தாரகை 18

அன்றைய நாளின் விடியல் மகிழ்ச்சியை தந்து நம்மையும் திருமணத்திற்கு வரவேற்க தயாராக இருந்தது.

யாருக்கும் அமர நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். மணமேடையில் பட்டு சட்டை வேஷ்டியுடன் அங்கவஸ்திரத்துடன் நெற்றியில் திருநீறு கீற்றுடன் பளிச்சென அழகாக கம்பீரமாக அமர்ந்திருந்தனர் மணமகன்கள்.

மணப்பெண்கள் அழைத்து வரப்பட, கிஷோர் விரலை காட்டினான் ரிஷியிடம். அவன் இருவரையும் பார்த்தான்.

திருமண புடவைகளும் ஒரே போல் இருவருக்கும் இருந்தது.

தங்க இலையால் செய்யப்பட்ட கோல்டன் பிரைடல் ஃசேரி. முழுவதுமாக ஆரி வொர்க் கோல்டன் பிளவுஸூடன் மணமேடையை நோக்கி வந்த இருவரில் ரிஷி கண்ணுக்கு விருந்தாவது போல..

கூந்தலை பின்னி மல்லியை கருமை தெரியாது அழகாக சுற்றி ரோஜா, மல்லிகை ஆரத்தை கொண்டையாக்கி, அணிகலன்களுடன் மேடை ஏறிய அவன் ஸ்ரீயை கண் சிமிட்டாது பார்த்தான்.

பக்கமிருந்த பூ ஒன்றை கிஷோர் ரிஷி மீது தூக்கி எறிந்து, ஓ.கேவா? விரலை உயர்த்தி கேட்டான்.

மந்திரித்து விட்டதை போல ரிஷி அவனை பார்த்து விட்டு மீண்டும் ஸ்ரீநிதியை பார்த்தான். ஜெய் ஒரு படி மேலே சென்று, பவிதா அருகே வரவும் தட்டில் வைத்திருந்த ரோஜா ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

பவிதா அப்படியே நின்று விட, “மாப்பிள்ள கொஞ்ச நேரம் பொறுங்க. அப்புறம் ரோசாப்பூ என்ன அந்த பொண்ணே உங்களுக்கு தான்” கூட்டத்தில் பாட்டி கேலி செய்தார்.

பவிதா புன்னகையுடன் அமர, “மானத்தை வாங்கதடா” மான்விழி ஜெய்யை திட்டினார். பூபாலன் சினமுடன் ரிஷியை பார்த்தான்.

ரிஷி அருகே ஸ்ரீநிது வந்து அமரவும், ஸ்ரீ நீ அதிகமா ஒப்பனை செய்யலை. ஆனால் இவ்வளவு அழகா இருக்க? எப்படி? அவன் கேட்க, விழிவிரித்து அவனை பார்த்தாள் ஸ்ரீநிதி.

கிஷோர் புன்னகைக்க, அவனை பார்த்து விட்டு ஸ்ரீநிதி ரிஷியை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

சொல்லு ஸ்ரீ?

“எல்லாரும் நம்மை தான் பாக்குறாங்க. அமைதியா இருங்க” என்றாள் ஸ்ரீநிதி.

ஐயரே, எவ்வளவு நேரம் தான் மந்திரம் ஓதுவீங்க? முடியல. தாலிய குடுங்க ரிஷி கேட்க, ஸ்ரீநிதி அவனை அதிர்ந்து பார்த்தாள்.

எதுக்குடா இப்படி அவசரப்படுறீங்க?

ஐயரை பார்த்து கண்ணசைத்து சந்திரமுகன் மைக் ஒன்றை கையில் வாங்கினார்.

ஸ்ரீ, என்னோட டாட் பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டார். ஏற்கனவே இரவு தூங்கவில்லை ரிஷி சொல்ல, ஷ்..என்றாள் ஸ்ரீநிதி.

இந்த அருமையான காலைப்பொழுதில் மற்றுமொரு நல்லவிசயம் ஒன்று சொல்லப் போகிறேன் என்ற சந்திரமுகன் ஸ்ரீநிதியையும் பவிதாவையும் பார்த்தார்.

எங்க வீட்டு பெரிய மருமகள பிசினஸ் வட்டாரத்துல்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

அமர் இன்டஸ்ட்ரீஸ், காஸ்மெட்டிக்ஸ், மால், தியேட்டர், பொட்டிக்கை இந்த வருடம் நல்லபடியா நடத்திட்டு வந்துட்டு இருக்காங்க. அவங்க விருப்பப்பட்டால் எங்களது கம்பெனியும் என் மகன் ஜெய்கிரிஷூடன் சேர்ந்து நடத்தலாம்..

“அங்கிள்” பவிதா மைக்கை வாங்கி, என்னோட தாத்தா தனியே என்னை நல்லா வளர்த்திருக்கார்ன்னு நம்புறேன். அதை விட நான் அவர் வளர்ப்பு மட்டுமல்ல. மலரம்மா வளர்ப்பும் தான். எனக்கு யாருமில்லாமல் இல்லை. எனக்கு இப்ப பெரிய குடும்பமே இருக்கு.

அங்கிள் சொன்னது போல நான் எங்க குடும்ப பிசினஸை நடத்த ஆவலாக தான் இருக்கிறேன். ஆனால் இப்பொழுதல்ல. தாத்தாவை விட்டு பிரிந்து வருவதுமல்லாமல் அவரை தனியே கஷ்டப்பட நான் விரும்பலை.

மாமா, இப்ப நான் ஏற்கனவே நடத்திக் கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்துக்கிறேன். நேரம் சரியாக அமைந்தால் நம்ம கம்பெனி பொறுப்புகளையும் ஏத்துப்பேன் என்று சந்திரமுகனிடம் நீட்டினாள்.

சரிம்மா, நீ நம்ம கம்பெனிக்குள்ள வர காத்திருப்போம்..

அடுத்தது..என்னோட சின்ன மருமகள் ஸ்ரீநிதி சொல்லும் போதே ரிஷி அவளை பார்த்தான். அவள் அனைவரையும் பார்த்து கும்பிட்டாள்.

இவர் எதுக்கு கம்பெனி பற்றி பேசுகிறார்? சிந்தித்தான்.

என்னோட மகன் ரிசாத்பவன். உங்கள் மத்தியில் அவன் பொறுப்பில்லாதவன். நானே அவனை வீட்டை விட்டு அனுப்பீட்டேன்னு அவனை பற்றி தவறான நிறைய சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இப்பொழுதும் இருக்கு…

“சின்ன மருமக என்னிடம் ஒரு கண்டிசன் போட்டிருக்கா” ஸ்ரீநிதியை அவர் பார்க்க, அவள் விருட்டென ரிஷியை பார்த்தாள்.

“மாமா” வேண்டாம் என்பது போல சந்திரமுகனிடம் ஸ்ரீநிதி வாயசைக்க, என்ன வேண்டாம்ன்னு சொல்றா? என்னை பற்றி அவள் ஏதும் தவறாக சொல்லி அப்பா அதை சொல்லப் போகிறாரோ! சிந்தித்தான் ரிஷி.

கண்ணை மூடி திறந்து, ஜோ..அதை போட்டு விடுப்பா என்று சொல்ல, “ரிப்போர்ட்டர்ஸ்ஸை அழைத்து நல்லா ஜூம் பண்ணுங்க” அவன் அவ்வீடியோவை ஓட விட்டான்.

எங்களை விட எங்க மருமக என்னோட மகன் ரிஷியை நம்பினாள். இதை அவளே கஷ்டப்பட்டு அவள் தம்பியுடன் சென்று எடுத்து வந்திருக்கா.

“ஸ்ரீ” ரிஷி அழைக்க, அவள் அவனை பார்த்தாள்.

பப்பிலிருந்து ரக்சித், ரிஷி, யுகமித்ரனை நினைவில்லாமல் பார் உதவியாளரின் உதவியுடன் ஜெகதீஸூம் ஜானியும் காரில் ஏற்றியதையும், ஜெகதீஸ் டிரைவர் சீட்டில் அமர்வதையும், ஜானி அருகே அமர்ந்திருப்பதையும் பப் வெளியே இருந்த சிசிடிவியை ரெக்கவர் செய்து எடுத்து வந்திருக்காள் ஸ்ரீநிதி.

சார், உங்க மகன் ஆல்கஹால் குடித்து கூட அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கலாமே! ஒருவர் கேட்டார்.

ஸ்ரீநிதி எழுந்து சந்திரமுகனிடமிருந்து மைக்கை வாங்கி, “கண்டிப்பாக இல்லை. இப்பொழுது எப்படி சாய்ந்திருந்தாரோ அவர் நகரவேயில்லை” ஸ்ரீநிதி உறுதியாக சொல்ல, “மேம் நீங்க அவரை காப்பாற்ற நினைக்கிறீங்க” பெண் ஒருவர் கூறினார்.

இல்ல, இந்த சம்பவத்துல்ல நான் என்னோட தோழன் புகழை இழந்திருக்கேன். அவன் இல்லாமல் நான் எங்கும் சென்றது கூட இல்லை.

கண்கலங்க தொண்டையை செருமி அப்படி இருக்கும் போது நான் இவரின் தவறை நியாயப்படுத்துவேனா?

உங்க காதலுக்காக செய்யலாமே!

காதலுக்காக தவறானவரை காப்பாற்றினால் நான் அந்த காதலை அவமதிப்பது போலாகும். என்னோட காதலை நானே அவமதிப்பேனா?

அந்த பொண்ணு நக்கலாக சிரித்தார். அனைவருக்கும் கோபம் வந்தது.

நடுத்தர வயதுள்ள பெண்ணை அழைத்து, உங்களுக்கு பிள்ளைங்க இருக்காங்களா? ஸ்ரீநிதி கேட்டாள்

இருக்காங்க. இரண்டு பசங்கம்மா..

உங்க பசங்க பள்ளியில் அவன் வகுப்பு மாணவனுடன் சண்டை போடுறதை பார்த்தால் என்ன செய்வீங்க?

என்னம்மா கேக்குற? சண்டை போடாதன்னு பிரிச்சு விடுவேன்..

அப்படியும் உங்க மகன் சண்டை போட்டால்..

அவனை அடித்தாவது அவனை காப்பேன் என்றார்.

ஸ்ரீநிதி புன்னகையுடன், இதே பாசம் போல தான் காதலும். அவரு தவறு செய்யவில்லை..செய்தால் அவரை திருத்த பார்ப்பேன். முடியலைன்னா அவரை எதிர்ப்பேன்.

ரிஷி அதிர்ந்து அவளை பார்த்தான்.

அந்த பொண்ணு சிரித்துக் கொண்டு, பொறுப்பில்லாமல் இருக்கும் இவர் மேல உங்களுக்கு ஏன் இப்படியொரு காதல்?

காதலுக்கு காரணம் தேவையில்லை மனசு போதும் என்றாள். அனைவரும் கை தட்டினார்கள்.

இன்னொரு விசயம். அவரை பொறுப்பில்லாதவன்னு சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும். யாரும் பொறுப்பில்லாமல் இருக்க ஆசைப்படுவதில்லை. அவர்களின் கனவுக்கு வழி விடுங்கள். போதும். பொறுப்பு தானாக வரும் என்று ரிப்போர்ட்டர்ஸை பார்த்து எனி மோர் குவஸ்டின்?

“நோ மேம். உங்க கணவன் மீது தவறேயில்லை” அந்த பொண்ணு புன்னகையுடன் நகர்ந்து கொண்டாள்.

ஸ்ரீ இவ்வளவு பேசுவாளா? அதிர்ந்து பார்த்தான் ரிஷி.

என்னோட மருமக என்னோட மகன் மீது தவறில்லைன்னு சொல்லீட்டா.. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கேமிராவில் உள்ளதை யாரோ அழிச்சிருக்காங்க. அதை போலீஸாரிடம் கூறி இருக்கோம். அவங்க உண்மையான குற்றவாளியை கண்டுபிடிச்சிடுவாங்க.

இன்னொரு முக்கியமான விசயம்.

“நிதி கூறியது போல என்னோட மகன் ரிசாத்பவனும் அவன் கனவுகளை நோக்கி பயணிக்க நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்” சந்திரமுகன் தன் மகனை பார்க்க, ரிஷி தன் தந்தையை பார்த்தான்.

தற்பொழுது ரிஷி பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து கம்பெனி சம்பந்த வேலைகளை என்னோட சின்ன மருமகள் ஸ்ரீநிதி தான் பொறுப்பா பார்த்துக்க போறாங்க. அவங்களுக்கு அனைவரும் முழு ஆதரவை தாருங்கள்.

என் மகன் ரிஷிக்கு சினிமாவில் பாட ஆசை. யாரும் என்னையோ எங்க குடும்பத்தையோ வைத்து அவனுக்கு உதவ வேண்டாம். அவனாக முன்னேறணும்ன்னு நான் ஆசைப்படுகிறேன். அவனை சாதாரண மனிதன் ரிஷியாக எந்த இசைப்போட்டியிலும் திறமை அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுங்கள்.

அவனுக்காக கால அவகாசம் ஒரு வருடம் மட்டுமே! அதற்குள் என் மகன் இசைக்கலைஞனாக ஆகணும் இல்லை என்னோட கம்பெனி பொறுப்பை அவன் அண்ணனுடன் சேர்ந்து நடத்தணும் என்றார்.

ரிஷி அவரை அணைத்து, “தேங்க்யூ சோ மச் டாட்” அவர் கன்னத்தில் முத்த மழை பொழிந்தான். அவர் புன்னகையுடன், “மிச்சம் வையுடா இரவு மருமகளுக்கு தேவைப்படும்” கேலி செய்தார்.

அனைவரும் மகிழ்வுடன் இருக்க பொன்தாலியை மணமகன்கள் மணப்பெண்கள் கழுத்தில் பூட்டினார்கள். ரிஷிக்கு வானம் வசப்பட்டது போல உணர்ந்தான். அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து கூற, பிசினஸ் ஆட்களை ஸ்ரீநிதிக்கு அறிமுகப்படுத்தினார் சந்திரமுகன் வசீகர சிரிப்புடன்.

“நிது” பவிதா மெதுவாக அழைக்க ஸ்ரீநிதிக்கு கேட்கவில்லை..

“ஏய் நிது” அவள் சத்தமிட மேடையில் அனைவரும் அவளை பார்த்தான்.

ஜோ, தனுவ ரொம்ப நேரமா காணோம்..

தெரியலையே!

“கிஷோரையும் காணோம்” சீதா அவர்களிடம் ஓடி வந்தார்.

எல்லார் கண்களும் கூட்டத்தில் அனைவரையும் தேட, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்கள் பத்திரிக்கையாளர்கள் எல்லாரும் எல்லா பக்கம் பார்க்க..

மியூசிக் ஒன்று வந்தது..

ஜோ, கிஷோர்,  ஜெய் தோழன் அடர் ஊதா நிற சட்டையும் வேஷ்டியுடன் கண்ணில் கூலருடன்  மறுபக்கம் புடவையுடன் தனு, சிவாங்கி, சாதனா வந்தனர்.

முதலில் பசங்க முன் வந்து நடந்து நடனத்தை தொடங்கினார்கள்.

காதல் காத்திலேறி ஆச ஊறி

உதற வைக்க வந்தாளே!

மருகி நின்னாளே!

உச்சி நிலவ போல உச்ச ஏத்தி

உசுற மூட்டி விட்டாளே!

எளக வச்சாளே!

பசங்க பொண்ணுங்க கையை இழுத்து ஜோடியாக ஆடத் தொடங்கினர்.

“அழகா முத்தத்தில் மனச கொழுத்த

 வா சிக்குற உதட்ட சுளிக்க

  யம்மம்மோ! யம்மம்மோ!

வெரசா டக்குன்னு திமிற அடக்க

வா சிறுக்கி சிரிப்பில் உருக

யம்மம்மோ யம்மம்மோ

யாத்தி யாத்தி

நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன்

யாத்தி யாத்தி

என மயக்கும் சுந்தரியே!

யாத்தி..யாத்தி..

உன் ஸ்ட்டிக்கரு பொட்டுல

சட்டுன்னு ஒட்டுறேன்

யாத்தி யாத்தி

என முறுக்கும் முந்திரியே!

 …..

மேடையில் ஏறி திருமண ஜோடிகளை கீழே இறக்கினார்கள்.

ஏற்கனவே மகிழ்ச்சியில் இருந்த ரிஷியை சொல்லவா வேண்டும்? தன் மனைவி ஸ்ரீநிதியை இழுத்துக் கொண்டு அவளுடன் இணைந்து ஆட, ஜெய் பவியும் அவர்களுடன் இணைந்தனர். பின் சுற்றி இருந்த எல்லாரையும் ஆட வைத்தனர். எல்லாரும் மகிழ்வுடன் நடனமாடினார்கள்.

பாட்டி அமர்ந்து அனைவரின் மகிழ்ச்சியையும் பார்க்க, சந்திரமுகன் தன் மனைவியுடனும், அழகி தர்மேந்திரனும் அவர்களுடன் ஜோடியாக ஆடினார்கள்.

ஸ்ரீநிதி கண்கள் ரிஷியிடம் மட்டுமே இருந்தது. அவனது மகிழ்ச்சியை பார்க்க, அவன் சிரிப்பை பார்த்துக் கொண்டே அவனுடன் நடனமாடினாள்.

ஜோ நின்று அவர்களை பார்க்க தனு அவனருகே நெருங்கி, “இனி பிரச்சனை வராது. அண்ணாவும் அண்ணியும் சந்தோசமா இருப்பாங்க” என்றாள்.

“ம்ம்! இருக்கணும்” கண்கலங்கினான். ஜோ கையை பிடித்து தனு தனியே அழைத்து சென்றாள்.

“ஜோ உன்னிடம் நான் ஒன்று சொல்லணும்” தனு அவனை பார்க்க, “தேங்க்ஸ். நிது சிரித்தே ரொம்ப நாளாகிடுச்சு” ஜோ தனுவை அணைத்துக் கொண்டான்.

ப்ளீஸ் விலகாத ஜோ. நிது, பவி அண்ணிக்கு பின் தான் உன்னை எனக்கு தெரியும். உன்னுடன் பழக பழக உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு. அவனை நகர்த்தி அவன் முகத்தை பார்த்து “ஐ லவ் யூ ஜோ” தனு ஏக்கமுடன் அவனை பார்த்தாள்.

நானும் தனு. அன்று கால்பந்து மைதானத்தில் அந்த பசங்க உன்னிடம் நடந்து கொண்டது என்னை மீறி அதிக கோபம் வந்தது. அப்பொழுது கூட சரியாக புரியல.

“பட் ஸ்டில் ஐ லவ் யூ” தனுவை இழுத்து அவளது இதழில் முத்தமிட்டான். அவன் கன்னத்தில் இரு கையையும் பதித்து தனு அவனை முத்தமிட ஜோ அவளை இடைபிடித்து மேலேற்றி தூக்கினான். இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

“தனு” சினமுடன் நளினி குரலில் இருவரும் அதிர்ந்து அவரை பார்த்தனர். ஜோ தனுவை இறக்கி விட்டு அவள் கையை இறுக பற்றினான்.

நளினி ஜோவை பளாரென அறைந்து, இருவர் கையையும் பிரித்து அவளை இழுத்து செல்ல, மாம்..விடு. நாங்க லவ் பண்றோம்.

அவள் கையை விட்டு தனுவை அடிக்க நளினி கையை ஓங்க, அவர் கையை பிடித்த ஜோ, “அடிக்க வேண்டாம். உங்க விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது” தனுவை பார்த்து சென்றான்.

தன்வி அழுது கொண்டே ஓடினாள். நளினி அவள் பின் ஓட ராம் இருவரையும் பார்த்தார்.

ஜோ கோபமாக வந்தான்.

ஒரு நிலையில் இல்லாமல் கண்கள் கலங்கி தனியாக அமர்ந்திருந்தான்.

ராம் அவனருகே சென்று அமர்ந்து, அவன் கையை பிடித்து, “எல்லாம் சரியாகும்” என்றார்.

அவரை அணைத்துக் கொண்டு மனதை திடமாக்கி அவரை பார்த்தான்.

“யாரிடமும் இப்பொழுதைக்கு சொல்ல வேண்டாம்” ஜோ கூற, நான் பேசவா? அவர் கேட்டார்.

“அவளோட அம்மாவுக்கு சும்மாவே என்னை பிடிக்காது. என்னை அவங்க ஏத்துக்காம போயிட்டா கஷ்டமா இருக்கும். முதல்ல நிது வாழ்க்கையை பார்க்கணும்” எழுந்தான்.

பனிமலர் அவர்களிடம் வந்தார்.

ஜோ, நம்ம வீட்ல இருக்கும் சீர் சாமானை இருவருக்கும் எடுத்து வைக்கணும்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல்ல அவங்க வீட்டுக்கு போயிருவாங்க” அவர் கூறிக் கொண்டே ஸ்ரீராம்மை பார்த்து சாப்பிட போங்க தம்பி..

அவர் நகர்ந்தார்.

ஜோவும் பனிமலரும் கிளம்பினார்கள்.

அறைக்கு ஓடிய தன்வி படுக்கையில் விழுந்து அழுது கொண்டிருந்தாள்.

“உனக்கு பசங்களா கிடைக்கலை. இவனை” நளினி சத்தம் போட தொடங்கினார். அவர் பேசி முடிக்கவும் எழுந்து அமர்ந்தாள் தன்வி.

உனக்கு ஸ்டேட்டஸ் மட்டும் தான வேணும். எந்த பொறுக்கி நாய்யை நீ காட்டினாலும் நான் சரின்னு அவன் கையால தாலியை வாங்கிக்கணும்.

யாரை சொல்ற? அவர் கேட்க, எவ்வளவு சொக்கத்தங்கமான மாப்பிள்ளையை நீ அழைச்சிட்டு வந்தாலும் அவனோட வாழும் வாழ்க்கை எனக்கு பிடிக்காது. உனக்கு ஜோ பற்றி என்ன தெரியும்?

ஜோவுக்கு முன்னே எனக்கு நிதுவை தான் தெரியும். அவங்க தம்பி தான் என்னோட படிக்கிறான்னு அதிகமாக அவனை கவனிக்க தொடங்கினேன். அவனோட மைனஸ் கோபம் மட்டும் தான். மத்தபடி பிடிச்சவங்கள எப்படி தாங்குவான்னு உனக்கு தெரியுமா?

பணம் இருப்பவனை விட பாசமா பாத்துக்கிறவன் எனக்கு போதும்மா. இதுக்கு மேல அவன் மேல கையை வைக்கிறதோ, மிரட்டுறதோ, முறைக்கிறதோ வச்சுக்காத. செஞ்ச நீ என்னை பார்க்கவே முடியாது. அவன் எல்லாரிடம் பழகியது போல தான் என்னிடம் பழகினான்.

நிது மேரேஜ் பேசிய பின் தான் அவனிடம் எனக்கான மாற்றத்தை நான் பார்த்தேன். விட்ரும்மா. இல்ல பிக்ப்பாகிட்ட சொல்லி உனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிப்பேன்.

மனமுடைந்து தன் மகளை பார்த்தார் நளினி.

உன்னை கஷ்டப்படுத்த நான் சொல்லலை. எங்க காதலை நீ புரிஞ்சுக்க தான் சொன்னேன்.

இனி அடிக்கடி நம்ம வீட்டுக்கு வருவான். நீயே அவனுடன் பேசி தெரிஞ்சுக்கோ. “ப்ளீஸ்” தன் அம்மாவை அணைத்தாள் தன்வி.

நளினி ஏதும் பேசாமல் வெளியே வந்தார். ஜோ பனிமலருடன் செல்வதை பார்த்தார்.

ஜோ, எங்க போறீங்க? கிஷோர் கேட்க, அக்கா, வீயோட பொருட்கள், சீரை எடுத்து வைக்கணும்.

“நானும் வாரேன்” கிஷோர் கூற, “நீ இங்கிருந்து மத்தவங்களுக்கு உதவு” நளினியை பார்த்துக் கொண்டே சென்றான்.

பவிதாவின் செக்ரட்டரி பார்வதி வந்தாள்.

திருமணஜோடிகள் அமர்ந்திருப்பதை பார்த்து அவர்களிடம் வந்தாள்.

“பவி மேம்.. கங்கிராட்ஸ்” ஸ்ரீநிதியை பார்த்து, காதலில் வெற்றி வாகை சூடிய என் அருமை தோழிக்கு வாழ்த்துகள் என்று ரிஷிக்கும் ஸ்ரீநிதிக்கும் இடையே வந்து அமர்ந்தாள்.

ஸ்ரீநிதியும் பவிதாவும் அவளை முறைக்க, நான் வாழ்த்து சொன்னால் ஓ.கேன்னு ஏத்துக்கணும் இல்ல தேங்க்ஸ் சொல்லணும். முறைக்கக் கூடாது..

டைம் என்னடி? மேரேஜூக்கு வரச் சொன்னா. முடிஞ்ச பின் வர்ற? பவிதா அவளிடம் வந்து அவள் காலை மிதித்தாள்.

விரைந்து எழுந்து, எதுக்கு மிதிக்கிற? என்னோட மாமாவுக்கு தெரிஞ்சா நீ காலி தான் என்று காலை பார்த்தாள்.

“மாமாவா? நிது..இந்த வருசமே இவ அவ மாமா பற்றியே பேசல” பவி கூற, பல்லை காட்டியவாறு இனி நான் பேசுவேன். உங்களோட அலைபேசியில் மட்டும் தான் பேச முடியும்.

நான் தான் மாட்டினேன். பேசியே கழுத்தறுக்கப் போறா? பவிதா கூறினாள்.

“வீ” ஸ்ரீநிதி அழைத்து அவளை காட்ட, என்னடி பண்ற? பவிதா கேட்டாள்.

பாரு, உன்னோட மாமா உன்னோட காதலை ஏத்துக்கிட்டாரா? ஸ்ரீநிதி கேட்க, வெட்கமுடன் ஆமா நிது. அப்பாவுக்கு உடல் சரியில்லை. அவரும் அடிக்கடி வந்து பார்த்துக்கிட்டார். அதுல நாங்க அடிக்கடி மீட் பண்ணோம்.

சொல்லவேயில்லடி ..

பவி மேம், நீங்க வேற செயலாளரை தேடிக்கோங்க.

பாரு, மேரேஜா? முகம் முழுவதும் புன்னகையுடன் ஸ்ரீநிதி கேட்டாள்.

ம்ம்! இன்னும் ஒரு மாதத்தில். நாளை மறுநாள் நிச்சயம் பண்றாங்க..

இத நான் ஏத்துக்க மாட்டேன். நீ கல்யாணம் பண்ணிக்கோ. அதுக்காக என்னை விட்டு போகாத. நீ தான் எனக்கு பெரிய சப்போர்ட்..

“மருமகளே! எதுக்கும்மா இவ்வளவு டென்சன்? உனக்கு செயலாளர் தான? தேர்ந்தெடுத்துட்டா போச்சு” சந்திரமுகன் கூறினார்.

பனிமலர், ஜோ வந்தனர்.

சந்திரமுகனிடம் வந்த ஜோ, அங்கிள் நீங்க வீட்டுக்கு சென்ற பின் பொருட்களை நாங்க எடுத்துட்டு வாரோம்..

இருக்கட்டும். சாப்பிட்டீங்களா? சந்திரமுகன் அவனை பார்க்க, அவன் தனுவை தேடினான்.

ராம் அதை பார்த்து, உங்க சின்னப்பொண்ணை எங்க? ஆளையே காணோம்? கேட்டார்.

“இங்க தான இருந்தா” மான்விழி பாட்டியை பார்க்க, “நளினியும் இங்கில்லையே!” பாட்டி கூறினார்.

“நளினி தனுவை அடித்திருப்பாங்களோ!” ஜோ பதட்டமாக ராம்மை பார்த்தான். அவர் கண்ணை மூடி திறந்தார்.

“வாங்க தேடி பார்க்கலாம்” அனைவரும் தனுவை தேடி சென்றனர்.

நளினி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய பாட்டி அவரிடம் தனுவை எங்கே? கேட்கவும்…

என்னுடன் தான் தூங்கிக் கொண்டிருந்தாள் பதட்டமாக பாட்டியை பார்த்தார்.

“புள்ள பக்கத்துல்ல இருக்காளா இல்லையான்னு கூட தெரியாம உனக்கு என்ன தூக்கம் வேண்டி இருக்கு?” அனைவரும் நளினியை திட்டினார்கள்.

“எங்க போயிருப்பா?” சிந்தித்து தனித்தனியே தேட சென்றனர்.