Advertisement
பிரணாவ் ரேயி குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்-கான சொத்து உரிமையை சோட்டு பெயருக்கு மாற்றி விடலாம் என்று கூறியதும் அதிசயமாக பார்த்திருந்தாள் மைத்ரேயி….
அவள் தந்தை தமிழ்வாணன் ஆசைபட்டதும் இதை தானே!!!!
அது மட்டுமில்லாமல் வியானை திருமணம் செய்து கொள்வதற்கு மைத்ரேயி இட்ட ஒரே ஒரு நிபந்தனை
அவள் தந்தையுடைய சொத்து எல்லாவற்றையும் சோட்டு பெயருக்கு மாற்ற வேண்டும் என்பது தான்!!!!!
“உனக்கும் வேண்டாம் எனக்கும்
வேண்டாம்…..
ஏன் பிற்காலத்தில் நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கும் இந்த சொத்தில் ஒரு ரூபாய் கூட வேண்டாம் வியான்!!!
இதற்கு உனக்கு சம்மதம் என்றால் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்!!!!”
என்று உறுதியாக கூறி இருந்தாள்….
வியானோ நேற்று தன் தோழியின் கடந்த காலத்தை பற்றி கூறும் போது இந்த நிபந்தனையை பிரணாவ் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று தான் மறைத்து விட்டான்….
ஆனால் இப்போது மைத்தி ஆசைப்பட்டதை பிரணாவ் அப்படியே தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கவும் குழந்தையோடு நின்று பிரணாவை ஒருவித பரவசத்தோடு அணைத்து கொண்ட வியான்
“சோட்டு என் சின்ன பாஸ்!!!!
நீங்கள் என் பெரிய பாஸ்!!!!
லவ் யூ மை போத் பாஸ்ஸ்ஸ்ஸ்!!!!!” என்று கத்தினான்….
வியானின் செய்கையில் சிரித்த போதும்
“டேய் மறுபடியும் என் கன்னத்தை பிய்த்து போடாதே!!!!!!” என்று பிரணாவ் மிரட்ட
” அதெல்லாம் முடியாது…..
என் பாஸ் என் உரிமை!!!” என்று கூறியபடியே
பிரணாவ் செய்யாதே என்று கூறிய காரியத்தை செவ்வனே தொடர்ந்தான் வியான் …..
” கையோடு கன்னம் வந்துவிடப்போகிறது!!!! விடுடா போதும்!!!!!” என்று அலறிய கணவனைக் கண்டு
வயிறு குலுங்க சிரித்தாள் மைத்ரேயி …..
“புருஷனுக்கு கொடுக்க வேண்டிய கிஸ்ஸை கூட அசிஸ்டன்ட் வைத்துக் கொடுக்கும் ஒரே பொண்டாட்டி நீ ஒருத்தி தான்…..
சிரித்துக்கொண்டே நிற்காமல் வந்து காப்பாற்றுடி பஜாரி !!!!!” பிரணாவ் நொந்து கொண்டதில்
” பஜாரியா????? ஹாஹா!!!!!
மைத்திக்கு ஏற்ற பெயர் தான்…..
சரி நான் கிளம்புகிறேன் பாஸ்…..
நீங்கள் உங்கள் பஜாரியை கொஞ்சிக் கொள்ளுங்கள்!!!!!” விடை பெற்றான் வியான்….
” ஹே வியான் கமிஷனர் சார் கால் பண்ணி இருந்தார் …..
இன்னும் அரை மணி நேரத்தில் ரெடியாகி வந்து விடு …. சரியா????” என்று பிரணாவ் அவனை நிறுத்தியமைக்கு
” எஸ் பாஸ்!!!!!” சல்யூட் ஒன்று வைத்து
கிளம்பினான் வியான் …
” இவன் இந்த ‘பாஸை’ விடவே மாட்டானா??????” என்று கூறிய பிரணாவ்
மனைவியின் புறம் திரும்பி “நியும் கிளம்புடி பஜாரி ” என்றுவிட்டு
” வாடா சோட்டு….. நாமும் போய் குளிக்கலாம்!!!!” என்று நன்கு விழித்திருந்த மகனிடம் தூக்கியபடி மாடி ஏறினான்….
கமிஷனர் அலுவலகத்தில் ” அந்த சுந்தரமூர்த்தி எஸ்கேப் ஆகிவிட்டான்….. எப்படியும் பிடித்துவிடலாம் !!!!!
எதற்கும் கொஞ்சம் கேர் ஃபுல்லாக இருங்கள்…..” என்று கிடைத்த தகவலில்
மனம் சஞ்சலம் கொண்ட மைத்ரேயி
வீடு திரும்பியதும்
“இன்று சென்னைக்கு திரும்பி விடலாம் என்று எண்ணியிருந்தேன்!!!!!
இப்போது என்ன செய்வது பிரணாவ்??????” கணவனிடம் கேட்டிருந்தாள் …
” இங்கு மும்பையிலேயே வெயிட் பண்ணலாம்!!!!!” என்றவனிடம்
“அப்போது சென்னை கிளம்பும் வரை நீங்களும் இன்டஸ்ட்ரி பக்கம் வாங்க பாஸ்!!!!” என்றான் வியான்….
” என் பையன் வேலையெல்லாம் பார்க்கத்தான் நீ இருக்கிறாயே வியான்….
இப்போது என் வேலையை நான் பார்க்கவில்லை என்றால் என்னப்பா என் தோலை உரித்து விடுவார்!!!!!!” என்று பயந்தபடி பிரணாவ் கூற
“உன் மாமனார் அவ்வளவு ஸ்ட்ரிக்டா மைத்தி ????” என்றான் வியான் தன்
தோழியிடம்……
“அதெல்லாம் இல்லை வியான்…..
உன் பாஸ்-ற்கு தான் அவர் பயப்படுவார்!!!!” என்ற மனைவியை முறைத்து
” நீ பார்த்தாயாக்கும்??????” என்று வினவினான் பிரணாவ்….
“தினம் தினம் பார்ப்பதால் தானே கூறுகிறேன் !!!!
ஆக்சுவலி ஹி இஸ் ஸோ ஸ்வீட்………” என்று மைத்ரேயி கூறுவதை கேட்டு
சிறு மென்னகையுடன் எழுந்த வியான்
” சரி பாஸ் நான் இங்கு உட்கார்ந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது !!!!! நான் ஆஃபீஸ் கிளம்புகிறேன்!!!” என்றபடி வியான் விடை பெற்றிருந்தான் …..
அவனுக்கு ‘பை ‘ கூட கூறாது மனைவியின் மீது படர விட்ட பார்வையை திருப்பாது நின்ற பிரணாவிடம்
‘என்ன???’ என்பது போல் தலை அசைத்திருந்தாள் மைத்ரேயி …..
” இல்லை உன் மாமனாரை ஸ்வீட் என்று சொன்னாயே!!!!!
அவரு பெத்த பையன் எப்படி என்று சொல்லவே இல்லையே!!!!!
கொஞ்சம் டேஸ்ட் கம்மி தானோ?????????”
லேசாக உதடு தொட்டு தன் மீசையை வருடி காண்பித்தபடி கேட்டவனை முறைக்க வழி தெரியாமல்
சற்று தொலைவில் கிடந்த தலையணையை எடுத்து கணவன் மீது வீசிவிட்டு ஓடியிருந்தாள் …..
சமையலாள் பிரபா வந்து சமைத்து விட்டு சென்றிருக்க
சோட்டுவிற்கு பருப்பு சாதத்தை ஊட்டி முடித்து மைத்ரேயி அவனை தூங்க வைத்த பின்பும்
பிரணாவ் தன் லேப்டாப்பில் இருந்து எழுந்த பாடாக தெரியவில்லை….
“சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கலாம் அல்லவா???????????” என்றபடி தன் முன் வந்து நின்றவளை நிமிர்ந்தும் பாராமல்
” ரொம்ப முக்கியமான வேலைடி பஜாரி …..
ஒரு மணி நேரமாவது ஆகும்!!!!!” என்று கூறியவனிடம்
“பசிக்குது என்று தான் கேட்டேன்!!!!!!”
முணுமுணுத்தபடியே திரும்பினாள்
மைத்ரேயி….
உடனே அவன் லேப்டாப் மீது உறவாடிய தன் கரங்களை பிரித்தவன்
மனைவியை கூட்டி சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து தன் வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டான்…
மாலை சோட்டு முழித்து அரை மணி நேரம் வரையிலும் தன் வேலையில் மூழ்கியிருந்த பிரணாவ்
ஒரு வழியாக லேப்டாப்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தன் மனைவியிடமும் மகனிடமும் வரும்போது
அவன் போன் இசைத்தது …..
அலுவல் தொடர்பாக வியான் சில
சந்தேகங்களை பிரணாவின் முன்வைக்க
” இரு நானே வருகிறேன்!!!!” என்று போனை அணைத்த பிரணாவ்
“ஆபீஸ் வரை போய்விட்டு வருகிறேன்டி பஜாரி!!!!” என்றான்…
“ஏன் பிரணாவ் ஏதாவது ப்ராப்ளமா ?????”
என்று கேட்டவளிடம்
” இல்லை இல்லை… ஒரு 2 ஹவர்ஸில் வந்து விடுவேன்!!!!! டேக் கேர் … வந்ததும் வெளியே போகலாம்!!” என்று மகனை தூக்கி முத்தமிட்டவன்
மனைவியை நெருங்கி அவள் யூகிக்கும் முன்னே அப்பட்டு கன்னத்திலும் ஒன்றை வழங்கிவிட்டு திரும்பி சென்றான்……
கணவனின் எதிர்பாராத இச்செய்கையில் தன் கன்னத்தை பற்றியபடி இதழ் திறந்து நின்றவளை சற்று சிரமபட்டு நிமிர்ந்தும் பாராமல் தான் கிட்டதட்ட ஓடியேயிருந்தான் பிரணாவ்….
சில மணி துளிகளில் தன்னை மீட்டிருந்த மைத்ரேயி காலையில் வேலையை ஆரம்பித்தவன் ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறிவிட்டு சற்றுமுன் தான் எழுந்தான்!!!
இப்போது இரண்டு மணி நேரம் என்றால் கண்டிப்பாக நாளை தான் வருவான் போலவே???!!!
மனதில் கூறி கொண்டவளுக்கு வீட்டிலேயே சும்மா இருக்க பிடிக்காமல்
பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சோட்டுவை அழைத்து கொண்டு ஒரு வாக் போய் வர முடிவு எடுத்தாள்….
வழியில் வெஸ்பாவில் சென்ற பெண்ணொருத்தி இரண்டு முறை மைத்ரேயியை திரும்பிப் பார்த்து விட்டே செல்ல
அப்பெண்ணை ஏற்கனவே எங்கேயோ பார்த்திருப்பதாக நினைவுகூர்ந்த மைத்ரேயிக்கு
காலையில் வியானின் போனில் “பேபி” எனும் பெயர் தாங்கி ஒளித்தவள்
இவள் தானே??!!! எனும் பொறி தட்டியது….
அப்பெண்ணும் அடுத்த நிமிடமே திரும்பிவந்து
“மைத்ரேயி தானே நீங்கள்???
இவர் சோட்டு பையா சரியா??????” என்று கேட்க
ஆச்சர்யமடைந்த மைத்ரேயி
” சாரி…. இதற்கு முன் நாம் சந்தித்திருக்கிறோமா??????
ஆனால் எனக்கு உன்னை… உங்களை தெரியவில்லையே????? ” என்றாள்…
” உன்னை என்றே சொல்லுங்கள்!!!!
நான் உங்களுடைய ஜூனியர் தான்….
அனன்யா….. அனு என்று தெரிந்தவர் கூப்பிடுவார்கள் !!!” என்று கை நீட்டி இருந்தாள் அனன்யா …..
சின்ன சிரிப்போடு அதைப் பற்றிய மைத்ரேயி
“அதுதான் உன் முகம் பரிச்சயமானது போல் எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றியது!!!
இதற்கு முன் காலேஜில் நாம் பேசி இருக்கிறோமா????? ” என்று கேட்க
” இல்லையே!!!!!
அதனால் என்ன இனி பேச மாட்டீர்களா??????” என்று கேட்டவளை பிடித்துப்போனது மைத்ரேயிக்கு…..
” ஐயோ அம்மா!!!!
என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கதறும் வரையில் பேசிவிடலாம்” என்றபடி சிரித்த மைத்ரேயி
” என்னை எப்படி இப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்?????
அதுவும் எதுவும் பேசிக் கொள்ளாமலேயே????”
தன் நண்பன் வியானின் உபயத்தால் தான் தன்னை பற்றி அனன்யாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று யோசித்தபடியே கேட்கலானாள் மைத்ரேயி….
ஆனால் அனன்யாவோ வேறொரு பதிலை வாசித்தாள்!!!!!
“நம் கல்லூரியில் ஸ்ரீதீப் சாரை தெரிந்தவர்கள் யாவருக்கும் எப்படி உங்களை தெரியாமல் போகுமாம்?????
என்று கூறி தன் நாக்கை கடித்துக் கொண்ட அனன்யா
“சாரி உங்கள் பிரசெண்ட் லைஃப் எப்படி இருக்கிறது?????
சென்னையில் செட்டில் ஆகி விட்டதாக கேள்விப்பட்டேன் !!!!
எப்போது மும்பை வந்தீர்கள்??????”
என்றாள் சகஜமாக….
” ஏன் நான் சென்னையில் செட்டில் ஆன விஷயத்தை தெரிவித்தவன் எப்போது இங்கு வந்தேன் என்று கூறவில்லையா????????” என்றாள் மைத்ரேயி தன் நண்பன் வியானை குறிப்பிட்டு ….
“உங்கள் கிளாஸ்மெட் ரஞ்சி அக்கா எனக்கு பக்கத்து வீடு தான்…. அவர்கள் தான் கூறினார்கள் நீங்கள் சென்னையில் இருப்பதாக …..
ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது பற்றி அவர்களுக்கும் தெரியாது என்றுதான் நினைக்கிறேன்!!!!!” யோசனையோடு கூறி அவளிடம்
” ஓ!!!!!! நான் வியான் தான் சொல்லியிருப்பான் என்று கேட்டுவிட்டேன்!!!” என்றாள் மைத்ரேயி சன்னமாய்….
அதற்கு நேரெதிராக ” என்ன?????????
இப்போது என்ன சொன்னீர்கள்????????
வியானா????????
என்னிடம் அதுவும் உங்களைப் பற்றியா??????
வார்த்தைக்கு வார்த்தை அதிர்ச்சியடைந்து கிட்டத்தட்ட கத்தினாள் அனன்யா ……
மேலும்
” அவர் என்னிடம் சேர்ந்தபடி இரு வார்த்தைகள் பேசி விட்டாலே நம்மூரில் தண்ணீர் பஞ்சத்திற்கு வழி விடாது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்துவிடுமே?????!!!!!!
ஆமாம் எப்படி வியான் என்னிடம் சொல்லி இருப்பார் என்று கூறினீர்கள்???????
ஒருவேளை அவர் என்னை பற்றி உங்களிடம் ஏதேனும் புகார் வாசித்தாரா???????” கண்கள் மின்ன கேட்டவளிடம்
எதையும் பேசாமலா இவள் பெயரை அப்படி பதிவு செய்து வைத்திருப்பான்?????????? என்ற
குழப்பத்துடனே
“இல்லை!!!” என்பது போல் மறுப்பாய் தலையசைத்தாள் மைத்ரேயி …..
“அதுதானே பார்த்தேன் திடீரென ரோபோட்டிற்கு உயிர் வந்துவிட்டதோ என்று ஒரு நிமிடம் பயந்தே விட்டேன்???!!!!!!”
என்று தன் நெஞ்சில் கைவைத்து கூறியவளை கண்டு பலமாக சிரித்து விட்டாள் மைத்ரேயி…..
” என் நிலைமையை பார்த்தால் நீங்கள் மட்டுமில்லை இந்த வாண்டும் கூட சிரிப்பான்!!!!!” என்று கூறியபடி
ப்ராமில் சமத்தாய் வீற்றிருந்த சோட்டுவை அனன்யா தூக்க
அவனோ அவள் தலையில் மாட்டியிருந்த
சன்கிளாசை பற்றி இழுத்து சிரிக்கவும்
” அம்மாவும் பையனும் சேர்ந்து என்னை ஓட்டுகிறீர்களா???
பாருங்க பாருங்க !!!
எனக்கும் ஒரு காலம் வரும் அன்று அந்த வியானிற்கு இருக்கிறது பூஜை!!!!” என்று சபதமொழி உரைத்தாள்…..
” ஆமாம் உனக்கு எப்படி வியானை தெரியும்?????
அவன் ஏன் உன்னோடு பேச மாட்டேன்கிறான் ?????” என்றாள் மைத்ரேயி தன் நண்பனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில்…..
” இப்படியே நின்று கொண்டு பேசினால் டாக்டர்ஸாகிய நாமே இன்னொரு டாக்டரிடம் போய் வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்!!!!
அப்படியே அந்த பார்க்கில் போய் உட்கார்ந்து பேசலாமா??????
பயப்படாதீர்கள்!!!
பெரிய கதை எல்லாம் இல்லை….
‘டூ மின்ஸ் ரீட்’ தான்!!!!!”
என்று கூறியபடி சோட்டுவை தூக்கி சென்ற அனன்யா வசதியாய் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு மைத்ரேயியிடம் தன் காதல் கதையை தொடர்ந்தாள்…..
“நம் கல்லூரியில் எல்லோருக்கும் ஸ்ரீதீப்பை பிடிக்கும் ….
ஆனால் அவருக்கோ உங்களை தான் பிடிக்கும்!!!!!
அன்று ஆடிட்டோரியத்தில் அவர் காதலை நீங்கள் ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம் உங்களை தினமும் பிக்கப் செய்ய வரும் வியான் தானோ என்று எனக்கு ஒரு பெரிய சந்தேகம் எழுந்ததா?????????
என் படிப்பை அப்படியே விட்டுவிட்டு உங்கள் இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்து விட்டேனாக்கும்!!!!!
அப்படி உங்கள் இருவரையும் ஃபாலோ பண்ணி கொண்டு வந்த முதல் நாளிலேயே உங்களிடம் வியான்
‘ உண்மையிலேயே உனக்கு ஸ்ரீதீப்பை பிடிக்கவில்லையா?????
எங்கே பிடிக்காததற்கு ஒரு ஸ்ட்ராங்கான ரீசன் சொல்லு பார்க்கிறேன்!!!’
என்று கேட்ட கொண்டிருந்தார்…..
அதற்கு நீங்கள் ‘அவனை பிடிப்பதற்கு என்ன ரீசன் இருக்க வேண்டும் என்று தான் நானே குழம்பிப் போய் இருக்கிறேன் !!!!! தயவுசெய்து இதை பற்றி பேசாமல் இருக்கிறாயா??????
இல்லை நீ படுத்துவதற்காகவே தான் நான் ஓகே சொல்லியாக வேண்டும்!!!!!’ என்று கூறினீர்களே ஞாபகம் இருக்கிறதா??????”
என்ற அனன்யா
“அதற்கு வியான் உங்களிடம் கூறிய பதிலில் தான் தெரியாத்தனமாக என் மனம் குப்புற விழுந்து விட்டது!!!!!
இன்றுவரை அதில் மூழ்கவும் வழிதெரியாமல் நீச்சலடித்து வெளிவரவும் முடியாமல் அப்படியே கிடக்கிறது!!!!” என்றாள்….
” அன்று அப்படி என்ன வியான் சொன்னான்?????
எனக்கு ஞாபகம் இல்லையே?????” என்று மைத்ரேயி பரபரக்க
“நானே சொல்கிறேன்!!!
நானே சொல்கிறேன்!!! ” என்றவள்
” ‘ஒருவரின் உண்மையான நேசிப்பை உணர்ந்தும் அவரது யாசிப்பை துச்ச படுத்தினால்
இவ்வுலகிலேயே மிகப்பெரும் துரதிர்ஷ்டசாலி நீ தான் !!!!
கொஞ்சமாவது புரிந்து நடந்து கொள் மைத்தி!!!!’ என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்……
ஏன் நீங்களும் அவரோடு சென்று விட்டீர்கள் !!!!!
ஆனால் அதே இடத்தில் எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று எனக்கே தெரியாது!!!!
வாட்ச்மேன் வந்து கதவை மூட வேண்டும் என்று சொல்லவும் தான் அப்போது வீடு திரும்பினேன்!!!!
ஆனால் அன்றிலிருந்து அவர் சொன்ன அந்த உண்மையான நேசிப்பை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டேன்!!!!!
என்ன பண்ணுவது ????
அவ்வளவு தாராள மனதை ஆண்டவன் எனக்கு பரிசளித்து விட்டான் !!!!
எப்படியாவது அவரிடம் என் வெரி பிக் மனதை எக்ஸ்பிரஸ் பண்ணிவிடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த போது தான்
ஒரு நாள் உங்கள் வகுப்பில் யாரோ ஒருவர் கால் தடுக்கி மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டார் என்று ஹாஸ்பிட்டலிற்கு நான்கைந்து பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு ஓடினீர்களே!!!!!
ஞாபகமிருக்கிறதா ??????” என்றாள்
அனன்யா மீண்டும் …
அந்த நிகழ்வை என்றாவது மறக்க முடியுமோ ???? என்று தன்னுள் கசந்த முறுவல் ஒன்றை வெளியிட்டாள் மைத்ரேயி!!!!!!!!
Advertisement