கதிர் அன்றை பிரச்சனைக்கு பின் போனவன் சென்னையில் தங்கிவிட, அதையும் கூட ஊர்மக்கள் ஈட்டுகட்டி தான் பேசினார்கள். அந்த கோவம் ஒரு புறம். விவசாயத்தை அடுத்து அனைத்து தொழில்களும் கதிர் தான் இதுவரை பார்த்துவந்தான். இப்போது அவன் இல்லாமல், கனசனும் ஏதும் செய்ய இயலாமல் வீட்டில் முடங்கிவிட, அடுத்து எல்லாம் அன்புவின் கீழ் வந்து இருந்தது. அதன் பின் கதிர் கனேசனுடன் ஆரம்பித்த தொழில்கள் அத்தனையிலும் இருந்து முற்றிலும் விலகி கொண்டவன். தனக்கு என பால் பன்னையும், தேங்காய் நார் தொழிலையும் மட்டும் வைத்துக்கொண்டு, அதையும் தன் நன்பர்கள் வசம்ஒப்படைத்தவன், வாரம் ஒரு முறை சென்று பார்த்து வருவான்.
அதில் அவனுக்கு நல்ல வருமானம் இருந்தாலும், தன் தேவைக்கு என சென்னையில் அவன் சம்பாதிக்கும் பனத்தை மட்டுமே செலவு செய்பவன். அழகிக்காக அங்கேயே தங்கி கொண்டன். அவளுக்கு ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக்கொடுக்காமல் தன் வாழ்வை பார்பதில்லை என்ற முடிவுடன்.
இந்த நிலையில் தான் அவள் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்தாள். கனேசன் முற்றிலும் உடைந்து இருந்தார். இப்போது திருமணம் வேண்டாம் என்று சொன்ன பெண்ணை கட்டாயபடுத்தி, இப்போது அவள் வாழ்வை இப்படி செய்துவிட்டேன் என்ற வருத்தம் அவருக்கு. அவர் அன்புவிடம் அது பற்றி பேச, அவன் இப்போதும் அவன் முடிவில் உறுதியாக இருந்தான். அந்த குழந்தை இல்லாமல், அவளை ஏற்றுக்கொள்கிறேன் என்றவன். அவள் எப்படியும் அதற்கு சம்மதிக்க மாட்டாள் என்று அறிவான். கனேசன் அவளுடன் பேச முயற்சித்து எல்லாம் வீணாய் போய்விட, அன்புவும் விவாகரத்துக்கு சம்மதித்து இருந்தான். இவர்கள் பரஸ்பரமாக விவாகரத்துக்கு சம்மதித்து இருந்ததால் வழக்கு எளிமையாக முடிந்து, இவர்கள் திருமணம் ரத்தானது. இதன் நடுவில் கதிரழிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தாள். அப்போதும் அவளுடன் பாக்கிய, மணிமேகலை, மற்றும் கதிர் மட்டுமே இருந்தனர்.
கதிரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அவன் கைகளில் குழந்தையை வாங்கிய போது, முதலில் அழகியை கைகளில் வாங்கி ஞாபகம் அவனுக்கு. அதோ போல் பஞ்சு பெதியை போல் இருந்த அந்த தேவதையை கைகளில் எந்திய தருமணம் அவன் முகத்தில் வந்து போன மகிழ்வில் மணிமேகலை கூட அவன் மேல் இருந்த கோவம் மறந்து அவனை பார்த்து இருந்தாள். இவனுக்குள் இத்தனை மென்மையா என்று……………..
குழந்தை பேற்றின் போது கூட அவள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. அந்த குழந்தையால் தான் மகளின் வாழ்வு பறிபோனது என்று கனேசன் வர மறுத்துவிட, ரத்தனிம் அவராகவே எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக்கொண்டார். சிறிவர்கள் விஷயம் தெரிந்தாலும்,நேரில் கான இயலாது. கதிர்வேலன் எண்ணுக்கு அழைக்க அவன் வீடியோ காலில் குழந்தையை காட்டினான். பெரியவர்கள் பிரச்சனை பெரியர்களோடு இருக்க, அந்த சிறுவர்கள் இடம் அவன் முகம் திருப்ப முடியவில்லை.
குழந்தை பிறந்து 3ஆவது மாதம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிட, அன்று குழந்தையுடன் கோர்ட்டுக்கு வந்து இருந்தாள் அழகி, உடன் மணிமேகலையும், கதிரும். இப்போதும் கதிர் உடன் அவள் பேசுவது இல்லை தான். ஆனால் குழந்தைக்கும் அவனுக்கும் இருக்கும் பினைப்பை அவள் ஆட்சேபிக்கவில்லை. அவள் மருத்துவமனையில் இருந்த அந்த 3 நாட்களும் அவள் அறைக்கு வெளியே இருப்பவன், குழந்தையின் குரல் கேட்டாள், முதலில் வந்து தூக்குபவனும் அவனே… கதிர்அழகிக்கு மட்டும் இல்லை. அவன் மதியழக்கிகும் தாயுமானவன் தான். அவள் அவர்கள் வீட்டு மாடியில் வாடகைக்கு தனியாக இருந்துக்கொள்ள. வாழ்க்கை அடுத்த கட்டத்தை எட்டியது.
விவாகரத்து கிடைத்த அடுத்த இரு நாட்களில் அன்று நந்தினியை மனந்துக்கொள்ள, யாரும் ஏதும் சொல்லும் நிலையில் இல்லை. அவர்கள் அந்த வீட்டில் தான் தொடர்ந்து வசித்து வந்தனர். ரத்தினம் நந்தினியை
ஒதுக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இ்ல்லை, கனேசனும் அப்படி தான், சிறுவர்கள் வழக்கம் போல் இருந்தனர். அன்பு பேங்க வேலையில் அப்படியே இருந்துவிட, இப்போது சிறியதாக தன் தொழிலை கவணிக்க தொடங்கி இருந்தார் கனேசன். பெயர் அளவில் வீட்டில் எல்லோரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள. அவரவர் வாழ்வு அப்படியே போனது.
குழந்தைக்கு 5 மாதம் முடிந்த நிலையில் மீண்டும் வேலைக்கு செல்வதை பற்றி அழகி பேச வேண்டும் என்று நினைத்தவள், குழந்தையை வைத்துக்கொண்டு எங்கு வேலைக்கு போக என்று யோசித்தாள். முன்பு மாதிரி முழுநாளும் வேலைக்கு செல்ல முடியாது. மனதில் ஒரு முடிவு எடுத்தவள், அதை மணிமேகலையிடமும், பாக்கியாவிடம் சொன்னாள், அவர்களும் ஒப்புக்கொள்ள, அந்த பகுதியில் இருந்த, மகிழுந்து ஒட்டும் பயிற்சி பள்ளியில் சேர்ந்தாள். பயிற்சி வகுப்பு காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரை என்பதால் அந்த நேரத்தில் குழந்தை உறங்கிக்கொண்டு இருப்பாள், அவளை மணிமேகலையிடம் ஒப்படைத்துவிட்டு அவள் வகுப்புக்கு போவாள். அப்படியே 1 மாத்த்தில் நன்றாக ஒட்டி பழகியவள், ஒட்டுனர் உரிமம் எடுத்துக்கொண்டாள், அநே பகுதியில் இருக்கும் மெக்கானீக் ஷெட்டில் ஒரு ஆம்னி வேனை வாடகைக்கு பேசிக்கொண்டவள், அடுத்த ஒரு மாதமும் வண்டியை நன்றாக ஒட்டி பழகினாள், அவளுக்கு நம்பிக்கை வந்த போது அந்த பகுதியில் இருக்கும் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து போய்வர சவாரி பிடித்தாள், அதற்கு பாக்கியாவும், மணிமேகலையும் பெரும் உதவினார்கள்.
தினமும் அவள் வகுப்பு செல்லும் போது மணிமேகலை இங்கு இருப்பதால் காலையில் அவளால் ஏதும் சமைக்க முடிவது இல்லை என்று அறிந்தவள், அவளுக்காக, காலையிலும், மதியமும் சமைத்துக்கொடுத்தாள். இந்த இடைபட்ட நாட்களில் வீட்டில் சமைத்து கொடுத்தாள், முதலில் அதை மறுத்து மணிமேகலை அதன் பின் அவள் உணவின் சுவையில் மயங்கியவள், அதை ஒத்துக்கொண்டாள், அதற்கு பதிலாக மாதம் ஒரு தொகையை கொடுத்துவிடுவாள். அது மட்டும் இல்லாமல் அவள் பள்ளி வேறு ஊருகளில் இருந்து வந்து வேலை பார்க்கும் இரு ஆசிரியர்களுக்கும் பரிந்துரை செய்தவள். அதன் மூலம் அவளுக்கு வருமானம் வரும்படி செய்தாள்.
இப்படி தட்டு தடுமாரி தன் வாழ்வை தானே சரி செய்தவள் குழந்தையுடன் அவள் வாழ்வை மகிச்சியாகவே கொண்டு சென்றாள். அவளை அத்துடன் விடாமல், மீண்டும் அவளை தொலைதூரகல்வியில் சேர்க்கவைத்தாள் மணிமேகலை, திருமணத்துக்கு முன்புவரை அவள் வீட்டை தவிர ஏதும் தெரியாமல் ராஜகுமாரி போல் வளரைக்கப்பட்டவள், இப்போது வாழ்வின் மறுபக்கத்தையும் வாழ கற்றுக்கொண்டாள்.
முதலில் குழந்தையை பெரியதாக எடுத்துக்கொள்ளாத கனேசன், நீதிமன்றத்தில் அவளை குழந்தையுடன் பார்த்தவுடன் அருக்கு மனதில் சின்ன தடுமாற்றம், தன் மகளுக்கு ஒரு குழந்தை, அதை நினைத்த போதே அவருக்கு என்னவே பன்னியது, கதிர் ஊருக்கு வரும் போது அவன் நன்பர்களுடன் அழகியை பற்றியும், குழந்தையை பற்றியும் பேச கேட்பவர், குழந்தையை பார்க்கும் ஆர்வம் மேலிட, ஒரு நாள் சென்னை வந்தவர், பாக்கியாவின் வீட்டுக்கும் வந்துவிட்டார், அப்போது குழந்தைக்கு 2 வயது ஆகி இருந்தது, நடை பழக தொடங்கி இருந்தாள், அன்று அவள் இளநிலை பரிட்சைக்கு சென்று இருக்க,குழந்தை பாக்கியாவிடம் இருந்தது.
வந்தவரை பார்த்து பாக்கியா திகைத்தாலும், அவரை வரவேற்றார், வந்தவர் குழந்தை தூக்கிக்கொள்ள ஏதும் சொல்லவில்லை அவர். மாலைவரை குழந்தையுடன் இருந்தவர், மகள் வந்ததும் அவளையும் பார்த்துவிட்டு தான் கிளம்பினார். வந்தவரை ஒரு பார்வை பார்த்தளே தவிர ஏதும் பேசவில்லை. அதன் பின் அதுவே தொடர்கதை யாக, அவர் வருவது வாடிக்கையானது மகள் ஏதும் பேசவில்லை என்றாலும், குழந்தையை தாங்குவார், சில சமயம் இவர் இருக்கும் போது கதிரும் வருவான். இருவரும் ஏதும் பேசிக்கொள்வது இல்லை.
இப்படியே ஒரு வருடம் ஒடி இருந்தது. இப்போது எல்லாம் இவர்உடன் ரத்தினமும் வருவார். கடைசி முறை தான் நந்தினியும், அன்புவும் வந்து போனது. அதுவும் ரத்தினம் வந்து குழந்தையை பார்த்து செல்லவும், வீட்டில் மிதியை பற்றிய பேச்சு தான், குழந்தை அவனை போல் இருப்பாதாக அவர் கூற, வீட்டில் சிறுவர்களும் சி சமயம் கதிருடன் பேசும் போது, குழந்தையை காட்டி இருக்க, அவனுக்கும் குழந்தையை பார்க்கும் ஆர்வம்.
அவர்கள் திருமணம் முடிந்து இன்று வரை குழந்தை இல்லை. மருத்துவனையில் சேதித்த போது எந்த குறையும் இல்லை. என்றே கூறினர். ஆனாலும் நாட்கள் கடக்க இருவருக்கும் அது ஒரு பாரத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் நந்தினிக்கு ஏற்கனவே அவள் இந்த வீட்டில் வாழும் வாழ்க்கை அவளுக்கு சலிப்பை கொடுத்து இருந்தது. அவள் நினைத்து வந்த வாழ்வு என்பது வசதியான, காதல் கனவனுடன் சந்தோசமான வாழ்வு, ஆனால் இங்கு எல்லாம் இருந்தும் அவளுக்கு ஏதும் இல்லை. ரத்தினம் கேள்வி கேட்டாள் மட்டுமே பேசுவார், வீட்டில் எல்லாம் இருக்கும், ஆனால் எதையும் உரிமையாக எடுத்து செய்ய முடியாது அவளுக்கு, அன்புவும், உனக்கு வேண்டும் என்றாள் எடுத்துக்கொள்ளு என்று சொல்லுவான்னே தவிர, அவன் கொடுத்தது இல்லை. புடவை, நகை என எல்லாம் அவள் கேட்டாள் கிடைக்கும், ஆனால் அவளாக அதை, அந்த வீட்டில் உள்ளதை அனுபவிக்க முடியாது. இப்படியான நிலையில் குழந்தை இல்லாதது அவளுக்கு பெரிய விஷயமாக இருந்தது. அதுவும் கணவன் தற்போது அழகியின் குழந்தையின் மேல் காட்டும் ஆர்வம் அவளை நிலை இழக்க செய்துக்கொண்டு இருந்தது.
இதில் தற்பொது கணவன் மனதில் இருப்பது அறிந்தாள் அவள் நிலை என்னவோ……………………..