Advertisement
மைத்ரேயி இத்தனை நாட்களாக அவளுள் புழுகி கொண்டிருக்கும் சுமையை கேட்க நேர்ந்த பிரணாவிற்கு எப்படியாவது அவளை அதிலிருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்றொரு வெறி எழுந்தது …..
அதற்கு முதலில் மனைவிக்கு தன்மீது சிறு
நம்பிக்கையை விதைக்க எண்ணியவன்
அவளிடம் ஆறுதல் மொழிகளை முன் வைத்து
அவன் நெஞ்சில் புதைந்தவளை விலக்கி அவளை நிமிர்த்தி பார்க்க
அவளோ அவன் மீதே மயங்கி சாய்ந்தாள்….
அவள் நிலை கண்டு உள்ளம் பதைபதைக்க
“என்னடி ஆச்சு பஜாரி உனக்கு ?????????
இங்கு என்னை பார்!!!!!!” என்றபடி அவள் கன்னத்தை தட்ட
அதில் அவனவள் விழிகள் திறக்காது போகவும் சற்றும் தாமதிக்காமல்
அவளை அப்படியே தன் இரு கைகளாலும் ஏந்தி கொண்டு கடல் மணலில் கால் புதைக்கபடுவதை பொருட்படுத்தாமல் அதிவிரைவாக ஓடலானான் பிரணாவ்……
மைத்ரேயியை பிரணாவ் பார்த்து விட்டதை கண்டுகொண்ட வியான்,
பிரணாவ் அதே இடத்தில் மண்டியிட்டு அமர்ந்ததையும் பின் எழுந்து அவள் அருகில் சென்றதையும் சற்று தூரத்தில் இருந்தபடி கவனிக்க தவறவில்லை ……
அவர்கள் இருவரது பேச்சுகளும் தெளிவாக கேட்டிராத போதும் மைத்ரேயி
உணர்ச்சி வசப்பட்டு அழுவது நன்கு தெரிந்தது…….
அவள் அப்பா இறந்த போது கூட இவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதவளை கண்டு நெஞ்சம் விம்மிய போதும்
கணவன் மனைவிக்கு இடையே செல்ல விரும்பாமல் தள்ளியே நின்று கொண்டான் வியான்……
இதுவே இன்றைய மாலை வரையில் அவன் உருவப்படத்தியிருந்த பிரணாவ் என்றால்
தோழியின் திட்டையும் பொருட்படுத்தாமல் வியான் அவளிடம் விரைந்து சென்றிருப்பான் தான் ……
ஆனால் இரவு மனைவியை காணவில்லை என்றதும் பிரணாவின் கண்களில் தெரிந்த தவிப்பு வியானை அசைத்து பார்த்ததோடு அவனை
அப்போது நின்ற இடத்தை விட்டு ஒரு அடி முன் வைக்க விடவில்லை …….
ஆனால் இப்போது கண்முன் பிரணாவ் மைத்ரேயியை தூக்கிக் கொண்டு ஓடி வரவும் அவசரம் அறிந்து அவனுக்கு முன் ஓடிச் சென்று கார் கதவை திறந்து விட்டான் வியான்….
பின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு வேகமாக விரைந்தவன் கலங்கியபடி பயணித்து வந்த பிரணாவிடம் எதுவும் பேச முற்படவில்லை…..
மைத்ரேயியை பரிசோதித்த டாக்டர் ” தைராய்டு லெவல் சடனாக சாட்சுரேட் ஆகி இருப்பதால் மயங்கி இருக்கிறாள்!!!!!”
என்றும் அவள் “ஏற்கனவே எடுத்துக்கொண்ட தைராய்டு மாத்திரையின் அளவு என்ன??????”
என்றும் வினவினார்….
பிரணாவிற்கு அவர் கேட்ட கேள்வியே முதலில் புரியவில்லை …..
வியான் தான் ” 75 எம்.சி.ஜி டாக்டர்!!!” என்று கூற
“அதை 100ற்கு மாற்றியிருக்கிறேன்… கொஞ்சம் ரெகுலராக எடுத்துக் கொள்ள சொல்லுங்கள் !!!” என்றார்.
இத்தனை நாட்கள் அவளுடன் இருந்த போதும் மனைவியை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லையே ???????
திருமணமான அடுத்த வாரத்தில் கூட “ஏதோ உடம்பு சரியில்லை!!!! அப்போதும் சோட்டுவை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலிற்குச் செல்கிறாள்!!!!!” என்று யசோம்மா உதிக்காவிடம் பேசிக்
கொண்டிருந்தாரே!!!!
“டாக்டர் அவள் உடம்பிற்கு வேறு ஏதேனும் பிரச்சினையா??????” பிரணாவ் பயந்தபடி வினவ
” நத்திங் டூ வொரி……ஷி இஸ் குட்!!! இன்னும் அரை மணி நேரத்தில் கண் விழித்ததும் அழைத்துச் செல்லுங்கள்……” என்று கூறிவிட்டு சென்றார் மருத்துவர் ….
பிரணாவின் முகம் தெளியாததை கண்ட வியான் அவனிடம் ஏதோ பேச முயல, ஆனால் அதை மறுத்து
“நான் மாத்திரை வாங்கி விட்டு வருகிறேன்!!!!” என்று மட்டும் கூறி நகர்ந்து சென்றான்.
மனைவியின் திறவா இமைகளையே
அதிக நேரம் பார்த்து நின்றவன்
” உன்னை நான் நன்றாகவே பார்த்துக் கொள்ளவில்லைடி பஜாரி!!!
இதோ இங்கிருக்கும் இந்த ரோஸ் பட்ஸை பார்த்த அளவில் கூட உன்னை பற்றியும் உன் உடல் நலத்தைப் பற்றியும் அறிந்துக் கொள்ள தவறி விட்டேனே???!!!!!
நீ ஒரு முறை சோட்டுவிடம் கூறினாய்…….
” நம்மை காப்பாற்ற வந்ததால் தான் உனக்கு உன் அப்பாவை ரொம்ப பிடித்திருக்கிறதா என்று!!!!! “
ஆனால் நான் எப்படி நடந்து கொண்டிருக்கிறேன்?????
எனக்கே என்னை நினைத்தால் பிடிக்கவில்லை!!!!
அந்த டாக்டர் இப்போது பார்த்தான் பாரு
ஒரு பார்வை ……..
உன் பொண்டாட்டி தானேடா இவள்???????
பின் இவள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் அளவை கூட பக்கத்தில் இருக்கிறவன் தான் சொல்லுகிறான்!!!!!!!!
நீ என்னடா செய்கிறாய்??????? என்பதுபோல்!!!!!!
அந்த நிமிடம் நீ விழித்திருந்தால் கூட
உன் நண்பனை விடுத்து எனக்கு தானேடி பஜாரி சப்போர்ட் பண்ணி இருப்பாய்!!!!!!
ரொம்ப சின்ன பிள்ளையாக இருக்கிறாளே!!!
எப்போது நமக்கு மேட்ச் ஆகிற மாதிரி மாறுவாள்???? என்று நிறைய தடவை முட்டாள் தனமாக நினைத்திருக்கிறேன்…..
ஆனால் இன்று சொல்கிறேன்டி பஜாரி….
நான் உனக்கு சுத்தமாக கொஞ்சம்கூட எந்த வகையிலும் தகுதியானவனே கிடையாது !!!!!”
தன் இதயத்தைத் தொட்டு காண்பித்தவன்
“இங்கு வலிக்குதுடி பஜாரி !!!! கொஞ்சம் கண்ணு முழிச்சு வைத்தியம் பாரு…..
இத்தனை நாட்களும் உன்னிடம் நான் சகஜமாக தானே பேசி பழகினேன்……
அப்படி இருந்தும் மாமா பற்றி நீ ஒரு வார்த்தை கூட பேசியதில்லையே?????
இன்று காலையில் கூட அவர் ஃபோட்டோவை காண்பித்து உன்னை ஒரு தைரியமான பெண்ணாக தானே நீ வெளிப்படுத்திக் கொண்டாய்????”
இப்போதும் பீச்சில் அவள் தந்தை பற்றி மனைவி அவனிடம் பகிர்ந்து கொண்டதை எண்ணி பிரணாவினால் ஒரு துளிகூட
இதமாக உணரமுடியவில்லை…..
மாறாக இத்தனை நாட்கள் தன்னிடம் இவ்வளவு சோகத்தை மறைத்து புதைந்திருக்கிறாள் என்பதை நினைக்கும் போது
‘நான் அத்தனை நம்பிக்கை அற்றவனாகவா நடந்து கொண்டிருக்கிறேன்????????’
எனும் எண்ணம் அவனுள் ஆணிவேராக முளைத்து இம்சித்தது!!!
திருமண பந்தத்தை நிலைநாட்ட தன்னோடு அவள் உறவாடுவது இவ்வளவு கடினமாகவா ???????
“என்னை உனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லையாடி பஜாரி?????????????”
அவன் அவளிடம் அவ்வளவு மருகி கேட்டபோது
“அப்படி எல்லாம் இல்லையே!!!!!!!!”
என்பதுபோல் தன் இரு கரு மணிகளையும் அசைத்து அவளையறியாமலேயே அவள் கணவனின் இதயத்தை வருடி மருந்திட்டு இருந்தாள் அவன் பஜாரி…..
அவள் விழிகளில் அசைவை உணர்ந்து அவளையே அவன் பார்த்து நிற்க
இரு முறை சிரமப்பட்டு தன் இமைகளை அழுந்த மூடி விரித்த மைத்ரேயி
அங்கு தன் கணவனையும் அந்த இடத்தையும் சிறு நோட்டமிட்டபடி எழுந்து அமர முயன்றாள் …….
அவள் அப்படி எழுவதற்கு கூட உதவி புரியாது நின்ற இடத்தை விட்டு அசையாது பார்த்தவனை கண்டு சற்றே வெட்கியவளாய்
” சாரி …… ரொம்ப டிரபிள் கொடுத்து
விட்டேனா??????” என்றாள் ஒருவித வருத்தத்துடன்….
மனைவி அப்படிக் கேட்டது பிரணாவிற்கு கோபத்தை வரவழைக்க
” இல்லை ரொம்ப சந்தோஷத்தை கொடுத்து விட்டாய்!!!!!!” என்றான் அவ்வளவு உஷ்ணமாக …..
“சாரி பிரணாவ்!!!”
எதற்காக இப்படி எறிந்து விழுகிறான் என்னும் காரணம் தெரியாது கூறியவளிடம்
“உடம்பு சரியில்லை என்று கூட பார்க்க மாட்டேன்!!!!!! அப்படியே ஒன்று விட்டேன் என்றால் பாரு????????” என்று பிரணாவ் கை ஓங்கிய சமயத்தில் தான் வியான் அறையினுள்ளே நுழைந்து இருந்தான்….
பிரணாவின் கை அந்தரத்தில் நிற்பதை
பார்த்து நண்பன் ஏதாவது சொல்வானோ என்று பயந்தவள்
“ட்ரிப்ஸ் லெவலை கொஞ்சம் அதிகப்படுத்த சொல்லியிருந்தேன்….. அதுதான் பிரணாவ் ஹெல்ப் பண்றா…ங்க!!!” அவசர விளக்கம் அளித்திருந்த தோழியிடம்
“நான் எதுவுமே கேட்கவில்லை!!!!!” என்றபடி அவள் அருகில் வந்த வியான்
“நீ தினமும் எத்தனை எம்.சி.ஜி தைராய்டு டேப்லெட் எடுத்து கொள்கிறாய்?????” என்றான் …
இரண்டு மாதங்களாக அந்த மாத்திரைகளையே சுத்தமாக சாப்பிட மறந்து இருந்தவள் திடீர் என்று நண்பன் கேட்கவும் தடுமாறி பின் ” 75 !!!!” என்றாள்…..
வியான் அதை கவனிக்க தவறி இருந்த போதும் பிரணாவின் கண்களுக்கு மனைவியின் தடுமாற்றம் தெள்ளத்தெளிவாக சிக்கியது ……
“டாக்டர் அதை 100 எம்.சி.ஜி. யாக மாற்றியிருக்கிறார் ….. இதை பிடி!!!!” என்று ஒரு டப்பா மாத்திரைகளை வியான் நீட்ட அதனை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் மைத்ரேயி …..
பின் டாக்டரிடம் கேட்டுக் கொண்டு மைத்ரேயியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர் பிரணாவும் வியானும்…..
அங்கு சோட்டு உறக்கத்தில் இருக்க வியானின் அம்மா
மைத்ரேயியை பிரணாவ் கைத்தாங்கலாக அழைத்து வருவதை காணவும்
” என்னம்மா ஆச்சு????? எங்கு சென்றிருந்தாய்??????
உன்னை காணவில்லை என்று இவர்கள் தேடி செல்லவும் நானும் பயந்து விட்டேன்!!!!!”
என்று கூற
” என்னை தேடினாயா?????” என்பதுபோல் கணவனை நிமிர்ந்து பார்த்தவள்
அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முன்
“மைத்திக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அம்மா….. நான் நைட் இங்கே ஸ்டே பண்ணிக்கொண்டு நாளை வருகிறேன்!!!!
நீ கிளம்பு” என்றான் வியான் தன் அன்னையிடம்….
” என்னடா சொல்கிறாய் ????
ஏன் மைத்தி உன் உடம்பிற்கு என்ன????
இப்போது எப்படி இருக்கிறது?????
நானும் இங்கேயே இருக்கட்டுமா????”
என்று அக்கறையுடன் அவர் வினவ
” அங்கு அப்பா தனியாக இருப்பார் …. நீ போய் அவரை கவனி…. ஏற்கனவே மணி பத்தரை ஆகி விட்டதுமா!!!!” என்று மறுத்திருந்தான் வியான் ……
“சரி நீ சொன்னபடி சப்பாத்தியை எல்லாம் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்திருக்கிறேன்…… மறக்காமல் மூன்று பேரும் எடுத்து கொள்ளுங்கள்!!!!! ” என்றவரிடம்
” தேங்க்ஸ்ங்க !!!!!” என்றான் பிரணாவ்….
” எதற்கு தம்பி தேங்க்ஸ் எல்லாம்???? மைத்தி எங்கள் வீட்டு பொண்ணு!!!
போய் சாப்பிடுங்கள் ” என்றவர் மகனிடம்
” உன் அப்பா அங்கு ஏற்கனவே நான்கு முறை கூட்டிட்டு விட்டார்!!!!
நான் கிளம்புகிறேன்……” என்றபடி விடைபெற
“அம்மாவை டிராப் பண்ணி விட்டு வருகிறேன்!!!! நீங்கள் சாப்பிட்டு விட்டு போய் படுங்கள்……” என்றபடி தோழியிடம் கூறி விட்டு சென்றிருந்தான் வியான்….
சாப்பிடும் போது மௌன விரதத்தை கடைபிடித்த கணவனை கண்டதும்
எதற்காக இவ்வளவு கோபமாக இருக்கிறான்??????
இப்போது என்ன செய்தால் சரியாவானாம்??????
கேள்விகள் சூழ்ந்து கொள்ள
ஆனால் அவளுக்கு அதற்கான விடை ஏதும் கிட்டாது போக எதுவும் பேசாமல் எழுந்து தன் அறைக்குச் சென்றாள்……
மனைவியின் பின்னோடு வந்தவனுக்கு மெத்தையில் சோட்டுவை காணாது சிறு
அதிர்ச்சி!!!!
எப்போதும் இருவருக்குமிடையில் படுத்து தூங்குபவன் இன்று அவன் தொட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க
அவனைத் தூக்கி மெத்தையில் கிடத்த எத்தனித்தான் பிரணாவ் ….
கணவனின் செய்கையை “என்ன பண்ணுகிறாய் பிரணாவ்?????
சோட்டுவை விடு!!!” தடுத்தவளிடம்
” எப்போதும் மெத்தையில் தானே படுப்பான் …. அதுதான்!!!!!” என்றிருந்தான்.
“மாலை ரொம்ப நேரம் அழுதிருக்கிறான்….. இப்போது முழித்தால் மீண்டும் அழ ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடுவான் …… அவன் அங்கேயே தூங்கட்டும்!!!!!”
” ஆனால் அங்கு சென்னையில் நம் வீட்டில் இப்படி சோட்டு அழுதது இல்லையே????”
சந்தேகம் கேட்டவனிடம்
“குழந்தை என்றால் அப்படித்தான்….. பெரியவர்கள் மாதிரி அழுவதற்கும் சிரிப்பதற்கும் காரணம் தேட மாட்டார்கள்!!!!!” என்றவள்
” ஆமாம் இப்போது என் மீது உனக்கு என்ன கோவம் ????????” என்றாள் பட்டென்று கேட்டிராவிட்டால் கண்டிப்பாக இன்று இரவு தூங்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு…..
“கொஞ்சம் எமோஷனலாக இருந்தேன்…..
அப்போது உன்னை பார்த்ததும் என்னையும் அறியாமல் நான் பேசிவிட்டேன்!!!!!!”
அப்போது அறிந்திருந்தால் எதையும்
பேசியிருக்க கூட மாட்டாய்!!!! அப்படித்தானே???? என்ற ரீதியில் முறைத்தவனிடம்
“இனி நான் எதுவும் பேச மாட்டேன்….. இப்படி இஞ்சி தின்ற குரங்கு மாதிரி மூஞ்சியை வைத்துக் கொள்ளாதே !!!” என்று முணுமுணுத்தாள்.
” என்னடி சொன்னாய்?????
புருஷன் கிட்ட என்ன பேசணும் என்றும் தெரியாது எப்படி பேசணும் என்றும் புரியாது ?????
உன்னை!!!!!!”
மனைவியின் கரத்தை சுண்டி இழுத்து தன் கை வளையத்திற்குள் பிரணாவ் நிறுத்த
எதிர்பாராத கணவனின் தாக்குதலால் அவளது இதழ்கள் அதிர்ச்சியில் விரிய
சற்று நேரத்திற்கு முன்
மருத்துவமனையில்
‘இனி இந்த ரோஜா மொட்டுக்களை மட்டும் பார்க்கவே கூடாது!!!!!!!!’
என்று எடுத்த சபதம் அனைத்தும் காற்றில் கரைய
புதிதாக மலர்ந்த நேசம் ஒன்று!!!!
அது காதலா ???? இல்லை அதற்கும் மேலா ????? என்று அவன் ஆராய்ச்சிக்கூடத்தில் கிடப்பில் போட்ட உரிமையுணர்வு வேறு
“இத்தனை நாட்கள் ஹீரோவாக நடித்து நீ கண்டது தான் யாது பிரணாவ் ?????” என்று உசுப்பேற்றி விட
இத்தனை நாள்களாக அவனை பாடாய் படுத்திய இதழ்களை
“இன்று என்ன செய்கிறேன் பார் ?????”
என்று சவாலோடு அவள் கண்களில்
வில்லேந்தியவனிடம்
அவன் செய்யவிருக்கும் செயல் உணர்ந்தும் அவன் பிடியிலிருந்து நழுவாது
“இப்போது நீ வில்லனாகவில்லை எனில் நான் வில்லி ஆகிவிடுவேன்!!!!!!!” என்னும் அம்பை எய்து அவள் எதிர்நோக்க
அதற்குமேல் தாமதிக்க இயலாதவனாய் அவள் ரோஜா இதழ்களை தன் அதரங்களை கொண்டு முற்றுகையிட்டு இருந்தான் பிரணாவ்……..
மீள விரும்பா முதல் முத்தத்தில் முழுவதுமாய் தொலைந்து திகட்டாத புதியதொரு உலகில் சங்கரித்த இருவரையும் மோகத் தீ ஆக்கிரமிக்க
இன்னதென்று அறியும் முன்னே தத்தம் எல்லையை மீற ஆரம்பித்தனர் இருவரும்…….
விழிகளை அழுந்த மூடி கொண்டவள் மீது தடையின்றி சரசமாய் படர்ந்தவனின் சிகையை பெண்ணவள் இறுகப் பற்றிக் கொள்ள
“பயமாயிருக்காடி பஜாரி??????”
மனைவியின் காது மடல்களில் இதழ் பதித்து வினவினான் அவளின் கள்வன்…..
தன் வசம் இழந்திருந்தவளோ
இமை பிரிக்காமலேயே “இல்லை !!!!!”
என்பது போல் தலையை ஆட்ட
அதை சிலிர்த்தபடி ரசித்தவனோ மழை தொட்ட மண்ணாக அவள் வாசனையை முழுவதும் அறிய முற்பட்டான்……
கட்டுப்பாடின்றி அவன் விரல் அளவெடுத்து தீண்டிய அவள் பாகங்கள் அனைத்தையும் ஆட்சி புரியும் வேகத்தில்
அவளது உடையை பகையாக்க முற்படுகையில்
டமால்ல்ல்ல்ல்ல்ல்!!!!!!!!
என்ற சத்தம் வீட்டையே அதிர செய்ய
அது பிரணாவை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு தன்னவளிடமிருந்து விலகி கட்டிலை விட்டு சடாரென்று எழவும் செய்திருந்தது……..
Advertisement