இதுல சொல்ல என்ன இருக்கு, எனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை. என்னோடு வாழ வரனும்னா இதை கலைச்சிடு வா…………………………………… இல்லைனா உனக்கும் எனகும் ஒத்துவாராது.  நான் என் வழியை பார்த்திகிறேன் அருகில் நின்று இருந்த நந்தினியை பார்த்தபடி, அதிலேயே அங்கு இருப்பவர்களுக்கு எது அவன் வழி என்று புரிந்து போனது. அதில் கனேசன் அதிர்ந்து போனார். எங்கே தன் மகள் வாழ்கை கெட்டுவிடுமோ என்ற பயம் அவரை சூழ்ந்துக்கொள்ள, இப்படி எல்லாம் பேசாத அன்பு நான் அவ கிட்ட பேசுறேன் என்றவர். மகள் புறம் திரும்ப, அவள் பார்த்த பார்வையில் தடுமாறிதான் போனார். ஆனாலும் சமாளித்துக்கொண்டு, அழகி என்று அவர் ஆரம்பிக்க கை நீட்டி தடுத்தவள். இவ்வளவு நேரம் நீங்க எல்லோரும் பேசினீங்க.  இப்போ நான பேசவா…………. என்றாள் அவனை பார்த்தபடி………………. 

இந்த கல்யாணம் பேச ஆரம்பித்த போது,  என்னை கேட்டு முடிவு பன்னலை, 

இவன் தான் மாப்பிள்ளை என்று நான் முடிவு பன்னலை,

இங்க இருக்காளே நந்தினி இவளும் நீயும் காதலித்துக்கொண்டு இருந்திங்கனு இவ வந்து சொன்னப்ப கூட உன் மேல் நம்பிக்கைவைச்சு,  நானா  எந்த முடிவும் எடுக்கலை,

இந்த நிமிஷம் வரைக்கும் என் வாழ்கையில் எதும் நானே முடிவு பன்னது இல்லை. எல்லாத்தையும் என்னையை சுத்தி இருக்கவங்க தான் முடிவு பன்னி இருக்கீங்க, ஆனா இந்த நிமிஷம் முதல் என் வாழ்க்கையை நானே பார்த்துகிறேன். இந்த குழந்தை பத்தின முடிவு என்னோடது. நீ என்ன சொல்லுறது நானே சொல்லுறேன் இந்த குழந்தைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இனி இல்லை.  அதை பெத்துகனுமா, வேனாமானு நான் முடிவு பன்னனும். அதுக்கு காரணம் யாருனு எனக்கு தெரியும், அதை தெரியபடுத்த வேண்டிய நேரத்தில் இந்த ஊருக்கும் சொல்லுவேன் என்றவள்.

கனேசன் புறம் திரும்பினாள். இத்தனை வருஷம் வளர்த்த பெண்ணு மேல் நம்பிக்கையில்லை, ஏவனோ சொன்னா, அதுக்காக என் குழந்தைய……………. என்றவள் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது, அதற்கு மேல் ஏதும் பேசவில்லை அவள், தன் அறைக்கு சொன்றவள், தான் அனிந்து இருந்த நகைகளை கழற்றி வைத்தவள், தாலியையும் கழற்றி இருந்தாள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தளை பார்த்து அதிர்ந்து நின்று இருந்தனர் எல்லோரும். இதோ இந்த வீட்டுக்கும் எனக்கும் இருக்கும் சம்பந்தம் இதோட முடிந்து போச்சு………………….. ஆனா எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கனும் உன்கிட்ட என்றவள். ஒரு வேளை நான் இந்த குழந்தையை கலைச்சிட்டு வந்தா அப்போ இவளை என்ன பன்னி இருப்ப என்று நந்தினியை கைகாட்டி கேட்க, அதிர்ந்து தான் போனால் அவள், அழகி சொல்வது உன்மை தானே, இவர்கள் இருவரும் சமாதனமாக போய் இருந்தால் என் நிலை என்னவாகி இருக்கும். என்று எண்ணியவள் கலங்கி போனாள். அப்போதும் அவள் செய்தது தவறு என்று அவளுக்கு புரியவில்லை. தன் நிலையை பற்றியே யோசித்தாள். 

ஏய்…………….. என்ன பேசுற மரியாதையா பேசு, நான் ஒன்னும் உன்னமாதிரி கல்யாணம் ஆன அடுத்த நாளே எவனையோ தேடி போகலா, நாங்க இரண்டு பேரும் இன்னும் எந்த தப்புமும் பன்னல என்றான் அவன் திமிராக……………….. ஒ அப்போ தப்புனா உங்க பாஷையில் அடுத்தவன் கூட படுக்கறது மட்டும் தான்………………. மனசுல ஒருத்திய வைச்சிகிட்டு நீ என் கூட வாழ்ந்தது துரோகம் கிடையாது. இப்பவும், இந்தனை நாள் இவ கூட ஒன்னா சுத்திட்டு, எல்லா கதையும் பேசிட்டு, பெரிய மனசு பன்னி எனக்கு நீ வாழ்க்கை தர வேண்டாம். கடைசி வரை அவளுகாவது உண்மையா இரு!!!!!!!!! என்றவள். 

அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட, போகும் அவளை வெறித்தவன், இந்த திமிருக்கு தான்டி இப்படி இருக்க, போ அப்பதான் என் அருமை தெரியும் என்பது போல் இருக்க. கனேசனும் ரத்தினமும் செய்வது அறியாது நின்று இருந்தனர். கதிர் அவள் பின்னால் செல்ல போக, நான் சொன்னது உன்னையும் சேர்த்து தான் என்றவள், வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள். நேராக பேருந்து நிறுத்தம் வந்தவள் அப்படியே அமர்ந்துவிட்டாள். அந்த நேரத்தில் சென்னை செல்வதற்காக அங்கு பாக்கியலட்சுமி வந்தவர்,எல்லா விவரங்களையும் அறிந்து இருந்தவர். அவளை பார்த்து எங்கே போக போற என்றார். ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தவள் அவரையே பார்க்க, என் கூட என் வீட்டுக்கு வா? என்றவர் அவளை சென்னை அழைத்து வந்து இருந்தார். அப்போதே அவள் குடும்பத்துக்கும் தகவல் கொடுத்தும் இருந்தார்.

சரி ஏதோ கோவத்தில் போகிறாள், சில நாட்களில் திரும்பி விடுவாள் என்று நினைத்து இருக்க, அதற்கு மாறாக இருந்தது அவள் நடவடிக்கைகள். 

சென்னை வந்தவள் இரண்டு நாட்கள் பாக்கியாவின் வீட்டில் தான் இருந்தாள், அவரும் அவள் போக்கில் விட்டவர், இப்படியே எத்தனை நாட்கள் இருக்க முடியும் கதிரழகி என்றவர். அந்த நேரத்தில் நீ கோவத்தில் எந்த தப்பான முடிவுக்கும் போய்ட கூடாதுனு தான் உன்னை கூட்டி வந்தேன். உன்னை சின்ன வயசில் இருந்து பார்த்து இருக்கேன். என்னோட மானவி நீ இப்படியே மூலையில் உட்கார்ந்து காலத்தை ஒட முடியாது. 

சீக்கரம் உன் வாழ்க்கையை பற்றி ஒரு முடிவு எடு, ஒருவேளை உன் வீட்டுக்கு திரும்ப போக விரும்பின சொல்லு நான் கூட்டி போறேன். என்றவர் அவளை யோசிக்கவிட்டார். மேலும் இரு நாட்கள் சென்று இருந்தது, அன்று மாடியில் நின்று இருந்தாள், வீட்டை விட்டு வந்துவிட்டாள், அடுத்த என்ன என்பது தான் தெரியாவில்லை. இதுவரை எல்லாவற்றையும் வீடு என்று கூட்டுக்குள் இருந்து பார்த்தவள். தனக்காக எல்லாவற்றையும் செய்ய அப்பா, மாமா, பாட்டி என்று தன்னை சுற்றி உறவுகளுடன் வளர்ந்தவள், இன்று அடுத்து என்ன………………… என்ற கேள்வி மட்டுமே………………

அப்படியே நின்று இருந்தவள் பார்வை அங்கே கதிருடன் சன்டை போட்டுக்கு கொண்டு இருந்த பெண் மேல் படிந்தது. யார் இது, இவள் எதற்கு கதிருடன் சன்டை போடுகிறாள்???????????????? என்று பார்த்து இருந்தவள் கீழே வந்து இருந்தாள். 

அவர்கள் அருகில் செல்ல………………….

டேய்………. யாருடா நீ? நானும் பார்த்துட்டு இருக்கேன் 2 நாளா என் வீட்டு வாசல உட்காந்து இருக்க, என்ன நினைச்சுட்டு இருக்க………… நானும் எவ்வளவு தன்மையா சொன்னேன் இங்க எல்லாம் உட்காராதேனு!!!! பார்க்க டிப்டாப்பா இருக்க……….. நல்லா தானே இருக்க……………… வேலை வெட்டிக்கு போகாமா………. தினமும் இங்க வந்து உட்காந்து இருக்கியே……………… உன்னை எல்லாம்………. என்று அவள் ஏக கடுப்பில் கத்திக்கொண்டு இருக்க……………………. 

இந்த நிறுத்து நான் என்ன உன் வீட்டுலயா உட்காந்து இருக்கேன்…………………….

தெருவில் உட்கார உன்கிட்ட கேக்கனுமா என்ன? என்னமோ இந்த ஏரியாவே உன்னது மாதிரி பேசுற என்றான் அவன்………………… என என்று இவர்கள் இருவருக்கும் காரசாரமான பேச்சு போய்க்கொண்டு இருக்க……………. இங்க என்ன பன்றிங்க  என்ற குரலில் திரும்பி பார்த்தவன், அழகி என்றான். ஆம் கதிர் தான் அங்கு அமர்ந்து இருந்தான். அவள் சென்னை வந்த அன்று இரவே அவனும் வந்து இருந்தான். இங்கு தான் தங்கி இருக்கிறாள் என்று தெரியும், அவளை அப்படியே விட்டு செல்ல அவனுக்கு மனம் இல்லை,அது அவனால் முடியவும் முடியாது, பாக்கியலட்சுமியை அவனும் அறிவான் தான். ஆனால் அவர் வீட்டுக்கு சொல்ல அவனுக்கு துணிவு இல்லை, தான் செய்த தவறு தான் இப்போது இவள் நிலைக்கு காரணம் என்று மறுகியவன் எப்படியாவது இந்த நிலையில் இருந்து அவளை மீட்டு நல்ல வாழ்வை அவளுக்கு அமைத்து கொடுத்துவிட நினைத்தான். 

அதனால் அங்கேயே இருந்தவன், அவளை பார்க்க முயன்று அவள் வெளியில் வருவாள் என்று நினைத்து அவள் பார்வை படும் தூரத்தில் இருந்தான். ஆனால் இப்படி ஒரு நிலையில் அவள் பார்வையில் படுவோம் என்று நினைக்கவில்லை. என் பன்றீங்க இங்க, என்றாள் அவனை பார்த்து, அது அழகி இங்க பார் என் கோவகம் இருந்தாலும் அதை நம்ம வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம், இப்படி யார் வீட்டிலேயோ வந்து இருப்பது நல்லா இல்லை. என்று அவன் மேலே என்ன சொல்லி இருப்பானோ………… அவனை கை நீட்டி தடுத்தவள். இப்போதைக்கு எனக்கு யாரும் இல்லை, யாரை நம்பியும் நான் இங்க வரவும் இல்லை. இத்தனை நாள் நீங்க எல்லோரும் எனக்கு பன்னது எல்லாம் போதும், இனிமே என் வாழ்க்கையை நானே பார்த்துபேன், நீங்க எனக்கு ஏதாவது செய்ய நினைச்சா, இனிமே இப்படி வந்து நிக்காதீ்ங்க……….. என்றவள் உள்ளே சென்றுவிட………….. அதுவரை இருந்த உடல் மொழி மாறி எதிர் இருந்தவளை முறைத்தவன். இப்போ உனக்கு திருப்பியா……………… என்று கடிந்தவன், அங்கு இருந்து நகர்ந்து இருந்தான்..

அன்று இரவு பாக்கியலட்சுமி அவளை பார்த்து என்ன மணி இப்படி பன்னிட்ட, அந்த பையன் கூட உனக்கு என்ன பிரச்சனை, நான் தான் அந்த பையன் யாருனு உன் கிட்ட சொல்லி இருந்தேன் தானே என்றார். 

ஆம் மணிமேகலை அவர் எதிர் வீட்டில் வசிப்பவள், தாய், தந்தையை, கணவன், என அனைத்து உறவுகளையும்  ஒரு விபத்தில் இழந்தவள். அதுவும் திருமண நாள் அன்றே!!!!!!!! சிறு வயது முதல் அவளை அவருக்கு தெரியும் அவளை அரவனைத்து தேற்றியது பாக்கியா தான்…………………….. கதிரழகி இங்கு அழைத்து வந்த அன்றே அவளை பற்றி மேலோட்டமாக சொல்லி இருந்தார். அப்போது கதிரை பற்றியும். அதனால் தான் அவள் அப்படி சன்டையிட்ட போத ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டு இருந்தார்.

பின் என்ன ஆண்டி, எல்லோரும் சேர்ந்து, அந்த புள்ளைய வீட்டை விட்டு வெளிய வர அளவுக்கு எல்லாத்தையும் பன்னிட்டு, இப்பவந்து நான் ரொம்ப நல்லவன் அப்படின்ற மாதிரி இங்கு ஒக்காந்து இருந்தா…………………… கடுப்பாகுதா இல்லையா………………….. அதான் என்று பேசிக்கொண்டு இருந்தவள் திரும்ப அவள் பின்னால் நின்று இருந்தாள் அழகி………………

    

தொடரும்…………….