Advertisement

உன்னை நினைத்து 8

விருப்பம் பாதி தயக்கம் பாதி…

கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…

அலைகள் அடித்தே கடலில் விழவா…

துரும்பை பிடித்தே கரையில் எழவா…

இதுவரை இது போலே…

இருமனம் கொண்டு தவித்ததில்லை…

அதிலுமே எனக்காக…

திருமணம் வரை நினைத்ததில்லை…

காலை மூன்று மணி:

ஜானும்மா உன்னை என்னாட எப்படி எழுப்ப போறேனோன்னு இருந்துச்சு நீயே எழுந்துட்ட!

ம்மா என்று கண்கலங்கி தன்னை பார்த்த பெண்ணை  நான் கல்யாணம் பண்ணாம உன்கூட அப்பாக்கூடவே இருந்துடட்டா!

ச்சு….. என்ன அபசகுனமா பேசுற ஜானும்மா எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும் தான் இந்த நேரத்தில்,பாரு நீ எவ்வளவு பெரிய ஆளு திருமணத்துக்கு போய் அழுகலாமா…. என் செல்ல பொண்ணுல என்று கொஞ்ச!

இதனை பார்த்து கொண்டு இருந்த நேத்ரா ஜானும்மா நோ சென்டிமென்ட் போ போய் சீக்கிரமா குளிச்சிட்டு வா மேக்கப் போடுறவங்க வந்துடுவாங்க 5.30க்கு திருமணம்,போடா தாமதம் அக்காத போ!

ஏய் உங்களுக்கும் சொல்லனுமா போங்க டி போய் ரெடியாகுங்க!

என்ன லஷ்மி அக்கா , வாங்க கல்யாண வேலை அவ்வளோ இருக்கு இங்கே இருந்து கண்கலங்காம வாங்க என்று சமாதானம் செய்து அவரை அழைத்து கொண்டு செல்ல!

ஜானவி குளித்து முடித்து வந்த பின் மேக்கப் போடும் பெண்கள் வர அதன் பிறகு ஏற்கனவே இயற்கையின் அழகில் அழகாக இருந்தவள், அவர்களின் கைவண்ணத்தில்  இன்னும் அழகாக சிவப்பு நிற பட்டு புடவையில் மஹாலஷ்மியாய் இருந்தாள் ஜானவி!

அதே நேரம்  பெண்ணை பார்க்க கிரிதரன் வர அங்கே மணமகள் கோலத்தில் தன் மகளை கண்ட அப்பாவிற்கோ அழுகை வர,   அங்கே  தந்தைக்கும் மகளுக்கும் ஒரு சொல்ல முடியாத வலி,ஆனந்தம்,தூக்கம் அழுகை என்று கலவையான உணர்வுகளுடன்

மகள் தந்தையை பார்க்க தந்தை மகளை பார்க்க என்று இருக்க!

 அப்போது நாளி ஆகின்றது சீக்கிரம் பெண்ணை அழைத்து கொண்டு வாங்கோ என்று அய்யர் குரல் வர!

மணப் பெண்ணை அழைத்து கொண்டு சீதா, மாயா,வர்ண்ணா அக்கா உனக்கு இந்த திருமணம் ஓகே வா என்று கேட்டபடி மூவரும் வர!

பதில் சொல்பவளோ அமைதியாக வர !

சரவணன் அருகினில் ஜானவி தேவி அமர்ந்தவள் ஐயர் சொல்லும் மந்திரங்களை பக்கத்தில் அமர்ந்து இருந்தவனை துளியும் பார்க்காது சொல்லி கொண்டு இருக்க!

சரவணன் ஏன் ஜானு என்னை பார்க்காம  இருக்கே வெக்கமா என்று காதின் அருகில் சொல்லி வெறுபேற்ற!

அவனை பார்த்து முறைத்தவள், அடுத்து இருவரும் தங்களது பெற்றோர்கு பாத பூஜை செய்ய, பின்

திருமணச் சடங்குகளில் ஒரு முக்கிய நிகழ்வு கன்னிகாதானம் இது மணப்பெண்ணின் தந்தையான கிரிதரன் தன் மகளின் வலக்கையை சரவணனின் வலதுக்கையின் மேல் வைத்து, அவ்வேளையில் ஓதப்படும் மந்திரங்கள், அக்கினி சாட்சியாக, ஜானவியை தானமாக மணமகனிடம் கண்கலங்கிய படி ஒப்படைப்பதவர்.

அங்கிருந்து நகர்ந்து தான்யலட்சுமி அருகினில் நிற்க!

மாய சீதா இருவரும் அச்சதையய்  அனைவருக்கும் கொடுத்து மணமேடைக்கு  வர அதன் பின் கெட்டிமேளம் முழங்க ‘மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்’என்று ஐயர் மந்திரத்தை உச்சரிக்க!

சரவணன் ஜானவியின் கழுத்தில்  மங்களநாண் கட்டி அவளை தன் வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டவன்  அடுத்தடுத்து வந்த சம்பிரதாயமான திலகம் இடுவதிலும்,அக்னியை ஏழு முறை வலம் வருவதாகிலும்,அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதிலும்,மாலை மாற்றுவதில் என்று திருமணத்தில் இருக்கும் அனைத்து சடங்கிலும் நான் உன்னவன்,நீ என் காதல் மனைவி என்று சரவணன்  ஜானவிக்கு உணர்த்தி கொண்டு இருந்தான்.

முதலிரவு

முதலிரவு ஜானவி வீட்டில் என்று பெரியவர்கள் அனைவரும் முடிவு செய்ய இதோ தன்னரையில் சரவணனுடன் அமர்ந்து இருந்தாள் ஜானவி!

க்கும்…..   என்று தொண்டையை செறுமிய சரவணன்  சோகச்சித்தரமாக அமர்ந்து இருந்த ஜானவியை பார்த்தவன்,கடுப்புடன் அதான் கல்யாணம் நடந்துச்சே இன்னும் ஏன் இப்படி மொகத்த கசப்பா வெச்சு இருக்கே என்னை கல்யாணம் பண்ணதுக்கா ஜானவி என்று அதிகாரத்துடன் கேட்க!

கலங்கிய விழிகளால் சரவணனை பார்த்தவள் உன்னை கொல்லனும் நினைச்சு இருந்தாலும்  இல்லை திருமணத்த நிறுத்தனும் நினைச்சு இருந்தாலும்,நான் உன்னோட பக்கத்தில் நீ

அனிவித்த இந்த தாலிய நான் சுமந்துட்டு  இருப்பேனா? ஏதோ ஒரு வகையில் சின்னதா என் மனசுல நீ இருந்தினால தானே நான் பதறி உன்னை பார்க்க வந்தேன்,ஆனால் நீ என்னை என்ன என்ன வார்த்தை எல்லாம் சொல்லுற என்று கண்களில் வரும் நீரை துடைத்த படி கேட்டவள்  மேடைல இருக்கும் போது அப்படி தான் குத்தல் பேச்சு பேசுற!

சரி அழுகாத விடு,அவன் இலங்கோவுக்கு ஏதோ ஆகிடிச்சுன்னு ஷாக்ல திட்டுன அதுக்கப்புறமும் திருமணம் முடிந்து என் முகத்தைத் கூட பார்க்காம இருந்தது எல்லாம் உன்னை கட்டாயம் படுத்தி திருமணம் பண்ணிட்டனோன்னு ஃபீல்ல திட்டிட்டுடேன்!

கோவிச்சுகாத ஜான்னாம்மா!

 ஹோ…….. அந்த லூசிக்கூட ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டு,நீங்க திருமணம் முடிந்து என் முன்னாடியே அவள கட்டி பிடிப்பிங்க,நான் சந்தோஷமா சிரிச்சுட்டு இருக்கனும்மா?

அது பிரிண்ட்ஷிப்க்குள்ள சகஜம் தானே,நீக்கூட அங்கே யுகேல இருக்கும் போது பசங்கலாம் கட்டிப்பிடிச்சிக்க மாட்டிங்க,அது என்ன  ஆம்பளை செஞ்சா ஒரு தப்பு,பொண்ணுங்க செஞ்சா நல்லது  எல்லாருக்கும் ஒரே ஞாயம் தானே!

இப்போ என்ன  உன்னை மாதிரி தான் நானும் சொல்ல வரியா!

ச்ச…..ச்ச…. அப்படிலாம் சொல்ல மாட்டேன் ஆனால் நீயும் தானே ராபர்ட்ட சைட் அடிச்ச அப்போ உனக்கும் சம்திங் சம்திங் தானே!

அவன் சொன்ன சம்திங் சம்திங் கேட்டவள் அங்கிருந்த தலைகாணியை அவன் மேலே கோபத்தில் விசிறி அடித்தவள் ,போது பாரு புத்தி அப்படியே உன்னை மாதிரியே புல்லு மேய,எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நம்ம கலாச்சாரத்தை மதிக்குற பொண்ணு நானு,உன்னை போலே இல்லை!

நீ தானே பொண்ணுங்கக்கூட சுத்துறதுல பிளே பாய்யா இருப்ப என்கிட்டயே கல்யாணத்துக்கு முன்னாடி டேட்டிங் டேன்ஸ்ன்னு அந்த மாதிரி தாப்பா பேசுனவன் தானே நீ!

புடிச்ச பொண்ணு கிட்ட தானே பேச முடியும் ! “சரவணன்”

யூ ராஸ்கல்!”ஜானவி”

மீ ராஸ்கல்!”சரவணன்”

“ஜானவி”,ஆமாம்டா  உன்னை தான்,பண்ணுற தப்பு எல்லாம் பண்ணிட்டு அப்படியே நல்லவன் மாதிரி நடிக்குற!

ஷப்பா போதும் டி எவ்வளவு நேரம் தான் இப்படியே பேசுவ,இன்னிக்கு என்ன நாள் நமக்கு திருமணம் ஆகி முதல் நாள்,அதை கொண்டாட விடாம இருக்குற உன்னோட வாய்க்கு  அடி கொடுக்க போறேன்!

என்ன என்னோட வாய்ல அடிப்பியா   தைரியம் இருந்தா அடிடா என்று அவனை கோபத்தில் கையோங்க!

அதை தடுத்தபடி அவள் இதழை தான் வாய் கொண்டு அடித்தான்  சரவணன்

அதில் அதிர்ந்தவளோ திகைத்த படி  அவன் கண்களை ஒரு இன்ச் இடைவெளியில் பார்த்தவள் தன்னை மறக்க!

அவன் கண்களோ அவள் கண்களை கண்டு சிரிக்க,இதழோ அவள் உதட்டு சுவையில் மெய்மறந்து முத்தத்தை நீடித்து சென்றவன் இருவருக்கும் காற்றுக்காக  அவளை தன்னுள் இருந்து பிரித்தவன், அவள் மலங்க மலங்க விழிப்பதை கண்டு  சிரிக்க!

அவன் சிரித்ததில் வெக்கம் கொண்டு அவன் மார்பில் சாய்ந்தவளோ  சரவணனின் மார்பில் வலிக்காமல் அடிக்க!

 என்னடி பொண்டாட்டி  சொன்ன மாதிரியே வாய்ல அடிச்சேனா என்று சரவணன் அவளை பார்த்து புருவத்தை உயர்த்த!

ப்ராடு பையா!

வித் யுவர் பர்மிஷன் ஷெல் வீ கண்டின்யு ஆர் ஃபர்ஸ்ட் நைட் ? என்று ஜானவியின் அனுமதி கேட்க!

அவளோ வெக்கத்துடன் அவனிற்கு சம்மதம் சொல்ல!

அங்கே இருவரும்  இருவரின் காதலையும் தங்களின் இனையுடன் பகிரபடாமலேயே காமாமென்னும் போர்வையை போற்றியவர்கள்,நீ கெஞ்ச நான் மிஞ்ச என்று இருவரும் ஒருவருக்கொருவர் சங்கமிக்க.

இங்கே தன் தாய் மற்றும் தந்தை  பார்ப்பதற்காக  விரைவாக வர வேண்டும் என்று வாடகை தாயின் வயிற்றில் எட்டி உதைத்து தான் வரப் போவதை நவிலன் அப்பெண்ணிற்கு உணர்த்த!

அதே நேரம் நல்லிரவு வேலையில் பல ஆண்மாகளுக்கு உதவவும் தன்  போன ஜென்மத்தில்  பார்காத தந்தையும், தன்னை காப்பதற்காக இறந்த அன்னையும் பார்ப்பதற்காக கடவுளிடம் இவர்களுக்கு மட்டும் தான் பிறப்பேன் என்று 100ஆண்டுகள் காத்திருந்து இதோ வந்துவிட்டேன் என்று குவா குவா என்று அழுது தன் வருகையை இந்த பூமிக்கு பதிவு செய்தான் நவிலன்.

காவ்யா தன் கைகளில் இருந்த குழந்தை நவிலனை வெறுப்புடன் நோக்க

பக்கத்திலே  ஆன்மாவாக நின்ற லோலிட்டா ஜானவியின் குழந்தையை சந்தோஷமாக பார்க்க!

சரவணனோ வாயை வைத்து சும்மா இல்லாமல் திருமணத்தை நிறுத்த உதவிய வர்ணா,மாயா, சீதாவை போட்டு தல்ல போறேன் என்று வாய் வார்த்தையாய் விளையாட்டாய் ஆரம்பித்தத சண்டை  இருவருக்கும் கைகலப்பு ஆக மறுநாள் குடும்பத்தாரிடம்  லண்டனில் வேலை இருப்பதாக சொல்லி கணவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் சொல்லாமல் கோபித்து ஜானவி லண்டன் வந்துவிட!

கோபித்து சென்ற மனைவியை தடுக்காமல், அவதானே கோபித்து போனா அவளே வருவாள் என்று காத்திருந்தவனுக்கு தெரியாது தனது கர்வத்தை உடைத்து தானே மனைவியை சமாதானம் செய்வோம் என்று !

ஆனந்தமோ ஆதங்கமோ

என் கண்ணீரும்

உனக்காக மட்டுமே

எப்போதுமே!

Advertisement