கனேசன் வந்து போன பின் வீட்டில் அமைதி தான். பாக்கியாவிற்க்கு அப்போது தான் மகன் தன் விருப்பத்தை மட்டும் சொல்லவில்லை, அதில் மிகவும் உறுதியாகவும் இருக்கிறான் என்று புரிந்து. பரிதியின் அப்பாவிற்க்கு மகனின் மனது ஏற்கனவே புரிந்து இருந்தது. கன்டிப்பாக அவன் வாழ்க்கையை அவன் நினைத்தபடி தான் அமைத்துக்கொள்ளுவான் என்று அவருக்கு தெரியும். அதுவும் இல்லாமல் கதிரழகி நல்ல பெண், அவள் வாழ்வில் நடந்துவிட்ட சில கசப்பான விஷயங்களுகாக அவளை வேண்டாம் என்று சொல்லுவத்தில் அவருக்கு விருப்பம் இல்லை.
எனக்கு ஒரு பெண் இருந்து அவள் வாழ்வில் இப்படி நடந்து இருந்தால் நானும் கனேசன் போல தான் சிந்தித்து இருப்போம் என்று நினைத்தார். அவர் ஆதரவு எப்போதும் மகனுக்கு தான். பாக்கியா தான் மதில் மேல் பூனையாக நின்று இருந்தார். அவரால் மகனின் ஆசையை புறகணிக்கவும் முடியவில்லை. கதிரழகியை தன் மகனுக்கு மனைவியாக ஏற்கவும் முடியவில்லை. அன்றைய நாள் அப்படியே கழிந்து இருக்க.
அடுத்த நாள் பள்ளி வேண் டிரிப் முடித்துவிட்டு, வந்து இருந்தாள் கதிரழகி, அவளுக்கு கோர்ட இல் இருந்து பதவு தபால் வந்து இருப்பதாக தபால்கார் சொல்லவும், பாக்கியா அவளை அழைத்தார். இந்த திருமண பேச்சை ஆரம்பித்தில் இருந்து அவர் கதிரழகியுடன் சரியாக பேசுவது இல்லை. ஆனால் இன்று கோர்டில் இருந்து என்றவுடன் அவளுக்கு அழைத்துவிட்டார். அவளுக்கு குழப்பம் தான் தனக்கா? யார்? என்ன விஷயம்? என்று குழம்பி போனாள்.
அவள் வீட்டில் இருந்த யாரும் இது பற்றி அவளிடம் சொல்லி இருக்கவில்லை. எது என்றாலும் அவளுக்கு வரும் போது தெரிந்துக்கொள்ளட்டும். இப்போதே சொல்லி அவளை குழப்ப வேண்டாம் என்று தீர்மானித்து இருந்தார் கனேசன்.
ஏன்மா? ஏன்? இப்படி டென்சன்னா இருக்கீங்க என்றான் பரிதி, ஒன்றும் இல்லை பரிதி, போஸ்டு மேன் வந்து இருக்கார், கதிரழகிக்கு வக்கீல் நோட்டீஸ் வந்து இருக்காம். அதுதான் என்றார் முகத்தில் கலவரத்துடன்.
அவனது முகமும் யோசனைக்குள்ளாது…….. கதிரழகி வந்து கையொழுத்து இட்டு அதை பெற்றுக்கொண்ட பின், பிரித்து படித்துவள் முகத்தில் அதிர்வு தான் முதலில் வெளிபட்டது, பின் அவள் முகம் ரௌவுத்திரத்தை பூசிக்கொண்டது.. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர் தாய் மகன் இருவரும்.
பரிதி அவள் கையில் இருந்த காகிதத்தை வாங்கியவன் அதை படிக்க கேட்டு இருந்த பாக்கியாவுக்கும், அவன் அப்பாவுற்க்கும் கூட ச்சே………………. என்ன மனிதன் இவன் என்ற எண்ணம் தான்.
அதில்…….
தளவாடம் என்ற ஊரை சேர்ந்த அன்பழகன் என்னும் நான், 4 வருடத்திற்க்கு முன் (2020) கதிரழகி என்ற என் மாமாவின் (அக்காவின் கணவர்) மூத்த தாரத்து மகளை திருமணம் செயதேன், எங்கள் இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாங்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி பெற்றோம்.
எங்களுக்கும் மிதயழகி என்ற 3 வயது மகள் இருக்கிறாள். எங்கள் விவாகரத்தின் போது, என் மகள் 6 மாத குழந்தையாக இருந்தாள், அவள் பெண் குழந்தை என்பதாலும், கை குழந்தை என்பதாலும் மகள் என் முன்னாள் மனைவியின் வசமே ஒப்படைத்தேன்.
தற்போது என் மகளுக்கு 3 வயது நிறைவடைத்த நிலையில், தந்தையாக என்மகளை கானவோ, பழகவோ எனக்கும் சம உரிமை உள்ளது.
மேலும் விவாகத்துக்கு பின் நான் மறுமணம் புரிந்துக்கொண்டேன். என் மனைவி நந்தினிக்கு சில உடல் பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர். இந்த நிலையில் என் முன்னாள் மனைவிக்கு மறுமணம் செய்ய இருப்பதாக அவள் பெற்றோர்களால் முடிவு செய்யபட்டுள்ளது. இந்த நிலையில் என் மகள் அவள் அம்மாவின் மறுமனத்தால் மன ரிதியான பாதிப்புக்குள் உள்ளாகலாம்.
என் மனைவியின் வருங்கால கணவர் என் மகளை நல்ல முறையில் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையின்மையும், மேலும் எதிர் காலத்தில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தால், என் மகள் மனரிதியாக பாதிக்கபட வாய்ப்பு இருக்கிறது. அதனால் குழந்தையை என்னிடம் ஒப்படைக்க கோருகிறேன்.
மேலும் எனக்கும் என் மனைவி நந்தினிக்கும், இனி குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் சான்று அளித்துள்ள நிலையில். என் மகள் மதியழகியை என் பெறுப்பில் எடுத்துக்கொள்ள விழைகிறேன். என் மகளை வளர்க்க போதுமான பெருளாதார வசதியும், அவள் தேவைகளை பூர்த்தி செய்யவும் என்னால் இயலும். இதனால் என் மகளின் எதிர்காலம் பாதிக்காது என்று உறுதி அளிக்கிறேன்.
மேற்கண்ட காரணங்களால் என் மகள் மதியழகியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
அன்பழகன்
என்று முடிந்து இருந்தது அந்த நோட்டீஸ்
அதை படித்து முடித்தவன் முகத்தில் கதிரழகிக்கு இனையான ரௌத்திரம் தான். ஆனால் இது கோவப்பட வேண்டிய தருமணம் அல்ல, நாம் கோவத்தில் எது செய்தாலும் அது அவனுக்கு சாதகாமாக போக வாய்ப்பு அதிகம் என்பதை பரிதி அறிவான். அதே நேரத்தில் இதை எல்லாம் கேட்டு இருந்த பாக்கியா முடிவு எடுத்துவிட்டார்.
என்ன தைரியம் டா அந்த நாய்க்கு……………… இங்க பார் பரிதி என்ன ஆனாலும் சரி குழந்தை அவன் கைக்கு போக கூடாது. சீக்கரம் உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றோம். நீ அவனை பார், என்றவர் வீட்டிற்க்குள் சென்றுவிட்டார். அவருக்கு மனதே ஆரவில்லை. அன்று அவ்வளவு பிரச்சனைகளில் அவள் கூட இருந்தவர். அன்று அவள் பட்ட துன்பங்கள் அனைத்தும் அவர் அறிவரே, யாரின் ஆதரவும் இல்லாமல், கையில் பனம் இல்லாமல், அவள் அந்த பேருந்து நிறுத்ததில் அமர்ந்து இருந்த கோலம் இன்றும் அவர் நினைவில்.
அன்று தான் மட்டும் அவளை அழைத்து வந்து இருக்காவிட்டால் இன்று பேசுபவர்கள் எல்லாம் எங்கு போய் இவளை தேடி இருப்பார்கள். ஒரு வேளை அன்று அவள் இருந்த மனநிலைக்கு தவறான முடிவு ஏதும் எடுத்து இருந்தால், இன்று எந்த குழந்தையை உரிமை கொண்டாடுவார்கள். கேட்க கேட்க அவருக்கு ஆதிரமாக வந்தது. இதுவரை அவர் மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் பின்னே சென்று, அவளை அப்படி கஷ்டபட்டு காபாற்றி இப்படி இவனுக்கு கொடுக்கவா? அவளுக்கு என்ன குறைச்சல் என் மகன் போல் ஒரு நல்லவனுடன் அவள் வாழ்கை அமைந்து அவள் மகிழ்ச்சியாக வாழ்வதை அவன் பார்க வேண்டும். அப்போது தான் அவனுக்கு எல்லாம் மண்டையில் உரைக்கும், என்று இன்னும் என்னவோ மனதில் அவனை வறுத்துக்கொண்டு இருந்தார்.
பரிதி முதலில் திகைத்தாலும் பின் அம்மாவின் பேச்சில் அவன் முகத்தில் புன்னகை தான் தோன்றியது. நேற்றுவரை இந்த கல்யாணத்தை எப்படி நடத்த போகிறோம் என்று நினைத்து இருந்தவன். இன்று மனதில் அவ்வளவு குதுகலம், ம்மம்மம்மம்மம்மம……………….. போற போக்குல அவனவன் பன்றது எல்லாம் நமக்கு சாதகமாக தான் இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று வடிவேல் பாணியில் வாய்விட்டே சொல்லிக்கொண்டான்.
அங்கு நின்று இருந்த கதிரழகியின் முகத்தில் கூட அவன் சொன்னதை கேட்டு புன்னகையின் சாயல் வந்து போனது………… அவளுக்கு இந்த பிரச்சனையை கையால்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் குழந்தையை அவள் நீதிமன்றத்தில் நிறுத்த விரும்பவில்லை. அவள் எதிர் காலத்தில் அவள் மனதில் எந்த கசப்பான சம்பவங்களும் நினைவில் இருக்க வேண்டாம் என்று நினைத்தாள்.
அவளுக்கு தான் அன்புவை பற்றி நன்கு தெரியுமே, அவன் எந்த எல்லைக்கும் போவான் என்று……………
இப்போது வரை பரிதிக்கும் அவள் மேல் விருப்பம் இருக்கிறது என்று அவளுக்கு தெரியாது. ஆனால் அப்பாவின் பேச்சால் பாக்கியா திருமணத்திற்க்கு சரி என்று சொல்லுகிறார் என்றே நினைத்தாள். இப்போது அவன் முகம் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான். இருவருக்கும் முதல் முறையாக நேருக்கு நேரான பார்வை பறிமாற்றம், அடுத்து என்ன என்ற கேள்வி தான் அவர்கள் பார்வையில் தொக்கி நின்றது.
அவள் அருகில் சென்றவன், அந்த ராஸ்கலை நினைத்து கவலை படாதே பார்த்துக்கலாம் என்றான். அவளும் சரி என்பதாய் தலையாட்டினாள். அடுத்து அவன் அழைத்து பேசியது கதிருக்கு தான். ஏற்கனவே அம்மா மூலம் நடவற்றை எல்லாம் அறிந்து இருந்தாலும். கதிரிடம் ஆரம்பமுதல் நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்துக்கொண்டான்.
கதிர் பெரும் கோவத்தில் இருந்தவன், அவனை எல்லாம் உயிரோடவே விட கூடாது, என்று சொல்ல………. என்ன பன்ன போற கதிர் அவனை வெட்டிட்டு நீ உள்ள போக போறியா……………………… அப்போ மட்டும் உன் அக்கா மக சந்தோஷமா இருந்துடுவாளா?
கொஞ்சம் பெறுமையா இரு, இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் என்றவன் மேலும் அவனிடம் சிலவற்றை பேசிவிட்டு வைத்துவிட்டான். வைக்கும் முன் இங்க பார் கதிர் நீ இப்போ கோவத்தில் எது செய்தாலும் அது அவனுக்கு சாதகமாக போக வாய்ப்பு அதிகம் அதனால் அமைதியா இரு என்றவன் வைத்துவிட்டான்.
மணிமேகலைக்கு அழைத்தவன், அவளிடமும் நடந்த விஷயங்களை சொல்லி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, அவன் நன்பனுக்கு அழைத்தான். அவன் தற்போது வழக்கறிஞ்சராக இருக்கிறான். அவனை அழைத்து, நேரம் கேட்டுவிட்டு அவனை பார்க்க கிளம்பி இருந்தான்.
இருவரும் பள்ளியில் இருந்து நன்பர்கள், வேறு துறைகளில் இருந்தாலும், இன்றும் இவர்கள் நட்பு தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. அவனை சந்திக்க சென்றான்……………………….
……………………..
அதே நேரத்தில் அன்பழகனும் அவன் வக்கீல் முன்னால் தான் அமர்ந்து இருந்தான். ரத்தினமும், கனேசனும் வீட்டில் இது பற்றி கேட்டவுடன் அவன் அளித்த பதில் மயங்கி விழுந்து இருந்தாள் நந்தினி, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவன், பரிசேதனைகள் முடித்த மருத்துவர் பயப்பட ஒன்றும் இல்லை. சரியான தூக்கம் மற்றும் உணவு எடுத்துக்கொள்ளவில்லை, அதனால் வந்து மயக்கம் என்று கூறியிருந்தனர், இப்போதைக்கு ஒரு டிரிப்ஸ் போட்டுவிட்டு இருந்தனர்………..மாலை வீட்டு அழைத்து செல்லாம் என்றும் கூறி இருந்தனர்.
அங்கு அவளுக்கு அறை ஒதுக்கபட்டு தூக்கத்துக்கு மருந்து செலுத்தபட, அங்கு இருக்கும் தாதியிடம் சொல்லிவிட்டு, ஏதும் அவசரம் என்றால் தன் எண்ணிக்கு அழைக்கும் படி கூறியாவன், வக்கீலை பார்க்க சென்றான்.
அவரும் நேட்டீஸ் அவள் கைக்கு கிடைத்துவிட்டது,அடுத்து என்ன என்று அவனிடம் பேச வர சொல்லி இருந்தார்.
இங்க பார் அன்பு, நம்ம நேட்டீஸ் அனுப்பியாச்சி, ஆனா இதுல நமக்கு இது சாதகம் இல்லாத விஷயம் நிறைய இருக்கு…………………..
உனக்கு விவாகரத்து கிடைத்த உடனே நீ கல்யாணம் பன்னிகிட்ட, அதை வெச்சி உனக்கு ஏற்கனவே அந்த பெண்ணு கூட தொடர்பு இருந்தால் தான் விவாகரத்து பன்னேன் உன் முன்னால் மனைவி கோர்ட்டில் சொல்லிட்டாள் வழக்கு நமக்கு சாதகமாக இருக்காது.
அடுத்து, சட்ட படி உன் மாமாவோட சொத்துக்களுக்கு அவர் பெண்ணு தான் வாரிசு, அடுத்து உன் பெண்ணு, இப்போ நீ சொத்துக்காக தான் இந்த வழக்கை போட்டு இருக்கனு சொல்லாம்.
உன் முன்னால் மனைவிக்கும் உனக்கும் இருந்த பிரச்சனை, அதை தொடர்ந்து நீ நடந்துக்கொண்டது எல்லாம் அவங்க சாட்சியா காமிச்சா, நீ அவளை மனரிதியா துன்படுத்தினதா ஆகிடும். இது எல்லாத்தையும் விட, பெண் குழந்தை, அப்பாவைவிட, அம்மாவிடம் தான் இருக்கனும் தீர்ப்பு வர அதிக வாய்ப்பு இருக்கு……………….
இது எல்லாம் நம் பக்கம் இருக்க பாதகமான விஷயங்கள், எல்லாத்தவிட முக்கியமானது, நீ கொடுத்த மெடிக்கல் சட்வீகேட், அது பத்தி கண்டிப்பா திரும்ப விசாரிப்பாங்க, அப்படி மட்டும் நடந்தா, இந்த கேஸ் நீக்காது…………………அதனால நம்ம இந்த கேஸ்ல அதை முடிஞ்சவரைக்கும் தவிர்க்க பார்க்கனும் என்றார் அந்த வக்கீல்.
அப்போ நம்ம என்ன தான் பன்றது ஸார்………………… ம்மம்மம்மம்மம்மம்மம……………. ஒரு வழி இருக்கு, (character assassination) அதாவது உன் முன்னால் மனைவியை தப்பா காமிக்கறது. அதுல மட்டும் தான் நாமா இந்த கேஸ்ல ஜெயிக்க முடியும்…………………. அப்படி மட்டும் நிருபிச்சிட்டா………………………… உன் பெண்ணு உன் கிட்ட வந்துடுவா………………………………….. என்றார் அந்த வக்கீல் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல்…………………….. அப்புறம் என்ன அதையே செய்துடுங்க………….. சாட்சிய பத்தி கவலை பட வேண்டாம் நான் பார்த்துக்கிறேன் என்றான் அன்பு…………………
அதன் பின் மருத்துவமனைக்கு சென்றவன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டான்…………
வீட்டில் எல்லோர் கனவனும் அவனிடம் தான் அவன் யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை, பேசவும் இல்லை.
………………………….
இங்கு பரிதி அவன் நன்பன் கண்ணனிடம் எல்லாவற்றையும் சொல்லியவன். இப்போது இதில் என்ன செய்யலாம் என்று தான் விவாதித்துக்கொண்டு இருந்தனர்.
இங்க பார் பரிதி நீ சொல்லுறபடி பார்த்தா அந்த அன்பு பெரிய கிரிமினல் மைன்டா இருப்பான் போல, இப்படி பட்டவன் எந்த எல்லைக்கும் போவான். முதல இந்த கேஸ்சில் இருக்க ஒட்டை எல்லாத்தையும் நம்ம அடைக்கனும், அதுக்கு அப்புறம் அவனுங்க, எந்த வழியில் கேஸசை கொண்டு போறானு பார்க்கனும்.
நீ சொல்லுறத வைச்சி பார்த்தா நம்ம பக்கம் ரொம்வே வீக்கா இருக்கு!!! என்றான். என்டா சொல்ற, அவன் அந்த பெண்ணை நடத்தின விதத்தை பற்றி ஊர் முழுக்க தெரியும். இப்போ அவ அப்பா அவளுக்கு சாதகமாக இருக்கார். எல்லாத்துக்கும் மேல குழந்தை 18 வயசு வரைக்கும் அம்மாகிட்ட தானே இருக்கனும்……………………. என்று பரிதி பேசிக்கொண்டே போக………………. ஏய் நிறுத்து நிறுத்து……… நிறைய சினிமா பாப்பியோ……………………… என்று கேட்டு சிரித்தவன்…………… இங்க பார் பரிதி நீ நினைக்கற மாதிரி எல்லாம் இல்ல…………………….
சரி இப்போ நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லு……………………….
அந்த அன்பு தன் மாமாவின் மூத்த தாரத்து பெண்ணை பழிவாங்க தான் திருமனம் செய்கிட்டானு நீ சொன்னா, அதுக்கு அந்த ஊரில் இருந்து சாட்சிகூட சொல்லுவாங்க தான்………………….. ஆனா உன்மையில் அன்பு அப்படி பட்டவன்னா இருந்தா இன்னும் அவன் அவங்க மாமா வீட்டில் தான் இருக்கான். அவன் மேல் தப்பு இருந்தா எப்படி அவர் அவனை அவர் வீட்டில் தங்க வைப்பார்…..
அதுவும் அவன் இன்னோர் பெண்னை திருமணம் செய்துக்கொண்டு அந்த வீட்டில் இருக்கான், எந்த அப்பாவாது இதுக்கு ஒத்துபாரா?
அடுத்து கல்யாணம் ஆன 1 நாள் மட்டும் தான் அவங்க சேர்ந்து இருந்து இருக்காங்க, அப்புறம் ஒரே வீட்டி் இருந்தாலும், இருவரும் தனியா தனியாதான் இருந்து இருக்காங்க…………. அதாவது, அன்பு அவளை மனரிதியாகவோ, உடல் ரிதியாகவோ துன்படுத்தி இருந்தா ஏன் அவங்க வீட்டில் யாரும் அதை கேட்கல………………………
முதலில் கதிரழகி தான் விவாகரத்து கேட்டு இருக்காங்க…………………………. அதுல கூட கனவனுக்கும் தனக்கும் என்ன பிரச்சனனு அவங்க செல்ல பரஸ்பரமா பிரியரதா சொல்லி இருக்காங்க…………………………
அதுக்கு அப்புறம் கூட அவங்க வீட்டுக்கு போகல…………….. ஆனா அன்பு இன்னும் அங்க தான் இருக்கான்.
எல்லாத்தையும்விட, கதிர் என்று நிறுத்தியவன்……………………… பரிதியின் முகம் பார்தான்………….. கதிர்வேலன் எல்லாத்தையும் விட்டுட்டு கதிரழகி கூட இங்க தான் இருக்கான். எதுக்காக…………. இவங்க ரெண்டு பேருக்கும் தவறான……………………… என்று சொல்ல வந்தவன். இப்படி சொல்லி அந்த பெண்ணோட கேரக்டரையே தப்பா சொல்லுவாங்க.
அதில் பரிதி பதறதான் விட்டான். அவன் அறிவானே அவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவை…………இதை எப்படி அவள் தாங்குவாள்…………………
ஒரு வேள நீ அவளை திருமணம் செய்ய விரும்பறது தெரிஞ்சா இது எல்லாம் சொத்துக்காக தான் சொல்லாம். அப்போ குழந்தையை சுலபமா அவங்க பக்கம் எடுத்துக்குவாங்க.
இப்படி அவன் சொல்ல சொல்ல தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் பரிதி………………………. அவன் வக்கீல் நேட்டீஸ் பாக்கும் போது கூட இப்படி எல்லாம் நினைக்கவில்லை. ஆனால் இந்த கோனத்தில் எல்லாம் யோசித்து இருக்கவில்லை. குழந்தை அன்புவிடம் போவதை அவனால் நினைக்கவே முடிவில்லை. இப்போது திருமணம் எல்லாம் பின்னால் போய் எப்படி இந்த வழக்கை கையால்வது என்று தெரியாமல் திகைத்து அமர்ந்து இருந்தான்……………………
அவனை பார்த்த கண்ணன் டேய் பயப்படாத………………… இது மாதிரி எல்லாம் வாய்ப்பு இருக்குனு சொன்னேன். கேஸ் எடுக்க முன்னோ அது இருக்க எதிர்மறையான விஷயங்களை தான் முதலில் கவனிக்கனும். என்றவன். சரி இந்த கேஸ் நான் எடுத்துக்கிறேன். எனக்கு 2 நாள் டைம் கொடு, முதலில் அவனுக்கு நம்ம பதில் நேட்டீஸ் அனுப்பிவிட்டு என்ன பன்னாலம் பார்க்கலாம் என்றான்.
வரும் போது இருந்த உற்சாகம் இப்போது இல்லை பரிதியிடம்.. ஆனாலும் எதையும் பார்த்துக்கொள்ளாலாம் என்ற நம்பிக்கை இருந்தது. வீட்டுக்கு வந்தவன், இரவு கதிர்,மணிமேகலை, கதிரழகி, அவன் அம்மா அப்பா எல்லார் முன்னாலும் மேலோட்டமாக பேசியதை சொன்னான்.
அடுத்து என்ன செய்யலாம் என்று அவரவர் மனதில் யோசனை ஓடியாது…………….
கனேசனுக்கு அழைத்து சென்னவன் தற்போது இதை பற்றி வீட்டில் பேச வேண்டாம் என்றும், வேறு யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியவன், அவரையும் இங்கு தற்போது வரவேண்டாம் என்று கூறிவிட்டான்.
பதில் நேட்டீஸ் அனுப்பபட்டது. அதில் பெரியதாக எந்த எதிர்மறை வாக்கியங்களும் இல்லாமல். குழந்தையை தர முடியாது என்றுமட்டும் கூறபட்டு இருந்தது. அடுத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது………………………………அதை பார்த்தும் அன்புவின் மனதில் வெற்றி களிப்பு தான் எப்படியும் உன்னை என் காலில் விழ வைக்காமல் விட மாட்டேன். அந்த கதிருக்கும் இருக்கு என்று மனதில் கருவிக்கொண்டான்.