Advertisement
கம்பன் காதல் கொண்டு 16
கம்பன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான் என்பது அவன் வார்த்தையிலும், கரகரத்த குரலிலும் புரிய, காவ்யா கண்களை விரித்து தான் அவனை பார்த்தாள். “ஏன்.. ஏன் இப்படி..?” என்று மெல்லிய குரலில் கேட்கவும் செய்தாள்.
“எனக்கு நீ வேண்டவே வேண்டாம்ன்னு நினைச்சிருந்தேன், ஆனா இப்போ.. இப்படி உன் புருஷனா கை பிடிச்சு நிக்கிறேன்..” என்றான் கம்பன்.
“அதுக்கு என்ன பண்ண முடியும்..? நீங்க தானே என்கிட்ட கேட்டீங்க..?” என்றாள் காவ்யாவும் சட்டென. கம்பன் முகம் உடனே மாறிவிட்டது. அவள் கையை விட நினைக்க, காவ்யா இறுக்கி பிடித்தாள் இப்போது.
கம்பன் அவளை பார்க்க, “என்கிட்ட வர வரைக்கும் தான் உங்க சாய்ஸ், வந்துட்டீங்க இல்லை, அப்படியே இருங்க..” என்றாள் கோவத்தை கட்டுப்படுத்தி.
“நான் கேட்டு தான் நீ என் லைஃபுக்குள்ள வந்த, இல்லைன்னு சொல்லலை, அதுக்காக அதை உடனே சொல்லணுமா..?” அவன் குரலில் அவ்வளவு ஆதங்கம், குன்றல்.
“கை பிடிச்ச கொஞ்ச நேரத்துக்குள்ள விட நினைச்ச உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்..” காவ்யா மூக்கு விடைக்க சொன்னாள்.
“ஹேய்.. அது..”
“வீரா கிளம்பணும்.. டைம் ஆச்சு..?” சஞ்சய் அவர்களை நெருங்கினான். எல்லாம் இவர்களுக்காக காத்திருப்பது புரிய, பேச்சை தொடர முடியாமல் மணமக்கள் கிளம்பினர்.
கோவிலில் இருந்து நேர கம்பன் வீடு சென்றனர். அங்கு தான் எல்லோருக்கும் உணவு. மொத்த விருந்தினர் எண்ணிக்கை நூறுக்குள் தான் அடங்கும். இருபக்கமும் மிக நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு. அதில் காவ்யாவின் நண்பர்கள், சஞ்சயின் வருங்கால மாமனார் குடும்பம், சூர்யாவின் மாமனார் குடும்பமும் அடக்கம்.
மணமக்களின் புது காரை சஞ்சய் ஓட்டி கொண்டு வர, உடன் அவன் வருங்கால மனைவி சாதனா. காரில் வைத்து கம்பனுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தான் சஞ்சய். சாதனாவும் முறையே ‘அண்ணா’ என்றழைத்து கம்பனிடம் சகஜமாக பேச, காவ்யா வெளியே பார்த்தபடி வந்தாள்.