Advertisement

சிந்தனையை தொலைத்து ஒருவித குற்றவுணர்வோடு அமர்ந்திருந்த மனைவியை உலுக்கிய பிரணாவ்

“கதை ரொம்ப போர் அடித்து விட்டதாடி பஜாரி….. ” என்று உதட்டை பிதுக்கி கேட்டதும்

தன் பார்வையை வேறு புறம் திருப்பியவள்

” அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை பிரணாவ்….. வா போய் சாப்பிடலாம்!!!!” என்றபடி தன் இருக்கையை விட்டு எழுந்தாள்….

” இந்த கர்ச்சீஃபை ஹசீ அன்றிலிருந்து ஓரு லட்சம் முறையாவது கேட்டிருப்பாள்…….

அவளை பொருத்தவரைக்கும் திஸ் இஸ் தி மோஸ்ட் பிரஷியஸ் திங் இன் தி

வேர்ல்ட்!!!! வா போய் அவளிடம் இதை சேர்த்துவிட்டு பிறகு சாப்பிட போகலாம்!!!” கணவனின் அழைப்பை

” நான் வரவில்லை பிரணாவ்…. நீ போய் கொடுத்து விட்டு வா!! நான் இங்கேயே வெயிட் பண்றேன்…. ” என்றபடி நிராகரித்திருந்தாள் மைத்ரேயி …

இவளுக்கு திடீரென இப்போது என்ன ஆனது?????? என்று எண்ணியபடியே

தோழியிடம் பத்து நிமிடங்களை செலவளித்து விட்டு அவனது பஜாரியை டைனிங் ஹாலிற்கு அழைத்து சென்றான் பிரணாவ்…..

அவர்களை  மேடையிலிருந்து பார்த்த ஹசீனா

“எப்படி இந்தப் பெண்ணை பிரணாவ் கல்யாணம் பண்ணி இருப்பான்?????

 அப்போது அவன் காதலித்த

விதுல்யா?????

எப்படி மறந்தான்????? ” என்று புலம்ப

” ஆரம்பித்துவிட்டாயா?????

இன்னும் எத்தனை முறை தான் இதே கேள்வியை கேட்டு முடிப்பாய்!!!!!!

 நல்லவேளை அந்தப் பொண்ணு முன்னாடி இப்படி எதையும் கேட்காமல் விட்டாய்….”  என்றான் அவள் கணவன் அஃப்னான்…..

மேலும் ” என்ன பிரச்சனை வந்தாலும் அதை ஈசியாக ஃபேஸ் பண்ணி குடும்பத்தை அழகாக பேலன்ஸ் பண்ணுவது தான் நம்ம பிரணாவின் ஸ்பெஷாலிட்டியே !!!!!!

அவன் பார்த்துக் கொள்வான்…..

 உன் ஃபிரண்டை தான் பார்த்து விட்டாய் அல்லவா ?????

இனியாவது புருஷனை கவனிமா!!!!”

புது மனைவியை திசை திருப்பினான்…

  சாப்பிட்டு முடித்து சோட்டுவோடு எழுந்து சென்று கைகழுவிய பிரணாவிடம்

“இதை மறந்து விட்டாயா?????”  என்றபடி அவன் ஐஸ்கிரீம் கப்பைக் நீட்டி இருந்தாள் அவன் மனைவி ….

அதைப் பார்த்ததும் அவன் முகம் சுருங்கியதைக் கண்டு கொண்டவள்

” இல்லை எனக்கு வேண்டாம் என்று தான் வைத்து விட்டே வந்தேன்!!!!”  என்று பிரணாவ் கூற கேட்டு

“ஏன் உதிஅண்ணிக்கு பிடித்த மேங்கோ ஃபிளேவர் என்பதால் சாப்பிட மாட்டேன் என்கிறாயா?????????”  என்றாள்….

தன் மனைவியின் கேள்வியில் இம்முறை அவள் செய்கையை போலவே தன்

இதழ்களை பிரித்து பிரணாவ் அதிசயித்து நிற்க  அவளோ

” சரி …..  அதை சாப்பிடா விட்டால் போகுது….

 இதை சாப்பிடு …….

 பிளாக் கரன்ட்!!!!!

என்னுடைய எவர் ஃபேவரட் ……” என்று கூறியதோடு

 திறந்திருந்த அவன் வாயில் ஒரு ஸ்பூனை எடுத்து அவனுக்கு ஊட்டியே விட்டிருந்தாள்………

  மனைவியின் அப்படி திணித்ததை ரசித்து ருசித்தவன்

 அவள் காதருகில் குனிந்து

“உன் ஃபிளேவர் செம டேஸ்ட்டி பஜாரி!!!!!!!” என்றான் சில்மிஷமாய்……

அவனது பேச்சில் அதிர்ந்து விரிந்து

 அவனை  இழுக்கும் அவளது ரோஜா இதழ்களை கண்டதும்

வேறு புறம் திரும்பி கொண்டவன் அவனையுமீறி

“எனக்கு பிளாக் கரன்ட் ஃபிளேவரை விட இப்போது இன்னொரு ஸ்டிராபெரி  ஃபிளேவரை  டேஸ்ட் பண்ணுவதற்கு தான் ஆசையாக இருக்கிறது !!!!!!” என்று கூறி வைக்க

 தன் இதழ்களை மூடிக் கொண்டாள் அவனவள்……

இப்படி பேசி பேசியே வசியம் செய்யும் உள்ளங்கவர் கள்வனை தன்னுள் இருந்த சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி முறைத்தவள்

 “எப்போது பார்த்தாலும் உனக்கு இதே நினைப்பு தானாடா??????”  என்றாள் கைகளை விலக்காமலேயே…..

” அடியேய் உனக்கு மனசாட்சியே

இல்லையாடி பஜாரி ??????

 நானும் சின்னப் பெண் …. கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று பார்த்தால் ரொம்ப தான் பேசுகிறாய்!!!!!

 அப்புறம் உன் பர்மிஷனிற்கு எல்லாம் வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கமாட்டேன் பார்த்துக்கொள்!!!!!!!”

உடனே

 நான் சொன்னேனா???????

 நான் சின்ன பெண் என்று உன்னிடம் சொன்னேனா ????????? என்று கூற வாய் திறந்தவள்

அங்கு ஒரு கூட்டத்தின் நடுவே ஆர்ப்பாட்டமாக மண்டபத்திற்குள் நுழைந்த ஒரு புதியவனை காணவும்

 பிரணாவையும் சோட்டுவையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஓடி இருந்தாள் மைத்ரேயி……

 மனைவியின்  இத்திடீர் ஓட்டத்திற்கான

காரணம் புரியாத பிரணாவ் அவள் பின்னோடு ஓடி சென்று

” என்ன ஆச்சு ?????

ஏன் இப்படி பயந்து போய் ஓடி வருகிறாய்??????”  என்று அவளை நிறுத்தினான்……

 மேலும் “அவன் எம்.பி நாகேஷ் கிருஷ்ணா……  ஒரே கட்சியில் இருப்பதால் ஹசீ உடைய பெரிய அண்ணன் இன்வைட் பண்ணி இருப்பான்……

 ஆமாம் நீ அவனது காலேஜில் தானே படித்தாய்????????

 ஏன் அவனைப் பார்த்துக் கொண்டு இப்படி ஓடி வருகிறாய் ??????

சொல்லுடி பஜாரி!!!  அவன் உனக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்து இருக்கிறானா ????????”

என்று வினவ

அதில்  கடைசி வாக்கியம் மட்டும் அவ்வளவு இறுக்கத்தை சுமந்து வெளிவந்தது……

 ஆனால் பிரணாவ் பேசியது எதுவும் மைத்ரேயியின் செவிகளை சென்றடையவில்லை……

 மாறாக ” வீட்டுக்கு போயிடலாம் பிரணாவ்…..  நம்ம வீட்டிற்கு போய் விடலாம்!!!!!”  என்று கணவனின் கை பற்றி அவள் முனக

அவளது ஜில்லட்ட தளிர் விரல்களை தன் வெப்பமான கரங்களுக்குள்  புதைத்து கொள்ள விழைந்தவன்

” சரி போகலாம்….. நீ முதலில் டென்ஷன் ஆகாதே!!!!”  என்றான் அவள் பதற்றம் அவனையும் தாக்கியதாக உணர்ந்து…

“கார் பார்க்கிங் அந்தப் பக்கம் வா!!!!!”

 என்று இறுக்கிய அவள் கரத்தை விடாது பிரணாவ் தன் மனைவியை  இழுக்க

” இல்லை நான் வரமாட்டேன் ……. ” என்று அவள் கரத்தை விலக்கி கொண்டவள்

” நீ போய் உன் காரை எடுத்து வா!!!! நானும் சோட்டுவும் இங்கேயே நிற்கிறோம்”

 என்று அவ்வளவு திடமாக உரைத்தாள்…..

அவள் நிலை புரிந்தவனோ வேறு எதுவும் பேசாது  ” சரி இந்தா சோட்டுவை பிடி…. எங்கேயும் போய் விடாதே  ….. இரண்டே நிமிடத்தில் வருகிறேன்!!!!”  என்று கூறிவிட்டு தன் பகானியை எடுக்க ஓடினான்…..

 ச்சி…. எவ்வளவு அழகான நாள் ???!!!!!

 பிரணாவ் தன்னையும் சோட்டுவையும் பிறருக்கு அறிமுகப்படுத்திய போது எவ்வளவு சுகமாக இருந்தது??????

அதுமட்டுமா???? மனம்விட்டு சிரித்து எப்படி கதை பேசினான்?????

 இன்று தானா  இந்த என்.கே. வை பார்த்து தொலைக்க வேண்டும் ??????

திருமணம் ஆன திலிருந்து தாம் கொண்ட பயம் எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டதாய் எண்ணியிருந்தோமே????

இப்படி இவனைக் கண்டதும் ஏன் தன் மனம் படபடவென்று அடித்து கொள்ள வேண்டும்?????

 அதன் காரணம் என்ன?????

தான் கடந்து வந்துவிட்டதாக எண்ணியிருந்த கசப்பு சுவடுகளின் மீதி இன்னும் தன்னை தொடரவிருக்கின்றதா??????

 நடுங்கும் உடலோடு நின்றவளின் அருகே காரை நிறுத்திய பிரணாவ்

“என்னடி பண்ணுது பஜாரி ??????” என்றபடி இறங்க

”  வேண்டாம் பிரணாவ்… நீ இறங்காதே!!!!!”

 என்று கூறி அவசரமாக அவன் காரில் ஏறிக்கொண்டாள் …..

எதுவும் பேசாது மௌனித்து வந்தவளிடம் பிரணாவ பேச்சு கொடுக்கவில்லை!!!!

 அப்போது மைத்ரேயியின் போனிற்கு அழைப்பு ஒன்று வர

எடுத்துப் பார்த்தவள்

அவசரமாக அதனை அணைத்தும் போட்டாள்……

 மனைவியின் செய்கையை தன் மனதில் குறித்துக் கொண்டே வந்தவன் வீடு திரும்பியதும்

அலைபாய்ந்த விழிகளுடன் நடமாடியவளை பிடித்து நிறுத்தி

” என்ன ஆச்சு???????”  என்றான்.

 அப்போது மீண்டும் அவளுக்கு போன் வர இம்முறை

 அதை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி போட்டவளிடம்

“யார் என்று சொன்னால் தானேடி பஜாரி எனக்கு தெரியும்??????”  என்றான் பிரணாவ் இஃது அவனது முறை போல்!!!!

“வியான் தான் கூப்பிடுகிறான் ……” என்றவளிடம்

“யார் வியான்?????” என்றான் பிரணாவ் குழப்பமாகவே …..

“வியானை உனக்கு தெரியாதா????

 ஆமாம்…. உனக்கு எப்படி வியானை தெரியும் ??????”

என்று அவள் கேள்விக்கு அவளே பதிலையும் சொல்லிக் கொண்டவள்

” வியான் என்னுடைய கஸின்….

ஒரு நல்ல ஃபிரண்டும் கூட!!!!!

எனக்கும் அவனுக்கும் தான் கல்யாண ஏற்பாடுகள் நடந்தது”

 “ஹோ!!!!!!!!!!!!”  என்ற பிரணாவ்

” சரி இப்போது எதற்காக கால் பண்ணுகிறான்???????

 அதை நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்???????”

 இயல்பாக தான் கேட்டான் .

” மும்பைக்கு அவசரமாக வர வேண்டுமாம்….. அங்கு பிசினஸில்

இப்போது ஏதோ குளறுபடியாம்!!!!!

நான் போய்  பார்த்தே தீர வேண்டுமாம்……

அப்பா ஆரம்பித்த பிசினஸ் என்பதற்காக

 போக நினைத்தாலும் அங்கு போனால் ஏதோ நடக்க கூடாத ஒன்று நடந்து விடுமோ என்று எனக்கு கண்டிப்பாக படுகிறது….

எவ்வளவு  சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான் …..

நீ வந்து ஒருமுறை செக் பண்ணு……

‘இந்த நஷ்டத் தொகையை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது’ என்று ஒரே புலம்பல் வேறு….

 நான் அங்கு  செல்லாமல் இருப்பதால் வெறும் மணி லாஸ் தான்…..

ஆனால்  அங்கு சென்றால் வேறு ஏதையாவது லாஸ் பண்ணி விடுவேனோ என்று ரொம்பவும் பயமாக இருக்கிறது பிரணாவ்!!!!!!” என்றாள் மைத்ரேயி துயில் கொண்டிருக்கும் மகனை ஓரப் பார்வை

பார்த்தபடி …

அவள் பேச பேச அதன் போக்கில் நடனமாடிய  அவள் கரங்களை பற்றியவன் பனிக்கட்டிக்கு நிகராய் இன்னும் அதே குளிர்ச்சியில் திளைத்ததை உணர்ந்து அவைகளை தன் கன்னங்களில் வைத்து சூடேற்றி

” நான் தான் இருக்கிறேன் அல்லவா??????”  நாம் போகலாம் !!!!

உன் அத்தான் ஒரு பிசினஸ் மேக்னட் …..

நம்புடி பஜாரி !!!!!

என் மாமா ஆரம்பித்த பிஸினஸ் என்று வேறு சொல்லி விட்டாய்…… எப்படி விட முடியும் ???????

உன் மாமா ஆரம்பித்த பிசினஸை பாதுகாப்பாக பார்த்து கொள்வது போல் இதையும்  பார்த்து விட்டால் போகிறது…..

நீ இனி எதற்கும் ஃபீல் பண்ண கூடாது ….

சரியா???????”  என்றான் அவளின் பாதுகாவலனாய்……

” இப்போது என்ன சொன்னாய் ?????????யாருடைய பிசினஸ் என்று சொன்னாய்????????”  என்று அதிசயித்த மனைவியிடம்

 “எங்கள் ஊரில் எல்லாம் மாமனாரை மாமா என்று தான்டி பஜாரி கூப்பிடுவார்கள்……

 உன்னை அப்படி கூப்பிட சொன்னால் நீ தான் பிகு பண்ணுவாய்……

சரி விடு !!!!!

நாம் மும்பைக்கு போகிறோம்  போர்ஜரி பண்ணுகிறவர்களை கூண்டோடு தூக்குகிறோம் சரியா??????”  என்றான் முடிவாய்.

“நிஜமாகவே நீ வருகிறாயா பிரணாவ்??????

 அப்போது இங்கு இருக்கும் உன் வேலைகள் எல்லாம்?????”

“அப்பாவிடம் சொல்லிக் கொண்டு போகலாம் …… அப்பாவும் சித்தப்பாவும் பார்த்து  கொள்வார்கள்!!!!

ஆல்சோ என் லேப்டாப்பை எடுத்துக் கொள்கிறேன்….

நாம் போய் ஒரு வாரம்  கூட இருந்து பார்த்து விட்டு பொறுமையாக வரலாம்….

 நோ ப்ராப்ளம்!!!!!!!”

” எப்படியடா போவது என்று  மலைத்து கிடந்தேன்…..

 இப்போது ஐ அம் சோ ஹாப்பி பிரணாவ்” வார்த்தைகளை தெளித்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியவளிடம்

“இப்போது உன் பயம் போய் விட்டதாடி பஜாரி!!!!!” என்றான் அவள் கண்களையே ஊடுருவியபடி …..

” நீ என்னுடன் இருக்கும் போது எனக்கும் என்ன பயம்??????”

” இப்படி டயலாக் விடுகிறவள் தான் சற்றுமுன் மண்டபத்திற்குள் நடுங்கி கிடந்தாள்!!!!!”

“அட ஆமாம் தானே!!!!! ” அசடு வழிந்து

“அது என்னமோ திடீரென்று பயம் வந்துவிட்டது!!!

அதை விடு …..

 இப்போது சொல்கிறேன் …..

மைத்தி இஸ் ஸோ  ஹேப்பி அண்ணாச்சி!!!!!!!” என்று குதித்தாள்….

  “என்னது அண்ணாச்சியா???????

 உறவு முறையையே சிக்கலாக்கி

விடுவாள் போலவே …..

‘அத்தான்’ என்று சொல்லடி பஜாரி!!!!!”

 “என்னமோ எனக்கு அப்படி கூப்பிட வரமாட்டேன்கிறது பிரணாவ் …..

 நீ சொன்ன பிறகு நானும் இரண்டு மூன்று தடவை டிரை கூட பண்ணி பார்த்து விட்டேன்….. ஆனால் முடியவில்லை!!!!”

திரும்ப எதையாவது இப்படி பேச ஆரம்பித்தான் எனில் அந்திவான கதிரவனுக்கு போட்டியிட்டு செம்மை பரவும் கன்னங்களை மறைப்பது சற்றே சிரமமாகி விடும் என்று உணர்ந்தவள்

 “இப்போது தூக்கம் வருகிறது……. தூங்கலாமா???????” என்று கேட்டு

ஓடி சென்று மகனை அணைத்தவாறு படுத்தும் கொண்டாள்….

 திருமணமான  நாளிலிருந்து இன்று

தான் மனைவியிடம் அதிகம் பேசி இருப்பதை எண்ணி புன்னகைத்துக் கொண்ட பிரணாவ் அவளருகில் சென்று

” என் பையன் எனக்கு கிடைத்ததற்கு இலவசமாக இந்த ஸ்கூல் பொண்ணும் கிடைத்திருக்கோ என்று பலமுறை எண்ணியிருந்தேன்…..

ஆனால் இனியும் அந்த உத்திரவாதத்தை கடைபிடிப்பேன் என்று நீயும் எதிர் பார்க்காதே!!!!!!

‘அவள் ஸ்கூல் பொண்ணு இல்லை உன் மகனின் அம்மாடா பிரணாவு!!!!’ என்று எனக்குள் தூங்கும் வில்லன் வேறு அடிக்கடி நியாபக படுத்துகிறான்….

இன்று  தூங்க விடுகிறேன்……. குட்நைட் டி பஜாரி!!! ” என்று கூறி தூங்கியிருந்தவன்

அவள் தூக்கத்தை முற்றிலுமாய் களவாடி சென்றிருந்தான்…….

  அடுத்த நாள் காலையில் “சோட்டுவை என்னிடம் விட்டு விட்டு போனால்

சீக்கிரம் போன காரியத்தை முடித்துவிட்டு திரும்பலாம் அல்லவா????? ” என்று காஞ்சனா பிரணாவிடம் கேட்டதற்கு

“இல்லை வேண்டாம் ….. ஒரு நாள் என்றால் சமாளித்துக் கொள்வார்கள்….

 இப்படி இரண்டு மூன்று நாட்கள் என்றால் முடியாது!!!!”  என்று மைத்ரேயி மறுத்ததை பிரணாவும் ஆமோதித்திருந்தான்…….

அதில் காஞ்சனாவிற்கு வருத்தம் தான் என்றாலும்

 புறப்படும் சயமத்தில் இப்படி மேற்கொண்டு வற்புறுத்தினால்

 போன காரியத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்று அமைதி காத்தார்…..

ஆனால் அங்கு நிகழவிருப்பவை யாவும் விதி படி நடந்தே தீரும் என்று

அடம்பிடித்து அவர்களை வரவேற்க

எந்தவொரு கவலையுமில்லாமல் மும்பைக்கு பயணித்திருந்தான் பிரணாவ் தன் மனைவி மற்றும் மகனுடன்……

Advertisement