Advertisement
அடுத்த நாள் காலையில் மகனின் அசைவில் கண் விழித்திருந்த பிரணாவ் அவனை தூக்கம் முற்பட
இம்முறை தந்தையின் முகத்தைப் பார்த்தே வீறிட்டு கத்த ஆரம்பித்திருந்தான் சோட்டு ….
நேற்று கூட ஏதோ சுய நினைவில் இல்லாது போனதால் தான் மகன் தன்னிடம் வரவில்லை என்று பிரணாவிற்கு நெஞ்சோரம் ஒட்டியிருந்த நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாய் உடைந்து இருக்க
அழுகை சத்தத்தில் விழித்த மைத்ரேயி
கணவனின் முகம் பார்த்து பயந்தே போனாள் ….
“என்னாச்சு பிரணாவ்????” என்றதும்
அவள் புறம் திரும்ப மறுத்த விழிகளோடு
“என்னை என் பையனிற்கு பிடிக்காமல் போய்விட்டது போலும் !!!!” என்றான் ஜீவன் இன்றி …..
“என்ன உளறுகிறாய் ????
சோட்டுவிற்கு பசி எடுத்து இருக்கும் ….
அதான் அழுகிறான்!!!
இப்போது பார்…. பால் குடித்தால் மீண்டும் உன்னிடமே வந்து விடுவான் !!!” என்று அவசரமாக அழும் குழந்தையை தூக்கிக்கொண்டு அடுப்பை நோக்கி விரைந்தாள் மைத்ரேயி….
பாலை பாட்டிலில் ஊற்றி கொண்டு மகனுக்கு புகட்டியவாறு தன் அறைக்கு வந்தவளுக்கு இன்னும் அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தவனை பார்க்க பாவமாக இருந்தது…
” சீக்கிரம் இந்த பாலை குடித்து விட்டு அப்பாவிடம் போய் விடுடா …. சரியா?????”
மைத்ரேயி கூறியதற்கு
“வேண்டாம்டி பஜாரி ….
இப்போது வந்து விடுவான் அப்புறம் வந்து விடுவான் என்று நம்பி ஏமாறுவது ரொம்பவும் வலிக்கிறது!!!!!
என் பையனுக்கு என் மேல் ஏதோ கோபம் என்று தெரிகிறது….
சரியானதும் அவனே வந்துவிடுவான் பார்!!!”
தனக்கும் சேர்த்து ஆறுதலாக பிரணாவ் கூறிய போது அவன் போன் அடித்தது….
” யசோம்மா தான்!!!” என்றவன்
அதை ஏற்று
“சொல்லு யசோம்மா !!” என்றபோது மைத்ரேயியின் போனும் அடித்தது ….
உடனே “நீ பேசுடி பஜாரி….. நான்
வெளியில் போய் பேசுகிறேன்!!!!” என்று மனைவியிடம் சைகை மொழியில் கூறிவிட்டு வெளியே சென்றிருந்தான் பிரணாவ்….
உதிதா தான் மைத்ரேயிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்….
“நைட் முழுவதும் சோட்டு தூங்காமல் சிரமபட்டானா மைத்தி????
இப்போது பரவாயில்லையா?????”
உதிதா கேட்டதற்கு
” அதெல்லாம் பரவாயில்லை உதிஅண்ணி…..
நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்????? பப்புமா , யுகி அண்ணா ?????”
“நல்லா இருக்கோம்… உங்க அண்ணா இங்கே தான் இருக்கிறார்… உன்னிடம்
பேச வேண்டுமாம்!!!” என்று யுகனிடம் போனை கொடுத்து இருந்தாள் உதிதா ….
பொதுவான நல விசாரிப்புகளுக்கு பிறகு
” சுந்தரமூர்த்தியின் மாப்பிள்ளை சரியான ஃபிராடாம்….. அவனை கைது செய்து விட்டாலும் வேறு யாரை வைத்து அவன் திரும்ப எதையாவது செய்து வம்பிழுக்க வாய்ப்பு இருக்கிறது!!!!
நீங்கள் சென்னைக்கு உடனே புறப்பட்டு வந்து விடுங்கள் மைத்தி….” யுகன் கூற கேட்டு
“அண்ணா உங்களுக்கு எப்படி சோட்டுவை கடத்தியது தெரியும் ????
வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று பிரணாவ் கூறினானே????” மைத்ரேயி சற்றே ஆச்சிரியமாய் கேட்டாள்…
” கமிஷனர் அத்விக் என்னுடைய பிரண்ட் தான்மா …. ஜாக்கிரதையாக இருக்கும்படி
சொன்னார்….
நானும் வீட்டில் அம்முவிடம் கூட இதைப் பற்றி கூறவில்லை….
எதற்கு ரிஸ்க் எடுத்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும்????
கிளம்பி இங்கு வாருங்கள் !!!” என்று யுகன் கூறும்போது
யசோதாவிடம் போன் பேசி முடித்துவிட்டு ரூமினுள் நுழைந்து இருந்தான் பிரணாவ்….
” சரி அண்ணா !!!” என்றவள்
“யுகி அண்ணன் லைனில் இருக்கிறார்கள்…நீ பேசுகிறாயா பிரணாவ்????” என்றாள் கணவனிடம் மெதுவாக….
அவனோ தலையை எதிர்மறையாக ஆட்டி “மாம்ஸ் பேச மாட்டாங்க!!” என்று
அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கூறிவிட்டு போய் ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டான்….
” நாம் இப்போது சென்னைக்கு புறப்படலாமாடி பஜாரி????”
போனை அணைத்து இருந்தவளிடம்
பிரணாவ் கேட்டிருக்க
“யுகி அண்ணாவும் அதை தான் பிரணாவ் சொன்னார் !!!” என்றாள்…
” ஓ!!!” என்று வேறு பேசாது
ஃபிளைட் டைம் எப்போது என்று போனில் ஆராயந்தவனிடம்
” பிரணாவ்…. யுகி அண்ணாவிற்கு சோட்டு கடுத்தப்பட்ட விஷயம் தெரிந்திருக்கிறது!!” என்றாள்…
உடனே மனைவியை நிமிர்ந்து பார்த்தவன் ” கமிஷனர் சார் சொல்லி
இருப்பார்…. மாம்ஸும் வீட்டில் யாரிடமும் தெரியப்படுத்த மாட்டார்!!” என்று கூறிவிட்டு தன் வேலையில் மூழ்கினான் பிரணாவ் …. அடுத்த பத்து நிமிடங்களில்
” வியானிடம் கூறி விட்டேன்….. ஏர்போர்ட் வந்து விடுவான்!!!! நாம் கிளம்பலாம்….” என்ற பிரணாவிடம்
” ம்ம்ம் சரி…. சோட்டுவை பார்த்துக்கொள்…. நான் போய் குளித்து விட்டு வந்து விடுகிறேன்!!!!” என்றாள் மைத்ரேயி….
அப்படி கூறிவிட்டு கட்டிலை விட்டு எழ போனவளிடம் ” வேண்டாம்டி பஜாரி அப்புறம் சோட்டு அழுதுவிடுவான்…..
நான் தான் நேற்றே சொன்னேனே நீ ரொம்ப அழகு!!!!
அதுவும் உன் ஸ்பிரிங்… ஹேர் பற்றி கேட்டாய் அல்லவா????
இந்த உலகத்திலேயே பெஸ்ட் என்றால்
அது இந்த ஷார்ட் கர்லி ஹேர் தான்!!!!!
இப்போது இப்படியே சோட்டுவை தூக்கி வா…. நான் பெட்டியை தூக்குகிறேன்!!!!”
என்றவனை முறைத்தவள்
” நீ என்ன பொய் சொன்னாலும் சரி என்னால் இப்படியே வர முடியாது ….
அந்த சோபாவில் இருந்தபடியே சோட்டுவை பார்த்துக்கொள் !!!!” என்று தன் துணியை எடுக்க போனவளை ஒரே எட்டில் பிடித்தவன்
“நிஜமாகவே இந்த ஸ்பிரிங் முடியை தான்டி பஜாரி இப்போதெல்லாம் ரொம்பவும் பிடிக்கிறது!!!!” என்றான் அவள் தலைமுடியை தொட்டு வருடி காண்பித்து…..
கணவனின் திடீர் செய்கையில் அதிர்ந்தவளின் இதழ்கள் வழக்கம்போல்
மகிழ்ந்து மலர
அதில் நிலைகுத்தி நின்ற அவனது கண்களை கண்டதும் வாயை இறுக்க மூடிக்கொண்டாள்….
“ஏன்டி பஜாரி???? முதல் நாள் அலோ பண்ணினாய்??????” என்றபடி அவள் கையைப் பிடித்து விலக்க மெதுவாக முயன்றவனிடம்
” அதற்கென்று இப்படியா காலங்காத்தால????
அதுவும் பையனை வைத்துக்கொண்டு ?????” என்று கணவனை பிடித்து தள்ளி விட்டாள்….
” அடியேய் கிஸ்ஸிற்கெல்லாம் நேரம் காலம் பார்த்து கொண்டு இருந்தாய் என்றால்?????
சோட்டோவிற்கு எப்போது நீ தங்கச்சி பாப்பாவை பெற்று கொடுப்பாய்????
மீ ரொம்ப பாவம்டி பஜாரி !!!!” அவன் தன் தலைமீது கை வைத்து நொந்து கொள்ளவும்
“கெக்க பெக்க” என்று தன் பொக்கை வாயை திறந்து சிரித்து இருந்தான் மகன்….
” யப்பா மவனே!!! ஒருவழியாக சமாதானம் ஆகி விட்டாயாடா?????” என்று குதூகலித்து பிரணாவ் சோட்டுவை தூக்க விழைய
நானா சமாதானம் ஆனேன்?????
என்பது போல் தந்தை நீட்டிய கரத்தை மறுத்து வேறு புறம் திரும்பி கொண்டான் மைந்தன்…..
” ஐயோ தயவுசெய்து மீண்டும் ஃபீலிங் மோடுக்கு மட்டும் போய் விடாதே
பிரணாவ்!!!!
நீ ஏன்டா இப்படி படுத்துகிறாய்?????
உன் அப்பாவிடம் போனால் தான் என்ன??????” என்றாள் மைத்ரேயி மகனிடம்…
” நீ வேண்டுமானால் பார் பிரணாவ் …… சென்னை போனதும் மறுபடியும் உன்னிடம் ஜெல் ஆகிவிடுவான்!!!!” கணவனுக்கு ஆறுதல் மொழிகளை உறுதியாய் தெரிவித்தவளிடம்
” அதைத்தான் யசோம்மாவும் கூறினார்கள்…..
ஒரு சேஞ்ச் அவனுக்கு தேவைப்படுகிறது!!!!
இன்னும் இரு தினங்கள் இங்கேயே தங்கியிருந்து ப்ராபர்டீஸ் எல்லாவற்றையும் சோட்டு பெயரில் சட்டப்படி மாற்றி விட்டு கிளம்ப வேண்டும் என்று இருந்தேன்!!!!
ஆனால் சோட்டு என்னிடம் வராமல் எனக்கு ஒன்றுமே ஓட மாட்டேன்கிறது!!!!”
என்றான்….
அப்படி ஓடாமல் இருக்கும்போதே இப்படி ரொமான்ஸ் பண்ணுகிறவன்
அனைத்தும் ஒழுங்காக ஓட ஆரம்பித்தால்?????
சோட்டு எழுந்து ஓட ஆரம்பிப்பதற்குள் அவன் கேட்கும் ‘உதிக்கா மாதிரியான ஒரு பாப்பா’வை நானே பெற்றுக் கொடுத்து விடுவேன் போலவே!!!!!!
தன்னுள் எண்ணியவள் கணவனின் கவனம் மகனிடம் இருந்து விலகுவதற்குள் குளிக்கச் சென்றிருந்தாள்…..
ஏர்போர்ட்டில் பிரணாவை பார்த்ததும்
” ஏன் பாஸ் உடனே கிளம்பி விட்டீர்கள்?????
ஒரு இரண்டு நாட்களாவது இருந்துவிட்டு
போகலாமே!!!!!” என்று வருத்தமிகு குரலில் மொழிந்திருந்தான் வியான்…..
” இங்கே தானே வியான் இருக்கிறது சென்னை!!!!!
எது என்றாலும் கால் பண்ண அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் வந்து விடுகிறேன்….” என்று பிரணாவின் பதிலில் திருப்தி அடையாத வியான்
” நீயாவது சொல்லலாம் அல்லவா மைத்தி?????” என்றான் தன் தோழியிடம்…..
ஆனால் அவளோ “நான் நேற்று எவ்வளவு சொன்னேன் நீ கேட்டாயா???? பாவம் அந்த சின்ன பொண்ணு!!!!” அனன்யாவிற்கு பரிந்து பேசி முறைத்துவிட்டு முகம் திருப்ப
” மரியாதையாக உங்கள் பொண்டாட்டியை பேச சொல்லுங்கள் பாஸ்!!!!
அப்புறம் நீங்கள் இருவரும் அங்கு சென்றவுடன் நான் தான் போனில் அவளுக்கு அழைப்பு விடுத்து கொண்டே இருக்கவேண்டும்!!!!
அதை அவள் கண்டுகொள்ள மாட்டாள் !!!”
என்று வியான் பிரணாவிடம் புகார் வாசித்தான்.
அதற்கு மைத்ரேயி
” நீ கண்டு கொண்டாயா??????
தினம் தினம் ஒருத்தி விடாது அழைக்கிறாளே!!!???
அவள் காதலை நீ வெளிப்படையாக ஏற்றுக் கொண்டாயா????? ” என்று குற்ற பத்திரிக்கை வாசித்தாள் சற்று காட்டமாக…
பிரணாவிற்கு எதுவும் புரியாத போதும் அவன் தலையிடவில்லை ….
நண்பர்கள் இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று சற்று தள்ளி போய்
நிற்க
” இங்க வாங்க பாஸ் முதலில்!!!” என்று பிரணாவை அழைத்த வியான் அவனை கட்டிகொண்டான்….
” என்னடா பண்ணுகிறாய்??? விடுடா!!!!
யாராவது பார்த்தால் தப்பாக நினைக்க போகிறார்கள்…….” பிரணாவின் வாக்கியத்தை காதில் வாங்கிக் கொள்ளாத வியான் அவனை விடுவித்து
” எப்படி பாஸ் இவளை சமாளிக்கிறீர்கள்?????
உங்கள் மன தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்!!!!
இதற்காகவே மீண்டும் கட்டிப் பிடிக்கலாம்…..” என்றபடி பிரணாவை நெருங்க
” எந்த ஆணி என்றாலும் சோஷியல்
டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணியே பிடுங்குடா ராசா!!!!!!” என்று இரு எட்டு தள்ளி நின்று கொண்டான் பிரணாவ்….
அதற்கும் “எஸ் பாஸ்!!!!” சல்யூட் வைத்து விட்டு தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுக்க வியான் முயற்சிக்கும் போது
அதுவுமே அவனை அழைக்க ஆரம்பித்திருந்தது…..
ஸ்கிரீனில் ஒளித்த அனன்யாவின் புகைபடத்தை மைத்ரேயியின் முன் நீட்டியவன்
“இவளுக்காக தானே சண்டை போடுகிறாய் என்னிடம்?????
அதுவும் இப்படி மூஞ்சியை தூக்கி வைத்து!!!!
இன்று காலையிலிருந்து இது 32வது போன் கால்……
அவளே கூலாக தான் இருக்கிறாள்….
உனக்கு எங்கிருந்து மைத்தி இவ்வளவு கோபம் வருகிறது??????” என்றான் .
நேற்று அவ்வளவு கோபமாக பேசி சென்றவள் எப்படி இப்படி சகஜம் ஆனாள்??????
குழம்பியபடி நின்ற தோழியின் முகத்தை படித்து
” எல்லாரும் உன்னை போலவேவா இருப்பார்கள்??????
நேற்று நடந்த பிரச்சனையை இன்று வரை சுமந்து கொண்டு வருகிறாய்?????” என்றான்…
நானாவது பரவாயில்லை ஒருநாள்!!!!
இங்கு ஒருத்தன் மாதக்கணக்காக சண்டை கணக்கை மனதில் வைத்தே சுற்றுகின்றானே?????? என்பது போல் பிரணாவை பார்க்க
பிரணாவோ தன்னவளின் பார்வையில்
” எப்படி வியான் சமாதானப் படுத்தினாய்?????” என்ற திரையில் ஒளித்த ‘பேபி’ என்ற பெயரை பார்த்ததும் எதையோ யூகித்தவனாய்
பேச்சை மாற்றுவதற்காக….
“நேற்று இரவு சரக்கடிக்க போனேனா பாஸ்????
ஏதோ மிஸ்ஸிங் மிஸ்ஸிங்காக இருக்க, யோசிக்கவும் தான் தெரிந்தது …..
இந்த போன் சத்தம் போடாமல் சும்மாவே இருந்தது என்று!!!
அது ஏதோ செய்ய உடனே என் பேபி வீட்டு சுவர் ஏறி குதித்து விட்டேன்!!!!”
” அங்கு சென்று மாட்டிக் கொண்டாயா??????”
மைத்ரேயி இடைபுக
” நோ கிராஸ் கொஸ்டின்!!! ஆல்சோ நான் என் பாஸ்கிட்ட பேசி கொண்டு இருக்கிறேன்” என்றவன் தொடர்ந்தான் ……
” அங்கு அனைவரும் தூங்கி இருக்க என் பேபி மட்டும் தூங்காமல் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்….
சரி நமக்கு கால் பண்ணலாமா வேண்டாமா என்று யோசிப்பாள் போலும்….
என்று அவள் முன்னே சென்று
‘ பரவாயில்லை பேபி எனக்கு கால் பண்ணி விடு!!!
அப்போதுதான் எனக்கும் சரக்கடிக்க மூடு
வரும்’ என்றேனா !!???
என்னை நிமிர்ந்து பார்த்தவள்
‘அதற்கு நம்பர் தெரியவேண்டும் அல்லவா?????
ஒரு கோபத்தில் உன் நம்பரை டெலிட் பண்ணி விட்டேன்!!!!
இப்போது நான் எப்படி அழைப்பது?????’
என்று சோகமே உருவாய் கூறினாள்….
விட்டால் கொட்டி விடுவேன் என்று ஒரு வாலி தண்ணீரை ரொப்பிய அவள் கண்கள் வேறு மிரட்ட
உடனே நான் என் நம்பரை கூற ஆரம்பித்தேன்….
அதை பாதி வரை அழுத்தியவள் என்ன நினைத்தாளோ திடீரென்று என்னை மீண்டும் நிமிர்ந்து பார்த்து
” அம்மாமாமாமாமா!!!!!!!” என்று கத்தி
விட்டாள்…….
உடனே படத்தில் வருவது போல் அவள் வீட்டில் உள்ள மொத்த டீயூப் லைட்டும் பட் பட் என்று எரிய ஆரம்பித்தது…..
இதில் என் மாமியார் பதறியபடி ” என்ன ஆச்சு அனு???????” அவள் அறையை நோக்கி ஓடி வர
நான் அருகிலிருந்த பாத்ரூமிற்குள் சென்று ஒளிந்து கொண்டேன்….
அனு அவள் அன்னையை பார்த்ததும் சுயநினைவிற்கு வந்து
அவர் கேட்ட கேள்விக்கு கரப்பான்பூச்சியை துணைக்கழைத்து அவரிடம் நான்கு திட்டு வாங்கி விட்டு அவரை விரட்டியும் விட்டு என்னிடம் வந்தாள்….
” நீ… நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்????”
” பின்பக்கம் சுவர் ஏறி குதித்து வந்தேன்!!!!”
” அதுதான் ஏன்??????”
” உன்னை பார்க்க தான்….. உன்னிடம் ஒன்று கேட்க தான்!!!”
” என்னிடம் என்ன கேட்க வேண்டும்?????”
” அது ஏன் நீ எனக்கு போன் பண்ண வில்லை?????”
” அதுதான் சொன்னேனே!!!! உங்கள் நம்பரை டெலிட் பண்ணி விட்டேன் என்று!!!”
” இதை ஒரு போன் செய்து சொல்லியிருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன் அல்லவா??????”
அதில் அனன்யா தன் இடுப்பில்
கைவைத்து முறைக்கவும் தான் வியான் என்ன உளறினான் என்பதையே நினைவுகூர்ந்தான் …
பின் ” உன்னிடம் இன்னும் ஒன்று கேட்க வேண்டும்!!!! ஆனால் அதை எப்படி கேட்பது என்று தான் தெரியவில்லை!!!” என்றான்.
” தெரியாவிட்டால் கிளம்புங்கள்…. ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் …..” என்று கூறியவள்
அவனது மனதில் உறுத்திய கேள்விக்கான
பதிலை தொகுத்து கூறலானாள் ….
“நீங்கள் என்ன திட்டினாலும்
ஏன் அடித்தாலும் கூட ….
நான் உங்களை காதலித்துக் கொண்டே தான் இருப்பேன்!!!!!
அக்காதலை போன் செய்து உணர்த்தி
கொண்டே தான் இருப்பேன்!!!
அது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் கூட!!!!” கிட்டதட்ட மிரட்டியவளிடம்
“யார் சொன்னது உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று?????” என்றான் வியான் காதலாக…..
” என்ன ?????” என்று அதிர்ந்து நின்றவளின் அருகில் சென்றவன் அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி
“உன்னை பார்த்த முதல் நாளே நான் கிளீன் போல்ட் பேபி…..
நீயே என்னை விட்டு விட நினைத்தாலும் இனி ஒருபோதும் நான் உன்னை விட போவதில்லை !!!!!” என்று கூறி
“சென்சார் கட் பண்ணி விட்டேன்!!!
எப்படி????????” என்று நன் நாக்கினை கடித்து தன் காதலை வெளிப்படுத்திய தருணத்தை நேற்றைய மலரும் நினைவுகளை பிரணாவிடமும் மைத்ரேயியிடமும் எடுத்துரைத்தான்…..
மைத்ரேயியின் முகம் அப்பட்டமான அதிர்ச்சியை சுமந்து இருக்க அதை கண்டு கொண்ட பிரணாவ்
” கொடுத்து வைத்தவன் வியான்….
நினைத்த நேரத்தில் எல்லாம் சென்சார் கட் பண்ணுகிறாய்!!!!
ஆனால் இங்கு ஒருத்தி ஒரு குட்டி கிஸ்ஸிற்கு கூட ஜோசியம் பார்க்கிறாள்!!!!” மனைவியின் காதருகில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூற
அப்போதும் அவள் அப்படியே தான் நின்றிருந்தாள்…
” என்ன ஆச்சுடி பஜாரி ????” பிரணாவ் தன் மனைவியை உலுக்க
” அனன்யாவை பார்த்த தினத்திலிருந்து காதலிக்கிறாய் என்றால்!!!!
பிறகு எப்படி என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாய்??????
சொல்லு வியான்!!!
உன் காதலை விட அப்படி என்ன நான் முக்கியமாக போய் விட்டேன்???????”
உணர்ச்சி வசப்பட்டவளிடம் அவளை சகஜமாக்கும் பொருட்டு
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!!!!
எப்படியும் அன்று என் பாஸ் வந்து என்னை காப்பாற்றி விடுவார் என்று எனக்கு தெரியும் !!!!
அதனால் தான் சம்மதித்தேன் ” என்று பிரணாவை கட்டி கொண்டான் வியான்….
இப்போது மறுப்பேதும் சொல்லாமல் வியானை அணைத்திருந்தான்
பிரணாவ் ….
அதை கண்டும் பனித்த கண்களோடு வார்த்தை வராமல் நின்றவளிடம்
” யூ டிசேர்வ் திஸ் ஃப்ரெண்ட்ஷிப் டி பஜாரி!!!!” பிரணாவ் ஆதரவாக அவள் தோள் அணைக்க
” எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை !!!” என்றாள் மைத்ரேயி வியானின் நட்பில் பூரித்துப் போனவளாய்…..
இவை எல்லாம் தற்காலிகமே!!!!!! இன்னும் சற்று நேரத்தில் எவன் ஒருவனை பார்க்க வேண்டும் என்று நினைத்தாளோ எவனிடம் சில வார்த்தைகளை பகிர காத்திருந்தாளோ
அவனே அவள் முன் வரவும் அனைத்தும் மாறி போகும்!!!
என்பதை அறியாதவள் நெகிழ்ந்து போய்
நின்றிருந்தாள் ….
Advertisement