Advertisement
சிந்தாமல் நின்றிசைக்கும் செந்தேனே!!!
“நான் ஒன்னும் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கல… ஏதோ அழகா இருக்கன்னு ட்ரை பண்ணேன் நீ விழுந்துட்ட… என்கிட்ட சொல்லாம உன்னை யாரு வீட்டை விட்டு வர சொன்னது… உன்னை கல்யாணம் பண்றதுல எனக்கு என்ன லாபம்? இதுவே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா எனக்கு ஐம்பது சவரன் நகை கிடைக்கும்… கூடவே ஒரு காரும், ஐஞ்சு லட்சம் பணமும் கிடைக்கும்…”
“அதான் எங்க வீட்டுல பார்த்த பொண்ணுக்கே ஓகே சொல்லிட்டேன்… நீயும் உங்க வீட்டுல பார்க்கற பையனை கல்யாணம் பண்ணிக்கோ…” என்றவனின் குரலில் துளியும் நேசமுமில்லை, தன்னெதிரே கண்ணீரோடு நின்றிருந்த தன் காதலியின் மீது இரக்கமும் இல்லை.
இனி இவன்தான் தன் வாழ்வு என்று வீட்டில் ஏற்பாடு செய்திருந்த கல்யாணத்தை மறுத்து பெற்றவர்களை எதிர்த்து தன்னவனைத் தேடி வர அவன் சொன்ன செய்தியில் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமோ என்ற வெறுமையும், தான் ஏமாளியான கோபமும் சேர்ந்து கலவையான உணர்வில் நின்றிருந்தாள் பெண்ணவள்.
********************************
“அம்மாவுக்கு உன்னை இப்பவே பார்க்கணும் போல இருக்கு கண்ணா…”
“ரெண்டு நாள் கழிச்சு உங்க முன்னாடி இருப்பேன்…”