தாரகை 22

ஸ்ரீநிதியின் பின் வேகமாக ஓடி வந்தான் ரிஷி. அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன சிரிப்பு?” அவன் அம்மாவிடம் கேட்டான்.

அவர் மேலும் சிரித்தார்.

என்ன தனு? கோபமா? ஸ்ரீநிதி அவளருகே வந்தாள்.

நாங்க வரலையாம். நீங்க மட்டும் தான் போறீங்களாம்.

அவங்க புதுசா கல்யாணமானவங்க. நிது, பவி கோவிலுக்கு போகணும்ல்ல? நளினி சத்தமிட்டார்.

“அண்ணீ, நானும் வருவேன். பிக்ப்பாவும் வேண்டாம்ன்னு சொல்றாரு” தனு ஸ்ரீநிதி கையை பிடித்து பவிதாவை பார்த்தாள்.

“மாமா எல்லாருமே வாங்களேன்” ஸ்ரீநிதி அழைக்க, “அம்மாடி முதல்ல சாப்பிடுங்க. அவங்க கிளம்பிட்டாங்க” என்றார் பாட்டி.

ஸ்ரீநிதி கையை பிடித்து ரிஷி தனுவை முறைத்து உணவுண்ண அமர வைத்தான்.

சாப்பிட்டு அனைவரும் எழுந்தனர்.

பவிதா சந்திரமுகனிடம் “மாமா இப்ப எல்லாரும் சேர்ந்து போனால் தான? அப்புறம் நமக்கு நேரமே இருக்காது” வருத்தமாக கேட்டாள்.

நீ சொல்றது சரிதான்ம்மா. ஆனால் நாங்க வரலை. நம்ம குடும்பத்துக்காக வழிபாடு செய்ய நீங்க இருக்கீங்கல்லம்மா?

“ஏன் அங்கிள்? நீங்க வாங்க. அம்மா தான் அழைத்தாங்களே!” வீட்டிற்குள் வந்த ஜோ கேட்டான்.

ஜோவை பார்த்து, “அம்மா எங்கடா?” பவிதா கேட்டாள்.

“வருவாங்க” தனுவை பார்த்து புருவம் சுருக்கினான்.

சந்திரமுகன் அதை பார்த்து, ஜோ நீங்க உங்க அக்கா, மாமாவை கூட்டிட்டு போங்க. அடுத்த முறை வாரோம்.

“அங்கிள் கண்டிப்பா நீங்க வரணும்” அவரருகே வந்தான்.

பாட்டி அப்பொழுதும் ரிஷியை பார்த்து வாயை மூடி சிரிக்க, “பாட்டி” சத்தமிட்டான் ரிஷி.

“இல்லடா, நிதிய நீ ரொம்ப கஷ்டப்படுத்திட்ட? அவள பாரு சோர்வா இருக்கா” பாட்டி விசயம் அறியாமல் வெகுளியுடன் சிரித்தார்.

“கஷ்டமா?” ஜோ சினமுடன் கேட்க, “பாட்டி என்னோட மச்சானை பாரு தப்பா புரிஞ்சுட்டான். அப்படியெல்லாம் ஸ்ரீ சோர்வா இல்லையே?” ஸ்ரீநிதியை மேலும் கீழும் ரிஷி பார்த்தான்.

“அடப்பாவி!!! இத்தனை பேர வச்சிட்டு எம் மருமகள சைட் அடிக்கிற?” மான்விழி புன்னகைக்க, ஜோ ஸ்ரீநிதியை பார்த்தான். அவள் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

“மாம் மானத்தை வாங்காத” சீறிய ரிஷி தன் அண்ணனை பார்த்து, “இவனை எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க?” கேட்டான்.

“யார் சொல்லாமல் இல்லை. இவ்வளவு நேரம் வச்சு செஞ்சுட்டாங்க” பவிதா ரிஷியை முறைத்தாள்.

என்ன எதுக்கு முறைக்கிற?

அப்படிதான்டா முறைப்பேன்.

“வீ” ஜோ அழைக்க, நான் என்னடா பண்றது? இவனை பார்த்தாலே கோபம் கோபமா வருது. நிது இவன் உன்னை கஷ்டப்படுத்தினால் முதல்ல என்னிடம் சொல்லு. நான் அடிக்கிற அடியில..

“மருமகளே! அவனும் என் மகன்” மான்விழி முறைப்புடன் கூறினான்.

நான் என்ன பண்றது அத்த? உங்க பையன் செய்யும் எல்லாமே என்னை கோபப்படுத்துது..

“நான் ஸ்ரீயை கஷ்டப்படுத்த மாட்டேன். எனக்கு அவளை பிடிக்கும். நாங்க நல்ல தோழன், தோழி” ரிஷி கூற, பாட்டி வாய் விட்டு சிரித்தார்.

“பாட்டி” ரிஷி கத்த, பனிமலர் வந்தார்.

அப்புறம் என்னடா பேரான்டி? நான் தான் பார்த்துட்டேன்ல்ல. எதுக்கு மறைக்குற?

“மறைக்கிறேனா?” ஸ்ரீநிதியை ரிஷி பார்த்தான். அவள் கண்கலங்க பனிமலரை பார்த்து அவளிடம் ஓட, பவிதாவும் ஸ்ரீநிதியும் சேர்ந்து ஸ்ரீநிதியின் அம்மாவை அணைத்துக் கொண்டனர்.

எப்படி இருக்கம்மா பவி? அவர் கேட்க, நான் நல்லா இருக்கேன்ம்மா. எல்லாரும் நல்லா பார்த்துக்கிறாங்க. தனியாக இருக்கிறதே இல்லை. அங்க வீட்ல யார் சத்தமும் இல்லாமல் அமைதியாகவே இருக்கும். இங்க ஏதாவது பேச்சுக் குரல் கேட்டுக்கிட்டே இருக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு.

உங்கள மாதிரியே அத்தை நல்லா பார்த்துக்கிறாங்க. கிரிஷ், மாமா, பாட்டி, தனு, நளினி ஆன்ட்டி எல்லாருமே! சண்டை போட கூட எனக்கு இங்க ஆள் இருக்கு என்று பவிதா ரிஷியை பார்த்துக் கொண்டே ஸ்ரீநிதியை பார்த்து கண்கலங்கினாள்.

“நீ அழுது பார்த்து ஒரு மாதம் ஆகப் போகுது” ரிஷி பட்டென கூற, ஸ்ரீநிதிக்கு எண்ணம் சிதைந்தது. முகம் மாறியது. எல்லாரும் அவனை முறைத்தனர்.

பவிதா புன்னகையுடன், “நான் சொல்லல. எல்லாரும் எனக்காக அவனை முறைக்காங்க. அவனும் என்னோட அப்படி தான பேசுறான்” பவிதா புன்னகைத்தாள்.

“அக்காவுக்கு என்னாச்சு?” ஜோ ஸ்ரீநிதி அருகே வந்தான். தனு மூவரையும் பார்த்தாள்.

புன்னகையுடன் தான வந்தாங்க. என்னாச்சு? பவி என்ன சொன்னாங்க? சிந்தித்தாள் தன்வி.

“ஆன்ட்டி நீங்க அவகிட்ட மட்டும் கேக்குறீங்க? ஸ்ரீகிட்ட கேட்கல” ரிஷி பனிமலரிடம் கேட்டான்.

நான் கேட்டு இல்லைன்னு தெரிந்தால் எனக்கு கஷ்டமாகிடுமே! வருத்தமுடன் தன் மகளை பார்த்தார்.

கஷ்டமா? ஸ்ரீயை நான் கஷ்டப்படுத்த மாட்டேன் என்ற ரிஷி, “ஸ்ரீ உன்னை நான் கஷ்டப்படுத்தினேனா? ஆன்ட்டிகிட்ட சொல்லு” என்றான்.

அவள் மனம் பதைத்து துடித்தது. இரவுகளை புறந்தள்ளி காலை நன்றாக பார்த்துக் கொள்ளும் ரிஷியை எண்ணி, அவரை விட என்னை யாராலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது என்றாள்.

பார்த்தேல்ல! பவிதாவிடம் வந்து புருவத்தை உயர்த்தினான்.

பல்லை காட்டிக் கொண்டு, மச்சீ…இனியும் நாட்கள் இருக்கு. நிதுவுக்கு ஏதாவது கஷ்டத்த கொடுத்த என்று அவளது கையை துப்பாக்கியாக்கி அவன் நெற்றியில் வைத்து, “டிஸ்யூம் தான்” செய்து காட்டினாள். அனைவரும் புன்னகைத்தனர்.

கவலையே படாதீங்க சம்பந்தியம்மா. எங்க நிதியை ரிஷி நல்லா பார்த்துப்பான் என்றார் மான்விழி.

ஸ்ரீநிதியின் கவலை தோய்ந்த மறுமுகம் நளினி கண்ணிற்கு தெளிவாக தெரிந்தது.

“கோவிலுக்கு உங்களையும் வரச் சொல்லி இருந்தேனே! யாரும் கிளம்பாமல் இருக்கீங்க?” பனிமலர் கேட்டார்.

“நீங்க போயிட்டு வாங்கம்மா” பாட்டி கூற, “இன்று சிறப்பு பூஜை கோவில்ல இருக்கு. வழிபட்டால் நல்லதே நடக்கும்” பனிமலர் கூற, இவங்க தயாராக நேரமாக்கிடுவாங்கம்மா என்றார் பாட்டி.

பாட்டி, அங்க நமக்கு வீடு இருக்கு. அங்க போயிட்டு தயாராகிக்கலாம். மாலை தான் பொங்கல், பூஜை எல்லாம் நடக்கும் என்றான் ஜோ.

“ஹப்பா” தனு நிம்மதியுடன் தன் அம்மாவை பார்க்க, அவர் ஏதும் பேசாமல் நகர்ந்தார்.

“உட்காருங்க. வந்துடுறோம்” பனிமலர் ஜோவை அமர வைத்து இவர்கள் சென்றனர்.

ஜோ ரிஷியையே கவனித்துக் கொண்டிருந்தான். அவன் அலைபேசியை பார்ப்பது அவ்வப்போது ஸ்ரீநிதியையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ துரியன் எண்ணை உனக்கு அனுப்பி இருக்கேன். இப்ப போய்க்கிட்டு இருக்கும் பிராஜெக்ட் விவரம் மற்றைய அனைத்தையும் அவனிடம் வாங்கிக்கோ. உடனே நீ செல்ல வேண்டியதில்லை. பத்து நாளைக்கு பின் கூட செல்லாம்.

“ஆமா..ஆமா..பத்து நாளென்ன? ஒரு மாசத்துக்கு அப்புறம் கூட போகலாம்” பாட்டி இடை புகுந்து சிரித்தார்.

ரிஷி பாட்டியை முறைக்க, ஸ்ரீநிதி புன்னகைத்தாள்.

“செட் அப் பாட்டி” பேசும் போதும் தொந்தரவு செய்யாத..

பேசும் போதும்ன்னா? வேற எப்ப? ஜோ நிறுத்தி விழிக்க, பாட்டி சிரியாய் சிரித்தார். பனிமலரால் நம்பமுடியவில்லை. அவரும் மகிழ்ந்தார்.

“ஸ்ரீ நீ அவனிடமே பேசிக்கோ” எழுந்து அவளருகே வந்து அமர்ந்தான்.

“பக்கத்துல்ல போனா தான தெளிவா பேச முடியும். யார் தொந்தரவும் இருக்காது” பாட்டி மேலும் கேலி செய்ய, “போ பாட்டி” எழுந்து சந்திரமுகன் அறைக்கு சென்றான்.

“பேரான்டி நில்லு, உன்னோட பொண்டாட்டியை நான் கரெக்ட் பண்ணிடுவேன். அப்புறம் நீ பேச கூட முடியாது” ரிஷியை வைத்து செய்தார் பாட்டி.

மனநிறைவானது ஜோவிற்கும் அவன் அம்மாவிற்கும்.

கோவிலில் அனைவரும் கூடினர். பாட்டிகள், தாத்தா வந்திருந்தனர். அமரேசன் தாத்தாவும் வந்திருந்தார்.

பாட்டியை பார்த்த பெண்கள் தங்கள் கணவனுடன் அவர்களிடம் ஆசி வாங்க சென்றனர்.

“அம்மாடி கோவில்ல வேண்டாம்டா” பெரிய பாட்டி அவர்களை தடுத்து பெண்களை அனுப்பி விட்டு ஜெய், ரிஷியிடம் பேச்சு கொடுத்தார்.

பவிதாவும் ஸ்ரீநிதியும் தனியே அமர்ந்திருந்த அமரேசன் தாத்தா அருகே சென்று அமர்ந்தனர்.

“நல்லா இருக்கீங்களாடா?” அவர் கேட்க, “தாத்தா ஒதுங்கி இருக்கிற மாதிரியே செய்றீங்க? புகழோட பாட்டி தான! பேசுங்களேன்” பவிதா கூறினாள்.

“போர்ஸ் பண்ணாத வீ” ஸ்ரீநிதி அவளை முறைத்தாள்.

சந்திரமுகனும் சௌபாக்கியம் பாட்டியும் அவர்களிடம் வந்தனர்.

உட்காருங்க மாமா, பாட்டி. இருவரும் அவர்களுக்கு வழி விட்டனர்.

“நிது, பவி வாங்க” கடைசி பாட்டி சத்தமிட, ஏக்கமுடன் அவ்வப்போது தாத்தாவை பார்த்த இரண்டாவது பாட்டியை பார்த்துக் கொண்டே ஸ்ரீநிதி நகர்ந்தாள்.

மை ஊதா நிற முழுக்கை சட்டையுடன் பளிச்சென வலம் வந்து கொண்டிருந்த ஜோவையே தனுவும் அவள் அம்மா நளினியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் அழகி, தர்மேந்திரனும் வந்தனர். அமரேசனை கவனித்து பாட்டிகளையும் தன் மனைவியையும் பார்த்தார்.

பாட்டி புகழை பற்றி பேச, அழகி முகம் மாற தர்மேந்திரன் தன் மனைவி அருகே வந்து அவர் கரத்தை பற்றிக் கொண்டார். அழகி கண்கலங்க தர்மேந்திரனை பார்த்தாள்.

“மாமா இங்கே நிறைய அரேஞ்ச் பண்ணனும். நீங்க வாங்க. வேலைய பார்ப்போம்” பெரியவன் போல ஜோ அழைக்க, புன்னகையுடன் “சரிதான்” சிரித்தார்.

“மாமா” ஜோ அவரை முறைக்க, ஆமா எதிர்காலத்துல்ல நீயும் பார்த்துக்கணும்ல்ல? என்றார்.

ரிஷியும் சிரித்தான்.

அங்க என்ன வெட்டியா சிரிக்கிறீங்க? கோவிலுக்கு பின்னாடி எட்டும் அளவிற்கு வேப்ப இலை இருக்கும். நிறைய பறிச்சிட்டு வாங்க..

நானா?

இங்க ரிஷி நீங்க தான? உங்க கோவில்ல மட்டும் நிதுவுக்காக பப்பாளி இலையை பிடுங்குனீங்க?

என்னது நிதுவுக்காக எதுக்கு பப்பாளி இலை?

ஜோ புன்னகைக்க, உனக்கு யாருடா மச்சான் சொன்னது? ரிஷி அவனிடம் வந்தான்.

தன்வி அவள் அம்மா பின் மறைந்தாள்.

“இதோ…அதான் கூடவே சுத்திட்டு இருக்கால்ல? எதுக்குடி சொன்ன? இவனை இவனுககிட்ட நல்லா அடி வாங்க வைக்கலாம்ன்னு பிளான் போட்டு வந்தேன். எல்லாத்தையும் கெடுத்திட்ட” பவிதா சொல்ல, பிளானா? ரிஷி சினமுடன் அவளை முறைத்தான்.

ரிஷி வேண்டாம். அவளோட சண்டையை ஆரம்பிச்ச முடியவே முடியாது. நீ தான் பாவம் என்றான் ஜெய் கிரிஷ்.

ம்ம்! “வேஸ்ட் ஆஃப் டைம்” கையை உதறி காட்டி ஸ்ரீநிதியிடம் வந்து, “வா ஸ்ரீ போகலாம்” அவள் கையை பிடித்தான்.

“ஹலோ..அக்காவுக்கு வேற இருக்கு. அக்கா நம்ம அன்னாச்சி கடையில பூஜை பொருட்கள் வாங்கிட்டு வா” ஜோ கூற, “நான் வேணும்ன்னா ஸ்ரீக்கு துணைக்கு போகவா?” ரிஷி கேட்டான்.

“டேய் அவரை பிடிடா. இந்தா” பணத்தை கொடுத்து, “நீ கிளம்பு” ஜோ அவளை அனுப்பி வைக்க, ஐயருடன் ராமும் மித்ராவும் வந்தனர்.

ராம்மை பார்த்து பாட்டி சீதாவை பார்க்க, இவ்வளவு நேரம் கிஷோரை படுத்திக் கொண்டிருந்த சீதா வியர்வையை வழித்து நிறைய வேலை பார்ப்பது போல நடித்தார்.

அக்கா, உம் மருமக பாரு. புருசனை பார்க்கவும் இவ தான் இழுத்து கட்டி வேலை பார்ப்பது போல நடிக்கிறா? கடைசி பாட்டி போட்டு விட, ராம் சீதாவை முறைத்தார்.

“இல்ல இல்ல..நான் வேலை பார்த்துட்டு தான் இருக்கேன்” விழிகளை தாழ்த்தினாள்.

“ஏம்மா?” மித்ரா தலையில் அடித்தாள்.

“அதனால என்ன? நேற்றிலிருந்து அவ அம்மா தம்பிட்ட பேசலை. பேசட்டும்” இரண்டாவது பாட்டி சொல்லி “நிதும்மா நீ வாங்கிட்டு வாடா” கூறினார்.

ஸ்ரீநிதி சென்று விட்டாளா? ஜோ எட்டி பார்த்தான்.

“ஒரு நிமிசம் எல்லாரும் கவனிங்க. நிதுவுக்கு விபத்து நடந்த இடத்தில் கற்பழிக்கப்பட்டது ஷாலினின்னு யாரும் அவளிடம் சொல்லாதீங்க” ஜோ கூற,  இணையதளத்தில் பார்த்திருப்பால?

“கண்டிப்பாக இல்லை” என்ற தனு, ஷாலு எங்க வகுப்பு தான். நிதுவை எங்க வகுப்பில் எல்லாருக்கும் தெரியும். நிதுவும் ஷாலுவும் அடிக்கடி பேசி பார்த்திருக்கேன்.

“ஷாலு ஹாஸ்பிட்டலில் நினைவில்லாமல் இருப்பது நிதுவுக்கு தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஏற்கனவே புகழண்ணாவால் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க” தனு வருத்தமுடன் கூறினாள்.

“யாரும்மா அது?” ஐயர் கேட்க, “தனு அவரிடம் எதுக்கு கேக்குறீங்க?” கேட்டாள்.

நிது, புகழ்,…எல்லாரையும் எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். நடந்ததை கூறி விட்டு கண்கலங்க கூறினான்.

“ஓ! அந்த பொண்ணு இப்ப எவ்வித நினைவும் இல்லாமல் கோமாவில் இருக்கு. அப்படிதான?” ஐயர் கேட்க, “அவளை விழிக்க வைக்க உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?” தன்வி ஆர்வமாக அவரருகே வந்தாள்.

தனு நீ நின்ற இடத்திலிருந்து பேசு. அவர் ரொம்ப சுத்தமானவர். அம்மனுக்கு பூஜை செய்யும் போது சுத்தமா இருக்கணும்.

நான் என்ன டர்ட்டி கெர்ல்லாடா? அவனிடம் சினமுடன் வந்தாள்.

அப்படியில்லைம்மா. அம்மனுக்கு பூஜை செய்வதால் பொண்ணுங்க யாரும் அருகே வரக் கூடாது. கொஞ்ச நேரத்திற்கு தான் தர்மேந்திரன் கூற, “அம்மன் பொண்ணு தான? இதுல என்ன இருக்கு?” தன்வி அம்மனை பார்த்தாள்.

இந்த அம்மன் திருமணத்தின் பின் தன் தங்கையால் கணவனை அடைய முடியாமல் போனது. அதனால் வயதானவர்களை தவிர யாரும் முக்கியமாக பெண்கள் அருகே செல்லக் கூடாது. அம்மா விக்ரகத்தை பாரும்மா. கோபமா இருக்காங்க.

“ஓ! தங்கையால் தன் கணவனை இழந்தவங்க” என்ற தன்வி மனம் அடித்துக் கொண்டது. அவள் கண்கள் தானாக தன் அண்ணன் ரிஷியை பார்த்தது. அவன் அம்மனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

“கணவனுக்கு இவங்க மேல விருப்பமில்லையா?” ரிஷி கேட்க, “தம்பி இப்படி பேசுறதா இருந்தா வெளிய போங்க” ஐயர் சத்தமிட்டார்.

தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.

அவன் தோளை பற்றிய அமரேசன் கண்ணை மூடி திறந்தார்.

தனு அதிர்ந்து அம்மனை பார்க்க, “என்ன வாழ்க்கையில் நடப்பது போல இருக்கு? சிந்தித்து, அம்மன் நிலை வேற பொண்ணுக்கு வந்து விட்டால்” தன்வி கேட்க, எல்லாரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

“சும்மா கேட்டேன்” அவள் சமாளிக்க, “தனு சாமியை மட்டும் கும்பிடு” சத்தமிட்டார் தர்மேந்திரன்.

அங்கிள் நான்….அவள் கண்கலங்க, அழகி அவளை அணைத்துக் கொண்டு, “அதெல்லாம் ஏதும் நடக்காதும்மா” என்று கூறினார்.

ஜோ அவளை முறைத்து, “ஷாலு விசயம் நிதுவுக்கு தெரியவே கூடாது” தன்வியை பார்த்துக் கொண்டே கூறினான். அவள் அமைதியாக நின்று கொண்டாள்.

வேப்பிலை ரிஷி கேட்க, அங்க பாருங்க. நீங்க மரம் ஏறி எப்ப சாமி கும்பிடுவது?

“ஐயா” ஐயர் அழைக்க, அமரேசன் எழுந்து வந்தார். அவர் சட்டையை கழற்றி வைத்து விட்டு, மஞ்சள் தண்ணீர், பால், என அபிசேகத்திற்கு வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தார்.

ஸ்ரீநிதி வாங்கி வந்திருந்த பொருட்களை ஐயரிடம் கொடுத்தார்.

“அம்மாடி இங்க வா” அவளை அருகே அழைத்து, அவருக்கு அம்மன் முகத்தில் பூசி இருந்த சந்தனத்தை அவரே பூசி விட்டார்.

“இப்ப பூஜை இருக்காதுன்னு ஜோ மாப்பிள்ள சொன்னாரு” சந்திரமுகன் பெரிய பாட்டியிடம் கேட்டார்.

இப்ப நடப்பது பூஜை அல்ல. அம்மனின் கோபத்தை இறக்க செய்யும் சடங்கு மட்டுமே!

அதை அமர் தாத்தா தான் செய்யணுமா? ஜெய் கேட்டான்

“ம்ம்! மூத்தவர் தான செய்யணும். அதான் வழக்கம்” பாட்டி கூறிக் கொண்டே அவரையும் தன் தங்கைகளையும் பார்த்தார்.

சந்தனம் மற்றும் வேப்ப இலையால் அம்மனை அலங்காரம் செய்து மாலையிட்டு ஆராத்தி காட்டி, சந்தனம், வேப்பஇலையை அனைவருக்கும் ஐயர் பிரசாதமாக வழங்கினார்.

ஸ்ரீநிதி நகர்ந்து மான்விழி அருகே வரவும் ரிஷி அவளருகே வந்து அவளது கையை பற்றிக் கொண்டான். அதை பார்த்தாலும் தன்வியின் மனம் ஆறவேயில்லை. அமைதியாகவே இருந்தாள்.

“என்னடா அமைதியா இருக்க?” மான்விழி தன்வியிடம் கேட்க, “நான் ஏதாவது கேட்டால் திட்டவா? நான் பேசாமலே இருந்துக்கிறேன்” அவள் திரும்பிக் கொண்டாள்.

எல்லாரும் புன்னகைக்க, “தனு நீங்க அம்மன் கதையை தெரிந்து கொள்ளலாம். பூஜை நடக்கும் போதும் நடக்கும் முன்னும் எந்த தடங்களும் வந்தால் அபசகுணம்ன்னு சொல்வாங்க. அதான் சத்தம் போட்டேன்” தர்மேந்திரன் கூறிக் கொண்டே அவளது தலையில் கை வைத்தார்.

கையை தட்டி விட்டு, “நான் உங்களோட பேச மாட்டேன் அங்கிள்” தனு எழுந்து நளினியிடம் சென்று அமர்ந்தாள். அவர் கண்கலங்க அவளை பார்த்தார்.

“தனு சாரி சொல்லு” நளினி அதட்டினார்.

“பாருடா… என்னோட ஸ்டேட்டஸ் மாம்க்கு அக்கறை பொங்கி வழியுது” கேலி செய்தாள்.

“ரொம்ப பேசாத. நான் ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ்ன்னு பேசியதால் தான் இப்ப அதை பற்றி பேசினாலே உனக்கு பிடிக்கலை. இதுக்காக தான் நான் ஸ்டேட்ஸ் பார்ப்பது போல நடித்தேன்” நளினி சுருக்கமாக கூற, ஜோவும் தனுவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ராம், சந்திரமுகன், தர்மேந்திரன் இருவரையும் பார்க்க, ஜோவிற்கு மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. மூவரை தவிர யாரும் அவனை கவனிக்கவில்லை. எல்லாரும் தனுவை தான் பார்த்தனர்.

புன்னகையுடன் அவள் அம்மாவிடம் ஓடி வந்து, “மாம் நீங்க நிஜமா தான் சொல்றீங்களா?” கேட்க, “கோவில்ல வச்சி பொய் சொல்வேன்னு நினைக்கிறீயா?” கேட்டார்.

“தேங்க்ஸ் மாம்” நளினியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“அடச்சீ, இதே வேலையா போச்சு எல்லாருக்கும்” கடுப்புடன் பவிதா கூறிக் கொண்டே ரிஷியை பார்த்தாள். அவன் வேண்டுமென்று ஸ்ரீநிதி கன்னத்தில் பசக்கென ஒன்றை கொடுத்தான்.

டேய், என்ன பண்ற? மான்விழி சத்தமிட, ஸ்ரீநிதி அவனை தள்ளி விட்டு, கோவில்ல வச்சி விளையாடாதீங்க. சக்தி வாய்ந்த அம்மன் என்று சொல்லி வேகமாக வெளியே ஓடினாள்.

“ஸ்ரீ” ரிஷி கத்திக் கொண்டே செல்ல, அவன் கையை பிடித்த அழகி, “வருவாப்பா. இரு” என்றார்.

இல்ல ஆன்ட்டி, “தனியா கோபமா போறா” என்றான்.

“நிது அவளை சுத்தம் செய்துட்டு வருவா” ஐயர் சொல்ல, சுத்தமா? கன்னத்தில் கொடுத்த….முத்தம் அவன் சொல்ல வர, அவன் வாயை அடைத்தார் அமரேசன்.

இதையெல்லாம் இங்க பேசக் கூடாது என்றார்.

இவங்க பொண்ணு தான? இவ்வளவு கோபம் வருமா? தனு கேட்க, “செட் அப். எல்லாரும் அமைதியா இருங்க” கத்தினான் ஜோ.

“சாமி கும்புடுற இடத்துல ஒழுங்கா பேசுங்க. கதை பேசுற வேலையெல்லாம் வெளிய வச்சுக்கோங்க” தன்வியையும் ரிஷியை சீற்றமுடன் முறைத்தான்.

“விட்டா அடிச்சிருவான் போல” தன்வி வாய்க்குள் முணங்க, அவன் அடிக்கலாம் மாட்டான். கோபம் தான் எல்லை மீறி வரும்.

“ரொம்ப நல்லது. என் கதை முடிந்தது” தன்வி மனதில் எண்ணியவாறு பாவமாக இருப்பது போல ஜோவிடம் நடித்தாள். அப்பொழுதும் அவன் மசியவில்லை. இவளை பற்றி தெரியாமல் இருக்குமா? முறைத்து பார்த்தான்.

பாட்டி, இங்க ஜூஸ் கிடைக்குமா?

கொஞ்ச நேரம்மா. வீட்டிற்கு போகும் போது வாங்கலாம் என்றார் பாட்டி.

ஏன்டி மானத்தை வாங்குற? நளினி அவளை பார்த்தாள்.

ஈரப்புடவையுடன் ஸ்ரீநிதி வந்தாள்.

ஸ்ரீ..அவன் பேச வர, “ஷ்” அவன் கையை பிடித்து கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.