Advertisement

அத்தியாயம் 12

     அவளை  அவனுடைய அப்பாவிடம்  அழைத்து சென்ற போது அவன் அப்பா எழுந்து நின்று மிகவும் சந்தோஷமாக மகனை அணைத்து வாழ்த்து தெரிவித்ததோடு.., மகிமாவின் தலையில் கை வைத்து சந்தோஷமா இருங்க., என்று சொல்லி ஆசீர்வதித்தார்.., இருவரும் அதே இடத்தில் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.., அவனுடைய தம்பியும்., தங்கையும் வாழ்த்து தெரிவித்ததோடு., அவள் தங்கை அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டு சாரி ரொம்ப பிடிக்க முடியல என் வயிறு டிஸ்டர்ப் பண்ணுது என்று சொல்லி அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்…

   அத்தோடு மட்டுமின்றி அழகாக இருக்கீங்க அண்ணி என்று சொன்னாள்.., நிரஞ்சனின் தம்பியும் அவள் கையை பிடித்து குலுக்கி அண்ணி ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் அவ்ளோ சூப்பரா இருக்கு.., என்று சொல்லவும்.,  நாயகி மட்டும் எதுவும் வாயை திறந்து பேசாமல் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தார்..

   அதன் பிறகு அவளோடு வந்தவர்கள் அங்கு தனியாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றுவிட்டான்..,  அங்கு போய் அமர்ந்து “சரி சொல்லு என்ன யோசிக்கிற ஸ்டேஜ்ல வச்சு என் முகத்தை பார்த்த பார்வையிலே தெரிஞ்சுச்சு.., என்னை ஏதாவது மறுப்பு சொல்ல போறியா.., என்று சொன்னதற்கு

         அவள் பதிலேதும் சொல்லாமல் குனிந்தபடி “உங்க அம்மாக்கு இப்பவும் இதில் இஷ்டமில்லை” என்று சொன்னாள்..,

      “அம்மாவை விடு நீ எதுக்கு அவங்களை பத்தி யோசிக்கிற.., அவங்க இன்னைக்கு தான் இப்படி இருக்காங்களா.., அவங்க  எதிர்பார்க்கிறது எல்லாம் நடக்காது என்று தெரியும் அவங்களுக்கே” என்று சொன்னான்..,

       அவளும் “என்ன சொல்லனு தெரில.., ஆனா இது கரெக்ட்டு தானா ன்னு  எனக்கு புரியல” என்று சொல்லவும்..,

       “ஏன் பாம்பேல உன்னுடைய வேலையை விட்டுட்டு வர முடியாதா” என்று கேட்கவும்

          “அப்படியெல்லாம் இல்ல” என்று சொல்லும்போதே அருகில் இருந்த அவளுடைய உதவியாளர் பெண்கள்..

       “சார் அதெல்லாம் மாதத்திற்கு ஒரு தடவை வந்தா போதும் மற்றபடி அங்க நாங்க ஸ்டாப்ஸ் எத்தனை பேர் இருக்கோம்.., சூப்பரா பண்ணிக்கலாம்.., மேம் நீங்க நெனச்சா மாசத்துலஎன்ன வாரத்தில் ஒரு நாள் கூட மும்பை வந்துட்டு போக முடியும்.., அப்புறம் எதுக்கு சார் தயங்குறீங்க.., நீங்க கூட்டிட்டு போங்க”.., என்று சொல்லும் போது உதவியாளர் பெண்களை நோக்கி திரும்பி பார்க்கவும்…,

         “மேம் சும்மா சும்மா முறைக்காதீங்க.., எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா உங்க ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம்..,  சூப்பரா இருக்கு சார் சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோங்க” என்று சொல்லவும்

       “அவனும் கூடிய சீக்கிரத்தில் திருமணம் இருக்கும்”.., என்று சொன்னதோடு அவளை தன்னோடு சென்னை அழைத்து செல்வதாக சொல்ல.,

    “அவள் இல்லை மும்பையில் வேலை எல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறேன்.., இப்போது மும்பை போகவேண்டும்” என்று சொல்லவும்

      “அவனும் சரி., நானும் உன்னோடு மும்பை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் குடும்பத்தாரை சென்னை அனுப்பிவிட்டு அவளோடு மும்பை கிளம்பி விட்டான்.. அவளை கையோடு சென்னை அழைத்துக் கொண்டு செல்வதற்காக.., அவன் அப்பாவிடம் சொல்லி திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் விரைவாக நடக்கும் படியும் ஏற்பாடு செய்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு மும்பை சென்றான்..,

      மும்பைக்கு வந்தவன் அவளுக்கான தொழில் விஷயங்களில் அவள் எப்போதாவது வந்து பார்த்துக் கொள்ளும்படி மட்டும் வைத்துவிட்டு..,  மற்ற படி நம்பிக்கையான ஆட்களை ஏற்பாடு செய்து வேலையில் அமர்த்தினான்.., ஏற்கனவே வேலை பார்த்தவர்களில் நம்பிக்கையானவர்களை தலைமைப் பொறுப்பை ஏற்க சொல்லி பார்த்துக் கொண்டான்.., அவள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ வரும் படி பார்த்துக் கொள்ளலாம் மற்றபடி இங்கு உள்ளவர்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும், என்ற முடிவோடு ஏற்பாடு செய்தான்…

       முக்கியமான விஐபிகளுக்கு மட்டும் உடை விஷயங்களில் மகிமா நேரடியாக கவனிப்பாள்.., மற்றபடி இங்கு உள்ளவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பேச்சோடு கம்பெனியில் அவளுடைய தொழில் பொறுப்பை நம்பிக்கையானவர்கள் கையில் ஒப்படைத்து விட்டு அவளை தன்னோடு அழைத்துக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்…

       அவள் தங்கியிருந்த வீட்டை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு.., அவளுக்கு தேவையானதை மட்டும் அவள் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு..,  அவள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்..,

     ஏற்கனவே அவள் அதிகமான பொருட்கள் வாங்கி வைக்கவில்லை., அதன்பொருட்டு அவளுக்கு சுத்தம் செய்வது எளிதாக இருந்தது., அப்படி செய்துகொண்டிருக்கும் போது முதல் முதலாக அவள் வீட்டிற்கு வந்தான்., அதுவரை வெளியே தங்கியிருந்தான் அவளும் அவனை சிரித்த முகமாக வரவேற்றாள்., உள்ளே வந்தவன் கதவை சாத்திவிட்டு கதவில் சாய்ந்தபடி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், வாங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவள்., அவன் வாசலில் நிற்பதை பார்த்து என்ன என்று கேட்கவும் கையை விரித்து., கண்ணால் அவளை அருகில் வரும்படி அழைத்தான்..

      அவன் பார்வையின் பொருளை அவள் உணர்ந்து கொண்டாலும்.., தயக்கம் தடுக்க அருகில் செல்ல முடியவில்லை..  ஆனால் அவன் தன் வலது கையை எடுத்து இடது பக்க நெஞ்சில் வைத்து செய்கையில் சொல்லவும்.., அவன் அன்று விருது வழங்கும் விழாவில் வைத்து சொன்ன இங்க வலிக்குதுடி என்று சொல்லிக் காட்டியதை இப்போது செய்கிறானோ..,  என்ற எண்ணத்தில் மெதுவாக அவன் பக்கத்தில் வரவும் இழுத்து அணைத்துக் கொண்டான்..

     அவன் மார்பில் தலை சாய்த்து இருந்தவளுக்கு.., அவனது இதயத்துடிப்பு தெளிவாக கேட்டது.., அது வேகமாக அடித்துக் கொள்வதை அவளால் உணர முடிந்தது.., அவன் இறுக்கி அணைத்து இருந்தது.., நினைவுகளை  ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளை இழுத்துக்கொண்டு சென்றது., இதே போல் தான் அன்றும் அந்த பள்ளத்தாக்கில் உருளும் போது அவனது அணைப்பு இருந்தது..

  ஆனால் அன்று அவள் அவன் மார்பில் தலை சாய்க்க வில்லை தோளில் தலை பதித்து இருந்தால் அதனால் தான் அவன் மேல் இடிக்க வரும் கற்களும் மரங்களும் அவளுக்கு தெரிந்தது..

    இன்று அவன் மார்பில் சாய்ந்த அவள்.., தலையை தூக்க கூட இல்லை அப்படியே சாய்ந்து நிற்க அவன் கன்னத்தை அவள் உச்சந்தலையில் பதித்து அவனும் சாய்ந்து நின்றான்.., அவனது அணைப்பு இறுக.., இவள் மெதுவாக அவன் முதுகுப்புறமாக கைகொடுத்து அவன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.., அதன் பிறகு சற்று நேரம் இருவரும் சிலை போலவே நின்றனர் அவன் செல்லில் அழைப்பு மணி அழைத்து இருவரையும் உலகத்திற்கு கொண்டு வந்தது..

       அவனுடைய டெக்ஸ்டைல் மில்லில் இருந்து அழைப்பு வந்ததால் அதை பேசிவிட்டு வரும் வரை அவள் விலக நினைக்க…, அவனோ ஒருகையால் அணைத்தபடியே இருந்தான்., அவளை அங்கு இங்கு எங்கும் நகர விடாமல் பிடித்தபடி வைத்திருந்தான்.., போனை வைத்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணுக்குள் என்ன தேடினான் என்று அவனிடம் தான் கேட்க வேண்டும்.., அந்த அளவுக்கு உற்றுப்பார்த்தான்., சற்று நேரத்தில் என்ன என்று அவள் கேட்க உனக்கு ஓகேவா என்று கேட்கவும்.., இவள் ம்ம் என்று மட்டும் பதில் சொன்னாள்…

         அவன் மெதுவாக அவள் நெற்றியில் இதழ் பதித்து முத்தமிட்டுவிட்டு.., பின்பு கண்ணம்., கண், மூக்கு, என்று முத்தங்களால் அவள் முகத்தில் ஊர்வலம் நடத்த தொடங்கியவன் அவள் இதழில் முத்தமிடும் போது மட்டும் சற்று வன்மையாகவே முத்தமிட்டான்..,

   முதலில் அவன் வன்மையான முத்தத்திற்கு அவள் விலக நினைத்து.., அவன் மேல் கையை வைத்து தள்ள முயன்றாள்., சற்றுநேரத்தில் அவனுடைய கண்ணைப் பார்த்தவள் அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை., அவனுடைய இதழ் முத்தத்தை முடிக்கும் வரை பொறுமையாக அவனுக்கு தன் இதழை கொடுத்துவிட்டு காத்திருந்தாள்…

      முத்தமிட்டு முடித்தவன் மீண்டும் அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து இறுக்கிக் கொண்டான்.., அவளுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் புரியவில்லை., ஒருவேளை மற்றவர்கள் இருவரையும் சம்பந்தப்படுத்தி பேசி விட்டார்கள் என்பதற்காக கல்யாணம் வரை சென்று இருக்கிறானா., இல்லை உண்மையிலே பிடித்திருக்கிறதா என்ற எண்ணம் தோன்றியது.., பின்பு அவளை அவளே கேள்வி கேட்டுக் கொண்டாள்.., உனக்கு பிடிச்சிருக்கு இல்ல என்று அவள் மனசாட்சி கேட்கும் போது.., கண்டிப்பா எனக்கு பிடிச்சிருக்கு.., ஆனா அன்னைக்கு என்னைய அப்படி பார்த்துக்கிட்டாங்க..,

        அது மட்டுமில்லாம., எங்க வீட்ல என்ன தப்பா பேசும் போது கூட எனக்காக பேசின ஒரே ஜீவன் அவங்க மட்டும் தான்.., எங்க அண்ணன் கூட எனக்காக எங்கம்மா, அப்பாட்ட எதிர்த்து பேசல..,  அதுனால பிடிச்சியிருக்கலாம்.., மனசாட்சி இடம் சொல்லிக்கொண்டிருந்தாள், ஆனால் மனசாட்சியோ.., ஏய் யாருகிட்ட பொய் சொல்லுற அந்த காட்டுக்குள்ள இருக்கும் போது உன் மனநிலை என்ன ன்னு எனக்கு தெரியும்..,அதுனால தான் இப்ப நீ இப்படி அவனோட கைக்குள் அடங்கி நிக்குற என்றது… எல்லாம் சரி.. ஆனால் அவங்களுக்கு என்ற எண்ணம் தோன்றும் போது மெதுவாக அவன் மார்பிலிருந்து தலையை தூக்கி அவன் முகம் காண முயற்சித்தாள்….

    அவள் அவன் முகம் காண முயற்சித்த உடனே என்ன என்று அவன் கேட்க.., என்னை ஏன் உங்களுக்கு புடிச்சது என்று கேட்கும்போது….

     “தெரியல ஆனா அன்னைக்கு நீ கீழே விழும்போது நான் ரொம்ப பயந்துட்டேன்.., உனக்கு ஏதாச்சு ஒன்னு னா உன்ன காப்பாத்தணும்.., இல்லாட்டி உனக்கு எதுனா உன்னோடு சேர்ந்து எனக்கும் சேர்ந்து ஆகட்டும்.., அப்படிங்கற னாலதான் அன்னைக்கு உள்ள இறங்கினேன்.., ஆனா ரெண்டு பேரும் உருண்டு போகும் போது என்னை நீ கூட என்ன தள்ளி விட்டுட்டு போக ட்ரை பண்ண ஆனா நான் உன்ன விடவே கூடாது என்கிற முடிவோடு தான் உன்னை அழுத்தமாக பிடித்து இருந்தேன்.., என்ன ஆனாலும் சரி உன்னோட சேர்ந்து எனக்கு ஆகட்டும் அப்படிங்கிற முடிவோடு தான் வந்தேன்..,

    ஆனால் இரண்டு இடங்களில் எனக்கு ஏதும் ஆகிர கூடாதுன்னு நீதான் அவசரமா அந்தக் கல்லை தட்டிவிடும் போதும் சரி.., அந்த மரத்து பக்கத்தில் வரும் போதும் என் தலையை உன்னோடு சேர்த்து அழுத்திப் பிடித்திருந்த என் மேல படக் கூடாது என்று அப்பவும் சரி.., கண்டிப்பா என்னை உனக்கு பிடிக்கும் அப்படின்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு..,

      அதுமட்டுமில்லாம உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம.., உன் மனச கலைக்கக் கூடாது ன்னு.., நினைச்சேன்., ஆனா அங்க உள்ளவங்க  பேசின மலையாளம் புரியல.., அந்த பாரியா என்கிற வார்த்தை பிலிம்ல எல்லாம் பார்த்து இருக்கேன்.., மனைவியின் அர்த்தம் அதனால தான் உங்க மனைவியான ன்னு அவங்க கேட்கும் போது ஆமாம் சொல்லிட்டேன்.., அப்புறமும் நம்ம மேல வந்ததுக்கப்புறம் கூட ரெண்டு வீட்டிலேயும் பிரச்சனை ஆரம்பிக்கும் போது., அப்பவே எனக்கு உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்ட்டா என்னன்னு தோணுச்சு..,, அப்போ எனக்கு நிலையான வேலை இல்ல.., ஆனா காலேஜ்ல வொர்க் இருந்துச்சு.., உன்னை படிக்க வைக்கக் கூடிய அளவுக்கு தகுதி இருந்துச்சு.., உன்னோட படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் வேற ஏதாவது பார்க்கலாம் அப்படின்னு தான் ஃபர்ஸ்ட் யோசிச்சேன்.., ஆனா உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிட்டா., அப்புறம் இந்த படத்துல வர்ற சினிமா டயலாக் எல்லாம் சொல்லிட்டு என்னால தள்ளி இருக்க முடியாது ன்னு எனக்கு அன்னைக்கு தோணுச்சு.., அதனால தான் உன் படிப்பு முடியட்டும் சொல்லி காலேஜ்ல பேசி உன்னை விட்டேன்.., ஆனா காலேஜ்ல பெரிய பிரச்சினை வர வேண்டியது நீ சாதாரணமாக விட்டுட்ட அப்படிங்கிற தால காலேஜ்ல உன் படிப்பு செலவை அவங்களே ஏத்துக்கிட்டாங்க…  உங்க அண்ணன் கட்டிக்குறேன்னு சொன்னாங்க.., ஆனா காலேஜ்ல தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.., உன் படிப்பு முடிந்த உடனே..,  நான் பிசினஸ் ஆரம்பிச்ச உடனே உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன் ஆனா.., அப்பவும் நீ உனக்கு கிடைத்த வேலை ல ஜெயிக்கனும் என்பதற்காக வெளிய வந்துட்டேன்.., நீ யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாது நினைக்கிற.., சரி கொஞ்ச நாள் தனியா இருக்கணும் நினைக்கிற இருக்கட்டும் அப்படின்னு நினைச்சேன்..,

      அதுமட்டுமில்லாம உன்னோட திறமை வீணாகி விடக் கூடாது என்று யோசிச்சேன்..  நீ அனுப்புன கிப்ட் பார்த்தவுடன் சத்தியமா சொல்றேன் டி.., அப்ப முடிவு பண்ணேன் நீ எங்க இருந்தாலும் உன்னை தூக்கிட்டு வந்து தாலி கட்டினும் ன்னு.., அந்த டைம்ல பிசினஸ் கொஞ்சம் ஒர்க் டைட்டா இருந்துச்சு.., அதுமட்டுமில்லாம அப்பதான் நீயும் இந்த பீல்டில் கால் ஊன ஆரம்பித்திருந்த…, சோ வெயிட் பண்ணுனேன்., இந்த நாளுக்காக மட்டும் தான் நான் வெயிட் பண்ணனேன்.,  இந்த அவார்ட் கிடைச்ச உடனே என்ன ஆனாலும் சரி நீ எங்க இருந்தாலும் சரி உன்னை தேடி வந்து கூட்டிட்டு வரணும் அப்படி என்கிற முடிவோடு இருந்தேன்.., அதுக்கப்புறம் தான் தெரியும் நீ  டெல்லிக்கு வர்ற அப்படின்னு.. அதனாலதான் மேடையில் வச்சே நான் அனோன்ஸ் பண்ணிட்டேன்.., உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு.., இப்போ சொல்லு உனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதமா”…  என்று கேட்கவும்

         அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.., “அவனோ ப்பா இப்ப தான் அன்னைக்கி நம்ம ரெண்டு பேரும் கீழே விழும் போது நீ என்ன இருக்கமா புடிச்சிருந்த மாதிரி பிடிச்சி இருக்க… நான் வந்த உடனே உன்னை இருக்கமாக பிடித்துக்கிட்டேன்..,,  ஆனா நீதான் லேட்டா இப்போ பிடிக்கிற” என்று சொல்லவும்..,

                அவன் முதுகிலேயே அடிக்கத் தொடங்கினாள் அவனோ ஒன்று இரண்டு என்று எண்ணத்தொடங்கினான், ஏன் என்று கேட்டதற்கு எல்லாத்தையும்., கணக்கு வச்சு நான் உன்கிட்ட மொத்தமா வாங்கிக்கிறேன்..  என்று சொல்லவும் மேலும் அவன் மார்பில் தலை வைத்து அழுத்திக்கொண்டாள்..

Advertisement