Advertisement

மகன் தூங்கிவிட, ஆதரவாக கணவன் பக்கம் அமர்ந்தாள். கண் திறந்து பார்த்தவன், அவள் மடியில் படுத்தான். தலை கோதினாள். புருவத்தை நீவிவிட்டாள். தாடி கன்னங்களை மென்மையாக வருடினாள். கைகள் கோர்த்து கொண்டாள். கம்பன் கோர்த்த கைக்கு முத்தம் கொடுத்தான்.

“தேங்க்ஸ்.. உன்கிட்ட இதை எல்லாம் சொல்லவே கூடாதுன்னு இருந்தேன், ஆனா நீ என்னை பார்த்துட்ட..” என்றான் குறையாக.

“ஆமாமா  பார்த்துட்டேன் தான்.. கணக்கே இல்லாமல்.. அதுக்கே நான் பயப்படல.. இது என்ன அழு மூஞ்சி தானே..?” என்றாள்.

கம்பனுக்கு நொடி சென்றே அவள் சொன்னது புரிய, “ஹேய்.. என்னடி பேச்சு இது..?” என்றான் வேகமாக எழுந்தமர்ந்து.

“என்ன சொன்னேன் நான்..?” காவ்யா சாதாரணமாக தோள் குலுக்க,

“கேடி கேடி.. நீ பேட் பொண்ணு..” அவளை கழுத்தோடு வளைத்து கொண்டான்.

“உண்மை தானே..?” மனைவி கண்ணடிக்க,

“நீ என்னை அநியாயத்துக்கு வெட்கப்பட வைக்கிற..? வாயை மூடுடி..” என்றான்.

“சரி விடுங்க.. ஆனா நீங்க என்னை லவ் பண்ண கதையை மட்டும் சொல்லலை..” என்றாள்.

“ஒன்னு வெட்கப்பட வை.. இல்லை ஷேமா பீல் பண்ண வை.. அது எதுக்கு இப்போ..”

“ஏன் என்னை தான் லவ் பண்ணீங்க, சொல்லுங்க..”

“எனக்கு அந்த ராகுல் நினைச்சு கோவம் வருமே. நான் ஏமாந்துட்டேன்..”

“பரவாயில்லை சொல்லுங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னீங்க என் பொண்டாட்டியா இருந்தா மட்டும் தான் என்னை தெரிஞ்சுக்க முடியும்ன்னு.. புது பொண்டாட்டி, பழைய பொண்டாட்டி ஆயிட்டா.. இன்னும் சொல்லலை..” என்றாள் நொடிப்பாக.

கம்பன் சிரித்து அவளை அணைத்து கொண்டவன், “எப்போவும் என் காதல் நீ தான்றது பழசு ஆகாதுடி..” என்றான் காதலாக.

“இது சொல்லுங்க, அதை சொல்லாதீங்க..” என்றாள் மனைவி.

“விட மாட்டியா..? என்ன சொல்ல..? மேட்ச் முன்னாடி நாங்க ஸ்போர்ட்ஸ் ரூம்ல இருந்தப்போ உங்க சீனியர்ஸ்கிட்ட நீ என்னை பத்தி பேசினதை கேட்டு ஆரம்பிச்சது தான்..” என்றான்.

காவ்யா நினைவு படுத்தி பார்த்தவள், “அதை நம்பி உடனே என்னை லவ்..” என்றாள் அதிர்ச்சியாக.

“நீ பேச்சுக்கு தான் சொன்னேன்னு எனக்கு தெரிஞ்சது. ஆனா அந்த ராகுல் தான் என்னை தூண்டிவிட்டு, நீயும் அன்னைக்கே நீ குடிச்ச ஜுஸை எனக்கு கொடுத்து..”

“அது சூர்யா குடிச்ச ஜுஸ்..” என்று பதறினாள் காவ்யா.

“ம்ம்.. அது எப்போ எனக்கு தெரியல.. ராகுல்க்கு என்னை எப்படியாவது கீழே தள்ளிடணும்ன்னு, அவங்க அப்பா என்கிட்ட வந்து, பெரியவர் சிமென்ட் கம்பெனிக்கு ஆல் ஓவர் தமிழ்நாடு டீலர்ஷிப் கேட்டார். என் அப்பா இதை எல்லாம் விரும்ப மாட்டார், எனக்கும் என் அப்பாகிட்ட இதுக்காக நான் போய் நிக்கணுமானு ஈகோ..”

“இல்லை அங்கிள்.. அது முடியாது சொல்லிட்டேன். குளோஸ் ப்ரண்டுக்கு நான் செய்யலன்னு அவனுக்கு என்மேல ஒரு கோவம், பழி எண்ணம். அதுக்கேத்தது போல நீயும் பேச, இவன் என்னை ஏத்திவிட்டு.. நான் உண்மை தெரிஞ்சு  அவனை அடிச்சு,  ஸ்டேஷன் போக.. அதை வைச்சு பெரியவர் கிட்ட பிசினஸ் பேசி, அவர் என்கிட்ட விசாரிச்சி கொடுக்கிற மாதிரி கொடுத்து மொத்தத்தையும் பிடுங்கிட்டார்..”

“எதுக்கு இவ்வளவு..? அவர் சொன்னார்னு  நீங்களும் நம்பி என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க, அதுவும் நானும் உங்களை லவ் பண்றதா நினைச்சு.. ஓஹ் காட்..”

“ஹேய் அது மட்டுமில்லை.. பல விஷயம்.. டிக்டாக்ல நான் போடுற விடியோஸ் வைச்சு நீ ப்ரைடே தீம் டிரஸ் போட்டதுனு, அப்பறம் தான் தெரிஞ்சது அவன் தம்பி வைச்சு தான் அந்த தீம் டிரஸ்ன்னு, அப்புறம் காவியம் வார்த்தை இருக்கிற சாங்ஸ் வீடியோ பண்ணி, நீயும் பார்ப்பன்னு, அடுத்த நாள் நீ என்னை பார்த்துட்டு கிராஸ் ஆகுறதுனு..”

“தெரிஞ்சவங்க எதிர்ல இருந்தா பார்த்துட்டு தான் கிராஸ் பண்ணுவாங்க, அது என்ன பார்வைன்னு வித்தியாசம் தெரியாதா..?”

“அதோட நீ கொடுத்த ரோஸ், சாக்குலேட்னு அவன் தம்பி மூலமா வரது. இப்படி.. ஆனா கொஞ்ச மாசத்துலே எனக்கு நீ சாதாரணமா பார்க்கிறது போல, என்கிட்ட இருக்கிற பீலிங்க்ஸ் உன்கிட்ட மிஸ் ஆனது போல தோணி, உன்கிட்ட நேரா கேட்டுடலாம்ன்னு வந்தப்போ தான்,  ராகுல் உன்கிட்ட என் லவ் சொல்லி எதாவது பண்ண பார்த்தான். ஆனா சரியா  நீ அன்னைக்கு என் பேர் சொல்லவும், கோவமா கத்திட்ட, அவரை பத்தி என்கிட்ட என்ன..? நீங்க யாரு, அவர் யாரு எனக்கு..? தள்ளி போங்கன்னு.. உண்மையை சொல்லணும்ன்னா செத்துட்டேன்..”

“அதுலே புரிஞ்சு போச்சு, நான் தான் கிறுக்குத்தனமா உன் பின்னாடி அலைஞ்சிருக்கேன்னு, ரொம்ப அசிங்கமா.. அவமானமா.. எனக்கே என்னை பிடிக்காம.. வெறுத்து போய்.. அவனை பிடிச்சு அந்த சாக்குலேட், ரோஸ் எல்லாம் எப்படின்னு கேட்டு, அவன் என்னை பார்த்து சிரிச்சு..  ஸ்டேஷன் வரை போய்.. ஆனா அப்போ அந்த மனுஷனை தான் ரொம்ப தேடினேன். உண்மையான பாசத்துக்கான மதிப்பு, மரியாதை புரிஞ்சது..” என்று முடித்தான்.

“நீங்க என்னை பார்க்காம ஓடி ஒளிஞ்சது சரி தான்..” என்றுவிட்டாள் மனைவி.

“எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்வன்னு, அதுக்கு தான் சொல்லாம இருந்தேன்.. நீயே கேட்டுட்டு, இதை வைச்சு என்னை ஏதும் டவுனா நினைச்ச கடிச்சு வைச்சிடுவேன்டி..” என்றான் மிரட்டலாக.

“அது எப்படி ஒருத்தர் சொல்றதை வைச்சு லவ் பண்ண முடியுது.. போங்க, அது எல்லாம் ஸ்பெஷல் பீல் இல்லையா..?”

“உனக்கு என்னை பிடிக்காம போக வாய்ப்பில்லைன்னு கொஞ்சம் ஓவர் காண்பிடண்ஸ்..”

“இது திமிர்.. என்னமோ மொத்த பொண்ணுகளும் இவரை பார்க்கிற மாதிரி..”

“மொத்த பேரும் பார்க்கலைன்னாலும் கொஞ்ச பேர் பார்க்க தான் செஞ்சாங்க, நீயும் என்னை பார்ப்பன்னு..”

“தள்ளி போங்க முதல்ல.. எல்லாம் பார்த்தா நானும் பார்ப்பேனாமே..” அவனை தள்ளிவிட்டாள்.

“காவ்யா.. நோ..” கம்பன் அவளை மடியில் இறுக்கமாக பிணைத்து வைத்தான். “சும்மா கூட என்னை இப்படி பண்ணாத, என்னால அதை ஈஸியா ஏத்துக்க முடியாது.. என்னோட ரொம்ப சென்சிட்டிவ் பார்ட் நீ..” என்றான் தீர்க்கமாக. காவ்யா அமைதியாக இருக்க, “இப்போ என்னடி..? சொல்லுன்னு கேட்டுட்டு முகம் காட்டுற..? என்னை பாரு..” என்று கன்னம் பிடித்து தன்னை பார்க்க வைத்தான்.

“என் காதல்ல உனக்கு ஏதாவது குறை இருந்தா சொல்லு, கோவப்படு, திட்டு, அடி.. இதுக்கெல்லாம் என்னை லோவா பீல் பண்ண வைக்காத..” என்றான் அழுத்தமாக.

காவ்யா நிதானமானாள். அவன் காதல்.. ஒவ்வொரு நொடியும் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் உணர முடிந்து அனுபவிப்பவளுக்கு தெரியாதா.. அவன் காதல் எப்படிப்பட்டது என்று.

“காதல் காதல்னு உங்களுக்கு நீங்களே  சொல்லிக்கோங்க.. என்கிட்ட ஒருமுறை கூட ப்ரொபோஸ் பண்ணிடாதீங்க..” என்றாள் மனைவி உதட்டை சுளித்து. கம்பன் இறுகிய முகத்தசை தளர்ந்தது.

“நீ என்னை ரொம்ப வீக்காகி வைச்சிருக்க..” என்றான்.

“அதை இப்படி சொல்ல கூடாது பாஸ், முந்தானையில் முடிஞ்சு வைச்சிருக்கேன்னு சொல்லணும்..” என்றாள் மனைவி.

“ஆமா தான்..” என்றவன் அப்போது தான் அவள் இன்னும் சேலையை மாற்றாமல் இருப்பதை கவனித்தான். “காவியத்துக்கும் கம்பனை தேடுது போலவே..” என்றான் வாசம் பிடித்து.

காவ்யா கன்னம் சிவக்க, “அப்படி எல்லாம் இல்லையே..?” என்றாள்.

“அப்படிங்களா காவியமே..?” என்றவன் அவள் மூக்கை மெல்ல கடித்தான். “மூணு மாசம்.. ரொம்ப பெரிய கேப் மேடம்..” என்றான்.

“கேப் தெரியுது.. லவ் சொல்ல முடியல..” என்றாள் நொடிப்பாக.

“நிஜமா சொல்லணுமா..?” என்றான் அவள் முகம் பார்த்து. காவ்யாவிற்கு தேவையில்லை தான், ஆனால் கணவனை அப்படியே விட மனமில்லை.

“சொல்லணும் தான்.. ரோஸ் போக்கே கொடுத்து, முட்டி போட்டு..”

“இப்படியா..? ஒரேடியா பேரன் பேத்தி எடுத்துட்டு சொல்லிடவா..?” என்றான் கம்பன்.

“லவ் சொல்லாம பேரன் பேத்தி எடுக்க வழி கொடுத்தேன் பாருங்க என்னை சொல்லணும்..” என்றாள் மனைவி.

“காவியம் இப்போ வழி கொடுக்க மாட்டேங்குதே..?” கம்பன் அவள் கழுத்தில் உரச,

“நோ.. தாடி எனக்கு பிடிக்காது..” என்றாள் மனைவி.

“இப்போவே தாடி எடுத்துட்டு வந்திடுவேன்..”

“நான் அதுக்குள்ள தூங்கிடுவேன்..”

“முழிக்க வைக்க எனக்கு தெரியும்..”

“உங்களை கடிச்சு வைக்க எனக்கும் தெரியும்..”

“கடிச்ச இடத்துக்கு மருந்து வாங்கவும் எனக்கு தெரியும்..”

“மருந்து ஓவர் டோஸ் ஆனா எனக்கு தெரியாது..”

“மிரட்டுறடி.. நானும் ஆரம்பிச்சேன்..  தாங்கமாட்ட..”

“அதை நான் சொல்லணும், நீங்களே சொல்ல கூடாது பாஸ்..”

“அப்போ தாங்குவ..” என்றவன் அவள் பேசிய இதழ்களை வன்மையாக அடைத்துவிட்டான். நாமளே சீண்டி விட்டுட்டோம் போலயே.. காவ்யா மூச்சு வாங்க, விலக, கணவன் திரும்ப அடைத்தான்.

“ஒரு நிமிஷம் ப்ளீஸ்..” காவ்யா விலகி சைகையால் கேட்க,

“நானே உனக்கு மூச்சு கொடுக்கிறேன்டி..” என்று திரும்ப திரும்ப அடைத்தான். காவ்யா மறுப்பு, கெஞ்சல் வேலைக்கே ஆகவில்லை. திவான் அவர்களின் கட்டிலாக மாற, காவ்யா அவனில் மறைந்தே போனாள்.

“உங்க தாடி ரொம்ப படுத்துது..” காவ்யா அதனை இழுத்து பிடிக்க, “ஸ்ஸ்..”  என்றான் கணவன். “எனக்கும் இப்படி தான் இருக்கு..” என்று அவனை சுக இம்சை செய்தாள் மனைவி.

“அப்படிங்களா காவியமே..” என்றவன் தாடி கொண்டு எங்கெங்கோ உரசி அவளை திணறடித்துவிட்டான். உதடுகள் ஓய்வில்லாமல், இடைவெளி இல்லாமல் இணைந்து கொண்டே இருந்தது. கைகளை கோர்த்து நெறித்து அவளை ஒரு வழி செய்தான்.

பேசவே வாய்ப்பளிக்காமல் அவளை தன்னிலை மறக்க வைத்தான். காதலின் பசி அவனையும்  தன்னிலை இழக்க செய்தது. அதை கூடலாக அவளுடன் கூட, கம்பனின் காதல் அவளுக்கு தாங்காமல் போனது. கணவன் உதடுகளை இவள் கொய்ய, கம்பன் இன்னும் தீயாக பற்றினான். அவளை தன்னுடன் கொதிக்க வைக்க, காவ்யா தொண்டை உலர்ந்து போக, கம்பன் வேர்த்து போனான். இத்தனை வருடத்தில் ஒரு வன்மையான காதல் கலவி.

சோர்ந்து போன மனைவியை தன் முகத்துக்கு கொண்டு வந்தவன், நெற்றியில் முத்தம் வைத்தான். “என்னை.. என் வாழ்க்கையை இந்த காவியத்தோட அதிகாரமா எடுத்துக்கோ, உனக்குள்ள  முழுசா என்னை நிரப்பிக்கோ.. உனக்குள் ஒவ்வொரு பக்கமா.. புள்ளியா இருக்கிறது தான் என்னோட காதல்.. ஐ லவ் யூடி..” என்றான் ஆழ்ந்து முத்தம் வைத்து.

காவ்யா கணவனை.. அவன் காதல் பாவங்களை பார்த்தவள், எப்போதும் போல அவன் காதல் மேல் இவள் காதல் கொண்டாள். அவளின் எல்லா அதிகாரமாக  அவன் எப்போதோ நிரம்பியிருந்தான். அவள் இதயத்தை தன் காதல் கொண்டு நிறைத்தவன் கம்பன் வீரய்யன். இந்த காவியத்தின் கம்பன் அவன்.

“நீ இல்லைனா நான் இன்னைக்கு இப்படி இல்லை.. எப்படியோ போயிருப்பேன்.. உன்னை முழுசா என் வாழ்க்கை முடியற வரைக்கும் கூட படிக்க முடியுமா தெரியல.. ஆனா ஒரு அதிகாரம் படிச்சாலும் எனக்கு அந்த முழு திருப்தி கொடுக்க உன்னால மட்டும் தான் முடியும்..” என்றான் அவளில் காதல் அதிகாரத்தை எழுதியவன்.

இவனை தவிர அவளை யார் ரசித்து, அனுபவித்து, கொண்டாடி முடியும்..? அவளின் ஒவ்வொரு புள்ளியிலும் காதல் வண்ணம் பூசிய கம்பன் வீரய்யனை அவனின் காவியம் கொண்டாடாமல் இருக்காதே.

“காதல் என் கவியே

நீ என் அருகில் வந்தாலே

உலகமே ஏன் இருளுது..

பகல் இரவாய் மாறுது..

வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நான்..”

கம்பன் அவள் முடிகளை ஒதுக்கி ரசித்து பாட, அங்கு அவனுள் தொலைந்து போனது என்னமோ அவன் காவியம் தான்.

“நீங்க உங்க காதலுக்கு என்னை  காதலியாகிட்டீங்க..” என்றாள். கம்பன் காதலுக்கான மனைவியின் வார்த்தைகள். அடி உயிர் வரை சில்லிட்டு போனான். மகிழ்ச்சியில் தவித்து, திணறி  போனான்.

இறுக்கமாக அணைத்து முத்தங்களால் அவளை கொண்டாடிவிட்டான். காவ்யா பதிலுக்கு முத்தமிட்டு அவன் காதலை நிறைய செய்தாள். கம்பனின் காவியம் இவள் தான். முடிவே இல்லா காதலின் அணைப்புகளும், முத்தங்களும், அங்கு தொடர்ந்தது.

கம்பனின் காதல் காவியத்தின் வார்த்தையில், அவளுடனான வாழ்க்கையில் முற்று பெற்றது.

Advertisement