தாரகை 17

            (இரு நாட்களின் பின்)

“டாட்” சினமுடன் சத்தமிட்டுக் கொண்டே ஜெய் வீட்டிற்கு வந்தான்.

சந்திரமுகனும் ரிஷியும் முன்னதாகவே வந்திருந்தனர்.

ரிஷியை பார்க்காத ஜெய், டாட் நிது எதுக்கு அவனோட பேசுறா? கேட்டுக் கொண்டே இடப்பக்கம் பார்க்க, மான்விழியும் ரிஷியும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

டாட், உங்ககிட்ட தனியா பேசணும்.

“ஸ்ரீ பத்தி பேசுறதா இருந்தா என் முன்னாடியே பேசலாம்” ரிஷி கூற, அவன் தயக்கமுடன் மான்விழியை பார்த்தான். அவர் கவனத்தை காய்களை நறுக்குவதில் வைத்திருந்தார்.

“டாட்” ஜெய் அழுத்தி அழைக்க, “வேலை பாருங்க. நாங்க பேசிட்டு வாரோம்” சந்திரமுகன் ஜெய்யுடன் சென்றார். ஜெய் தன் அம்மாவை பார்த்துக் கொண்டே செல்வதை ரிஷி குழப்பமுடன் பார்த்தான்.

என்னடா? சொல்லாம போறாங்க. பெரிய ரகசியம் போல? மான்விழி ரிஷியிடம் கேட்க, அவன் அமைதியாக இருந்தான்.

“ரிஷி” நிமிர்ந்து அவர் பார்க்க, அவன் தான் அவர்கள் பின்னே ஒட்டு கேட்க சென்று விட்டானே! ஆனால் என்ன? எதுவுமே அவனுக்கு கேட்கவில்லை.

டாட், ஷாப்பிங் வந்திருந்த நிதுகிட்ட பூபாலன் கை கொடுத்து பேசுறான். எனக்கு சரியா படலை. அவர் கிட்ட சொல்லி வையுங்க..

என்னடா சொல்றது? நாம ஒன்னு சொல்லி அவன் உன்னோட அம்மாகிட்ட வேற மாதிரி பேசி எங்களுக்குள் சண்டை ஏற்படுத்திருவான்..

அதுக்காக? நிதுகிட்டவாது அவனை பற்றி சொல்லலாமே!

இல்லடா. இன்னும் அந்த பொண்ணு வீட்டுக்கு கூட வரலை. அதுக்குள்ள இதெல்லாம் எப்படி சொல்றது?

நிதுவை கண்காணிக்க ஆள் போடலாமே!

வேண்டாம்..

அவன் இப்பொழுதைக்கு ஏதும் செய்ய மாட்டான்.

அதெப்படிப்பா அவனை நம்புவது? நான் இடையில் போகலைன்னா அவன் அவளை ஏதாவது சொல்லி அழைச்சிட்டு போயிருப்பான்.

நிது போக மாட்டாடா?

அவ மேல மட்டும் உங்களுக்கு எப்படிப்பா இவ்வளவு நம்பிக்கை. நம்ம கம்பெனி பொறுப்பையும் அவளிடம் கொடுக்கப் போறீங்க..

நான் அதை செய்யலை. உன் தம்பி இடத்தை தான் அவ நிரப்பப் போறா. முழுபொறுப்பை நான் கொடுக்கலை.

“பார்த்துக்கோங்க” ஜெய் கதவை திறக்க, வேகமாக நகர்ந்து கையில் அலைபேசியை பார்த்தவாறு சீன் போட்டான் ரிஷி.

நடிக்காதடா. ஒட்டு கேக்க தான நின்ன? ஜெய் அவனை பார்த்து விட்டு அவனறைக்கு சென்றான்.

டாட், நிது ஏதும் தப்பு செய்துட்டாளா?

எதுக்குப்பா கல்யாணத்தை நிறுத்தவா?

இல்ல டாட். சும்மா கேட்டேன்.

அவகிட்ட பேசினால் ஒன்று மட்டும் சொல்லு. யாரையும் நம்பி அவளுக்கு பழக்கமில்லாதவங்களோட போக வேண்டாம்ன்னு சொல்லு என்றார்.

ஏன் டாட்? யாரும் அவளிடம் பிரச்சனை பண்றாங்களா?

“நடக்கக் கூடாதுன்னு தான் சொல்றேன்” நகர்ந்தார்.

எல்லாரும் குழப்புற மாதிரியே பேசுறாங்க. தலையை பிய்த்துக் கொண்டான்.

அவளை பார்க்கலாம் என்று எண்ணி ஜோவை அழைத்தான். அவன் பிஸியாக இருக்க, அவளது அலைபேசிக்கே அழைத்தான்.

நாம மீட் பண்ணலாமா? ரிஷி கேட்க, ஸ்ரீநிதி பயத்துடன் எதுக்கு? கேட்டாள்.

உன்னை பார்க்கணும்..

அம்மா விட மாட்டாங்க..

சரி..இன்று புதிதாக யாருடனாவது பேசுனியா? ரிஷி கேட்க,

யாரிடம்? ஹம்..ஆமா.. உங்களோட அண்ணான்னு ஒருத்தர் பேசினாரு. அவர் வீட்டிற்கு என்னை அழைத்தார். எனக்கு விருப்பமில்லைன்னு பேசிட்டு இருந்தேன். ஜெய் மாமா வந்து அவரிடம் கம்பெனி விவரம் ஏதோ தனியே சென்று பேசி விட்டு என்னை வீட்டில் விட்டு சென்றார்.

அண்ணாவா? பார்க்க எப்படி இருந்தான்?

எதுக்கு கேக்குறீங்க?

சும்மா தான்..

வந்து..குறுந்தாடியுடன் அளவான மீசை, குண்டு விழிகள், கலராக அழகாக தான் இருந்தார். தலைக்கு கூட ஹர் கலரிங் செய்திருந்தார்.

வாட்?

தப்பா சொல்லீட்டேனா? அது போல யாரும் இல்லையா?

நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அவன் அழகா இருக்கான்னு என்னிடமே சொல்ற? நான் கல்யாணத்தை நிறுத்திட்டா என்ன பண்ணுவ? விளையாட்டாக கேட்டு, அவன் அழகா? முகத்தை உர்ரென வைத்திருந்தான்.

ஸ்ரீநிதி கண்ணீருடன் பதில் கூறாமல் இருக்க, பதில் சொல்லு? அதட்டினான்.

“நிது என்ன பண்ற? கருகும் வாசம் வருது” ஜோ சத்தமிட்டான்.

மூக்கை உறிஞ்சிக் கொண்டு, “சாரி..உங்களுக்கு விருப்பமில்லைன்னா நீங்க கல்யாணத்தை நிறுத்திக்கோங்க” அழுகையுடன் வைத்து விட்டாள்.

“சும்மா விளையாட்டாக தான பேசினேன். அழுறாளா? போச்சு..என்னோட ட்ரை நாசமா போச்சு” புலம்பியவாறு அமர்ந்தான். அவன் பாட்டி புன்னகைத்தார்.

என்ன சொன்னா? குறுந்தாடியா? தலையில் கலர் செய்திருப்பானா? அந்த பூபாலன் எதுக்கு ஸ்ரீயுடன் பேசணும்? சிந்தித்து அவளுக்கு மீண்டும் அழைத்தான். அவள் எடுக்கவில்லை.

“செட்” ஜோவிற்கு அழைத்தான். அவன் கால் பிஸியாக இருந்தது.

அப்படியே விட்டு…அப்புறம் சொல்லிக்கலாம். அப்படியே சாய்ந்து தூங்கியே விட்டான்.

“என்ன இவன் இங்க தூங்குறான்? மணி ஏழாகுது” நளினி அவனை எழுப்பி விட்டு, இங்க தூங்கிட்டு இருக்க? மணி ஏழு தான் ஆகுது..சாப்பிட்டு தூங்கலாம்ல்ல?

“ஏழாகிடுச்சா?” எழுந்து அலைபேசியை எடுத்தான்.

யாரிடம் பேசப் போற? பாட்டி கேட்க, “கேண்டி கிரஷ் விளையாட போறேன்” அறைக்கு ஓடிச் சென்று கோர்ட்டை கழற்றி அப்படியே போட்டு விட்டு குளித்து வீடியோ காலில் ஸ்ரீநிதியை அழைத்தான்.

அவள் எடுத்து அவனை பார்க்க, ரிஷி சட்டையில்லாமல் வெற்று மார்புடன் படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்தான்.

எதுக்கு வீடியோ கால்?

அப்ப நீ அழுதியா? நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீ அழுதது யாருக்கும் தெரியாதுல்ல? அவன் கேட்க, அவள் சினமுடன் காலை கட் செய்தாள்.

“ஒருதலைராகம் இத்தனை வருசமா பாடிட்டு, இப்ப கல்யாணம் என்றவுடன் எடுக்க மாட்டேங்கிறா” மீண்டும் அழைத்தான்.

என்ன வேணும் உங்களுக்கு?

எதுக்கு அழுத? அவன் கேட்க, பதில் கூறாமல் இருந்தாள்.

சொல்லு ஸ்ரீ?

நான் அழுறது தான உங்களுக்கு வேணும்.

இல்ல ஸ்ரீ, அவனை அழகுன்னு சொன்னீயா? அதான் கடுப்பாகிட்டேன்.

அழகா இருந்தா அப்படி தான சொல்லணும். நீங்க தான அடையாளம் கேட்டீங்க?

ஆமா, அதுக்காக அவனை அழகுன்னு சொல்வீயா?

அழகா இருந்தா அப்படி தான சொல்லணும். வேற அடையாளம் எனக்கு சொல்லத் தெரியல..

நிது யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க? என்ன அடையாளம் தெரியல? என்ன அழகு? ஜோ அவளருகே வந்து அமர்ந்தான்.

“ஜோகிட்ட கொடு” ரிஷி கூற, எதுக்கு அவன் என்னோட வரலை. அவரை பார்க்கவும் இல்லை..

ரிஷி அறையிலிருந்த போன் சத்தமிட்டது.

ஒருநிமிசம் ஸ்ரீ..பேசாத.. அமைதியா இரு..

அதை எடுத்து என்னம்மா வேணும்? கேட்டான் ரிஷி.

ரொம்ப அலுத்துக்கிற? என்னடா பண்ணீட்டு இருக்க?

நான் என்னமும் செய்றேன். உனக்கு என்ன வேணும்?

கிஷோர் ப்ரெண்ட்ஸ் உன்னை பார்க்க வந்திருக்காங்க. உடனே கீழ வா.

“வாரேன்” சொல்லி விட்டு, “நிம்மதியா படுக்க கூட விட மாட்டானுக. இதுக்கு தான் இந்த கம்பெனி பொறுப்பு பருப்பே வேண்டாம்ன்னு சொன்னேன்” புலம்பினான்.

“ரிஷி” அவள் அழைக்க நினைவு வந்து, “சாரி ஸ்ரீ நாம நாளை பேசலாம்” சொல்ல வேண்டிய முக்கியமான விசயத்தை கூறாமல் வைத்து விட்டு கீழே சென்றான்.

ரிஷி மாமாவா கால் பண்ணான்? ஜோ ஆச்சர்யமாக கேட்டான்.

ம்ம்! புன்னகைத்து ஸ்ரீநிதி வைத்தாள்.

அவர் சொன்னது போல கல்யாணத்தை நிறுத்திட்டா நான் என்ன செய்றது? மன பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் ஜோவை பார்த்து புன்னகைத்து அவள் வேலையை கவனித்தாள்.

வாரம் முடிந்து மறுவார கடைசியானது.

மித்ராவும் அவள் அம்மாவும் பாட்டி வீட்டில் நன்றாக ஒன்றி விட்டனர். சாதாரணமாக மித்ரா அம்மா துணிதுவைப்பது, சமையல் வேலையை செய்ய, இவளுக்கு பாட்டி தாத்தாவுடன் நன்றாகவே நாட்கள் சென்றது.

மங்கலகரமான விடியலில் அழகு சிலையாக தயாராகி வெளியே வந்தாள் மித்ரா. மித்ராவின் அம்மாவும் குளித்து விட்டு குடத்தில் தண்ணீர் பிடித்து பெரிய தொட்டியில் ஊற்றிக் கொண்டிருந்தார்.

இன்று விடுமுறை. பாட்டி நாம தாத்தாவோட செஸ் விளையாடலாமா? மித்ரா கேட்க, என்னோட குடத்தை தூக்க வாடி..

மாம், என்னோட பாவாடை தாவணி எல்லாம் பாழாகிடும். நீயே பாரு என்று சொல்லிக் கொண்டிருக்க,

யாரு வந்திருக்கா? மித்ரா காரை பார்க்க, கிஷோரை பார்க்கவும் அவளை மறந்து ஓடினாள்.

கிஷோர் மறுபக்கக் கதவை திறந்து விட்டான். சிவாங்கி இறங்கினாள். பின்னே அவளது குடும்ப உறுப்பினர்கள், கிஷோர் அம்மா இறங்கினார்கள்.

புன்னகையுடன் சென்று கொண்டிருந்த மித்ரா நின்று விட்டாள்.

“கிஷோர்” மித்ராவின் அம்மா அழைக்க, பைக் ஒன்று வந்து நின்றது.

யாரு இது?

மித்ராவின் அம்மா பைக்கில் வந்தவர் முகக்கவசத்தை கழற்றவும் சுமந்து கொண்டிருந்த குடத்தை கீழே போட்டார்.

என்னாச்சு? மித்ரா கேட்க, மித்ராவின் அம்மா அழுது கொண்டே அவரை நோக்கி ஓடினார்.

“மாம்” மித்ராவின் அழைப்பு அங்கிருக்கும் யாருக்கும் கேட்கவில்லை.

“என்னை மன்னிச்சிருங்க. நான் தப்பு செய்துட்டேன். என்னையும் உங்களோட கூட்டிட்டு போயிடுங்க” மித்ராவின் தந்தை ராம் காலை பிடித்து கதறி அழுதார்.

“மாம்” மித்ரா மேலும் அழைக்க, “மித்து உன்னோட டாட்” கிஷோர் கூற, அவள் கிஷோரை பார்த்தாள். தொண்டை அடைத்து பேச முடியாமல் தன் பெற்றோரை பார்த்தாள்.

ராம் தன் மனைவியை எழ வைத்து பார்த்தார்.

நீங்க எனக்கு விவாகரத்து தான் அனுப்பினீங்கன்னு தெரியாம கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன். நான்..என்றவர் விழித்து யாரும் வருகிறார்களா? என்று சிவந்த கண்ணீருடன் பார்த்தார்.

யாரக்கா தேடுற? கிஷோர் புன்னகைத்தான்.

இவர் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு..

அவன் மேலும் சிரித்தான்.

“என்னோட மாப்பிள்ள சொக்கத்தங்கம்டி” கிஷோர் அம்மா கூற, அந்த விதவை பொண்ணு, அவளோட மகன். நான் பார்த்தேன். நீங்க அவங்களோட… கண்ணீருடன் கேட்டார்.

“நீ எப்படி என்னோட சீதாவோ நான் உன்னோட ராம் மட்டும் தான்” என்றார் ஒரே வார்த்தையில்.

அப்ப அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலையா? ஏக்கமுடன் தன் கணவனை பார்த்தார்.

“இல்லை” அவர் தலையசைக்க, “மாமா” மித்ரா கிஷோரை பார்த்தாள்.

இப்ப நான் என்னோட உன் அம்மாவை அழைச்சிட்டு போயிருந்தா வாழ்க்கையின் முக்கியத்துவம் உனக்கும் உன் அம்மாவுக்கு தெரிந்திருக்காது மித்து…

அவன் ராம்மை பார்க்க, தன் மனைவியை அணைத்துக் கொண்டிருந்த ராம் தன் வலக்கையை தன் மகள் மித்ராவை நோக்கி நீட்டினார். அவள் அழுது கொண்டே அவரிடம் தஞ்சம் புகுந்து, “என்னை மன்னிச்சிருங்க அப்பா. உங்களை பற்றி தெரியாமல் நானே தவறா நினைச்சுட்டேன்”.

அப்ப அந்த விவாகரத்து? சீதா கேட்க, அது உன் அப்பாவிற்காக சைன் செய்தது.

“ஐ அம் சாரி ராம்” இறுக அவரை அணைத்துக் கொண்டார் சீதா.

ராம் தன் மனைவி, பிள்ளையை தன்னுடன் அவர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கிஷோரிடம் சொல்ல, அவனுக்கு பெரும் மகிழ்ச்சி.

பாட்டிகள் எப்படி பார்த்துக்கிட்டாங்க அக்கா? கிஷோர் கேட்க, ம்ம்..நல்லா பார்த்துக்கிட்டாங்கடா என்று பாட்டிகளின் குடும்பத்தை கூறினார் மித்ராவின் அம்மா சீதா.

பெரியம்மாவுக்கு மூணு பசங்க. மூத்த அண்ணா காதலித்த பொண்ணு சரியில்லைன்னு பிரச்சனை வந்து வீட்டை விட்டு ஓடிட்டார். வீட்ல காதலை எதிர்க்கிறாங்கன்னு இரண்டாமவரும் ஓடிட்டார்.

திருவிழாவில் சின்ன பெரியப்பா மூத்தவரின் இளைய மகனை தொலைச்சிட்டார். அதான் சின்ன பெரியம்மா அவரை விட்டு கோபத்துல்ல பிரிஞ்சு வாழ்றாங்க.

மகன்கள் எல்லாரையும் இழந்த வேதனையில் பெரியம்மாவின் கணவர் அந்த வருடமே உடல்நலமில்லாமல் இறந்துட்டார்.  பெரியம்மாவிற்கு புத்தி பேதலித்து கணவர் நினைவிலே இருக்காங்க..

இரண்டாவது பாட்டி..

அவருக்கு மூத்தது மகன். அடுத்தது பொண்ணு. அவங்க பொண்ணு தான் அழகி. காதலித்ததால் அவரும் வீட்டை விட்டு அழகியை அனுப்பிட்டார்..

மகன் பரசுராம். அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த பிரச்சனையில் வீட்டை விட்டு போயிட்டார்.

“எனக்கு மிருளா மட்டும்…” மூன்றாவது பாட்டி மித்ராவிடம் வந்து அவளை அணைத்துக் கொண்டார்..

கிஷோர் அம்மாவோ மகிழ்வுடன் தன் மகள் அருகே வந்து, எனக்கு இப்ப தான் நிம்மதி என்று தன் மருமகளை அழைத்தார்.

சிவாங்கி தன் தமையன் பெற்றோருடன் வந்து நின்றாள்.

மித்ரா ஓடி வந்து அவளை அணைத்து, மாமா தாத்தாவை வச்சு செஞ்சிட்டார். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. நிது மேரேஜ் முடியவும் உங்களுக்கும் கிஷோர் மாமாவுக்கும் தான் மேரேஜ்.

எல்லாத்தையும் வித்துட்டியாடா? சீதா கேட்க, எல்லாரும் அவரை முறைத்தனர்.

ஐய்யோ! எனக்கு என்னோட ராமும் என்னோட பொண்ணும் போதும். கல்யாணம் பண்ணும் போது ஏதாவது இருந்தால் நல்லா இருக்குமேன்னு கிஷோருக்காக தான் சொன்னேன்.

அதை நான் பார்த்துக்கிறேன். சந்திரமுகன் சாரிடம் தான் விற்க எண்ணினேன். அவர் பிராபர்ட்டிஸ் மட்டும் தான் வாங்கினார்.

எல்லா கம்பெனியை நான் பார்த்துக்கிறேன். நீ இதுக்கு மேல மாமாவ கஷ்டப்படுத்துன? மிரட்டினான்.

“இல்லடா..இல்ல..இனி அவரை விட்டு செல்ல கூட எண்ண மாட்டேன்” சீதா தன் கணவனை பார்த்தார்.

அப்பொழுது இத்தனை வருடங்களாக படுக்கையிலே நினைவிழந்திருந்த பெரியம்மா எழுந்து வந்து இவர்களை பார்த்தார்.

மித்ராவின் தந்தை ராம்மை இளைய மகன் என எண்ணி அவர் பேச, ராம் அவர் உடல்நிலை கருதி அவரை அம்மாவென அழைத்து பேசினார்.

ராம்மை அழைத்த கடைசி தாத்தா, இனி நீயும் எங்க பையன் தான். யாருமில்லைன்னு நினைக்காமல் அடிக்கடி அண்ணியை வந்து பார்த்துட்டு போப்பா. அவங்க சீக்கிரமே சரியாகிடுவாங்க என்றார். ராமும் ஒத்துக் கொண்டார்.

அன்றைய நாளை அவர்கள் அனைவருடனும் மகிழ்ச்சியாக கழித்து விட்டு கிளம்பினார்கள்.

சஞ்சனா ஒருவனுடன் வம்பு செய்து கொண்டிருந்தாள்.

“சஞ்சு உனக்கு வேற வேலையே இல்லையா?” ஜோ கேட்டுக் கொண்டே ரிஷியை பார்த்து நெஞ்சில் கை வைத்து பின்னே நகர்ந்தான்.

அவனை பார்த்து சிரித்த கிஷோர், “ரிஷி இங்க என்ன பண்ற?” கேட்டுக் கொண்டே ஜோவை பார்த்தான்.

எல்லாரையும் பார்த்த ரிஷி சிவாங்கியை பார்த்து அவளிடம் சென்று, இப்ப நீ ஓ.கே தான? எவ்ளோ ப்ளட்டு…ஹப்பா உயிரே போச்சு..

கிஷோர் ரிஷி தலையில் அடித்து, “என்னோட ஆள் கிட்டவே ப்ளட் பண்றீயா? இவனா?..உன்னோட காதலும் நிறைவேறியதா?” ரிஷி அலுப்புடன்….சிவாங்கி உங்களோட செல்ல நிதுக்கிட்ட என்னிடம் பேச சொல்லும்மா. வீட்ல ஒருத்தவர் ரிவால்வரோடவே சுத்துறார் என்றான்.

அதுக்குள்ள என்னடா பண்ண? கிஷோர் கேட்க,

நேற்று அவ யாரோடவோ பேசி இருக்கா? யாரு? எதுக்குன்னு கேட்டேன். அவ்வளவு தான்…எப்படியோ சமாதானப்படுத்திட்டேன். இப்ப வீட்டுக்குள்ள விடாம கோபமா பேசுறாடா..

“நிதுவா..நம்ம நிதுவா?” கிஷோர் கேட்க, ரிஷி சிரித்தான்.

என்னடா? கிஷோர் சிவாங்கியை பார்க்க, சிவா..இந்த கிஷோர் உம் முன்னாடியே ஸ்ரீ லவ் பிரப்போஸ் பண்ணான்ல்ல. நீ பார்த்தேல்ல..

“டேய் உன்னை நண்பன்னு தெரியாம சொல்லீட்டேன். பெரிய விரோதியே நீ தான்” கிஷோர் கோபித்து செல்லும் சிவாங்கி பின் ஓடினான்.

ரிஷி சிரிக்க, நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு மாப்பிள்ள வரக் கூடாது. போங்க என்றார் பனிமலர்.

“நாளை தாலி கட்டிய பின் சமாதானப்படுத்திக்கோங்க மாப்பிள்ள” சொல்லி வீட்டிற்குள் செல்ல, சஞ்சனா சிரித்தாள். ரிஷி அவன் வீட்டிற்கே கிளம்பினான்.

சிவாங்கி கிஷோருடன் உள்ளே வந்தாள்.

ஸ்ரீநிதி சிவாங்கியிடம், நீ ஓ.கே தான? பெயின் அதிகமா இருக்கா? கேட்டுக் கொண்டே அவளது தலையை பார்த்தாள்.

“நிது கங்கிராட்ஸ்…” சிவாங்கி ஸ்ரீநிதியிடம் கையை நீட்ட, ஜோ கடுகடுப்புடன் உள்ளே வந்தான். அவன் பின் வந்த தன்வி வாசலிலே நின்று விட்டாள்.

“தனு உள்ள வா” ஸ்ரீநிதி அழைக்க, “சிவா எப்ப வந்த? நல்லா இருக்கியா? பிக்ப்பா சொல்லவேயில்லை” சிவாங்கியை அணைத்தாள்.

ஜோவும் அவளிடம் வந்து பேசி நகர, அவன் கையை பிடித்த தன்வி..கொஞ்ச நேரம்டா..

“முடியாது” அவன் சொல்லி நகர, பனிமலரிடம் வந்து, “ஆன்ட்டி சொல்லுங்க…” என்றாள்.

என்ன விசயம் தனு? ஸ்ரீநிதி கேட்டாள்.

யார்கிட்டையும் சொல்ல முடியாத ரகசியம்.

ரகசியமா? ஏன் உன் அண்ணன் மியூசிக்கை விட்டுறேன்னு சொல்லீட்டானா? கிஷோர் புன்னகையுடன் கேட்டான்.

அவனை முறைத்து விட்டு, நான் ஜோவிடம் பேசியதுக்காக என்னுடன் வர சொல்லுங்க என்றாள்.

உன்னோட வரணுமா? அவன் எதுக்கு உன்னோட வரணும்? சிவாங்கி வேண்டுமென்றே கேட்டாள்.

கிஷோர் சிவாங்கியை பார்த்து, உன்னோட லவ் ஓ.கேவாகிடுச்சா? தனு கேட்க, கிஷோர் சிவாங்கி கையை பிடித்தான்.

சிந்தனையுடன் இருவரையும் பார்த்து விட்டு ஜோவை பார்க்க, அவன் அறைக்கு சென்று விட்டான்.

ஜோ அறை அருகே சென்று, “போடா..உன்னோட உதவி எனக்கு தேவையில்லை. இந்த தனு நினைச்சதை முடிச்சி காட்டுவேன்” அவன் அறைக்கதவை தள்ளினாள்.

அவன் கதவை திறந்து விலக, உள்ளே சென்று விழுந்தாள்.

ஜோ சிரிப்பை உதட்டுக்குள் மறைத்து அவளை பார்த்தான்.

ஜோவிற்கு அழைப்பு வந்து விட்டது.

இப்ப புகழ் அண்ணா இருந்தா நல்லா இருந்திருக்கும்..அதான்..

“தனு சும்மா இருக்க மாட்டீயா?” ஜோ அவளை அதட்டி ஸ்ரீநிதியை பார்த்தான். அவள் முகமும் வாடிப் போனது.

“சாரி அண்ணி” ஜோவை பார்த்தாள். அவன் முகத்தை திருப்பினான்.

வருத்தமுடன் அவள் செல்ல, உனக்கு என்ன வேணும்மா?

“ஒன்றுமில்லை ஆன்ட்டி. எனக்கு எதுவும் வேண்டாம்” ஜோவை பார்த்து உதட்டை கோணி காட்டினாள்.

“வெளிய வா. நாம பேசலாம்” அவளது காதை பிடித்து இழுத்து சென்றான் ஜோ. அவள் கத்திக் கொண்டே சென்றாள்.

சிவாங்கி கிஷோரை நெருங்கி, உங்களுக்கு டான்ஸ் தெரியும்ல்ல? கேட்டாள்.

யா..அவன் உற்சாகமாக அவளை பார்த்தான்.

சிவாங்கி கிஷோரை அழைத்து வெளியே வர, ஜோ தனுவை திட்டிக் கொண்டிருந்தான்.

ஜோ அவளை விடு. தனு என்ன கேட்டுருப்பான்னு எனக்கு தெரியும்? உன் அக்காவுக்கும் அவ அண்ணனுக்கும் திருமணம். டான்ஸ் செய்தால் தான் என்ன? சிவாங்கி தனுவின் காதலுக்காக பேசினாள்.

எனக்கு வேலை இருக்கு…

அதுக்காக சின்னதா பர்ஃபார்ம் கூட பண்ண மாட்டீயா? கிஷோர் கேட்டான்.

அதான் சொல்றேன்ல்ல…

இவனை விடு தனு. உனக்கு ஜோடி இவனை விட்டால் ஆளா இல்லை..

சிவாங்கி, தனுவுக்கு ஜோடியா ஆட யாராவது உனக்கு தெரியுமா? அவன் கேட்க, ம்ம்..பட் அவர் வொர்க்ல்ல இருப்பாரே!

யாருடி? தன்வி கேட்க, சாதனா அண்ணா தான்..

சாதுவோட அண்ணாவா. அந்த விறப்பான ஆளுக்கு டான்ஸ் வருமா? தனு சிந்திக்க, மனசுக்கு பிடிச்சவங்களோட டான்ஸ்ன்னா யாரு வர மாட்டாங்க?

என்னடி சொல்ற?

ஆமா தனு. அவருக்கு உன்னை பிடிக்கும். லவ்வான்னு தெரியல.

ஆத்தாடி, இந்த வில்லங்கத்தை நான் இழுத்துக்க மாட்டேன்.

“சரி போஸ்ட் போட்ருவோமா? பத்து பதினைச்சு பேராவது வருவானுக. நீ தேர்ந்தெடு” கிஷோர் ஜோவை பார்த்துக் கொண்டே கூற, “அதுக்கெல்லாம்  நேரமில்லை சீனியர்” என்றாள் தனு.

சரி, அப்ப என்னோட தம்பியோட டான்ஸ் பண்றீயா? சிவாங்கி கேட்க, அவன் சின்னப்பையன்டி..

அதனால என்னடி? அவனும் ஆம்பள பையன் தானடி..

ஜோ கையை இறுக்கினான். அவன் முகத்தில் சினம் தெரிந்தது.

ம்ம்! ஓ.கே. சீனியருக்கு ஓ.கே சொல்லீட்டியா? சிவாங்கி தனுவை கேட்க, ஜோ வேகமாக தனுவை பார்த்தான்.

எந்த சீனியர்டி? இப்ப தான் தம்பீன்னு சொன்ன?

“தம்பி கூட நல்லா இருக்காது” சிவாங்கி கிஷோரிடம் அலைபேசியை கொடுத்தாள்.

வித்யன், நாளை ப்ரீயா? கிஷோர் கேட்க, நோ…ஜோ சத்தமிட்டான்.

தனு ஜோவை பார்க்க, கிஷோரிடம் அலைபேசியை பறித்த ஜோ அதனை பார்க்க, கிஷோர் சிரித்தான்.

விளையாட்டா இது? அவனை போய்…

உனக்கென்னப்பா சமாளிக்க போறது தனு தான?

“எப்ப வரணும்? ஜோ முகத்தை சுளித்து கேட்க, ஹம்..இரவு தான். இது ரகசியம். யாருக்கும் தெரிய கூடாது. சாதுவையும் அழைச்சிக்கலாம்” தனு கூற, அவளுக்கு ஜோடிக்கு என்ன செய்வ?

அதான் இருக்காரே! சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.

யாரு? கிஷோர் ஆர்வமாக, ஜெய் அண்ணா தோழன் ஆதவ்..

“ஓ! இருவரும் பார்த்தால் சிரிச்சுக்கிறாங்க? அவங்க கெமிஸ்ட்ரி எப்படி இருக்குன்னு பார்க்கலாம்” தனு சொல்ல, கெமிஸ்ட்ரியா? இதே வேலையா தான் இருப்பீங்களோ?

“நோ..நோ..நான் அவங்களிடம் பேசணும். ஓ.கே பை பை. இரவு ஏழு மணி” என்று இடத்தை கூறி விட்டு அவள் வண்டியை எடுத்தாள் தனு.