Advertisement

உன்னை நினைத்து 9

ஜானவி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டவள் தன் முன்னே அமர்ந்து இருந்தவனை பார்க்க

“சரவணன்”,ஏன் வீட்டில் நவிலனை பற்றி சொன்னே!

நான் சொல்லலை சீதா தான் சொல்லிட்டா!

ஹோ……  என்று தலையாட்டிவன் ம்…… அப்போ என்ன விட்டு உனக்கு போக சம்மதமா!, ஹம்………. எப்படி இருந்தாலும் வரவங்க என்கிட்ய இருந்து எப்படி இருந்தாலும் உனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுவாங்க, நீ ராபர்ட்டோ, ராஜேஷோ எவனையாவது கல்யாணம் பண்ணிப்பல?

உனக்கு போக சம்மதம்,வேற யாரையாவது கல்யாணம் பண்ணிப்ப, டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுவாங்க இப்படி பக்கம் பக்கமா காரணம் அடுக்கி போற நீ, என்னை எங்கேயாவது ஒரு இடத்திலாவது நினைச்சியா, என்கிட்ட ஒரு மண்ணிப்பாவது கேட்டியா,  இது எதுவும் செய்யமாட்டே, ஆனால் நான் உன்னை புரிஞ்சுகனும நினைகறது எந்த விதத்தில் நியாயம்  என்று நெற்றியை உயர்த்தி கேட்டவள், ம்ஹூம்……. நீ என்னைக்கும் என்னை புரிஞ்சிக்க மாட்டே!

நான் வரவங்களுக்கிட்ட பேசுறேன்,நானே அந்த குழந்தை நவிலனுக்கு அம்மாவா இருக்கேன்,உன்னை விட்டு பிரிய மாட்டேன் கவலை படாதே,அதே நேரம் இதை சாக்கா வெச்சு என்கிட்ட அட்வண்டேஜ் எடுத்துக்காதே சரியா!

சரவணனோ கண்கள் மிண்ண அவளின் கைகளை பிடித்து நன்றி கூறியவன் இன்னும் கைகளை விடாமல் இருக்க!

பார்த்தியா  சொன்ன சொல் தவற கூடாது என் கையை விடுறியா இப்போ குழந்தைக்கு மட்டும் தான் ஓகே சொன்னேன், உடனே உன்னை மண்ணிச்சிட்டதா  அர்த்தம் இல்லை,சரியா! பண்ணுறதுலாம் மொல்லமாறிதனம்  அனால் போடுறதோ நல்லவன் வெஷம் வெக்கமா இல்லை!

வெக்கபட்டு, வேதனைபட்டு,தூக்க பட்டு துயரப்பட்டுட்டு இருந்தா எனக்கு இரண்டு பொக்கிஷம் கிடைச்சி இருக்குமா?

அடிங்சேனா பல்லு பேந்துடும் தவைட கிழிச்சுடும் இப்படி கதைவிட்டனா, ஓழுக்கு மரியாதையா குழந்தை எப்படி வந்தது குழந்தை அம்மாவ பத்தி சொல்லு !

அது குழந்தையோட அம்மா வாடகை தாய் குழந்தை இண்டியால பொறக்கல இங்கே தான் பொறாந்தான், எனக்கு நம்ம திருமணம் ஆகி இரண்டு நாள் கழித்து காவ்யா கால் பண்ணான்னு அவளை பார்க்க போனேன், ஆனால் அவ இந்தா உன் குழந்தைன்னு கொடுத்துட்டு போக பார்த்தா!

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

ஏய் காவ்யா என்னடி பிறந்த குழந்தைய கொடுத்துட்டு போற எதாவது  பிராங்க்  பண்றியா என்று சிரித்தபடி சரவணன் கேட்டவன்,என்னோட கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு கோவிச்சுகாத டாக்டரம்மா சாரி டி  நீ இங்கே இல்லைல இந்த ஒரு வருஷமா லண்டனில் தானே இருந்த அதான் அங்கிருந்து எப்படி வருவியோன்னு தெரியலை அதான் கூப்பிடலை!,இந்தா இந்த குட்டி பாப்பாவ பிடி காவ்யா!

என்னது பிராங்க் பண்ணுறேனா நல்ல ஜோக், இது உன்னோட குழந்தை தான், நான் அன்னிக்கு உன்னை லவ்  பண்ணுறேன் சொன்னதுக்கு என்ன சொன்னே,இதே போல தானே பிராங்க்  பண்ணுறேன்னு சொன்ன உனக்கு பிராங்க் எது நீஜம் எது தெரியாதவளா நான், என்னால குழந்தை பெத்தெடுக்க  முடியாது தெரிஞ்சனால தானே அன்னிக்கு ஜோக் பண்ணாத சொல்லி அப்படியே போன , இதுல உன்னோட காதல் கதை வேற என்னிடம் சொல்லுற,  நான் உன்னை விட்டு போக நான் என்ன பைத்தியகாரியா, அதான் நீ இங்கிலாந்து வந்தபோது உனக்கு ஆக்சிடென்ட் ஆக வெச்சு உனக்கு முழு உடல் பரிசோதனையில் ஆண்மை பரிப்போனதுனு சொல்லி அதை பார்க்க டெஸ்ட் எடுத்தேன் ஞாபகம் இருக்கா அது எல்லாம் பொய்,உன்னோட sperm(விந்தனு) டெஸ்ட்க்கு குடுத்ததுல, அதுல பிறந்த குழந்தை தான் இது, என்று இதுவரை கோபத்துடன் கூறியவள் இப்போது உள்ளிரங்கிய குரலில் சொன்னவள் அங்கிருந்து செல்ல பார்க்க!

அப்போ இந்த குழந்தையோட அம்மா எங்கே? என்றவன் நீ சொல்லுறதெல்லாம் நம்ப நான் முட்டாள் இல்லை காவ்யா, யாரோ எவருக்கோ பிறந்த குழந்தை எல்லாம் என் குழந்தை ஆகிடமுடியாது என்று முறைத்தபடி கூறியவன் அவளிடம் குழந்தையை கொடுக்க போக,ஆவளோ விடாப்பிடியாக வாங்காமல் நின்றிருக்க!

காவ்யா எனக்கு இருக்குற பிரச்சினைல நீ வேற புதுசா  பிரச்சினை கிலப்பாம குழந்தையை வாங்கு!

வாவ் நைஸ், அந்த பிரச்சினைக்கூட இந்த பிரச்சினை எக்ஸ்டாரவ சேர்ந்து நிம்மதி இல்லாம தவி, என்று வன்மத்துடன் கூறிய காவ்யா, அப்புறம் இது உன்னோட குழந்தையா இல்லையா என்று டிஎன்ஏ டேஸ்ட் எடுத்து பார்த்துக்கோ, எனக்கும் இந்த குழந்தைக்கும் சம்மந்தம் இருக்கனும் தான் நான் நினைச்சேன், ஆனால் இது எனக்கு உருவான குழந்தை கிடையாது, எனக்கு இது தேவையும் இல்லை என்றவள் அங்கிருந்து நகர!

ஏய் ஏய் என்று போகும் காவ்யா வை சப்தமிட்டபடி சரவணன் அழைக்க ,அதே நேரம் உறங்கி கொண்டு இருந்த குழந்தை முதல் முறையாக தன் தந்தையை விழி பிரித்து சந்தோஷத்துடன் சிரிக்க!

அந்த சிரிப்பு சரவணன் இதயத்தை ஏதோ செய்ய ,அவனை பார்த்து டேய் தம்பி யாரு நீ , அந்த காவ்யா நீ என்னோட பையனு சொல்லுறா,நீ உன்மையாவுமே என் பையனா?  சரி டிஎன்ஏ டேஸ்ட் எடுத்து பார்க்குறேன் நீ என்னோட பையனான்னு அப்படியே அந்த ப்ராடு காவ்யா முடியும் என்கிட்ட தானே இருக்கு,   நீ அவளோட குழந்தையான்னும் செக் பண்ணுறேன்!

நீ இப்போ செக்பண்ணுவியோ இல்லை அப்பறமா செக் பண்ணுவியோ இப்போ எனக்கு பசிக்குதுடா  தகப்பா எதாவது செஞ்சு என்னோட பசிய போக்கு   என்று மனதில் பேசிய நவிலன் குவா குவா என்று விடாமல் அழுக !

அச்சோ இந்த குட்டி குரங்கு இப்படி கத்துச்சுனா இந்த பெரிய குரங்கு என்ன செய்ய, நம்ம ப்ரெண்ட்  குரங்கு அந்த ஜகதீஷ் கிட்ட தான் உதவி கேட்கனும்  என்று போனை எடுக்க பார்த்தவன் கையில் இருந்த குழந்தையை பார்த்து சரி காரில் இவனை வெச்சிட்டு போன் பண்ணனும் என்றவன் டை அழுகாத டா அழுகாத டா என்று சரவணன் கெஞ்ச நவிலன்  பசியில் மிஞ்ச ஒரு வழியாக காரில் குழந்தையை வைத்தவன்  வேகமாக நண்பன் ஜகதீஷ் மருத்துவமனைக்கு சென்றவன் என்னடா செய்ய என்று நண்பனிடம் கேட்க!

நீ ஆடாத ஆட்டமா டா ஆடுன நீ , இப்போ வெச்சாரு பாரு மச்சி கடவுள் காவ்யா மூலமாக ஆப்பு, உங்க வீட்டில் இருக்குற எல்லாருக்கும் குழந்தை விசயம் தெரியுமா  முக்கியமா உன்னோட வீட்டமாவுக்கு?

டேய் இது என்னோட குழந்தையான்னு இன்னும் கன்பார்ம் ஆகல,அதனால் ஒழுங்கா டிஎன்ஏ டேஸ்ட் எடு மச்சி , இந்தா அந்த காவ்யா பக்கியோட முடி டிஎன்ஏ டெஸ்ட் எடு   மவளை அவக் குழந்தை தெரிஞ்சது  அவளுக்கு இருக்கு வேட்டு, அதுக்கு முன்னாடி இந்த குட்டி குரங்கு  பசிக்கு அழுகுது என்னன்னு பாருடா என்றவன் கண்களை முடி அமர!

 நர்ஸிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிய ஜகதீஷ், நண்பரை பார்வையிட்டவன் ஹாஸ்பிடலில் ரவுண்ட் செல்ல!

 குழந்தை நவிலன் நர்ஸின்  உதவியுடன் பாலை அருந்தியவன்  தூங்கி கொண்டு இருக்க நான்கு மணி நேரம் கழித்து நண்பணின் முன் அமர்ந்த ஜகதீஷ்  டிஎன்ஏ டேஸ்ட் நீட்டியவன் காங்ரஜுலேசன் மச்சி அப்பா ஆனதுக்கு!

டேய் என்னடா சொல்லுற உன்மையாவுமேவா?

ஆமாம்டா  உன்னோட டிஎன்ஏவும் இந்த குட்டி பையன் டிஎன்ஏவும் 90%மெச் ஆகுது!

90% தானே ஆகுது மீதி 10 % என்னோடது இல்லைல வேற எவனோடதாவதும் இருக்கும்ல?

 மீதி10%. அவங்க அம்மாதா இருக்கும் அப்புறம் இன்னொரு விஷயம் நீ கொடுத்த காவ்யா முடி இந்த குழந்தையோட மேச் ஆகலை!

டேய் ஓழுக்கு மரியாதையா அந்த காவ்யா நாயை நான் இங்கே தான் இருக்கேன்னு அவகிட்ட சொல்லாம!நீ கூப்பிட்டனு  சொல்லி இங்கே ஹாஸ்பிடல் வரச் சொல்லு!மவள அவளுக்கு இருக்கு வேட்டு,தொறுகி என்னோட வாழ்க்கையே கெடுத்துடாளே , எனக்கு குழந்தை இருக்குற விஷயம் தெரிந்தா எங்க அப்பா அம்மா வீட்டில சேர்த்துக்கமாட்டாங்க இதே என்னோட பொண்டாட்டி ஜானவிக்கு தெரிஞ்சா என்னை வாழ்க்கையிலயே சேர்த்துக்கமாட்டா நான் என்ன பண்ணுவேன்டா ஜகதீஷ்?

உன்னை நினைச்சாலும் கஷ்டமா இருக்கு தான்டா என்ன பண்ணுறது பேசமா காவ்யா மேல கேஸ் போட்டுடலமா ? போர்ஜரி வேலை பார்த்ததுக்கு டாக்டர் கவுன்சிலிங்ல காம்பிளைன்ட்  பண்ணிடலாமா!

நானும் அதை தான் யோசிக்கிறேன் இவளோட தனிப்பட்ட வாழ்க்கைக்காக இப்படி பழிவாங்குறவ எது வேண்டுமானாலும் செய்யுவா இவளை மண்ணித்து விடுற அளவுக்கு இவ பண்ணது சின்ன விஷயம் இல்லைடா  ஒரு குழந்தை மற்றும் என்னோட வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம்!

காவ்யா உன்னிடம் காதல் சொன்னாளா?

ம்………. நான் பத்து மாதம் முன்பு இங்கிலாந்து போனேன் ஞாபகம் இருக்கா அது காவ்யா கூப்பிட்டான்னு போல ஜானவிய பார்க்க, அங்கே நான் ஜானவிய பார்த்துட்டு வந்த போது சாப்பிட போன இடத்தில் லவ் பண்ணுறேன் சொன்னா நான் அவளை தங்கையா தானே நினைச்சேன் மத்த பொண்ணுங்க கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்குற மாதிரி நான் அவகிட்ட அது போல நடந்துகள,அதனால் தான் அவ புரோபோஸ்  பண்ணும்போது கூட பிராங்க்  பண்ணாதே காவ்யா சொல்லி சிரிச்சபடி  வந்துட்டேன், ஆனால் அவ  நான் நினைச்சு பார்க்காத பெரிய தப்ப எனக்கு பண்ணிட்டா மச்சி!

இப்போ குழந்தையை என்னடா செய்ய!

என்ன செய்ய ? அவன் என்னோட பையன் எனக்கே தெரியாம அவன் வந்தாலும் அவன  எங்கேயும் விடுறதா இல்லை, இப்போ பிரச்சினை என்னடானா என்னோட பொண்டாட்டிய  சமாதானம் பண்ணணும் நானே பல மொல்லமாறிதனம் பண்ணிதான் அவளை கல்யாணம் பண்ணேன் என்ன பண்ண போறேனோ தெரியலையே என்று புலம்பியபடி அழுதவன், அப்போது கதவு திறக்கிற சத்ததில் தலையை உயர்த்தி பார்க்க

அங்கே மஞ்சள் நிற குர்தாவில் உள்ளே நுழைந்த காவ்யாவை, வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் சரவணன் முறைத்தபடி  பார்க்க!

ஜகதீஷ் ஏன்டி இப்படி கேவலமான விஷயத்தை பண்ணே?

நான் பண்ணது எதுவும் தப்பு இல்லை ஜகதீஷ் இவன் தான் நான் காதல் சொல்லியும் நிராகரிச்சது அதுக்கான  ரிசன் என்ன தெரியுமா எனக்கு பேபி பொறக்காதுன்ற விஷயம் தான் ,சோ நான் வாடகை தாய் மூலியமா என்னோட ஸ்பர்ம் இவனோட ஸ்பர்ம்  தான் நான் பேபியா  ஃபார்ம் ஆக வெச்சது அப்படி நினைச்சு தான் இந்த பேபி உருவான போது சந்தோஷப்பட்டேன்!

 ஆனால் எனக்கே ஆறு மாதம் கழித்து தான் இந்த குழந்தை என்னோட ஸ்பர்ம்ல உருவானது இல்லை தெரிந்தது ஸ்பர்ம் மாரிடிச்சு ஆனால் குழந்தையை அழிக்க மனசு வரல சரி நாமலே குழந்தைய வளர்க்கலாம் நினைச்சு என்னை நானே ஆறுதல் படுத்துன நேரத்தில்,எனக்கு இவனோட திருமணச் செய்தி இடியா இருந்துச்சு எப்படி இவன் என்ன கஷ்டபடுத்திட்டு இவன் சந்தோஷமா இருக்கலாம் அதான் குழந்தையை தூக்கிக் கொண்டு இவனை பார்க்க வந்தேன்,ஆனால் அதுக்கு முன்னாடியே அவன் பொண்டாட்டி  கோவிச்சுட்டு போய்ட்டான்னு கேள்வி  பட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆகிடிச்சு அப்படியே அவன் குழந்தையை  கொடுத்துட்டு வந்துட்டேன்!

அது வரை   சரவணன்  கேட்டு கொண்டிருந்தவன், காவ்யா கண்ணத்தில் ஓங்கி இரண்டு அறைந்தவன், ஏய் அரை லூசு நாயே எவனாவது தங்கச்சி முறை பொண்ண காதல் பண்ணுவாங்களா டி பாவி , என்ன வேலை செஞ்சி எனக்கு ஏழரை கூட்ட பாத்துருக்க பாவி பாவி  முதுகில் டோப் டோப்  என்று சரவணன் அடிக்க!

ஹா……. வலிக்குது  விடு வலிக்குது டா வலிக்குது,டேய் ஜகதீஷ் இவன் அடியில் இருந்து என்ன காப்பாத்து டா……. ப்ளிஸ் என்று கையெடுத்து கும்பிட!

டேய் டேய் சரவணா அடிக்காதடா அடிக்காதடா டேய் செத்துற கித்துற போறா டா டேய் விடுடா என்று ஜகதீஷ் அவனை பிடித்து இழுக்க!

ச்சீ அசிங்கமா இல்லை அண்ணன் மேல காதலாம்  அதனால பழிவாங்குனாலம் வெளியே சொன்ன வேக்க கேடுடா, இந்த விசயத்தை எங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சது என்ன கேவலமா கழுவி உத்துவாங்க டா   ஜகதீஷ், ஓழுங்கு மரியாதையா இந்த நாயை இந்த கேவலமான விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் சொல்லுடா!

டேய் நாயே நீ முதலில் அண்ணன் சொல்லி இருந்தா இந்த பிரச்சினை வந்து இருக்குமா எல்லாம் உன்னால வந்தது!

போடி முட்டாள் சின்ன வயசுல உங்க அப்பா அம்மா இறந்த அதிர்ச்சில எல்லாத்தையும் மறந்து,  நீயா தெளிஞ்சா நல்லது ஆதுவரை பலையதை கிளறாதே என்று டாக்டர் சொன்னதுனால தானே டி பக்கி  நீ என்னோட தங்கச்சி என்ற விஷயத்தை மறைச்சோம், ஆனால் உன்னை எங்க வீட்டு பெண் பிள்ளை போல தானே  வளர்தாங்க!

அது தான் உன்கிட்ட உரிமையாக இருக்க சொல்லிச்சி போல என்று  அழுதபடி காவ்யா நானே குழந்தையை வளர்க்குறேன், குழந்தையை தா என்று சரவணனிடம் கேட்க!

நீ ஒரு மயி********  வேண்டாம் குழந்தையை நானே வளர்க்குறேன் நீ கடைசி வருடம் மெடிக்கல் படிக்குற, போய் படிக்குற வேலையை பாரு என்றவன் குழந்தையோட டிடீயல்ஸ் மெடிக்கல்  ரிப்போர்ட் எல்லாம் எனக்கு வந்தாகனும் சரியா !

ம்….. சரி!

அப்புறம் இனிமே அண்ணான்னு கூப்பிட பாரு காவ்யா!

Advertisement