மான்விழி முகம் மாற பூபாலனை விட்டு நகர்ந்தார். குணசேகரன் முறைப்புடன் செல்லும் ஜோவை பார்த்தார். அதை பார்த்த சந்திரமுகனும் ரிஷியும் அவரை முறைத்து பார்த்தனர்.
கணவனும் மகனும் தன் அண்ணனை முறைப்பதை பார்த்து, “பாலா ஏதோ செய்திருக்கான்” மான்விழிக்கு புரிந்தது. அதனால் பேச்சை மாற்றி அனைவரையும் கிளப்பினார்.
“பப்ளிம்மா ஜோ எப்படி சரியாக வந்தான்?” ஜெய் அவள் காதில் கேட்க, அவள் புன்னகைத்தாள்.
எதுக்கு இந்த வேலை?
அவன் நிதுவை தொடுறான். நீங்க, மாமா, ரிஷி எல்லாரும் வேடிக்கை தான பார்த்தீங்க?
அப்படியில்லைம்மா?
விரக்தியுடன் அவனை பார்த்த பவிதா, அவன் என்னை தொட்டிருந்தாலும் இப்படி தான வேடிக்கை பார்ப்பீங்க? அவள் கேட்க, பதறிய ஜெய்..உன் பக்கம் அவன் வந்தால் வெட்டி போட்டுருவேன்.
ம்ம்..அப்ப நிது உங்களுக்கு யாரோ தான?
அவ உன்னோட ப்ரெண்டு மட்டும் தான். நீ ஓவர் ரியாக்ட் பண்ற?
“இல்ல கிரிஷ். எனக்கு தாத்தாவை விட அவ, ஜோ, புகழ், மலரம்மா தான் முக்கியம். ஏன்னா நான் மனசு விட்டு பேசுவது, சிரிப்பது அவங்களிடம் மட்டும் தான்” பவிதா கண்ணீருடன் கூறினாள்.
“சரி இனி எவனும் நிது பக்கம் வராமல் பார்த்துக்கிறேன்” அவள் கை மீது கை வைத்தான் ஜெய்கிரிஷ்..
ம்ம்!!!
“என்ன தான் பேசுவாங்க? நாமும் ஸ்ரீயிடம் இவங்களை போல பேசி பார்க்கலாம்” ஸ்ரீநிதியை பாட்டியிடம் விட்டு இவர்களை பின் தொடர்ந்தான் ரிஷி. பவிதாவின் பேச்சில் ரிஷிக்கு சினம் தான் வந்தது. அவள் மீதுள்ள அபிப்ராயம் மொத்தமாக அவனுக்கு மாறியது.
“ஜெய் இப்ப புகழ் இருந்திருந்தான்னா நிது பக்கம் கூட எவனும் வர முடியாது. தெரியுமா? அவளை அப்படி பார்த்துப்பான். என்னையும் யாராவது தொந்தரவு செய்தால் தூக்கிப் போட்டு மிதிப்பான் தெரியுமா?” என்றாள்.
“எதற்கெடுத்தாலும் இருவருக்கும் புகழ் தானா?” சலிப்புடன் ஜெய் கேட்க, அவன் எங்களோட வெல் விசர். இப்ப மட்டும் அவன் உயிரோட இருந்தால் நிதுவை உங்க தம்பிக்கு திருமணம் நடத்த விட்டிருக்கவே மாட்டேன். எல்லாம் நிதுவுக்காக அமைதியா போக வேண்டி இருக்கு.
ஏம்ப்பா, அதான் அவன் இல்லைல்ல. அப்புறம் எதுக்கு இந்த பேச்சு?
நீங்க தான கேட்டீங்க?
“எனக்கே புகழ் பக்கமிருந்தால் பாதுகாப்பாக இருக்கும். எப்போதும் நிதுவை விட்டு புரியாத அவன் பிரிவை எப்படி தான் அவ தாங்கிட்டு இருக்காளோ?” கண்கலங்கினாள். ரிஷி அப்படியே நின்று விட்டான்.
இதுவரை புகழ் பற்றி பேசும் போது பைத்தியம் போல செத்தவனை பற்றி பேசுறான்னு ரிஷிக்கு ஸ்ரீநிதி மீது கோபம் வந்திருக்கும். ஆனால் இப்பொழுது பொறாமை தலை தூக்க ஆரம்பித்தது. ரிஷி அவன் காதலில் முதல் கட்டத்தில் வந்து நிற்பது தெரியாமல் மனதில் போராடிக் கொண்டிருந்தான்.
ஸ்ரீநிதி அவனருகே வந்து அவன் கையை பற்ற, அவளை பார்த்து அவள் கையை இறுக பற்றினான்.
அவன் கையை பார்த்து விட்டு, “எனக்கு கை வலிக்குது” என்றாள்.
“ஐ அம் சாரி” அவள் கையை விட்டு அவளை பார்த்து, புகழ் உனக்கு முக்கியமான்னு கேட்க எண்ணி கேட்க முடியாமல் மென்று விழுங்கினான்.
பவிதா அவளிடம் வந்து, “நிது எதுக்கு ரெட் பிள்ளோவ எடுத்துட்டு வந்த? அழகி சொன்னாங்க” என்றாள்.
ரெட் பிள்ளோவா? ரிஷி ஸ்ரீநிதியை பார்த்தான்.
என்ன? அவள் கேட்க, நம்ம ப்யூட்டி தான் சொன்னாங்க. புகழ் நினைவில் ஏற்கனவே கஷ்டப்படுற. இதில் அவன் வாங்கிக் கொடுத்ததை எடுத்து வந்திருக்க? சினமுடன் கேட்பது போல ரிஷியை ஓரக்கண்ணால் பார்த்தாள் பவிதா.
“என்னது? அவன் வாங்கிக் கொடுத்ததையா இவ கட்டிப்பிடிச்சிட்டு தூங்குறா?” ரிஷிக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது.
வீ, அதாவது என் பக்கம் இருந்தால் அவன் இருப்பது போல இருக்குமே! என்றாளே! அவ்வளவு தான் ரிஷிக்கு.
என்ன? அவன் சினமுடன் ஸ்ரீநிதியை பார்க்க, அவள் புரியாமல் அவனை பார்க்க, பவிதா சிரித்தாள்.
“ஏய் எங்க வழிக்கு நீ வராத. போ உன்னோட புருசனை கட்டிப் பிடிச்சிட்டு போக வேண்டியது தான?” அவளை திட்டி சமாளித்தான்.
“ஸ்ரீநிதியோ ஜெய் மாமா மீது பொறாமையில் கத்துகிறான்” மீண்டும் தவறாக எண்ணிக் கொண்டாள்.
நீ சொன்னாலும் சொல்லைன்னாலும் கட்டிபிடிக்க என்ன முத்தம் கூட கொடுப்பேன். நீ என்னோட நிதுவுக்கு கொடுப்பாயா? அவனை ஏற்றி விட்டாள்.
ஏன் முடியாது? கொடுப்பேனே! பசக்கென ஸ்ரீநிதி கன்னத்தில் முத்தமிட்டான் ரிஷி.
“அட இத நான் கூட தான் கொடுப்பேன்” பவிதா ஸ்ரீநிதிக்கு முத்தம் கொடுத்தாள்.
“ஏய்ய்… நீ எதுக்கு கொடுக்கிற? போ” ரிஷி அவளை தள்ளினான். எல்லாரும் அதிர்ந்து இருவரையும் பார்க்க, அதான பார்த்தேன். உன்னால இதுக்கு மேல போக முடியாது. அதான் என்னிடம் கோபப்படுற? மேலும் தூண்டி விட்டாள்.
என்ன முடியாது?
“லிப் கிஸ் கொடுக்க உனக்கெல்லாம் தைரியமே இல்லை. நான் கொடுக்கிறேன்” பவிதா உதட்டை குவித்து ஸ்ரீநிதியை நெருங்க, “பப்ளிம்மா” ஜெய் அவளிடம் ஓடி வந்தான். ஸ்ரீநிதி அவளை அதிர்ந்து பார்த்தாள்.
“இன்று எல்லாம் நம்ப முடியாததாகவே நடக்குது” அலைபேசியை எடுத்து இவர்களை வீடியோ எடுத்தாள் தன்வி.
பெரியவர்கள் இவர்களை விநோதமாக பார்த்துக் கொண்டே அருகே வர, பவிதாவின் வாயை பிடித்து தள்ளி ஸ்ரீநிதியை இழுத்து ரிஷி முத்தமிட்டான். எல்லாரும் அதிர்ந்து நின்று விட,
“மாம் எனக்கு மயக்கம் வருது. என்னை பிடி” நளினியை பிடித்தாள் தன்வி.
இவர்களின் சேட்டையை பார்த்து சந்திரமுகனும் பாட்டியும் புன்னகைக்க,
“ரிஷி கோவில்ல வச்சி என்ன பண்ணிட்டு இருக்க?” மான்விழி அவனிடம் ஓடி வந்தார். கண்ணை விரித்து ஸ்ரீநிதி அவனை பார்க்க, தனு நிதானமாகி வயிற்றை பிடித்து சிரித்தாள்.
பவிதா புன்னகையுடன் ஜெய்யை பார்த்து, “எப்படி?” என்று கூந்தலை பின்னே தள்ளினாள்.
முத்தமிடும் ரிஷியை சீற்றமுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பூபாலன். அவன் தந்தை அவன் கோபத்தை கட்டுப்படுத்த அவனை முன்னே இழுத்து சென்றார்.
ரிஷி விலக, கண்ணிமைக்காமல் ஸ்ரீநிதி தன் கணவனையே பார்த்தாள்.
“நீ வா நிதி” அவளை தன்னுடன் வெளியே அழைத்து வந்த மான்விழி, “அவனோட பைக்ல்ல தான் போகணும். எதுவானாலும் வீட்ல போய் வச்சுக்கோங்க. எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கும்மா” அவள் நெற்றியில் முத்தமிட்டார்.
ரிஷி அவரை முறைக்க, “காதலிப்பவன் போல நடந்து கொள்கிறான்” என்றாள் தன்வி.
“இது ஈர்ப்பு மட்டும் தான்” நளினி கூற, சந்திரமுகன் யோசனையுடன் இவர்களுடன் சென்றார்.
தன்வி எடுத்த வீடியோவை ஜோவிற்கு அனுப்பினாள். அவன் அதை பார்த்து மனநிம்மதியுடன் சென்றான். அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர்.
ரிஷி அலைபேசி ஒலிக்க, அவன் அதனை வெறித்த பார்வையுடன் கட் செய்தான். மீண்டும் அழைப்பு வர, பேசிட்டு வாடா. சாப்பிட்டு ஓய்வெடுப்பீங்க. நாளை நிதி, பவியோட குலதெய்வத்தை வழிபட போகணும்..
“ஏன் பப்ளிம்மா, இருவருக்கும் ஒரே குலதெய்வ கோவிலா?” ஜெய் சிந்தனையுடன் கேட்டான்.
எங்களுக்கு மட்டுமல்ல கிரிஷ்.. புகழுக்கும் அதான் குலதெய்வ கோவில் என்றாள் பவிதா.
“அதெப்படிம்மா?” பாட்டி பவிதாவை பார்த்து கேட்டு மனதினுள் புன்னகைத்தார்.
“அதெல்லாம் தெரியாது பாட்டி. நாங்க சின்ன வயதிலிருந்தே வருசம் வருசம் அந்த கோவிலுக்கு போயிருவோம்” அவள் சொல்ல சொல்ல, ஸ்ரீநிதி கண்கள் கலங்கியது.
ரிஷி அதை பார்த்து கடுப்புடன் தனியே நகர்ந்தான்.
“சோ, நீங்க பள்ளியில் பார்க்கும் முன்னே உங்களை ஒருவருக்கு ஒருவர் தெரியும்” ஜெய் கேட்க, “இல்லப்பா..அவங்க குடும்பத்தினர் பார்த்து பழகி இருந்திருப்பாங்க. பள்ளியில் பார்த்து பசங்க ப்ரெண்ட்ஸ் ஆகி எல்லாரும் நெருக்கமாகி இருப்பாங்க” சந்திரமுகன் சமாளித்து வைத்தார்.
“உங்களுக்கு யாரு சொன்னா அங்கிள்?” பவிதா கேட்டாள்.
“உன்னோட தாத்தா அமரேசன் தான் சொன்னார்” அவர் ஸ்ரீநிதியை பார்த்தார். கண்கலங்கிக் கொண்டிருந்தவள் ஜெய்யின் ஊடுருவும் கேள்வியில் பதட்டமுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்திருப்பாள்.
தன் மருமகளின் டென்சனை ஒரே நொடியில் போக்கி விட்டார் சந்திரமுகன்.
உணவை முடித்து அவரவர் அறைக்கு அனைவரும் புறப்பட்டனர்.
ரிஷியின் இன்றைய மென்மையான செயலில் எவ்வித பயமும் இல்லாமல் அறைக்கு சென்று பவிதா எடுத்துக் கொடுத்த உடைகளை பார்த்தாள். எல்லாம் பாதி பாதியாக இருந்தது..
கிரே கலரில் லோ செஸ்ட், கையில் சிறு ஸ்ட்ரிப்புடன், முட்டி வரையிலான ஆடையை எடுத்து அணிந்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு ரிஷி அறைக்குள் வரும் முன்னே படுத்துக் கொண்டாள்.
“அலுப்பில் உறங்கி இருப்பாள்” என்று அவன் பாடலை கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தான்.
ஸ்ரீநிதி அசைந்து அவன் பக்கம் திரும்பி படுத்தாள். அவள் போர்வை விலகியது.
“என்ன நம்ம ஸ்ரீயா? இது போல ஆடை உடுத்தி இருக்கா?” சிந்தனையுடன் படுக்கையிலிருந்து இறங்கினான். அவளது அலமாரியை அவன் திறக்க, மயிலிறகு கீழே விழுந்தது.
அதனையும் அவளையும் பார்த்து புன்னகையுடன் அலமாரியை மூடி விட்டு அவளது பாதமருகே வந்து அமர்ந்து, போர்வையை கீழே லேசாக விலக்கி, அவளது பாதத்தில் கூச்சமாக்கி குனிந்து கொண்டான்.
மறுபக்கம் அவள் திரும்பி படுத்தாள். அவள் போர்வையை இழுத்து அவளை பார்த்தான்.
ஸ்ரீ லேசாக கண்ணை விரித்து, “லவ் யூ டா பேட் பாய்” புலம்பினாள். விரைந்து நகர்ந்து கீழே குனிந்தவன் அவளது பேட் பாய்யும் லவ் யூவும் அவனை பயமுறுத்தியது.
நான் பேட் பாய்யா? இல்லை அந்த புகழா? ஸ்ரீநிதியின் ஆடையை பார்த்து புன்னகையுடன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு அவளை போர்வையுடன் அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.
பக்கத்துல வரக் கூடாதுன்னு நினைச்சா விட மாட்டா போல…
என்னோட வாழ்க்கையில் என் கனவை அடையும் வாய்ப்பை டாட் கொடுத்திருக்கார். அதில் வெற்றியடைந்த பின் நான்..என்று நிறுத்தி..
“நான் என்ன யோசிக்கிறேன்? ஸ்ரீயை அடைய நினைக்கிறேனா?” அவள் முகத்தை பார்த்தான்.
அப்பாவியான அவள் முகமும் அவனை புரிந்து நடந்து கொள்ளும் அவளது மனதையும் எண்ணி, “மண்டு இது காதல் தான்” என்று அவன் மனம் உறுதி படுத்தியது.
“ஸ்ரீ உன்னை நான் காதலிக்கிறேனா?” இதழ்கள் விரிய அவளை பார்க்க, அவனது இறுகி அணைப்பில் அவள் கண்களை மெதுவாக திறந்தாள். பட்டென கண்ணை மூடினான் ரிஷி.
இவரு? என்று பயந்து அவனை நகர்த்த முயன்றாள். முடியவில்லை..
அவன் அமைதியாக தூங்குவதையும் அவன் அணைப்பையும் பார்த்து விட்டு, அவன் முகத்தை தொட வந்தவள் கையை இழுத்துக் கொண்டு,
“நோ..இது சரியில்லை. இந்த பேட் பாய் எப்படி இப்படி தூங்குறான்?” அவளது அலைபேசியை துலாவி எடுத்து மணியை பார்த்தாள்.
“இன்னும் நேரமாகலை. ஹப்பா இப்ப தான் நிம்மதி” அவனை ரசித்து பார்த்து அவனது மீசையை வருடினாள்.
அவன் அசைய, உஃப் மெதுவாக ஊதினாள்.
அவன் புன்னகைக்க, ஐய்யோ முழிச்சாரா? கண்ணை மூடி மீண்டும் திறந்து பார்த்தாள். அவன் தூங்குகிறான் என்று எண்ணி அவனை இறுக அணைத்து.. “இப்படியே இருந்தால் நல்லா இருக்கும்” அவன் மார்பில் தலையை சாய்த்து கண்ணை மூடிக் கொண்டாள்.
அவனுக்கு அவளது பேச்சும் அவளது செய்கையும் இம்சித்தது. ரசனையுடன் அவனும் தூங்கினான்.
மணி ஒன்றை தொட்டிருக்கும். நேற்று போல ஆல்கஹால் வாடை வரவும் ஸ்ரீ பட்டென கண் விழித்தாள். ரிஷி நேற்று போல நடந்து கொள்ளத் தொடங்கினான். அவள் கண்ணீருடன் எந்த உணர்வையும் காட்டாமல் ஜடம் போல இருந்து கொண்டாள்.
பவியை பற்றியோ காதலை பற்றியோ அவன் எதையும் உலறாமல் சோர்வில் தூங்கி விட்டான். மனம் வெறுத்து போய் அமர்ந்து அவனை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு சிந்தனை மேலோங்கியது.
இந்த நேரம் அதுவும் சரியாக ஒரு மணியின் பின் தான் இவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்கு போதையில் மறந்தும் விடுகிறது. இரவு தூங்கும் போது கூட சமத்தாக தானே தூங்கினான்.
“ஏதும் பிரச்சனையோ? அதை சமாளிக்க முடியாமல் தான் குடித்து விட்டு இவ்வாறு நடந்து கொள்கிறானோ?” சிந்தனையுடன் அவனை பார்த்தாள்.
காலை அவளுக்கு முன் விழித்தான் ரிஷி. அவன் எண்ணத்தில் நேற்றைய காலையில் ஸ்ரீநிதி புடவையில் இருந்த இரத்தக்கறை நினைவுக்கு வந்தது. வேகமாக அவள் போர்வையை விலக்கி அவளது ஆடையை பார்த்தான். அவள் பயந்து எழுந்து அமர்ந்தாள்.
“என்ன பண்றீங்க?” வேகமாக அவனுக்கு முதுகுகாட்டி நின்றாள்.
“ஒன்றும் செய்யலை” அவளருகே வந்து அவளை திருப்பி அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தான்.
“எதுக்கு இப்படி பாக்குறீங்க?”
“ஒன்றுமில்லை” அவளை பார்த்து சிரித்தான்.
என்ன?
ஆடை மாறினாலும் நீ மாறலை…
நான் மாற மாட்டேன்..
அவளை இழுத்து அவள் முகத்தை நிமிர்த்தி, “உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா? உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?” கேட்டான்.
பதில் கூறாமல் அவள் அவனை பார்த்தாள்.
என்னிடம் கேட்க மாட்டாயா?
நான் கேட்டால் உங்க சம்பாத்திய பணத்தில் வாங்கித் தரமுடியுமா?
வாட்?
ம்ம்! எல்லா மனைவியும் எதிர்பார்க்கும் அதிகபட்ச விசயம் இது தான். உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கு? எனக்கு சாப்பிட உங்க பணத்தில் வாங்கித் தர முடியுமா?
ஸ்ரீ..நான்..இந்த மாதம் கம்பெனி பொறுப்பை எடுத்துருக்கேன். என்னோட பிராஜெக்டில் லாபம் கிடைத்தால் எனக்கு பணம் கிடைக்கும்.
ஒரு மாதம் சரி? அதன் பின்…அவள் அவனை பார்த்தாள்.
டாட் எனக்கு ஒரு வருசம் டைம் குடுத்திருக்கார். நான் சினி ஃபீல்டுக்குள்ள போனால் உனக்காக எல்லாமே செய்ய பணம் கிடைக்கும்.
ஒரு விசயம் புரிஞ்சுக்கோங்க. ஒரே ஒரு வருசம் தான் உங்களுக்கு மாமா நேரம் கொடுத்திருக்கார். அவர் பெயரை பயன்படுத்தவே கூடாதுன்னு சொல்லி இருக்கார்..
நீங்க போனவுடன் எவரும் உங்களை செலக்ட் பண்ண மாட்டாங்க. இப்பெல்லாம் திறமையை வெளிப்படையாக காட்டினால் தான் பார்க்கவே செய்வாங்க. அதிலும் பணம் வாங்கி உயர்த்தி விடுபவர்களும் இருக்காங்க..
நிறைய பிரச்சனைகளை தாண்டி தான் நீங்க வர முடியும். அதற்கு ஒரு வருடம் மிகவும் குறைவு.
ஸ்ரீ உனக்கு என்னை பிடிக்கும்ல்ல? என்னோட சாங்க்ஸ் கேட்டிருக்கேல்ல?
ம்ம்ம்! எல்லாமே பார்த்திருக்கேன் நேரடியாகவே..
ரிஷி அவளை அணைக்க வந்தான். அவனை நிறுத்தி நான் உங்களது மனைவி மட்டும் தான். என்னால உங்களுக்கு சப்போர்ட்டா மட்டும் தான் பேச முடியும். நீங்க இப்பவே நேரமாகிட்டு இருக்கீங்க? நேரம் போனால் வராது..
டி.வி ஷோ, இல்ல கான்சர்ட்.. எதன் மூலமாகவாது முதலில் முயற்சி செய்யுங்க. உங்களுக்கு திறமை இருக்கு. உங்களை போல நிறைய பசங்க உங்களுக்கு போட்டிக்காக வருவாங்க. ஆல் தி பெஸ்ட். எனக்கு உங்க செயலாளர் துரியன் எண்ணை கொடுங்க. நான் கம்பெனியை பார்த்துக்கிறேன்..
“டாட் போல நீயும் சப்போர்ட்டா இரு எனக்கு அது போதும்” அவளை இழுத்து அணைத்தான்.
மியூசிக் பிளஸ் சாங்கோட முயற்சி செய்யுங்க..
ஸ்ரீ உனக்கு கம்பெனியில கஷ்டமா இருக்காதா? அவளை நகர்த்தி அவள் முகத்தை பார்த்தான்.
என்னோட மைன்ஸ் ஒன்று தான்..லவ்..
என்னையா சொல்ற?
புன்னகையுடன் “நோ” என்றாள்.
“நோ வா? நீ என்னை காதலிக்கலையா? அந்த புகழை காதலிக்கிறீயா?”
கலகலவென சிரித்தாள் ஸ்ரீநிதி.
நீங்க மட்டும் தான் இந்த கேள்வியை கேட்காமல் இருந்தீங்க? ஜெய் மாமா கூட கேட்டு விட்டார்..
என்ன?
ம்ம்!! நான் அவனை காதலித்தால் என்ன? இல்லைன்னா உங்களுக்கென்ன? உங்களுக்கு தான் என்னை பிடிக்காதுல்ல?
பிடிக்காதா? நான் சொன்னேனா?
“அப்ப பிடிக்குமா?” அவள் ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்.
“ப்ரெண்டா பிடிக்கும்” சட்டென கூறி விட்டான்.
ப்ரெண்டு..ம்ம்!!! தேங்க்ஸ்..என்றாள்.
“ஒழுங்கான முறையில் காதலை சொல்ல வேண்டும்” மனதில் எண்ணினான் ரிஷி.
ம்ம்..
சரி..உங்க தோழி என்ன சொன்னாலும் கேட்பீங்களா?
என்ன? அவனிடம் சுருதி குறைந்தது.
குடியை மட்டும் நிறுத்துங்க..
உனக்கு குடிப்பது பிடிக்காதா?
எனக்கு பிடிப்பது பிடிக்காதது இப்ப முக்கியமில்லை. உங்க உடல் நிலையை பார்த்துக்கணும். பின் உங்க கரியர்ல்ல நீங்க முன்னாடி வரணும். அதுக்காக சொல்றேன்..
“என்னால உடனே நிறுத்த முடியாது” தயங்கினான்.
புன்னகைத்து “உங்கள் விருப்பம்” என்றாள்.
ஸ்ரீ அவளை நெருங்கி, “தேங்க்ஸ்” அணைத்தான்.
“நேரமாகுது” அவள் கூற, அவன் காதில் விழவேயில்லை.
அவளின் கூந்தலில் கையை நுழைத்து அவளை முத்தமிட சென்றான்.
கதவை தட்டும் சத்தம் கேட்க, அதுவும் அவன் காதில் விழவில்லை.
ஸ்ரீநிதி அவன் வாயில் கை வைத்து கதவை பார்த்தாள்.
“அவங்க கிடக்கட்டும்” மீண்டும் அருகே வந்தான். மீண்டும் சத்தம் கேட்க சினமுடன் கண்ணை மூடி திறந்த ரிஷி சினமுடன் கதவை திறந்தான். ஸ்ரீநிதி அப்படியே நின்றாள்.
பாட்டியை பார்த்து, “உனக்கு நேரம் காலமெல்லாம் தெரியாதா? சும்மா யாராவது வந்து தொந்தரவு பண்ணீட்டே இருக்கீங்க?” அவன் சத்தமிட, அவனை தள்ளி விட்டு பாட்டி எட்டி பார்த்து புன்னகைத்தார்.
ஸ்ரீநிதி அவரை பார்த்து, “பாட்டி…” என்று படுக்கையின் பின் மறைந்து கொண்டாள்.
இன்முகமுடன், “உன்னோட வேலையை சிறப்பா தான் நடத்திட்டு இருக்க..ம்!!!” புருவத்தை உயர்த்தினார்.
கரடி மாதிரி நுழைச்சிட்டு என்ன பேசுற பாட்டி? வர வர நம்ம வீட்ல யாரும் புரியிற மாதிரியே பேச மாட்டிங்கிறீங்க?
பாட்டி வெட்கப்பட்டு அவனை பார்த்து சிரிக்க, வாயை கோணலாக்கி பாட்டியை பார்த்தான்.
அவர் வெட்கமுடன் நகர, “எதுக்கு இப்ப வந்த?” ரிஷி அவர் கையை பிடித்து கேட்டான்.
“நிதி அம்மா வீட்ல கொஞ்ச நேரத்துல்ல கிளம்பிடுவாங்களாம்” அவர் ரிஷியை பார்த்தார்.
அதுக்கு?
“இப்பவே குளிச்சி கிளம்பலாம் இல்லைன்னா வரலை பொண்டாட்டியுடன் வேலை இருக்குன்னு கூட சொல்லலாம்” பாட்டி சிரிப்புடன் கூறினார்.
“அப்ப அப்படியே சொல்லீடு” என்றான் ரிஷி.
“என்ன?” சினமுடன் வேகமாக படுக்கையின் பின்னிருந்து ஓடி வந்து கையை கட்டிக் கொண்டு ரிஷியை முறைத்தாள்.
பேரான்டி தயாராகிடுவீயா? பாட்டி அவனை நெருங்கி கேட்க, பாட்டி பார்த்தேல்ல மாம் காளி உருவத்துல்ல எப்படி இருப்பாங்க? அது தேவலை..என்றான்.
ஓ! அப்படியா? நிதி ரிஷிக்கு அவர் ஏதோ சொல்ல வர, “பாட்டி நாங்க கோவிலுக்கு போகணும். கிளம்பு” அப்படியே அவரை நகர்த்தி அவன் கதவை அடைத்து ஸ்ரீநிதியை பார்க்க, அவள் குளியலறைக் கதவில் தாழ் போட்டு சென்று விட்டாள்.
“ஸ்ரீ ஒரு கிஸ் கூட இல்லை” வெளியேயிருந்து அவன் சத்தமிட, “எந்த ஊர்ல தோழிக்கு முத்தம் கொடுப்பாங்க?”
நான் உன்னோட கணவனா கிஸ் செய்வேன்..
காதல் இல்லாத கணவனின் முத்தம் எனக்கு தேவையில்லை..
“காதல் இல்லையா?” முணுமுணுத்து அவன் அலைபேசியை பார்த்து பெருமூச்சுடன் ஏதோ செய்தி அனுப்பினான். பின் வந்த செய்தியை பார்த்து சினமுடன் பதில் கொடுத்தான். அதற்கும் அவனுக்கு சினமேற்றும் விதமாக தான் செய்தி வந்தது.