Advertisement
பிரணாவின் விளக்கம் எதுவும் மைத்ரேயியை முழுதாக சென்றடைந்ததா என்று கூட தெரியவில்லை …..
” என்னை பற்றி தெரிந்தும் ஏன் உதிக்கா என்னிடம் மறைத்தாய்???????”
கணவனின் முதல் கேள்வியிலிருந்தே அவளால் முழுதாக வெளிவர முடியவில்லை….
மனைவி தன்னை புறக்கணிப்பதை தாங்கி கொள்ளாதவனாய்
” என்னை மன்னிக்க மாட்டாயாடி பஜாரி?????” பிரணாவ் பிசைந்த அவள் கரம் பற்ற
வேகமாக உருவி கொண்டவளை கண்டு அதிர்ந்தான்…..
” எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடு …. ஏற்று கொள்கிறேன் …
ஆனால் என்னை விட்டு விலக மட்டும் நினைக்காதேடி பஜாரி….
இதுவரை எப்படியோ????
இனி நீயின்றி என்னால் யோசித்து கூட பார்க்க முடியாது!!!! “
உடைந்து போனவனாய் அவள் கன்னங்களை பற்றி கண்களை நேர சந்தித்து உரையாடியவனை அடுத்த நொடியே
இறுக்க கட்டி கொண்டவள்
” நான் ஏன் பிரணாவ் உனக்கு தண்டனை கொடுக்க போகிறேன்?????
உன்னை விட்டு விலக நினைத்தால் அது என் உயிர் இந்த உடம்பை விட்டு பிரியும் சமயம் தான் நடக்கும்!!!”
உணர்ச்சிவசப்பட்டவள் ” அந்த அயோக்யன் செய்வித்த பாவத்திற்கு நீ
அடித்து துவைத்தது எதுவுமே தப்பில்லை…..
அதைவிட எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா ?????” என்றாள் கண்கள் பளிச்சிட….
மயிலறகால் வருடிய அவளது சொற்களிலும்
தென்றலின் கதகதப்பை கூட்டிய அவளது அணைப்பினிலும் முத்து குளித்தவன் தன் இயல்பு நிலைக்கு மாற
மனைவியை தன் கைவளைவிற்குள்ளே நிறுத்தி தன் இரு கைகளையும் விரித்து காண்பித்து
” இவ்வளவு பெருமையாகவா???
இல்லை ” இன்னும் விரித்து
” இவ்வ்வ்வ்வ்வ்வளவாடி பஜாரி????????”
என்றான்….
அவனது செய்கையில் அவளது இதழ்கள்
சிரிப்பை பூட்டி கொள்ள
” இரண்டுமே இல்லை!!!! இங்கே ஒன்று வைத்திருக்கிறாய் அல்லவா??? அவ்வளவு!!!” கணவனின் இதயத்தை சுட்டி காண்பிக்க
அவள் கைகளை மடக்கி
” அன்று அது உன் ஃபிஸ்ட் அளவிற்கு தான் இருக்கும் என்று சொன்னாய்டி பஜாரி?????”
அப்போது அவ்வளவு தானா????????”
முகத்தை கூம்பிய வண்ணம் கேட்டிருந்தான் பிரணாவ்……
” எல்லாருக்கும் அவ்வளவு பெரிது தான் இருக்கும் …..
ஆனால் எனக்கு சொந்தமான இந்த ஹார்ட் மட்டும் ஸ்பெஷல்!!!!
இதன் உயரத்தின் அளவில் இவ்வுலகமே கடுகு ஸைசில் சுற்றி கொண்டிருக்கிறது!!!!! தெரியுமா????”
மனைவியின் விளக்கத்தை பெருமை பொங்க ரசித்தவன்
” ஓ!! அவ்வளவு பெரிதா????????
ஆனால் அவ்வளவு பெரிய ஹார்ட்டிலும் இப்போது ஒரே ஒரு குட்டி ஆசை தான்…….”
என்றவன் அவள் காதருகில்
“இரவு வரை தாங்காதுடி பஜாரி….
இந்த ரூம் கதவை இப்போதே தாழ்ப்பாள் மட்டும் போட்டு கொள்ளவா???????” கிசுகிசுப்பாக உராயவும்
” பப்புமா போட்டுவிடுவாள் நம் இருவரையும்!!!
அதுமட்டுமில்லாமல் எனக்கு நம் அறையில் தான்….”
பேச்சினை தொடர முடியாது மைத்ரேயி நாக்கினை கடித்து கொள்ள
தன் விரல் கொண்டு தன் பஜாரியின் நாவிற்கு விடுதலை அளித்தவன்
” இன்று என்ன ஆனாலும் சரி விழா
முடிந்தவுடன் ஆஃபிஸை கட் அடித்து விட்டு நம் அறைக்கு புறப்படுகிறோம்!!!” என்றான் உறுதியாக…..
அப்போது யசோதா அறைக்கதவை தட்டி “ஐயர் வந்துவிட்டார்…. வாங்க பிரணாவ் வெளியே !!” என்று கூறவும்
” இதோ வந்து விட்டோம் யசோம்மா!!!!” சிற்றன்னைக்கு குரல் கொடுத்தவன்
” வாடி பஜாரி போகலாம்!!!” என்று மனைவியை அழைக்க
” அது…. பிரணாவ் … உன்னிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும் !!!” என்றாள் மைத்ரேயி தயக்கத்துடன்….
அதற்கு
” எது என்றாலும் சொல்லுடி பஜாரி!!! “
பிரணாவ் தைரியமூட்டிய போதும் அவளது வார்த்தைகள் தொண்டையினுள்ளே சிக்கி கொள்ள
” ஹோய் என்ன ஆச்சு???? உன் அத்தானிடம் என்ன தயக்கம்????” என்றான் மனைவியின் தோள்பற்றி ஆதரவாக….
அப்போது ” இப்போது நீ வெளியே வருகிறாயா???? இல்லை நான் உள்ளே வரவா டாங்கி????
உன் மாம்ஸ் நீ இல்லாமல் ஹோம பூஜை செய்ய உட்கார மாட்டேன்கிறார்!!!!”
உதிதா கத்த
“உனக்கு கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையா மங்கி…..
ஒரு சின்ன பையன் இருக்கிறான் என்று கூட பாராமல் நீயும் மாம்ஸும் எப்படி ரொமான்ஸ் பண்ணுவீர்கள்????
இரு வருகிறோம்!!!!” என்று பதில் கொடுத்தவன்
” நீ சொல்லுடி பஜாரி!!!!” அப்போதும் விடாமல் கேட்டான் தன் மனைவியின் மனதை குடையும் விசயத்தை….
கண்டிப்பாக இப்போது அதை தன்னில் சொல்லமுடியாது என்று தெரிந்ததும்
” நாம் போகலாம் பிரணாவ்…” என்றாள் தெளிவாக….
” ஷீயர்?????” என்று கேட்டபடி அவன் அவளை விடுத்து கதவை திறக்க போக
” என்ன சூழ்நிலை வந்தாலும் என்னை வெறுத்து மட்டும் விடாதே பிரணாவ் ??!!!!”
மெல்லிய குரலில் அவ்வளவு பதைபதைப்பை உள்ளடக்கி அவள் சொன்ன விதத்தில்
மறுபடியும் அவளிடத்தில் வந்தவன்
அவள் நெற்றியில் முட்டி
” ஹேய் பைத்தியமாடி பஜாரி நீ ????” என்றவன் அவள் கை பிடித்தே வெளியே கூட்டி சென்றான்….
அங்கு எதிர்பட்ட பிரணிதா ” என்னடா ஹெவியான ரொமான்ஸ் போல????
சும்மா ஒரு ஐம்பது விக்கெட் எடுத்திருப்பாயா?????” என்று ஓட்ட
” தப்பு பிரணிக்கா!!!!” என்றவன் தன் பக்கத்திலிருந்தவளின் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து
” இதையும் சேர்த்து ஐநூறு!!!!” என்று கூறவும்
ஆங்காங்கே நின்றவர்களின் கண்களும் தங்கள் மீதே நிலைத்திருப்பதை கண்டவளோ கணவனை பிடித்து தள்ளி விட்டு ஓடியிருந்தாள்…
” அடங்கவே மாட்டாயாடா நீ ?????” பிரணிதா கூறியதை பொருட்படுத்தாமல்
” வாடா மருமகனே!!!” அவள் கையிலிருந்த ஆதிரனை வாங்கிய பிரணாவ்
” உங்க அத்தையிடம் சென்று நாம் இன்னும் நிறைய விக்கெட் எடுக்கலாம்!!”
என்றபடி சென்றான் …..
பிரணாவை பார்க்கவும் யுகன் உதிதாவுடன் சேர்ந்து மகளை தூக்கியபடி ஐயரின் முன் போய் அமர
அவர் ஓதிய மந்திரங்கள் அனைத்தையும் முறையாக சொல்லலானான்….
அரிசி நிறைந்த தாம்பூலத்தை யுகன் கையில் சேர்த்த ஐயர்
” என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள்????”
என்று வினவ
” மாமா சொல்லுங்கள்….
உங்கள் பேத்தி பெயரை!!” என்றான் யுகன் கதிரேசனிடம் …..
கதிரேசன் ” உங்களுக்கு பிடித்தமான பெயரை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் தானே மாப்பிள்ளை …..”
தயங்கியவர்
” நீங்கள் என்ன பெயர் முடிவு செய்தீர்கள் சம்பந்தி?????” என்றார் கார்த்திகேயனிடம்…..
” நேற்றே என் மருமகள் சொல்லிவிட்டாள் சம்பந்தி !!!
‘ பப்புமா பிறந்தவுடனே என் பெரியப்பா பெயர் தேட ஆரம்பித்திருப்பார் மாமா ‘
என்று!!!
சொல்லுங்கள் சம்பந்தி ….” கார்த்திகேயன் கூறவும் தன் இளைய மகளை வாஞ்சையாக கதிரேசன் பார்க்க
” என்ன பெயர் பெரியப்பா????” சலுகையாக செல்லம் கொஞ்சி கேட்டிருந்தாள் உதிதா…..
” நம் அனைவருக்கும் தித்திப்பை வாரி வழங்கி இனிப்பாய் கிடைத்தவள்……
இனியாள்!!!!!!!!”
என்று கதிரேசன் கூறவும் அங்கிருந்தோர் அனைவரின் முகத்திலும் பளிச்
புன்னகை…..
” எப்படி என் பெரியப்பா செலக்ஷன்????” உதிதா கேட்குமுன்னே
” எப்படி என் மாமாவின் செலக்ஷன்????”
என்றிருந்தான் யுகன்….
அதில் சிரித்தவள் ஐயர் கூற சொன்னபடி
அவர்கள் செல்லமகளின் காதில் மூன்று முறை ” இனியாள்!!! இனியாள்!!! இனியாள்!!!” என்று கூற
அன்னையை தொடர்ந்து தந்தையானவனும் பெயர் சூட்டினான்…
ஐயர் “குழந்தையின் தாய் மாமன் வந்து பெயர் சொல்லட்டும் !!!” என்று கூற
தன் மனைவியை கையோடு அழைத்து வந்த பிரணாவ்
இன்று காலையில் வரும் போது வாங்கி
வந்திருந்த ரூபி நெக்லஸை அவள் கையில் கொடுத்து
” நீ போட்டு விடு!!!!” என்றான்…..
கதிரேசன் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிய தன் மனைவியை ஏறிட எல்லோர் மனதிலும் திருப்தி குடியேறியது….
பிரணிதா ” என் பையன் பெயர் வைக்கும் போது நீ இப்படி ரூபி நெக்லஸ் வாங்கி தரவில்லை பிரணாவ் ” போலியாக சண்டை பிடிக்கவும்
“அப்போது அவன் காலேஜ் தானேடி படித்தான்!!!” காஞ்சனா மகனின் பக்கம் நிற்க பிரணாவோ
” அப்போதே நீ எனக்கு என் ரூபியை தேடி கொடுத்திருந்தாயானால் உனக்கு பார்ட் டைம் ஜாப் பார்த்தாவது ஒரு நெக்லஸை ஏற்பாடு பண்ணி இருப்பேன் பிரணிக்கா!!!!”
என்று கண்ணடித்தான்….
மேலும் ” இப்போதும் ஒன்றும் கெட்டு போய்விடவில்லை…. நீ ஒரு பாப்பாவை பெற்று கொடு பேஷாக செய்துவிடலாம்!!! ” என்று கூறி
” உன் அம்மாவிடம் தங்கச்சி பேபி கேளுடா ஆதி!!!!” என்றான்…
அதில் ஆதிரன் ” அம்மா ஒரு தங்கச்சி பேபி வாங்கி கொடு இப்பவே!!!” என்று நச்சரிக்க ஆரம்பிக்க
” வச்சு செய்கிறாய் மாப்பிள்ளை!!!” என்று பிரணாவிடம் தன் கட்டை விரலை உயர்த்தி இருந்தான் பிரணிதாவின் கணவன் கவின் …..
பின் ஒருவர் பின் ஒருவராக யுகன் வீட்டின் இனியவளின் காதில் அவள் நாமத்தை ஓத
” எவ்வளவு அழகான பெயர் வைத்திருக்கிறார் பாரு!!!!
நீ எப்படிடி பஜாரி என் பையனுக்கு
‘சோட்டு’ என்று இப்படி ஒரு பெயரை வைத்தாய்????”
தன்னவளின் காதில் பிரணாவ் நொந்துகொள்ள
” பிரணாவ் சோட்டு என்பது பெயரில்லை…. தமிழில் குட்டி!!! என்று செல்லமாக கூப்பிடுவோம் அல்லவா????
அது போல!!!!” என்று மைத்ரேயி விளக்கம் கூறவும்
” அப்படியெனில் என் பையன் பெயரென்னடி???????” என்றான் பிரணாவ் சத்தமாக…..
அதில் தன் தலையை குனிந்தபடி ” நான் வைக்கவில்லை…. ” சன்ன குரலில் மைத்ரேயி கூற கேட்டு அவள் நிலை உணர்ந்து
“எழுந்திரு முதலில்” என்றான்….
யசோதாவின் மடியில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்த மைந்தனை
சிற்றன்னையோடு தன் தந்தை முன் நிறுத்தியவன்
” என் பையனுக்கும் ஒரு பெயர் வையுங்கள் அப்பா!!!” என்றான்…
சோட்டுவை கையில் வாங்கிய கதிரேசன் அவன் முன்னுச்சியை முகர்ந்து
” இமயம் தொடும் சாதனைகளை படைக்க வல்லவன் என் பேரன்!!!!!” என்று கூறி
“இமயன்!!!!!!!!!!!!” என்னும் பெயரிட்டார்….
எழ போன ஐயரிடம் ” ஐயரே அப்படியே உட்காருங்கள்!!! பப்புமாவிற்கு சொன்ன மந்திரங்களை திரும்ப படியுங்கள் ” என்றவன் மனைவியிடம் சோட்டுவை வாங்கும்படி கூறிவிட்டு
ஐயரின் அருகே போய் மனைவி மகனுடன் உட்கார்ந்தவன் அக்னி பகவான் ஆசியோடு மகனுக்கு பெயர் வைத்தான்…..
அப்போது யுகன் தாய்மாமன் முறைக்கு செயின் அணிவிக்க பூரிப்போடு ஏற்று கொண்டாள் மைத்ரேயி…..
பிறகு அனைவரும் பப்புவின் காதில் பெயரை கூறியது போலவே சோட்டுவின் காதிலும் ” இமயன் ” எனும் பெயரை ஓத
சம்பிரதாயம் முடிந்து மகனோடு மைத்ரேயி எழும்போது மயங்கியபடி அவள் கையிலிருந்து நழுவியிருந்தான் மகன்…..
பிரணாவ் கணநேரத்தில் சுதாரித்து மகனை கைபற்றிய போதும் அவனது மயக்க நிலை
அடிவயிற்றில் கலக்கத்தை உண்டுபண்ண ” சோட்டு சோட்டு ” என்று பதறி போனான்….
” டென்ஷன் ஆகாதே மாப்பு ……. புகை ஒத்து கொள்ளாமல் இருக்கும்….
மைத்தியையும் டென்ஷன் ஆக்காதே!!!!
நீ பாரு மைத்தி என்னவென்று!!” என்றான் யுகன்….
வழிந்த நீரை துடைத்துவிட்டபடி மகனின் இதயத்துடிப்பை ஆராய்ந்தவள்
” உடனே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போக வேண்டும் அண்ணா !!!” எனும்போதே ஒரு கேவல் அவள் அனுமதியின்றி வெளிவந்தது….
அடுத்த நிமிடமே பாய்ந்து சென்று காரை ஸ்டார்ட் செய்ய மைத்ரேயி கணவன் கூட வருகிறானா என்பது கூட தெரியாமல் சோட்டுவை தூக்கி கொண்டு விரைந்தாள்….
காரில் உதிதா மைத்ரேயியின் கைபற்றி “
தைரியமாக இரு மைத்தி … பயம்படும்படி ஒன்றும் இருக்காது!!!” என்று கூற
அதில் உலக நடப்பை எட்டியவள் ” ஏன் உதிஅண்ணி சோட்டு வயிற்றிலிருந்த போது எடுத்து கொண்ட பாய்சன் தான் இப்போது வினையானதோ??????” என்று படபடக்க கேட்கவும்
“பாய்சன் சாப்பிட்டியாடி பஜாரி நீ??????” மைத்ரேயிக்கு மறுபக்கம் அமர்ந்திருந்த பிரணாவ் திடுக்கிட்டபடி கத்தினான்…..
அதில் காரை ஓட்டி கொண்டிருந்த யுகன் திரும்பி தன் மனைவியை பார்க்க உதிதாவும் தன் கணவனை தான் பார்த்திருந்தாள்….
அவர்கள் பார்வையில் ” அப்படியெனில் மைத்தி இன்னும் உண்மையை பிரணாவிடம் கூறவில்லையா??????????”
எனும் செய்தி பொதிந்திருந்தது….
அதிவிரைவாக வண்டியை
செலுத்தியதில் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கேர் மருத்துவமனையை எட்டியிருக்க மனைவியின் கரத்தில் படுத்திருந்த மகனை தூக்கி கொண்டு உள்ளே ஒடினான் பிரணாவ் ..
எமர்ஜென்சி வார்டில் டாக்டர்கள் சோட்டுவை பரிசோதித்து கொண்டிருக்க அடுத்த பத்து நிமிடங்களில் மொத்த குடும்பமும் வரிசையாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர்….
பக்கத்து பிளாக்கிலிருந்த விதுல்யா தன் அண்ணா கவின் மற்றும் அண்ணி பிரணிதாவை அங்கு பார்த்துவிட்டு விரைய மைத்ரேயியின் நிலைகண்டு திடுக்கிட்டவளாக
” என்ன ஆச்சு மைத்தி????” என்றாள்…..
அப்போது சோட்டுவை பரிசோதித்துவிட்டு வெளியே வந்த மருத்துவர்
” குழந்தையின் அம்மா அப்பா???????”
என்று கேட்கவும்
பிரணாவ் முந்திகொண்டு ” சொல்லுங்க டாக்டர்!!!!!!” என்று பதற
“கொஞ்சம் ரூமிற்குள் வாங்க !!” என்றபடி அவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்….
அவர் அப்படி சொன்னது அனைவருக்குமே ஒரு வித பதற்றத்தை உண்டு பண்ண
டாக்டர் சொல்ல கூடாத எதையாவது சொல்லிவிடுவாரோ என்று அஞ்சியவளின் கால்கள் நகர மறுக்க
” நான் இருக்கிறேன் அல்லவா???
சோட்டுவிற்கு எதுவும் ஆகாதுடி பஜாரி!!!!”
மனைவிக்கு ஆறுதலளித்து கூட்டி போனான்…..
அப்போது நர்ஸ் வந்து கொடுத்து சென்ற சில ரிப்போர்ட்களை ஆராய்ந்த டாக்டர்
மைத்ரேயியை ஒருதரம் கூர்ந்து பார்த்துவிட்டு
,”நீங்கள் டாக்டர். மிஸஸ். மைத்ரேயி தானே?????” என்றவர்
“அப்போது நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் !!!” என்று விட்டு தொடர்ந்தார்….
” பேபியின் பிளட்டில் உள்ள ரெட் பிளட் செல் அப்படியே ரேன்டமா டிக்ரீஸ் ஆகியிருக்கு!!!
பிளேட்லட்ஸ் லெவலும் டபுள்யு.பி.சி லெவலும் கூட நியூ வா புரொட்யூஸ் ஆகாமல் நின்றுபோய் இருக்கிறது …..
இப்படி மூன்று மேஜர் பிளட் செல்ஸும் அட் எ டைம்ல ஃபங்ஷன ரெட்யூஸ் பண்ணினதால் ஒருவேளை……”
” போன் மேரோ விற்கு ரிலேட்டட் ஆக இருக்குமா டாக்டர் ??????” கிட்டதட்ட எழுந்துவிட்டாள் மைத்ரேயி …..
” மைத்ரேயி லிஸன்…. இப்போது இருக்கும் நவீன டெக்னாலஜியில் அனைத்துமே சுலபமாக்கப்பட்டிருக்கிறது ……
கேஸ் கொஞ்சம் சீரியஸாக இருப்பதால் எய்தர் யுவர்ஸ் ஆர் யுவர் ஹஸ்பண்ட்’ஸ்
யாருடையது மேட்ச் ஆக இருக்கும் என்பதை இன்றே டெஸ்ட் செய்து
டிரான்ஸ்பிளான்டேஷனிற்கு ஏற்பாடு செய்து விடலாம் !!!!!”
என்று கூறவும் அங்கு நிற்க முடியாது டாக்டரின் அறையை விட்டே ஓடியிருந்தாள் மைத்ரேயி…..
டாக்டர் கூறியது முழுவதுமாக புரியாத போதும் தந்தை அல்லது தாயின் உடல் உறுப்பை கொண்டு சோட்டுவை மீட்டு விடலாம் என்று நம்பிக்கை விதைத்திருப்பது மட்டும் பிரணாவிற்கு
விளங்க
போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட்!!!
பற்றி மேலும் சில தகவல்களை கேட்டு அறிந்து கொண்ட பிரணாவ் மனைவியிடம் விரைந்தான் …..
அறையை விட்டு வெளியே ஓடி சென்றவள் முகத்தை புதைத்து வெடித்து அழுக ஆரம்பிக்கவும் குடும்பத்தினர் அனைவரது உடம்புமே சில்லிட்டு போனது….
காஞ்சனாவிற்குமே மருமகளின் இந்நிலை பொறுக்கமாட்டாது போக
யசோதாவின் கண்களோ நீரை சொறிய ஆரம்பித்து விட்டது…..
தேவகி அவர் பங்கிற்கு ” என்னடாம்மா????? சோட்டுவிற்கு ஒன்றும் ஆகாது !!!!
நாம் கும்பிடும் பரமேஸ்வரன் துணை
நிற்பான் ” என்று ஆறுதல் அளிக்க
அப்போது டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்த பிரணாவை காணவும் எல்லோருடைய கவனமும் அவன் பக்கம் திரும்பியது….
மனைவியிடம் நேரே வந்தவன் அவள் அழுகையை துடைத்து அவள் கரங்களை கோர்த்து ” இங்கே பாருடி பஜாரி…. உனக்கு தெரியாதது எதுவுமில்லை …. நீ டொனேட் பண்ணு ..
ஏதாவது சைட் எஃபெக்ட்ஸ் உண்டானால் உன்னை பார்த்து கொள்ள நான் இருக்கிறேன் !!!
இதனால் நமக்கு அடுத்த குழந்தை பிறக்காது போனாலும் சரி!!!!!
நமக்கு சோட்டு போதும்….
என் பையனை தயவு செய்து காப்பாற்றி கொடுடி!!!!” தைரியமாக ஆரம்பித்தவன் கலக்கத்தோடு முடிக்க
தன் தலையை வலதிலிருந்து
இடதுபக்கமாக ஆட்டியவள்
” என்னால் அது முடியாது பிரணாவ்….
ஏனென்றால்…….
ஏனென்றால்…….. “
விசும்பியபடியே உரைத்தவள்
” சோட்டுவை பெற்றவள் நான் இல்லை!!!!!!!”
போட்டு உடைத்தாள் …..
Advertisement