Advertisement
#Final_episode
மகனை மதிய நேர ஓய்விற்காக தனது அறைக்கு அழைத்து வந்திருந்த மைத்ரேயி
அறை முழுவதையும் ரொப்பிய தனது பிம்பத்தினையே பார்த்து அப்படியே திகைத்து நின்றாள்…..
வால் ஸ்டிக்கர் கொண்டு நான்கு பக்க சுவர்களிலும் நான்கு வெவ்வேறு விதமான பஜாரியின் புகைபடங்களை
சுவற்றின் சுவடு தெரியாத வண்ணம்
அச்சடித்து பொருத்தியிருந்தான் அவள் கணவன்……
ஒரு பக்க சுவரை சோட்டு அவன் அன்னைக்கு முத்தமிட்டவாறு அழகுபடுத்த
அதன் எதிர் புற சுவரோ
கல்லூரி கால பாய்- கட்டுடன் தொப்பியை பிடித்து நாக்கினை லேசாக வெளியே நீட்டி ஒரு கண் சிமிட்டி ஸ்டைலாக போஸ் கொடுத்த பிரணாவின் பஜாரியை!!
சொந்தமாக்கி ஜொலித்தது…..
மேலும் வலது புற சுவரில் சோட்டுவின் பஜ்ஜிமா, பெயர் சூட்டும் விழாவில் புடவை உடுத்தியிக்கும் போது எடுத்த புகைப்படம் நிறைந்திருக்க
இடது புற சுவற்றில் கணவனின் சில்மிஷ பேச்சுகளின் போது அவனை வசியம் செய்யும் ரோஜா இதழ்களை திறந்த வண்ணம் அதிர்ந்து விழித்திருந்தாள் …….
இத்தனை நாள் தான் இல்லாத இரவை எப்படி கழித்திருப்பான் என்பதை
அந்த வால் ஸ்டிக்கரிலுள்ள அவளது இதழ்களை ஒட்டியபடி அவன் கட்டிலை திருப்பி போட்டு விளக்கி காட்டியிருந்தான் அவள் அத்தான்…….
மேலும் எவ்வளவிற்கு எவ்வளவு பொருட்களை எடுத்த இடத்தில் வைத்து தனது அறையை கண்காட்சி போல் அலங்கரித்து வந்தானோ
அவ்வளவிற்கு அவ்வளவு அவன் அறை முழுவதும் அவளது
புடவை, ஜீன்ஸ் பேண்ட், லிப்ஸ்டிக், கைக்கடிகாரம், சீப்பு , ஐலைனர், கிளிப் பொருட்களே ஆங்காங்கே தென்பட்டு
சிதறி கிடந்து அவளது வாசத்தினை கூட்டியது…….
அன்னையின் கையிலிருந்து அரை தூக்கத்திலும் கீழே இறங்கிய சோட்டு
ஒவ்வொரு புகைபடத்தின் அருகிலும் மெதுவாக தன் எட்டுகளை எடுத்து வைத்து
” பஜ்ஜிமா ஹவ்வா!!!”
என்று நான்கு முத்தங்களை வழங்கி மீண்டும் அவளை தூக்க சொல்லி அவள் கன்னம்பற்றி
” பஜ்ஜிமா ஹவ்வா !!!!” என்றான்….
இந்த இரண்டு மாதமாக அப்பனும் பிள்ளையும் தனக்கு கொடுத்திருக்கும் முத்தத்தின் அளவை மகனின் செயல் எடுத்துரைக்க
கணவனின் மனம் கொண்ட பாசத்தில் தன்னை லயித்து
மகனின் கன்னங்களை தனதாக்கி கொண்டவள் பிரிவின் போது அவன் தனக்கு வழங்கியதை விடவும் அதிகமான முத்தங்களை பரிசளிக்க தொடங்கினாள்…..
அப்போது அறைக்கதவை வேகமாக
தள்ளியபடி உள்ளே நுழைந்திருந்தவன்
அங்கு கண்ட காட்சியில் புத்துயிர் பெற்றவன் போல் அப்படியே அவள் படம் தாங்கிய சுவற்றோடு சாய்ந்து நின்றான்….
கணவனை பார்த்ததும் அவனிடம் ஓட துடித்த கால்களையும் அவன்புறம் சாய்ந்த மனதையும் கட்டுக்குள் கொண்டுவந்தவள்
” டிவோர்ஸ் பேப்பர்ஸ் எங்கே பிரணாவ் அத்தா….. பிரணாவ் ?????
அதை கொடுத்தாயெனில் சைன் பண்ணி கொடுத்து விட்டு செல்கிறேன்!!!!” என்றாள் முறைக்க முயன்று அதில் இம்முறை வெற்றி கண்டவளாக….
அதற்குள் தன் தந்தையை பார்த்துவிட்டிருந்தவன் ” அப்பா !!!!!” என்று கூறியிருந்தபோதும்
இப்போது அப்பாவிடம் செல்லலாமா????
அப்படி சென்றால் அன்னை எங்கு மறுபடியும் தன்னை விட்டு கிளம்பி விடுவாளோ என்று இருவரையும் மாறி மாறி பார்க்க
மகனின் ஏக்கம் புரிந்து
” அப்பாவிடம் போ சோட்டு …. அம்மா இங்கே தான் இருப்பேன்!!!” என்றாள் கணவனிடம் பேசியதையே மறந்து….
அன்னையின் சொல் புரிந்து அப்பாவிடம் சோட்டு தாவ, பிரணாவ் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை….
அதில் ஏற்கனவே அவன் மேல் சம்பாரித்து வைத்த கோபம் பெருகியபடி அவனருகில் செல்ல
தன் மகனை வாங்கி கொண்டவன் மனைவியிடம் ஏதும் பேசினானில்லை…..
“அப்பா…… இது…. இது …..பஜ்ஜிமா!!!!!” தன்
அன்னையை தந்தைக்கு இமயன் அறிமுகபடுத்தி
போட்டோவிற்கு எப்போதும் கொடுப்பது போல்
” அப்பா….. பஜ்ஜிமா ஹவ்வா!!!!! “
தன் தந்தையையும் அன்னைக்கு நிஜத்திலும் முத்தம் கொடுக்க உந்திதான்……
மகனின் கோரிக்கையில் மைத்ரேயியின் கண்களும் இதழ்களும் விரிய
அதனை கவனியாது
கண நேரத்தில் ரொம்பவும் இயல்பாக அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி பிரித்தவன்
மகன் கண்களை கசக்குவதை பார்த்து
” இது சோட்டுவுடைய நாப் டைம்
ஆயிற்றே????
தூங்கலாமா????” என்று கேட்டபடி அங்கு நின்ற ஒருத்தியை சட்டை செய்யாமல் மெத்தையில் படுக்க வைக்க சென்றான்…
அதில் கோபத்தின் உச்சிக்கு சென்றவள் ” நான் உனக்காக இங்கு வரவில்லை…. என் பையனுக்காக தான் வந்தேன்…….
நாளை அவனுக்கு பிறந்த நாள் !!!!!”
என்றதும் மனைவியை ஏறிட்டு பார்த்த பிரணாவ் உடனே மகனை தூங்க வைக்கும் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டான்…..
வேகமாக அறையை விட்டு வெளியேறியவளை கண்ட யசோதாவும் காஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு
” சாப்பிடு மைத்தி” என்றனர்….
அப்போது வீடு திரும்பியிருந்த கதிரேசன்
மருமகளை கண்டு அகமகிழ்ந்து ” வாமா!!! இப்போது தான் நம் வீடு வீடாக தெரிகிறது !!” என்று கூற
” ஏன் மாமா இரண்டரை மணி ஆகிவிட்டது…
இப்போது தான் சாப்பிட வருகிறீர்கள்????”
என்று கேட்டபடி அவரை உட்கார வைத்து பரிமாற ஆரம்பித்தாள் மைத்ரேயி…
அப்போது கீழே இறங்கி வந்த பிரணாவ்
” அப்பா நாளை சோட்டுவின் பிறந்த நாளாம்!!!!” என்று நிறுத்த
” அப்போது நாளை காலை……..” என்று ஆரம்பித்த காஞ்சனாவிடம்
” நாளை மாலை பிறந்த நாள் விழாவை வைத்து கொள்ளலாம் அம்மா !!!!” என்றிருந்தான் பிரணாவ்…
மேலும் ” பார்ட்டி ஹால் புக் செய்கிறேன் அப்பா….. கிராண்டாக செலிபிரேட் பண்ணலாம்…. ஆஃபிஸிற்கு சென்று
சித்தப்பாவிடம் கேட்டு கொண்டு யார் யாரை அழைப்பது தெரிந்து கொள்கிறேன்……
பிரணிக்கா வீட்டிற்கும் உதிக்கா வீட்டிற்கும்
நீங்கள் நேரில் சென்று கூப்பிட்டு விடுங்கள்!!!!
டின்னர் அரேஞ்மெண்ட், ஃபோட்டோகிராபர் எல்லோரையும் பிடித்தாக வேண்டும்” என்று கூறியபடி கிளம்ப எத்தனித்தவனை
” சாப்பிட்டு போ பிரணாவ்!!!”
என்றிருந்தார் காஞ்சனா….
” தலைக்கு மேல் வேலை கிடக்கு …..
நைட் சாப்பிட்டு கொள்கிறேன் அம்மா !!!”
என்று கூறியவன்
” காலையிலும் நீ சாப்பிடவில்லை பிரணாவ்!!!” என்று அன்னை கூறியதையோ அவருக்கு பக்கத்தில் நின்று தன்னையே பார்த்து கொண்டிருந்தவளையோ
பொருட்படுத்தவில்லை….
கணவன் சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் தொண்டையினுள் இறங்க மறுத்த பருக்கையை தன் யசோத்தையின் வற்புறுத்தலின் பேரில் கொறித்தவள் அவனை பற்றிய எண்ணங்களை புறம் தள்ள முயன்று அதில் தோல்வியையும் தழுவி தன் நேரத்தினை போக்கினாள்…..
இரவு பத்தரை மணி வரையிலும் வாசலிலேயே தன் கண்களை வாடகைக்கு விட்டிருந்தவள் சோட்டு தூக்கத்திற்கு சிணுங்க ஆரம்பிக்கவும் தங்கள் அறைக்கு திரும்பியிருந்தாள்….
மகனை தூங்க வைத்தவளின் வாய் நிறுத்தாது அவளது அத்தானை வசை பாட ஆரம்பித்தது…..
என்ன நினைத்து கொண்டிருக்கிறான்?????
என்னை பற்றிய அக்கறை கொஞ்சமேனும் உள்ளதா பார்????
அவன் பாட்டிற்கு வருகிறான்!!!!! போகிறான்!!!!!
இவனை எல்லாம் யார் கல்யாணம் செய்ய சொன்னார்களாம்?????
என்று புலம்பியவளின் மனசாட்சி
“உதிஅண்ணி!!!!!!!!!!!”
என்று பதில் கொடுக்க
ஹான்….. தெரியும் தெரியும்…. ஆனால் கட்டி கொண்டவன் இவன் தானே????
அதோடு விட்டானா????
என்னென்ன பேசி இருக்கிறான் ????
‘என் உதிக்கா மாதிரி ஒரு பாப்பாடி பஜாரி’
என்று அவன் மனதில் காதல் இல்லாத போதும் தன் பின்னால் திரிந்தவனுக்கு இப்போது என்ன கொம்பு முளைத்துவிட்டதா?????
இப்படி பலவாறு அர்ச்சனைகளை மேற்கொண்டவள் அறையினுள் நுழைந்து கதவை தாளிட்டவனை கண்டதும் கப்சிப் ஆகிவிட்டாள்…..
மதியம் தன்னிடம் உரையாடாதவனிடம் முளைவித்த கோபத்தில்
” இவனுக்கு மட்டும் தான் கோபம் வந்தால் உதிஅண்ணி ரூமிற்கு சென்று படுக்க தெரியுமா?????
எனக்கும் தெரியும்!!!!!”
என்பது போல் எழுந்து முன்னேறியவளை
கதவருகில் கைகட்டி நின்றபடியே இமைக்காது பார்த்திருந்தான் பிரணாவ் …..
” தள்ளி நில்!!!! நான் போக வேண்டும்” என்று கூறியவளுக்கு பதில் ஏதும் கொடுக்காத போதும் வழியும் கொடுக்கவில்லை …
அவன் செய்கையில் கடுப்பானவள்
” உன் மனதில் என்ன பெரிய ஹீரோ என்று நினைப்பா????
வரும் ஆத்திரத்திற்கு எதையாவது செய்து விட போகிறேன் தள்ளு பிரணாவ் ” அழுகையும் ஆவேசமும் போட்டி போட கத்தியவளை
இப்போது தன் பாண்ட் பாக்கெட்டினுள் கையை திணித்து பார்க்க ஆரம்பித்தவனுக்கு எதுவும் பேச தோன்றவில்லை போலும்…..
அதில் அவன் சட்டையை பிடிக்காத குறையாக தன்னை அடக்க வழியின்றி பொறிந்து தள்ளினாள் மைத்ரேயி….
” இப்படி ஃபோட்டோஸ் ஒட்டி அதையே பார்த்து கொண்டிருந்தால் நீ செய்தது எல்லாம் சரியாகி விடுமா????
என்னை பற்றி நினைத்திருந்தால் இப்படி டிவோர்ஸ் பேப்பர்ஸை நீட்டியிருக்க
மாட்டாய் பிரணாவ் அத்தான்….
உனக்கு ஒன்று தெரியுமா???
இந்த படத்தில் எப்படி இருக்கிறேன் பாரு!!!
கல்லூரி வரையிலும் இப்படி தான் முடி வளர்க்க பிடிக்காமல் பாய்-கட் அடித்து சுற்றி திரிந்தேன்….
சரியாக சொல்ல போனால் ஸ்ரீதீப் அவன் காதலை சொல்லும் நாள் வரையில்!!!!!
அவ்வளவு ஆழமான காதலை அவன் அழகாக தெரிவித்த போதும் என்னுள் எந்த வித ஈர்ப்பும் ஏற்படவில்லை……
இப்படி பசங்க மாதிரி திரிவதால் தான் என்னுள் எந்த ஹார்மோனும் ஒழுங்காக வேலை செய்யவில்லையோ என்று என்னை நானே மாற்றி கொள்ள முடிவெடுத்தேன்…..
ஆனால் முடிவளர்த்து குர்தா, லெஹங்கா என டிரெஸ் கோட்- ற்கு தாவி
என்னையையே நான் மாற்றி கொண்ட போதும் எந்த ஹார்மோனும் மாறிவிடவில்லை……
ஆனால் கடத்தப்பட்டதும் உதிஅண்ணி உன்னை பற்றி கூறிய வரியிலேயே
என்னுள் சிறு மாற்றம் !!!
அங்கிருந்த ஒரு வாரமும் உன்னை பற்றியே உதிஅண்ணி கூற கேட்டு கேட்டு
என் பெண்மையை உணர்ந்திருந்தேன்…….
அது காதல் தானா என்று சரியாக தெரியவில்லை !!!!
நண்பனை கிட்டதட்ட வற்புறுத்தி திருமணம் புரியும் நிலையில் இது எதற்கு என்று என்னை நானே திசை திருப்பி கொண்டேன் …..
ஆனால் கல்யாண மண்டபத்தில் உன்னை பார்த்ததும்!!!!!
ஏற்கனவே முதன்முதலில் கலெக்டர் ஆஃபிஸில் உன்னை பார்த்தது நினைவு தட்ட
அதன் பின் ஒன்றும் ஓடவில்லை……
அன்று உன்னை தவிர வேறு யார் தாலி கட்ட வந்திருந்தாலும் அதை நான் அனுமதித்திருக்க மாட்டேன்!!!!!
உள்ளத்தில் நினைத்தவனையே கரம் கோர்த்த பூரிப்பை முழுதாக அனுபவிக்கவிடாமல் அடுத்தடுத்து வந்த தடங்கல்கள்….
அதிலும் நீ விதுவை காதலித்ததை தெரிந்ததும் எப்படி துடித்தேன் தெரியுமா?????
என்ன பிரச்சனை வந்தாலும் சரி உன்னை விட்டு வெகுதூரம் ஓடி போய்விட வேண்டும் என்று முடிவெடுத்த போதுதான்
‘பப்புமாவை தூக்க முடியவில்லைடி
பஜாரி!!’ என்று என்னிடம் ஆறுதல் தேடி கட்டி அணைத்தாய்…..
உன் அணைப்பில் கட்டுண்டவள் தான் இனி விது வந்தாலும் சரி எது வந்தாலும் சரி உன்னை விட்டு மட்டும் பிரிய கூடாது என்று தீர்க்கமாக எண்ணிவிட்டேன்…..
ஆனால் நீ செய்வதை எல்லாம் செய்து விட்டு என்னையையும் துரத்தி அனுப்பிவிட்டு
இப்படி இஞ்சி தின்ற குரங்கு போல் நிற்கிறாய்!!!!!”
படபட பட்டாசாக படபடத்தவள் சற்று மூச்சு வாங்க
மனைவியின் காதலை கேட்டு தன் ஒற்றை புருவத்தினை மட்டும் ஏற்றி இறக்கி அப்போதும் இதழ் பிரியா நின்ற கள்வனை கண்டு கொதித்து தான் போனாள்….
Advertisement