தாரகை 20

குழப்பமான மனதுடன் தயாராகத் தொடங்கினாள் ஸ்ரீநிதி. குளியலறையில் இருந்த அவளது ஆடையை பார்த்து இரவு புடவையுடன் தான் படுத்தாள். டாப், ஸ்கர்ட்டை பார்த்து, இதெப்படி? சிந்தனையுடன் அதை எடுத்து பார்த்தான் ரிஷி. அவளது புடவையில் இருந்த இரத்தக்கறையை பார்த்து திகைத்தான்.

அவன் கையிலிருந்ததை கீழே போட்டு புடவையை கையில் எடுத்து பார்த்து, ஸ்ரீ..ஸ்ரீ..சத்தமிட்டான். ஸ்ரீநிதி பயந்து உள்ளே எட்டிப் பார்த்தாள்.

“என்ன இது ஸ்ரீ? இரத்தக்கறையா இருக்கு? உனக்கு ஏதும் செய்யுதா?” கேட்டான்.

பதட்டமான ஸ்ரீநிதி, “அவனிடம் சொன்னால் தன்னை கேவலமாக பேசிவிட்டால் என்ன செய்வது?” சிந்தித்து அது நேற்று ஒப்பனை போடும் போது கொட்டியது.

“அப்படியேவா வந்த?” அவன் புருவம் உயர்த்தி கேட்டான்.

கொட்டியது யாருக்கும் தெரியாது. எனக்கு பொருட்களை வீணடிப்பது பிடிக்காது. அதனால் அதோடு தான் வந்தேன்..

“இதை பார்த்தால் இரத்தக்கறை போல இருக்கா. பயந்துட்டேன்” புடவையை எடுத்த இடத்திலே போட்டு அவளை பார்த்தான்.

ப்யூட்டிபுல்..என்றான்.

“சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க” ஸ்ரீநிதி கண்ணாடி முன் நின்றாள். அவள் சிந்தனையில்…

இவர் இப்பொழுது நேற்று போல நடந்து கொள்ளவில்லை. என் மீது அக்கறையுடன் கேட்கிறார். இந்த இரத்தக்கறை ஏற்பட காரணமே இவர் தான்னு தெரிந்தால் கஷ்டப்படுவாரே! இது என்னோட முதலிரவு புடவை. எப்படி கீழே போடுவது? சிந்தனையுடன் அமர்ந்தாள்.

வெளியே வந்த ரிஷி அவள் சிந்தனையை கலைந்தான்.

ஸ்ரீ…எனக்கு உடுத்த ஆடையை தேர்ந்தெடு.

பின் தான் அந்த பைல் நினைவு வர, அவள் அவன் அலமாரியில் கை வைக்க, வேகமாக அலமாரியை மறைத்து நின்றான்.

“ஸ்ரீநிதிக்கு தான் தெரியுமே!” அவனையே அவள் பார்க்க, அவன் தலையை உலுக்கினான். அவன் தலையில் இருந்த தண்ணீர் அவள் முகத்தில் படவும் ஸ்ரீநிதியின் தேகம் சிலிர்த்தது.

விரைந்து நகர்ந்து நின்றாள். அவன் வெற்று உடலுடன் துவாலையை மட்டும் இடையில் கட்டி இருந்தான்.

ஸ்ரீநிதியை நெருங்கி அவள் கையை இழுத்து அவன் மார்பில் வைத்தான். ஸ்ரீநிதி அவனை கண்ணிமைக்காமல் பார்த்தான்.

ஹே ஸ்ரீ, ஹௌ இஸ் மை பாடி?

அவன் கையை எடுத்து விட்டு,  “நான் இப்ப தயாராகிடுவேன்” என்றாள்.

“நானும் ரெடி தான்” அவள் நகரவும் வேகமாக அவனது பைல்லை கீழிருக்கும் ஓர் சிறு பெட்டிக்குள் வைத்தான். அவள் கவனிக்கவில்லை பெருமூச்சுடன் விசிலடித்துக் கொண்டே ஆடையை எடுத்து தயாரானான். அவள் படுக்கை விரிப்புகளை சரி செய்தாள்.

“நேற்று பார்க்கும் போது நம்முடைய படுக்கை எவ்வளவு அழகாக பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். இன்று பார் முழுவதும் பாழாகி இருக்கு” அவன் கூற,  ஸ்ரீநிதி அவளை எண்ணி மனதில் வருத்தமானாள்.

இருவரும் படியிலிருந்து இறங்கினார்கள். இதற்கு முன்னே பவிதாவும் ஜெய்கிரிஷூம் ஜோடியாக கை கோர்த்து இறங்கி இருப்பார்கள். ஆனால் ரிஷி ஸ்ரீநிதியை தனியே விட்டு வேகவேகமாக கீழே வந்தான்.

குட் மார்னிங் மாம், டாட் என்றான்.

மான்விழி அவனை முறைத்து பார்த்தார்.

எனி பிராபிளம் மாம்?

“நத்திங்” உதட்டை சுளித்தாள் தன்வி.

மான்விழி தன் மகனை கண்டுகொள்ளாமல் ஸ்ரீநிதியிடம் சென்று அவளுக்கு மல்லிகையை சரம் சரமாக வைத்து விட்டார்.

பவிதா அருகே வந்த தன்வி, அண்ணி “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” மூவி பார்த்திருக்கீங்களா? அதில் ஐஸூவோட காதல் மிகவும் தூய்மையானது. ஆனால் இந்த அப்பாஸ் தான் அதை புரிந்து கொள்ளாமல் கையில் கிடைத்த வைரத்தை இழந்திருப்பான்..

“இப்ப எதுக்கு இதெல்லாம்?” பவிதா கேட்க, “அதுவா அண்ணி? அப்பாஸ் இழந்த வைரத்தை மம்முட்டி பாதுகாப்பார். அது போல நடப்பதெல்லாம் படத்தில் தான? நேரிலா நடக்கப் போகுது” ரிஷியை மறைமுகமாக தாக்கினாள்.

ஜெய் அவளிடம், வைரம் எங்கிருந்தாலும் வைரம் தான் தனு. அந்த வைரம் தான் தனக்கு யார் வேணும்ன்னு தேர்ந்தெடுக்கணும். வைரத்தின் தரம் குறையாது. அந்த வைரத்தை இழப்பவன் வாழ்க்கையை இழந்து தான் நிற்கணும். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. வைரத்திற்கு ஏற்ற மணவாளனாக அவன் ஆவான்.

எல்லாருக்கும் தனு, ஜெய்யின் பேச்சு புரிந்தது ரிஷியை தவிர.

ஜெய் தன் தம்பியின் குட் மார்னிங் சோர்வுடன் இருப்பதாக உணரவும், ஸ்ரீயும் அவனும் ஒன்றாகி விட்டார்கள். இனி பிரச்சனை வராது என்று அனைவருக்கும் தெளிவு படுத்தினான்.

அப்பொழுது நளினி, “வைரம் வைரம் தான். விலைமதிப்பற்ற வைரம் கையில் இருக்கும் போது அதன் மதிப்பு யாருக்கும் தெரியாது. பார்க்கதான் வைரத்திற்கு ஏற்றவனாக தெரியும். வைரத்திற்கு தான் அனைத்தும் தெரியும்” ஸ்ரீநிதியை பார்த்தார். எல்லாரும் அவளை பார்த்தனர்.

“என்ன பேசுறீங்க? என்ன வைரம்? எனக்கு ஒன்றுமே புரியல” ரிஷி கூற,

“உனக்கு என்ன தான் புரியும்?”  பவிதா கடுகடுவென கூறி, “வாங்க கிரிஷ்”  ஜெய்கிரிஷ் கையை பிடித்தாள்.

“பேசியது போதும் வாங்க” வீட்டில் வழிபாட்டை முடித்து கிளம்பலாம் என்றார் பாட்டி.

அத்த, மாமாவும் பாலாவும் வருவாங்க என்றார் மான்விழி. ரிஷி முகம் சுருங்கியது.

“நாங்க வந்துட்டோம்” வேஷ்டி சட்டையில் வந்திருந்தான் பூபாலன்.

“மாப்பிள்ள மாதிரி தயாராகி வந்திருக்கான். பொண்ணு பார்க்க வேண்டியது தான்” மான்விழி புன்னகையுடன் தன் மாமன் மகனை வழித்து நெட்டி முறித்தார்.

ரிஷி, ஜெய் முகம் கடுகடுத்தது.

சித்தி, உங்க பசங்க என்னை முறைக்கிறாங்க. நான் என்ன செய்தேன்? பாவமாக கேட்டான்.

ஏன்டா, புள்ளைய முறைக்கிறீங்க? அவர் தன் மகன்களை பார்த்தார். அவன் பார்வை ஸ்ரீநிதியை மேலிருந்து கீழாக வருடியது.

இதை பார்த்த ஜெய், “மாம் கிளம்பலாமா? எதுக்கு வெட்டி பேச்சு?” தன் மனைவி கையை பிடித்து பூஜை அறைக்குள் சென்றான்.

ஆமா..வாங்க

ரிஷி அவனாகவே ஸ்ரீநிதி கையை கோர்த்து அவளுடன் நடந்தான். அவள் அவனை பார்த்துக் கொண்டே செல்ல, பூபாலன் சினமுடன் பல்லை கடித்தான்.

பவிதா விளக்கேற்ற, பூஜை தட்டை மான்விழி ஸ்ரீநிதி கையில் கொடுத்தார். கடவுளுக்கு ஆராத்தி காட்டி பூஜையை முடித்து அனைவருக்கும் கொடுத்தவள் ரிஷி எடுக்கும் முன் தனுவை பார்த்து விட்டு அவன் நெற்றியில் அவளே விபூதி பூசி ஊதி விட்டாள்.

“ரிஷி நிதிக்கு பொட்டு வச்சு விடுப்பா” பாட்டி கூற, அவள் ஆராத்தியை மான்விழி வாங்கினார். தன் மாங்கல்யத்தை அவள் அவனிடம் நீட்ட புன்னகையுடன் அதிலும் அவள் நெற்றியிலும் வைத்து விட்டான்.

இப்ப இருக்கிற புள்ளைகளுக்கு இதை கூட சொல்ல வேண்டியிருக்கு. பெரிய மருமகன் அவராகவே எம் மகளுக்கு வச்சு விட்டார் குணசேகரன் சொல்ல,

கணவன் தான் வச்சிவிடணும்ன்னு இல்ல பெரியப்பா அதான் அவருக்கு நான் வச்சு விட்டேனே! அவருக்கு பதில் கொடுத்து  குணசேகரன் வாயை மூடினாள் ஸ்ரீநிதி.

ரிஷி கையை பிடித்து இறைவன் முன் வந்து கண்ணை காட்டினாள். அவன் புரியாமல் பார்க்க, சேர்ந்து விழுந்து கும்பிடணும் என்றாள். அவர்களை நகர்த்திய பவிதா, “நீங்க பேசிட்டே இருங்க” ஜெய்யுடன் இறைவன், பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றாள்.

ஸ்ரீநிதி, ரிஷி விழும் போது இடையே வந்து விழுந்தான் பூபாலன். எல்லாரும் அதிர்ந்து பார்த்தனர்.

பாலா வெயிட் பண்ணி இருக்காலாமே!

“சித்தி, இவங்க நிதானமா கும்பிடட்டும். நான் கும்பிட்டு போகலாம்ன்னு விழுந்தேன். இவங்களும் விழுந்துட்டாங்க” ரிஷியை பார்க்க, அவன் கண்டுகொள்ளாமல் எழுந்தான். ஸ்ரீநிதி பூபாலனை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே எழுந்தாள்.

தன்விக்கு சும்மாவே பூபாலனை பிடிக்காது.

வேகமாக விழுந்து கும்பிட்டு எங்க போய் இடிச்சிட்டு நிக்கப் போற? சத்தமிட்டாள்.

“என்ன மகளே! அண்ணாவுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க” குணசேகரன் சொல்ல, “தனு” சினமுடன் அழைத்தார் மான்விழி.

அவள் முகத்தை திருப்பி, “பிக்ம்மா இவனுக்காக என்னிடம் சத்தம் போட்டேல்ல. இனி நீ எனக்காக எதுவும் செய்து தர வேண்டாம். எனக்கு உணவு மற்ற எல்லாமே இனி நிது தான் செய்வாங்க” கோபமாக வெளியே சென்றாள். வேல்விழி அவள் பின் சென்றார்.

“தனு” ஸ்ரீநிதி அழைக்க, அவள் கையை பிடித்து அழுத்தினான் ரிஷி.

அவ அத்தகிட்ட கோவிச்சிட்டு போறா?

அவள் காதருகே குனிந்து, எங்க வீட்ல அம்மாவை தவிர யாருக்கும் இவங்க இருவரையும் பிடிக்காது. இவங்க கொஞ்சம் வேற மாதிரி. நீ அமைதியா இரு. அம்மாவே தனுவை சமாதானப்படுத்துவாங்க என்றான் ரிஷி.

“சின்ன மகனே! சின்ன மருமககிட்ட என்னை பற்றி புகார் சொல்றீங்களோ?” ரிஷியை பார்த்து குணசேகரன் கேட்டார்.

நீங்க எல்லாரையும் விட தங்கமானவங்கன்னு சொன்னாரு. நீங்க தான் உங்க தரத்தை நீங்களே குறைச்சு பேசுறீங்க. எங்க எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்.

“அப்படிதான மாமா?” ஸ்ரீநிதி ஜெய்யை பார்க்க, ம்ம்! அவனும் மற்றவர்களும் அவளை வாயடைத்து பார்த்தனர்.

“நிது இப்படி பேச மாட்டாளே!” பவிதா ஜெய்யை நெருங்கி கேட்டாள்.

பூபாலனை பார்த்தான் ஜெய். பவிதாவும் அவனை சினமுடன் பார்த்து ஏதோ பேச வந்தவள் கையை கிள்ளி வைத்தான் ஜெய்.

“வேண்டாம்” தலையசைத்தான்.

ஷ்ஆ.. அவனை பார்த்தாள்.

பூபாலனின் குரூர பார்வை ஸ்ரீநிதியின் தேகத்தை வருடியது.

“இவனை..” பவிதா சினம் கொள்ள,

வேண்டாம் பப்ளிம்மா. அவனை ஏதாவது திட்டினால் கூட அம்மாவுக்கு ரொம்ப கோபம் வரும். இவனுக்காக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும். அதனால் அவரும் இவனை விட்டுட்டார்.

ஆனால் கிரிஷ் இவன்…. அவள் சொல்ல, போகிற போக்கில் ரிஷி அவனை இடித்து விட்டு ஸ்ரீநிதி கையை பிடித்து சென்றான். அவள் இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றாள்.

“எல்லாரும் கிளம்புங்க. நேரமாகுது” பாட்டி கூற, நளினி குணசேகரனை பயங்கர சினமுடன் முறைத்து சென்றார். அவர் புன்னகையுடன் நளினியை பார்த்தார்.

கோவிலில் பொங்கல் வைக்க ஏற்பாட்டை செய்து வைத்திருந்தார்கள். பெண்கள் இருவரையும் பொங்கல் வைக்க சொல்லி மான்விழி நகர்ந்து அமர்ந்தார்.

இருவரும் தனித்தனியாக பொங்கல் வைக்க தயாரானார்கள். பவிதா முகத்தை பாவமாக வைத்து பாட்டியை பார்த்தார்.

“நீயே பண்ணுடி” அவரும் நகர்ந்தார்.

“இங்க வந்துட்டீங்க அக்கா. பொண்ணுங்க தனியா கஷ்டப்படுவாங்கல்ல?” நளினி கேட்டார். பசங்க அவர்களை பார்த்தனர்.

அடியேய், கம்முன்னு இருடி. பிள்ளைங்க இப்ப எப்படி சமாளிக்கிறாங்களோ அதே போல தான் நம்ம குடும்பத்தையும் பார்த்துப்பாங்க.

ஆனால் அத்த எப்படி தனியா செய்வாங்க? அவர் ஜெய் ரிஷியை பார்த்தார்.

“குடும்பத்தை நடத்த பொண்ணுங்க மட்டும் போதுமா என்ன?” பாட்டி தன் பேரன்களை பார்த்தார்.

நாங்களும் போகணுமா? ரிஷி கேட்க, ஜெய் தன் மனைவி கஷ்டப்படுவதை பார்த்து உதவ அவன் வேகமாக பவிதாவிடம் சென்றான்.

ரிஷி அவனை பார்த்து விட்டு தன் மனைவியை பார்த்தான். அவள் நெருப்பை பற்ற வைத்து அடுப்பில் பானையை தண்ணீருடன் வைத்திருந்தாள்.

அதை பார்த்து பாட்டியை பார்த்தான். அவர் தோளை குலுக்கி கண்கண்ணாடியை சரி செய்தார். ஸ்ரீநிதிக்கு எதிர்திசையில் நடந்தான் ரிஷி.

“பாட்டி நிது அண்ணி எங்க இருக்காங்க? இவன் எங்க போறான் பாரு” தன்வி செல்லும் ரிஷியை முறைத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பூபாலன் ஸ்ரீநிதியிடம் சென்று, “மே ஐ கெல்ப்?” கேட்டான்.

“அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை” பவிதா சினமுடன் ஸ்ரீநிதியிடன் வர முனைந்தாள்.

“வீ  நீ மாமாவோட இரு” ஸ்ரீநிதி பூபாலனை பார்த்தாள்.

“ஹே பொங்கப் போகுது. பாரு” அவள் தோளை பற்றினான். மான்விழிக்கு சுருக்கென ஆனது. அவருக்கு சினம் எழுந்தது. சந்திரமுகன் தன் மனைவியை ஆராய்ந்தார்.

பின் அவள் அரிசியை போட அழைத்தாள். எல்லாரும் போடவும் மீண்டும் பழைய இடத்திலே அமர்ந்தனர் அனைவரும்.

“பாலா நீ வா” மான்விழி கூற, “சித்தி ஸ்ரீக்கு நான் உதவியா இருக்கேன்” அவன் நகராமல் இருந்தான்.

“இந்த ரிஷி எங்க போனான்?” தன்வி சினமுடன் பொரிந்து தள்ளினாள்.

ஸ்ரீநிதி கரண்டியை எடுத்து அரிசியை கிளற, அவள் கையை பட்டென பிடித்து பூபாலன் கிண்டினான். அவள் அதிர்ந்து கரண்டியிலிருந்து கையை எடுக்க, அவன் கை பானையில் இடித்து சூடு பட்டது.

“ஷ்ஆ” பூபாலன் சத்தமிட, சரியாக வந்தான் ரிசாத்பவன்.

கையில் விசிறி போலுள்ள பெரிய பப்பாளி இலையுடன் வந்தான்.

“பாட்டி  இவனுக்கு வேணும்” தன்வி பூபாலனை திட்டிக் கொண்டே ரிஷியை பார்த்தாள்.

“பாட்டி இவனுக்கு ஏதும் ஆகிடுச்சா? இதை எதுக்கு எடுத்துட்டு வந்திருக்கான்?” தன்வி கேட்க, எல்லாரும் ரிஷியை பார்த்தனர்.

சந்திரமுகன் தன் மனைவியை பார்க்க, அவரும் பாட்டியும் புன்னகையுடன் ரிஷியை பார்த்தனர்.

நேராக ஸ்ரீநிதி அருகே சென்று, பூபாலன் காலை ஓங்கி மிதித்து, “ஐய்யோ அண்ணா  சாரி சாரி…தெரியாம இல்லை. தெரிஞ்சு தான் மிதிச்சேன். இனி ஸ்ரீ பக்கம் வந்த. இதை விட பெருசா வாங்குவ” எச்சரித்தான்.

“இது எதுக்குடா?” ஜெய் கேட்க, இது ஸ்ரீக்காக. ஸ்ரீநிதி மீது படும் வெயிலை மறைத்து நின்றான்.

பவிதாவும் தன்வியும் வாயை பிளந்து அவனை பார்த்தனர்.

பவிதா ஜெய்யை பார்க்க, உனக்கு நான் பிடிச்சா பொங்கல் வைக்க உதவ முடியாது பப்ளிம்மா என்றான்.

ரிஷி பவிதாவை பார்த்து சிரிப்புடன், “உன்னோட பொங்கல் பொங்கலா இருக்காது. வெல்லக்கூழாகிடும்” கலாய்த்தான்.

“யார்கிட்ட? உங்க பொங்கலை விட எங்க பொங்கல் எப்படி இருக்கும்ன்னு பாரு. என்னோட ஜெய் எனக்கு உதவுவார். நீ தான் வெட்டியா நிக்கிற?” அவள் சொல்ல, அவளை பார்த்து ரிஷி நக்கலாக சிரித்தான்.

“இவன் வருத்தப்படாமல் கேலி செய்கிறான்” ஸ்ரீநிதி புரியாமல் ரிஷியை பார்த்தாள்.

ரிஷி ஸ்ரீநிதியை பார்க்க எழுந்து, “இதெல்லாம் வேண்டாம். நீங்க மாமாவிடம் போங்க” என்றாள்.

அப்புறம்? உன்னோட ஒப்பனை கலைந்து விடுமே!

“உங்களுக்கு வியர்க்குது” என்றாள் ஸ்ரீநிதி.

துடைச்சு விடு..

ஹ.. அவள் கேட்க,

ஒரு கையால் அவ்விலையை பிடித்துக் கொண்டு அவளது பட்டுப்புடவையின் முந்தானையை பார்த்தான்.

“ஊகூம்” தலையசைத்து அவள் இடுப்பில் சொருகி இருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்தான். ஸ்ரீநிதி அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என்ன நடக்குது? இது நிஜம் தானா?” கண்ணை கசக்கி தன்வி இருவரையும் பார்க்க, பவிதாவும் அவனை திகைத்து பார்த்தாள். ஜெய் புன்னகைத்தான்.

ஸ்ரீ நம்ம பொங்கல் தான் பெஸ்ட்டா இருக்கும். அந்த பொங்கல் கருகப் போகுது. பாரு. நம்மை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க என்றான்.

“ஏய்ய்..” சினமுடன் பவிதா ரிஷியிடம் வந்து அவன் முதுகிலே அடித்தாள்.

“பப்ளிம்மா” ஜெய் அவளை பிடிக்க, “எதுக்குடி அவரை அடிக்கிற?” ஸ்ரீநிதியும் சினந்தாள்.

“நேத்து வந்தவனுக்காக நீ என்னிடம் சண்டைக்கு வாரேல்ல நிது? அவன் எங்க பொங்கல் கருகும்ன்னு சொல்றான். இனி அவன் வாயை திறந்தால் அடிக்க தான் செய்வேன்” கண்கலங்க பவிதா கூறினாள்.

அப்பொழுதும் ரிஷி அடங்காமல் “சீனு சீனு ஓவரு சீனு” பாடல் பாட, “சும்மா இருடா” ஜெய் பவிதாவை இழுத்து சென்றான்.

இவ்வளவு நேரம் ஸ்ரீநிதியின் குழப்பம் மறைந்து அவளை வருத்தம் சூழ்ந்து கொண்டது.

“வீயை இவன் வேணும்ன்னே தான் சண்டைக்கு இழுக்கிறான். அவன் அவளை தான காதலிக்கிறான். இப்படியாவது பேசலாம். தொட்டுக்கலாம்ன்னு நினைச்சுட்டான்” மனதில் எண்ணம் தோன்ற, அமைதியாக அமர்ந்து பொங்கலை கவனிக்கலானாள்.

எல்லாரும் புன்னகைக்க, சந்திரமுகனுக்கு ஸ்ரீநிதியின் வாடிய முகம் எதையோ உணர்த்தியது. அவர் தன் மகனை ஆழ்ந்து பார்க்க, வந்த எண்ணம் வந்த வேகத்தில் சென்றது.

ரிஷியின் கவனம் முழுவதும் ஸ்ரீநிதியின் மீது மட்டும் தான் இருந்தது.

பொங்கல் வைத்து வழிப்பாட்டை முடித்து கோவில் பிரகாரத்தை சுற்றினர்.

ஒரு கற்சிலையை பார்த்து ரிஷி அதனை பார்த்துக் கொண்டிருக்க, அவனை கவனிக்காமல் ஸ்ரீநிதி முன்னே சென்றாள்.

“எங்க போனா?” ரிஷி ஸ்ரீநிதியை தேடினான். அவன் ஸ்ரீநிதியை பார்த்து விட பூபாலன் அவளது இடுப்பில் கையை வைக்க முனைந்தான்.

“ஸ்ரீ” ரிஷி அழைக்கும் முன் கருப்புநிற ஹெல்மேட்டுடன் கருப்பு நிற ஹூட்டியுடன் வந்த ஒருவன் துணியை பூபாலன் முகத்தில் போட்டு இறுக இழுத்து வேகமாக ஓட, தரையில் இழுபட பூபாலன் செல்வதை அதிர்ந்து ஸ்ரீநிதி பின் வந்த ரிஷியும், முன் வந்த ஜோவும் பார்த்து அதிர்ந்தனர்.

“அக்கா” அவன் சத்தமிட, “ஜோ” ஸ்ரீநிதி அவனிடம் ஓடி அணைத்துக் கொண்டாள். அவளை அணைத்தவாரே ஜோ ரிஷியை பார்த்து விட்டு அந்த ஹூட்டிக்காரன் சென்ற திசையை பார்த்தான். ரிஷியும் அவ்விடம் நோக்கினான்.

எல்லாரும் ஜோவை பார்க்க, “ஜோ உனக்கு எங்க கோவில் எப்படி தெரியும்?” தன்வி கேட்டாள்.

அவன் அவளிடம் ஏதும் கூறாமல் ரிஷியையும் சந்திரமுகனையும் பார்த்தான். ஸ்ரீநிதி அவனை விட்டு விலகி, “நீ எப்படிடா வந்த?” கேட்டாள்.

சஞ்சுவோட அம்மாவை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வந்தேன். அவங்க அங்க இருக்காங்க. உங்களை பார்க்கணும் போல இருந்தது என்று பவிதாவை பார்த்தான். அவளும் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

என்ன சொன்னாங்கடா? ஸ்ரீநிதி கேட்க, அம்மா அவங்களோட ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. நான் வந்துட்டேன்.

ஏன்? என்னாச்சுப்பா? பாட்டி கேட்க, அவங்க கர்ப்பமா இருக்காங்க பாட்டி என்று ஸ்ரீநிதியை பார்த்து, “நீ சொன்னது போல அம்மாவே அவங்கள பார்த்துக்கிறேன்னு சொல்லீட்டாங்க. உன்னை நீ பார்த்துக்கணும். கவனமாகவே இரு” அவன் ரிஷியை பார்த்தான்.

எல்லாரும் புரியாமல் அவனை பார்த்தனர்.

பூபாலன் காயத்துடன் அங்கே வந்தான். மான்விழி பதறி, “பாலா என்னாச்சு?” அவர் கேட்க,

“அக்கா கண்ட பயலுக்க கிட்ட இருந்து கவனமா இரு. எல்லாரும் நம்மை போல இருக்க மாட்டாங்க” சினமுடன் கூறி பூபாலனை முறைத்து விட்டு “வீ  நீயும்” என்று ரிஷியையும் சந்திரமுகனையும் பார்த்து, “பார்த்துக்கோங்க  இல்லை நான் பார்க்க வேண்டி இருக்கும்” பல்லை கடித்து கூறினான்.

“என்னாச்சுடா? எதுக்கு கோபப்படுற?” ஸ்ரீநிதி கேட்க, “ஒன்றுமில்லைக்கா. சஞ்சுவோட பாட்டியை நினைத்தேன். கோபம் வந்தது” பூபாலனை வெறித்து, சந்திரமுகன் அருகே வந்து,

“சொந்தங்கள் அவரவர் இடத்தில் இருந்தால் தான மாமா நல்லது. புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்” மான்விழியை கோபமாக பார்த்து விட்டு ஸ்ரீநிதியை அமைதியாக பார்த்தான்.

“என்னடா யாரும் ஏதும் பிரச்சனை செய்றாங்களா?” ஸ்ரீநிதி கேட்டாள்.

“இல்ல நிது, உன்னோட தம்பி நல்லா தான் இருக்கேன். உனக்கு பிரச்சனைன்னா எவனாக இருந்தாலும் சும்மா விட மாட்டேன்” பூபாலனையும் ரிஷியையும் பார்த்து விட்டு, “அக்காவை அம்மா நம்ம கார்மென்ட்டிலே சேர்த்துக்கலாம்ன்னு சொல்லி இருக்காங்க” என்றான்.

வேண்டாம்டா. இந்த நிலையில் அவங்களுக்கு கஷ்டமா இருக்கும். சஞ்சுவை வேற அவங்க பார்த்துக்கணுமே! ஸ்ரீநிதி கேட்க, சஞ்சுவை நம்ம வீட்ல கூட வச்சி பார்த்துக்கலாம்ல்ல? கேட்டாள் பவிதா.

நோ வீ, அவங்க உங்க வீட்டுக்கு வருவது பாதுகாப்பு தான். சொந்தமில்லாத இடத்தில் வர அவங்களும் சம்மதிக்க மாட்டாங்க.

அவங்களுக்கு பிரக்னென்சிக்கும் பணம் வேணும்ல்ல. அவங்க கஷ்டப்படாதவாறு வேலையை பார்த்துக் கொடுக்கிறேன். அம்மா செலவை பார்த்துக்கிறேன்னு சொல்லியும் அவங்க வொர்க் பண்ற இடத்துக்கு போறதா சொன்னாங்க. அம்மா தான்..

ஓ! அப்ப வீட்ல கலாட்டாவா தான் இருக்கப் போகுது. பார்த்துடா சஞ்சு ஏற்கனவே உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லீட்டு இருக்கா. கல்யாணம் செய்து மாலையோட வந்து நின்னுறாத” பவிதா ஜோவை கேலி செய்து சிரித்தாள்.

ஏம்மா, அந்த பொண்ணு குட்டிப்பொண்ணு இப்படியா பேசுவ? பாட்டி கேட்க, தனு ஜோவை முறைத்து தள்ளினாள்.

ஜோவை சுரண்டி ஸ்ரீநிதி தன்வியை காட்ட, அவன் புன்னகையுடன் “வாரேன்” சொல்லி விட்டு நளினியை பார்த்துக் கொண்டே சென்றான்.