பரிதி சென்னை வந்து அன்றுடன் 10 நாட்கள் முடிந்து இருந்தது. தந்தை மருந்துவமனையில் இருந்து வந்து மூன்று நாட்கள் கடந்து இருந்தது, நடுவில் ஒரு நாள் மறுபடியும், பரிசேதனைக்கு அழைத்து சென்றவன் எல்லாம் சாதாரணமாக இருப்பதாக கூறி மருத்துவர், சில மாதங்களுக்கு முழு ஒய்வில் இருக்கு படி கூறியிருந்தார், அவனும் மருத்துவர் என்பதால் தான் பார்த்துக்கொள்வதாக கூறியவன், அதன் பின் தந்தையின் உடல் நிலையை முழுவதும் தன் கட்பாட்டில் எடுத்துக்கொண்டான்.
பெற்றவருகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி இந்தனை நாட்கள் தள்ளி இருந்த மகன் இன்று அருகில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது அவருக்களுக்கு ஒரு தெம்பை கொடுத்து இருந்தது. அவனுக்குமே இத்தனை நாட்கள் இப்படி இருந்து விட்டோமே என்று குற்ற உணர்வாக இருந்தது. அதனால் இன்னும் சில காலம் இங்கு இருக்கலாம் என்று முடிவு செய்து இருந்தவன், மேலும் விடுமுறையை நீட்டிக்கலாம் என்று நினைத்து இருந்தான். ஆனால் அது எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய காரணம் இருந்தது. அது மதியழகி, இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மன அழுத்ததை மெல்ல மெல்ல தன் செய்கைகளால் போக்கிக்கொண்டு இருந்தாள் அவள்.
அவளின் அந்த சிரிப்பும் பேச்சும் அவனுக்கு மீண்டும் பழைய வாழ்க்கைக்கு கொண்டு சென்றது போல் உணர்ந்தான். அவள் பேசும் அழகுக்கே காலையில் அவள் எழுந்தவுடன் அவளை அழைத்து வந்துவிடுவான். இப்போது எல்லாம் அப்பாவை தாண்டி அவன் நேரங்களை அதிகம் களவாடும் நபர் அவளாகி போனாள். அவள் பேசும் மழலை தமிழுக்கு அவன் ரசிகன் தான். காலையில் எழுந்து பல்விளக்கிவிட்டு கையில், தன் பானத்துடன், பின் படிகட்டு வழியாக கிழே வந்து விடுவாள்.
அவளுக்காகவே, அவனும் கூடத்தில் காத்து இருப்பான், இருவரும் ஏதோ பேசியபடி அவரவர் பானங்களை அருந்துவார்கள். சுற்றி இருக்கும் யாரும் அவர்கள் கருத்தில் பதிய மாட்டார்கள். இப்போது எல்லாம் மதியழகி வாயில் அதிகம் வரும் வார்த்தை பரிடீ என்பது தான். பள்ளி செல்லும் நேரம் தவிர எப்போதும் அவன் பின்னால் தான் சுற்றி வருவாள். அவனும் அப்படி தான் அப்பாவை கவணிக்கும் நேரத்தில் கூட அவளை உடன் வைத்துக்கொள்ளுவான். அவள் கேட்கும் லட்சம் கேள்விக்கும் அவனிடம் பதில் இருக்கும். இதை வீடே ஆச்சரியமாக தான் பார்த்தது, மணிமேகலை அவனை கின்டல் செய்தாலும் அவன் அதை காதில் வாங்குவது இல்லை. இப்போது எல்லாம் இரவு கூட அவன் மேல் படுத்த கதை பேசிய படி உறங்கி விடுகிறாள்.
இதில் அதிகம் தவித்து போனது என்னவோ கதிரழகி தான், மகள் இந்த சில நாட்களில் அவளை விட்டு மிகவும் தள்ளி இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. அவள் வீட்டைவிட்டு வந்ததில் இருந்து, அவள் தான் அவளின் ஒரே பிடிப்பு, எப்போதும் அவள் செயல்கள் எல்லாம் அவளை சார்ந்தே இருக்கும், வேலை, படிப்பு, பொழுதுபோக்கு கூட அவளைக்கொண்டு தான் திட்டமிடுவாள். ஆனால் இந்த சில நாட்கள் அவள் மிகவும் தனிமையாக உணர்ந்தாள். இந்த நாட்கள் அவளை பற்றி சிந்தனையை அவளுக்குள் ஏற்படுத்தி இருந்தது. இது தான் வாழ்வு என்று முடிவான பிறகு, மகளுக்காக எல்லாம் என்றாலும், அவளும் தன்னுடன் நிரந்திரமாக இருக்க போவது இல்லை, அவள் வளர்வாள், கல்லூரி, வேலை, திருமணம் என்று அவளுக்கு என்று ஒரு வாழ்வை அவளும் வாழ தானே வேண்டும். அப்போது நான் எப்படி? இந்த சில நாள் தனிமையே இப்படி இருக்கு, பின்னாளில் என் செய்வேன் என்று எண்ணங்கள் மனதில், ஏதோ எண்ணங்கள் அழுத்தங்கள், இத்தனை நாட்கள் ஒடிய ஒட்டங்கள் இவற்றை எல்லாம் யோசிக்கவிடவில்லை என்பதை விட தோன்றவில்லை.
இன்று எல்லாம் மனதை குழப்பிக்கொண்டு இருந்தது. மகளை அழைத்து வரலாமா என்று நினைத்து கிழே வருபவள், அவள் மலர்ந்த முகந்நில் இருக்கும் சிரிப்பை பார்த்தாள் என்றாள், அதை கெடுக்க மனம் இல்லாமல் வந்துவிடுவாள். என் தான் மகள் தன்னோடு இருந்தாலும், இப்படி, இவ்வளவு பேசியது இல்லை, இவளாக பேசினால் கூட பள்ளி, நன்பர்கள், விளையாட்டு இப்படி தான் இருக்கும் இவர்கள் பேச்சு. சிறிது நேரத்தில் அவள் பொம்மைகளுடன் விளையாட போய்விட, இவள் பாட புத்தகத்துடன் அமர்ந்துவிடுவாள். ஆனால் இவனுடன் மட்டும் இவள் பேச்சுகள், நீண்டு கொண்டே இருக்கும்.
பரிடீ எனக்கு ஒரு டவுட் என்று ஆரம்பிக்கும் இவர்கள் பேச்சுகள், லைட் எப்படி எரியுது?
சாப்பாடு சூடா இருக்கு அதல புகை வருது………………. ஜஸ்கிரிம்லா புகை வருதே அது ஏன் சில்லினு இருக்கு?
தாத்தா சாப்பிட்ட குட்டி மாத்திரை, தாத்தாவோட பெரிய வயத்துல தொலைஞ்சி போகாதா?
காத்தாடி ஏன் மேல பறக்குது?
இதுல (ஸ்டேத்) எப்படி சத்தம் வருது? உள்ள டிவி இருக்கா?
என்று இவள் கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கும்……………………. எல்லாவற்றிக்கும் அவனிடம் பதிலும் இருக்கும். இவர்கள் பேச்சை சிறிது நேரம் கவணிப்பவள், அவர்களை கலைக்க விரும்பாமால் மேலே வந்துவிடுவாள்…………………..
ஆனால் இப்போது, பரிதியுடன் மகளின் இனக்கம் அவளுக்கு கலக்கத்தை கொடுத்து இருந்தது, இவன் ஊருக்கு சென்றுவிட்டால் மகள் என்ன செய்வாள், என்பது தான் அவள் எண்ணமாக இருந்தது.
…………………….
இவள் இப்படி நினைத்து இருக்க, மகன் இப்படி இத்தனை நாட்கள் கடந்தும் வீட்டில் இருப்பது பாக்கியாவுக்கு ஒரு ஆசுவாசத்தை கொடுத்து இருந்தது. மகன் எங்கே இப்படியே குடும்பத்துடன் ஒட்டாமல் இருந்துவிடுவான்னோ என்று நினைத்து இருந்தவர். இப்போது அவன் இப்படி இருப்பது மகிழ்ச்சியை கொடுத்து. இப்படியே இவன் திருமணத்திற்க்கும் சம்மதித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியவர், அவனிடம் பேசுவதற்க்கு தக்க சமயத்தை பார்த்து இருந்தார். அன்று சனிக்கிழமை காலை உணவை பரிதி மதிக்கு ஊட்டியபடி அவளுடன் பேசிக்கொண்டு இருந்தான். அருகில் வந்து அமர்ந்தவர். பரிதி இன்னும் எத்தனை நாட்கள் லீவ் இருக்குப்பா?
என்றார்……….
ஏன் மா………… ஒரு மாசம் லீவ் எழுதி கொடுத்து வந்து இருக்கேன். வேணும்னா இன்னும் நீட்டிக்கலாம் மா…… அப்பாவோட ஹெல்த் பார்த்துட்டு முடிவு பன்னலாம்மா என்றான். நீ ஊருக்கு போய்டுவியா என்றாள் மதி அவனை பார்த்து.
ஏன் என்றான் அவள் முகம் பரார்த்து…………………..
அவள் முகம் வாடிவிட்டடது………….. அதை தாங்காதவன் நீ சொன்ன இங்கேயே இருக்கேன் என்றான்…………
அதில் பூவாய் மலர்ந்தவள் …………… அவனை கட்டிக்கொண்டு கண்ணத்தில் முத்தம் வைக்க……………….
அப்படியே உன் பரிடீய கல்யாணமும் பன்னிக்க சொல்லு என்றார் பாக்கியா………………
மா குழந்தைகிட்ட என்ன பேசுறிங்க என்றான் கண்டிப்புடன்………………
ஏன் நான் என்ன தப்பா சொல்லிட்டேன். இன்னும் எத்தனை நாள் கடத்துவே நீ. உனக்கு என்ன வருசம் போக போக வயசு குறையுதா என்ன?
ஒழுங்க இந்த வாட்டி கல்யாணம் பண்ணிகிற வழிய பார். முடிஞ்சா இங்கயே வந்துரு இன்னும் எத்தனை நாளைக்கு ஊர் ஊரா திரிய போற என்றார். அவர்கள் பேசியதில் பெரும்பாலும் புறியவில்லை என்றாலும். கல்யாணம் முடிந்தால் அவன் இங்கேயே இருப்பான் என்பது வரை புரிந்து அவளுக்கு.
பரிடீ கல்யாணம் பன்னிக்க இங்க இரு என்றாள் அவன் தாடையை பிடித்து கொஞ்சிக்கொண்டு…………….
தனியாக தான் இருக்கும் போது அம்மா இந்த பேச்சை எடுத்து இருந்தால் என்ன சொல்லி இருப்பானோ……….. இப்போது மதியை வைத்துக்கொண்டு ஏதும் சொல்ல முடியவில்லை. சரி மதி குட்டிக்காக பன்னலாம் ஆனா வர ஆண்டி உங்க கூட பேச வேண்டாம் சொல்லிட்டா என்றான் அவளை பார்த்து. அதில் அவள் முகம் மறுபடியும் வாடிவிட…………………………..
பாக்கியாவின் முகத்தை பார்த்தாள் குழந்தை, அது எல்லாம் சொல்ல மாட்டாங்க…………….. நம்ம அழகு குட்டியை யாரும் வேண்டாம் என்று சொல்லுவார்களா என்ன? என்றவர் மேலும்……………………. உன் பரிடீ கல்யாணம் பண்ணிக்க போறது மணி ஆண்டிய!!!!!!!!!! தான்……………………………. அதனால் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டா என்றார். அதில் அதிர்ந்து போனவது பரிதியின் முறையானது. மதியோ மகிழ்ச்சியில கைகள் தட்டி சிரித்து இருந்தாள்.
அம்மா வழக்கமாக சொல்லுவது போல் திருமணம் பற்றி பேசுகிறார் என்று நினைத்தவன், இப்போது வரை அதை விளையாட்டகவே பேசி இருக்க, இப்படி திடீர் என்று மணிமேகலையை சொல்லுவார் என்று என்னவில்லை.
அம்மா என்ன பேசுறிங்க நீங்க மணியை போய், என்றான். ஏன்டா அவளுக்கு என்ன குறை, ஒரு வேளை அவளுக்கு நடந்தை பத்தி யோசிக்கறயா……………….. அவ ஒரு விதவைனு நினைக்கிறயா? என்றார் மகனிடம் கலக்கமாக…………..
மா என்ன பேசுறீங்க நீங்க, அவ நான் பார்த்து வளந்த பெண்ணுமா………… அவளை போய் எப்படி நான் அப்படி நினைப்பேன். ஆனா அவளை நான் கல்யாணம் அப்படினு யேசித்து இல்லைமா………… என்றான்…..
அதில் பெருமூச்சுவிட்டவர் அவ்வளவு தானே…………. இங்க பார் டா இப்போ யாரையாவது பார்த்தாலும் அவ உனக்கு புதுசு தான்………… உனக்கு அவளை நல்ல தெரியும் அவளும் எனக்கு மக மாதிரி தான்டா………….. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கனும்…….. வேற ஒரு பையனா பார்த்து முடிச்சுவைச்சா அது சரியா அமையிலனா, அது தான் நல்லா தெரிஞ்ச நீங்க இரண்டு பேரும் சேர்ந்தா நல்லா இருக்கும் டா. என்றார்
மணி என்ன சொன்னா? என்றான் மகன்…………….
முதலில் நீ சொல்லு அவளை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பெறுப்பு, அவளை கட்டாய படுத்த மாட்டேன் என்றார் அவன் முகம் பார்த்து. சரிமா பேசிட்டு சொல்லுங்க. நானும் இதை பற்றி யோசிக்கிறேன் என்றான். மகன் இவ்வளவு சொல்லியதோ போதும் என்று நினைத்தவர் அத்தோடு அந்த பேச்சை முடித்துக்கொண்டார். அன்றே அதை பற்றி மணிமேகலையிடமும் பேசிவிட்டார்முதலில் திகைத்தவள், அப்படி தனக்கு ஒரு எண்ணமே இல்லை என்று கூற சரி வேறு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்றார். அதற்கும் அவள் மறுப்பு கூற. இப்படியே உன்னை விட முடியாது உனக்கு திருமணம் செய்வது முடிவான ஒன்று, யார் மாப்பிளை என்று தேர்ந்து எடுக்கும் உரிமை மட்டுமே உனக்கு என்றவர், நாளை எனக்கு முடிவு சொல்லு என்றார், மறுத்து கூற வந்தவளை. என்னையும் நீ உன் அம்மா மாதிரி நினைக்கிறனா எனக்கு பதில் வேனும் என்றவர் சென்றுவிட்டார்.
கேட்டவள் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
………………………
இங்கே இப்படி சென்றுக்கொண்டு இருக்க, அன்று இரவு கனேசன் ரத்தினத்திடம் பேச்கொண்டு இருந்தார், மறுநாள் மகளிடம் திருமணம் பற்றி பேசப்போவதாக. அதன் படி அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை அவள் வீட்டின் முன்னாள் நின்று இருந்தார். அன்று விடுமுறை என்பதால் விழிப்பு வந்தாலும் படுக்கையில் இருந்து எழாமல் அப்படியே மகளை அனைத்த படி படுத்து இருந்தாள். நினைவுகள் குழம்பி கிடந்தன, எதிர்காலம் பயம் கொள்ள செய்தது.