Advertisement
மனம் வாட இனி இவளிடம் பேசி
பிரயோஜனமில்லை என்று உணர்ந்தவன் “போய் படு!!!!!! ” என்றுவிட்டு தான் உறங்கும் அறைக்கு திரும்பினான்……
உண்மையை சொன்னால் இம்புட்டு கோபம் வருதாமாம்!!!!
ஆவேசமானவள் கணவன் பின்னோடு சென்று
“எனக்கு பதில் சொல்லிவிட்டு போய் படுங்கள் ” என்று வழி மறைத்தாள்.
“மரியாதையாக போய்விடு…. இல்லாவிட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!!!!!! “
சூடாக பாய்ந்தவனின் மேல் வருத்தம் கோபம் எல்லாம் ஒருசேர போட்டி போட்டு கொண்டு காட்டாறு வெள்ளமாய் பெருக்கெடுத்தது .
அந்த டைரியை மட்டும் பார்க்க
நேரிடாவிட்டால் இந்நேரம் இவன் சொல்லியிருக்கும் பொய்யை அப்படியே நம்பியிருக்க கூடும்!!!!!!!
“எம்மை மெய்யாகவே தங்களுக்கு பிடித்திருக்கிறதா அய்யனே!!!!!!!” அவன் காலில் கூட விழ நேர்ந்திருக்கும்!!!!!!
துரோகி!!!!
மனதை புண் படுத்தியதுமில்லாமல் அதை அலட்சியம் செய்து விட்டு போகிறவனின் மேல் எழுந்த கோபம்
அவளை பித்தாக்கியது…..
“எனக்கு இப்போது பதில் வந்தாக வேண்டும்……. எதற்காக இப்படி ஒரு நாடகம்????? “
“பதிலை தான் நீயே சொல்லிவிட்டாயே …….
என் அம்மாவிற்கு பேர குழந்தைகள் வேண்டும் என்று!!!!!
ச்சி கண்முன்னே நிற்காதே “
“இந்த உத்தமன் வேஷமெல்லாம் என்னிடம் வேண்டாம் …….. உங்களை பற்றி எல்லாம் எனக்கு தெரியும்”
“உத்தமன் வேஷமா? என்னடி தெரியும் உனக்கு ?”
“ப்ரணிக்காவை காதலித்துவிட்டு இப்போது …. இப்போது..என்னை……”
பேசமுடியாமல் திணறியவளிடம்
“என்னது உன் ப்ரணிக்காவை காதலித்தேனா!!!!!!!!!!
இது என்ன புது கதை??????” பற்களை கடித்தான்.
“மீண்டும் நடிக்காதீர்கள்!!!!!!!!!!! ” என்று உதிதா கத்தியபோது விழிநீர் அவளது கன்னத்தை உரசியது .
ஏதோ குழம்பியிருக்கிறாள் என்பதை உணர்ந்து “நான் நடிக்கவில்லை……. ப்ரணிதாவை நான் காதலித்ததாக உனக்கு யார் சொன்னார்கள் ?????” என்றான் நிதானமாக .
“யாரும் சொல்லவில்லை ……. நீங்கள் எழுதியிருந்த கடிதத்தை நானே படித்தேன்…. ” என்று மனைவி அழுகையுடன் கூறுவதை கேட்டு பலமாக சிரிக்க ஆரம்பித்தான் அவள் கணவன்.
“இப்போது எதற்கு இப்படி பேய் மாதிரி சிரிக்கிறீர்கள்????????? ” என்று அவள் வெடிக்க அருகில் சென்றவன் அவள் மூக்கை பிடித்து இழுத்து தன் நுனி மூக்கோடு உரசி
“ஆக அம்மணி டிடெக்டிவ் வேலையெல்லாம் பார்த்தீர்களாக்கும்!!!!!!!!
அந்த கடிதத்தை படித்துவிட்டு தான் அன்று இரவு அந்த பேச்சு பேசினாயா?????
எப்படி துடித்து போனேன் தெரியுமா?????
அன்று இரவு முழுவதும் ……….” என்று நிறுத்தியவனிடம்
சுற்றசூழலே மறந்து ” அன்று இரவு என்ன செய்தீர்கள்????? எங்கு போனீர்கள்????? ” என்றிருந்தாள் ஆட்சியாளனின் மனைவி.
“தஞ்சை கலெக்டர் சென்னை மாவட்ட ரௌண்ட்சில் இருந்தார்!!!!!!! ” என்றவாறு கண்ணடித்து சிரிக்க
அந்த மாயச் சிரிப்பில் லயித்தவள் இவன் கள்வனே தான் தன் உள்ளத்தை கவர்ந்து சென்றதுமில்லாமல் இப்படி தன்னை பொம்மை போல் ஆட்டி வேறு வைக்கின்றானே என்று நினைத்தவளின் மதி திடீரென விழித்து கொண்டு
அடியேய் நீ இன்னும் அவன் மேல கோபமாதான் இருக்கிற!!!!
எடுத்துரைக்க கணவனை முறைத்தாள் .
“உன் கேள்விக்கான விடையை ஆரம்பத்திலிருந்து சொன்னால் தான் உனக்கு புரியும் ….. சற்று உட்கார்ந்து பேசலாமா??????? ” என்று சோபாவில் அமர்ந்தவன் தன்
மனைவியையும் தன் மடியில் அமர வைத்து கொண்டான் .
அவள் நகர்ந்து உட்கார முற்படுகையில் அச்செயலை தடுத்து “உனக்கு என் காதலை பற்றி அறிய வேண்டுமானால் இங்கு தான் இருக்க வேண்டும் ” என்ற கண்டிஷனும் போட்டான்.
அவள் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்கவும் “உனக்கு நம் முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா உதி??????” என்றான் அவள் வயிற்றை கட்டிகொண்டபடி.
இயல்பாக அவன் கரங்களை தட்டிவிட்டவள் “ஓ!!!!!!!!!!! தெரியாமல் மோதி ……. தேவையில்லாமல் பேசி ………. அத்தையிடம் போட்டு கொடுத்தீர்களே!!!!! எப்படி மறக்க முடியும்????????” என்றாள் அன்றைய நிகழ்விற்கு பயணித்திருந்தவளாய்.
இதழ்களை பிரிக்காமல் சிரித்தவன் “இங்க பாரு!!!!!” என அவளை தன் புறம் திருப்பி
“உன் மேல் மோதியதும் இந்த கண்களை விரித்து என்னை பார்த்தாயல்லவா???? அப்போதே நான் கிளீன் போல்ட்…..
உன் ஸ்டூடெண்ட்ஸ் பேசுவதை கேட்டு நீயும் ஸ்டூடெண்டாக இருப்பாயோ!!!!!!!! இவ்வளவு சிறிய பெண் மீது இப்படியொரு எண்ணம் தோன்றலாமா ??????
அன்று என் மேல் உண்டான கோபத்தில் சிந்திய வார்த்தைகள் தான் அவை …..
பின் அம்மா உன்னை பற்றி சொன்னதும் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்று விட்டதாய் ஒரு நிறைவு …..
அப்போது இந்த இதழ்கள் ஒரு குறும்பு செய்ததே நினைவிருக்கிறதா அம்மு ?????? ” என்று அவள் இதழ்களை வருடி மென்மையாக தன் முத்தத்தை பதித்தான் .
கன்னங்களில் ஒரு கூடை ரோஜாக்களை வாடகைக்கு
இன்றி மொத்த விலைக்கு எடுத்திருந்தவளை விட்டு பிரிய மனமில்லாது மனைவியை அரும்பாடுபட்டு சற்று கீழே இறக்கி அமர வைத்தவன்
“இப்போது எனக்கு பேச மனமே வர வில்லை ……
இருந்தும் உன் மனம் தெளிவடையாமல்!!!!! நீ கேட்டதை எடுத்துரைக்காமல் முன்னேறுவது தவறு என்பதால் சற்று நகர்ந்தே உட்கார்ந்து
கொள்கிறேன்…. முடிந்தால் அந்த பக்கம் திரும்பி கூட உட்கார்ந்து கொள்……… ” என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.
“அன்று அம்மாவிடம் வேண்டுமென்றே துருவி துருவி உன்னை பற்றி கேட்டதால் தான் உன் நடன கலையை பற்றி சொன்னார்கள் ………
உன் நடனத்தை உடனே பார்த்தாக வேண்டும் என்றொரு வெறி உண்டாக உன்னை ஆட சொன்னேன் …….. ரியல்லி யு ஆர் அன் எக்ஸலெண்ட் டான்சர் உதிம்மா!!!!!!!!! ” என்று மனமார பாராட்டினான்
“இந்த டான்சரை விரும்புகிறேன் என்று சொல்ல அடுத்த நாள் பள்ளிக்கு வந்த போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது”
கால் மணி நேரமாக தேடி உன்னை கண்டுபிடித்து நெருங்கினால்
என்னை பார்க்க கூட இல்லாமல் “ஹாய்
நிதிஷ் ஹௌ ஆர் யூ ” வேறொருவனுடன் சென்று பேசி கொண்டிக்கிறாய்…..
அவனோ உன்னை காதலிப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்டான்!!!!!!!
எங்கு அவன் காதலை நீ ஏற்று கொள்வாயோ என்று அஞ்சி படபடக்கும் இதயத்தோடு காத்திருந்த அந்த வேளையில் தான் “ஐ அம் இன் லவ் வித் அபிஷேக்” என்று என் தலையில் இடியை இறக்கினாய் …..
அது உண்மை என்று நம்பியதால் வந்த குழப்பங்கள் தான் இவை எல்லாம்”.
உதிதா எதுவும் சொல்லாமல் அதிர்ச்சியிலிருந்து மீளா வண்ணம் கேட்டு கொண்டிருந்ததால் அவனே தொடர்ந்தான் .
“கான்ஃபரன்ஸ் மீட்டிங்கில் நிதிஷை பார்த்தேன் ….. அவன் மூலமாக நீ சொன்னது பொய் என்று தெரியவந்தது” என்றபோது
“ஆனால் நிதிஷிற்கு எப்படி தெரியும் ?????? அவனுக்காக தானே அந்த பொய்யையே சொன்னேன்!!!!! ” என்று சந்தேகத்தோடு வாய் திறந்தாள்.
“எப்படியோ தெரிந்தது விடேன்!!!!!!! ” என்று அவன் சிடுசிடுக்க அதை சந்தோஷமாகவே எடுத்துகொண்டாள் மனைவி .
“அவ்வளவு பொஸஸிவா யுகி????” என்று நினைத்தவள் கணவனை பார்த்து மனம் நிறைவாய் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள் .
“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது????????”
“அதனால் தான் அன்று அபிஷேக் இஸ் ஸோ லக்கி என்று கூறினீர்களா??
அபிஷேக் யார் என்று தெரியுமா?????”
என்று அவள் கேட்ட விதத்தில்
அதிர்ச்சியடைந்தவன்
“அது உன் கற்பனை கேரக்டர் என்று நினைத்தேனே …… யாரந்த அபிஷேக்???????? ” யுகன் சற்று பயந்துதான் போனான் .
“நிதிஷிடம் என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தேனா!!!!!! அப்போது
என் கைகளில் என் ஸ்டூடெண்ட்ஸ் அஸைன்மென்ட் பேப்பர்ஸ் கீழே விழுந்தது …… அதில் முதல் பேப்பர் அபிஷேக் உடையது …….. சூப்பராக படிப்பான் தெரியுமா?????” என்று சிரித்து தன் கணவனையும் அதில் சேர்த்து கொண்டாள்.
“போக்கிரி!!!!!!”
“அதெல்லாம் சரி ஏன் என்னை பெண் பார்க்க வந்ததாய் எழுதியிருந்தீர்கள்?????
அந்த வரியை படித்ததும் எப்படி அழுதேன்
தெரியுமா????? ” என்றவளின் கரத்தை
மென்மையாக அழுத்தி
“உன்னை பற்றியே நினைத்து கொண்டிருந்தேனா பெண் பார்க்க வந்த இடத்திலும் நீயே தெரிகிறாய் என்று நினைத்துவிட்டேன் …..
அம்மாவும் உதிதா என்று உன்னை அழைத்தார்களா நீ தான் பெண் என்று முடிவே செய்து விட்டேன் .
அன்று அவர்கள் பேசியது எதுவும் என் காதுகளுக்கு எட்டவே இல்லை ….
வீட்டிற்கு வந்து உன் மனதிற்கு எதிராக நடந்து கொள்ள மாட்டேன் என்று அந்த கடிதத்தை எழுதி முடித்த போது தான்
அம்மா வந்து
சொன்னார்கள் “ப்ரணிதா ரொம்ப நல்ல பொண்ணுடா …… உதிதா போல் அதிகம் பேசாவிட்டாலும் அவளும் நல்ல குணவதி தான்” என்று.
சீரியஸ்லி அப்போது தான் தெரிந்தது பெண் பார்த்து விட்டு வந்திருப்பது உன்னையில்லை உன் அக்காவை என்பது .
நல்ல வேலை நீ சொன்னது போலவே உன் அக்காவும் இரவோடு இரவாக ஓடிவிட்டாள் ” என்று உல்லாசமாக சிரித்தவனின் அருகில் சென்று எட்டி அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.
அவளுடைய முதல் முத்தம்!!!!!!!
கண்களை மூடி ரசித்தவனின் காதுகளில் “ஐ லவ் யூ யுகி ” என்று மேலும் பரவசமடைய செய்தாள்.
அதை கேட்டதும் அவனது கரங்கள் அவள் இடுப்பை சுற்றி வளைக்க நாணத்தினால் அவனை தள்ளிவிட்டு விலகி அமர்ந்தவளை “மனுஷனின் பீலிங்க்ஸ் உனக்கு என்றைக்குமே புரியாதா அம்மு???? ” என்று சீறினான் .
“என்றைக்குமே என்றால் ????? நான் என்ன செய்தேன்?”
“நீ என்ன தான் செய்யவில்லை!!!!!! அன்று உன்னை மறக்கவும் முடியாமல் இனி என்ன செய்ய போகிறோமோ என்று தவித்து கொண்டு நிற்கையில் மேடம் வந்து என்ன சொன்னீர்கள்????
‘ கலெக்டர் மாம்ஸ் அக்காவை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்’ என்று தானே ????
வந்தது பார் கோபம் !!!!!
அப்படியே உன்னை தூக்கி
போய் தாலி கட்டிவிட வேண்டும் என்ற வெறியை அடக்கி கொண்டு கிளம்பி விட்டேன் “
“கிழித்தீர்கள்!!!!!!!!
தாலியை கட்டி விட்ட பிறகும் என்னிடம்
பிரிவை பற்றி தானே பேசினீர்கள் ” என்று குறைபட்டவளிடம்
“அங்கே மட்டும் என்னவாம் ????
ப்ரணிதாவை காதலித்தேன் என்று தவறாக யூகித்ததும் வீட்டை விட்டு கிளம்பியவள் தானே நீ!!!!!!!! ” என்று சொல்லும் போதே இருவருக்கும் சிரிப்பு வந்தது.
“ஆனால் யுகி அன்று நீங்கள் கோபமாக எதுவும் பேசாமல் சென்று விட்டதால் என்னை பிடிக்கவில்லையோ என்று நினைத்து பிரணாவிடமும் தெரிவித்து………..
அதனால் தான் பிரணாவ் உங்களிடம் எப்போதும் நன்றாக பேச கூட மாட்டான்”
“அப்படி பேசாதவன் நீ வீட்டை விட்டு கிளம்பிய போது “மாமா” என்றான் பாரு …….. நிஜமாகவே ரொம்பவும் வருத்த பட்டேன் அந்த உரிமையை கொண்டாட முடியவில்லையே என்று!!!! “
“அது ப்ரணிக்காவிற்காக பரிந்து பேசினீர்கள் அல்லவா????
அதனால் ஏற்பட்ட திடீர் மரியாதையாக்கும் …… இல்லாவிட்டால் உங்களை கொடுங்கோல் ஆட்சியாளர் என்று தான் கூறுவான் “
“என்னது கொடுங்கோல் ஆட்சியாளரா???? தம்பி கூறியது இருக்கட்டும் ….. நீ என்ன அம்மு நினைத்தாய்??????? “
உள்ளங்கவர் கள்வன் என்பதை உள்ளத்தில் நினைத்தவாறு “நானும் அப்படி தான் நினைத்தேன் கொடுங்கோல் ஆட்சியாளரே!!!!” என்றாள் அவள் கள்வனிடம் குறும்பு மின்ன .
“கொடுங்கோல் ஆட்சியாளன் என்ன பண்ணுவான் தெரியுமா????? ஆனால் நான் இன்னும் ஒன்றுமே செய்யவில்லையேடி!!!!!!!!!!!” என்று கூறும்போது எழுந்து ஓடியவளை துரத்தி
பிடித்து
“என்ன கொடுமை படுத்த ஸ்டார்ட் பண்ணிவிடலமா !!!!!!!!!” என்று கேட்க
தன் மான் விழிகளை அகல விரித்து பின் சிமிட்டி அதற்கான சம்மதத்தை தெரிவித்திருந்தாள் யுகனின் அம்மு .”
( *****பாகம்1*** முற்றும்)
Advertisement