Advertisement

தமக்கை என்ன கூற போகிறாள் என்று பிரணாவ் பார்த்து நிற்க

” கவின் மாமா (பிரணிதாவின் கணவர்) வீட்டில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் ஆளுக்காக தான் இந்த மாப்பிள்ளை கெட் அப் யுகி” என்று யுகனிடம் தன் தம்பியின் மனதை படித்து காட்டினாள் உதிதா…..

அதிர்ச்சி அடைந்த போதும் அதனை காட்டி கொள்ளாமல்

“ஆமாமாம் கவின் மாமாவின் வயசான பாட்டி ஒருவர்  இருக்கிறார்கள்….. அவர்களை பார்த்து ஆசீர்வாதம் வாங்க தான் போகிறேன்” என்றான் பிரணாவ் சிரியாமல்….

” என்னமா அளக்கிறான்

பாருங்களேன்!!!!!!!” தம்பியை பற்றிய குற்றபத்திரிகை கணவனிடம் வாசித்தவள் பிரணாவிடமே திரும்பி

 “அந்தப் பாட்டியிடம் நீ விடும் ஜொள்ளில் தான் அவர்கள் வீடே மூழ்கி விட்டதாம்…..  நியூஸ் சானலில் கூட  ஒளிபரப்பினார்கள்”  என்றாள் நக்கலாக…..

 எப்படிக் கண்டுபிடித்தாள்??????

பிரணாவ் வாயடைத்து யோசிக்க

” லைவ் டெலிகாஸ்ட் ஸ்வீட் ஹார்ட்!!!!!!! பிரணிக்கா கடைசி இரண்டு முறை நீ அங்கே போனவுடன் நடப்பதை படம் பிடித்து ஓட்டி இருக்கிறாள்!!!!”  என்று சிரித்தாள் உதிதா …..

“யூ ஸ்டுபிட் மங்கி ” என்று பிரணாவ் தமக்கையை திட்டும்போது

“எனக்கு சொல்லவே இல்லை அம்மு!!!!! எங்கே வீடியோ??????” என்றிருந்தான் யுகன் தன் மனைவியிடம் .

” அதை பார்க்கிறது வேஸ்ட் மாம்ஸ்!!!!

அந்த வீடியோவில் என்ன தெரியுமா இருக்கும்???

 நான் அவர்கள்  வீட்டிற்குள் போனதும் “வாங்க !!!!” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி  கூறி விட்டு ஓடிவிடுவாள்……

 ஆனால் சும்மா சொல்லக்கூடாது மாம்ஸ் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு டம்ளர் ஜூஸை கொண்டு வந்து கொடுப்பாள்  பாருங்கள்!!!!!!  செம டேஸ்டாக இருக்கும்…….” பிரணாவ் ரசித்து கூற

 “எல்லா புகழும் மாஸா காரன்

காரனுக்கே!!!!!”  உதிதா பாட ஆரம்பித்தாள்…..

“இது  வேறா??? இன்று பார்…… போனதும் முதல் வேலையாக அவளிடம் சொல்லி விடுகிறேன் “

” என்ன சொல்ல போகிறாய் மாப்பு???”

” ஜூஸ் போட சொல்லி தான்!!!!!” என்று பிரணாவ் தீவிரமாக உரைக்க

 ” போடுவாள் போடுவாள் உன்னை தான் நாலு போடு போடுவாள்” உதிதா ஓட்டியிருந்தாள்…..

” மாலை இரண்டு பேக்கையும் தூக்கி கொண்டு வருவாய் அல்லவா …… அப்போது உன்னை  பார்த்துக்கொள்கிறேன் !!!!” என்றவன்

 “எக்காரணம் கொண்டும் இந்த ஜூஸ் மேட்டர் அப்பா காதிற்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மாம்ஸ்…… அப்போது தான்  என் உதிக்காவை பத்திரமாக பார்சல் பண்ணி கூட்டி வருவேன்” சின்ன மாமனிடம் டீல் பேசி விட்டு தன்னவளைப் பார்க்க பெரிய மாமனின் வீட்டிற்கு சென்றிருந்தான் பிரணாவ்…….

விதுல்யா……

 உதிக்காவை போல் இவளுக்கும் எவ்வளவு நீளமான முடி !!!!!!

கவினின் தங்கை விதுல்யாவை பார்த்ததும் பிரணாவின் மனதில் பதிந்தது இது தான் ……

பிரணிதாவிற்கு ஆதிரன் பிறந்த சமயம் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது தான்

அவளை முதன்முதலாக பிரணாவ்  பார்த்தது….

தான் பார்க்கும் போது பார்க்காததும் பார்க்காத போது பார்ப்பதுமாய் கண்ணாமூச்சி ஆடிய விழிகளை நேரில் சந்தித்து “குடிக்க ஏதாவது கிடைக்குமா??????” என்றான் பிரணாவ்….

 என்னிடமா கேட்டீர்கள்!!!!!!!!! என்பது போல் கண்களால் பிரம்மித்து அப்படியே அமர்ந்திருந்தவளிடம்

” மாப்பிள்ளைக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாமா விது ” என்றிருந்தார் விதுல்யாவின் தந்தை….

 என்னது மாப்பிள்ளையா !!!!!??????

விதுல்யாவின் தந்தைக்கு பிரணாவை மிகவும் பிடித்துதான் அப்படி கூறியிருந்தார்…… உடனே

இரு ஜோடி கண்களும் ஒரு நொடி சங்கமித்து கொண்டது!!!!

 படபடக்கும் பட்டாம்பூச்சி விழிகளும்…..

 பேசத் தயங்கும் இதழ்களும் …….

வெட்கத்தை பூசிக்கொள்ளும் வதனமும்…..

 இவை எல்லாவற்றையும் விட தன் அக்காவை போல் இடை தாண்டி கூத்தாடும் கற்றை கூந்தலும்…….

இவ்வாறு அனைத்தும்  ஒருசேரப் பெற்றவளை பிரணாவிற்கு பிடித்துதான் இருந்தது…..

போன் வந்ததென்று வீட்டை விட்டு வெளியே சென்ற பிரணாவிடம்  ஜுசை கொடுக்க முற்பட்டவள் இரு முறை செருமி பார்த்தும் அவன் திரும்பிய பாடாக தெரியவில்லை……

“அத்….த்…தான்!!!!” என்று மென்னிலவின் குரலில் வீணை மீட்டியவளிடம் பிரணாவ்

திரும்பிய விதத்தில் அவன் கழுத்தில் சுளுக்கு ஏற்படாதிருந்தால் அதிசயம் தான்…..

“என்ன???? என்ன சொன்னாய்??????”

” இல்லை… அது வந்து…. ஜூஸ் கொண்டு …. வந்…தேன்….” தேனாய் திக்கி திணறி கூறியவளிடம்

” ப்ச்….. எப்படி கூப்பிட்டாய்?????????” என்றான் அவள் கண்களை ஊடுறுவி…..

அவ்வளவு தான் கொண்டு வந்த ஜீஸை அருகிலிருந்த சேரில் வைத்து விட்டு ஓடியிருந்தாள் விதுல்யா…….

 அவன் மனம் தெளிவாய் ‘இது  காதல் தான்’ என்று புகட்டி இருந்தும் அவளை அடுத்தடுத்து பார்த்துக்கொண்ட போதும் தன் மனதை அவளிடம் திறந்து காட்ட

விழைந்ததில்லை பிரணாவ் …..

அதற்கு அவனுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன…..

 முதல் காரணம் அவன் அப்பா கதிரேசன்!!!!!

 ஏற்கனவே பிரணிதா அக்கா செய்த காதலால் வீடு எப்படி நரகமாய் இருந்தது என்பதும் யுகன் மாம்ஸ் உதவியால் அனைத்தும்  சக நிலைக்கு மாறிய நிகழ்வுகளும்  அவன் நெஞ்சில் ஆணியடித்ததை போல் பதிந்திருந்ததால்   வெளிப்படையாய் அவன் காதலை கூற முடியவில்லை….

இரண்டாவது காரணம் விதுல்யாவே தான்!!!!!

 பிரணாவ்  பேசுவது  அவள் செவிகளுக்கு எட்டுமா???? என்று கூட சில சமயம்

அவனுக்கு ஐயம் எழுந்தது உண்டு!!!!!

 அப்படி  அவளை மறந்து அவன் முன்னே நிற்பவளை பார்த்து விட்டு திரும்புவதே தனி சுகம் தான் போலும் என்று  நினைத்திருந்தான்…..

 இன்றும் அதே போல் அவள் கொடுத்த ஜூஸை வாங்கி பருகிவிட்டு பேச நினைத்ததை எல்லாம் மறந்து விட்டு ஒரு மோன நிலையில் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் பிரணாவ்…..

 அக்காள்கள் வீட்டில் இருந்தாலே கேலி கூத்திற்கு பஞ்சமிருக்காது ….. அதுவும் இப்போது பிரணிதாவின் பையன் ஆதிரன் எழுந்து நடக்க ….. இல்லை இல்லை ஓட ஆரம்பித்ததிலிருந்து அவனை துரத்துவதிலேயே அந்த நாள் குறுகி விடுகிறது……

 மாலை 7 மணி அளவில் பிரணாவின் போன் அடிக்கவும் அதை எடுத்துப் பார்த்தவனின் விழிகள் தன் சின்ன அக்காளை தேட வாயோ “சொல்லுங்க மாம்ஸ்” என்றிருந்தது ….

“எங்கே மாப்பு வந்து கொண்டு  இருக்கிறீர்கள்????? டிராபிக் அதிகமா????” யுகன் வினவ

” வீட்டில் தான் மாம்ஸ் இருக்கிறோம்…” என்று பதில் கொடுத்தான் பிரணாவ்.

 நம்பாத தொனியில் ” வீட்டில் இருக்கிறீர்களா????? நான் ஃபுல்லா தேடி பார்த்து விட்டேன்…..  அம்மாவிடம் கூட கேட்டேனே??!!! அவர் இன்னும் வரவில்லை என்றாரே!!!! ”  யுகன் குழம்ப

” ஐயோ மாம்ஸ்….. அந்த வீட்டில் இல்லை…. இங்கு வீட்டில் உதிக்கா ஆதியுடன் பிஸியா ரன்னிங் ரேஸ் ஓடிக் கொண்டிருக்கிறாள்” என்றான் பிரணாவ்.

 “நிஜமாகத்தான் சொல்கிறாயா????? இல்லை வழியில் எங்காவது நிற்கிறீர்களா?????  நான் வந்து கூட்டி கொள்ளவா?????”  என்றான் யுகன் மீண்டும் ….

” என் மேல் எவ்வளவு நம்பிக்கை மாம்ஸ்!!!!!!

 நீங்களே பாருங்கள்……

 எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ரேஸை முடித்துவிட்டு என்னிடம் ஓடி வருவாள்…..  நானும் என் பைக் சாவியை கையிலே வைத்துக் கொண்டு தான்

சுற்றிக் கொண்டிருக்கிறேன்……

நன்றாக  பாருங்கள்……”  என்றபடி வீடியோ காலை ஆன் செய்திருந்தான் பிரணாவ்…

கூடவே ” உதிக்கா உனக்கு தான் போன்!!!!”  என்று அவளிடமே போனை பிரணவ் நீட்டி விட்டு செல்ல

”  இப்போது நீயாக வருகிறாயா??? இல்லை நான் அங்கு வரவா அம்மு!!!!”

 மனைவியிடம் கோபமாகவே கேட்டான் யுகன்.

 “இரண்டுமே இல்லை…. ஒன் வீக் இங்கே தான்!!!!!”

” சான்ஸே இல்லை!!!!!! இன்னும் ஒன் ஹவர் கூட தாக்கு பிடிக்க மாட்டாய்….. என்னிடம்  வந்து விடுவாய் “

” ஓவர் கான்ஃபிடன்ஸ் கொடுங்கோல் ஆட்சியாளரே!!!!”  என்று அவள் பேசும்போதே

“தித்தி தித்தி……..” என்றபடி ஆதிரன் அவள் கால்களைக் கட்டிக் கொள்ள

அவனை தூக்கியவளோ

“சித்தப்பா கிட்ட ஒன் வீக் லீவ் சொல்லிவிடு ஆதிக்குடி!!!!” என்றாள்….

 உடனே “திப்பா ஒன் லி லி”  ஆதிரன் அவன் சித்தி கற்றுக்கொடுத்த மொழியை தனக்கு தெரிந்த பாசையில் பிதற்ற

”  சூப்பர்டா கண்ணா” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தாள் உதிதா….

” ஹே ஆதி பையா உன் சித்தி தப்பு

தப்பாக செய்கிறாள்…. அவளிடம் சேராதே!!!”

”  இப்போது நான் என்ன தப்பாக செய்தேன்…..” அம்மா வீட்டிற்கு வந்தது ஒரு குற்றமா ரீதியில் உதிதா பாய

”  நீ இங்கு தர வேண்டியதை தப்பாக தானேடி அம்மு ஆதி கன்னத்தில்  கொடுத்து கொண்டிருக்கிறாய்”  தன் உதடுகளை சுட்டிக்காட்டினான் யுகன்….

 இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினான் என்றாலும் தன் கால்கள் சொல் பேச்சு கேட்காமல் அவனிடத்தில் சென்று தான் நிற்கும் என்பதை நன்கு உணர்ந்தவள்

” எனக்கு வேற வேலை இருக்கு….. நான் அப்புறம் பேசுகிறேன் !!!” போனை அணைக்க போனவளிடத்தில்

“இப்போது நான் அங்கு வருகிறேன்…. அப்புறம் தெரியும் உனக்கு என்ன வேலை என்று !!!!!” சரசமமாய் உரையாடினான் .

 ” போங்க யுகி!!!” என்று சிறு வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்த்தவளுக்கு அடுத்த நொடியே தலைசுற்ற

” யுகி!!! யுகி!!!!!!!!” என்று தடுமாறினாள்…

” என்னாச்சு அம்மு ?????? ஸ்கிரீனில் நீ தெரிய வில்லை…. ஆர் யூ ஓகே?????” யுகன்  கத்த

ஒரு கையில் ஆதிரனை பிடித்திருந்தவள் அந்தப் பிடியை இறுக்கமாக்கி மறு கையில் இருந்த போனை நழுவவிட்டு குழந்தையை அரை சிந்தனையிலும் கீழே இறக்கிவிட்டு அப்படியே மயங்கி சரிந்தாள்……..

 ஆதிரன் வேகமாக தன் அன்னையிடம் “தித்தி கீழே தூங்கி தூங்கி…….” என்று கூறவும்

உதிதாவை தேடி வந்த பிரணிதா தங்கையின் நிலை கண்டு “உதி என்னடி ஆச்சு???? எழுந்திரு!!!” என்று படபடக்க

 அவள் சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த பிரணாவ் உதிதாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தான்….

 அப்படியும் அவள் விழிக்காததால்  தமக்கையை தூக்கிக்கொண்டு காரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு புறப்பட்டான் குடும்பத்தினருடன்……

 பிரணாவின்  மூலம் விசயமறிந்த யுகன் அரக்கப்பரக்க ஓடி வந்தபோது மருத்துவமனை வாசலில் தான் பிரணாவ் நின்றிருந்தான்…..

 யுகனைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டதோடு “டாக்டர் இப்போது தான் மாம்ஸ் சொல்லி விட்டு போனார்கள்….. உதிக்கா பிரக்னன்ட்டா இருக்கிறாள்…….. கங்கிராட்ஸ் மாம்ஸ்!!!!!!” என்றான் பிரணாவ் பனித்த கண்களுடன்…..

 பின்னே 5 வருடங்களாக குழந்தை வேண்டி  தமக்கை பார்த்திராத மருத்துவமே கிடையாது ……

அச்சந்தோஷத்தை பிரணாவ் கண்களின் வாயிலாக வெளிப்படுத்த யுகனோ பேச்சு வராமல் திக்குமுக்காடிப் போனான்…..

” என் ……  என்ன…. என்ன மாப்பு சொன்னாய்  ???????” யுகன் உறைய அச்சமயம்

” உன்னுடைய உதிக்கா கண்ணு முழித்து விட்டாள்…… உன்னை தான் முதலில் பார்ப்பாளாம்…… உன்னை கூப்பிடுகிறாள் பிரணாவ் ” என்றபடி அங்கு வந்தார் உதிதாவின் தந்தை ரகுராம்.

 அப்போது அங்கே எதிர்பாராது யுகனை காணவும் சந்தோஷத்தில் ” வாழ்த்துக்கள் மாப்பிள்ளை!!!!! உள்ளே வாங்க…..” என்றார்.

” உன்னை தானே மாப்பு  கூப்பிடுகிறாள்….. நீயே செல் ” யுகன் பிரணாவிடம் சாதாரணமாய் கூற முயல

” அட வாங்க மாம்ஸ்….. அவளுக்கு என் அளவிற்கு இல்லாவிட்டாலும் உங்களையும் கொஞ்சம் பிடிக்கும்!!!!!!

 கெட் அவுட் எல்லாம் சொல்ல மாட்டாள்……” மாமனின் கையை பிடித்து தன் அக்காளிடம்  அழைத்துச் சென்றான் பிரணாவ்……

கணவன் எப்படியும் வந்து விடுவான் என்று தெரியும்……

 ஆயினும் இவ்வளவு சீக்கிரமாக உள்ளே நுழைபவனை காணவும்

“ரொம்ப ஃபாஸ்டா வந்தீர்களா யுகி????” என்றாள் உதிதா முதல் கேள்வியாக…..

 “மாம்ஸ் வரவே மாட்டேன் என்று வெளியிலே நின்றார் உதிக்கா…… நான் தான் இழுத்து கொண்டு வந்தேன்” பிரணாவ் கூறவும்

“டேய்!!!!” என்று உதிதாவும் “மாப்பு!!!!!” என்று யுகனும் ஒருசேர கத்தினர்…..

” அட!!!! நிஜமாகத்தான் சொல்கிறேன்

 உதிக்கா…. நீ என்னை தான் முதன் முதலில் பார்ப்பேன் என்று சொல்லி விட்டாயாம்…… அதுதான் மாம்ஸிற்கு

கோபம்……” போட்டுக் கொடுத்து வேடிக்கை பார்த்தான் .

கணவனின் கரத்தை  பற்றி அதனை தன் வயிற்றில் வைத்து “இங்கே உங்கள் குட்டி பையன் வந்துவிட்டான் என்று தெரிந்ததும் எனக்கு என் பெரிய பையனை தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியது யுகி” தன் மனதை அப்பட்டையாக வெளிப்படுத்தியவள்

 தன் இதயத்தை சுட்டிக் காண்பித்து “நீங்கள் எப்போதுமே இங்கேயே இருக்கிறீர்களா !!!!! எனக்கு எது தெரிந்தாலும் அது உங்களுக்கும் தெரிந்தது போல தானே”  கணவனையும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

 அவள் நெற்றியில் முத்தமிட்டு “தேங்க்ஸ் அம்மு” என்றான் யுகன்…..

 போலியாக இருமிவிட்டு பிரணாவ் “இங்கு ஒரு சின்ன பையன் நிற்கிறானே…… என்ற எண்ணம் எப்போது தான் வருமோ !!!!! நான் வெளியில் கிளம்பியவுடன் உங்கள் ரொமான்ஸை ஸ்டார்ட் பண்ணுங்கள் மாம்ஸ்!!!!! ஒன்றே ஒன்று மட்டும் என் உதிக்காவிடம் கேட்டு விட்டு போய் விடுகிறேன்…..

 ஆமாம்  அதென்ன உதிக்கா குட்டி பையன்??????? எனக்கு மருமகள் தான் வேண்டும்!!!!!!! ஒழுங்காக எனக்கு ஒரு பப்புமாவை பெற்று கொடு…… நீங்கள் என்ன மாம்ஸ் சொல்கிறீர்கள்??????” என்று கேட்டான் யுகனிடம் .

“புருஷனுக்கு பொண்டாட்டி மீது அதிக லவ் இருந்தால் பொண்ணு பிறக்குமாம் …..

அதே பொண்டாட்டிக்கு புருஷன் மீதிருந்தால் பையன் பிறப்பானாம் !!!!!

 சந்தேகமே வேண்டாம்  மாப்பு…… ஆல்வேஸ் மை லவ் ஸ்கோர்ஸ்!!!!!

 பிறக்கப்போவது இளவரசி தான்!!!!!

 அதுவும் இதே முட்டை கண்களுடன்!!!!!” என்றான் மனைவியை காதலுடன்  பார்த்தவாறு.

” அதெல்லாம் முடியாது….. குட்டி பையன் தான் பிறப்பான்” உதிதாக வாதாட

” முதலில் என் இளவரசியை பெற்றுக் கொடுத்துவிட்டு எத்தனை குட்டி பையனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள் அம்மு” என்றான் யுகன் இயல்பாக அதேசமயம் உறுதி தொனிக்க.

” இந்த டீல் எனக்கு ஓகே தான் மாம்ஸ்….. ஆனால் நான் எல்லாம் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று என் உதிக்கா மாதிரியே பெற்று வைத்து வேலையை முடித்து விடுவேன் ” என்றான் பிரணாவ்.

” ரொம்ப வீக்கா இருக்கீங்க சின்ன அண்ணி !!!!” என்றபடி அப்போது அங்கு வந்த விதுல்யா பிரணாவின்  பேச்சைக் கேட்டு அப்படியே இமைக்க மறந்து  அறை வாசலிலேயே நின்றுவிட….

அவளை பார்த்து விட்ட பிரணாவோ “இவள் எப்படி இங்கு ?????? அதுவும் இப்படி  ?????????”  தன்னையுமறியாமல் எழுந்து நின்றான்….

Advertisement