறைத்தார்.
கண்டிப்பா சொல்றேன் அத்தை. என்ன திமிறான பொண்ணா இருந்தாலும் அவளும் பொண்ணு தான். அவள் எண்ணியிருந்தால் எல்லாருக்கும் விசயம் தெரியவும் கருவை கலைத்திருக்கலாம். அதுக்காக அவ குடும்பத்தையும் அந்த சீனுவையும் விட்டு வந்திருக்கா..
குழந்தைக்காகவும் அவளுக்காகவும் தான் அவரிடம் பேசி மிரட்டி இருக்கா. இன்று காலை நான் அவளிடம் பேசுறேன்.
நான் பேசுறேன்ம்மா..
இல்ல மாமா, அவ திமிறா பேசுவா. அவளை எனக்கு சமாளிக்க தெரியும்.
சிந்தித்து சரி மாமா, ஆனால் அத்தை நீங்க இடையில எதுவும் பேசக் கூடாது பிராமிஸ் பண்ணுங்க..
இருவரும் சத்தியம் செய்யும் நேரம் காஃபியுடன் வந்து, “என்னடாம்மா உன்னோட அத்தைகிட்ட என்ன சத்தியம் வாங்குற?”
அது வந்து…அத்த..நளினியை பார்த்து, அவரை திட்டிக்கிட்டே இருக்காங்கல்ல அதான் திட்டக் கூடாதுன்னு பிராமிஸ் வாங்குறேன்..
சிரித்த மான்விழி, அது இவளால முடியாது. ஒரு முறையாவது ரிஷியை திட்டணும் இல்லை இவளுக்கு தூக்கம் வராது.
“ஆமா எனக்கு வேற வேலையில்லை பாரு” நளினி நொடித்துக் கொண்டார்.
பாட்டி வந்தார்.
என்ன பேரான்டி கோலம்? கேட்டார்.
சினமுடன் படியின் உச்சியில் நின்று ஸ்ரீநிதியை முறைத்துக் கொண்டிருந்தான் ரிசாத்பவன்.
“போச்சு..” காஃபியை கீழே வைத்து ஸ்ரீநிதி எழுந்தாள்.
நீ காஃபி குடிம்மா.
“போடா. குளிச்சிட்டு வா” மான்விழி கூற, வேகவேகமாக கீழே வந்து ஸ்ரீநிதி காஃபியை பிடுங்கி கீழே வைத்து விட்டு, “சொல்லாமல் குளிச்சிட்டு கீழ வந்துட்ட? நான் எப்படி தூங்குறது?”
பாட்டி வெட்கமுடன், “என்ன பேரான்டி சோப் போடணுமா?” கேட்டார்.
“ஸ்ரீ இல்லாம தூங்க முடியல. வா. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரலாம்” அவள் கையை பிடித்து இழுத்தான்.
அவன் கையை தட்டி விட்டு புடவையை இடுப்பில் சொருகி நளினி அவனிடம் வந்து, அவ வர மாட்டா. நீ வெட்டியா தூங்காம குளிச்சிட்டு சீக்கிரம் கீழ வா..
“நான் உங்ககிட்ட பேசல சித்தி. நீ வா ஸ்ரீ” அவன் அவள் கையை பிடிக்க,சந்திரமுகன் சிரித்தார்.
டாட் எதுக்கு சிரிக்கிறீங்க?
உன்னோட அறைக்குள்ளவே யாரையும் விட மாட்ட. நீ என்னோட மருமகள உள்ளவே அடச்சு வச்சுக்க நினைக்கிறீயா?
“வாரேன் போங்க” என்று “அத்த நான் அப்புறம் குடிச்சுக்கிறேன்” என்று நளினியையும் சந்திரமுகனை பார்த்துக் கொண்டே சென்றாள்.
அறைக்குள் சென்றவுடன், “ரிஷி நீங்க என்ன பச்சப்பிள்ளையா? எல்லார் முன்னாடியும் என்னோட தான் உறங்குவேன்னு சொல்றீங்க?” திட்டினாள் ஸ்ரீநிதி.
“நேற்று தான உறங்கும் போதும் நீ எங்கேயும் விட்டு போகக் கூடாதுன்னு சொன்னேன். காலையிலே விட்டு போயிட்ட? குளிச்சிட்டு போயிருக்க? திரைசீலையை கூட நீ ஒதுக்கவில்லை” அவளை முறைத்தான்.
ஸ்ரீநிதி அவனை விரக்தியுடன் பார்த்து, “உங்களுக்கு பிடிக்கலைன்னு நான் அவளோட பேசாம இருக்கணுமா? நான் உங்களை திருமண செய்ய ஏற்று கொண்ட மற்றொரு காரணம் வீ தான். அவளோட காதலுக்காகவும் தான்” என்று சொல்லி விட்டு விறுவிறுவென நடந்தாள்.
ஸ்ரீ நீ என்னை காதலிப்பதால் தான திருமணத்துக்கு சரின்னு சொன்ன?
“இல்லை” என்றாள் பட்டென. ரிஷி மனம் உடைந்தான். கண்கலங்க அவளை பார்த்தான்.
“எல்லாரும் நீ என் மீது வைத்திருக்கும் காதலை பெருமையாக பேசுறாங்க” அவன் சொல்ல, அவள் கண்ணீருடன் மற்ற அறைக்குள் ஓடி கதவை அடைத்தாள்.
திகைத்து அவள் சென்ற அறைக்கதவை தட்டினான்.
ஸ்ரீ கதவை திற..
அவளுக்கு கேட்கவில்லை.
அலைபேசியில் அவளை அழைத்தான். அவள் எடுத்தாள். அவள் அழும் சத்தம் நன்றாக கேட்டது.
“ஸ்ரீ எதுக்கு அழுற? ஏதாவது தப்பா பேசிட்டேனா?” பதட்டமாக கேட்டான்.
பதிலில்லை..
எல்லாரும் பேசியதை தான கேட்டேன்? அவன் சொல்ல, அவளுக்கு கோபம் மிகுந்தது.
“என்னோட காதல் ஒன்றும் பெருமையான விசயம் இல்லை. உணர்வுப்பூர்வமானது. உங்களுக்கு அதை பற்றி எப்படி தெரியும்? உங்களுக்கு தான் என்னை பிடிக்காதுல்ல? அப்புறம் எதுக்கு கேள்வி கேட்குறீங்க? பேசுறீங்க? கட்டிப்பிடிக்கிறீங்க? முத்தம் கொடுக்குறீங்க?” அழுது கொண்டே கேட்டாள்.
மற்றொரு சாவியை எடுத்து திறந்து அவளை பார்த்தான்.
தரையில் அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
தலையை பற்றி அவளை பார்த்து, “ஸ்ரீ” அழைத்தான்.
ஸ்ரீநிதி அவனை பார்த்து எழுந்து வெளியே செல்ல நகர்ந்தாள்.
அவளை பின்னிருந்து அணைத்து, “உன்னை பிடிக்காமல் இல்லை ஸ்ரீ. எனக்கு நேரம் வேணும்ன்னு கேட்டிருந்தேன்ல்ல? ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”.
ம்ம்! தயாராகி வாங்க. நான் கீழ போறேன்.
“நீ இங்கேயே இருக்கணும். நாம சேர்ந்து போகலாம்” முதலாவதாக அவனாக கூறினான். ஸ்ரீநிதி ஏதும் பேசாமல் அமர்ந்தாள். அவன் குளியலறைக்கு சென்றான்.
ஷாலினியை பார்க்க சென்ற ஜோவும் தனுவும் அவளது திருமாங்கல்யத்தை பார்த்து அதிர்ந்தனர். அவள் விழித்து தான் இருந்தாள்.
“ஷாலு என்ன இது? அண்ணா?” அழைத்தாள் தன்வி.
எங்களுக்கு தெரிந்தவன் தான்ம்மா. அவங்க ஊருல ஏதோ சொன்னாங்களாம். அதை முடிக்கவும் ஷாலு விழித்து விட்டாள்.
“யாரு அண்ணா அவன்?” ஜோ கேட்க, அவர் ஷாலினியை பார்த்தார்.
“ஷாலு உனக்கு தெரிந்திருக்குமே! இப்ப அவர் எங்க?” தன்வி கேட்டாள்.
“அவரு இப்ப வர மாட்டாரு” என்ற ஷாலினி, “அவருக்கான முக்கிய வேலையா போயிருக்கார். கொஞ்ச நாள் என்னை பார்க்க முடியாதுன்னு சொல்லீட்டு போயிருக்கார்”.
“ஷாலு என்ன சொல்ற? தாலி கட்டினவன் வேலையா போயிருக்கான்னு சாதாரணமா சொல்ற? அவன் உன்னை ஏமாத்திட்டு போயிருக்கப் போறான். யாருன்னு சொல்லு?” ஜோ பதறினான்.
ஷாலினி அண்ணன் அவன் தோளில் கை வைத்து, அவனை எங்களுக்கு நல்லா தெரியும். பயமில்லை.
“யாரு அண்ணா?” தன்வி கேட்டாள்.
“ஷாலு” ஜோ அழைக்க, அங்கே போலீஸாரும் ரிப்போர்ட்டர்ஸூம் வந்தனர்.
ஜோவும் தன்வியும் அதிர்ந்து பார்க்க, கிஷோர் ஓடி வந்து அவர்களை சமாளித்தான்.
“இவங்களுக்கு யாரு சொன்னா?” ஜோ சினமுடன் கேட்டான்.
அவனை பார்த்து விட்டு, “ஷாலினி நீ பேசுவேல்ல? அவங்க கேட்பதற்கு பதில் சொல்லும்மா” என்றான் கிஷோர்.
“தம்பி ஷாலுவை எதிலும் காட்டக் கூடாது” அவள் அண்ணன் கூற, “இல்ல சீனியர். நான் நேரடியாக எல்லார் முன்னும் பேசணும்” என்றாள் ஷாலினி.
ஷாலு, அது அவருக்கு தெரியாமல்..
அண்ணா அவர் புரிஞ்சுப்பார். நான் பேசியே ஆகணும்.
ஷாலினி நிமிர்ந்து அமர்ந்து நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
“நான் தான் ஷாலினி” அவளை பற்றி கூறி விட்டு, அன்று எக்ஸாம் நேரம் என்பதால் மாலை கோவிலுக்கு சென்றேன். கோவிலில் இருந்து கிளம்பும் போதே மணி ஏழாகி விட்டது. அண்ணாவுக்கு கால் செய்து விட்டு அமர்ந்திருந்தேன்.
அப்பொழுது ஜெகதீஸ், ஜானி சீனியர் மறைந்து நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவங்க என்னை கடத்த எண்ணவில்லை. அவங்க கடத்த எண்ணியது ஸ்ரீநிதி சீனியரை தான். அவங்க பிளான் என்ன? என்று கூறத் தொடங்கினாள்.
ஸ்ரீநிதி ரிஷி சீனியரை காதலிக்கிறாங்கன்னு வேண்டுமென்றே அவர் மூலமாக ஸ்ரீநிதியை கடத்த முயன்றனர். நான் அவர்களிடம் அலைபேசியில் கூற முயன்றேன். ஆனால் அவங்க யாருமே அலைபேசியை எடுக்கவில்லை.
“என் அண்ணாவிடம் தோழியை சந்திக்க போகிறேன். அப்புறம் அழைக்க வா” என்று சொல்லி விட்டு ஸ்ரீநிதி அம்மாவிடமாவது சொல்ல வேண்டும் என்று அவங்க கார்மென்ட்ஸூக்கு சென்றேன்.
ஆனால் போகும் வழியில் அவங்க ஸ்ரீநிதியை பார்த்து வேண்டுமென்றே ரிஷியை பிரச்சனையில் சிக்க வைக்கப் போவதாக சொன்னாங்க. அதை கேட்ட ஸ்ரீநிதி புகழமுதன் சீனியரிடம் சொல்லி அவர் பேச்சையும் கேட்காமல் காரை எடுத்தார்.
இரு. நானே காரை ஓட்டுகிறேன் என்று அவர்கள் கிளம்பினார்கள். நானும் அவர்களை பார்த்து விட்டேன். அழைத்தேன் கேட்கவில்லை. பப்பிற்கு சென்றனர். அங்கே வைத்து ஸ்ரீநிதிக்கு பதில் என்னை தூக்கிட்டு போயிட்டாங்க.
ரக்சன், யுகமித்ரன், ரிஷி சீனியர் எல்லாரும் நினைவில்லாமல் இருந்தனர். எனக்கு மயக்க மருந்து கொடுத்து தூக்கினார்கள்.
மயக்கத்தில் இருந்த என்னை கார் டிக்கில் போட்டாங்க. நிதுவும் புகழ் சீனியரும் எங்க காரை பின் தொடர்ந்து வந்தனர். அவங்கள பார்த்துக் கொண்டே மொத்தமாக மயங்கிட்டேன். அதன் பின் விழித்த போது என்று முகத்தை மூடி கதறி அழுதாள்..
எல்லாம் நேரடியாக ஒளிபரப்பானது. அப்பொழுது தான் கிளம்பி திருமண ஜோடிகள் ஸ்ரீநிதி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
“ஷாலினி உங்க கழுத்துல தாலி இருக்கே!” ஒருவர் கேட்க, என் உயிரை காப்பாற்ற தான் என் கழுத்தில் தாலி கட்டினார்.
“உங்களை பற்றி தெரிந்தும் திருமணம் செய்தாரா? யார் அவர்?” ஒருவர் கேட்க, கண்ணை மூடி திறந்தாள்.
அவளது சோர்வு அனைவருக்கும் தெரிந்தது.
“ப்ளீஸ் இதுக்கு மேல டிஸ்டர்ப் பண்ணாதீங்க” கிஷோரும் ஜோவும் அவளை மறைத்து நின்றனர்.
ஷாலினியின் அண்ணன் அவளது படுக்கையில் அமர்ந்து அவளது கையை பற்றிக் கொண்டார். போலீஸ் இருவர் மட்டும் அங்கே நின்றனர். ஷாலினியின் செவிலியர்கள் அவர்களிடம்…“சார் இவங்க ஓய்வெடுக்கணும்” என்றார்.
“ஒன்று மட்டும் கேட்டு போயிடுறோம்” ஒரு போலீஸ் அவளருகே வர, அவள் அண்ணன் கையை இறுக பற்றிக் கொண்டாள்.
“சாரிடி, அன்று நானும் உன்னுடன் வந்திருக்கணும். வராமல் கிளம்பிட்டேன்” தன்வி அழுது கொண்டே ஷாலினியை அணைத்துக் கொண்டாள். அவர்களின் மற்ற தோழிகள் வந்தனர்.
“புகழ் அண்ணா உயிரோட இல்லைடி” இமையா கூற, “எனக்கு தெரியும்டி. நிது பற்றியும் தெரியும்” என்று கூறினாள்.
“ஏய்..அவ ஓய்வெடுக்கட்டும்” தன்வி கூற, “இருடி” என்ற சாதனா, “யாருடி உன்னை கல்யாணம் செய்து கொண்டது?” ரகசியம் போல கேட்டாள்.
ஆமா, ரகசியத்தை இப்படி தான் ஊரே கேட்கும் படி கேட்கணும்? நகருடி. அவ ஓய்வெடுக்கட்டும்.
“அண்ணா இவள கவனமா பார்த்துக்கோங்க” எல்லாரும் சென்றனர்.
கிஷோர், ஜோ, தன்வி மட்டும் அங்கேயே இருந்தனர்.
“நீங்க கிளம்பலையா?” சிவாங்கி கிஷோரிடம் கேட்டாள்.
“அவனுகள முதல்ல உள்ள பிடிச்சி போடட்டும். அப்புறம் வாரேன்” கிஷோர் அவர்களுடன் ஷாலினிக்கு துணையாக அவள் அண்ணனுடன் உடனிருந்தான். ஜோவும் தன்வியும் அவர்களுடன் இருந்தனர்.
கிஷோர் அலைபேசி ஒலிக்க, ஜோ பார்த்துக்கோ. வந்துடுறேன் நகர்ந்தான்.
ஜோ சிந்தனையுடன் அமர்ந்திருந்தான்.
ஜோ, நீயும் தனுவும் கிளம்புங்க. உங்களுக்கும் ஏதும் பிரச்சனை வந்திடாமல்..
“இல்லண்ணா நாங்க இருக்கோம்” தனு கூறினாள்.
“தனு, ஜோ கிளம்புங்கப்பா. உங்க அண்ணா, அண்ணியை பார்த்துக்கோங்க” ஷாலினியின் அண்ணா கூறினார்.
“ஜெகதீஸ், ஜானியை அவ்வளவு சீக்கிரம் உள்ள தள்ள முடியாதுன்னு தோணுதே!” ஜோ கூற, “ஆமா அவங்க தந்தை செல்வாக்கு அதிகமுள்ளவர்கள். ஏதாவது சொல்லி நம்ம ஷாலினி பற்றி தவறாக பேசவும் வாய்ப்புள்ளது” கிஷோர் கூறினான்.
“எப்படி பேசுவான்? அதெல்லாம் ஏதும் பேச முடியாது” தன்வி கூற, “வா தனு. நாம போகலாம்” ஜோ அவள் கையை பற்றினான்.
ஜோ..
நீ என்ன சொல்லப் போறன்னு புரியுது. அவங்க போட்டா பார்த்துக்கலாம்.
போட்ட பின் எப்படி ஷாலு அழுறான்னு பார்க்கணுமா? சினமுடன் ஜோ கையை உதறினாள் தன்வி.
அவர்கள் ஷாலினியை குறை கூறினால் நாம நிரூபிப்போம். அதன் பின் நம்ம மக்களுக்கு யார் மீது கோபம் அதிகமாகும். அவனுக தலையை வெளியே காட்டவே முடியாது என்றான் ஜோ.
“ஜோ சொல்றது சரியாக தான் படுது பட் ஷாலினி பற்றி ஏதும் தவறாக வராது” கிஷோர் உறுதியுடன் கூறினான்.
ஜோ புருவம் சுருக்கி அவனை பார்த்தான்.
“எல்லாரும் அவர்களிடம் ஜாக்ரதையா இருங்க. நிதுவை பார்த்துக்கோங்க” அவர்களை கிளப்பி விட்டான். இருவரும் சென்ற பின் ஒருவன் வந்தான்.
மாமா அவர் நல்லவர் தான். இங்கிருந்து அவனுகளுக்கு யாரோ தகவல் கொடுத்திட்டு இருக்காங்க. அதான் ஷாலு விழிக்கவுமே கிளம்பி இருக்காங்க..
அவங்க பெற்றோருக்கு தெரிந்திருக்குமே!
அது சரியா தெரியல. ஜெகதீஸூம் ஜானியும் மட்டும் தான் போயிருக்கானுக. ரிஷி, யுகா மேல தவறில்லை. ரக்சித் மேல எனக்கு சந்தேகம் இருக்கு.
மாப்பிள்ள, ஷாலு இருவரை மட்டும் தான் சொன்னாள்.
மாமா, ஷாலு அவள் நினைவில் உள்ளதை மட்டும் தான் கூறினாள். அங்கே சென்ற பின் நடந்த அனைத்தும் அவளுக்கு தெரியாது. போதையில் காரில் இருந்த மற்ற இருவரும் போதையில் விழுந்தால் மறுநாள் தான் எழுந்திருப்பானுக. இந்த ரக்சித் ஏற்கனவே ஒரு பொண்ணிடம் போதையில் தவறாக நடந்திருக்கான். இது கூட சந்தேகம் மட்டும் தான்.
இந்த ஒரு வருடமாக ரிஷி போன இடம் யாருக்கும் தெரியவில்லை. மற்ற நால்வரும் ஒன்றாக இருந்தாலும் சேர்ந்து மது அருந்துவதை விட்டிருக்கின்றனர். அதான் எனக்கு சந்தேகமா இருக்கு.
ரிஷி திமிறாக இருந்தாலும் இது போல தவறு செய்வது பிடிக்காது. யுகாவும் ஓரளவு இவன் மாதிரி தான். ரக்சித் பணம் கொடுத்தால் எதுவும் செய்ய தயங்காதவன்..
“ஆமா, ரக்சித் அப்படி தான். காதலை பிரிச்சி விடுறதுல எக்ஸ்பர்ட்” கிஷோர் கூற, அவனை முறைத்த மாப்பிள்ளை “இவன் மட்டும் தானா?” கேட்டான்.
ஐய்யோ, நானெல்லாம் நல்ல பையன்..
எதுக்கு இருவரும் அடிச்சுக்கிறீங்க?
“நாங்க அப்படி தான்” என்றான் கிஷோர்.
இவனோட அடிச்சிட்டு நான் என்ன செய்றது? மாப்பிள்ளை கேட்டான்.
“சீனியர்ன்னு கொஞ்சமாவது மரியாதை கொடுடா” கிஷோர் கேட்க, அவன் அலைபேசி ஒலித்தது.
அந்த பொண்ணுக்காக தனியா கஷ்டப்படுவன்னு வந்தா என்னடா கேக்குற?
“வாங்க மாமா..வாங்க..அறை எண் 102 மாமா” மாப்பிள்ளையை பார்த்தான். அவன் கேசுவலாக அமர்ந்திருந்தான்.
அலைபேசியை அணைத்து, “டேய் வா” அவனை இழுத்து மறையுமாறு அமர வைத்து வெளியே வந்தான் கிஷோர்.
ராம் வரவும் ஷாலினி அண்ணனிடம் ராம்மை அறிமுகப்படுத்தினான். அவர் ஷாலினியை பார்த்து விசாரித்து விட்டு படுக்கையின் அடியே பார்த்தவாறு புன்னகையுடன் நகர்ந்தார்.
“நான் அவரை விட்டு வாரேன்” கிஷோர் சென்றான்.
மாமா அம்மாவை உங்க வீட்ல வச்சி பாத்துக்கிறீங்களா? நான் எப்படியும் இரு நாளாவது இங்கே இருக்கணும். தனியா விட பயமா இருக்கு..
“இப்பவே அத்தையை அழைச்சிட்டு போறேன்” அவர் அவனை பார்த்து, ரகசியத்தை வெகு நாட்கள் மறைக்க முடியாது என்றார்.
மாமா..
அவர் புன்னகைத்து, “இந்த பொண்ணு கேஸை என்னோட ப்ரெண்டு தான் எடுத்து நடத்திட்டு இருக்கான். எதுவும் அவசர உதவி வேணும்ன்னா கேட்டுக்கோங்க” அவர்கள் அறையை கீழிருந்து பார்த்தார்.