ஜமுனாவிற்கு அவ்வளவு அதிர்ச்சி. ஒரு வருடம் இதற்காக படித்து கொண்டிருக்கிறாள். அடுத்த வாரம் எக்ஸாம் எனும் நிலையில் இப்போது வந்து வெகு சாதரணமாக, வேண்டாம் சொல்கிறார். கோவம், ஆதங்கம். விட்டுவிடமுடியாதே..? கனவுகுறிக்கோள்ஆயிற்றே! “நான்எழுதுறேன்மாமா.. பார்த்துக்கலாம்..” என்றுமுடித்துவிட்டாள்.
ஒருவழியாகயுவராஜ்வேலைகள்முடிவுக்குவர, அவன், அவனுடையடீம்ஆட்களுடன் UK செல்லும்நாள்வந்தது. அங்குதான்அவர்களின்ஹெட்ஆபிஸ்இருந்தது. ஜமுனாவின்ரிசல்ட்டும்வந்துவிட, அவள்கோவத்தைமறந்துகணவனுக்குஅழைத்துசொல்ல, அவன் “ஊருக்கு வந்து பேசுறேன்..” என்று வைத்தான்.
ஜமுனாவிற்கு ஏமாற்றத்துடன், கலக்கமும். படிக்க முடியாதோ..? அவள் கலக்கம் சரி என்பது போல ஊருக்கு வந்த யுவராஜ், “இந்த வருஷம் முடியாது ஜமுனா..” என்றான் உறுதியாக.
அவன் உறுதியில் இவரை ஒத்துக்கொள்ள வைக்க முடியாதோ அச்சம் நெஞ்சை கவ்வியது. “ஒரு வருஷம் இதுக்காக கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன் மாமா, இப்போ வந்து முடியாது சொன்னா எப்படி..? என்றாள் கெஞ்சலாகவே.
“நான் எக்ஸாம் எழுத போகுமுன்னே உனக்கு சொன்னேன் ஜமுனா..” யுவராஜ் அழுத்தமாக சொல்ல
“அடுத்த வாரம் எக்ஸாம் வச்சுட்டு சொன்னா என்னால எப்படி மாமா விடமுடியும்..? உங்களுக்கு தெரியும் இல்லை என்னோட கனவு இது, டச் விட்டு போச்சுன்னா திரும்ப படிக்க எனக்கு கஷ்டமா இருக்கும், இப்போ என்ன நமக்கு பணம் தானே பிரச்சனை, அப்பாகிட்ட நான்..”
“நோ.. இதை மனசுல வச்சுக்கிட்டு தான் எக்ஸாம் எழுதினியா ஜமுனா..” யுவராஜ் கோவம் அவன் தாடை இறுக்கத்தில் தெரிந்தது.
“மாமா கடனா வாங்கி..”
“எத்தனை இடத்துல என்னை கடன்பட சொல்ற, இந்த ஒரு வருஷம் போகட்டும், அடுத்த வருஷம் படிக்கலாம்..”
“ஜமுனா இப்போ இருக்கிற நிலையில யாராவது ஒருத்தரை தான் பார்க்க முடியும், விட்டுடு, உன்னோடது அடுத்த வருஷம்தான்..” முடிவாக சொன்னான்.
ஜமுனா கோபத்துடன் அவள் கண்களில் கண்ணீரும் இறங்க, “இதுக்கு தான் நான் முதல்லே உன்னை எக்ஸாம் எழுதாத சொன்னேன், நீ எக்ஸாம் எழுதிட்டு வந்து இப்போ என்னை கார்னர் பண்ற, பிரஷர் கொடுக்கிற, உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை..”
“உங்க கனவு, உழைப்பு மாதிரி தானே என்னதும் மாமா..” ஜமுனா நிதானமாக கேட்க,
“இப்போ என்ன நான் சுயநலமா இருக்கேன்னு சொல்றியா..?” என்றான் யுவராஜ் பொங்கிவிட்ட கோபத்துடன்.
ஜமுனா பார்வையில் ஆம் என்று அழுத்தமாக காட்டியவள், “நீங்க என் மாமாவே இல்லை..” என்றாள் நேருக்கு நேர் வார்த்தைகளுக்கு அழுத்த கொடுத்து. அவளின் குரலில் தெரிந்த விலகல், கணவனுக்கு தாங்கவே முடியவில்லை.
முதல் முறை மனைவி அவனிடம் இப்படி பேசுகிறாள். அவளின் விலகலை ஏற்று கொள்ள முடியாமல் அவளை இழுத்து அணைத்து, ஆழ்ந்து, ஆவேசமாக, முத்தமிட்டவன், “இனி உன் வாய்ல என்னை இப்படி சொன்ன பார்த்துக்கோ..?” என்று கன்னம் பிடித்து அழுத்தி மிரட்டினான். அவன் நெஞ்சை அழுத்தியது.
அவனின் மிகப்பெரிய பலவீனம் இவள். அவ்வளவு பிரச்சனையிலும் இவள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று தான் இந்த அவசர திருமணமே. இவளானால் படிப்பிற்காக என்னை தள்ளி வைக்க பார்க்கிறாளா..? இருவருக்கும் கோவம் இருந்த இடத்தில் பரிதவிப்பும், வலியும். முதல் முறை பெரிதான விரிசல் அங்கு விழ ஆரம்பித்தது.