Advertisement

ப்ரீத்தி ஒரு அடி எடுத்து வைத்தது தான் தெரியும் மறுகணமே அவள் கால் இடர குனிந்து பார்க்க அங்கு விஷ்வா அவள் முன் ஒரு காலை மடக்கி மற்றொரு காலில் முழந்தாளிட்டு இருந்தான்.

‘தேவ்’ என்று விழிகள் விரிய ப்ரீத்தி பார்க்கவும், விஷ்வாவோ

‘நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா..’

என்று பாடியவாறே அவள் வலது பாதத்தை மென்மையாக பற்றி உயர்த்தி தன் மீது வைத்திருந்தான்.

அதை எதிர்பாராத ப்ரீத்தியின் விழிகள், ‘என்ன செய்கிறான் இவன்..??’ என்று புரியாமல், ‘தேவ்’ என்று அப்பட்டமான அதிர்வுடன் ப்ரீத்தி அவனை பார்த்திருந்தாள்,

அவனோ தன் மீது இருந்த அவள் பாதத்தை மென்மையாக  வருடி கொடுத்து அதன் மீது அழுத்தமாக தன் இதழ்களை ஒற்றி எடுத்தவன், மீண்டும் 

‘இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா’,

என்று பாடிக்கொண்டே அவன் கொண்டு வந்திருந்த பெட்டியை திறந்து அதிலிருந்த மெட்டியை  எடுத்து அவள் கால் விரலில் போட்டுவிட்டவன்  அதில் இருந்த சிறு சலங்கையை சுண்டிவிட்டு மீண்டும் அவள் விரல்களில் முத்தம் பதிக்க 

‘தேவ் என்ன இது எந்திரிங்க’ என்று அது நேரம் வரை அவனை தடுக்க முயன்று தோற்றுபோனவள் அவன் அவள் காலில் மீண்டும் இதழ் பதிக்கவும் பதறி போனவள், 

‘தேவ் ப்ளீஸ் என்ன பண்றீங்க..??’ என்று கேட்டபோதே அவள்  கண்களில் கண்ணீர் திரண்டு விட்டிருந்தது.

அவனோ தன் மீது இருந்த அவள் பாதத்தை மெல்ல எடுத்து கீழே வைத்தவன் மற்றொரு பாதத்தையும் கையில் ஏந்தி  தன் மீது வைக்க..,

‘தேவ்’ என்று பதறிக்கொண்டு விலகி நின்ற ப்ரீத்தியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அப்போதும் விடாமல் அவள் பாதத்தை எடுத்து தன் மீது வைத்து அதிலும் மெட்டியை போட்டு விட்டவன் இப்போதும் அவள் கால் விரல்களில் மென்மையாக இதழ்களை பொறுத்தி,

“இதுவரை நான் பண்ணின எல்லா முட்டாள்தனத்தையும் மன்னிச்சிடு ப்ரீத்தி, உன்கிட்ட நான் அப்படி நடந்துட்டு இருக்க கூடாது ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு  ஐ ஆம் சாரி” என்று மீண்டும் அவள் பாதத்தில் முத்தம் வைக்க சட்டென தோய்ந்து போய்  அவன் முன் கீழே அமர்ந்தவள்,

நாசி விடைக்க, நடுங்கும் இதழ்களை பற்கள் கொண்டு கட்டுபடுத்தியவாறே, ‘ப்..ப்ளீ..ஸ் என்..ன..’ என்றவளின் தொண்டை குழி அடைக்க குரலை செருமி..,

‘தே…தேவ்… என்ன  பண்ணிட்டு இருக்கீங்க நீங்க..?? ப்ளீஸ் ஸ்டாப் திஸ்’ என்றவளின் கண்ணீர் இப்போது பெரும் கேவலாக  வெடித்து கிளம்பியது.

‘சரியா தான்டா பண்றேன்’ என்று அவளை தன்னோடு அணைத்து கொண்டவன் அவள் கண்ணீரை துடைத்து அவளை ஆற்றுபடுத்த முற்ப்பட, அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் கண்ணீர் இன்னுமே அதிகரித்தது.

‘ப்ரீத்தி’ என்று அவள் முகம் நிமிர்த்தியவன் அவள் கண்ணீரை தன் இதழ்களால் துடைத்து முகமெங்கும் முத்தமிட்டவன்,

‘நான் பண்ணின எதுவுமே சாதாரண தப்பு கிடையாது எனக்கே தெரியும், அதுவும் குழந்தை..’ என்றவனுக்குமே அன்றைய தினம் நினைவில் எழ ஒரு கணம் கண்களை மூடி திறந்தவன்,

“குழந்தை பிரசவிச்ச உன்கிட்ட நான்.. ஆனா நான் ..” என்று தொடங்கியவன் ‘ப்ளீஸ் என்னை  மன்னிச்சிடு’ என்றிட,

இதழ்களை கடித்து கொண்டு அவனை பார்த்தவளின் கண்களில் இன்னுமே கண்ணீர் நிர்ப்பேனா..?? என்பது போல கரைபுரண்டு கொண்டிருந்தது.

அவள் நிலை புரிபட அதன் பின் விஷ்வா நொடியும் தாமதிக்காமல் அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டவன் அறைக்குள் நுழைந்தான். நடுங்கும் கரங்களால் அவன் சட்டையை பற்றிக்கொண்டு இருந்தவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்து நெஞ்சை சுட்டது.

‘ஒன்னுமில்லடா ஈசி ஈசி’ என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு அமர்ந்தவன் அவளை வருடி கொடுக்க மெல்ல ப்ரீத்தியின் அழுகை கட்டுக்குள் வந்தது அதை உணர்ந்தவன்,

” நான் அன்னைக்கு சொன்னது போல இது நம்மோட சாம்ராஜ்ஜியம்..,  இனி வாழ்க்கை முழுக்க நாம இங்க தான் கணவன் மனைவியா இருக்க போறோம் ஆனா இங்க வந்த முதல் நாளே  இந்த ரூம்ல  உன்னை நான் நீ நெனச்சி பார்க்க முடியாத அளவு காயபடுத்திட்டேன்.., கண்டிப்பா நீ அதை எதிர்பார்க்கலை எனக்கு தெரியும்.., அதோட அன்னைக்கு நீ..” என்றவனின் செவியில் அவள் கூறிய வார்த்தை முட்டி மோதிட, விஷ்வாவின் உடலில் அப்பட்டமாக நடுக்கம் பரவவும் கண்களை இறுக மூடி கொண்டான்.

‘ இனி வாழ்க்கை முழுக்க நாம தான்னு எப்போ நீ முடிவு பண்ணியோ அப்பவே இனி உன்னோட இந்த ரூம்ல இருக்கும் முன்ன அந்த பழைய நினைவெல்லாம் அழிக்கனும்ன்னு முடிவு பண்ணேன்..’

‘நான் தானே உன்னை காயபடுத்தினேன் அதுவும் ஒருமுறை இல்ல ரெண்டு முறை என்னால நீ உடைஞ்சு போயிருக்க… உன்னோட கண்ணீருக்கு நான் காரணமாகி இருக்கேன் அது தப்பில்லையா..?? அதுக்கு மன்னி…’ என்றவனை இடையிட்டவள்,

‘தேவ் நான் அதெல்லாம் மன்னிச்சிட்டேன் நீங்க ஏன் புதுசா ஆரம்பிக்கிறீங்க..??’,

‘என்னை எனக்காக நீ மன்னிச்சு இருக்கலாம் ஆனா மறந்திருக்க மாட்ட, அவ்ளோ ஈசியா அதெல்லாம் மறக்கவும் முடியாது..!!’ என்று அவளை பார்த்தவன்,

‘எங்க இங்க வரும் முன்னாடி இந்த ரூம் பார்க்கவும் இங்க என்னை திரும்ப சந்திக்கணும் என்னோட இருக்கணும்னு நினைக்கிறப்போ உனக்கு எதுவும் நியாபகம் இல்லன்னு சொல்லு பார்ப்போம்’ என்று கேட்க,

ப்ரீத்தியிடம் மௌனக்கண்ணீர்..!!

‘பார்த்து ஒரே ஒரு செக்கன்ட் கூட நீ தயங்கி நிற்க்கலைன்னு சொல்லு பார்ப்போம்’ என்று கேட்க

ப்ரீத்திக்கு இல்லை என்று பொய் சொல்லவும் மனமில்லை ஆம் என்று நிஜத்தை கூறி அவனை காயபடுத்தவும் விருப்பமில்லை. அதனால் அமைதியாக அவள் அமர்ந்திருக்க,

‘அதனால தான் என்னை மன்னிச்சு இன்னையோட எல்லாமே மறந்து இப்போ இந்த ரூம்ல என்ன நடக்குதோ அதை மட்டும் உன் மனசுல இருக்கணும்’ என்ற விஷ்வா மீண்டும் அவள் முன் மண்டியிட்டு அவள் பாதத்தில் முத்தமிட முயல சட்டென தன் கால்களை தூக்கி கட்டிக்கொண்டவள்,

‘ஏன் தேவ் இப்படி பண்றீங்க.., ப்ளீஸ்  ஐ.. ஐ..’ என்றவளுக்கு நெஞ்சம் அடைப்பது போலிருக்க விஷ்வா தண்ணீரை எடுத்து அவளுக்கு புகட்டி,

‘இப்போ பேசு ஆனா ஆழாம பேசணும்’ என்றவாறே அவளருகே அமர்ந்தான்.

முகத்தை அழுந்த துடைத்தவளுக்கு மனதினுள் ஏதேதோ நினைவுகள் எழ, “Do you think I deserve this..??” இதுக்கெல்லாம் நான் தகுதியானவள் தானா..?? என்று கரைந்த விழிகளுடன் அவனை பார்த்தாள்.

‘If you not then whoelse..??’ ‘நீ இல்லைன்னா வேறு யார் இருக்க முடியும்..??’ என்று அவளையே திருப்பி கேட்டவன் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவள் உச்சியில் இதழ் பதித்து கண் மூடி அமர்ந்திருந்தான். 

சில நிமிடங்களுக்கு பின் மீண்டவன் அவள் முகத்தை கையில் ஏந்தி, உனக்கு தெரியாது ப்ரீத்தி “You are my Queen..!! my Lady..!! my love..!! my soul..!! my life..!! my bliss..!! my everything..!! and without you I am nothing” என்றவன் விழிகள் கலங்கிட குரலை செருமிக்கொண்டு அவளை பார்த்தான்.

அவன் காதலை வார்த்தையில் வடித்ததில் மூர்ச்சையாகி போன ப்ரீத்திக்கு நெஞ்சம் ததும்பி நின்றது. ‘ஐ லவ் யூ’ என்ற மூன்று வார்த்தையில் அவன் நேசத்தை அவன் அடக்கி விடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவனோ எல்லையில்லா கொள்ளை அன்பை காதலை அல்லவா வார்த்தையில் வடித்து கொண்டிருக்கிறான்.

இமை மூடாது அவனை பார்த்து கொண்டிருந்தவளுக்கு வார்த்தையற்று போனது.

“நீ என்னோட தேவதைடா..!! இதை உன்கிட்ட எப்பவோ சொல்லி இருக்கணும் ஆனா முடியலை” என்றவனின் இதழ்கள் அவள் நெற்றியில் அழுத்தமாக பதிந்திட அவன் கைகளை அடங்கி இருந்த ப்ரீத்தி அவன் வார்த்தைகளில் ஸ்தம்பித்து போய் இருந்தாள். 

‘தேவதையா..?? அவளா..??’ என்று அவளை அவளே கேட்டுக்கொள்ள நெஞ்சில் இருந்து பெரும் கேவல் ஆர்பரித்து  கிளம்பி அவளை மொத்தமாக விழுங்கி கொள்ள   அவள் கண்களில் அவளனுமதி இன்றி கண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கி அவன் நேசத்தின் அளவை தாள முடியாது விம்மிய நெஞ்சம் ஒரு கட்டத்தில்  மூச்சை திணற செய்திட,

சீராக சுவாசிக்க முடியாமல் தினறியவள் ஒரு கட்டத்தில்  வாய் மூலமாக மூச்சை இழுத்து விட்டு காற்றுக்கு தவித்து போனாள்..

அதை கண்ட விஷ்வா ‘ப்ரீத்தி ஈசி ஈசிடா என்று அவள் நெஞ்சை நீவியவன் அப்போதும் அவள் நிலை மாறாது போகவும் அவள் இதழோடு இதழ் சேர்த்து அவள் தன் சுவாசக்கற்றை அவளுக்கு அளித்து அவள் மூச்சை சரிபடுத்திட ப்ரீத்திக்கு இன்னுமே அவனளித்த அதிர்வின் கணம் தாள முடியாது  அவன் கரங்களில் துவண்டு சரிந்தாள்.

அவள் ஏங்கிய காதல், இதுநாள் வரை அவளறியாத தூய நேசம், மொத்தமும் அவன் வடிவாய் அவள் முன்னே..!! அவளுக்கே அவளுக்காக ..!! சத்தியமாக இப்படி ஒரு நிலையில் தான் நிறுத்தபடுவோம் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

இத்தனை நாட்கள் அவன் காதலை உணர செய்திருந்தவன் இப்போது கொள்ளை காதலின் இன்பத்தையும் சொற்களிலும் செயலிலும் வடிக்க ஒரே நாளில் சுத்தமாக தாங்க முடியாது போனது ப்ரீத்திக்கு..!!

இப்போதும் அவன் காதலின் கனம் அவளை சிறிது சிறிதாக சிதற செய்திட ப்ரீத்தி இவ்வுலகிலேயே இல்லை.. மெய்  காதலினால் அவள் ஐம்புலன்களையும்  இப்போதும் அவன் வசப்படுத்தி விட்டிருந்தான் விஷ்வதேவ்..!!

இன்னுமே கண்களில் நிற்காத கண்ணீருடன் பெண் மனம் அதீத மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்க அவள் உடலில் இன்னுமே நடுக்கம் குறையவில்லை, 

விஷ்வாவிற்கு அவள் நிலை நன்கு புரிந்தது. பிளாஸ்கில் இருந்து பாலை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தவன் அதை கூட பிடிக்க முடியாமல் அவள் கரங்கள் அதீத நடுக்கத்தில் இருப்பதை கண்டு அவனே அவளை தோள் சாய்த்து குடிக்க வைத்தவன் ,

‘இன்னைக்கு பேசின வரை போதும்  தூங்கலாம்  வா’ என்று அவளை சரியாக படுக்க வைத்து போர்வை போர்த்தியவன் விளக்கை அமர்த்தி விட்டு தானும் அருகே வந்து படுக்க  இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

அவளருகே படுத்தவன் கைபேசியில் குறுஞ்செய்தி வர எடுத்து பார்த்தான். அதில் மாணவர்களின் தேர்ச்சி முடிவை பதிவேற்றம் செய்திட சொல்லி தகவல் இருக்க அதை பார்த்து முடித்து கைபேசியை அணைத்து திரும்பிட அவன் விழியில் விழுந்தாள் அவன் மனையாள்.

 ‘என்னடா ..??’ என்றவன் பார்க்க,  

‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்து கண்களை மூடியவள் அடுத்த நொடியே கண்களை திறந்து தயக்கத்தோடு அவனை பார்த்தவள் மெல்லிய குரலில் அவனிடம்,

‘தேவ்.. இப்.. இப் யூ டோன்ட் மைண்ட் நான் உங்களை பிடிச்சிட்டு தூங்கட்டா..??’ என்று வார்த்தைகளை தேடி எடுத்து கோர்த்து தயக்கத்துடன் அவள் கேட்கவும் விஷ்வா மனதினுள் மறித்து போக சூடான கண்ணீர் அவன் இமை மீறி வழிந்தது.

Advertisement