Advertisement

இரவு உணவு தயாரித்து கொண்டிருந்த  ப்ரீத்தி முகத்தில் அத்தனை தீவிரம்.., மனம் முழுக்க நேற்று அவன் பாடிய பாடலிலேயே லயித்திருந்தது.

பொதுவாக சூழலுக்கு ஏற்ப அவன் பாடல்கள் அமைவதை இத்தனை நாட்களில் கண்டு கொண்டிருப்பவளுக்கு இப்போது ஏன் இந்த பாடல் என்ற கேள்வி தான்.

அவன் கூறியது போல நேற்று அமைந்தது அவர்களின்  ஆறாவது நிலை என்றால் பாடலில் கூறியது போல இதை கடந்து அடுத்த நிலை என்ன..??

ஒருவேளை மரணமா..??

அதை எண்ணியபோதே அவள் உடலில் சிறு நடுக்கம் பரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை.., அதேநேரம் நேற்று இதே கேள்வியை அவனிடம் கேட்டதற்கு அவன் கூறிய பதிலை அவளால் ஏற்க முடியவில்லை அதற்கும் விஷ்வாவே காரணம்..!! 

‘அப்படி என்ன உயிரையே தியாகம் செய்யுமளவு அவள் மீது காதல்..? என்ன வகையான காதல் இது..??’ என்ற யோசனையுடனே ப்ரீத்தி சமைத்து கொண்டிருக்க அங்கு வந்த வித்யா,

‘பேக்கிங் எல்லாம் முடிச்சிட்டியா ப்ரீத்தி..??’ என்று கேட்க,

‘அச்சோ இல்ல அத்தை.. மறந்தே போயிட்டேன்’

“அதை பண்ணாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க நாளைக்கு பதினோரு மணிக்கு கிளம்பனும் ஓடு வர்ஷுவையும் கூட்டிட்டு போய் பேக் பண்ணு” என்று அவர் துரத்த, 

வர்ஷுவோடு அறைக்கு திரும்பி பெட்டிகளை அடுக்க தொடங்கியவளின் சிந்தனை தடைபட்டு போக அதன் பின் ஆதியும் வந்து சேர மகனுடன் அவர்கள் இரவு கழிந்தது.

 

*****************************

அடுத்த நாள் தேவ் ப்ரீத்தியை வழியனுப்ப மொத்த குடும்பமும் விமான நிலையத்தில் கூடி இருந்தது சௌமியும் அவள் கணவனும் குழந்தையுடன் வந்திருந்தனர்.

‘ஹலோ பாரும்மா எங்க இருக்கீங்க..??’

‘இன்னும் பைவ் மினிட்ஸ்டா உள்ளே வந்துட்டு இருக்கேன் ப்ரீத்தி’ என்றவர் வேகமாக விமான நிலையத்தினுள் வர,

ஓடி சென்று அவரை கட்டிக்கொண்ட ப்ரீத்தி ‘எப்படி இருக்கீங்க பாரும்மா’ என்று அவர் கன்னத்தில் முத்தமிட,

அவரும் அவளை வாஞ்சையோடு அணைத்து கொண்டவர் ‘விச்சு உன்னை நல்லா பார்த்துக்கிறானா..??’ என்று அதே கேள்வியை கேட்க,

“ரொம்பவே நல்லா பார்த்துக்குறார் பாரும்மா”

‘சந்தோஷமா இருக்கியாடா..??’

‘உங்களுக்கு என்னை பார்த்தா தெரியலை..?’ என்று ப்ரீத்தி தன்னை ஒரு முறை சுற்றி காட்டி கேட்கவும்,

அவள் முகத்தை ஆராய்ந்தவர் புதிதாக   நிரந்தரமாக குடியேறி இருந்த மிளிர்வும் மகிழ்வையும் கண்டு “தெரியுதுடா… விச்சு சொன்னதை செஞ்சிட்டான் அவன் மேல நான் வச்ச நம்பிக்கை வீண் போகலை” என்றவர் விஷ்வாவை அழைத்து பேசி அவர்களை ஆசிர்வதித்து  இருவருக்கும் விடை கொடுக்க, 

ப்ரீத்தி மகனை மீண்டும் ஒருமுறை வாரி அணைத்து முத்தமிட்டு ‘அடுத்த மாசம் கொஞ்சம் சீக்கிரமாவே வந்துடுங்க அத்தை’ என்று கூறி விடைபெற்று விஷ்வாவின் கரம் கோர்த்து சென்றாள்.

அடுத்த நாள் மாலை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த  விஷ்வா அங்கு காத்திருந்த ஸ்ரீதரிடம் ஹரிணி கொடுத்துவிட்ட பேக்கேஜையும் தங்களின் லக்கேஜையும்  கொடுத்து விட்டவன் ஒரு பெட்டியை மட்டும் எடுத்து கொண்டு ‘பை ஸ்ரீதர்’ என்று மீண்டும் விமான நிலையத்தினுள் நுழைந்தான்.,

என்ன செய்கிறான் என்று புரியாமல் அவனுடன் சென்றவள் ‘தேவ் வீட்டுக்கு போகாம எங்க போறோம் ..??’ என்று அவள்  கேட்டுகொண்டிருக்க,

விமான எண்ணை சரி பார்த்தவன் ப்ரீத்தியிடம் திரும்பி ‘பிளைட்க்கு டைம் ஆச்சு வா’ என்றிட,

‘பிளைட்டா…?? என்ன சொல்றீங்க திரும்ப எங்க போறோம்..??’ என்று அவள் கேட்க..,

தன் நடையை நிறுத்தி அவள் புறம் திரும்பியவன், ‘ஹனிமூன்’ என்று  கண்சிமிட்ட

‘இது எப்போ என்கிட்டே சொல்லவே இல்ல.. எப்படி திடீர்ன்னு..??’

‘உனக்கு சர்ப்ரைஸ்டி இதெல்லாம் சொல்லிட்டா செய்வாங்க..??’ என்று அவன் தொடர்ந்து நடக்க,

 ‘எல்லாமே நீங்களே டிசைட் பண்ணுவீங்களா..??’

“அப்போ ஹனிமூன்க்கு உன்னோட பிளான் என்ன சொல்லு ??” என்று கைகளை கட்டிக்கொண்டு அவளையே திருப்பி கேட்க, 

பதிலின்றி விழித்து நின்றாள்.

இப்படியே பார்த்துட்டு நின்னா பிளைட் கிளம்பிடும் வா என்று அவள் கையை பிடித்து கொண்டு விமானத்தில் விஷ்வா அமர..,

‘எப்போ ப்ளான் பண்ணீங்க..??’ என்றாள் ஆர்வம் தாளாமல்,

‘இங்க இருந்து கிளம்பும் முன்னமே’ என்று அவன் தோள்களை குலுக்க,

“இங்க.. இருந்து கிளம்பும் முன்னாடியேவா..?? எப்படி நாம அங்க தானே” என்று அவனை பார்க்க,

“ஆமா இந்தியால இருந்து வந்ததுமே ரெண்டு வாரம் ஹனிமூன் அப்புறம் மூணு நாள் ரெஸ்ட் தென் காலேஜ்ல ஜாயின் பண்ண போறோம்” என்று கூற,

‘உங்களுக்கு எப்படி..??’

“ஏன்டி காலேஜ் முழுக்க சூசன், மார்கரெட், சம்யுக்தான்னு ஒரு பொண்ணு விடாம எல்லாரையும் மிரட்டி நான் உன் ஆளுன்னு சொல்லிட்டு இருந்தியே அது எனக்கு தெரியாதா என்ன..?? என்று இதழ் மலர அவன் கேட்க, 

“வாட்..??

அவங்க மட்டும் இல்ல ஜான், ராபர்ட்ல இருந்து இன்னும் சில பசங்க வரை எல்லாருக்கும் நீ உயிர் பயம் காட்டினது வரை எனக்கு தெரியும் என்றிட பிரீத்தி முகத்தில் அத்தனை அதிர்வு..

நானே சிலரை கூப்பிட்டு சொன்னேன் ‘டேய் லவ் சொல்றேன்னு போய் உங்க சட்டை கிழிஞ்சா பரவால்ல உன்னையே கிழிச்சிடுவா பார்த்துக்கோங்கடான்னு சிலர் புரிஞ்சிட்டு உயிர் தப்பிச்சானுங்க சிலர் உன்கிட்ட வந்து வாங்கி கட்டிகிட்டாங்க.. என்று அவன் சிரிப்புடன் கூற,

‘இதெல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா..??’

‘எங்க நீ எவனையாவது அடிச்சி வச்சி உன்மேல அக்ஷன் எடுக்குற அளவு போயிடுமோன்னு பயந்துட்டே இருந்தேன்டி அது உனக்கு  தெரியுமா ..??’ என்று கேட்க,

ப்ரீத்தியிடம் அசைவில்லை..

சில நிமிடங்களுக்கு பின் அதிர்வில் இருந்து மீண்டவள், “அப்போ உங்களுக்கு முன்னாடியே  எல்லாம் தெரியும் அப்படிதானே..??” என்று அவனை பார்க்க,

“ஏன் தெரியாம..?? என் பொண்டாட்டியோட சின்ன சின்ன அசைவு கூட எனக்கு அத்துபடி”

“அப்புறம் ஏன் தெரியாத மாதிரி இருந்தீங்க..??” என்று முகத்தை சுருக்க,

“நீயா உன்னோட லவ் சொல்லனும்ன்னு காத்திருந்தேன்டா நாம நம்ம காதலை  சொல்றதை விட மத்தவங்க நம்மள எந்த அளவு காதலிக்கிறாங்கன்னு  அவங்க வார்த்தையால கேட்கிறது தனி சுகம்  இல்லையா..?? அதான் காத்திருந்தேன்” என்று அவன் கூற,

மீண்டும் ப்ரீத்தியின் புருவம் முடிச்சிட்டது.

‘தேவ் அப்போ நீங்க எவ்ளோ நாள் என்று ஆரம்பித்தவள் தலையை குலுக்கி கொண்டு, நீங்க பாடின உயிரே சாங்.. ஏன்..??’ என்று அவள் ஆரம்பிக்கவுமே,

‘ப்ச் ப்ரீத்தி பாட்டு பாடினா அனுபவிக்கனும் இப்படி ஆராய கூடாது’ என்றவன் வேறு பேச்சில் அவளை இழுத்து செல்ல அடுத்த  சில மணிநேரங்களில் கலிபோர்னியா விமானநிலையத்தில் இறங்கி இருந்தனர்.

அங்கிருந்து காரில் அவளை  அழைத்து கொண்டு ‘லேக் டாஹோ’ – Lake Tahoe வந்திருந்தான்.

ஆம் தேனிலவிற்கு என்று அவன் தேர்ந்தெடுத்த இடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ள இடமான லேக் டாஹோ  தான். 

பொதுவாகவே விஷ்வா  இயற்கையோடான தனிமை விரும்பி என்பதால் இவ்விடத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.. இயற்கை எழில் கொஞ்சும் இதன் சூழலில் எத்தனை சஞ்சலம் இருந்தாலும் மனம் அமைதி பெரும். 

வழி நெடுக கண்ணாடி வழியே பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ப்ரீத்திக்கு..!!

விரிந்த விழிகளை மூடும் எண்ணமே இல்லாதவளாக சுற்றிலும் வெண்படலம் போர்த்தி இருந்த பனியும் இயற்கையையும் கண்டு ரசித்து  ஆர்பரித்து கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

அவன் புறம் திரும்பி “எக்ஸ்ட்ராடினரி தேவ் அமேசிங் பிளேஸ்” என்றவள் சாலையோரம் கொட்டிக்கிடந்த பனியில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விளையாடிக்கொண்டு இருப்பதை கண்டவள்,

‘தேவ் தேவ் நிறுத்துங்க’ என்று காரை நிறுத்தியவள் உடனே கீழிறங்க குளிரில் கைகள் விறைக்க, பற்கள் கிடுகிடுக்க தொடங்கி விட்டது…

அப்படி ஒரு குளிர்..!!

அவளருகே வந்தவன், ‘அதுக்குள்ள  உன்னை யார் இறங்க சொன்னா..??’ என்று கேட்டவாறே அவளுக்கு கையுறை அணிவித்து  தலைக்கும் குல்லா அணிவிக்க,

‘இங்க குளிர் அதிகமா இருக்கே தேவ் ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட்’ என்று இரு கைகளையும் தேய்த்து கொண்டே விழிகளை சுழல விட்டாள்.

ப்ரீத்தி அமெரிக்க சீதோஷன நிலைக்கு பழகி இருந்தாலும் இங்கு குளிர் மைனசில் இருக்க உடனே அதற்க்கு பழக முடியாமல் சில நொடிகள் திண்டாடியவள்,

‘நீங்க இதுக்கு முன்ன இங்க வந்திருக்கீங்களா..??’ என்றாள்

‘ஆமா படிக்கும் போது பிரெண்ட்ஸ் கூட வந்திருக்கேன் பட் அப்பவே என்னோட ஹனிமூன் இங்க தான்னு டிசைட் பண்ணிட்டேன் உன்னோட கைகோர்த்து இங்க சுத்தனும்ங்கிறது என்னோட பல வருஷ கனவு’  என்று அவன் கூறிக்கொண்டிருக்க ப்ரீத்தியின் கவனத்தை அங்கிருந்த குழந்தைகள் ஈர்த்திருந்தனர். 

அவள் அங்கிருந்த குழந்தைகள்  பனியில் சறுக்கி கொண்டிருப்பதை கண்டு நாமும் அதுபோல சறுக்கலாம் என்று கேட்க,

அவன் மனைவி கேட்டு மறுப்பது என்பது விஷ்வாவின் அகராதியிலேயே கிடையாதே என்பதால் உடனே அவளோடு சேர்ந்து பனியில் சறுக்கி விளையாட தொடங்கி விட்டான்.

முதலில் அவனோடு சேர்ந்து சென்றவள்  பின் தனியாக அதன் பின் அவனோடு போட்டிபோட்டு கொண்டு என்று மகிழ்ச்சியும் ஆரவரமுமாக இருவருமே மருத்துவர்கள் என்பதை மறந்து அந்தளவு பனியில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்.

பின் இருவரும் சேர்ந்து பனி சிற்பங்கள் செய்கிறோம் என்று பெயரில் ஒருவர் மீது ஒருவர் பனியை வாரி இறைந்து என்று ஒரு மணிநேரம் அங்கேயே செலவிட்டவர்கள் அதன் பின் அவர்கள் காட்டேஜிற்கு சென்றனர்.

உள்ளே நுழைந்தவள் ஒவ்வொரு அறையாக சுற்றி பார்த்து கொண்டு வந்தவள் அவர்களின் படுக்கையறையோடு ஒட்டி இருந்த விஸ்த்தாரமான நீச்சல் குளத்தை கண்டு ஆச்சர்யத்தில் அப்படியே நின்று விட்டாள்.

ஆம் அவர்கள் அறையோடு ஒட்டிய நீச்சல் குளத்தின் மேல் புறம் முழுக்க கண்ணாடியால் மூடப்பட்டு இருக்க அதை ஒட்டிய ஒரு பக்க சுவரும் கண்ணாடியால் ஆனதே..!! அதன் வழியே பார்த்தால் டோஹா ஏரியின் மொத்த அழகும் கண்களுக்கு விருந்தாக அமையும் படி வடிவமைத்து இருந்தனர்.

‘பிடிச்சிருக்கா..??’ என்று அவளை கேட்க,

“பென்டாஸ்டிக் பிளேஸ் தேவ்..!! எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு” என்றவளை அழைத்து கொண்டு இரவு உணவை முடித்து கோர்த்த கரங்கள் பிரியாமல் அறைக்கு திரும்பியவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு அறையை விட்டு வெளியேறும் எண்ணமே இல்லாமல் சேர்த்து வைத்த காதலை பரிமாறி நொடி நேரமும் அகலாமல் ஒருவரில் ஒருவர் திளைத்து ஒருவரை மற்றவர் கொண்டாடி தீர்த்தனர்.  

*******************************

நீச்சல் குளத்தின் எதிரே அமர்ந்து இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க விஷ்வா அவளிடம்,

‘ப்ரீத்தி உன்னோட விரலை கொஞ்சம் கொடு’ என்று கேட்க,

‘எதுக்கு..??’

‘தேங்க்ஸ் சொல்லணும்டி’

‘விரலுக்கா..??’ என்று அவள் தோய்ந்து போன குரலில் கேட்க,

‘விரலுக்கு இல்லை அதுல இருக்க நகத்துக்கு..!!’ 

‘வாட்’ என்று நாசி விடைக்க அவனை பார்த்தவள்,

‘தேவ் திஸ் ஈஸ் டூ மச் நகத்துக்கு தேங்க்ஸ்சா..?? ‘ என்று அவனை முறைக்க,

‘இல்லையா பின்னே இங்க பாரு என்று தான் போட்டிருந்த ஆரம்கட் பனியனை விலக்கி தன் நெஞ்சை, புஜத்தை சுட்டி காட்டியவன் முதல் முறையா எவ்ளோ அழகா ஓவியமே வரைஞ்சு வச்சிருக்கு அதுக்கு தேங்க்ஸ் சொல்லாம எப்படிடி …??’ என்றதுமே பொங்கி விட்டாள் ப்ரீத்தி.

இருக்கையில் இருந்து எழுந்தவள் “என்ன நீங்க கொஞ்சம் விட்டா எப்ப பாரு முதல் முறை முதல் முறைன்னு சொல்லிட்டு இருக்கீங்க… நீங்க கூட தான் என்னை முதல் முறை கிஸ் பண்ணினீங்க நா..” என்றவளை இடையிட்டவன்,

‘எங்கன்னு தெளிவா சொல்லுடி..??’ என்றான் எழுந்த புன்னகையை மீசைக்கடியில் பதுக்கி,

“எங்கன்னா..?? எங்கன்னு சொல்றது.., எல்லா இடத்துலயும் தான்..! இதோ பாருங்க என்று அவள்  உள்ளங்கையை அவன் முன்நீட்டியவள், இதோ இங்க  முதல் முறை கிஸ் பண்ணினது நீங்க தான் அடுத்து என்று அவள் கன்னக்கதுப்பை சுட்டிகாட்டியவள் அதை தொடர்ந்து நெற்றி, காது, மூக்கு, இதழ்கள் என்று விரலால் சுட்டி காட்டி  இப்படி என்னை முதல் முறை நீங்க கிஸ் பண்ணினதை சொல்லிட்டே போகலாம்.., ஆனா நான் என்ன உங்களை மாதிரி அதையேவா சொல்லிட்டு இருக்கேன் ஆனா நீங்க எப்ப பார்த்தாலும் இப்படி..” என்றவளுக்கு மூச்சு வாங்க ப்ரீத்தி தன் பேச்சை நிறுத்தி மூச்சை எடுத்து ஆழமாக வெளியேற்ற,

விஷ்வாவோ அப்போதும் அடங்காமல்,’என்ன நிறுத்திட்ட லிஸ்ட்ல இன்னும் நிறைய இடம் இருக்கே’ என்று கண்களில் புன்னகையுடன் எடுத்து கொடுக்க, 

‘தேவ் இப்போ என்கிட்டே அடி வாங்க போறீங்க..??’ என்று அவள் சுட்டுவிரல் நீட்ட அவனோ சாவதானமாக அதை பற்றியவன் அவள் நகக்கண்ணில் முத்தமிட உடனே தன் கையை இழுத்து கொண்டவள்,

“வர வர உங்க அழிச்சாட்டியம் அதிகமாகிட்டே போகுது என்ன பேச்சு பேசுறீங்க..??” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே விஷ்வா அவள் காதில் ‘என்னடி இது இந்த இடத்தை  விட்டுட்ட’ என்று சரசமாக பேசி அவளை சீண்ட அவ்வளவு தான்  ப்ரீத்தி அவனை பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளி விட்டிருந்தாள்.

‘ப்ரீத்தி எனக்கு நீச்சல் தெரியாது காப்பாத்து’ என்று தண்ணீரில் இருந்து மூழ்கி மேலே வந்தவன் கூற அதை நம்புவதற்கு தான் ப்ரீத்தி தயாராக இல்லை.

ஆனாலும் அவன் தத்தளிப்பதை கண்டு ப்ரீத்தி  குளத்தின் அருகே வர, “நான் எங்க அம்மா அப்பாக்கு ஒரே பையன்டி  ப்ளீஸ் காப்பாத்து” என்று இருகைகளையும் வேகமாக தண்ணீரில் அடித்திட,

“ஐயடா..!! உங்களுக்கு நீச்சல் தெரியாது இதை நான் நம்பனுமா..?? போங்க என்னை ஏமாத்த முடியா..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே  மின்னலென அவளருகே வந்தவன் அவளை நீரில் இழுத்து விட்டிருந்தான்.

தொப்பென தன்னருகே விழுந்தவளை மேலெழுந்ததும் அவனோடு சேர்த்து கட்டி  கொண்டவன்,

‘ஏன்டி புருஷன தத்தளிச்சிட்டு இருக்கேன்  உடனே வந்து காப்பாத்துவன்னு பார்த்தா நம்பாம என்னையே கேள்வி கேட்டு பேசிட்டே போற நீ ..?? என்று அவள் இதழை முற்றுகையிட, 

அவனிடம் இருந்து இதழ்களை மீட்டு, ‘தேவ் என்ன பண்ணி இருக்கீங்க என்னோட ஜாக்கெட் ஸ்பாயில் ஆகிடுச்சி’ என்று அவள் குறைபட,

“புருஷனை விட இது உனக்கு முக்கியமாடி..??” என்று கேட்டுக்கொண்டே அவன் அதை கழற்றி வீசிட.

அதை கண்டு ‘தேவ்’ என்று முறைத்திருந்தாள் ப்ரீத்தி.

“ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் இருந்தவளிடம் இப்போ சொல்லு என்னை விட உனக்கு வேறு எதெல்லாம் முக்கியம்ன்னு”  என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டவனை ஒரு நொடி புரியாமல் பார்த்தவள்,

பின் ‘யூஊஊ’ என்று அவன் நெஞ்சில் அறைய, அவள் கையை பிடித்து முத்தமிட்டு கொண்டே,

‘உன்  டாப்சும் ஸ்பாயில் ஆகிடுச்சிடி அதுக்கு  ஒன்னும் சொல்லலை..’ என்று கேட்டவனின் மறுகரம் அவளிடையில் அழுத்தமாக படிய,

அவன் கையை  பற்றி கொண்டவள், “உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை போதுமா..??” 

‘அப்புறம் எதுக்கு இதெல்லாம்..??’ என்று அவன் கேட்க 

‘எதெல்லாம் ..??’ என்று புரியாது அவள் பார்க்க, 

“இதோ இதெல்லாம்” என்றவனின் கரம் அவள் ஆடையில் படியவும் 

ப்ரீத்தி விரிந்த விழிகளுடன் அவனை பார்த்தவள் , “ஆளை விடுங்க” என்று வேகமாக அவனிடம் இருந்து விடுபட்டு நீத்த தொடங்கினாள்.

விஷ்வா விடாமல் அவளை பின்னே துரத்த, அதில் ப்ரீத்தியின் வேகம் அதிகரித்தது அவள் பின்னே வந்து கொண்டிருந்தவனோ சட்டென நீரினுள் மறைந்திருந்தான்.

திரும்பி பார்த்தவள் அவனை காணாமல் தேட அதற்குள் அவளை தன் தோளில் தூக்கி கொண்டு நீரின் மீது வந்திருந்தான். 

அவன் தூக்கிய வேகத்தில் தடுமாறினாலும் ‘என்ன பண்றீங்க விடுங்க’ என்றவளோடு சேர்ந்து நீரில் விழுந்தவன் மீண்டும் காணமல் போக..,

ப்ரீத்தி முகத்தில்  வழிந்த நீரை வழித்து விட்டு, ‘தேவ் உங்க விளையாட்டுக்கு அளவே இல்லை எங்க இருக்கீங்க..?? என்று கேட்டவள் தானும் நீரினுள் மறைய அவளை பின்னே இருந்து அணைத்த விஷ்வதேவ் ஜலக்கிரீடை புரிய தொடங்கி விட்டிருந்தான்.

எத்தனை மணி நேரம் நீந்தினார்கள் என்று கணிக்க முடியாதளவு இருவரும் உடலும் மனமும் மிதக்க நீரில் மிதந்து கொண்டிருந்தனர்.

விஷ்வா கண்ணாடியினூடே ஏரியை பார்த்து கொண்டிருக்க அவன் பின்னே வந்து கட்டிக்கொண்ட ப்ரீத்தி

‘மோஸ்ட் பியூட்டிபுல் பிளேஸ் தேவ்’ என்றாள் தானும் கண்ணாடி வழியே பார்த்தவாறு..,

‘இந்த வியூ விட நாளைக்கு உனக்கு பெட்டர் வியூ காட்டுறேன்டா இன்னும் பிடிக்கும்’ என்று தன் நெஞ்சில் இருந்த அவள் கரத்தை பிடித்து விரல்களுக்கு சொடக்கிட்டவன், 

‘ஆர் யூ ஹாப்பி’ என்றான் 

‘சோ மச்.. நோ வோர்ட்ஸ் டு டிஸ்க்ரைப் மை ஹாப்பினெஸ் தேவ்’ என்றவள் அவன் முதுகில் முகம் பதித்து இன்னும் இறுக்கமாக அவனை கட்டிக்கொண்டு இருந்தாள்.

Advertisement