Advertisement
தன் சிற்றன்னையிடம் பிரணாவ் ஏதையாவது எளிதாக சமைப்பதற்கு உதவும்படி கோர
அவனை பற்றி முழுதும் அறிந்திருந்தவள்
” என்னது? அந்த டாங்கி சமைக்க போகிறதா????”
தன்னை மீறி கேட்டிருந்தாள் ………
இவ்வளவு நேரம் பிரணாவின் பேச்சையும் அவன் புலம்புவதையும் காதில் வாங்கி கொண்ட போதும் எதுவும் பேச முயற்சிக்காது அமைதியாக தான் உட்கார்ந்திருந்தாள் உதிதா…
ஆனால் முதன்முதலாக தனயன் சமைக்க போகிறான் என்பது தெரிய வரவும் அப்படி சத்தமாக வந்து விழுந்தன அவள் வார்த்தைகள் …..
பின் மணமாவதற்கு முன் கோந்தின் உதவி இல்லாமலேயே உதிதாவோடு ஒட்டி கொண்டே திரிபவனுக்கு, எதையாவது அக்காள் சமைக்க அடுப்படிக்குள் நுழையும் போது மட்டும் ஏதாவது ஒரு முக்கியமான வேலை வந்து விடும்….
அப்படி ஒரு நாள் உதிதா கிட்சனில் இருக்கும்போது கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய பிரணாவ் எதேச்சையாக அங்கு நுழைய
” ஸ்வீட் ஹார்ட் ஒரு வெங்காயத்தை எடுத்து கொடு ” என்றிருந்தாள் உதிதா அடுப்பில் எதையோ கிளறி கொண்டு …..
அவள் சாதாரணமாக கேட்டிருந்தால் அதை மறுத்ததோடு ” உனக்கெதற்கு உதிக்கா இந்த வீண் வேலை???? அங்கு மாம்ஸை கொடுமை படுத்துவது பத்தாமல் எங்களையும் பலியாடாக ஆக்க போகிறாயா?????” என்று வம்பிழுக்கவும் தவற மாட்டான்…..
இதில் அவன் உதிக்கா என்ன சமைத்தாலும் சரி??? அது எப்படி இருந்தாலும் சரி????டைனிங் டேபிளிற்கே கூட கொண்டு போகாமல் அதை அப்படியே அவன் அமுக்குவது வேறு கணக்கு!!!!!
ஆனால் இப்போது உதிக்கா கூறிய “ஸ்வீட் ஹார்ட்” பிரணாவை கட்டி போட அவள் கேட்ட வெங்காயத்தை எடுத்து அவள் முன் நீட்டியிருந்தான் அன்பு தனயன்….
அதை பார்த்தவளது கண்கள் உரிக்காமலேயே கண்ணீர் கொட்ட
ஸ்டவை அணைத்து இருந்தவள் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள்!!!!
” போனால் போகுதே என்று ஒரு ஹெல்ப் பண்ணினால் ஏன்டி மங்கி இப்படி சிரித்து வைக்கிறாய்???” அக்காளிடம் எகிற
” ‘ டி’ போட்டு பேசினாய் என்றால் பாரு?????
இப்போதே பெரியப்பாவிடம் சொல்லிவிடுவேன் டாங்கி!!!!” கரண்டியை எடுத்து எச்சரித்தாள் உதிதா….
” பண்றது பைத்தியக்கார வேலை!!!!
இதில் மரியாதைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை !!!” அவள் சிரித்ததை குறிப்பிட்டு அவன் முணுமுணுக்க
அதை தெள்ளத்தெளிவாக கேட்டவளுக்கு மீண்டும் சிரிப்பு பொத்து கொண்டு வர
” உன்னை !!!!!” என்று பிடித்த கரண்டியை தன் கரத்திற்கு ஆயுதமாக்கி அவளை துரத்த ஆரம்பித்தான் பிரணாவ் ….
வீடு முழுவதும் அக்காளும் தம்பியும் ரன்னிங் ரேஸ் ஓட
” ஆளு வளர்ந்த அளவிற்கு இன்னும் மூளை வளர வில்லையா???
நில்லுங்கள்!!!!” என்று அதட்டினார் யசோதா …..
” நீ பெத்தது தான் யசோம்மா ஆரம்பித்தது!!!!
அதையே கேளு ….. ஒரு வெங்காயத்தை எடுத்து தர சொல்லிவிட்டு அந்த மங்கிக்கு அப்படியோரு சிரிப்பு ” ஓடியபடியே புகார் வாசித்திருந்தான் சின்னவன் …
” ஏன்டி இப்படி பண்ற ????” பிரணாவிற்கு ஆதரவாக கேட்டு நின்ற யசோதாவை நெருங்கிய உதிதா
” முடிந்தால் அந்த டாங்கி எடுத்து கொடுத்திருக்கும் வெங்காயத்தை பார்த்து சிரிக்காமல் நில்லு!!!!” என்று பிரணாவ் அவளிடம் ஒப்படைத்த பூண்டினை அன்னையிடம் நீட்டியிருந்தாள்….
அதை பார்த்து சிரிக்க கூடாது என்று எடுத்த சபதத்தில் தோற்று போய் யசோதாவும் சிரித்துவிட
” யூ டூ புரூட்டஸ் யசோம்மா???? எல்லாம் இந்த மங்கியால் தான்!!!!!” அப்போதும் தமக்கையை விடாது துரத்தினான்…..
அப்போது வீடு திரும்பிய கதிரேசனை பார்க்கவும் அவன் கால்கள் சடன் பிரேக் போட்டு நிற்க ” என்ன பிரணாவ் இதெல்லாம்????” என்று தந்தை கேட்ட கேள்விக்கு
” காலேஜில் நாளை ஸ்போர்டஸ் டே அப்பா… யசோம்மா தான் ஒருமுறை ஓடி காட்டு பிரணாவ் என்று கூறியது….. அதான்!!!!” என்றான் எப்பவும் போல் தன் சிற்றன்னையும் கூட்டு சேர்த்து ….
” வெளியில் அவ்வளவு இடம் கிடக்கிறதே!!!
அங்கு சென்று ஓட சொல்லு மா!!!”
” சரி மாமா!!!!” யசோதா பதிலளிக்க கதிரேசன் வேறு எதுவும் கேட்காமல் உள்ளே சென்றுவிட்டார்…..
அவர் அறை சாத்தப்பட்டதை உறுதி செய்து கொண்டு ” ஏன்டா எப்போது பார்த்தாலும் என்னையையும் இழுத்து விடுகிறாய்??????” மகனிடம் பாய
” நீ மட்டும் அந்த மங்கி கூட கூட்டு சேர்ந்து கொண்டு இப்படி சிரிக்கிறாய்?????” பிரணாவ் நொடித்தான்……
” நாளைக்கு என் மருமகள் வந்து
‘என்ன புள்ளை வளர்த்து இருக்கிறீர்கள்???? இப்படி வெங்காயத்திற்கும் பூண்டிற்கும் கூட வித்தியாசம் தெரியாமல்??????’ என்று என்று என்னை கேள்வி கேட்பாளே பிரணாவ் ??? அப்போது அவளிடம் மாட்டி கொண்டு அழுவதற்கு இப்போதே சிரித்து கொள்கிறேனே ???!!!!”
எனவும் தான் தமையாளின் சிரிப்பிற்கான காரணமே பிரணாவிற்கு புரிந்தது….
” இதெல்லாம் ஒரு ஜோக்கா???? இதற்கு சிரித்து சிரித்து என் பொன்னான டைமை ஸ்பாயில் பண்ணி வைத்திருக்கிறாய்!!! ” என்று தன் உதிக்காவின் தலையில் வலிக்காமல் ஒரு குட்டு வைத்தவன்
” அதென்ன யசோம்மா வருபவளிடம் நீ மாட்டி கொள்வது????
அவள் தான் நம்மிடம் மாட்டி கொள்ள போகிறாள் !!!! குறிப்பாக ஐயாவிடம்!!!!” கெத்தாக காலர் இல்லாத டீசர்ட்டை தூக்கி விட்டு கொண்டான்….
மேலும்
” அப்படி வந்து மாட்டி கொள்கிறவள் என்னை அடுப்படி பக்கமே விடாமல் நல்லபடியாக ஒரு குறையும் வைக்காமல் பார்த்து கொள்வாள்…. நீ கண் கலங்காதே!!!!” யசோதாவிடம் உரைத்து விட்டு
” நீ கேட்ட வெங்காயமும் இந்த பூண்டும் ஒரே ராக்கில் தான் இருந்தது !!! இதையே வைத்து போய் கிளறு !!! அது தான் உதிக்கா நீ சிரித்ததற்கு பனிஷ்மென்ட்!!!” என்றான் தன் தமக்கையிடம் …
” அது கிளற போகும் எனக்கு பனிஷ்மென்ட் இல்லை டாங்கி …. சாப்பிட போகும் உனக்கு தான் !!!” என்று அவள் சட்டம் பேச
அப்படி ஒன்று இருக்கிறதோ???
என்று யோசித்தவன் ” யசோம்மா எனக்கொரு ஹெல்ப்……
உதிக்கா என்ன கலருல என்ன சைஸ்ல என்ன ஃபிளேவர்ல வெங்காயம் கேட்கிறாளோ!!! அதை மட்டும் எடுத்து கொடுத்து விடு …..”
இது பக்கம் வந்தது தானே பிரச்சனை!!! என்று அடுப்படி பக்கம் ஒரு கும்பிடு போட்டு விட்டு ஓடியே இருந்தான்….
அப்படிப்பட்டவன் இன்று சமைக்க போகிறானே என்று அக்காள் அதிர்ந்திருக்க
அன்னையோ
” இன்னும் சாப்பிடவில்லையா நீங்கள்??????
ஏன் பிரணாவ் இவ்வளவு நேரம்?????” என்று வருத்தப்பட்டார்….
“அது…… அது ஒன்றுமில்லை யசோம்மா….
ஹோட்டலுக்கு போனோம்….
அங்கேயே அப்போதே சோட்டு அழ ஆரம்பிக்கவும் திரும்பி வந்து விட்டோம்….
இப்போது சீக்கிரமாக ஏதாவது செய்வதுபோல் மேஜிக் டிஷ் ஒன்று சொல்லு யசோம்மா ….
‘பசிக்குது ‘ என்று சொன்னாள் பாவம்”
” ரவை இருக்கிறதா என்று பார் பிரணாவ்!!!!!” என்றவரிடம்
நான்கு டப்பாக்களை நீட்டி “இதில் எது ரவை??????” என்றான்….
அவர் ஒன்றை அடையாளம் காட்டவும்
” அடுத்து???????” என்று கேட்டவன்
தன் சிற்றன்னை சொல்லச்சொல்ல உப்புமாவை கிளறி முடித்தான்…..
அப்போது ” கரெக்டாக உப்பு போடு பிரணாவ்……
நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் தஞ்சாவூரில் யுகிக்கு உப்புமா செய்து கொடுத்த போது
அது ‘உப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுமா’ ஆகிப்போனது….”
என்று உதிதா பரபரத்தது பிரணாவை எட்டியது …….
வீடியோ காலில் இவ்வளவு நேரமும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட உதிதா பேசவில்லை….
ஏன் இப்போதும் அவள் முகத்தை காட்டியிருக்கவில்லை…..
இவை அனைத்தும் வருத்திய போதும்
தானாக தேடி கொண்டது தானே!!!!
எனும் உண்மை சுட
” அதெல்லாம் நான் அந்த மங்கி கணக்காக போட்டு விட மாட்டேன் யசோம்மா……” என்றுவிட்டு
ஒரு கை நிறைய உப்பை எடுத்தவன்
” இவ்வளவு போதும் தானே ?????” என்று காண்பிக்க
உதிதாவின் சிரிப்பு சத்தம் கேட்டது…..
“அதை அப்படியே ஜாடியில் போட்டு விட்டு இரு விரலில் எடுத்து போடு பிரணாவ்!!!!”
யசோதா கூறவும்
“உப்புமாவில் உப்பை குறைத்து போட சொல்லி சட்டம் வந்துவிட்டதா??????” என்று கேட்டபடியே சரியான அளவில் போட்டு கிளறினான்….
” சட்டினி போடுவதற்கு தேங்காயை உடை பிரணாவ் ” அடுத்தபடியாக யசோதா கூறவும்
” ஐயோ இது போதும் எனக்கு ….
இது போதுமே!!!
வேறேன்ன வேண்டும்???
தேங்காய் சட்னி வேண்டாமே!!!!!” பாடியவன்
” இதற்கே நான் செம டயர்ட்….
அந்த தேங்காயை உடைப்பதற்கு முன் நான் உடைந்து விடுவேன் போல !!!!” என்றான் ..
” தொட்டு கொள்ள ….” என்று ஆரம்பித்தவரிடம்
“உன் மருமகள் என்னையே தொட்டுக் கொள்ளட்டும் ….. சரியா யசோம்மா?????
பை!!!!” என்றபடி போனை அணைத்து விட்டு மாடி ஏறினான் பிரணாவ்….
அவ்வளவு நேரமும் நடந்தபடியே இருந்தவள் கணவனையும் அவள் கையில் வைத்திருந்த உணவையும் கண்டு அதிசயித்து
அவனுள் சலனத்தை ஏற்படுத்தும் இதழ்களை பிரித்து நிற்க
“உனக்கு வேற வேலையே இல்லையாடி பஜாரி ?????” என்று கேட்டபடி கொண்டு வந்திருந்த உணவில் ஒரு ஸ்பூனை
அவளது திறந்த வாயில் திணித்து விட்டிருந்தான்….
” எப்படி இருக்கு????????” தன் புருவத்தை உயர்த்தி கேட்டவனிடம்
தன் தலையை வலதிலிருந்து இடதுபுறமாக ஆட்டி காண்பித்தாள் மைத்ரேயி ….
“என்னடி பஜாரி???? நான் ஃபெயிலா???” என்று சோகமாக பிரணாவ் வினவ அவசரமாக விழுங்கியவள்
” இல்லை பிரணாவ் …. நான் இதை சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை……
இப்படி சமைத்துக்கொண்டு எடுத்து வருவாய் என்று !!!!!!
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என்றாள்
உள்ளம் குளிர…..
” யசோம்மா நான் பாஸாயிட்டேன்!!!!!!” என்று மனைவியின் பதிலில் அடைந்த மகிழ்ச்சியில் தன்னை மீறி பிரணாவ் கத்த
அசந்திருந்த சோட்டு மீண்டும் அழ ஆரம்பித்தான்….
உடனே “சாரி….. சாரிடி பஜாரி !!!!!
நான் ஊட்டி விடுகிறேன்… நீ நட ….”
என்றபடி அவன் கொண்டு வந்திருந்த உப்புமாவை ஊட்ட தொடங்கினான்….
மனைவிக்கு ஒரு வாய் வைத்து விட்டு தான் ஒரு வாய் உண்டவன்
“நாட் பேட் !!!!!!” என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளவும் தவறவில்லை….
” ஆமாம் ஆமாம்…. டூ குட்!!!
அதிலும் உதிஅண்ணி மாதிரி நிறைய உப்பை போடாமல் முதல் தடவையே இவ்வளவு சூப்பராக செய்திருக்கிறாய் பிரணாவ்” என்றவளிடம்
” பாருடா….. உனக்கு உதிக்கா உப்புமா கிளறிய ஸ்டோரி எல்லாம் தெரிந்திருக்கிறது?????
இதையெல்லாமா உதிக்கா சொன்னாள்??????? ” என்றான் அதிசயமாய்.
” இதையும் உதிஅண்ணி சொன்னார்கள் …. இன்னும்…..”
அவளை முடிக்கவிடாது ” இன்னும் என்னென்ன சொன்னாள்??????
உன் அத்தான் பற்றி எதையாவது சொல்லி இருக்காளா?????”
என்று இப்போதும் தன் சட்டை காலரை தூக்கி விட்டபடி கேட்டவன்
” கண்டிப்பாக சொல்லி இருப்பாள்…. அதுவும் அவளை பற்றி சொல்லும் முன்பே கூட சொல்லி இருப்பாள் ….. அந்த கதையை அப்படியே சொல்லுடி பஜாரி !!!!” என்று பிரணாவ் தன் மனைவியிடம் ஆர்ப்பரிக்க
என்ன சொல்ல சொல்கிறாய்??????
உன்னைப்பற்றி உன் உதிக்கா கதைத்த மொழிகளில் ……..
உன் குறும்பு தனத்தில்……….
உன் அக்காவிற்காக நீ கொண்ட பாசத்தில்……….
உன் சின்ன சின்ன கோபத்தில்…..
உன் நொடிப்பொழுது சமாதானத்தில்…….
உன்னை பார்க்க என் விழிகளோடு சேர்த்து என் இதயமும் துடித்ததே!!!!
அந்தக் கதை சொல்லவா???????
இல்லை….
இவை அனைத்தும் கேட்டு கேட்டு
பார்க்காமலேயே என் பெண்மையை உன்னிடத்தில் உணர்ந்தேனே அந்த மாயையை எடுத்துரைக்கவா??????
அத்தனை காதல் மொழிகளையும் கண்களில் தேக்கி இதழ் பிரியாமல் தன்னவனை பார்த்து நின்றாள் அவன் பஜாரி……
அவனவள் தீட்டிய காதல் மொழி புரிந்ததோ?????
எப்போதும் மனைவியின் ரோஜா இதழ்களில் குப்புற விழுகிறவன் இன்று முதன்முறையாக பேசும் கண்களிடத்தில் தன்னை தொலைத்தான் …..
அவளை நெருங்கி மகனை தொந்தரவு படுத்தாத வண்ணம் ஒற்றை கரம் கொண்டு அணைத்தவன் அவள்
மூக்கோடு மூக்கு உரசி
“நீ அழகுடி பஜாரி!!!!!!” என்றான் அவள் கண்களை நேரே சந்தித்து….
அதில் அவனை பிடித்து தள்ளி விட்டவள்
“பொய்!!!!” என்று முறைக்க
“ஏன் நீ கண்ணாடி பார்த்ததில்லையா????
இல்லை உனக்கு கண்ணில் ஏதாவது கோளாறா ??????” என்றான்.
” நான் தினமும் தான் பார்க்கிறேன்…..
அதில் எப்போதும் ஒரே மாதிரி தான் காட்டுகிறது …..
இப்போது உன் கண்ணில் தான் கோளாறு!!!!
பார்த்த முதல் நாளில் என் முடியைப் பார்த்து
‘ ஏன்டி பஜாரி என்னை ஏமாற்றிவிட்டாய் என்று கேட்டவன் தானே நீ ?????”
என்று கணவனை மடக்க
” ஆம் அது அப்போது …. ஆனால் இப்போது இந்த ஸ்ப்ரிங் கம்பி கூட அழகாக தெரிகிறதே?????? ” என்று சத்தமாகவே தான் எண்ணியதை அதிசயமாய் விளித்தவனிடம்
” நான் இந்தியில் பேசினால் உனக்கு பிடிக்கவே பிடிக்காது!!!!!!” என்றாள் அடுத்ததாக…..
” இப்பவும் சொல்கிறேன் எனக்கு யார் இந்தியில் பேசினாலும் பிடிக்காது…..
ஆனால் நீ பேசினால் மட்டும் ரொம்ப பிடிக்கும்டி பஜாரி!!!!
நீ வேண்டுமானால் பேசி பார்க்கிறாயா????? என் பிடித்தத்தை காட்டுகிறேன்!!!” என்று மனைவியின் இதழ்கள் இடத்தில் தன் கண்களை வாடகைக்கு விட்டு நின்றவனிடம்
அடுத்து என்ன பேசுவது என்பது அவளுக்கே புரியவில்லை……
” சரி சோட்டு தூங்கிவிட்டான்…..
மெத்தையில் படுக்க வைக்கிறேன்!!!!” பேச்சை மாற்றியவளிடம்
” சோட்டு மீண்டும் முழித்து விடுவானோ என்று பயமாக இருக்குடி ” என்றான் மகனை பற்றிய அக்கறையில்….
” எனக்கு தூக்கம் வருது பிரணாவ்….
தொட்டிலில் படுக்க வைத்து பார்க்கிறேன்!!!!!
அழக்கூடாது கடவுளே…..” என்று வேண்டியபடி படுக்கவைக்க
சமத்தாய் எழாமல் படுத்து கொண்டான் புத்திரன் …..
உடனே மெத்தையில் படுத்தவளுக்கு கண்கள் சொருக அடுத்த நிமிடமே தூங்கி விட்டாள்…..
ஆனால் பிரணாவ் தான் நீண்ட நேரம் தூங்காமல் மகனிடம் மானசீகமாய் அவன் முகத்தை பார்த்தபடியே பேசி நின்றான்…
“காலையில் எழுந்ததும் அப்பாவிடம் வந்து விடு சோட்டு ….. நாளையும் நீ என்னிடம் வரவில்லை என்றால் அதை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது!!!!! சரியா ?????? “
நேற்று இரவு முழுதாக ஒரு மணிநேரம் கூட தூங்காத பிரணாவின் கண்களில் உறக்கம் தவழ தூங்கி கொண்டிருந்த மனைவியின் முன் நெற்றியில் முத்தமிட்டு
” குட் நைட் டி பஜாரி!!!!!” என்று கூறிவிட்டு படுத்தவன் அவள் தலையில் தன்
கன்னத்தை உரசி அவளை அணைத்தபடி தூங்கி போனான்….
அடுத்த நாள் காலை பிரணாவின் சொல்பேச்சு கேட்டு அவனிடம் வந்துவிடுவானோ அவனது குட்டி மைந்தன்?????????
Advertisement