Advertisement

விஷ்வா லிவிங் ரூமில் ஏதோ குறிப்பு எடுத்து கொண்டிருக்க,

சோ எவ்ளோ நாள் இப்படியே வாழலாம்ன்னு முடிவு பண்ணி இருந்தீங்க மிஸ்டர் விஷ்வதேவ்..??’ என்று கேட்டு கொண்டே ப்ரீத்தி அவன் முன் வந்து நின்றாள்.

தலை உயர்த்தி அவளை பார்த்தவன், “இப்படின்னா எப்படிடி வாழ முடியும்” என்று இருவருக்கும் இடையிலான இடைவெளியை கண்களால் அளந்தவன்அவளை இழுத்து மடியில் அமர்த்தி வேணும்ன்னா இப்படி வாழலாம்என்று கண் சிமிட்ட,

அவன் தோளில் கரம் கோர்த்து அவனை அழுத்தமாக பார்த்தவள், “டாக்டர் விஷ்வதேவ் எதனால..?? யாரால..?? எப்படி..?? ப்ரொபசர் விஷ்வதேவா மாறினார்ன்னு உங்களுக்கு தெரியுமா..??” என்று ப்ரீத்தி என்றுமில்லாத அழுத்தத்துடன் கேட்க,

அதை எதிர்பாராதவனின் முகத்தில் மின்சாரம் பாய்ந்த அதிர்வு..!!

ஹ்ம்ம் சொல்லுங்க தேவ்என்றவளின் குரலில் கட்டுப்படுத்த பட்ட கோபம்

என்… என்ன சொல்..ல..ணும்

அப்போ கடைசி வரை நீங்க எனக்காக என்னலாம் பண்ணினீங்கன்னு சொல்லாம என்னை முட்டாளாவே வச்சி இருக்க போறீங்க..?? அப்படிதானே..??என்று  அவன் மீதிருந்து இறங்க முற்ப்பட்டவள் ஒரு நொடி நிதானித்து இறங்காமல் அவன் மடியில் அமர்ந்து அவனை இழுத்து தன்னோடு சேர்த்தணைத்து ஆவேசமாக முத்தமிட தொடங்கினாள்.

விஷ்வாவோ அவளை இறுக அணைத்து கொண்டு அவள் முதுகை வருடி கொடுத்து கொண்டிருந்தான். 

ஆனால் நேரம் செல்ல செல்ல ப்ரீத்தியின் வேகம் அதிகரித்து அவன் இதழ்களில் இருந்து ரத்தம் வடிந்தது.

ஒருவழியாக அவனை பிரிந்து அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் புரண்டோடிய முகத்தை துடைத்து அவள் தன்னை கட்டுப்படுத்த,

விஷ்வாவோ மெளனமாக அவளை பார்த்திருந்தான்.

ஸ்பீக் அவுட் தேவ்..!!

விஷ்வாவிடம் அழுத்தமான மௌனம்..!!

இப்போ நீங்க பேச போறீங்களா இல்லையா..?? என்று விம்மும் மனதோடு அவள் கேட்க,

என்ன பேசணும்..??’ என்றவனின் குரலில் இறுக்கம்.

என்ன பேசணுமா..??’ என்று அதிர்வோடு அவனை பார்த்தவள் இதுக்கு மேல மறைக்காதீங்க தேவ் .., எனக்கு உங்க வாயால  கேட்கணும், ப்ளீஸ் ஸ்பீக்” என்றவளின் கண்ணீர் அவன் முகத்தில் விழவும்,

அவள் முகத்தை கையில் ஏந்தி தன் இதழ்களால் அவள் கண்ணீரை துடைத்தவன், அதெல்லாம் எதுக்குடி இப்போ உனக்கு..?? இங்க பார் உனக்கு என்னை உணர்த்தணும்ன்னு நெனச்சேன் உணர்த்திட்டேன், என்னோட லவ் உன்கிட்ட சொல்லனும்ன்னு நெனச்சேன் சொல்லிட்டேன், நீ என்னோட வாழணும்ன்னு நெனச்சேன் வாழ தொடங்கிட்ட இதுக்கு மேல என்ன வேணும்…? அதை தெரிஞ்சு என்ன பண்ண போற..?? இன்னும் குற்ற உணர்வுல கஷ்டப்படவா..?? அழுது கரையவா..?? உடைஞ்சு போகவா..??” என்று அவன் கேட்க இதழ்களை கடித்து  நின்றாள்.

“நான் என்னவெல்லாம் பண்ணினேன்னு தெரியாதப்பவே என்னை டிவர்ஸ் பண்ணறேன்னு சொன்னது.., குழந்தையை மட்டும் தூக்கிட்டு போக சொன்னது, என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னது இதெல்லாம் யாருக்காக உனக்காகவா சொன்ன..?? இல்லையே  தலையை குலுக்கியவன் எனக்காக தானே..!! நான் நல்லா இருக்கனும்ன்னு தானே..?? குழந்தையை காரணம் வச்சு என் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாதுன்னு தானே சொன்ன..??

“இதே உன் இடத்துல யாராவது இருந்திருந்தா தன் வாழ்க்கைக்கு பிடிப்பு கிடைச்சதுன்னு நான் கூப்பிட்டதும் உடனே கிளம்பி இருப்பாங்க.., ஆனா நீ..!!” என்று நிறுத்தி அவளை பார்த்தவன் விழிகளில் அத்தனை வலி

ஏன்டி அவ்ளோ கஷ்டத்துலயும் உன்னை பத்தி யோசிக்காம என்னை பத்தி தானேடி யோசிச்ச இத்தனைக்கும் அப்போ உனக்கு என்னை யாரு என்னன்னே தெரியாது நான் நல்லவனா, கெட்டவனா, அய்யோக்கியனா எதுவுமே உனக்கு தெரியாது அப்படி இருந்தும் என் வாழ்க்கை வீணாக கூடாதுன்னு நெனச்ச உன் மனசு எத்தனை பேருக்கு வரும் ப்ரீத்தி”

“எல்லாத்தையும் விட நீ நினைச்சி இருந்தா எனக்கே தெரியாம உருவான உன் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லி அவனை என் கிட்ட கொடுத்துட்டு போய் உனக்காக ஒரு வாழ்க்கையை அமைச்சு இருக்கலாம்.., ஆனா என் குழந்தை என் பொறுப்பு..!! அவனை  நான் விட்டு கொடுக்கமாட்டே  கடைசி வரை அவனுக்கு அம்மாவாவே இருப்பேன்னு சொன்ன உன்னோட குணத்துக்கு எதுவும் செய்யலாம்என்று ஆவேசமாக கூறியவன்,

நான் எவ்ளோ மோசமா நடந்துகிட்ட அப்பவும் எல்லா பழியும் உன் மேல போட்டுக்கிட்டு எனக்காக என் தரப்பை யோசிச்சு எங்க அம்மாகிட்ட எனக்காக பேசினியே எத்தனை பேர் இதை செய்வாங்க சொல்லு என்று அவளை பார்த்தவன்.., இப்படி எல்லாரையும் யோசிச்சி எங்கயும் சுயநலமா இல்லாம அடுத்தவங்களுக்கு பார்த்து பார்த்து செய்யற உன் மனசுக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம் ஆனா அதை எல்லாம் உன்கிட்ட சொல்லனும்ன்னு எந்த அவசியமும் இல்லை போடி” என்றவனிடம் அதன் பின் மீண்டும் மௌனம்.

இருவருக்குமே கனமான நொடிகள் தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தனர். ‘நீ பேசியே ஆகணும்’ என்ற பிடிவாதத்தோடு ப்ரீத்தியும் ‘முடியாது’ என்று அடமாக அவனும்..,

இறுதியில் சாரியை கொண்டு விஷ்வதேவே இருவருக்கிடையிலான மௌனத்தை உடைத்திருந்தான்.

அப்போ மத்தவங்களை விட என்னால அதிகமா பாதிக்கப்பட்டது நீங்க அப்படி தானே..!! அதுவும் எனக்கே தெரியாமஎன்று அவள் கேட்கவும்

யா..யாருடி பாதிக்கபட்டா..??’ என்றவனின் வார்த்தைகள் தொண்டையில் இருந்து வெளியேற அத்தனை பாடுபட்டது.

ஒரு வேகத்துல கோபத்துல என்னென்னமோ செய்து முடிச்சிருந்தாலும் என் பொண்டாட்டிக்கு அவளுக்காக யோசிக்க தெரியாது அதனால அவளுக்கும் சேர்த்து நான் யோசிச்சேன் இது தப்பா..?? மத்தவங்களை முன்னிறுத்தி அவ வாழ்க்கையை அழிச்சிக்க பார்த்தா நான் எப்படி சும்மா இருக்க முடியும்..??”

அதுக்காக உங்களை தாழ்த்திக்குவீங்களா..??” என்று ஆதங்கத்துடன் கேட்டவள்,

ஒரு.. ஒருவேளை நான் உங்களை புரிஞ்சிக்காம போயிருந்தா கடைசி வரை குடும்பம் மட்டுமே போதும்ன்னு முடிவு எடுத்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க..??

சிம்பிள் நீ சொன்ன மாதிரி நம்ம ரூம்க்கு வெளியே மட்டும் உனக்கு புருஷனா இருந்திருப்பேன்” என்று அவன் தோள்களை குலுக்க,

ப்ரீத்தியோ எழுந்த கேவலை இதழ்களுக்குள் தள்ளி யூஊஉஎன்று அவன் தோளிலேயே அறைய தொடங்கி விட்டாள்.

நீ எப்படி காலம் முழுக்க தனியா இருக்கனும்ன்னு நினைச்சியோ அதுவே தான் என்னோட முடிவாவும் இருந்திருக்கும் ஆனா எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் நான் ப்ரீத்தி புருஷன் தானேடி..!! அது மாறாது அது போதும் எனக்கு” 

அப்படி என்ன.. நா..நான் ப்ளீஸ் தேவ் நான் இனி அழவே கூடாதுன்னு நெனச்சி இருந்தேன் பட் யு ஆர் breaking me into pieces… என்னால இதை ஏத்துக்கவே முடியலை நீ.. நீங்க ஏன் எதுக்காக என் கிட்ட கெட்டவனா நடக்கணும்.. எல்லாம் நான் உங்களை வெறுக்கதானே..” என்று கேட்க அவனிடம் அழுத்தமான பார்வை.

நான் கூட யோசிச்சேன் பல முறை அப்படி என்ன நம்ம மேல கோபம் இருக்கும் ஏதேதோ யோசிச்சேன் ஆனா இப்படி இருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்ல… மனசு முழுக்க என்னை வச்சிட்டு உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்” என்று அவன் நெற்றியில் இதழ் பதித்தவள்,

ஐ ஹேட் மைசெல்ப், நான் எல்லாம் எதுக்கு பிறந்தேன்என்று கண்ணீருடன் தன்னையே அறைய முற்ப்பட

எனக்காக தான்டி பிறந்த இதுல என்ன சந்தேகம் உனக்கு..??’ என்று அவள் கையை பிடித்து கொண்டவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன்னை பார்க்க செய்தவன்

இங்க பாருடா அப்போ எனக்கு உன்கிட்ட கெட்டவன் ஆகறதுக்கு  வேற வழி தெரியலை…, சொல்லபோனா முதல்ல  வாழ்வே மாயம் கமல் மாதிரி வேற பொண்ணுகூட நெருக்கமா என்றபோதே அவன் முகத்தில் ஒவ்வாமை தோன்ற தலையை குலுக்கி கொண்டவன் சீரியஸ்லி என்னால் நடிப்புக்கு கூட இன்னொரு பொண்ணு முடியாதுடா… அதனால தான் உன்கிட்டே தப்பா நடந்துகிட்டு  உன் வெறுப்பை சம்பாதிச்சேன்.

அப்போ அந்த வீடியோல என்னை மாதிரி பேசினது நீங்க தானே” என்றாள் அன்று குழந்தைகள் எல்லாம் சித்தப்பா அப்பா மாதிரி பேசினார் என்பதை நினைவு கூர்ந்து..

அதை ஆமோதித்த விஷ்வாவும் ஆமா நான் தான்என்றான் ப்ரீத்தியின் குரலில்.

அதை கேட்டவளின் கண்களில் சந்தோஷ கண்ணீர் ஊற்றெடுத்தது “ஆம் எங்குமே யாரிடமுமே அவன் அவளை விட்டு கொடுக்கவில்லையே..!!”

ஏன் அப்படி பேசினேன்னு புரிஞ்சதா..??’ என்று அவளை கேட்க,

இல்ல ஆனா அதுவும் கண்டிப்பா எனக்காக தான்…

ப்ரீத்தி வீ ஆர் டாக்டர்ஸ் நமக்கு ஹ்யூமன் பாடி இஸ் எ சப்ஜக்ட் வீ டையக்னோஸ், ட்ரீட் தென் கியூர், அண்ட் வீ ஆர் வெல் க்நொன் வித் இட்ஸ் பார்ட்ஸ் அண்ட் பான்க்ஷன்ஸ்… பட் ஸ்டில் யூ கேம் பார் ஐவிஎப்அண்ட் அத்தை கிட்ட கன்வின்ஸ் பண்ணி சாம்பிள் கலெக்ட் பண்ண சொன்ன இது போதுமேடா நீ யாருன்னு புரியறதுக்கு அதை தான் உனக்கே புரிய வைக்க ட்ரை பண்ணேன்” என்று கூற அவனை வாரி அணைத்து கொண்டவள்

சா சாரி எனக்கு அப்போ அதை புரிஞ்சிக்க முடியலை என்.. என்னை நீங்க த..” என்று நடுங்கும் கரங்களால் அவன் முகத்தை பற்றியவள்,

ஆனா உங்களை பத்தி தெரியாம நான் உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் இல்ல..?? அதுவும் நான் உங்களை soulmate இல்லைன்னு சொன்னது தப்பா புரிஞ்சிட்டு என்னென்னமோ பேசினது எல்லாமே உங்களுக்கு ரொம்ப வலிச்சிருக்குமே தேவ்என்றவாறே அவன் சட்டையை விலக்கி அவன் மார்பில் முத்தமிட்டவள்,

சாரி தேவ்என்று அவன் முகம் பார்க்க,

அதெல்லாம் வலிக்கலைடி என்னை நீ இன்னும் எவ்ளோ பேசி இருந்தாலும் அதெல்லாம் வலிச்சிருக்காது ஏன்னா நான் பண்ணின காரியத்துக்கு எந்த மாதிரி ரிப்ளை வரும்ன்னு எனக்கே தெரியும் அதனால அதுக்கெல்லாம் தயாரா தான் இருந்தேன்.., ஆ…ஆனா நீ” என்றவனுக்கு அன்று  அவள் கூறிய வார்த்தை நினைவில் எழுந்து நெஞ்சை கசக்க,

ஆனா நீ உன்னை…” என்றவனின் குரல் தழுதழுக்கவும் என்ன என்பதை புரிந்து கொண்டவள் கண்களும் பணிந்து போனது..,

மறக்க முடியுமா அவளால் அன்றைய இரவை..??

ஆனால்  அன்று தன்னை விட ஆயிரம் மடங்கு வலியை அவன் கொண்டிருந்திருப்பான் என்பதை புரிந்து கொண்டவள் சட்டென அவனை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு சாரி சாரி.. என்ற  ப்ரீத்தி எழுந்த கேவலை கட்டுபடுத்தியவாறு அவன் நெஞ்சை வருடி

ரொம்ப வலிச்சதா தேவ்..??’ என்று கேட்டுக்கொண்டே  அவன் மார்பில் முத்தமிட்டு,

நீங்க சொல்லவேண்டியதில்லை ஐ கேன் பீல் என்னை விட அதிகமா வலிச்சிருக்கும் எனக்கும் சேர்த்து வலியை அனுபவிச்சிருப்பீங்கஎன்றவள் அவன் நெஞ்சிலே கடிக்க,

ஸ்ஸ்ஹா என்னடி பண்ணஎன்று அவன் நெஞ்சை நீவ,

அப்படி தான் கடிப்பேன்..!! எனக்காக பார்த்த நீங்க உங்க லைப் பத்தி நினைக்கமாட்டீங்களா..?? உங்களுக்குன்னு ஆசை , கனவு, லட்சியம்..” என்று அவள் அடுக்கி கொண்டே போக,

எல்லாமே நீயா இருக்கப்போ வேற எதை பத்தி நான் யோசிக்க..??” என்று அவள் இமைகளில் விஷ்வா முத்தமிட ப்ரீத்தி விழிகளில் கண்ணீர் துளி வழிந்தது.

ஐ மீன் இட் ப்ரீத்தி யு ஆர் மை லைப்..!! அப்போ உன்னை பத்தி தானே யோசிக்க முடியும்

ஆனா தேவ் எனக்காக ப்ரபெஷன்” என்று குரலை செருமி அவனை பார்த்தவள்,

என்ன இருந்தாலும்  கெரியர் முக்கியமில்லையா தேவ்..?? அப்படி என்ன என்னை காப்பாத்த உங்க ப்ரோபஷனை இழக்கற கட்டாயம் உங்களுக்கு..?? பைத்தியம் பிடிச்சிருந்தவளை அப்படியே எக்கேடோ கெட்டு செத்து ஒழியட்டும்ன்னு விட்டுட்….” என்றவளை முதல் முறை ஓங்கி அறைந்திருந்தான் விஷ்வா. 

கன்னத்தை பிடித்து கொண்டு ப்ரீத்தி அவனை பார்க்க ‘என்ன பேசுற இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டேன்’ என்று சிவந்த விழிகளுடன் அவளை பார்த்தவன் அவள் மருண்ட பார்வையில் தன்னையே நிந்தித்து கொண்டு சட்டென அவளை இழுத்து அணைத்து கொண்டான், ப்ரீத்தி அவன் முகம் பார்க்கவும்,

இன்னொரு முறை அப்படி பேசாதடா..!! உன்னை விட எதுவும் முக்கியமில்லை இப்போ நான் ப்ராக்டிஸ் பண்ணினா என்ன நீ பண்ணினா என்ன நாம வேற வேற இல்லையேஎன்றவனின் குரலில் அவள் கூறிய வார்த்தைகளால் பிறந்த நடுக்கம்

அதை உணர்ந்தவள், “சாரி தேவ் சாரி திரும்ப உங்களை காயபடுத்திட்டேன் ப்ளீஸ் ஐ ஆம் சாரி” என்றவள் ,

என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே உங்களுக்கு இவ்ளோ கஷ்டம் இல்லாம போயிருக்கும்என்று அவன் முகம் பார்க்க

யாருக்கு வேணும்டி உன்னோட அனுதாப காதல் அதை வச்சிட்டு நான் என்ன பண்ண.. அனுதாபத்துல வர காதல் நிலைக்காது… காதல் எப்பவும் ரெண்டு பேருக்கும் ஆத்மார்த்தமா வரணும்..”

இதோ இப்போ உனக்கு என் மேல கோபம் இருக்கு, ஆதங்கம் இருக்கு, வலி , வேதனை எல்லாமே இருக்கு ஆனாலும் என்னை விட்டு விலகினா அது எனக்கு வலிக்கும்ன்னு விலகாம என் கூடவே இருந்து கேள்வி கேட்குறியே இந்த காதல் தான்டா  எனக்கு வேணும் ப்ரீத்தி..

எத்தனை பொண்டாட்டி கோபத்துல கூட புருஷனுக்காக யோசிப்பாங்க..? எனக்காக யோசிக்கிற உனக்காக எதுவும் செய்யலாம்” என்று அவளை பார்த்தவனின் கண்களில் நிறைந்திருந்த காதல் பூஞ்சிதறலாக அவள் மீது வீசியது.

அவன் பேரன்பில் கட்டுண்டு கிடந்தவளிடம், ‘இன்னும் என்னடா..??’ என்று கேட்டவன் அவளை அழைத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றவன் அவளை தன் மீது போட்டுக்கொண்டு,

ஆர் யு ஹாப்பிஎன்று கேட்டான்.

அவள் ஆம்என்று தலை அசைக்கவும்,

எவ்ளோ..??’

உங்களை அப்படியே கடிச்சு சாப்பிடுற அளவு” என்றவள் அவன் கழுத்தை கட்டிக்கொள்ள,

என்னமோ உன்னோட சந்தோஷத்தை நான் தாங்க மாட்டேன்னு அன்னைக்கு சொன்ன இப்போ காட்டுடி எப்படி தாங்குறேன்னு பாரு” என்று கண்சிமிட்டினான்.  

விஷ்வாவின் நெஞ்சில் சாய்ந்து அவன் மார்பில் தன் வலக்கரத்தை தவழ விட்டவள் மெல்லிய குரலில்

நான் என்ற சொல்
இனி வேண்டாம் நீ என்பதே
இனி நான் தான் இனிமேலும்
வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும்
சொர்கமில்லை உயிரே வா”

என்று பாடியவாறே அவன் நெஞ்சில் சின்ன சின்ன முத்தம் வைத்து அவனை தன்னோடு சேர்த்து கொண்டவள் அடுத்த சில நிமிடங்களில் தன் மொத்த சந்தோஷத்தையும் அவனிடம் கொட்ட தொடங்கி விட்டாள்.

ஆலிங்கனம் முழுக்க  ப்ரீத்தியின் அரசாட்சி என்றாகி போக நிமிடங்களை யுகமாக்கி கணவனை அர்ச்சித்து ஆராதித்து கொண்டாடி தீர்த்து விட்டாள் பெண்ணரசி.

களைத்து, வியர்த்து அவன் அருகே துவண்டு சரிந்தவள் மீண்டும் அவனை நெருங்கி அவன் செவியோரம் குறுகுறுக்க செய்ததில் என்னடி பண்றஎன்று விஷ்வா அவளை கையை பிடிக்க,

பார்த்தா தெரியலை தேங்க்ஸ் சொல்றேன்என்றவளின் இதழ்கள் இப்போது அவன் செவிமடலில் கோலமிட அவனோ,

தென்றலாக தீண்டிய அவள் வருடலில் தேகம் குறுகுறுக்க உடனே விடுடிஎன்று அவளிடம் இருந்து விலக பார்த்தான் விஷ்வதேவ் ஆனால் ப்ரீத்தி அவனை கழுத்தோடு சேர்த்தணைத்து விடாமல் தன்னோடு நெருக்கி கொண்டவள்,

இதுக்கே விட சொன்னா எப்படி இன்னும் எவ்ளோ பேருக்கு நான் தேங்க்ஸ் சொல்ல வேண்டி இருக்கு இது என் டர்ன் அமைதியா இருக்கணும் புரிஞ்சதா” என்று மிரட்டி கணவனை வழிக்கு கொண்டு வந்தவள் தன் நன்றியை அவனிடம் உரைக்க தொடங்கி இருந்தாள்.

நீ பார்த்த
பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு
நன்றி அயராத இளமை
சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும்
நன்றி நன்றி”

சுபம் ….

Advertisement