Advertisement

அத்தியாயம் 19

ஏமாற்றம் என்ற வலி

தருவதும் காதலே, வலிக்கு

மருந்திடுவதும் காதலே!!!

சரவணன் அங்கே வந்த போது தன்னையே மறந்து குளித்துக் கொண்டிருந்தாள் வெண்மதி. அவளைக் கண்டதும் இந்த உலகமே சரவணனுக்கு மறந்து போனது. மனைவியின் அந்த அழகில் கவரப் பட்டான் சரவணன். 

இங்கிருந்து போ டா என்று அவனது மூளை சொன்னாலும் அவள் எனக்கு சொந்தமானவள், அவளைப் பார்க்க எனக்கு உரிமை இருக்கிறது என்று சட்டம் பேசியது அவன் மனது. 

கண்ணாடி போல இருந்த தண்ணீரில் அவளது கை, கால், கழுத்து என்று தெரிய அவள் வெண்ணிற தேகத்தைக் கண்டவன் எச்சில் விழுங்கிக் கொண்டான். லேசான வெயிலின் தாக்கத்தில் அவள் தேகம் பளபளவென்று மின்னியது.

இதயம் தாறுமாறாக துடித்து மூச்சை அடைப்பது போல இருந்தது சரவணனுக்கு. அவன் யோசனையும் அவன் பார்வையும் தாறுமாறாக அவள் மேனியில் பயணிக்க அவளை இன்ச் பை இஞ்சாக ரசித்தான். அவள் அழகில் அவன் ஆண்மை விழித்துக் கொண்டது. அவள் வேண்டும் என்று அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஏங்கியது. அவளது தோற்றம் அவன் மனதை நிறைத்தது.

உணர்வுகளின் தாக்கத்தில் அவன் முகத்தில் வியர்வை அரும்பியது. பதட்டமாக இருந்தான். எங்கே அவனைக் காண வில்லை என்று எண்ணி திரும்பி பார்த்தவள் தன்னையே பார்த்த படி இருந்தவனைக் கண்டு திகைத்தாள். கூடவே அவன் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டாள். அப்போதும் அவனிடம் இருந்து பதிலே இல்லை.

அவன் பார்வை அவள் மேனியில் நழுவ அதை கண்டு அதிர்ந்து போனாள். நெஞ்செங்கும் சில பல காதல் பூகம்பங்கள் அவளுக்குள் எழுந்தது. அவன் கண்களில் போதை அதிகரிக்க அதற்கு மேல் அவனைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள். 

“நான் மேல வரேன், வீட்டுக்கு போகலாம்”, என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லி விட்டு அவள் தொட்டிக்குள் இருந்து வெளியே வரப் பார்த்தாள். “ஏய் அங்கயே இரு டி, வெளிய வராத”, என்று சொன்ன சரவணன் அடுத்த நொடி அந்த தொட்டிக்குள் குதித்திருந்தான். 

“பாத்து”, என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க அவனோ வேகமாக அவளை நெருங்கி விட்டான். மோட்டாரில் இருந்து தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்க அவள் ஒரு ஓரமாக குளித்துக் கொண்டிருந்தாள். 

அவன் பார்வை அவளையே மொய்க்கவும் “உங்க பார்வையே சரி இல்லை. நான் போறேன். நீங்க குளிங்க”, என்று சொல்ல “சரி சரி நான் எதுவும் செய்யலை. சந்தோஷமா குளி. எதுக்கு ஓரமா நின்னுட்டு இருக்க? இங்க வா. இந்த இடத்துல தலையை வை. இவ்வளவு போர்சா தண்ணி பட்டா தலையில மசாஜ் பண்ணுற மாதிரி இருக்கும்”, என்று சொன்னவன் அவளுக்கு குளிக்கச் சொல்லிக் கொடுத்தான். 

சிறிது நேரம் இருவரும் தண்ணீரில் விளையாடிய படியே குளித்தார்கள். மணி ஆறரை ஆகி விட்டது என்பதால் “நேரம் ஆச்சு, போகலாங்க”, என்று சொல்லி அந்த படியில் கால் வைத்து வெளியே செல்லப் போனாள் வெண்மதி. ஆனால் அவளால் செல்ல முடியவில்லை. சரவணன் அவள் கையைப் பற்றி இருந்தான். 

அவனை நிமிர்ந்து பார்த்தவளை அவன் கண்களில் வழிந்த தாபம் உலுக்கியது. 

“பிளீஸ் விடுங்க“, என்று தனக்கே கேட்காத வகையில் முணுமுணுத்தாள் 

அவன் பார்வையோ இது வரை அவன் பார்த்து ரசித்த இடங்களில் சென்று மீண்டது. அவனின் பார்வை தன்னவள் என்று உரிமையாக அவள் மீது படிய அவள் தான் தவித்து போனாள். அந்த வெண்ணிறப் பாவாடை வேறு அவளுக்கு துரோகம் செய்து கொண்டிருந்தது. 

அங்கிருந்து செல்லவும் முடியாமல் அதே நேரம், அவன் முன்பு இந்த கோலத்தில் இயல்பாக இருக்கவும் முடியாமல் திணறினாள். ரத்தம் எல்லாம் சூடாகிப் போன உணர்வு இருவருக்குமே எழுந்தது. தண்ணீருக்குள் இருந்தாலும் உடல் எல்லாம் தகித்தது.

மாலை மங்கிய வேளை வந்ததும் “போகலாம் மதி, இன்னும் இருந்தா இருட்டிரும்”, என்றான்.

நீரில் நனைந்ததால் உடை உடலோடு ஒட்டி இருக்க “நீங்க முதல்ல வெளிய போங்க”, என்றாள். 

“ஏன்?”

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு”

“ஏன்? நான் பாக்க கூடாதா?”, என்று அவன் கேட்க உதடு கடித்தாள். 

அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க அவன் மேல் வந்து விழுந்தாள். அவன் கரங்கள் இறுக்கமாக அவளை வளைத்துக் கொண்டது. அவனது அதிரடியில் மிரண்டு போனாள் வெண்மதி.

தன்னை மறந்து அவளுடைய இதழ்களைச் சிறை செய்தான் சரவணன். முதலில் திகைத்தாலும் பின் அவனது இதழ் தீண்டலை ஆழ்ந்து அனுபவித்தாள். இருவருக்குமே அந்த முத்தம் உள்ளுக்குள் ஒரு பரவசத்தைக் கொடுத்தது.  

சிறிது நேரம் கழித்து அவளை விட்டு விலகியவன் “உனக்கு பிடிச்சிருக்கா டி?”, என்று கேட்டான். அவன் எதைக் கேட்கிறான் என்று கூட அவளுக்கு தெரிய வில்லை.

அவனும் எதற்கு கேட்டான் என்று கூட தெரியவில்லை. முற்றிலும் தன்னிலை மறந்து இருந்தான் சரவணன். மோகமும் காதலும் கட்டுக்கடங்காமல் பெருகியது அவனுக்குள். அவளை வேகமாக இழுத்து அனைத்து அவள் முகம் எங்கும் முத்தமிட்டான்.

“இருட்ட போகுது”, என்று முணுமுணுத்தாள் வெண்மதி. அது உண்மை என்பதால் தொட்டியில் இருந்து மேலே ஏறியவன் அவள் மேலே வருவதற்கு கையைக் கொடுத்தான். அவன் கையைப் பற்றி மேலே ஏறி வந்தாள் வெண்மதி.

“உன் டிரஸ் எல்லாம் போய் மாத்திட்டு வரியா? அப்படியே லெப்ட் சைட்ல மோட்டார் ஸ்விட்ச் இருக்கும். அதையும் நிப்பாட்டிரு”

“ம்ம்”, என்று சொல்லி விட்டுச் சென்றவள் ஸ்விட்சில் கை வைத்தாள். அது ஷாக் அடிக்க அடுத்த நொடி ஆ என்று கத்தினாள்.

“என்ன ஆச்சு மதி?”, என்ற படி பதறி ஓடிப் போனான். 

“ஸ்விட்ச் ஷாக் அடிக்குது”

“ஐயோ, ஈரத்தோட தொட்டுட்டியா? தண்ணி பட்டா ஷாக் அடிக்கும். சொல்ல மறந்துட்டேன் பாரு. அப்பா கிட்ட சொல்லி இதை மாத்தணும். இரு வரேன்”, என்று சொன்னவன் வேகமாக அருகில் கிடந்த கட்டையால் மோட்டாரை நிறுத்தினான். பின் அந்த அறையின் விளக்கைப் போட்டான்.

விளக்கின் வெளிச்சத்தில் அவளது அழகு இன்னும் பூரணமாய்த் தெரிய அவளையே பார்த்தான்.

“நீங்க சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வெளிய இருங்களேன். நான் டிரஸ் மாத்தணும்”, என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.

அவனுக்கோ அவளை விட்டு அங்கிருந்து செல்லவே முடியவில்லை. ஈரக் கூந்தல் அவள் மார்பில் தவழ்ந்து அவள் அழகை மறைத்திருந்தாலும் ஏனோ அந்த தோற்றத்தில் கந்தர்வ கன்னி போல இருந்தாள் அவன் மனைவி.

இத்தனை நாள் காத்திருந்தவனுக்கு இந்த நிமிடமே அவள் வேண்டும் என்ற தாகம் எழுந்தது. அவன் தன்னையே பார்க்கவும் அவள் தலை குனிந்து கொண்டாள். அவள் தடுமாற்றம் அவன் தயக்கத்தை விரட்ட அடுத்த நொடி கதவை அடைத்து தாழ் போட்டவன் நிதானமாக அவளை நெருங்கினான். 

“வீட்டுக்கு போகலையா?”, என்று நடுக்கத்துடன் கேட்டாள் வெண்மதி. 

“கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்”, என்று சொல்ல அவளுக்குமே அலையலையாய் எதிர்பார்ப்புகள் கிளர்ந்தது. அவள் அருகே வந்து அவள் மேல் உராய்ந்த படி இருக்க அவளுக்கு தீப் பற்றிக் கொண்டது போல இருந்தது.

அவன் கை உயர்ந்து அவளது இடையை மென்மையாய் அணைத்து பிடித்தது. அவளுடைய முகத்தில் அவனுடைய மூச்சுக் காற்றின் வெப்பம் மோதியது. 

அவனது இதழ்கள் தயக்கத்துடன் அவள் தோளில் பதிய அவன் மூச்சுக் காற்றின் வெப்பமும் இதழ்களின் வெப்பமும் அவளுக்குள்ளும் கனலை மூடியது.

“என்னங்க… வீட்டுக்கு…”, என்று அவள் உதடுகள் முணுமுணுக்க “போகலாம் மெதுவா”, என்று சொன்னவன் அவளை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்து அவள் அருகே அமர்ந்தான்.

அவள் படபடப்புடன் இருக்க அவன் உதடுகள் இப்போது அவளது கன்னம், காது, கழுத்து என்று ஊர்வலம் போக ஆரம்பித்தது. அவன் செய்கையால் எழுந்த தாக்கத்தில் அவனது வெற்று தேகத்தில் தன்னுடைய நகக் கண்களைப் பதித்தாள். 

இப்போது அவனது இதழ்கள் அவளுடைய இதழ்களை தஞ்சம் அடைந்தது. அந்த இதழ் தீண்டலில் முழுவதுமாக கரைந்தாள் வெண்மதி. அவளை அப்படியே அங்கிருந்த வயர் கட்டிலில் சரித்து அவன் அவள் மேல் சரிய அவள் கரங்கள் அவன் கழுத்தில் மாலையானது. 

அவன் எண்ணம் புரிய “வீட்டுக்கு போய்றலாமா? இங்க வேண்டாமே”, என்று கேட்டாள். ஒரு பாதுகாப்பின்மை அவள் மனதை கவ்வுவதை உணர்ந்தவன் “நான் இருக்குறப்ப என்ன பயம்? எனக்கு வீட்டுக்கு போற வரைக்கும் பொறாமை இருக்கும்னு சொல்ல முடியாது. எனக்கு நீ இப்பவே வேணும் டி”, என்றான்.

அதற்கு மேல் அவள் எப்படி மறுப்பாளாம்? மீண்டும் அவள் இதழ்களைச் சுவைத்ததும் அவளது எதிர்ப்புகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளாக மாறிப் போனது.

அவன் கைகள் முதல் முறையாக அவள் மேனியில் சுதந்திரமாக பயணிக்க அவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவன் சந்தோஷமாக அவளை ஆக்ரமிக்க அவளும் முழு மனதுடன் அவனுடன் கலந்தான். இவன் என்னவன் என்று அவள் மனம் பூரித்து போனது.

அவனுடைய ஆலிங்கனத்தில் களைத்து படுத்திருந்த அவள் முகத்தில் ஒட்டி இருந்த ஈர முடிக்ளை விலக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

Advertisement