தாரகை 19

தர்மேந்திரன் ஜோவை தனியே இழுத்து சென்று நடந்ததை கேட்டு அறிந்து கொண்டார்.

“ஜோ என்னோட வா” அவனை வேகமாக இழுத்து சென்றார். இருவரும் செல்வதை பார்த்த நளினி அவர்கள் பின் சென்றார்.

மஹாலின் உச்சியில் காலை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தாள் தன்வி. அவளை சுற்றி நிறைய ஐஸ்கிரீம் கவர்கள் கிடந்தது.

“தனு இங்க என்ன செய்ற? எல்லாரும் உன்னை காணோம்ன்னு தேடிட்டு இருக்காங்க” ஜோ சினமுடன் சத்தமிட்டான்.

அவனையும் தர்மேந்திரனையும் பார்த்து விட்டு, கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமுடன் எழுந்தாள்.

நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதிலே சொல்ல மாட்டேங்கிற..

என்ன சொல்லணும்?

இவ்வளவு ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்க? ஃபீவர் வருமா இல்லையா? திட்டினான்.

இப்ப நான் என்ன பண்ணனும்ன்னு சொல்ற? சத்தமிட்டாள் தன்வி.

நீ எதுவும் செய்யாமல் எப்போதும் போல இருக்க வேண்டியது தான!

எதுவும் நடக்காதது போல இருக்கணும். அப்படிதான!

இப்ப என்ன நடந்தது? உன்னோட அம்மா நிலையையும் யோசித்து பாரு. அவங்க கோபத்துல என்ன தப்பு?

உனக்கு சுரனையே இல்லையா? தன்வி சினமுடன் கேட்டாள்.

ஓ! இதான் பிரச்சனையா? மனதில் எண்ணிய ஜோ, தனு அருகே சென்று அவள் கையிலிருந்த ஐஸ்கிரீமை வாங்கி புன்னகையுடன் அவனது கைக்குட்டையை எடுத்தான்.

தனு முகத்தை திருப்ப, உனக்கு என்ன சின்னப் பப்பான்னு நினைப்பா? ஐஸ்கிரீமை சிந்தாமல் சாப்பிட தெரியாதா? அவள் வாயிலும் அவளது உடையிலும் சிந்திய ஐஸ்கிரீமை துடைத்தான்.

அவன் கையை பிடித்து, உனக்கு என்னோட அம்மா மேல கோபமே வரலையா?

உனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்தது உன்னோட பிக்ப்பாவாக இருக்கலாம். கொஞ்சம் சிந்தித்து பாரு. உன்னோட அம்மா இளம்வயதிலே தன் கணவனை இழந்தவங்க. அவங்க நினைத்திருந்தால் வேறு திருமணம் செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் உனக்காகவே வாழ்ந்தவங்க.

பணக்கார பெண்ணாக வளர்ந்து வசதியான வீட்டுல வாக்கப்பட்டு வளர்ந்தவங்க. நீயும் சிறு வயதிலிருந்தே வசதியாக வாழ்ந்தவ. எங்க வீட்டுக்கு வந்தா கஷ்டப்படுவன்னு ஒரு அம்மாவா யோசிப்பாங்கல்ல?

அப்படின்னா….நம்ம காதல்?

அவங்க புரிஞ்சுப்பாங்க தனு. வசதி மட்டும் வாழ்க்கைக்கு அவசியமில்லைன்னு அவங்களுக்கு புரியும். அவங்களுக்கு நேரம் கொடு. அவங்களோட சண்டை போட்டாயா?

ஆமா. உன்னை எதுக்கு அடிச்சாங்க? நானும் தான கிஸ் பண்ணேன். அதான் சண்டை போட்டேன்.

எதையும் பேசி அவங்க கூட பேசாம இருக்காத. அவங்களுக்கு நீ மட்டும் தான இருக்க?

கண்கலங்க தனு ஜோவை பார்த்து, “நீ சொன்னது சரிதான் ஜோ. எனக்கு அம்மாவும் வேணும் நீயும் வேணும்” அவனை அணைத்துக் கொண்டாள்.

பிக்ப்பா பிக்ம்மாவை அக்கறையும் பார்த்துக் கொள்வதை அம்மா ஏக்கமுடன் பார்த்துட்டு இருந்திருக்காங்க. எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.

நான் பள்ளியில் படிக்கும் போது என்னோட மேக்ஸ் சார்ரை அம்மாவோட கோர்த்து விட ட்ரை பண்ணேன். அவருக்கும் அம்மாவை பிடிச்சிருந்தது. அம்மா முறைப்பிலே என்னை விட்ரும்மான்னு கையை விரிச்சிடார் அவள் கையை விரித்து காட்டினாள்.

தர்மேந்திரன் சிரித்துக் கொண்டு அவர்களருகே வந்தார்.

“அவரை அடுத்து மீட் பண்ணீயாம்மா?” அவர் புன்னகையுடன் கேட்க, “இல்ல அங்கிள், அவர் என்ன செய்றாரோ?” எனக்கு அவரை பிடிக்கும்.

ஜோ அவரை தேடி கண்டுபிடிச்சி அம்மா தலையில கட்டிடலாமா? அவள் கேட்க, அவனும் சிரித்தான்.

நான் என்ன ஜோக்கா பண்ணேன்? சிரிக்கிற?

உன்னோட அம்மாவை பார்த்து அவர் ஊரை விட்டு ஓடிறாமல் இருந்தாலே பெரிய விசயம்..

“ஏன்டா? நாம கல்யாணம் செய்த பின்னும் அம்மா தனியாக தான இருக்கணும்”. வருத்தமுடன் கேட்டாள் தன்வி.

“அப்படின்னா அந்த சாரை பற்றி சொல்லும்மா. தேடிறலாம்” தர்மேந்திரன் கூற, “நிஜமாக தான் சொல்றீங்களா அங்கிள்?” அவரிடம் வந்தாள்.

“மாமா” ஜோ அழைக்க,

புள்ள சொல்றது சரிதானே! இளம்வயதில் கூட உடன் யாராவது ஒருவராவதோ இல்லை பிள்ளைகளோ உடன் இருப்பாங்க. ஆனால் வயதான பின் நமக்கென திருமணம் செய்த உறவு தான இருக்கணும். தனியா ரொம்ப கஷ்டம் ஜோ.

சரி தான் மாமா. ஆனால் அவங்களுக்கு விருப்பமிருக்காதுல்ல?

உங்கள யாரு இப்ப கேட்க சொன்னா? உங்க திருமணத்தோட அவங்களை சந்திக்க வைக்கலாம் என்றார்.

அவ்வளவு நாள் ஆகுமா? அங்கிள் நான் என்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு தேடிக்கிறேன்.

தனு, நீ அவரை பற்றி சொல்லு போதும்.

யார் என்ன சொன்னாலும் நாம ஆன்ட்டிக்கு துணையா நிக்கலாம்.

ஆமா, இப்ப சரின்னு சொல்லீட்டு தான் மறுவேலை பார்க்கப் போறாங்க என்ற தர்மேந்திரன், அம்மாடி முதல்ல கீழ போகலாம். எல்லாரும் உங்கள தேடிட்டு இருக்காங்க.

எல்லாம் ஒ.கே அங்கிள். ஜோ எனக்கு கால்ப்பந்து விளையாட சொல்லித்தா. நான் கீழ வாரேன்.

முதல்ல சமையல், இதர வேலைகளை கத்துக்கோ. அப்புறம் நான் உனக்கு விளையாட சொல்லித் தாரேன் அவன் நகர, “இருடா நாங்களும் வாரோம்” அவன் பின் ஓடினாள் தன்வி.

இருவரையும் புன்னகை முகமுடன் பார்த்துக் கொண்டிருந்த தர்மேந்திரன் அவர்கள் செல்லவும் “வெளிய வாங்க” அழைத்தார். அங்கேயே மறைந்திருந்த நளினி வெளியே வந்தார்.

அவர் கண்ணீருடன் இருக்க, “பிள்ளைங்க சின்னப் பசங்க இல்லை. நாம ஃபோர்ஸ் பண்ணா தவறான முடிவை எடுத்திடுவாங்க. நீங்க எப்படி உங்க பொண்ணுக்காக சிந்திக்கிறீங்களோ அதே போல அவளும் உங்களை பற்றி சிந்தித்து இருக்கா பாருங்க. கவனமா பேசுங்க” சொல்லி அவர் முன் செல்ல, கண்ணை துடைத்து விட்டு நளினியும் பின் சென்றார். தன்வியை அனைவரும் திட்டி தீர்த்து விட்டனர்.

அன்றிரவு திருமண ஜோடிகளுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜோவும் அவன் குடும்பமும் அவரவர் வீட்டில் இருந்தனர்.

ஜெய் அறைக்கு பவிதா கையில் பாலுடன் சென்றாள். அவன் பாலை வாங்கி அவளை அமர வைத்து பாலை குடித்துக் கொண்டே பவிதாவை பார்த்தான்.

அவள் புருவத்தை உயர்த்த, “உனக்கு புடவை ரொம்ப அழகா இருக்கு அழகு பப்ளிம்மா” பாலை அவளிடம் நீட்டினான்.

“தேங்க்ஸ் கிரிஷ்” பவிதா நாணப்புன்னகையுடன் கூறி மீதியை அவள் பருகினாள்.

“பப்ளிம்மாவுக்கு வெட்கமெல்லாம் வருமா?” சிரித்தான் ஜெய் கிரிஷ்.

சிணுங்களுடன் எழுந்தாள் பவிதா. அவன் அவளை அணைத்து விளக்கை அணைத்தான்.

ஸ்ரீநிதி ரிஷி அறைக்குள் பாலுடன் வந்தாள். படுக்கையில் சாய்ந்து காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி.

ஸ்ரீநிதி அவன் முன் வந்து நின்றாள். அவளை பார்த்து ஹெட்போனை கழுத்தில் மாட்டி, அவளிடமிருந்து பாலை வாங்கினான். அவள் நின்று கொண்டே இருந்தாள்.

“எதுக்கு நின்னுட்டு இருக்க? உட்காரு” காலை இழுத்து அமர்ந்தான்.

 ஸ்ரீநிதி அமைதியாக அமர்ந்தாள். அவன் பாலை குடித்துக் கொண்டே அவளை பார்த்தான். அவன் மனதில் அவனின் பழி வாங்கும் எண்ணம் நினைவுக்கு வந்தது.

“இனி அதெல்லாம் தேவைப்படாது” என நினைத்து அவளிடம் பால் தம்ளரை கொடுத்தான். அதில் பாலே இல்லை. முழுவதுமாக குடித்திருந்தான். அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

எதுக்கு சிரிக்கிற? அவன் கேட்க, அவனை நெருங்கி அவன் வாயை தன் புடவை முந்தானையால் துடைத்து விட்டாள். அவன் அசையாது அவளை பார்த்தான்.

“பால் முழுசா நீங்க குடிக்கக் கூடாது” அவனை பார்த்தாள். இவளை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுனா என்ன செய்றான்னு பார்ப்போம் என தவறான முடிவை எடுத்தான்.

அப்புறம் பூஜையா பண்ணனும்? நக்கலாக கேட்டான்.

பூஜைக்கு மனுசங்க குடிக்கிற பாலை பயன்படுத்தமாட்டாங்க..

ம்ம்! அவளை பார்த்தான். அவள் அமைதியாகி விட்டாள்.

“எனக்கு நேரம் வேண்டும்” ரிஷி கூற, ம்ம்! எழுந்தாள்.

எதுக்குன்னு கேட்க மாட்டாயா?

உங்களுக்கு சொல்ல தோன்றினால் சொல்லுங்க?

நானும் உன்னை போல ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அந்த பொண்ணுக்கு திருமணம் ஆகிடுச்சு. என் காதலை கூட அவளிடம் கூற முடியவில்லை.

விழித்து அவனை பார்த்த ஸ்ரீநிதி மனதின் வேதனையை ரிஷியிடமிருந்து மறைத்தாள்.

அவள் கோபம், அழுகை ஏதாவது ஒன்றை பார்க்க வேண்டும் என்று தோன்றிய ரிஷி அவள் மனதை தெரிந்தே நோகடிப்பதை உணரவில்லை.

உனக்கு கோபம் வரலையா?

“ஊஹூம்” அவனிடமிருந்து விலகி அவளது பொருட்களை பார்த்து அடுக்கி இருந்தவற்றில் அவளது பையை திறந்தாள்.

“என்ன வேணும்?” அவன் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சதுர வடிவில் சிவப்பு நிற பொசுபொசுவென இருந்த தலையணையை எடுத்தாள். பின் அதிலிருந்த போர்வையை எடுத்து மலமலவென விரித்து தலையணையை தலைக்கு கொடுக்காமல் அதனை அணைத்து படுத்தாள்.

ரிஷி திகைத்து அவளை பார்த்தான்.

“ஸ்ரீ” அவன் அழைக்க, “இப்ப வரவா? அப்ப வரவா?” என இருக்கும் கண்ணீரை உள்ளிழுத்து திரும்பி படுத்து அவனை பார்த்தாள்.

ரிஷி அவளருகே வந்து கையை நீட்டினான். அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

“எதுக்கு கீழ படுக்குற? படுக்கை பெரியதாக தான இருக்கு. வா மேலவே படுத்துக்கோ” அவன் கூறவும்,

சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாட்டம் அவன் சொல்லவும் எழுந்து போர்வையை மடித்து உள்ளே வைத்து தலையணையை மட்டும் எடுத்து அவன் படுக்கையின் ஓர் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.

ரிஷி ஏதும் கூறாமல் அவன் படுத்து பாடலை கேட்கத் தொடங்கினான்.

சற்று நேரத்தில் நித்திரா தேவி அவனை ஆட்கொள்ள எழுந்து படுக்கையை சுற்றி வந்து ஸ்ரீநிதி முன் மண்டியிட்டு அவள் உறங்கும் அழகை ரசித்து பார்த்தான். அவனுக்கு பவிதா மீது இருந்தது வெறும் ஈர்ப்பு தான் புரிந்தது. அதற்காக ஸ்ரீநிதியை அவன் காதலிக்கவும் இல்லை என்றும் ஒரு தோழியாக அவளை பிடித்துள்ளது என்று அவனாக எண்ணிக் கொண்டான்.

நடுஇரவில் ஸ்ரீநிதி பதறி விழித்து அதிர்ந்தாள். ரிஷி மீது ஆல்கஹால் வாடை வந்தது. அவன் ஸ்ரீநிதியின் தோளை பற்றி இழுத்து அணைத்தான்.

ரி..ரி..ஷி..அவள் திக்கி அழைக்க, அவன் நினைவில்லாமல் இருக்கவும் அவனை நகர்த்த முயன்றாள். ஆனால் அவன் குடி போதையில் அவனை மறந்த நிலையில் ஸ்ரீநிதியிடம் எல்லை மீறலானான். அவளால் அவனை நகர்த்த முடியாமல் போராடி சோர்ந்து தன் கணவன் தான் என்ற எண்ணத்தில் அவனை விட்டு விட்டாள்.

ஸ்ரீநிதியின் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து அவன் எல்லை மீற, அவள் கண்கள் கலங்கியது. வலியும் வேதனையும் மனதை ஆட்கொண்டது. அவளை முழுவதுமாக எடுத்துக் கொண்ட ரிஷியின் வார்த்தையில் மொத்தமாக உடைந்து அழுதாள் ஸ்ரீநிதி.

“ரிஷி இதை முன்பே சொல்லி இருக்கலாமே!” அழுது கொண்டே அவள் மார்பில் குழந்தையென மயங்கி இருப்பவனை பார்க்க பார்க்க அவள் உள்ளம் துடித்து கதறியது.

ஆழ்மனதில் இருந்த பவிதாவின் எண்ணம் அவனை சூழ, போதையில் பவிதாவிடம் காதலை கூறுகிறேன் என்று ஸ்ரீநிதியிடம் பவிதாவை காதலிப்பதை கூறி விட்டான்.

அவனை விரைந்து நகர்த்தி, போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு கீழிறிங்க, அவளது மனம் போல பலமிழந்த கால்கள் தள்ளாடியது. கீழே விழுந்தவள் நகர்ந்து ஓரமாக அமர்ந்து அவளை முழுவதுமாக கவர் செய்து வாயில் கை வைத்து சத்தம் கேட்டாமல் கதறி தவித்தாள்.

ஏற்கனவே அவளுக்கான அலமாரியில் அவள் உடைகள் இருப்பதாக மான்விழி கூறியது நினைவில் வந்தது. தன்னை சமாதானப்படுத்தி எழுந்து அவளது அலமாரி என எண்ணி ரிஷியின் அலமாரியை திறந்து விட்டாள். ஒரு பைல் கீழே வந்து விழுந்தது.

இதை பார்த்தாள் என்னை அடிப்பாளா? கோபப்படுவாளா? என ரிஷி எண்ணிய அதே பைல். அதிலிருந்த அனைத்தையும் பார்த்த ஸ்ரீநிதி இதயம் சில்லுசில்லாக நொருங்கியது. அவள் உடலை மறைத்திருந்த போர்வை நழுவுவது கூட தெரியாமல் நிலத்தில் மயங்கி சரிந்தாள்.

சிலமணி நேரத்திலே ஸ்ரீநிதிக்கு விழிப்பு வர அந்த பைல் சிதறி கிடப்பதை பார்த்து, என் வாழ்க்கை இப்படி தான் சிதறணுமா? போர்வையை இழுத்து போர்த்தி முகத்தை மூடி அழுதாள்.

ரிஷி அசைந்து திரும்பி படுப்பதை பார்த்து வாயில் கை வைத்து சிறிது நேரம் கழித்து நகர்ந்து தண்ணீரை அருந்தினாள்.

அந்த பைல்லை இருந்த இடத்திலே வைத்து விட்டு அவசர அவசரமாக குளியலறை சென்று ஆடையை மாற்றி, டாப், ஸ்கர்ட்டும் போட்டு முகத்தை மட்டும் கழுவி விட்டு வந்து படுத்தாள் ரிஷியை பார்த்தவாறே!

பவிதாவும் ஜெய்யும் காதலிக்கிறார்கள். இவரின் காதல் கை கூடாது. அதனால் தான் நேரம் கேட்டிருக்கார் என்று எண்ணியவளுக்கு..

பவிதாவின் எண்ணத்துடன் ரிஷி தன்னை தொட்டிருக்கிறான் என்றதை தாங்கவே முடியவில்லை. கண்ணீர் வந்து கொண்டதே இருந்தது. தன் சிவப்பு நிற தலையணையை அணைத்து கொண்டு அசதியில் உறங்கி விட்டாள்.

காலை விடியல் பிறந்து சந்திரமுகன் வீட்டில் அனைவரும் பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருந்தனர். குளித்து புடவையில் சுடரொளியாக மின்னும் ஸ்ரீநிதி அவர்கள் அறை சன்னலில் திரைச்சீலைகளை ஒதுக்கினாள்.

கண்ணாடியின் வழியே சூரியகதிர்கள் அறையினுள் விழுந்தது. அது நேராக ரிஷியின் முகத்தில் விழுந்தது. அசைந்து அசைந்து மெதுவாக கண்ணை விழித்தவன் கண்டது பளபளப்புடன் சுடரொளியாக தங்க சிலை போல மின்னும் தன் மனைவியை தான். தன் தலையை பற்றிக் கொண்டே அமர்ந்தான்.

சன்னலின் வெளியே பார்த்தவாறு தன் நீளமான ஈரக் கூந்தலை துவட்டிக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி. அவனுள் புதிதாக உணர்வுகள் தோன்ற “இது சரியில்லை” தனக்கு தானே எண்ணிக் கொண்டாளும் ஸ்ரீநிதியை பார்க்கவும் அவளை தன்னுடன் வைத்துக் கொள்ளும் எண்ணம் தோன்றியது.

எனக்கு எதுக்கு இப்படி தோணுது? எண்ணியவாறு கீழே காலை வைத்தான். அவன் கால்கள் கீழே பதிய அவன் படுக்கையில் ரோஜாவும் மல்லிகையும் சிதறி கசங்கி இருந்தது. அதை பார்த்தவன் நேற்று வீட்டினர் செய்த அலங்காரம் என எண்ணிக் கொண்டான்.

ஸ்ரீநிதி எதிர்பாராத நேரம் அவளை அவன் நெருங்க, அவள் சட்டையின் பின் மேலிருந்த முடிச்சை போட்டு விட்டு அடுத்த முடிச்சை போட முயன்று கொண்டிருந்தாள். அவளது முதுகில் பன்னீர் துளிகளாக முத்துக்கள் சிதறிய வண்ணம் இருந்தது.

ரிஷிக்கு ஸ்ரீநிதியின் கணவன் என்ற எண்ணம் அவனை அறியாமல் அவளின் அழகாலும் எளிமைத்தன்மையாலும் கவரப்பட்டான்.

ரிஷி அவளது சட்டையின் முதுகுபுற இரண்டாம் முடிச்சை போட்டு விட்டு, அவனை அறியாமல் அவள் முதுகில் அவன் கையால் கோலமிட்டான்.

அதிர்ந்த ஸ்ரீநிதி நகர்ந்து வேகமாக திரும்பினாள். அவன் பொருளை பறித்தது போல போனது ரிஷியின் முகப்பாவனை.

“ஸ்ரீ” அவன் வாய்குலற அழைத்தான்.

“நேற்று போல எதுவும் செய்வானோ?” பயத்துடன் பின் நகர்ந்தாள்.

பட்டென அவளை இழுத்து அவளது முதுகில் இருக்கும் அம்முத்துக்களை தன் முத்தத்தால் அர்ச்சித்தான். அவனது மென்மை பெண்ணை உருக்கியது.

முத்தம் கொடுத்து அவள் முதுகிலே தன் முகத்தை பதித்து அவளது இடையை தன் கரத்தால் இறுக அணைத்தான். அவனது முத்தத்தில் திளைத்திருந்த ஸ்ரீநிதி அவனது இறுகிய அணைப்பில் அவனை தள்ளி விட்டு நகர்ந்தாள்.

“ஸ்ரீ என்னாச்சு?” அவன் அவளருகே வர, ஸ்ரீநிதி முகத்தில் இருந்த பயத்தை பார்த்து அவன் மனம் நெருடியது.

“ஸ்ரீ என்னை பார்த்து எதுக்கு பயப்படுற? என்னை விட நீ தான் நான் எதுவும் செய்யலைன்னு நம்புன?” கேட்டான்.

ம்ம்! அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது.

“ஸ்ரீ உன்னை யாரும் ஏதும் சொன்னாங்களா? இந்த நளினி சித்தி தான் வாயை வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டாங்க” என்றான்.

இல்ல..வேகமாக தலையசைத்தாள்.

மெதுவாக அவளை நெருங்கி அவளது கூந்தலை விலக்கினான்.

“குளிச்சிட்டு வாங்க” அவள் கூற, அறைக்கதவு தட்டும் ஓசை கேட்டது.

ரிஷி கதவை திறந்தான். நளினி நின்று கொண்டிருந்தார். அவன் அருந்திய ஆல்கஹால் வாடை வந்தது. அவர் உள்ளே எட்டிப் பார்த்தார். ஸ்ரீநிதி விழித்தவாறு நின்று கொண்டிருந்தாள். இவன் அந்த பொண்ணை திட்டினானோ? குடிச்சு வேற இருக்கான் அவர் சிந்தனையுடன் அறையை பார்த்தார்.

“சித்தி, எதுக்கு தொந்தரவு பண்றீங்க?” அவன் கேட்க, ஸ்ரீநிதி அவனை புரியாமல் பார்த்தாள். நளினி அதையும் கவனித்துக் கொண்டார்.

“நம்ம குலதெய்வ கோவிலுக்கு போகணும். தயாராகி சீக்கிரம் வாங்க” சொல்லி அவர் நகர்ந்தார்.

கதவை அடைத்து விட்டு வேகமாக ஸ்ரீநிதியிடம் அவன் வர, மீண்டும் அவள் பயந்தாள்.

அவளை பார்த்துக் கொண்டே அவளை தூக்கினான். அழுகையே வந்து விட்டது ஸ்ரீநிதிக்கு.

நேராக அவன் குளியலறைக்கு செல்ல, “நான் குளிச்சிட்டேன். நீங்க….” பேச முடியாமல் திணறினாள்.

உள்ளே சென்று அந்த பெரிய பாத்டப்பை பார்த்தான். அதில் ரோஜா இதழ்கள் இருந்தது. ரிஷி ஸ்ரீநிதி கன்னத்தில் முத்தமிட்டு அவளை அதில் படுக்கை வைத்தான். அவள் பதறி விட்டாள்.

ஸ்ரீ இப்ப எதுக்கு அழுற?

அவள் கண்ணீரை துடைத்து மனதை திடப்படுத்தினாள். அவனும் அதனுள் இறங்கினான்..

“கொஞ்ச நேரம் மட்டும்” என்று அவளை அணைத்துக் கொண்டே கண்ணை மூடிக் கொண்டான். அவள் புரியாமல் விழித்தாள்.

நேற்று கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டேன். அதுக்காக தான் அழுறியா? கண்ணை மூடிக் கொண்டே கேட்டான். அவள் பதிலளிக்கவில்லை.

கண்ணை திறந்து அவளை பார்த்தான். அவள் கண்ணை மூடி இருந்தாள்.

“கூச்சமா இருக்கா? ஆக்சுவலி எனக்கு கஷ்டமான நேரம் இப்படி தான் படுத்துப்பேன். எப்போதும் தனியே தான் இருப்பேன். இப்ப தான் கம்பெனிக்கு தோழியாக நீ இருக்கேல்ல” என்றான்.

தோழி எனவும் கண்ணை திறந்து பார்த்தாள்.

வொய்ப்பா இப்ப என்னால பார்க்க முடியல. நான் முயற்சி செய்கிறேன்.

“முயற்சியா? அப்ப முதுகில் கொடுத்த ஆசை முத்தம்?” அவள் சிந்தித்தாள்.

பேச மாட்டேங்கிற? அவன் கேட்க, “லேட் ஆகுது. எல்லாரும் தயாராகிடுவாங்க” என்றாள்.

ஆகட்டும். நாம தனியா கூட போய்க்கலாம்..

குலதெய்வ வழிபாடு குடும்பத்துடன் சேர்ந்து தான் செல்லணும். அதான் பலனளிக்கும்..

சரி, நீ என்ன வேண்டிப்ப?

ஸ்ரீநிதி அமைதியாக இருந்தாள்.

“சொல்ல மாட்டாயா?” அவன் கேட்க, கை கூடிய என் காதலுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவேன்.

“வேண்டிக் கொள்ள மாட்டாயா? அவன் கேட்க, வேண்டிக்க நிறைய இருக்கு. ஆனால் எல்லாமே நடக்காதே!” விரக்தியுடன் கூறினாள்.

என்னிடம் சொல்லு. நான் முடிந்தால் உதவுகிறேன்.

“இருக்கட்டும்” பாத்டப்பில் இருந்து எழுந்தாள்

“சொல்லு ஸ்ரீ?” அவளது கையை பிடித்தான்.

“பவி உங்க அண்ணனோட சந்தோசமாக இன்று போல இருக்கணும்” அவனை பார்க்க, அவன் அவளை ஏதும் கூறாமல் பார்த்தான்.

என்னோட அம்மா, பாட்டி எல்லாருடனும் ஒரே வீட்டில் இருக்கணும்.

பக்கத்து வீட்டு சஞ்சனா அம்மா கர்ப்பமா இருக்காங்க. அவங்களுக்கு துணைக்கு கடைசி வரை பாதுகாப்பா பார்த்துக் கொள்ள மகன் பிறக்கணும்.

ரிஷி விழி விரித்து அவளை பார்த்தான்.

வேற…

இன்னும் இருக்கு…எல்லாமே சொல்ல முடியாது.

ஓ! சரி. இப்ப சொன்னதை விட முக்கியமான விசயம் ஏதும் உனக்காக வேண்டுமா? அவன் கேட்க, கண்கலங்க அவனை பார்த்து “புகழ் என் முன் வரணும்” என்று சொல்லவும் அவளுக்கு முதலில் கண்ணீர் தான் வந்தது. பின் அழ ஆரம்பித்தாள்.

“என் அடிமடியிலே கையை வச்சுட்டாளா? அவன் எண்ணம் சென்ற போக்கில் அவன் வந்தால் நமக்கென்ன? சிந்தித்து அவன் வரவே மாட்டான்” என்றும் எண்ணினான்.

ஸ்ரீநிதி அழுது கொண்டே நிற்க, அவளை இழுத்து அவள் இதழ்களில் மென்மையாக இதழ் பதித்தான். அவள் அழுகை நின்று அவனை பார்த்தாள்.

புரியுது. என்ன இருந்தாலும் ஒரு அழகான பொண்ணு பக்கம் இருந்தால் டிஸ்டர்ப் ஆகுதுல்ல? அவன் சொல்ல, அவளுக்கு சினமானது. காட்டிக் கொள்ளாமல் சவரை திறந்து அவன் முகத்தை பாராமல் நின்றாள். அவள் பின்னே வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி காதலுடன்..

பாவம் ரிஷிக்கு அவன் காதல் அவனுக்கே தெரியவில்லை. தெரிய வரும் நேரம் அவன் ஸ்ரீயிடம் காதலை கூறுவானா? அவள் ரிஷியை ஏற்றுக் கொள்வாளா? தொடர்ந்து பார்க்கலாம்.