Advertisement

 சுயம் மறந்து தன்னவளுள் தன்னை தொலைத்து கொள்ள விழைந்த சமயம் எதிர்பாராது ஒலித்த பேரோசையில்

மனைவியை விட்டு விலகி எழுந்திருந்தான் பிரணாவ்…..

 தொட்டிலில் படுத்திருந்த மகனும் திடீரென கேட்ட சத்தத்தில் சிணுங்க ஆரம்பிக்க

“சோட்டுவை தூக்குடி பஜாரி!!!!  என்ன சத்தம் என்று நான் போய் பார்க்கிறேன்”

மைத்ரேயியின் முகம் பாராது சொல்லிவிட்டு  அவசரமாக கீழே இறங்கலானான்…….

அப்படி விரைந்தவனை பழங்காலத்து நாற்காலி ஒன்று உடைந்து கிடந்தபடி

வரவேற்க

‘இதற்கு காரணம் நானில்லை இதோ இது தான்!!!!’ என்பது போல் தன் கையிலிருந்த ‘டபுள் பிளாக்’ மது பாட்டிலை உயர்த்தி பிடித்து எதையோ தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் வியான்……

 பிரணாவை அங்கு காணவும் வியானின் முகம் கோபத்தை தத்தெடுக்க கீழே கிடந்த நாற்காலியை பார்த்து

“யூ ஸ்டுபிட் !!!!! நம் பாஸ் வந்திருக்கிறார்……

 கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாமல் கீழே படுத்து இருக்கிறாய்??????

 எழுந்திரிடா ஃபூல்!!!!!

இல்லாவிட்டால் மேடம் வேறு கோபித்துக் கொள்வார்கள்……”  என்று அதட்ட

 நன்றாக குடித்துவிட்டு பாதி சுயநினைவை இழந்து அப்படி வியான்

பேசிய விதத்தில் நன்றாக சிரித்து விட்டான் பிரணாவ்…….

” பாஸ் நல்லவராக இருக்கப் போய் தப்பித்தாய் டா மகனே !!!!! இதே இந்த இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு நீ மரியாதை கொடுக்காமல் உன் பாட்டிற்கு படுத்திருப்பதற்கு உன்னை போட்டு உடைத்தே இருப்பான்!!!”  என்று உடைந்து கிடந்த நாற்காலியிடம் வினவிய வியான்

 பிரணாவிடம் திரும்பி

“நான் சொல்லி வைக்கிறேன் பாஸ்….. நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்கள்!!!!!!” என்றான்….

பின் அவனே “ஐயோ சாரி பாஸ் நில்லுங்கள் நில்லுங்கள்!!!!! இந்த பிளாக்

பியூட்டியை ஃபர்ஸ்ட் பிடிங்க நெக்ஸ்ட் குடிங்க……. உங்களுக்கு தராமல் குடிக்கும் பாவி ஆக தெரிந்தேன்…

எனக்கு நீங்க குடிச்சுட்டு மீதியை கொடுத்தால் போதும்…. அட வாங்குங்க பாஸ்!!!!!!” ஒரு மடக்கு கூட இல்லாத பாட்டிலை பிரணாவ் கையில் தடுமாறியபடி விரைந்து திணிக்க

 அதை வாங்கிய பிரணாவ் ” ஹே வியான் பார்த்து ….. பார்த்து …. விழுந்து விடாதே!!!!! முதலில் இப்படி வந்து உட்காரு …..” என்று அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான்.

 அப்போது ஆச்சரிய விழிகளோடு கீழே இறங்கிய  மனைவியை கண்ட பிரணாவ்

” சோட்டு  தூங்கி விட்டானா?????”  என்று கேட்க

அதற்கு தன் தலையை ஆமோதிப்பது போல் ஆட்டிய மைத்ரேயி கணவன்

கையில் வைத்திருந்த பாட்டிலை சுட்டிக்காட்டி

“நீ குடிப்பாயா பிரணாவ் ????????” என்றிருந்தாள்……

“உன் மாமனாரோடு பெல்ட் நான் குடிக்கிறவனைப் பார்த்தாலே பியிந்து விடும் !!!!!

அம்புட்டு ஸ்டிரிக்ட்…..

அப்புறம் எங்கு இதெல்லாம்??????” என்று நொந்து கொண்டு

 சடாரென நிமிர்ந்து “நீ சரக்கடிப்பாயாடி பஜாரி ?????” என்றான்….

” டாடி எப்போதாவது குடிப்பாங்க …. இதோ இங்கிருக்கிறானே இவன் !!!!!”

வியானை சுட்டிக்காட்டி

“ரொம்ப சந்தோஷம் என்றாலும் சரி

துக்கம் என்றாலும் சரி பாட்டிலோடு இங்கு வந்து விடுவான்!!!!

 பாட்டிலை கண்டுவிட்டால் போதும் டாடியும் இவனும் சேர்ந்து போடும் ஆட்டத்தை என்னால் தான் தாங்கவே முடியாது !!!! ” மைத்ரேயி விளக்க

“உனக்கு எங்கள் மீது பொறாமை!!!!”  என்றிருந்தான் வியான் தன் தோழியிடம்….

” ஆமாமா இதை குடிப்பதற்கு பொறாமை வேறு!!!!! ஒருதரம் வியான் என்னை வெறுப்பேற்றவும் ஒரு டம்ளரை அப்படியே எடுத்துக் கொடுத்து விட்டேன்…….. அப்படியே குமட்டியும் வைத்தேன்…. எனக்கு பிடிக்கவில்லை பா !!!!

எப்படித்தான் இதை குடிக்கிறானோ????”

 நண்பனை  சாடியவள்

“இன்று சிவராத்திரி தான்!!!!!” என்ற தன்

தலையில் கைவைக்காத குறையாக அவள்  புலம்பிய விதத்தில்

” சிவராத்திரி தான் இல்லைனு ஆகிவிட்டதே !!” தன்னுள் கூறியபடி சிரித்த பிரணாவ்

“சோட்டு தனியாக இருக்கிறான் …… நீ போய் படு….. நான் வியானை பார்த்துக் கொள்கிறேன் !!!” என்றான்.

  போய் படு வா??????

 நீ செய்த…. இல்லை இல்லை !!!!

நாம் செய்த காரியத்தில் இன்னும் செய்யவிருந்த செயலில் எப்படி போய் படுப்பதாம் ??????? எனும் செய்தியை கண்களில் தேக்கி கணவனையே பார்த்து நின்றவளின் மனதை படித்தவன்

அவளை நெருங்கி

செங்கொழுந்து வதனம்தனில் இடதுபுற

கன்னத்தில் மிருதுவாக வருடியதோடு அதனை மென்மையாக கிள்ளவும் செய்து

” போய் படுடி பஜாரி !!!!!” என்றான்.

 கணவனின் தொடுகையில் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் திரும்பிச் சென்றவளையே இமைக்காமல் பார்த்து மெய்மறக்க

“பாஸ் இன்னிக்கு நான் குடிப்பதற்கு ரீசன் நீங்கள் தான்…. நீங்கள் மட்டும்தான் !!!” என்று  வியான் தன் கண்களை திறக்காமலேயே கத்தவும்

” நீ இன்று எதற்கு ரீஸனாக இருக்கிறாய் என்று உனக்கு தெரியுமாடா????????” என்று மனதுள் குமைந்தபடி வியானின் அருகில் சென்று அமர்ந்தான் பிரணாவ் .

மேலும் மனைவி கூறி சென்ற தகவலின்

பொருட்டு

” ஏன்???? என் மேல் அவ்வளவு கோபமா????” பிரணாவ் கேட்டதற்கு

“நை நை பாஸ்….. பகுத் பியார்!!!”

(” இல்லை இல்லை பாஸ்  …. அவ்வளவு லவ்”)

திடீரென்று இந்தியில் உளற ஆரம்பித்தான் வியான்.

 மும்பை வந்ததிலிருந்து ஒரு முறை அவள் கார் பற்றிக் கூறுகையில் ஹிந்தியில் உரையாடியவன் இப்போது மீண்டும்

” பாஸ் முஜே ஆப்கா பகுத் பாசந் ஹை!!!!

க்யூன் கி?????”

( “உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு பாஸ்!!! ஏன் என்று தெரியுமா ????????” )

அதே ஹிந்தியில் உறவாட

” டேய்  இதுவே என் பொண்டாட்டி ஹிந்தியில் பேசினாள் என்றால் வேறு விதத்தில்  டீல் செய்திருப்பேன்!!!

 இப்போது உன்னை என்னடா செய்வேன்??????” என்ற ரீதியில் எழுந்து செல்ல

“இதர் ஆவோ பாஸ்!! யஹான் பைட்டோ …..”

(இங்க வாங்க பாஸ் !! இங்கேயே உட்காருங்கள்……”)

பிரணாவை  நகரவிடாமல் அவன் கரம் பற்றி வியான் இழுக்க

” என்னடா பண்ற ????????”

இந்த ஹிந்தி சேனலை எப்படிடா தமிழ் சேனலுக்கு மாற்றுவது??????”  என்று நொந்து கொண்டு பிரணாவ் கூறவும்

அது புரியாமலேயே

“ரொம்ப நாள் கழித்து என்னை குடிக்க வைத்திருக்கிறீர்கள் பாஸ்…..

 கடைசியாக மைத்தி கல்யாணத்தன்று குடித்தது!!!!!

 ஆனால் அப்போது அவ்வளவு கஷ்டம் என்பதால் குடித்தேன்…..  இப்போது……..”

 பிரணாவ் கேட்ட தமிழ் சேனலே வியான் வாயிலிருந்து ஒலிக்கவும் அதில்

நிம்மதியடைந்த பிரணாவ் ” இப்போது என்ன ஆனதாம் ?????”  என்றான் .

” எனக்கு உங்களை பிடிக்கவே இல்லை பாஸ் !!!! கொன்று குவிக்கும் அளவிற்கு கோபம் ….. “

“அந்த கோபத்தில் தான் குடித்தாயா ??????” என்று பிரணாவ் இடை புக

“அட என்னை பேச விடுங்கள் பாஸ்….. அப்புறம் நடுவில் கொஞ்சம் பக்கம் காணாமல் போய்விடும்!!” என்ற வியான் தொடர்ந்தான்……

 “மைத்தியை நீங்கள் கல்யாணம் செய்து கொண்டதும்

யுகன் சாரின் மச்சான் என்று தெரிந்தும் நீங்கள் எப்படிப்பட்டவர்????

 மைத்தியை எப்படி பார்த்துக் கொள்வீர்கள்?????

 ஒருவேளை அவளது பணத்திற்காக கல்யாணம் செய்து கொண்டீர்களோ??? என்று  பயந்து போனேன்…..

 அன்று அந்த அயோக்கியனிடம் வாங்கிய அடியை விட நீங்கள் எப்படிப்பட்டவர் என்ற

பயமே அவ்வளவு வலித்தது  …..

 பின் மைத்தியிடம் பேசும் போது அவள் உங்களை பற்றி எதுவும் தவறாக கூறாத போதும் உங்களின் மீது எனக்கு ஒரு நல்ல அபிப்ராயமே ஏற்படவில்லை!!!

 ஆகவே தான் நீங்கள் இங்கு வந்ததும் நான் மரியாதை இன்றி அப்படி நடந்துகொண்டேன்……

 நீங்கள் நம்ம கம்பெனி கேஸை மேஜிக் மாதிரி ஈஸியா சால்வ் பண்ணி அந்த சுந்தரமூர்த்தியை கண்டுபிடித்து மைத்தி உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றியதும்

 உங்களை கணித்தது தவறோ என்று எண்ணம் உருவானது……

 ஆனால் அது அந்த எண்ணம் தவறானது மட்டும் இல்லைடா மடையா பெரும்

குற்றமும் கூட !!!! என்பது போல் அவள் காணாமல் போனதும் நீங்கள் கொண்ட தவிப்பும் காதலும் எனக்கு சாட்டையால் அடிப்பதை போல் உணர்த்தியது…..

 ஐ அம் சோ ஹாப்பி பாஸ்….. மைத்தியை அவளுக்காகவே உண்மையாக நேசிக்கிற புருஷன் கிடைத்திருக்கிறார்…..

 ஒரு ஃபிரண்டா நான் உணர்வது உங்களுக்கு புரியாது போகலாம் பாஸ்….

ஏன் கொஞ்சம் ஓவராக கூட இருக்கலாம்!!???

 ஆனால் பிறந்ததிலிருந்து ஒரு உறவினனாக மட்டும் என்னைப் பாராமல் நண்பனாக அனைத்தையும் என்னிடம் பகிரும் தோழிக்கு நல்வாழ்வு கிட்டும் போது எனக்கு வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!!!!!!

 அதுவும் அடுத்தடுத்து அவள் இழந்த இழப்புகள் மிகக் கொடுமையானது!!!!!

 அவளை எப்பவும் இதே காதலோடு விட்டு கொடுக்காது நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் பாஸ் !!!!!!!!” என்று அருகில் இருந்த பிரணாவின் கையை பிடித்தபடி கூறிய வியானை கண்டு நெகிழ்ந்து போனான் பிரணாவ்……

” நான் தான்  உங்களை தப்பாக நினைத்து விட்டேன் பாஸ்!!!!  நீங்கள் வேண்டுமென்றால் என்னை ரெண்டு அடி அடித்து கொள்கிறீர்களா???????”  என்று பற்றிய பிரணாவின் கரத்தை கொண்டே தன் கன்னத்தில் நான்கரை அறைய

” என்ன பண்ணுகிறாய் ?????

முதலில் கையை விடு வியான் ……

 அடேய் விடுடா!!!!”

என்று கத்தியபடி தன் கையை உருவி

கொண்டான் பிரணாவ் …….

ஒருவரைப் பார்த்து பழகினால் தானே அவரது  உண்மையான குணத்தை பகுத்தறிய முடியும் !!!!

அதுவும் முரண்பட்ட சூழ்நிலையில் சந்திக்கும் பொழுது ??????

” எனக்கு கூட என்னிடம் நீ முறைத்துக் கொண்டு விரைப்பாய் திரிவதை பார்த்ததும் மைத்தியை நீ விரும்பி இருப்பாயோ !!!!!!

அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது போனதால்

உன் லவ் என்னால்  தான் நிறைவேறாமல் போய்விட்டது என்ற கோபமோ?????? என்று கூட நினைத்திருந்தேன்…..

 ஆனால் இப்படிப்பட்ட ஒரு பிரண்ட்ஷிப்பை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை!!!!!!”  பிரணாவ்

கூறும் போது

“ஹாஹா ஹாஹா !!!!!!” என்று சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான் வியான் ……

 “லவ்வா?????? நானா??????

 அதுவும் மைத்தியையா ??????

இந்த விஷயம் மட்டும் ஸ்ரீதீப்பிற்கு தெரிந்தால் அவ்வளவுதான்!!!!!

 என் தோலை உரித்து தொங்க போட்டிருப்பான் ……..

நல்லவேளை அவன் இங்கு இல்லை!!!!”

 என்று தன்னைக் தானே உலுக்கி கொள்ள

“ஸ்ரீதீப் என்றால் ???????

இன்று போனில் பேசினாயே… அவனா??????”  தன்னுள் பரவிய இனம்புரியாத உணர்வுடன் சந்தேகம்

கேட்டான்  பிரணாவ் ……

” அவனே தான்!!!!!!

 இன்று காலையில் ஏர்போர்ட்டில் கூட பார்த்தோமே???????

அவனே தான்….. காதல் மன்னன்… எங்க ஹீரோ!!!!!!!

பொதுவாக எல்லோருக்கும் லவ் என்றாலே  பூ  தான் ஞாபகத்திற்கு வரும்….

 ஆனால் எனக்கு ஸ்ரீ தன் கண்முன் தோன்றுவான் !!!!!”

“ஏன் அப்படி யாரை லவ் பண்ணினானாம் ??????????”

 பதிலை யூகித்திருந்த போதும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவன் காதலை பற்றி முழுதுமாக

தெரிந்து கொள்வதற்கு வினவி இருந்தான் பிரணாவ்…..

 “மைத்தியை தான் பாஸ் !!!!!

அவளுடைய காலேஜ் சீனியர்…..

 அந்த காலேஜ் பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்டில் இருந்து பிரின்சிபள் வரையும் அவனுக்காக தவமாய் தவமிருந்து காத்திருக்க அவனோ நம் மைத்தியின் பின்னால் சுற்றி திரிந்தான்…..

 ஆக்சுவலா இந்த காலேஜே அவனுடையது !!!

எம்.பி நாகேஷ் கிருஷ்ணாவின் பையன்!!!!!!” வியானின் விளக்கத்தில்

 “வாட் ????????????” என்று தன்னை மீறி கத்தி அந்த சோபாவிலிருந்து அதிர்ந்து எழுந்தே விட்டான் பிரணாவ் …..

 பின் சுதாரித்து “ஸ்ரீதீப் என்.கே பையனா?????” கொஞ்சம் தயங்கியவாறே அமர்ந்தபடி கேட்கவும்

“ஆமாம் பாஸ்……  அவனுடைய கல்லூரியில் தான் மைத்தி படித்தாள்!!!!!!!”

 இப்போது பிரணாவினுள் தோன்றிய உணர்வை அவனால் சரியாக வரையறுக்க முடியவில்லை…..

தன் பஜாரியை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளாமலும் இருக்கவும் முடியவில்லை இல்லை அதேசமயம் அவளை பற்றி இப்படி ஒரு மூன்றாம் மனிதனிடம் கேட்பது தவறா என்று தெரியவில்லை ????

இருந்தும் நிலைகொள்ளாமல் இரண்டு நிமிடம் கரை ஒதுங்க முடியாத தீவினில் தன்னந்தனியாய் தவித்தவன் போல அதற்கு மேல் முடியாது கேட்டே விட்டான் ….

“மைத்தி….. மைத்தியும் லவ்….. அவனை லவ்..  லவ் பண்ணினாளா?????????????”

என்றான்  ஒருவாறாக   திக்கிதிணறி….

 ” எனக்கும் ரொம்ப நாளாவே இதே டவுட் இருக்கு !!!! மைத்தி ஸ்ரீதீப்பை லவ் பண்ணினாளா இல்லையா பாஸ் ?????????” அதே கேள்வியை வியான் பிரணாவிடம் திருப்ப

‘டேய் ஒழுங்கா சொல்லுடா!!!!!”  பொறுமையின்றி  கத்தினான் பிரணாவ்….

”  மைத்தி என்ன பண்ணானு எனக்கு எப்படி பாஸ் தெரியும்????

நீங்கள் தானே அவள் புருஷன்….

உங்களிடமே சொல்லவில்லை என்றால் என்னிடம் எப்படி ?????”

ஏதோ தெளிவுபடுத்த பேசியவன் போல

” மைத்தி லவ் பண்ணியிருந்தால் தானே பாஸ் அவனை திருமணம் செய்து

கொள்ள சம்மதித்திருப்பாள்??????

அப்புறம் ஏன் ‘இவனை மட்டும் கட்டிக்க மாட்டேன் !!!!!’ என்று ஸ்ரீதீப்பை நிராகரிக்கவும் செய்தாளாம்???????”

ஒரு விரலால் தன் மண்டையில் தட்டி யோசிப்பதாக பிரணாவை நன்கு குழப்பிவிட

” ஐயோ படுத்தாமல் உண்மையை சொல்லி தொலையேன்டா ” எகிறி துடிக்கும் இதயத்தை சீராக்க வழி தெரியாமல் கிட்டத்தட்ட கூச்சல் போட்டான் பிரணாவ்……..

 அதில் உடனே எழுந்து “அட்டென்ஷன்!!!!!!” என்று ஒரு சல்யூட் வைத்த வியான்

” ஓகே பாஸ்!!!!!

சொல்லிவிடுகிறேன் பாஸ் !!!!!”  என்று கூறிவிட்டு

” லெட் மீ டெல் எ குட்டி ஸ்டோரி…..

 பே அட்டென்ஷன் லிஸன் டூ மீ!!!!!!! ” பிசகாமல் பாடியவன்

 “இப்போ உங்களுக்கு முன்னாடி ஒரு ஸ்பைரல் வட்டம் தெரியுதா பாஸ் ????????

அதையே நல்லா ஜும் பண்ணி உத்துப் பாருங்கள்!!!!!!!!!!” என்று தன் தோழியின் கல்லூரி கால வாழ்வினை பற்றி கூற தொடங்கி இருந்தான் வியான்….

Advertisement