திருவல்லிக்கேணி ( ட்ரிப்ளிக்கானே) என்று அழைக்கப்படும் இந்த இடம் சென்னையின் ஒரு பிரதான பகுதி, சென்னையில் இருக்கும் எல்லோருக்கும் இந்த இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி இது, புகழ் பெற்ற பார்த்தசாரதி கோயில், எம்.ஏ. சிதம்பரம் மைதானம், வாலாஜா மசூதி, சென்னை பல்கலைகழகம் மற்றும் புகழ் பெற்ற கல்லூரிகள் என்று பல வரலாற்று முக்கியத்துவமான இடங்களை கொண்டது.
இது தவிர இங்கு பல பழைய புத்தகக்கடைகளும் உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய தி.நகர் என்று அழைக்கபடுகிறது. இது தவிர இங்கு நிறைய அச்சகங்கள், ஆடையகங்கள், பல பெரிய மற்றும் சிறிய உணவுவிடுதிகள், மீன் சந்தை, ஜாம் பஜார் என்று இன்னும் பலவற்றை கொண்டது சென்னையின் இந்த பகுதி. இந்த பகுதியில் இருக்கும் திரு.வி.கா தெருவில் தன் காலை வேளைகளில் வழமை போல் பரபரப்பாக இருந்தாள் கதிரழகி, பெயருக்கு ஏற்றது போல் தான் இவளும், இவள் குணமும். காலை நேர சமையலை செய்த படி எட்டி ஹாலில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தாள் அது 6.30 என்றது, இருக்கும் மிச்ச வேலைகளையும் முடித்தவள். அறைக்குள் எட்டி பார்த்தாள்.
தன் இருபுறமும் அவள் வைத்து இருந்த தலையனையை அனைத்தவாறு, சிறியதாக தன் சொப்பு வாய்யை பிளந்த படி உறங்கிக்கொண்டு இருந்தாள் அவள் மகள் மதியழகி. அவள் உறங்கும் வீதமே அவள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாள் என்று சென்னது, அவள் எழுவதற்க்கு முன் குளித்துவிட்டு வந்து விடலாம் என்று அந்த வீட்டின் கடைசி பகுதியில் இருந்து குளியல் அறைகுள் நுழைந்தாள்.
அந்த தெருவில் வீடுகள் மிகவும் நெருக்கமாக இருக்கும், அந்த தெருவில் உள்ள அகலமான வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம், பெரும்பாலும் வீடுகள் அகலம் குறைவாகவும் மிகவும் நெக்கமாக இருக்கும், எந்த வீட்டின் ஜன்னல்களை திறந்தால் அடுத்த வீட்டு சுவர் தான் தெரியும், இவள் இருக்கும் இந்த வீடு கிட்ட தட்ட அப்படி பட்டது தான் இந்த வீடு 60வது களில் கட்டபட்டு இருக்கலாம். கீழ் தளம், மேல் தளம் மற்றும் மொட்டை மாடி என்று இருக்கும் இந்த வீடும் குறுகிய வீடு தான். பிரதான வாசல் ஒட்டி இருக்கும் படிக்கட்டு வழியாக மேல வந்தால், படிக்கட்டு முடியும் இடத்தில் இருவர் உட்காரலாம் என்ற அளவுக்கு இடம் இருக்கும், அதை ஒட்டி கதவு இருக்கும், முதலில் ஹால் போல் ஒரு அறையும், அதை அடுத்த ஒரு அறையும் இருக்கும், இந்த அறையின் பக்கவாட்டில் ஜன்னல்கள் மூலம் கீழ் தளத்தை பார்க்கலாம். இதை தான் அம்மா மகள் இருவரும் படுக்கை அறையாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த அறையில் இருக்கும் ஜன்னல்கள், மேலே மொட்டை மாடி என்பதால் நல்ல வெளிச்சமும், காற்றும் அந்த அறை எப்போதும் புத்துணசை்சியாக இருக்கும். அதை அடுத்து சிறிய பகுதி அதில் ஒரு மூலையில் சமையல் மேடை, அதே பகுதியின் கடைசியில் குளியல் அறை மற்றும் கழிவறை, அதை ஓட்டி மொட்டை மாடிக்கு சொல்லும் படிகட்டுகள். அந்த வீடு அந்த இருவருக்கும் போதுமானதாக இருந்தது
இந்த படிகட்டுகள் தரைதளத்தில் இருந்து இருக்கும், இந்த படி மூலம் கீழ் தளத்திற்க்கும் சொல்லாம், மேலேயும் செல்லாம். அந்த காலத்து கட்டுமானம் இன்னும் உறுதியுடன் இருந்து. சில மாற்றங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றபட்டு இருந்து அந்த வீடு.
அந்த வீட்டின் கீழ் பகுதியில் ராகவன், பாக்கியலட்சும் தம்பதிகள் இருக்கிறார்கள், இதில் பாக்கியலட்சுமி இந்த பகுதியில் இருக்கும் எஸ்.வி என்ற தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியாராக இருக்கிறார். அவர் கனவரும் ஒய்வு பெற்ற அரசு ஆசிரியர் தான், அவர்களின் ஒரே மகன் இராணுவத்தில் மருத்துவனாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறான். பெயர் பரிதி.
குளித்து முடித்து வெளி வந்தவள் மீண்டும் அறை பார்த்தாள். மகள் இன்னும் நல்ல உறக்கத்தில் தான் இருந்தாள், ஒரு மெரூன் நிற காட்டன் சுடிதார் அனிந்து இருந்தவள், தலையை பின்னல் இட்டு, நெற்றிக்கு பொட்டு வைத்துக்கொண்டாள், பின் மகள் அருகில் சென்றவள் அவளை எழுப்பும் முயற்சியில் இறங்கினாள்.
மதி குட்டி எழுந்திரிங்க, காலையில் எல்லோரும் ஸ்கூலுக்கு கிளம்பியாச்சு
நீங்க மட்டும் தூங்கிட்டு இருந்தா, அப்புறம் முதல் நாளே ஸ்கூலுக்கு லேட் தான் என்றாள், மகள் அவள் குரல் கேட்டு புரண்டு படுத்தாளே ஒழியே எழுந்திரிக்கவில்லை. அதில் அவள் முகத்தில் மெல்லிய புன்னகை.
குட்டி செல்லம், பட்டு மா…………. தங்கம் இல்ல நீங்க………….
வாங்க வாங்க நமக்கு நேரம் ஆச்சு செல்லம் எழும்புங்க என்று மீண்டும் மகளை எழுப்பியவள், அவள் மறுமடியும் புரண்டு படுக்க அவளை கைகளில் அள்ளிக்கொண்டவள். முன் அறைக்கு வந்து வாசல் கதவை திறந்தாள். அவள் வாசல் கதவை திறக்கவும் அவர்கள் வந்து நிற்கவும் சரியாக இருந்து. அதுவரை அவள் முகத்தில் இருந்த புன்னகை துணிக்கொண்டு துடைத்து போல் இருந்த இடம் தெரியாமல் போனது.
அங்கு நின்று இருந்தவர்களை பார்த்து அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, சிறு தலையசைப்பு மட்டும்மே அவளிடம், உள்ளே சென்று விட்டாள். வந்தவர்களும் இது எங்களுக்கு வழமை தான் என்பது போல் உள்ளே வந்தார்கள், தாங்கள் கொண்டு வந்த பெருட்களை எல்லாம் வைத்தவர்கள் முன் அறையில் அமர்ந்துக்கொண்டனர். ஒரு மூத்த தம்பதியும், ஒரு இளைய தம்பதியும் வந்து இருந்தானர். அவர்களுடன் வந்து இருந்தவன் வாசல் அருகில் இருந்த படிகட்டில் அமர்ந்துக்கொண்டான், அங்கு இருந்த ஜன்னல் வழியாக அந்த அறையை பார்க்க முடியும்.
வந்து இருந்தவர்களின் மனதில் பல எண்ணங்களில் உழன்றுக்கொண்டு இருந்த போதும் எதையும் காட்டாமல் அமர்ந்து இருந்தனர். உள்ளே சென்றவள் குழந்தையை சுமந்துக்கொண்டு வந்து அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அதோடு என் கடமை முடிந்து என்பது போல் அவர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று நினைவே இல்லாதது போல் மதிகுட்டி குளிக்கலாம்மா? என்று மகளிடம் பேசிய படி குளியல் அறையில் நூழைந்துக்கொண்டாள்.
வந்து இருந்தவர்கள் யாரும் ஏதும் பேசவில்லை, அம்மா மகள் இருவரும் பேசுவது இங்கு வரை இவர்களுக்கு கேட்டது.
ம்மா மா……….. ஸ்கூல்ல என்ன பன்னுவாங்க?
ம்மம்மம்மம்ம உன்னை மாதிரி நிறைய குட்டி பசங்க இருப்பாங்க அவங்க கூட விளையாடலாம், மிஸ் கதை சொல்லுவாங்க, படம் வரையலாம், என்று மகளின் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டு அவளை பல் துலக்க வைத்து, குளிக்க வைத்து, அவள் எடுத்து வைத்து இருந்த பள்ளி சீருடையை அவளுக்கு அனிவித்து, அவள் குட்டி முடியில் ஒரு போனி டைல் போட்டவள், அவளுக்கு குடிக்க பால் கப்பில் பால் கொடுத்தால்.
முதலில் வீட்டுக்கு வந்தவர்களை தூக்க கலக்கத்தில் கவனிக்காத சின்னவள், இப்போது பார்த்து இருந்தாள். ஐய்யா பாட்டி, தாத்தா என்று தன் குட்டி கண்களை உருட்டி அவர்களை பார்த்தவள், அவசரமாக பாலை குடித்து முடித்து அவர்களிடம் ஒடி இருந்தாள். ஒடி வந்தவள் அவளின் தாத்தா மடியில் அமர்ந்து. அவர் கன்னம் பற்றி கொஞ்சி எப்போ வந்த தாத்தா, என்று அவர் முகம் பார்த்து பேசிக்கொண்டு இருந்த பேத்தியை அவர் அருகில் அமர்ந்து இருந்த ரத்தினம் மகிழ்வாய் பார்த்து இருந்தார்.
என்றால் அவர்கள் எதிரில் அமர்ந்து இருந்த அன்பழகன் ஏக்கமாய் பார்த்து இருந்தான், அவன் மனைவி நந்தினியோ நெருப்பில் அமர்ந்து இருப்பது போல், எப்போது இங்கு இருந்து போவோம் என்பது போல் அமர்ந்து இருந்தாள். இதில் அன்பழகனின் பார்வை வேறு அவள் மனதில் கிலியை உண்டு பன்னியது, ஆனாலும் அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அவள் வந்தது முதல் இந்த அவஸ்த்தை எப்போது முடியும் என்பது போல் தான் இருந்தாள்.
ஆனால் அவளை கவனிப்பார் யாரும் இல்லை அங்கு, எல்லோர் பார்வையும் சின்னவளிடம் தான்.
உள்ளே எட்டி பார்த்த சின்னவள், அம்மா எங்கு இருக்கிறாள் என்று ஒரு முறை பார்த்துக்கொண்டு, தாத்தா எனக்கு என்ன வாங்கிட்டு வந்த என்றால் இரகசிய குரலில், தங்க குட்டிக்கு என்ன வேணுமோ எல்லாம் என்றவர் அவள் கண்ணம் பற்றி நெற்றியில் முத்தம் இட்டார்.
இன்னிக்கு தங்க பிள்ளை ஸ்கூலுக்கு போறிங்க இல்ல, அதனால் பாப்பாக்கு பொம்மை போட்ட பேக், தண்ணீ பாட்டில், குட்டி டப்பபா (ஸ்னக்ஸ் பாக்ஸ்) எல்லாம் வாங்கி வந்து இருக்கேன் என்றவர் அருகில் இருந்த மனைவியிடம் அவர் கொண்டு வந்த பையை எடுத்துக்கொடுக்கும் படி சைகை செய்தார். அவரும் அதை எடுத்து தன் பேத்தி இடத்தில் கொடுக்க, தாத்தாவின் மடியில் இருந்த படியே அந்த பையில் உள்ளதை ஆர்வமாய் ஆசையாக ஆராய்ந்துக்கொண்டு இருந்தாள் மதியழகி.
இதை எல்லாம் பார்த்த படி அமர்ந்து இருந்தான் அன்பழகன். அவன் மட்டும் அல்ல இந்த காட்சியை அந்த வீட்டு மாடி படியை ஒட்டிய ஜன்னல் வழியாக ஒரு சின்ன சிரிப்புடன் படியில் அமர்ந்த படி பார்த்து இருந்தான் கதிர்வேலனும் தான், இவர்களுடன் தான் அவனும் வந்து இருந்தான், ஆனால் அவர்களை போல் அந்த வீட்டினுள் செல்ல அவனால் முடியாது, முடியாது என்பதை விட அது அவனால் இயலாது, இன்று கதிரழகி இருக்கும் இந்த நிலைக்கு முக்கிய காரணம் அவன் அல்லவா.
அவன் மட்டும் அன்று அப்படி நடந்துக்கொள்ளாமல் இருந்து இருந்தால், இன்று அவள், கனவனுடனும், குழந்தைடயுடனும் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பாள். இப்படி யாரும் அற்ற அனாதை போல் இந்த ஊரில், தனக்காக உழைத்து உண்டு மகளையும் பார்த்துக்கொண்டு………………… என்று எண்ணிக்கொண்டு இருந்தவன் கண்களில் ஈரம்………………..
கொஞ்சம் நகர்ந்து நிக்க முடியுமா என்றவள் குரலில், தன் நினைவுக்கு வந்தவன், தன் அருகில் தன்னை எரிக்கும் பார்வையுடன் தன்னை முறைத்துக்கொண்டு இருக்கும் பெண்ணை பார்த்தும் வழியை விட்டு விலகி நின்றான் ஏதும் பேசாமல்.
அவளும் அவனை கடந்து வீட்டினுள் வந்தவள், கதிர் என்றாள் முன் அறையில் நின்ற படி, அங்கு இருக்கும் யாரையும் அவள் கண்டுகொள்ளவில்லை. மதி மட்டும் அவள் வந்தும், குட் மானிங் மிஸ் என்றாள் தாத்தா மடியில் இருந்து எழுந்து நின்று.
அது வரை அவள் முகத்தில் இருந்த கடுமை மறைந்து, மதி குட்டி ஸ்கூலுக்கு கிளம்பிடீங்களா, என்ற படி அவள் அருகில் மண்டி ஈட்டு அமர்ந்தாள்,
சின்னவளும் தன் குண்டு கண்ணம் குழி விழ சிரித்தபடி தலை ஆட்டியவள், இங்கு பாத்திங்களா, என்று தன் பெருட்களை கடை பரப்பினாள். அதை ஆச்சரியமா பார்த்தவள், இது எல்லாம் மதி குட்டிக்கா?