அன்பு பேசியதை கேட்டு குடும்பமே அதிர்ந்து நின்று இருந்தாலும், கதிரழகி முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவள் இது போல் ஒன்றை தான் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தாலே……….. அதனால் நடப்பதை வேடிக்கை பார்க்கும் மூன்றாம் மனிதர் போல் அங்கு நின்று இருந்தாள். அவன் பேசிக்கொண்டு இருக்க எதிர்ச்சையாக பாட்டி படுத்து இருந்த படுக்கையை பார்க்க, அவள் தன் கைகளை அசைத்து தலையை தூக்க முயன்று, கண்களில் கண்ணீர் வழியே ஏதோ சொல்ல முயன்றுக்கொண்டு இருந்தார். அதுவரை அங்கு நின்று இருந்தவள் பாட்டியின் கட்டில் அருகே வந்து அமர்ந்தால். என்ன செய்து பாட்டி, அகிலா தண்ணீர் கொண்டுவா………….. என்று சொல்லிக்கொண்டே, அவர் நெஞ்சை நீவிட்டவள், அவரை அமைதி படுத்த முயன்றாள்.
ஆனாலும் அவர் துடிப்பு அடங்கவில்லை. தன் பேத்தியின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். பார்வை அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தது. அதில் இருந்த தவிப்பும், என்னை மண்ணித்துவிடு, என்று அவர் யாசிப்பது போல் இருந்தது. இதுவரை கல் போல் நின்று இருந்தவள், கண்களில் இப்போது கண்ணீர். உங்களுக்கு ஒன்னும் இல்லை பாட்டி, பாருங்க…….. என்னை பாருங்க…………… இந்தாங்க…… இந்த தண்ணீர் குடிங்க, என்று சொல்லி அவரை தன் மேல் சாய்த்துக்கொண்டு தண்ணீர் புகட்ட அவள் முலய, அதை தட்டிவிட்டு, அவளை பார்த்து இருந்தார். அவள் கைகளை கெட்டியாக பிடித்து இருந்தவர், கண்ணில் இரண்டும் நிலைகுத்தி நின்றுவிட, அவர் பிடி மட்டும் அப்படியே இருந்தது.
அவளுக்கு புரிந்தது, பாட்டி இப்போது இல்லை, ஆனால் அதை தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இதுவரை தனக்காக என்று இருந்த ஜீவனும் இப்போது இல்லாமல் போய்விட்டதை அவளால் ஏற்றுக்கொள்ள தான் முடிவில்லை. இங்கு நடப்பவற்றை மற்ற எல்லோரும் கையாலாகதனத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். கனேசன் முற்றிலும் இடிந்து போனார். அவரை தேற்ற கூடிய இருவர் ஒன்று மகள் அவள் பாட்டியின் கையை வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்தாள், மற்றோருவர் கதிர் அவன் அவர் புறம் திரும்பவேயில்லை. ரத்தினத்திற்க்கு இப்போது ஏது செய்யவும் பயமாக இருந்தது. நடந்து முடிந்த அத்தனை நிகழ்வுகளும் அவரை அப்படி ஆட்டுவித்து இருந்தது. அகிலனும், முகிலனும் செய்வது அறியாது நின்று இருக்க. அன்புவுக்கும் இது அதிர்ச்சி தான், அடுத்து என்ன வென்று யோசிக்க கூட நேரம் இல்லாது, வீட்டு வேலையாட்கள் மூலம் விஷயம் கேள்விபட்டு வந்த உறவினர்கள், மற்றவர்களுக்கு தகவல் சொல்ல, அடுத்தது வேலைகள் நடைபெற்றது யாரின் அனுமதியும் இன்றி, வீட்டினர் எல்லோரும் இருந்த இடத்தில் அப்படியே மூலையில் அமர்ந்துவிட, அந்த குடும்பத்தில் பெரியவர் 3 தலைமுறைகளை பார்த்தவர். அதற்கான மரியாதையுடன், அவருக்கு ஈமச்சடங்கான வேலைகள் நடந்துக்கொண்டு இருந்து. பெரும்பாலன உறவினர்கள் அந்த ஊரிலேயே இருந்தால், ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக்கொண்டனர்.
இது இப்படி இருக்க, புறம் பேசுபவர்களும் இருக்க நான் செய்தார்கள், ஆமா, அழகி கர்பமானது, அதை தொடர்ந்து வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள், என்று காற்றுவாக்கில் செய்தி சென்று அது கைமுளைத்து கால் முளைத்து முழு உருவமே பெற்று இருந்தது. அங்கே சிலர் அன்புவுக்கு ஆதரவாகவும், சிலர் கதிரழகிக்கு ஆதராகவும் பேசிக்கொண்டு இருந்தனர். இது ஏதும் அந்த வீட்டில் இருந்தவர்கள் காதுகளில் சேரவில்லை. இருவரை தவிர, ஒன்று அன்பழகன், மற்றோன்று ரத்தினம். இருவருக்கும் சுற்றி இருப்பவர்கள் பேசும் பேச்சுகள் காதில் விழுந்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அன்புவும், அடுத்து இவன் என்ன செய்ய இருக்கிறானோ என்ற பயத்தில் ரத்தினமும் அமர்ந்து இருந்தனர். ஒருவழியாக சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து இருக்க, யாரோ ஒருவர், கனேசனை எழுப்பி, அவர் தலையில் தண்ணீரை உற்றினர்கள், வெள்ளை வேட்டி உடுத்தி அழைத்து வர பெற்றவர், அடுத்த அடுத்த சடங்கள் செய்ய, அந்த பெரிய மனுஷியின் சகாப்தம் அந்த வீட்டில் முடிந்தது. அதுவரை அவரையே பார்த்து இருந்தாள் அழகி, அவர் அவள் வாழ்வில் இன்றியமையாதவர், எப்போதும், அவள் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்விலும் அவரின் பங்கு உண்டு, இன்று அவர் இல்லை, அந்த வீட்டின் மூலை முடுக்கு எல்லாம் அவரின் ஞாபகங்கள், எல்லாவற்றையும் நினைத்து பார்த்து கண்ணீர் பெருகிற்று. எல்லாம் முடிந்து சுடுகாட்டுக்கு சென்றவர்கள் திரும்பி இருக்க, இருக்கும் வேளைகளை உறவினர்கள் வீட்டின்வேலையாட்களை வைத்து பார்த்துக்கொள்ள, எல்லோரும் ஒவ்வெரு மூலையில் சுருண்டு இருந்தனர். அடுத்து வந்த நாட்கள் எல்லாம் முறைபடி சடங்குகள் நடைபெற பாட்டியின் 16ஆம் நாள் காரியமும் முடிந்து, எல்லோரும் அமர்ந்து இருந்தனர். பாட்டி இறந்தது முதல் இன்று வரை, அந்த வீட்டில் யாரும் யாருடனும் பேசவில்லை. ஆனால் இவர்களை பற்றிய பேச்சு அங்கு நடந்துக்கொண்டு தான் இருந்தது.
அழகி எல்லாவற்றையும் கவணித்தாலும் ஏதும் பேசவில்லை. கனேசன் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. கதிர் அழகியை பார்த்துக்கொள்ளவதை தவிர எனக்கு எந்த வேலையும் இல்லை என்பது போல் இருந்தான். ரத்தினமோ எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயத்தில் இருந்தார். அன்புவும் கூட அடுத்து என்ன என்பதில் தான் இருந்தான்.
இப்படி எல்லோரும் அமர்ந்து இருக்க, ரத்தினத்தின் பக்க உறவினர் ஒருவர் பேச்சை தொடங்கினார். கனேசா நடந்தது நடந்து போச்சு, அதை நினைத்துக்கொண்டே இருந்தால் ஆச்சா…. இனி நடக்க போவதை பற்றி என்ன முடிவு எடுக்கனும், அதை பேசுறதைவிட்டு…………… என்றார். என்னபா சொல்லவர என்று மற்றோருவர் கேட்க……………….. ஏன் உனக்கு ஏதும் தெரியாதா………………….
எதுக்கு மறைச்சி பேசிகிட்டு, ஊருக்கே தெரிந்த விஷயம் தான், கனேசன் பெண்ணு கர்பமா இருக்கு, ஆனா அன்பு அது என் புள்ள இல்லனு சொல்லுறான். அதுக்காக அந்த புள்ள மேல சந்தேகபடல, இந்த கதிர் பைய மேல அவனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் அவன் பெண்டாட்டிய வீட்டு கொடுக்க அவனுக்கு விருப்பம் இல்லை. ஆனா இந்த குழந்தை வேண்டாமனு சொல்லூறான். இவங்க என்ன பதில் சொல்லுறாங்கனு ………………….. என்று பேசிக்கொண்டு இருந்தவர் முன் ஒரு அரிவாள் வந்து விழ அனைவரும் வாய்யை மூடி இருந்தனர். அங்கு கதிர் நின்று இருந்தான். அவன் நின்று இருந்த தோற்றமே, இனி இதை பற்றி யாரேனும் பேசினால் வெட்டுவேன் என்பது போல் இருக்க. அன்பு தான் முன் வந்து நின்றான். என்னடா பயமுறுத்துறியா? நீ அருவா எடுத்த எனக்கு எடுக்க எத்தனை நேரம் எடுக்கும். இவங்க வாய்யொல்லாம் எத்தனை நாளைக்கு உன்னால் மூட முடியும். உன்மை ஒரு நாள் வந்தோ தீரும்.
என்னவோ நீங்க எல்லாம் நல்லவங்க மாதிரிரும், நான் கெட்டவன் மாதிரியும் பேசுறிங்க. உங்க மனசாட்சி படி சொல்லுங்க, உங்க வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடந்து, அந்த பெண்ணு கர்பமா இருந்த எந்த விதமான சந்தோகமும் இல்லாம அந்த பெண்ணை ஏத்துப்பிங்களா? வெளியில் சொல்லவில்லை என்றாலும், மனசில் அந்த பெண்ணு அப்படி போனவதானே? அந்த புள்ள யாருக்கு உண்டானதோச்சோனு? உங்க யாருக்கும் தோனாது? அவ்வளவு ஏன் இதே ஊரில், அந்த புள்ள பெறந்து வளர்ந்தா, அதை பார்க்கும் போது எல்லாம் இந்த ஊரில் இருக்கவங்க, அந்த குழந்தைய பத்தி ஏதும் பேசாமயா இருப்பிங்க? அது பெறந்து அப்படி கஷ்டபடுறதவிட, அது இல்லாம போட்டும், அதை நான் வெளிப்படையா சொல்லட்டேன். நீங்க எல்லோரும் மனதில் வைச்சி இருக்கீங்க, நீங்கள் எல்லாம் நல்லவன் நான் மட்டும் கெட்டவனா? என்றான் அங்கு இருந்த யாரும் வாய் திறக்கவில்லை. இப்போது அழகிக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட, இது சரிதானே என்பது போல் பார்த்து இருந்தனர். அவ்வளவு ஏன் கனேசன், ரத்தினம் கூட வாய் திறந்து ஏதும் பேசவில்லை.
கதிர் செய்வது அறியாது நின்று இருந்தான். தன்னால் எப்படி பட்ட நிலையில் நிற்கிறாள் இவள், இங்க பாருங்கையா……………………….. அந்த பெண்ணு மேல் எந்த தப்பும் இல்லை. அவளை நான் தான் கூட்டி போனேன். அதுவும் அவளுக்கு உடம்பு சரியில்லைனு தான். அன்னிக்கு முழுக்க நாங்க ஆஸ்பத்திரியில் தான் இருந்தோம், வேணும்னா மணிகன்டன் கிட்ட கேளுங்க, அவனும் அன்னிக்கு எங்கு கூட தான் இருந்தான். என்றான் தன்னை நிருபித்துவிடும் வேகத்தில்.
ம்க்கும்…………… வேலிக்கு ஒனான் சாட்சியா?
அன்னிக்கு நீங்க அங்க தான் இருந்தீங்கனு எங்களுக்கும் இங்கு இருக்கும் எல்லோருக்கும் தெரியும், அவன் புருசன் எனக்கு தான் சொல்ல….. ஏன் அவன் அப்பாகிட்ட தகவல் செல்லவேண்டியது தானே……… அங்க நீங்க தனி ரூமில் தானே இருந்தீங்க…………… அதுவும் அந்த ஆஸ்பிட்டலில்…………… நீ தான் அவ புருஷன் சொல்லி இருக்க ………………. என்று மேலும் வார்த்தைகளை விட்டு இருந்தான் அன்பழகன். யாரும் ஒரு வார்த்தை கூட மறுத்தோ, அவனை எதிர்த்தோ பேசவில்லை. அவன் சொன்னது போல் நாளை ஊரில் இருப்பவர்கள் பேச தான் செய்வார்கள். இப்போது நாம் ஏதும் பேசினால் அப்போது வந்து நீ தானே அன்னிக்கு வக்காளத்து வாகின என்று இவன் மல்லுக்கு நிற்பான் என்று அனைவரும் அமைதியாக இருக்க.
ஆனால் அந்த அவசியம் ஏதும் அவளுக்கு இல்லை. இதுவரை அவர்களை பேசவிட்டு அமைதியா நின்று இருந்தவள், தன் வாய் திறந்தாள். அவளுக்கு நன்கு தெரியும் இனி யாரும் தனக்கு சாதகமாக பேசபோவது இல்லை. அது தேவையும் இல்லை. இப்போ என்ன சொல்ல வர…………………. என்றாள் அன்பழகன் முகத்தை பார்த்து………………. மரியாதை என்பது மருந்துக்கும் இல்லை அவள் பேச்சில்…………….
அவள் எந்த முறைவைத்தும் அவனை அழைக்கவில்லை, மரியாதையாகவும் அழைக்கவில்லை, அதை அவனும் கவனித்தான். ஆனாலும் அதை பற்றி ஏதும் பேசாமால்.