Advertisement

அத்தியாயம் 14

ஒரு நாள் நானும் சுமந்தேன் 

காதல் என்னும் சிலுவையை!!!

     மதியின் போனைக் கண்டு சிரிப்புடன் அதை எடுத்த ரிஷி “சொல்லு பேபி, என்ன இன்னைக்கு இவ்வளவு ஆச்சர்யமெல்லாம் நடக்குது? நீயே எனக்கு கால் பண்ணிருக்க?”, என்று கேட்டான்.

     “நான் உன் கிட்ட பேசணும் ரிஷி”

     “பேசு, நீ பேச தானே நான் காத்துருக்கேன். உன் குரலைக் கேட்டாலே ஒரு மயக்கம் வருது டி”

     “நான் உன்னை நேர்ல பாக்கணும். எங்க வரட்டும்?”

     “என்னை ஏதாவது மாட்டி விட பிளான் பண்ணுறியா?”

     “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கு நீ நந்தினியை கல்யாணம் பண்ணக் கூடாது”

     “அதுக்கு வாய்ப்பே இல்லை”

     “பிளீஸ், என்னால போராட முடியலை. அதான் உன் கிட்ட கெஞ்சுறேன்”

     “நீ கெஞ்சுறதும் பாவமா தான் இருக்கு. சரி நீ ஒரு விஷயம் பண்ணினா நானே இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்”

     “என்ன பண்ணனும்?”

     “எனக்கு ஒரு நாள் நீ வேணும்”

     “ரிஷி”

     “நீயா வா. இல்லைன்னா கல்யாணம் முடிஞ்சு நானே உன்னை எடுத்துக்குவேன்”

     “சரி நானே வரேன். நந்தினியை விட்டுரு”

     “ரொம்ப சந்தோஷம் சீக்கிரம் வா. நான் இப்ப சும்மா தான் இருக்கேன்”

     “எங்க வரணும்?”

     “என்னோட கெஸ்ட் அவுஸ் வரியா? லொகேஷன் அனுப்புறேன்”

     “சரி வரேன்”, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒரு செயினை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டாள். அது கேமரா பொருத்திய செயின். அவன் வாயாலே அவனை உண்மையைச் சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணினாள். கூடவே ஒரு கத்தியையும் இடுப்பில் சொருகிக் கொண்டாள். பின் அவன் அனுப்பிய இடத்துக்கு காரைச் செலுத்தினாள். அவளைப் பின் தொடர்ந்து சென்றார் முத்துராஜ்.

     அதே நேரம் ஆதியை அழைத்தார் சுந்தரேஸ்வரர். “சொல்லுங்க மாமா, மதி கிளம்பிட்டாளா?”, என்று கேட்டான்.

     “கிளம்பிட்டா மாப்ள. அவ பேசினதை உனக்கு அனுப்பிருக்கேன். என்னன்னு நீயே தெரிஞ்சிக்கோ”

     “சரி மாமா, நான் இன்னும் பாக்கலை. கேட்டுக்குறேன்”

     “அப்புறம் ஆதி, மதி அருமையான பொண்ணு. கடைசி வரை கெட்டியா பிடிச்சிக்கோ. உனக்கு நான் இதைச் சொல்லனுமா? பொண்ணை நீயே முடிவு பண்ணி லவ் பண்ணிட்டு அதை அரெஞ்ச் மேரேஜா ஆக்கிட்டு இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்த பயலாச்சே நீ?”, என்று அவர் சிரிக்க அதிர்ந்து போனான்.

     “மாமா இது… நீங்க.. உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்கும் போதே அவன் முகம் சிவந்து போனது வெட்கத்தால்.

     “அதான் ரெக்கார்டிங் அனுப்பிருக்கேன்ல? நீயே கேளு”, என்று சொல்லி போனை வைத்ததும் “என்னத்த டி சொல்லித் தொலைச்ச? ஆனா இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?”, என்று குழம்பியவன் ஆர்வமாகவே அதை கேட்க ஆரம்பித்தான்.

     அவள் பேச்சைக் கேட்டு அவன் முகம் மலர்ந்தே இருந்தது. தந்தைக்கு இந்த விஷயம் தெரியும் என்று அவள் சொல்லி இருந்ததைக் கேட்டவனுக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தாலும் “இவளுக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனா ரெண்டு பேருமே ஏன் என் கிட்ட கேக்கலை? முதல்ல இதை யார் சொல்லிருப்பா? தரகர் தான் சொல்லிருப்பார்”, என்று எண்ணிக் கொண்டான்.

     பின் மதி கல்யாணம் விஷயம் பேசி இருப்பது அவனுக்கும் திருப்தியாக இருந்தது. தந்தை சரி என்று சொல்லாவிட்டாலும் தான் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி கொண்டு வேலையைப் பார்க்கும் போது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

     அதை எடுத்து “சொல்லுங்க செந்தில்”, என்றான்.

     “ஆதி சார், மேம் போனை டிராக் பண்ணினோம். அவங்க இப்ப ரிஷியைப் பாக்க போயிருக்காங்க”

     “ஓ காட் அவனை தனியா பாக்க போறாளா? அவன் கொடூரமானவனாச்சே. சரி நீங்க உங்க ஆட்களை அனுப்புங்க ஏ. சி. பி சார். எப்படியும் அவனை அரஸ்ட் பண்ணனும் தானே? ஆனா லீகலா இருக்க வேண்டாம். அரஸ்ட் பண்ணி உங்க கஷ்டடில வைங்க. நானும் வந்துறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் முத்துராஜை அழைத்தான்.

     “சொல்லுங்க சார்”

     “மதியை பாலோ பண்ணுறீங்க தானே?”

     “ஆமா சார், பின்னாடியே தான் போய்க்கிட்டு இருக்கேன்”

     “மதி ரிஷியை பாக்க போறா. நீங்க அவ பின்னாடியே போங்க. நாங்களும் இப்ப வந்துருவோம்”, என்றவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். மதி அந்த சின்ன பங்களாவுக்குள் செல்ல முத்துராஜ் வெளியேவே நின்று கொண்டார்.

     மதி வீட்டுக்குள் சென்ற போது சோபாவில் அமர்ந்திருந்த ரிஷி “வா பேபி, சேலைல இன்னைக்கு ரொம்ப கியூட்டா இருக்க? அழகு பேபி நீ. ப்ச் நான் தான் மிஸ் பண்ணிட்டேன். உன்னை அடையணும்னு நினைக்காம ஆளணும்னு நினைச்சிருக்கணும். அப்படி நினைச்சிருந்தா உன் அப்பனை ஏமாத்தி உன்னை ஈஸியா கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா உன்னை படுக்க கூப்பிட்டு எல்லாம் சொதப்பிட்டேன். இல்லைன்னா இந்நேரம் நீ என் பொண்டாட்டியா இருந்திருப்ப. உன்னை ஆட்டி படைச்சிருப்பேன்”, என்று சொல்லி வக்கிரமாக சிரித்தான்.

     மனதுக்குள் திக்கென்று இருந்தது மதிக்கு. தைரியமாக வந்து விட்டாள் தான். ஆனாலும் எப்படி தப்பிக்க என்று பயமாக தான் இருந்தது.

     அவன் எழுந்து அவளை நெருங்க “பிளீஸ் ரிஷி வேண்டாம்”, என்று நடுக்கத்துடன் சொன்னாள்.

     “என்ன பேபி? நீ சம்மதிச்சு தானே வந்த? இப்ப பம்முற? எனக்கு இப்பவே நீ வேணும் டி. ஒரே ஒரு நாள் உன் கூட வாழ்ந்தா போதும். உன்னை அனுபவிச்சிட்டா நான் நந்தினியை திரும்பிக் கூட பாக்க மாட்டேன். உன் வாழ்க்கைலயும் வர மாட்டேன். அந்த நாள் இன்னைக்கே இருந்தாலும் சரி தான்”

     “அது எப்படி முடியும்? என்னையும் விட்டுரு நந்தினியையும் விட்டுரு. என்னால உன் கூட எல்லாம் அப்படி இருக்க முடியாது. ஐ லவ் ஆதி. பிளீஸ் ரிஷி விட்டுரு. நான் வந்தது தப்பு தான்”

     “இதைச் சொல்ல தான் இங்க வந்தியா? இதை போன்லே சொல்லிருக்க வேண்டியது தானே டி?”

     “நேர்ல உன்னை கெஞ்சி கேக்க தான் வந்தேன். பிளீஸ் என்னை விட்டுரு”

     “என்னால நந்தினியைக் கூட விட முடியும். உன்னை விட முடியாது. எனக்கு நீ வேணும்”

     “என் மேல உனக்கு ஏன் டா வன்மம்? அதுவும் காலேஜ் படிக்கிறப்ப இருந்து என்னை டார்ச்சர் பண்ணுற?”

     “அப்ப நான் சொன்னப்பவே என்னை லவ் பண்ணிருக்க வேண்டியது தானே?”

     “எனக்கு உன் மேல லவ் வரலை?”

     “அப்ப என் ஆசைக்கு இணங்கிருக்கணும். அதுவும் முடியாதுன்னுட்ட? அதான் உன் பிரண்டை கரெக்ட் பண்ணினேன். என் அழகுக்கே மயங்கிட்டா. இதே கெஸ்ட் ஹவுஸ்க்கு தான் அவளைக் கூட்டிட்டு வந்தேன். லவ்ன்னு ஒரு வார்த்தை சொன்னதும் அப்படியே மயங்கி என் மடியிலே விழுந்துட்டா. அப்புறம் அன்னைக்கு முழுக்க திருப்பி திருப்பி அவளை அனுபவிச்சேன். அப்புறம் ஒரு நாள் மாசமா ஆகிட்டேன்னு வந்து நின்னா. நான் அனுபச்சதுல நீ எத்தனாவது பொண்ணோ? ஒழுங்கா பிரச்சனை பண்ணாம போ, இல்லை நாம ஒண்ணா இருந்தப்ப எடுத்த வீடியோவை நெட்ல விட்டுருவேன்னு சொன்னேன். செத்துட்டா. அப்புறம் நான் மத்த பொண்ணுங்களை டார்கெட் பண்ணினப்ப என்னை சஸ்பெண்ட் பண்ண வச்ச. நீ மத்த பொண்ணுங்களை அலர்ட் பண்ணி தடுத்த. அது எனக்கு பிடிக்கலை. அப்புறம் படிப்பு முடிஞ்சது. ஆனா உன் மேல இருந்த வன்மம் மட்டும் குறையலை. உன்னை ஒரு நாளாவது அனுபவிக்கணும்னு நினைச்சேன். அப்ப தான் உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் நடக்கப் போறதா தகவல் வந்துச்சு. ஆதியை கல்யாணம் பண்ணி நீ சந்தோஷமா இருக்க கூடாதுன்னு தான் ரெண்டு பேருக்கும் மெஸ்ஸேஜ் அனுப்பினேன். ஆனா நீங்க கண்டுக்கலை. அப்ப தான் எங்க வீட்ல பொண்ணு பாத்தாங்க. நான் உன்னைப் பழி வாங்க தான் நந்தினியை பொண்ணு கேக்கச் சொன்னேன். இப்ப உன் கிட்ட நெருங்கிட்டேன். ஒண்ணு நீயா எனக்கு உன்னைக் கொடுத்துரு. இல்லைன்னா நந்தினியை கல்யாணம் பண்ணி நானா உன்னை எடுத்துக்குவேன்”

     “சீ, நீயெல்லாம் மனுசனா?”

     “என்ன டி இப்படி கேக்குற? என் கூட இருந்த பொண்ணுங்க எல்லாம் நான் செமையா பண்ணுறேன்னு தான் சொல்லுவாங்க”, என்று சொல்ல அருவருத்துப் போனாள்.

     அவன் சொன்னது எல்லாம் செயினில் இருந்த கேமராவில் பதிவாகி விட்டதால் “இதை நேர்ல கேக்க தான் வந்தேன். நீ திருந்த மாட்ட. நந்தினி வாழ்க்கையை நான் காப்பாத்திக்கிறேன். இப்ப நான் போறேன்”, என்றாள்.

     “என்னது போறியா? அது எப்படி விட முடியும்? அப்படியே தங்கச் சிலை மாதிரி கண்ணு முன்னாடி வந்து காட்சி கொடுத்துட்டு போறேன்னு சொல்ற? அவ்வளவு ஈஸியா உன்னை விட்டுருவேனா?”, என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்க அதிர்ந்து போனாள்.

Advertisement